நாலடியார்
25ம் அதிகாரம்
அறிவுடைமை – 3
25ம் அதிகாரம்
அறிவுடைமை – 3
எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா
தென்னாட்டவருஞ் சுவர்க்கம் புகுதலாற்
றன்னாற்றா னாகு மறுமை வடதிசையுங்
கொன்னாளர் சாலப் பலர்
எந்நிலத்து – எந்த நிலத்தில், வித்து இடினும் – விதை போட்டாலும், காஞ்சிரம் – எட்டியின், காழ் – விதை, தெங்கு ஆகா – தென்னைமரம் ஆக மாட்டா, தென்நாட்டவரும் – தென்திசையுள்ளவரும், சுவர்க்கம் புகுதலால்-(நல்வினைப்பயனால்) சுவர்க்கலோகம் சேர்வதினால், தன்-ஒருவனது, ஆற்றான் – முயற்சியினாலே, மறுமை- மறுமையில் நற்கதி, ஆகும்-பொருந்தும்: வட திசையும் – வட திசையிலும், கொன் ஆளர்-அறஞ் செய்யாது வீணே கழிப்பவர், சால பலர்- மிகவும் பலர் உளர்.
எனது வரிகள்:-
எட்டி மர விதைகளிட்டால்
எத்தன்மை நிலமானாலும்
தென்னை மரங்களாக முளைக்காது.
தென்னாட்டு வாசிகள், அது
இயமதிசையாதலால் சுவர்க்கம்
சேர்தல் அருமை, அவரும்
நல்வினைப் பயனால் சுவர்க்கம்
அடைகிறார்கள். வடக்குத் திசையில்
வாசிகள் அது புண்ணிய பூமி
என்பதால் சுவர்க்கம் அடைவாரெனும்
எண்ணத்துடன் நற் கதியடைய
முயற்சிக்காது வீணே காலம்
கழிப்பவர் பலர். அவரவர்
அறிவு, நற்செயல், முயற்சியாலன்றி
வாழும் நிலத்தால் நற்கதியடையார்.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 31-5-2017


Leave a Reply