இந்தியாவின் தற்போதைய வறட்சி நிலை!
பவள சங்கரி
இயற்கை மாற்றங்கள் தட்பவெப்ப நிலையில் மாறுதல்கள், இந்தியாவில் ஏற்படும் வறட்சி போன்ற அனைத்திற்கும் காரணம் தர்மல் பவர் பிளாண்ட் தான் என்று இலண்டனிலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம், தங்கள் ஆய்வின் முடிவாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தர்மல் பவர் பிளாண்ட் அதாவது நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களால், அதிக அளவு கார்பன் மற்றும் வெப்பங்கள் வெளியிடுதல், மேற்கு கிழக்கு காற்று சுழற்சியினால் அந்த பாதிப்பு இந்தியாவைத் தாக்குவதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் பல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட விவரங்களும் அளித்துள்ளனர். இவர்கள் கூறியது உண்மை என்று எடுத்துக்கொள்ளும் வகையில் நெய்வேலி தர்மல் பவர் பிளாண்ட் மற்றும் தூத்துக்குடியிலுள்ள பவர் பிளாண்ட் போன்றவைகள் அதன் சுற்றுப்பகுதிகளையே வனாந்திரமாக மாற்றிவிட்டிருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன. நெய்வேலியிலிருந்து சேலம் வரும் வழியில் உள்ள அனைத்துப் பகுதிகளும், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளும், அங்கிருந்து மதுரை வரும் வழியனைத்தும் தற்போது பாலைவனமாகவே காட்சியளிக்கின்றன. மத்திய அரசும், மாநில அரசும் இலண்டனிலுள்ள அந்த பல்கலைகழகத்தின் அறிக்கையையொட்டி ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம். இல்லாவிட்டால் நமது இந்தியாவும், தமிழ்நாட்டின் பல பகுதிகளும் பாலைவனம் ஆவதை தடுக்கவியலாமல் போகலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் நெடுவாசல் போன்ற பகுதிகளில் பெட்ரோலியப்பொருட்களை எடுப்பதற்கு முன்பாகவும் ஆய்வு செய்யவேண்டியதும் அவசியமாகிறது.