kesav
”காவென்(று) அடைக்கலம் கொள்ளுது கன்றுகள்
கோவிந்தன் கைகளால் கோதிட: -பூவொன்றின்
பக்கத்(து) இலைகளாய் பசுங்கன்று கள்முளைத்து
சொர்கத்தில் சேரும் சுகம்’’….கிரேசி மோகன்….!

கா- காத்தல்….!
பஜ கோவிந்தம்….
—————————–

சாவிந்த மேனியை சந்திக்கும் வேளையில்
காபந்து செய்யுமோ கற்றகல்வி -கோவிந்த
நாமத்தில் மூட நினைவே நிலைத்திரு
ஷேமத்தில் சேர்க்கும்மச் சொல்….

வேறு
——-

சொல்கோவிந்தம் சொல்கோவிந்தம்
சொல்கோவிந்தம் புல்மனமே
வல்லான் காலன் வருகின்ற நேரம்
தொல்காப்பியமா துணையாகும்….!கிரேசி மோகன்….!

 

கேசவ்வின் இந்த ஓவியம் பார்க்கையில் ஏனோ ‘’பொறந்தாத்து’’ சமேதராய்(பலரார்-சுபத்ரா) ஜகன்னாத் புரியில்(பூரி என்று பாடலுக்காக வைத்துள்ளேன்) எழுந்தளியிருக்கும் கண்ணன் நினைவு வந்தது….!கண்ணன் & அண்ணா பலராமர் & தங்கை சுபத்ரா(இரண்டு கன்றுகளாய்) சமேத ‘’பெருமாள் திருப்புகழ்’’….!

தனனதன தானதத்த தனனதன தானதத்த
தனனதன தானதத்த -தனதான

பூரி ஜகன்னாதர்
——————–
“மனமதனின் ஆணவத்தை உதியுமிட மேவொடுக்க
மலையருணை வாசமுற்ற -ரமணேசர்
அருவியென வேவுரைத்த இருயிருப தானயுக்தி
உளமதனில் நானகற்றி -உயர்வாக
அனுதினமு மேஜபிக்க திடவுறுதி தாயெனக்கு
கடல்கடையும் நாளுதித்து -சபரீசன்
பெறவுதர பாரமுற்ற ,புலிமுதுகில் ஏறவிட்ட
கிளரொளியில் மோகினிப்பெண் -அவதாரா
பணமுடியில் ஏறிநச்சு உமிழவுயிர் தானெடுத்து
நடனமிடு காளியத்து -விடராசா
மழலையிவன் ஞானபக்தி கருமமதில் ஆகசித்தி
கவிதைவடி வாயெனக்கு -அருள்வாயே
ஜனகமக ளேவொருத்தி ஒருவனிவ னேவுரைக்க
சிவதனுசை போய்முறித்த -ரகுநாதா
ஜனனமர ணாதிவட்ட சகலபரி பாலனத்தில்
ஜகமதனில் பூரிநிற்கும் -பெருமாளே (OR ) ஜெகன்னாதா”….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.