மார்கழி மணாளன் – 17 திருஎவ்வுள்ளூர்- வைத்திய வீரராகவப் பெருமாள்

0

ஓராண்டு தவமிருந்த மாமுனியின்

உள்ளாண்டு நின்றிருந்த உத்தமனே !

பல்லாண்டு உதிர்ந்திட்ட கிழவனாய்

மனமாண்ட மாமுனியின் விருந்தே !

 

பங்கின்றிச்  சாலியின் உணவைச் சுவைத்து

பங்கில்லா அருளைத் தந்த பரிபூரணனே !

எவ்வுள்ளில் உறங்கலாம் என்றே குடிலில்

திருவுள்ளம் கொண்ட திரு எவ்வுள்ளூரானே !

 

புஜங்க சயனத்தில் கிடந்த கோலத்தில்

நிஜங்களை காக்கும் நெடுமாலே !

புலனறியா நோயினையும் பொழுதினிலே

நலமாக்கும் வைத்திய வீரரகாவனே !

 

கிடந்தாலும் நின்னழகு விண்ணழகு

காலருகில் வசுமதியின் கண்ணழகு !

களங்கமில்லா சாலியின் மேல் கையழகு !

காலமெல்லாம் நீ அருளும் அருளழகு !

 

கல்லாகச் சிலையாகக் கண்டவரோ கண்டிலர்

கண்ணிமையில் கசிகின்ற காதலை அறிந்திலர்

சொல்லாகப் பொருளாக உன்னை அடைந்திலர்

சுவையாக நீயிருக்க சுமையனைத்தும் நீக்கிலர் !

 

விண்ணவனே! பொன்னவனே !  வீக்ஷாரண்யனே !

வினைதீர்க்க வந்திடுவாய் வேதவல்லி மணாளனே!

பாசுரத்தின் ஒலிதன்னில் வருவினைகள் நீங்கட்டும் !

பாதத்தின் ஒளி தன்னில் பாரெல்லாம் செழிக்கட்டும் !

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.