கூர்மாவதாரம்….!
——————–

துர்வாசர் இட்ட தொடையை எறிந்திட
கர்வாதி கத்தில் களிறின்மேல் -சர்வாதி
காரத்தால் பெற்ற கடுத்தமுனி சாபத்தின்
பாரத்தால் வானத்தோன் பாழ்….!

சாப விமோசனத்தை, சாகரப் பாற்கடலை
மாபெரும் மந்தார மத்தினால், -நீபெருவாய்
வாசுகி தாம்பால் வளைத்துக் கடைந்திட;
வாசுதேவன் விண்ணுக்கு வாக்கு….!

வாசுகி உச்சியை வானோர் பிடித்திழுக்க
ஆசு அசுரர் அதன்வாலில் -கோஷமிட
மந்தார வெற்பன்று மூழ்குதலைத் தாங்கிட
வந்தாராம் ஆமையாய் விஷ்ணு….!

அப்போது பீறிட்ட ஆலகால நெஞ்சினை
துப்பாது உண்ணாது தொண்டையில் -எப்போதும்
கொண்டனன் சம்பு; கிளர்ந்த இலக்குமியைக்
கொண்டனன் கூர்மம் கரத்து….!

தன்வந்த்ரி தந்த திருக்கண் அமுதருந்த
முன்வந்த தானவரை மோகினிப் -பெண்வந்து
ஆசையைக் காட்டியவர் மோசமுற, விண்ணோரை
ஈஷியிட்டார் விஷ்ணு இலை….!

வராகாவதாரம்….!
——————-

ஏன உருவெடுத்து ஈன இரணியாக்ஷன்
ஊனை ஒழித்து உலகத்தை -கோண
எயிறேந்தும் பாகவத எம்பிரானை ஏத்த
உயிரேந்தும் நெஞ்சுக்(கு) உவப்பு….(OR)
எயிறேந்தும் பாகவத எம்பிரானால் ஞானப்
பயிரேந்தும் ஆன்ம வயல்….!

மண்வாசம் மூக்கால் முகர்ந்த வராகம்பார்
பெண்வாசம் செய்யும் பரவைக்குள் -மின்வீசும்
கொம்பை நுழைத்து குவலயத்தை மீட்டபின்
வம்பை அழைத்தார் விலைக்கு….!

”மண்ணின்தன் மைந்தன்நான் மாயப் பிசாசுநீ
எண்ணி முடிப்பதற்குள் ஏகிப்போ” -சொன்ன
முரணானோன் மேனியில் மோதிட ஏனம்
இரணியாக்ஷன் வாழ்வுக்(கு) இழவு….

ஏனத்தால் ஈன்ற பொழுதில் பெரிதுவந்த
மானத்தை வாங்கும் மகனபி -மானத்தால்
தந்தை மகாவிஷ்ணு தாள்வைத்து பூதேவி
விந்தையாய் வேண்டினள் வாழ்த்து….!

நாரண அம்பை நரகனுக்கு தந்தபின்
வேறென்ன வேண்டுமென்ற விஷ்ணுவிடம் -பூரணத்வம்
தாவென்ற பிள்ளைக்கு தாயன்றி யாராலும்
சாவில்லை என்றார் சிரித்து….!

”மத்தவர் யாருமேதான் மாதவன் மீதுவைத்த
 பக்திக்(கு) இணையாமோ !” பீற்றிய -உத்தவர்
 கோவர்த் தனக்கற்கள் கண்ணனைக் காணாது
 பூவொத்து வாடியதைப் பார்ப்பு….!

கண்ணனின் பாதக் கமலச் சுவடுகள்
இன்னமும் கோபியர் இல்லத்தில் -வண்ணமாய்
உள்ளதைக் கண்டுள்ளம் உத்தவர் வெட்கினார்
கள்ள மிலாஅன்பைக் கண்டு….!
——————————————————————-
நரசிம்மாவதாரம்….
————————
அல்லில் பகலில் அகத்துள் அதன்வெளியில்
புல்புழு பூச்சி பறவையால் -கொல்லும்
மனிதனால் காட்டு மிருகத்தால் சாகா
தனதுயிர் கேட்டுத் தவம்….!

இரணியன் வேள்விக்(கு) இரங்கி அயனும்
வரனெனத் தந்தனன் வாக்கு -தரணிகள்
மூன்றையும் வென்றஅம் மூர்கன் மகனாக
தோன்றினன் நாரணத் தொண்டு….!

”நாரா யணஓம் நமஹவை நாள்தோறும்
 பாரா யணம்செய் பிரகலாதா” -பூரண
 கர்ப வதிகயாது காதுவழி சேய்க்குரைத்தான்
 நற்கதியை நாரதன் நன்கு….!

அச்சுதன் நாமம் அனவரதம் ஓதுவோனை
அச்சுறுத்தி தன்வழிக்(கு) ஆட்படுத்த -அச்சன்
இரணியன் போட்ட இடர்களைத் தாண்டி
மறையென நின்றான் மகன்….!

முட்டவந்த ஆனைககள் எட்டு திசைகளிறும்
முட்டியிட்டுச் சுட்டி மழலையை -வட்டமிட்டு
காட்டியபின் கூறும் கஜேந்திர மோட்ஷத்தைக்
கூட்டியவன் பக்தனுக்கு காப்பு….!

பக்தீயில் மூழ்கும் பிரகலாத சாமியை
பத்தி எரியும்தீ பூவாகி -சுத்திவரும்
மீறிய நஞ்சும் மிதமாய் அமிழ்தாகும்
சூரியன்மேல் வைப்பாரோ சூடு !….!

விண்முகடு கொண்டுபக்தி வீரத்தை வீசிட
மண்மகள் ஏற்றாள் மலர்மகளாய் -பின்முதுகில்
பாறையைப் பாம்பால் பிணைத்தாழி போட்டிட
கோரையைப் போலெழுந்தான் குஞ்சு….(or)
பேரலை போலெழுந்தான் பிஞ்சு….!

கோவிந்தா என்றுரைக்க குத்தவந்த ஈட்டியின்கண்
நாவின்தன் மென்மையாய் நைந்தது -சாவிந்த
பிள்ளைக்கு இல்லையென போயுரைத்தார் மன்னனிடம்
நொள்ளையான ஆட்கள் நமுத்து….!

ஆருனக்குத் தந்தார் அதிசிய சக்தியை
கூறெனக்கு என்று கொதித்தஅப -சாரனுக்கு
நாரண சக்திக்கு பூரண பக்தியே
காரணம் என்றான் கொழுந்து….!

காட்டடா அந்தக் கருநீலப் பூதத்தை
போட்டடைப்பேன் இத்தூணில் பூச்சியாய் -வேட்டையை
ஆடத் துவங்கிய அப்பனுக்குக் காட்டினான்
கூடத்து தூணுக்கே கை….!

பக்தப் பிரகலாதன் பேச்சை ருஜுப்படுத்த
சக்திக்கு மீறிய சங்கடமாய் -திக்கெட்டை
தேகமாய்க் கொண்டவன் ஏகினான் தூண்வேக 
வேகமாய் வைகுண்டம் விட்டு….!

கள்ளத் தனம்செய்தென் பிள்ளை பிடித்தவனே
உள்ளத் துணிவிருந்தால் ஊர்ந்துவா -முள்ளிட்ட
பாதுகையால் தூணுதைக்க பாதிநர பாதிசிங்கம்
காதுசிகை கோதி குதிப்பு….(OR)
காதுபுடைத் தாங்கே குதிப்பு….!

சாயங்கா லம்வரை சண்டை புரிந்தந்த
சீயங்கா லைமடித்து, சோர்ந்தெழுந்து -பாயும்
இரணியனை தூக்கி இடைவாசல் வைத்து
கரநுனியால் கீறிக் கிழிப்பு…..!

ஆவேச மான அரியை அடக்கிட
பூவாசத் தாயே பயந்திட -சாவாச
மாகவந்த பிள்ளை மடியமர்ந்து சிங்கத்தின்
தேகம் தழுவத் தணிவு….!

கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
உச்சரிக்க நாமம் உரத்தப்போ -உச்சி
குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
மெலிந்துகர் ஜிக்க மியாவ்….!

ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
களைத்தல் கதையின் கருத்து….!

துருவ சரித்திரம்
———————
உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டு
சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி
சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள்
சக்களத்தி மாதுசுரு ஸி….!

சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப்
பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….!

கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட
துருவன் மனக்குறையை தாய்முன் -உருக
அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில்
சுநீதி அமரென்றாள் சேய்க்கு….!

மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு
ஏதேனும் உண்டோவென்(று) எண்ணியசேய் -பீதாம்
பரனை தரிசிக்கப் போகத்தம் பூரா
கரனை தரிசித்தான் கண்டு….!

வாசுதேவ மந்திரத்தை தேசிகர் நாரதர்
தேசுமிகு சேய்க்குப தேசித்து -கேசவர்க்கு
தாசனாய் வாசனாதி தோஷமின்றி வாழ்த்தென்றார்
ஆசன தர்ப்பை அமர்ந்து…!

கனியில் துவங்கியவன் காய்ந்த சருகை,
பனிநீரை, காற்றைப் புசித்து -முனியாய்
குடைசாய மூன்று குவலயங்கள் காலை
திடமாக ஊன்றி தவம்….!

ஈரைந்து மாதமேந்தி ஈன்றவள் சொற்கேட்டு
பேரைந்து மூன்றெழுத்தைப் பார்த்திட -ஓரைந்து
மாதங்கள் செய்த மகாதவத் தால்வியந்து
வேதங்கள் மூக்கில் விரல்….!

கும்பகத்தால் காற்று குறைந்திட மூச்சடைத்து
உம்பர்கள் ஓடி உலகெடுத்த -கொம்பனை
வேண்ட கருடாழ்வான் வாகனம் மீதமர்ந்து
ஆண்டவன் காட்சி அளிப்பு….!

உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
துருவன் விழிகள் திறக்க -அருவம்
கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….!

மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
ஆணில் சிறந்தோன் அளிப்பு….!

பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!

On Fri, Aug 24, 2018 at 11:55 PM crazy mohan <crazy.mohan@gmail.com> wrote:, வெண்பாகவதம் தங்கள் மேலான பார்வைக்கு….!

வாமனாவதாரம்….
————————

யாகாதி பாகத்தை ஈயாது போனதால்
ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற
சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான்
சக்கிர வர்த்தி சிறப்பு (or) ஜொலிப்பு….!

பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
ஓணத்தில் சேயாய் உதிப்பு….!

அதிதி உபசாரம் அன்று புரிந்தோன்
புதிய அவதாரப் பிள்ளை -குதியிட்டு
மாவலி முன்சென்றான் மூன்றடி வாமனனாய்
தாவலில் நெஞ்சம் திளைத்து….!

தாழங் குடையிடக்கை, தண்ணீர் கமண்டலம்
வாழிய காட்டும் வலக்கையில் -சோழியன்
உச்சியொடு வந்தவன் அச்சுதன் என்றுகுரு
எச்சரித்தும் மாபலி ஏற்பு….!

அந்தண வாமனர்க்கு வந்தனம் செய்துபலி
தந்தனன் கேட்ட திருவடிக்கு -மண்தனை
வண்டெனநீர் வார்க்கையில் வாத்தியார் வந்துக
மண்டல வாயை மறைப்பு….!

உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
அக்கணம் வாமனன் அங்கு….!

ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி
பாதாளம் செல்ல பலியை அழுத்திட
சேதாரம் இன்றியவன் சேர்பு….!

தானாகக் தானத்தை தந்திடும் தந்தைமுன்
வீணாக வேடமிட்டு வாமனமாய்ப் -போனீர்கள்!
பாணா சுரப்பிள்ளை போட்ட வினாக்(கு)ஏன
மீனாமை சிம்ம மறுப்பு….!

ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
ஆவேச நானை அழிப்பு….!

—————————————————————-
கபிலாவதாரம்
——————–
தேவஹுதி கர்த்தமர் தம்பதிக்குப் பிள்ளையாய்
காவலாதி தெய்வம் கபிலகுரு -தேவராய்த்
தோன்றிப் பெரிதுவந்த தாய்க்குப தேசமாய்
ஊன்றினார் பக்தி உலகு….!

கபில உவாச….
———————–
இயற்கையின் மாய இயல்பைக் கடந்து
பெயர்ந்திட ஜீவ புருஷன் -உயர்கிறான்.
ஆரா தனையாலும் ஆன்மவிசா ரத்தாலும்
நாரா யணனில் நிலைப்பு….!

மாசிலா நெஞ்சமாய், ஆசனங்கள் செய்தந்த
வாசுதேவ ரூபத்தை, வைகுண்ட -வாசனாக
பஞ்சா யுதமேந்தி புள்ளமர்ந்த நீலனாக
நெஞ்சார உன்னுள் நிறுத்து….!

காமமற்ற லீலையை, கல்யா ணகுணத்தை
நாமசங் கீர்த்தனமாய் நாவுரைக்க -தாமசமில்
கங்கா நதியொத்த மங்கா மனத்துடையோர்(கு)
இங்கே பிறப்(பு)இறப்(பு) ஏது….!

பத்தினியின் மோகத்தால் பிள்ளைமேல் பாசத்தால்
சொத்துசுகம் சேர்க்க செயல்படுவாய் -அத்துமீறி.
முத்திபெறும் மார்கத்தில் மூலத்தைக் காணாது
இத்தனை கஷ்டமேன் இங்கு….1

நான்யார் அறிவு நிரம்பி இருப்பினும்
தாயார் வயிற்றில், தளும்பியபின் -சேயார்வ
சிக்கல்கள் தாண்டிட சூழ்ந்திடும் யவ்வன
சொக்கல்கள் சூழ்ச்சிச் சுழல்….!

பூதபித்ரு தேவரை பூஜிக்கும் இல்லறத்தோன்
பாதையாம் தக்கிணத்தில், புண்ணியப் -போதுசெல்ல
இத்தரை வந்திடுவான், உத்திர மார்கமோ
முத்தியூர் சேர்க்கும் முடிவு….!

தாங்கிய தாய்க்குத் தனயன் உரைத்தனன்
சாங்கிய யோகத்தை சேவையாய் (OR) செவ்வெனே -வாங்கிய
ஆத்மவித்யா சக்தியால் ஐக்கியம் ஆயினள்
தீர்த்தம்சித் தாசிரமத் தில்….!

————————————————————————————-
Vதுருவ சரித்திரம்
———————
உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டு
சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி
சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள்
சக்களத்தி மாதுசுரு ஸி….!

சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப்
பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….!

கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட
துருவன் மனக்குறையை தாய்முன் -உருக
அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில்
சுநீதி அமரென்றாள் சேய்க்கு….!

மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு
ஏதேனும் உண்டோவென்(று) எண்ணியசேய் -பீதாம்
பரனை தரிசிக்கப் போகத்தம் பூரா
கரனை தரிசித்தான் கண்டு….!

வாசுதேவ மந்திரத்தை தேசிகர் நாரதர்
தேசுமிகு சேய்க்குப தேசித்து -கேசவர்க்கு
தாசனாய் வாசனாதி தோஷமின்றி வாழ்த்தென்றார்
ஆசன தர்ப்பை அமர்ந்து…!

கனியில் துவங்கியவன் காய்ந்த சருகை,
பனிநீரை, காற்றைப் புசித்து -முனியாய்
குடைசாய மூன்று குவலயங்கள் காலை
திடமாக ஊன்றி தவம்….!

ஈரைந்து மாதமேந்தி ஈன்றவள் சொற்கேட்டு
பேரைந்து மூன்றெழுத்தைப் பார்த்திட -ஓரைந்து
மாதங்கள் செய்த மகாதவத் தால்வியந்து
வேதங்கள் மூக்கில் விரல்….!

கும்பகத்தால் காற்று குறைந்திட மூச்சடைத்து
உம்பர்கள் ஓடி உலகெடுத்த -கொம்பனை
வேண்ட கருடாழ்வான் வாகனம் மீதமர்ந்து
ஆண்டவன் காட்சி அளிப்பு….!

உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
துருவன் விழிகள் திறக்க -அருவம்
கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….!

மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
ஆணில் சிறந்தோன் அளிப்பு….!

பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!

On Fri, Aug 24, 2018 at 11:55 PM crazy mohan <crazy.mohan@gmail.com> wrote:, வெண்பாகவதம் தங்கள் மேலான பார்வைக்கு….!

வாமனாவதாரம்….
————————

யாகாதி பாகத்தை ஈயாது போனதால்
ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற
சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான்
சக்கிர வர்த்தி சிறப்பு (or) ஜொலிப்பு….!

பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
ஓணத்தில் சேயாய் உதிப்பு….!

அதிதி உபசாரம் அன்று புரிந்தோன்
புதிய அவதாரப் பிள்ளை -குதியிட்டு
மாவலி முன்சென்றான் மூன்றடி வாமனனாய்
தாவலில் நெஞ்சம் திளைத்து….!

தாழங் குடையிடக்கை, தண்ணீர் கமண்டலம்
வாழிய காட்டும் வலக்கையில் -சோழியன்
உச்சியொடு வந்தவன் அச்சுதன் என்றுகுரு
எச்சரித்தும் மாபலி ஏற்பு….!

அந்தண வாமனர்க்கு வந்தனம் செய்துபலி
தந்தனன் கேட்ட திருவடிக்கு -மண்தனை
வண்டெனநீர் வார்க்கையில் வாத்தியார் வந்துக
மண்டல வாயை மறைப்பு….!

உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
அக்கணம் வாமனன் அங்கு….!

ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி
பாதாளம் செல்ல பலியை அழுத்திட
சேதாரம் இன்றியவன் சேர்பு….!

தானாகக் தானத்தை தந்திடும் தந்தைமுன்
வீணாக வேடமிட்டு வாமனமாய்ப் -போனீர்கள்!
பாணா சுரப்பிள்ளை போட்ட வினாக்(கு)ஏன
மீனாமை சிம்ம மறுப்பு….!

ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
ஆவேச நானை அழிப்பு….!

—————————————————————-
கபிலாவதாரம்
——————–
தேவஹுதி கர்த்தமர் தம்பதிக்குப் பிள்ளையாய்
காவலாதி தெய்வம் கபிலகுரு -தேவராய்த்
தோன்றிப் பெரிதுவந்த தாய்க்குப தேசமாய்
ஊன்றினார் பக்தி உலகு….!

கபில உவாச….
———————–
இயற்கையின் மாய இயல்பைக் கடந்து
பெயர்ந்திட ஜீவ புருஷன் -உயர்கிறான்.
ஆரா தனையாலும் ஆன்மவிசா ரத்தாலும்
நாரா யணனில் நிலைப்பு….!

மாசிலா நெஞ்சமாய், ஆசனங்கள் செய்தந்த
வாசுதேவ ரூபத்தை, வைகுண்ட -வாசனாக
பஞ்சா யுதமேந்தி புள்ளமர்ந்த நீலனாக
நெஞ்சார உன்னுள் நிறுத்து….!

காமமற்ற லீலையை, கல்யா ணகுணத்தை
நாமசங் கீர்த்தனமாய் நாவுரைக்க -தாமசமில்
கங்கா நதியொத்த மங்கா மனத்துடையோர்(கு)
இங்கே பிறப்(பு)இறப்(பு) ஏது….!

பத்தினியின் மோகத்தால் பிள்ளைமேல் பாசத்தால்
சொத்துசுகம் சேர்க்க செயல்படுவாய் -அத்துமீறி.
முத்திபெறும் மார்கத்தில் மூலத்தைக் காணாது
இத்தனை கஷ்டமேன் இங்கு….1

நான்யார் அறிவு நிரம்பி இருப்பினும்
தாயார் வயிற்றில், தளும்பியபின் -சேயார்வ
சிக்கல்கள் தாண்டிட சூழ்ந்திடும் யவ்வன
சொக்கல்கள் சூழ்ச்சிச் சுழல்….!

பூதபித்ரு தேவரை பூஜிக்கும் இல்லறத்தோன்
பாதையாம் தக்கிணத்தில், புண்ணியப் -போதுசெல்ல
இத்தரை வந்திடுவான், உத்திர மார்கமோ
முத்தியூர் சேர்க்கும் முடிவு….!

தாங்கிய தாய்க்குத் தனயன் உரைத்தனன்
சாங்கிய யோகத்தை சேவையாய் (OR) செவ்வெனே -வாங்கிய
ஆத்மவித்யா சக்தியால் ஐக்கியம் ஆயினள்
தீர்த்தம்சித் தாசிரமத் தில்….!

————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *