கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கயிற்றுதரக் கண்ணன்மேல்(தாமோதரர்) காதல்கொண்(டு) அன்று
இயற்றினாய் பாடல் எமக்காய் -பயிற்றுவித்த
தாதையுடன்(அப்பா பெரியாழ்வார்) சென்றந்த கீதையோன் கைப்பிடித்த
கோதைக்கை கோகிலமே காப்பு….!
”எத்தனுக்(கு) எத்தனந்த ஏரார்ந்த கண்ணியவள்
பெத்தெடுக் காதஅப் பிள்ளையை -முத்துடை
பந்தலுக்குக் கீழே பதியாய்ப் பிடித்திழுத்து
குந்தவைத்தக் கையிரெண்டும் காப்பு’’….கிரேசி மோகன்….!