கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
போகியின்று ஆண்டாள் திருக்கல்யாணம்….

(Eternal servitude -ezhezh piravikkum – multiple forms not multiple lives. mukkur azhagiyasingar)
“ஏகபோகம் ஆகிறாள் ஏரார்ந்த கண்ணியவள்
நாகமிசை நர்த்தன நாரணன் -பாகமாக;
போகியன்று ஆண்டாள் பெருமாளை சேர்கிறாள்
வாகீச பெண்மைக்கு வாழ்த்து”…
ஆகிறது ஆகட்டும் போகிறது போகட்டும்
பாகிரதி போலின்பம் பொங்கட்டும் -போகியின்று
நன்மையை சாக்கிட்டு தீமையைத் தீக்கிட்டு
உண்மை கசந்தாலும் உண்….
’’நாச்சியார் கோயிலில் நம்பெருமாள் தங்கிட
ஆச்சது நாச்சியார் ஆலயம்: -பேச்சியவள்(பேச வைத்த திருப்பாவை பாடியவள்)-
மெத்தை, தலையணை மந்திரத்தால் சீனுவாசர்
தத்தையவள் ஆத்தில் திகழ்வு’’….கிரேசி மோகன்….
“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார்
பாடி இடம்பிடித்தாள் பாற்கடலில்; -ஆடிப்பூ
ரத்தாள் பதம்பிடிக்க, ரங்கன் அணைக்கின்றார்
அத்தாளை அம்மிக்(கு) அழைத்து “….
”மால்பிடித்தக் கண்ணனின் கால்பிடித்தக் கோதையின்
நூல்படித்து நோன்பினை நோற்றிடுவோம் : -பால்வடிக்கும்
ஆவினம் மேய்த்தன்று ஆயர் குலம்காத்த
வாவிதான் பாலாழி விஷ்ணு’’….
“ஆடிப்பூ ரத்தில் அவதரித்த ஆண்டாளின் ,
சூடிக் கொடுத்த சுடர்கொடியின், -ஜோடித்து
பாக்களாய் ரங்கமன்னார் பாதத்தில் இட்டநறும்
பூக்களே நம்பாது காப்பூ”….
“சாரங்க மன்னார்க்கு சொல்லித் திருப்பாவை
பாரங்க மன்னாராய் பாதித்து, -சீரங்கம்
தாதை யுடன்சென்று தாரமாய் மாறிய
கோதைமுகம் பூசுமஞ்சள் காப்பு”….
“பழையன விட்டு புதியன பூண
மழையன்ன மாலின் மனையாய்-விழைகிறாள்
புள்ளேறி வைகுந்த புக்ககம் போவதற்கு
கள்ளுறும் பாசுரத்தாள் காண்”….கிரேசி மோகன்….!
