விவசாயிகளும் – விளைபொருட்களும்!

0

பவள சங்கரி

தலையங்கம்

விவசாய விளைபொருட்கள் விவசாயிகளுக்கும் பொது மக்களும் உரிய விலை கிடைக்கிறதா? உதாரணத்திற்கு முட்டைகோஸ் மேட்டுப்பாளையம் சந்தையில் கிலோ  ₹ 4 க்கு விற்பனை ஆகிறது. இதுவே பொது மக்களைச் சென்றடையும்போது கிலோ ஒன்றிற்கு  ₹ 20 – 25 ஆகிறது. இதுவே சென்னை போன்ற பெரு நகரங்களுக்குச் செல்லும்போது  ₹ 30 ஐத் தொட்டுவிடுகிறது. விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைப்பதில்லை. பொது மக்களுக்கும் நியாய விலையில் கிடைப்பதில்லை. இதுதான் இன்றைய நிலை. இதற்கு அரசு குளிர்ப்பதனப்படுத்தும் கிடங்குகளை விவசாயிகள் எளிய முறையில் பயன்படுத்தும் வசதியும், விவசாயிகள் / பொதுமக்கள் நேரடி விற்பனை சந்தைகளை உருவாக்க வேண்டியது அவசியம். தற்போதுள்ள உழவர் சந்தைகளை உயர் தொழில்நுட்ப வசதிகளோடு விரிவுபடுத்தினாலே இந்தக் குறைகள் பெருமளவில் தீர்ந்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் வளமான வாழ்வு நிச்சயம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.