கே. ரவி

vivid_flowers-wide

உன்னையொரு மலராய் மாற்றுகிறேன் – இதழ்
ஒவ்வொன்றிலும் சுடர் ஏற்றுகிறேன்
என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
(உன்னையொரு)

பொன்னிறமும் செந்நிறமும் கூடியதாய்த் – துளிப்
புன்னகையி லேஇழை ஓடியதாய்
மின்னல் நடனம் களியேறியதாய் – மழை
மேகமெல்லாம் அணை மீறியதாய்
என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
(உன்னையொரு)

சின்ன சின்ன முத்துக்களும் தூவுகிறாய் – புயல்
சீறிவரும் போதுநடை மாறுகிறாய்
அந்திப்பகல் நாடகம் ஆடுகிறாய் – உயிர்
அத்தனையிலும் கலந்தோடுகிறாய்
என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
(உன்னையொரு)

வெட்டவெளியோ அதில் நட்ட விதையோ
விண்ணும்மண்ணு மாய்ப்பிளந்து நிற்கும் வடிவோ
பட்டப்பகலில் கரம் ஆயிரமோ – இருள்
படர்ந்ததும் கோடிப் பூச்சரமோ
(உன்னையொரு)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.