கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
ஊதியது போதும் உடனே எழுந்துவா
பாதியில் நிற்குதாம் பாரதப்போர் -சேதிசொன்ன
COURIERரை மேய்க்காத காரணத்தால் உண்டுவிட்டேன்
WARRIORகள் காத்துள்ளார் வா”….கிரேசி மோகன் ….
கண்ணன் குழலூதும் சுவாரஸ்யத்தில் பாரதப்போரை ,பசுக்களை மேய்ப்பதை மறந்து விட மாடும் கன்றும் நினைவு படுத்துவதாகக் கற்பனை….
COURIER தின்ற மாடு -துவாபர யுகத்திலேயே பேப்பர் உண்ணும் பழக்கம் பசுக்களுக்கு வந்து விட்டது போலும் ….கலியுகத்தில் போஸ்டர் ….நன்றி கேசவ்ஜி….