காவிரி மைந்தன்

அம்மாவின் மடியில் கண்ணுறங்கும் குழந்தை.. அவள் தரும் தாலாட்டில் தானுறங்கும் என்பது எல்லோரும் அறிந்தது!  ஆனால் அதற்கு இணையாக.. அத்தை என்னும் உறவும்கூட அக்குழந்தையை தாலாட்டுவதில் பங்குபெறுகிறது என்பதை இப்பாடல் மூலம் தெளிவுபடுத்தும் கவிஞரின் கைவண்ணம் போற்றத்தக்கது!

நான் குழந்தையாய் இருந்தபோது.. என் தம்பிக்கு தாலாட்டு பாடிய போதெல்லாம் இப்பாடல் என் தாயாரால் பாடப்பட்டது மட்டுமின்றி விவரம்தெரிந்த நாளில் என் தாய் பாட.. ஒரு அலுமினிய தட்டை வைத்துக்கொண்டு நான் தாளம் போட.. வாழ்க்கையோடு வசியப்பட்ட பாட்டு.. அடிக்கடி உச்சரித்து உள்ளம் மகிழ்ந்திடும் பாட்டு!

கற்பகம் திரைப்படத்திற்காக வாலி அவர்கள் வரைந்த கீதமிது!  பி.சுசீலா என்கிற தென்றல் உள்ளம் வருட பாடிய பாட்டு!  விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் இசையில் .. அனைவரும் மயங்கும் பாட்டு!!

கற்பனையில் கவிஞரின் சிந்தனை எத்தனை அழகாய் விளையாடுகிறது பாருங்கள்!  தாலாட்டு கீதம் என்பதால் காலங்களைக் கடந்து ஒவ்வொரு வீட்டிலும்.. ஒவ்வொரு தொட்டிலிலும் உறவாடும் பாடலாய்.. நம் உள்ளம் தொடும் பாடலாய்.. வழங்கிய வாலியை வாழ்த்தலாமே!!

http://www.youtube.com/watch?v=T6XAdv2DIEo

அத்தை மடி மெத்தையடி

k.r..v..

அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா

அத்தை மடி மெத்தையடி…
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ.

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண் பாடும்
மான் குட்டி கேட்டு கண் மூடும்
அதை மான் குட்டி கேட்டு கண் மூடும்

ம்ம்ம்.. அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ…

வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை

வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை

அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்
அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்

அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடி

பாடல்அத்தை மடி மெத்தையடி
திரைப்படம்கற்பகம் (1963)
இசைஎம்.எஸ்வி & டி.கேராமமூர்த்தி
பாடியவர்பி.சுசீலா
வரிகள்வாலி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *