”நவனீதக் காரர், நதியமுனா தீரர்,
அவனியதன் பாரம் அகற்ற , -கவனமாய்
வெண்ணை கடைந்தான் விஜயர்க்கு கீதைஅக்
கண்ணனை நெஞ்சே கருது’’….
கலிமுடிவில் ஓரடியை ஆலிலையில் உண்டாய்
பலிமுடியில் வேறடியை வைத்தாய் -தெளிவடைய
நூற்றிடுவேன் வெண்பா நவனீதா ஏற்றிடுவீர்
ஈற்றடி யாக இருந்து….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.