புதுப்பித்தல் அவசியம்!
பவள சங்கரி
மருத்துவர்கள் போல, கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் போல, வருங்காலச் சமுதாயத்தையே நிர்ணயிக்கும் ஆசிரியர்களும் புதுமையான சிந்தனைகளையும், சமுதாயத்தின் நவீனக் கட்டமைப்புகளையும் அறியும் வகையில் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியதும் அவசியம் அல்லவா? அதற்கான பயிற்சித் திட்டங்களும் அமைக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமை அல்லவா? தற்போது 3 முதல் 5 ஆண்டுகளுக்குஒரு முறை மட்டுமே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை ஆண்டிற்கு ஒரு முறையாகவாவது மாற்றியமைக்க வேண்டியது அவசியம்!