Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

பெல்ஜியத்தில் வாழும் எழுத்தாளர் மாதவன் இளங்கோ – தேவிப்பிரியா தம்பதியரின் மகன் அம்ருத சாய், பல துறைகளில் ஒரு தாரகையாக உருவாகி வருகிறார். 11 வயதுடைய இவர், தமிழ், ஆங்கிலத்துடன் டச்சு மொழியிலும் வல்லவர். அம்ருத பாலி என்ற கற்பனை உலகத்தைப் படைத்து, அதற்கு அரசனாக விளங்குகிறார். இதன் அடிப்படையில், ஆறு பாகங்கள் உள்ள ஒரு பெரிய நாவலை ஆங்கிலத்தில் எழுதி வருகிறார். ஒவ்வொரு நாளும் 100 பக்கங்கள் படித்து வருகிறார். இரண்டு யூடியூப் சானல்களை நடத்தி வருகிறார். கீபோர்டு, பியானோ, மேற்கத்திய இசை ஆகியவற்றைப் பயின்று வருகிறார். கேமிங் விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். நிரலாக்க மொழிகளையும் கற்று வருகிறார். இவ்வளவு துறைகளைக் கற்கும் போதும், ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி, சிறப்பாக மேலாண்மை செய்து வருகிறார். தமிழுக்கும் இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் மட்டுமில்லை, உலகிற்கே ஒரு தாரகையாக இவர் உருவாகி வருகிறார். இந்த நேர்காணலில் அம்ருத சாய், தனது பல்வேறு ஆக்கங்களையும் முயற்சிகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மழலைக் குரலில் விரியும் அவரது புதிய உலகத்தை இங்கே கண்டு மகிழுங்கள்.

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.