பண்புப் பெயர்ச்சொற்களில் கலைச் சொல்லாக்கத்தின் பங்கு

0

முனைவர். நா.ஜானகிராமன்,

தமிழ்த்துறைத்தலைவர்,

பாரதிதாசன் பல்கலைக்கழகக்கல்லூரி,

பெரம்பலூர்

 

முன்னுரை

உலக மக்களுள், தமிழர் தலைசிறந்த நாகரிகமுடையவர் என்பதை அவருடைய மொழியமைப்பும் கருத்துமே காட்டும் என்று ஞா. தேவநேயப்பாவாணர் சுட்டுகிறார். இத்தகைய சிறப்புவாய்ந்த நம் மொழியில் கலைச்சொல் பல உள்ளன. மொழியும் இலக்கணமும் , ஒன்றுடன்ஒன்று தொடர்புடையவை. இக்கட்டுரை சில பண்புப்பெயர் சார்ந்த கலைச் சொற்களை விளக்குகின்றது.

கலைச்சொல்

கலைச்சொல் என்பது technical term எனும் ஆங்கிலச் சொல்லின் மொழிப்பெயர்ப்பாகும். Technic  என்னும் ஆங்கிலச் சொல் Technicus எனும் இலத்தின் மொழியிலிருந்து பிறந்ததாகும். இந்த இலத்தின் சொல்லுக்குக் கலை என்று பொருள்.

குறிப்பிட்ட அறிவுத்துறையில் இடம்பெறும் கருத்தமைவுகளை விளக்கும் சொற்கள் கலைச் சொற்களாகும்,  அவை அத்துறைக்குரிய சொற்களாகக் கருதப்பெறும். அவற்றைச் சிறப்புச்சொற்கள் (specialized vocabulary)  என அழைப்பர்.

கலைச்சொல் என்பது சாதாரணச் சொல்லாக மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட தன்மையையோ, நிகழ்வையோ, கருத்தமைவையோ, செயல்பாட்டையோ குறித்து நிற்பது. மேலும் கலைச்சொல் சிறப்புப் பொருள் தாங்கித் துறைசார்ந்து அமையும்.

ஒருதுறையில் குறிப்பிட்ட கருத்துச் செறிவினை விளக்கப் பயன்படும் சொல் கலைச்சொல் எனப்படும். இது ஒவ்வொரு துறையிலும் தனித்தன்மைகள் பெற்று விளங்கும்.

கலைச்சொல்லின்அமைப்பு

ஒரு கலைச் சொல்லுக்கு ஒரு பொருள் என்ற நிலை இருக்க வேண்டும். இச்சொல் தனிச்சொல்லாகவும், தொகைச்சொல்லாகவும் அமைவதுண்டு. சமயம், தத்துவம், அறிவியல் போன்ற பலதுறைக் கருத்துக்கள் பிறமொழி பேசும் சமுதாயத்திலிருந்து மற்றொன்றிற்குப் புகும்போது கலைச்சொற்கள் உருவாகின்றன. இக்கலைச்சொற்கள் துறைச்சொல் என்றும் வழங்கப்படுகின்றன.

குறிப்பிட்ட கருத்தினை மட்டும் உணர்த்தும் குறிப்பிட்ட ஒரு துறையைச் சார்ந்த மொழிக் கூறாகக் கலைச்சொல் அமைந்திருக்கும். சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கவல்லது செறிவுடன் விளங்குவது கலைச்சொல்லின் தேவை குறிக்கப்படும் ஒரு பத்தியிலோ, பக்கஅளவிலோஎழுதவேண்டிய கருத்தை ஒரே சொல்லில் கூறமுனையும் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் அனைவருக்கும் புரியக்கூடிய வகையில்இருக்கும் புதியகருத்துக்கள் அறிய உறுதுணையாகிறது. புதிய தொழிநுட்பவியல் மற்றும் அறிவியல் சொற்களைமக்கள் தெரிந்து கொள்ள உதவுகிறது. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மக்கள் அறிய உதவும். வெளிநாடுகளில் உள்ள தயாரிப்புகள், கண்டுபிடிப்புகள் பற்றித் தெரிந்து கொள்ளவும், அவற்றை நம் நாட்டில் செயல்படுத்தி நாடு வளர்ச்சி அடையவும் பயன்படுகிறது.

பண்புப்பெயர்கள்

தமிழ்மொழிபெயர்களைஆறுவகைகளாகப்பகுத்துக்கொண்டுள்ளது.

  1. பொருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. காலப்பெயர்
  4. சினைப்பெயர்
  5. பண்புப்பெயர்
  6. தொழிற்பெயர்

ஒரு பொருளின் பண்பை உணர்த்தும் பெயர் பண்புப்பெயராகும். நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியன குறித்து வரும் சொற்கள் பண்புப்பெயர்களாகும். செம்மை, சிறுமை, சேய்மை, நன்மை, இளமை, புதுமை போல் வனவும் இவற்றிற்குரிய எதிர்ச்சொற்களும் இவை போன்ற பிறவும் மையீற்றுப் பண்புப்பெயர்கள் எனப்படும்.

கருங்கண் = கண்ணேறு (திருஷ்டிதோஷம்)

கருங்கந்து= நெற்களத்தில்பொலிக்குஅடுத்துவிழும்பதர்

கருங்கறி = வளமானசதை

கருங்காடு = சுடுகாடு

கருங்காய் = இளம்பாக்கு, கொஞ்சங்குறையமுற்றியகாய்

கருங்குணம் = தீக்குணம்

கருங்கூத்து = இழிதரக்கூத்து, அநாகரிககூத்து

கருங்கை = வேலையில்அடிபட்டுகருத்தகை, வலியகை, கொல்லுங்கை

கருஞ்சருக்கு = கூலம், (தானியம்), சாறாயம்

கருஞ்சார் = இடுப்புப்பொருத்து(Hip Joint)

கருஞ்செய் = நன்செய்

செங்களம் = போர்க்களம்

செங்காய் = பழுக்கும்பருவக்காய்

செங்காய்ப்புண் = பழுக்காதபுண்

செங்குணக்கு = நேர்கிழக்கு

செங்குத்து = நேர்க்குத்து

செங்கை = கொடைக்கை

செங்கோடு = செங்குத்தானமலை

செங்கோல் = நேர்மையானஆட்சி, நேரானகோல்

செஞ்ச, செஞ்சேவே = நேராகமுழுதும்,

செஞ்சம், செஞ்சு = (நேர்மை), சரிமை (correctness) முழுமை

செஞ்செல் = நேர்மையானசெயல்

செஞ்செவியர் = செல்வர்

செஞ்செழிப்பு = பெருஞ்செழிப்பு, ஏராளம்.

செஞ்சொல் = திருந்தியசொல் , வெளிப்படைச்சொல்

செஞ்சோறு = அரசன் தன் பொருட்டுப் போரில் இறக்க கருதிய வீரனுக்குக் காலமெல்லாம் அளிக்கும் சோறு

செஞ்ஞானி = சிறந்தஞானி

செந்தட்டு = அந்தரத்தட்டு, தன்மேல் விழும் அடியைத் தடுக்கை, ஏவின காரியத்தைத் தட்டுகை.

செந்தமிழ் = இலக்கணத்தமிழ், தூயதமிழ்

செந்தவிப்பு = செழிப்பு

செந்தூக்கு = நேராகத்தூக்குகை.

செந்தொடை = மோனையெதுகையில்லாதயாப்பு

செந்நடை = செவ்வியநடை

செந்நெறி = செவ்வியவழி , நன்னெறி

செந்நிலம் = போக்களம்

செந்நிறுவுதல் = நன்னெறியில்நிறுத்துதல்

செம்பத்தி = உண்மையானஅன்பு

செம்பாகம், செம்பாதி, செம்பால் = நேர்பாதி

செம்புண் = ஆறும்நிலையிலுள்ளபுண்

செம்பொருள் = நேர்பொருள், உண்மைப் பொருள், சிறந்த பொருள் , கடவுள் அறம்

செம்மல் = தலைமை , வலிமை, தலைவன், இறைவன்

செம்மாத்தல் = இறுமாத்தல், மிகமகிழ்தல்

செம்மொழி = நற்சொல், திருந்தியமொழி.

நீலம்

நீலன் = கொடியன்

நீலி = கொடியவள்

பசுமை = இளமை,ஈரம், குளிர்ச்சி, அழகு, இனிமை, புதுமை

பச்சுடம்புபச்சையுடம்பு = பிள்ளைப்பேற்றால்இளந்தவுடம்பு

பச்சை = இடக்கர், வெளிப்படை

பச்சைக்கள்ளன் = பெருந்திருடன்

பச்சைக்குறவன் = பெரும்பாசாங்குக்காரன்

பச்சைக்கொல்லண் = வேலைத்திறமையற்றகொல்லன்

பச்சைப்பதம் = கூலத்தின்முற்றாப்பருவம், நன்றாய்வேகாதநிலை

பச்சைப்புண்பசும்புண் = ஆறியிராதபுண், புதுப்புண்

பச்சைப்புளுகன் = பெரும்பொய்யன்

பச்சைப்பூ = பால்குடிக்கிறகுழந்தை

பச்சைப்பேச்சு = இடக்கர்ப்பேச்சு, மறையாப்பேச்சு

பச்சைப்பொய் = முழுப்பொய்

பச்சைப்பசும்பொய் = பெருமுழுப்பொய்

பச்சைமண் = இளங்குழந்தை

பச்சைவெட்டு= பக்குவம்செய்யப்படாதநிலை, பழுக்காதநிலை

பச்சைவெட்டுக்கல் = சுடாதகல்

பசுங்குடி = யோக்கியமானகுடி, உழவன்

பசுந்தமிழ், பைந்தமிழ் = இனியதமிழ்

பசும்பை = வணிகர்தோளில்மாட்டிக்கொள்ளும்நீண்டபை

பைங்கூழ் = இளம்பயிர்

பைஞ்சோறு = சாணம்

பொன்மை = பொலிவு, அழகு, விளக்கம்

பொற்ப = பொலிவுபெற

வெண்மை = வெறுமை, வெளிப்படை, அறிவின்மை, கள்ளமின்மை, உள்ளீடின்மை

வெண்கடன் , வெண்ணிலைக்கடன் = ஈடுகாட்டாதுவாங்குங்கடன்

வெண்காவல் =வெறுங்காவல்

வெண்கை = தொழில்செய்துபழகாதகை

வெண்சோரு = வெறுஞ்சோறு

வெண்டேர் = கானல் (Mirage)

வெண்ணிலம் = வெறுந்தரை, மணல்தரை

வெண்ணோவு , வெண்ணோக்காடு = பிள்ளைப்பேற்றிற்குமுன்உண்டாகும்வெறுவேதனை.

வெண்பதம்= இளஞ்சூட்டுப்பதம்

வெண்பாட்டம் = முன்பணமின்றிவிடுங்குத்தகை

வெண்புழுக்கல், வெண்புழுக்கு, வெண்புழுங்கல் = இளம்புழுக்கல், இளம்புழுங்கலரிசி

வெண்மட்டக்கருத்து = மேலெழுதவாரித்தீர்மானம்

வெண்மட்டம் = மேலெழுந்தவாரி , நுணுக்கமின்மை

வெண்மட்டவேலை = நுணுக்கமில்லாத வேலை, மேலெழுந்தவாரியாகச்செய்யும்

வேலை

வெள்வீச்சு = ஆடம்பரப்பேச்சு

வெள்வெடி = குண்டு இல்லாத தோட்டா

வெள்ளந்தி = கள்ளங்கபடற்றவன்

வெள்ளடி = சாதாரணம்

வெள்ளடிவெருட்டு = பெட்டைமிரட்டு

வெள்ளவெளி = பரவெளி

வெள்ளறிவு = அவிவேகம்

வெள்ளிடி = கோடையில் மழை பெய்யாது இடிக்கும் இடி எதிர்பாராது திடுமெனவரும் துன்பம்

வெள்ளிடை , வெள்ளிடைமலை = மிகத்தெளிவாகயிருப்பது

வெள்ளிது = வெளிப்படையானது

வெள்ளிலை = வெற்றிலை

வெள்ளுயிர் = தூயஆன்மா

வெள்ளுருட்டு = வெற்றச்சுறுத்தம்
வெள்ளுழவு = சிறிதுஈரமுள்ளநிலத்தில்உழும்உழவு

வெள்ளெழுத்து = எழுத்து விளக்கமாய்த் தெரியாமைக்கான பார்வைக் குறை

வெள்ளென = அதிகாலையில் , இருட்டுமுன், குறித்த காலத்திற்கு முன்பே

வெள்ளேடு =வெற்றேடு

வெள்ளேறன் = பழுதானஇரும்பு

வெள்ளை = கள்ளமற்றவன்

வெள்ளைக்கவி = பொருட்செறிவில்லாத பாட்டு

வெள்ளைக்கோட்டி = பயனில் பேச்சு, பயனிலபேசும் அறிவிலார் கூட்டம்

வெள்ளைச்சொல் = எளிய சொல், திருந்தாச்சொல்

வெள்ளைத் தமிழ் = எளிய நடைத்தமிழ்

வெள்ளைத்தனம் = கள்ளமின்மை

வெள்ளைநோக்கு = கள்ளமற்றப் பார்வை

வெள்ளைப்புண் = ஊன் வெளுத்து எளிதில் ஆறாத புண்

வெள்ளைப் பூச்சு = தவற்றை மறைத்தல்

வெள்ளைப் பேச்சு = வெளிப்படையானப் பேச்சு, கள்ளமற்ற பேச்சு

வெள்ளைப் பூசுதல் = தவற்றை மறைத்தல்

வெள்ளை மகன் = மூடன்

வெள்ளை மதி = அறியாமை, அறிவுக் குறைவு

வெள்ளை மழை = சிறுமழை

வெள்ளை மனம் = கவடற்ற மனம்

வெள்ளொக்கல் = குற்றமற்ற இனம், செல்வமுள்ள கிளைஞர்

வெள்ளோக்காளம் = உமிழ்நீரை மட்டும் வெளியேற்றும் குமட்டல்.

வெள்ளோட்டம் = புதுத்தேரை முதன்முதலாக ஓட்டிப் பார்த்தல், பயன்படுத்துவதற்கு

முந்திய ஓட்டம். (பரீட்சை)

வெள்ளோலை = எழுதப்படாதஓலை

தொகைமொழியின் வகை

                       “வேற்றுமைத்தொகையே உவமத்தொகையே

                        வினையின் தொகையே பண்பின் தொகையே

                        உம்மைத் தொகையே அன்மொழித் தொகையென்று

                        அவ்வா றென்ப தொகைமொழி நிலையே” (தொல் சொல் நூ. 406)

தொகை மொழிகள் ஆறு வகைப்படும் அவை,

  1. வேற்றுமைத்தொகை
  2. உவமத்தொகை
  3. வினைத்தொகை
  4. பண்பின் தொகை
  5. உம்மைத்தொகை

6.அன்மொழித்தொகை

பண்புத்தொகை

வண்ணத்தின் வடிவின் அளவிற் சுவையினென்

                          நன்ன பிறவும் அதன்குணம் நுதலி

                          இன்ன திதுவென வரு உம் இயற்கை

                          என்ன கிளவியும் பண்பின் தொகையே (தொல் சொல் .நூ. 410)

வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பனவற்றினும் , அத்தன்மைய பிறவினுமாகிய , ஒரு பொருளினது குணத்தைக் கருதி இன்னது இது என ஒன்றையொன்று விசேடித்து வரும் இயல்பினை உடைய எல்லாச் சொல்லும் பண்புத்தொகையாம்.

பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து ) வரும் பெயர்ச்சொல். ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர்.

  1. நிறத்தைக் குறிக்கும் பண்புப் பெயர்ச் சொற்கள்

செம்மை, பசுமை, வெண்மை, கருமை

  1. வடிவத்தைக் குறிக்கும் சொற்கள் – வட்டம் ,சதுரம்
  2. சுவையைக் குறிக்கும் சொற்கள் – இனிமை, கசப்பு
  3. குணத்தைக் குறிக்கும் சொற்கள் –நன்மை, தீமை
  4. எண்ணிக்கையைக் குறிக்கும் சொற்கள் – ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.

(எ.கா)

வெண்கரடி  =வெண்மை+கரடி

வட்டக்கோடு = வட்டமான கோடு

புளிச்சோறு = புளிக்கும் சோறு

பெருங்கடல் = பெருமை (பெரிய) +கடல்

மூவேந்தர் = மூன்று + வேந்தர்

இரு பெயரொட்டுப்பண்புத்தொகை

பண்புப் பெயர்ச் சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்த்து வருமாயின் அவை பண்புத்தொகை எனப்படும். அதுபோல இரண்டு சொற்கள் கொண்ட ஒரு பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் சிறப்புப்பெயர்ச்சொல்லாகவும் இரண்டாவது வரும் பெயர்ச்சொல் பொதுப்பெயர்ச்சொல்லாகவும் இருப்பின் அது இரு பெயரொட்டுப்பண்புத்தொகை எனப்படும்.

(எ.கா)

கைத்தலம், பலாமரம், மடித்தலம், இந்தியநாடு, வெண்தயிர், கருஞ்சிலை,  ஒண்டொடி, விற்படை, நாற்படை.

பண்புப்பகுதிகள்விகாரப்படுதல்:

ஈறுபோதல்இடைஉகரம்இய்யாதல்

ஆதிநீடல்அடிஅகரம்ஐயாதல்

தன்னொற்றிரட்டல்முன்னின்றமெய்திரிதல்

இனமிகல் , இனையவும்பண்பிற்கியல்பே(நன்னூல் 136)

எடுத்துக்காட்டு :

பண்புத்தொகை விரி விளக்கம் விதி
நல்லன், சிறுபொருள் நன்மை+அன், சிறுமை+பொருள் மையிறுதிகெட்டது. ஈறு போதல்
கரியன், சிறியிலை கருமை+ அன், சிறுமை+ இலை விகுதி போய் உகரம் இகரம் ஆயிற்று இடை உகரம் [இ] ஆதல்
பாசி, மூதூர் பசுமை+ ஊர். முதுமை+ ஊர் விகுதி போய் ஆதி நீண்டது ஆதி நீடல்
பைந்தார் பசுமை+ தார் மைவிகுதிகெட்டுபசு’ என நின்றதில் ‘சு’ என்பதில் உகரம் இகரம் ஆயிற்று. அடி அகரம் ஐ ஆதல்
குற்றி, நட்டாறு குறுமை+ ஆறுநடுமை+ ஆறு விகுதி போய் இறுதி எழுத்தின் தன் ஒற்று இரட்டியது தன் ஒற்று இரட்டல்
செய்யன், செம்மை + அன் விகுதி போய் முன் நின்ற மெய் திரிந்தது முன் நின்ற மெய் திரிதல்

மேலும்சில (,கா)

அருமை + உயிர்  = ஆருயிர்

அருமை +வினை = அருவினை

அருமை+பொருள் = அரும்பொருள்

இளமை+ அரசு = இளவரசு

இனிமை +நகை= இன்னகை

இனிமை+ நிழல் = இந்நிழல்

கடுமை+கதிர் = கடுங்கதிர்

கடுமை+ தவம் = கடுந்தவம்

சிறுமை+ இல் = சிற்றில்

சிறுமை+ பொழுது = சிறுபொழுது

சிறுமை + ஊர் = சிற்றூர்

செம்மை+ கதிர்= செங்கதிர்

செம்மை+கை = செங்கை

செம்மை+ தாமரை =செந்தாமரை

செம்மை + நெல் = செந்நெல்

செம்மை+கோலம் = செக்கோலம்

செழுமை + குரங்கு= செழுங்குரங்கு

தண்மை+ தார் =தண்டார் (தார் – மாலை)

தண்மை+ தாமரை= தண்டாமரை (தன்மை – குளிர்ச்சி)

தண்மை +தேன் = தண்டேன்

தீமை+ தண்டம் = தீத்தண்டம்

தொன்மை+ நிறம் = தொன்னிறம்

நன்மை + ஆசிரியர் = நல்லாசிரியர்

நன்மை+ ஆறு =நல்லாறு

நன்மை+ கருமம் = நற்கருமம்

நன்மை+ மரம் =  நன்மரம்

நன்மை+ மருந்து = நன்மருந்து

நெடுமை + கிரி = நெடுங்கிரி

நெடுமை + புயல் = நெடும்புயல்

பசுமை + கிளி = பைங்கிளி

பசுமை+ சோலை = பசுஞ்சோலை

பசுமை+ தலை = பைந்தலை

பசுமை + தமிழ் = பைந்தமிழ், பசுந்தமிழ்

பசுமை+ கொடி= பைந்தொடி

பசுமை + தரு = பழந்தரு (தரு – மரம்)

பெருமை+ அறிவாளன் = பேரறிவாளன்

பெருமை+ அழகு = பேரழகு

பெருமை+ கடல் = பெருங்கடல்

மூன்று+ நீர் = முந்நீர்

மும்மை + தமிழ் = முத்தமிழ்

வளமை+ அரசு = வளவரசு

வன்மை+ திறன் = வன்றிறல்

வெண்மை+ குடை = வெண்குடை

வெறுமை +கை = வெறுங்கை

வெறுமை+ தேர் = வெறுந்தேர்

வெறுமை + இடம் = வெற்றிடம்

வெறுமை+ இலை = வெற்றிலை

மேலும்சிலபண்புப்பெயர்ப்பகுதிகள்:

செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை, வெண்மை, கருமை, பசுமை, பொன்மை, பெருமை, அண்மை, நன்மை, பருமை, இளமை, முதுமை, எளிமை, அருமை, குறுமை, நெடுமை, மடமை, புலமை, வெறுமை, நடுமை,முதலியனபண்புப்பெயர்பகுதிகளாகும்.

முடிவுரை

தமிழ்கலைச் சொற்கள் எனப்படுபவை துறைசார் தகவல்களை துல்லியமாக பகிர்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிறப்புத் தமிழ் சொற்கள் ஆகும்.  கலைச் சொல் ஆக்கமும், பயன்பாடும் தமிழ் மொழியில் தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒரு செயற்பாடே எனினும் கடந்த சில நூற்றாண்டுகளில் அறிவியல் மற்றும் தகவல் புரட்சிகளில் காரணமாக கலைச் சொற்களின் தேவையும் பயன்பாடும் பல வழிகளில் வளர்ச்சி பெற்றுள்ளன.

துணைநூற்பட்டியல்

  1. தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)
  2. உயர்தரக்கட்டுரைஇலக்கணம் ( 2)

மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் பதிப்பாசிரியர் புலவர் அ. நக்கீரன்

பதிப்பாளர் கோ. இளவழகன்.

  1. அறிவியலும் தமிழும் (கட்டுரை தொகுப்பு)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *