பெண் என்னும் பெருவரம்!

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,
மெல்பேண், ஆஸ்திரேலியா

கண்னுக்குள் மணியாக
மண்ணுக்கு உரமாக
விண்ணுக்குள் நிலவாக
விளங்குபவள் பெண்ணாவாள்
எண்ணத்தில் இரக்கமதை
இருத்திவைக்கும் இதயமதை
மண்ணகத்தில் கொண்டிருக்கும்
மாப்பிறப்பே பெண்ணாவாள் !

இறைவனது படைப்பினிலே
பெண்படைப்பே பெரும்படைப்பு
தாய்மையெனும் உயர்நிலையை
தாங்குவது பெண்ணன்றோ
பொறுமையெனும் இலக்கணத்தை
விளக்கிநிற்கும் பெருநூலாய்
பூமிதனில் பார்ப்பதற்குப்
பெண்தானே விளங்குகிறாள் !

ஈரமுடை நெஞ்சத்தை
இறைகொடுத்தான் பெண்ணுக்கு
பாரமெலாம் தாங்குகின்ற
பக்குவத்தை உவந்தளித்தான்
கார்மேகம் பொழிவதுபோல்
கருணைமழை பொழிந்துநிற்கும்
பெருவரமாய் பெண்ணன்றோ
உருவாகி நிற்கின்றாள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *