170629 -Bhakta parAdeena -Sudama- icam -lores

சுதாமன் அவலுக்கு சொத்தை அளித்த
கதாதரன் கண்ணன் பரம -பிதாவாம்
அலர்மேல் அன்னை மணாளன் அருளால்
மலரும்நாள் காசின் பிறப்பு….!
”அவலுக்கு செல்வம், அழகுமயில் ராதை
அவளுக்குக் காதல், விஜயன் -கவலைக்கு
கீதை, அடியார்தம் கண்ணீர் திவலைக்கு
தாதை அளிப்பான் துடைப்பு….!

 

பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமென
கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் -உள்ளமே
கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
வள்ளலென மாறும்காண் வாழ்வு….கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *