கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
இல்லாமல் நாமிருவர் என்றும் இருந்ததில்லை
இல்லா திருப்பதே இங்குண்மை ! -வல்லானென்
வேத மிதையுணர்ந்தால் வேதனைகள் இல்லைகாண்
பாதமதைப் போரில் பதி”….!
”பார்முழுதும் நின்று பரந்த பரம்பொருள்
ஓர்நாளும் மாறா(து) ஒழியாது ! -யார்வாளும்
இத்தை அழித்தல் இயலா தெனவென்று
சத்தை அறிவாய் சகா”…கிரேசி மோகன்….!