ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது …

0

— கவிஞர் காவிரிமைந்தன்.

 

madapura

 

 

 

மருதகாசிஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது – கவிஞர் மருதகாசி… மாடப்புறாவிற்காக…

மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த மாடப்புறா… அதிகமாக பரிச்சயமில்லாத ஒருசில திரைப்படங்களில் இதுவும் ஒன்று! என்றாலும் வழக்கமாக எம்.ஜி.ஆர் படங்களில் பாடல்கள் ஹிட் ஆவது இதிலும் உண்மையாகவே தோன்றுகிறது!

ஊருக்கும் தெரியாது… யாருக்கும் புரியாது … பல்லவி தருகின்ற குரல் சற்றே வித்தியாசமாகப் பட.. யார் பாடுகிறார் என்று உற்றுக்கேட்டால்… அட… பக்திப்பாடல்களில் புகழ்பெற்ற சூலமங்கலம் ராஜலட்சுமியின் குரல்… அதிகமாக திரைப்பாடல்கள் பாடியிராத காரணத்தால் சற்று கவனமுடன் கேட்கவேண்டியிருந்தது. எனினும் கனகச்சிதமான குரல்… கருத்தையள்ளும் பாடல்!

ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது

வித்தியாசமான கதையமைப்பில் அக்கதைக்கேற்ற கருவைச் சுமந்துவருகிற பாடலாய் அமைந்தாலும் மக்கள் நெஞ்சில் அதிகம் வலம் வராத பாடாகவே இருக்கிறது!

காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
கண்களை உறக்கம் தழுவாது
அன்புள்ளம் தவித்திடும் போது

காதல் நெஞ்சில் எழுகிறபோது அதை சொல்லவும் முடியாமல்… சொல்லாமல் இருக்கவும் முடியாமல்… தவிக்கிற தவிப்பையும் தந்துசெல்கிற கவிஞர் மருதகாசியின் பாடல்! திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில்… சுகம்தரும் வசந்தமாக வீசுகிறது…

படம்: மாடப்புறா
பாடல்: மருதகாசி
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன்
காணொளி: https://youtu.be/ff2Xtqty4p4

https://youtu.be/ff2Xtqty4p4

ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது

உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உண்மையை உலகம் அறியாது
உண்மையை உலகம் அறியாது
உன்னை இன்றி வாழ்க்கை ஏது

ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது

காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
கண்களை உறக்கம் தழுவாது
கண்களை உறக்கம் தழுவாது
அன்புள்ளம் தவித்திடும் போது

ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.