kesav

சினம்மிகுந்த மாமன் சிறைபிறந்து ஆயர்
இனம்புகுந்து வாழ்ந்த இடையன் -மணம்குவிந்த
மண்ணணைநீர் மேகத்து வண்ணனை மாற்றான்தாய்க்
கண்ணனை நெஞ்சே கருது….
சூழ்ச்சி யுடன்வந்த பேழ்ச்சி முலைபற்றி
மோட்ஷ விருந்தளித்த மோகனனை -மேய்ச்சலில்
கண்ணென கோகுலக் கன்றுகள் காத்திடும்
கண்ணனை நெஞ்சே கருது….(6)….24-03-2011

பாலுக்(கு) அழும்பாலன் பாவை களின்லோலன்
ஞாயலத் துயர்தீர்க்கும் நாயகன் -மாலுக்குள்
எண்ணமாய்த் தோன்றி இடைசாதி வந்தவன்
கண்ணனை நெஞ்சே கருது….

பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
கண்ணனை நெஞ்சே கருது….

அப்பண ஆதி அனந்தனில் தூங்குவோன்
சொப்பனம் இவ்வுலக சாராம்சம் -அற்பநான்
எண்ணம் தொலைத்து எழுவாய் விழிப்புடன்
கண்ணனை நெஞ்சே கருது….
இதுநிஜமாய் ஆகும் அது பொய்யாய்ப் போகும்
விதவிதமாய் எண்ணல் விடுத்து -எதுவரினும்
கண்ணணைந்த போதுதிக்கும் காரிருள் வண்ணத்து
கண்ணனை நெஞ்சே கருது….

எங்கரி என்றே இரணியன் கேளும்முன்
அங்கொரு தூணில் அதிர்ந்தவன் -சங்கரி
அண்ணனை ஆகாய வண்ணனை ஆனந்தக்
கண்ணனை நெஞ்சே கருது….

நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
கனைத்திடக் காமம் கலங்கும் -மணத்துழாய்
திண்ணிய தோளில் துலங்கும் துவாபரக்
கண்ணனை நெஞ்சே கருது….

காரோத வண்ணனின் பேரோத ஆயிரம்
நீரோடை போல்தெளிவு நம்வாழ்வில் -ஆராத
இன்னமுதை தீந்திருக் கண்ணமுதைக் கற்கண்டைக்
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *