Tag: எம். ஜெயராம சர்மா

  • ஆண்டாண்டு போற்றிடுவோம்!

        -எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

        muvaஇலக்கியத்தை இலக்கணத்தை
        இங்கிதத்தை நானறிய
        நிலைத்தவொரு அறிஞரென
        நின்றிருந்தார் ’முவ’வே !

        தலைக்கனமும் இல்லாமல்
        தனதுநிலை பிறழாமல்
        எடுத்தபணி செய்தனரே
        எங்களது ’முவ’வும்!

        தனித்தமிழால் கதைகள் சொன்னார்
        தரமுடைய நாவல் தந்தார்
        பொறுப்புடனே தமிழ் படித்தார்
        பொறுமைநிறை ’முவ’வும்!

        மொழிநூலை நான்கற்க
        முன்னானார் ’முவ’வும்
        தெளிவாகத் தமிழெழுத
        சிறந்தகுரு ஆனாரே!

        எங்கள்தமிழ் இலக்கியத்தை
        எல்லோரும் அறிவதற்காய்
        எழுதுகின்ற பணிதன்னை
        ஏற்றவரும் ’முவ’வே!

        பாரததத்தின் பிரதமரே
        பணிகொடுத்து நின்றாரே
        ’முவ’வின் முயற்சியினால்
        முத்தமிழைப் பலர்பார்த்தார்!

        அமுதத் தமிழ்மொழியை
        அரவணைக்க வழிசெய்த
        அறிஞராம்  ’முவ’வை
        ஆண்டாண்டு போற்றிடுவோம் !

        ’முவ’வின் பெயர்கேட்டால்
        யாவருமே தமிழ்படிப்பார்
        தாமாகக் கற்றுணர்ந்து
        தலைநிமிர்ந்து நின்றாரே!

        சாவாத மருந்தெனவே
        தரமுடைய நூல்களெலாம்
        ’முவ’வின் மதியினின்று
        முகிழ்த்தெழுந்து வந்தனவே!

        ஆலமரமாக அவரிருந்தாரப்போது
        அவருடைய நிழலினிலே
        அறிஞரெலாம் இருந்தனரே
        ஞாலமெலாம் சென்றுஅவர்
        நம்பெருமை சொன்னாரே
        சீலநிறை ’முவ’வை
        சிந்திப்போம் எந்நாளும்!

       {இன்று (அக்டோபர் 10) மு.வரதராசனாரின் நினைவு நாள்.}

    Share
  • காணவேணும் இந்தியாவை!

    எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    Gandhi At 78

     

     

     

     

     

     

     

     

     

    அறமதனைக் கடைப்பிடித்து
    அனைவரையும் அரவணைத்து
    ப்
    பிறர்நலமே பேணிநிதம்
    பெரும்பணிகள் ஆற்றிநின்றார்!

    குறைகள் பலவந்தாலும்
    குனியாமல் நின்றுஅவர்
    பணிகள்பல செய்தமையால்
    பார்போற்ற நிற்கின்றார்!

    கீதைதனைப் படித்துக்
    கீழ்க்குணத்தை விட்டெறிந்தார்
    பாதைதனைத் தெரிந்து
    பக்குவமாய் வாழ்ந்துநின்றார்!

    போதை  தனைஊட்டும்
    பொருளையெலாம் ஒழிக்கவேண்டி
    நீதிதனை உணர்த்துதற்கு
    நீண்டயுத்தம் செய்தாரே!

    காந்திமகான் தன்வாழ்வில்
    கடவுளிடம் வேண்டிநின்றார்
    கருணையுள்ளம் கொண்டவராய்க்
    காலமெல்லாம் இருப்பதற்கு!

    இந்திய மக்களிடம்
    ஏற்றத்தாழ்வு காணாது
    எல்லோரும் இந்தியரே
    எனவெண்ணி இருந்தாரே!

    பதவிகளை நாடாமல் பணமெதையும் சேராமல்
    உதவிகளைச் செய்வதிலே ஊக்கமாய் நின்றாரே
    தெருவெங்கும் நடைநடந்து சிரமமுடன் பணியாற்றி
    உருக்குலைந்த உருவமொடு ஊருக்காய் உழைத்தனரே!

    எளிமைக்கு இலக்கணமாய் என்றுமவர் இருந்தாரே
    ஏகபோக வாழ்க்கையினை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை
    எல்லோரும் சுதந்திரமாய் இருக்கஅவர் எண்ணியதால்
    இரவுபகல் பாராமல் இளைக்காமல் இயங்கினரே!

    எதிர்த்து நின்றவெள்ளையனை
    இரக்கமுடன் அவர்பார்த்தார்
    எதற்குமே அஞ்சாதான்
    இரக்கத்தால் அடிபணிந்தான்!

    தரக்குறைவாய் நடந்தாரும்
    தலைகவிழ்ந்து நின்றார்கள்
    தன்னுடைய பொறுமையினால்
    தானுயர்ந்தார் காந்திமகான்!

    காந்திமகான் வந்துஇங்கே
    காணவேணும் இந்தியாவைக்
    கண்டவுடன் காந்திமகான்
    கண்ணீரில் மிதந்திடுவார்!

    என்னுடைய பாரதமா?!
    எனவெண்ணிக்
    காந்திமகான்
    தன்னிலமை
     இழந்தங்குத்
    தலைசுற்றி
    நின்றிடுவார்!

     

    Share
  • இரக்கமுடன் அருள்புரிவாய்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    கல்வியின் தெய்வமே நீ
    கண்திறந்து பார்க்க வேணும்
    கல்விக்குள் காசை வைத்துக்
    கற்பவரை முடக்கு கின்றாரே
    செல்வம் இல்லா நிலையிலுள்ளார்          goddess-saraswati
    சீராகக் கல்வி பெற
    எல்லை இல்லா நாயகியே
    இரக்க முடன் அருள்புரிவாய்!

    கல்வியைக் காசாக்கிக்
    கடைத்தெருவில் விற்கின்றார்
    காமராசர் பிறந்தமண்ணில்
    கல்வியிப்போக் காசாச்சு!!

    இலவசமாய்க் கல்விதரின்
    எல்லோரும் படித்துநிற்பார்
    இந்தநிலை வருவதற்கு
    எங்களம்மா அருளிவிடு!

    காந்தீயம் பிறந்த நாட்டில்
    காசுகையில் இல்லை என்றால்
    கல்வி தனை நாடிடுவார்
    கனவில்தான் கற்க வேணும்!

    காசில்லாக் குடும்ப மதில்
    பிறந்து விட்ட காரணத்தால்
    கல்வி கற்க இயலாரை
    கைதூக்கி விட்டி டம்மா!

    மருத்துவம் படிப்பதற்கு
    மனம் அவர்க்கு இருந்தாலும்
    தரித்திரத்தின் காரணத்தால்
    தான் ஒதுங்கி நின்றிடுவார்!

    வருத்தமின்றி அவர்படித்து
    வாழ் நாளில் உயர்வடையத்
    தரித்திரத்தைப் போக்கிடுவாய்
    தயை நிறைந்த நாயகியே!

    பள்ளித் தலமனைத்தும் கோவில் எனச்சொல்லிச்
    துள்ளி வரும்தமிழாலே சொன்னானே பாரதியும்
    கிள்ளி எறிந்துநிற்கும் கீழான குணமுடையோர்
    பள்ளிகளை இப்போது பணக்கிடங்காய் மாற்றிவிட்டார்!

    பாரதியின் தமிழ் கொண்டு
    பாட்டாலே வேண்டு கின்றேன்
    பலபேரும் கல்வி கற்கப்
    பராசக்தி அருள் புரிவாய்!

    Share
  • அகிலத்தில் அமைதி காப்போம்!

    -எம். ஜெயராம சர்மாமெல்பேண்

    சமயத்தின் பெயரால் சண்டை
    சாதியின் பெயரால் சண்டை
    குமைகின்ற உள்ளங் கொண்டார்                      peace
    குழப்பமே செய்வார் நாளும்!

    அமைதியை எண்ணிப் பாரார்
    ஆரையும் மனதில் கொள்ளார்
    அழித்தலை மட்டும் நாடி
    அனைத்தையும் ஆற்ற வந்தார்!

    வெறி தனைக் கொண்டதாலே
    நெறி தனை மறந்தேவிட்டார்
    அறி வெலாம் மங்கிப்போக
    அரக்கராய் மாறி விட்டார்!

    தூய்மையாம் சமயம் தன்னைத்
    தூய்மையாய்ப் பார்க்கா நின்று
    பேயென உருவம் கொண்டு
    பிணக்காடாய் மாற்று கின்றார்!

    கடவுளின் பெயரைச் சொல்லிக்
    கருணையை வெட்டி வீழ்த்தித்
    தெருவெலாம் ரத்தம் ஓடச்
    செய்கிறார் தினமும் எங்கும்!

    குண்டுகள் வெடிக்கும் வேளை
    குரூரமே நிகழும் அங்கே
    மண்டைகள் சிதறி மண்மேல்
    வாரியே உதிரம் ஓடும்!

    வைத்திய சாலை கோவில்
    வயோதிகர் தங்கும் இல்லம்
    சித்தத்தில் வைக்கா வண்ணம்
    சிதைக்குமே வைத்த குண்டு!

    எத்தனை உயிர்கள் போயும்
    இரக்கமே வாரா நிற்கும்
    அத்தனை அரக்கர் தம்மால்
    அகிலத்தின் அமைதி போச்சே!

    ஆதியென நிற்கின்ற கடவுள்தானும்
    அரக்ககுணம் கொண்டாரை அருகில்வையார்
    பேதமெலாம் கடவுளுக்கு இல்லையப்பா
    பேய்மனத்தை ஆண்டவனும் ஏற்கமாட்டான்!

    ஆண்டவன் படைப்பில் நாங்கள்
    அனைவரும் மனிதர் அன்றோ
    வேண்டாத அழிவைச் செய்து
    விளைந்தது என்ன கண்டீர்?

    ஆண்டவன் படைத்த இந்த
    அற்புத அகிலம் தன்னில்
    அமைதியை காப்போ மானால்
    ஆனந்தம் அடைவோம் நாளும்!

    வேண்டிய விதத்தில் வாழ
    விண்ணையும் தொட்டு நிற்க
    ஆண்டவன் அருளைப் பெற்று
    அகிலத்தில் அமைதி காப்போம்!

    காட்டேறி போலிருக்கும் காட்டுமிராண்டிகளே
    கடவுள் தந்தபூமிதனைக் கந்தகமாய் ஆக்காதீர்!
    அறநெறியில் வாழுங்கள் அருளதனைப் பேணுங்கள்
    அகிலமெங்கும் அமைதிதனை ஆக்கிடுவோம் வாருங்கள்!

    Share
  • அரவணைக்க வருவாரா?

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    aug7

     

     

     

     

     

     

     

    காஞ்சியிலே பிறந்த அண்ணா
    கண்ணியத்தைக் காத்தமையால்
    வாஞ்சையுடன் அவரைமக்கள்
    மனத்தினிலே இருத்திவிட்டார்!

    வாமன உருவுடையார்
    மனங்களை வெற்றிகண்டார்
    தூய்மையாய் ஆட்சிசெய்ய
    துணிவுடன் அண்ணாவந்தார்!

    இன்பத் தமிழுடனே
    இங்கிதமாய் ஆங்கிலத்தைப்
    பங்கமின்றிப் பேசிப்
    பலபேரும் மெச்சநின்றார்!

    சங்கத் தமிழறிவார்
    சபையறிந்தும் பேசவல்லார்
    எங்கும் அவர்முழக்கம்
    ஈடின்றி ஒலித்ததுவே!

    எதிரிகளைக் கூடஅவர்
    இன்முகமாய்ப் பார்த்தாரே
    சதிகாரக் கும்பலையும்
    தலைவணங்க வைத்தாரே!

    நட்புக்கு இலக்கணமாய்
    நம்அண்ணா இருந்தாரே
    நாடெல்லாம்  அவர்புகழை
    நாளுமே சொல்லுதிப்போ!

    மதிநுட்பம் மிக்கஅவர்
    மன்னிக்கும் இயல்புடையார்
    நதியாகி நின்றுஅவர்
    நாட்டு வளமானாரே!

    பொதுவாகப் பேசிடினும்
    பொடிவைத்துப் பேசிடுவார்
    நிதிபோல இருந்ததனால்
    நெஞ்சமெலாம் நிறைந்துவிட்டார்!

    தென்னாட்டின் ’பெர்னாட்ஷா’
    என்றழைத்தார் அண்ணாவை
    சீர்திருத்தக் கருத்தையெலாம்
    சினமின்றிச் சொல்லிநின்றார்!

    மற்றவரின் மனமுடைய
    வக்கிரமாய்ச் சொல்லாது
    தேனோடு மருந்தாகச்
    சிந்தனையை ஊட்டினரே!

    வெற்றிலைக் காவியொடு
    வீசிஎறி சால்வையுடன்
    வித்தகர் சபைதனிலே
    விபரமாய்ப் பேசினரே!

    எத்திக்கு வினாவரினும்
    எதற்குமே அஞ்சாது
    ஏற்றபதில் கொடுத்தாரே
    எமதருமை அண்ணாவும்!

    எதிர்க்கட்சி சொன்னாலும்
    ஏற்றுநிற்கும் பண்பாளர்
    எதையுமே தனக்காக
    எடுத்தொதுக்கி வைக்கவில்லை!

    மாடிமனை சேர்க்கவில்லை
    வங்கியிலும் வைக்கவில்லை
    தேடித்தேடி வாசித்தார்
    திறனுடய நூல்களையே!

    பண்புநிறை அரசியலைப்
    பலருக்கும் காட்டிநின்றார்
    தன்புகழைப் பாடாது
    தரமுடனே அவர்நின்றார்

    அன்புகொண்டு அரவணைத்தார்
    ஆரையுமே நோகடியார்
    துன்பமெலாம் பட்டிடினும்
    துடிப்புடனே செயற்பட்டார்!

    அண்ணாவின் அடியொற்றி
    ஆரையுமே காணவில்லை!!!
    அவர்பெயரைச் சொன்னபடி
    ஆட்டமெலாம் போடுகிறார்

    அண்ணாவின் கால்பதிந்த
    அருமைத் தமிழ்நாடே
    அண்ணாவைப் போலொருவர்
    அரவணைக்க வருவாரா?

    Share
  • திரும்பி நீ வரவேண்டும்!

    -எம். ஜெயராம சர்மாமெல்பேண்

    subramanya-bharathi-jpg

     

     

     

     

     

     

     

     

     

    முண்டாசுக் கவிஞனேநீ மூச்சுவிட்டால் கவிதைவரும்
    பண்டாரமா  யிருந்து பலகவிதை தந்தாயே
    தமிழ்வண்டாக நீயிருந்து தாகமெலாம் தீர்த்தாயே
    உண்டாலே அமுதமென உன்கவிதை இருந்ததுவே!

    பாரதத்தின் குரலாக பாட்டெல்லாம் ஒலித்தனவே
    பாரதியுன் குரல்கேட்டுப் பாரெல்லாம் அதிர்ந்ததுவே
    சீரான சிந்தனைகள் சீற்றமொடு சொன்னாயே
    சிம்மக் குரலோனே திரும்பிநீ வரவேண்டும்!!

    அச்சமதை மடமையென்று அனைவருக்கும் சொன்னாயே
    உச்சிமீது வான்விழினும் அச்சம்தவிர் என்றாயே
    மெச்சும்படி வாழுஎன்று மெய்சிலிர்க்கச் சொன்னாயே
    இச்சைகொண்டு தமிழதனை இணைத்தபடி இருந்தாயே!

    வேதநெறி வழிவந்த வித்தகனாய் இருந்தாலும்
    சாதிநிலை தகர்த்தெறியச் சலியாது உழைத்தனையே
    ஓதி உணர்ந்ததனால் உண்மைதனை நீயறிந்து
    போதிமரமாக நின்று போதித்தாய் யாவருக்கும்!

    பாரதியுன் பாட்டாலே பண்டிதர்கள் பரிதவித்தார்
    பாட்டல்ல என்றவர்கள் பறையடித்து நின்றார்கள்
    பாமரர்கள் கைகோத்துப் பாரதியைப் பார்த்தவுடன்
    பண்டிதக் கூட்டமெலாம் பஞ்சாகப் பறந்தனவே!

    பல்கலைக் கழகமெல்லாம் பாரதியின் பாட்டிப்போ
    பாடமாய் இருக்கிறது படிக்கின்றார் பலபேரும்
    பாரதியின் பாட்டிப்போ பல்லக்கில் இருக்கிறது
    பாரதத்தில் பாரதியார் பக்குவமாய் உலவுகின்றார்!

    முத்தமிழும் பாரதியின் சொத்தாக இருந்தனவே
    எத்திக்கும் தமிழோங்க எண்ணியவர் இருந்தாரே
    சத்தாகத் தமிழையவர் சாகும்வரை நினைத்தாரே
    கைதூவி மலர்கொண்டு காதலித்து நிற்போமே!

    Share
  • பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்!

    -எம். ஜெயராம சர்மாமெல்பேண்

    இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை
    கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்           muruga
    காட்சிதர மறுப்பதுமில்லை!

    ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன்
    அரவணைக்கக் கரத்தைநீட்டுவான்
    நாணயமாய் நடந்துபாருங்கள் – அவன்
    நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்!

    உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன்
    உள்ளமதில் வந்துநின்றிடுவான்
    தெளிவுடனே தினமும்தேடுங்கள்  – அவன்
    சீக்கிரமாய் உதவவந்திடுவான்!

    ஏழ்மைதனை இரங்கிப்பாருங்கள் – அவன்
    எங்களுடன் இணைந்துநின்றிடுவான்
    தோழமையாய் இருந்துபாருங்கள் – அவன்
    துயர்துடைக்க வந்துநின்றுடுவான்!

    கண்மணியே என்றுபாடுங்கள் – அவன்
    கருணைமழை பொழிந்துநின்றிடுவான்
    கண்ணீரால் நனைத்துப்பாருங்கள் – அவன்
    காலமெலாம் உதவிநின்றிடுவான்!

    சினமதனை அகற்றிப்பாருங்கள் – அவன்
    தனைமறந்து பக்கம்வந்திடுவான்
    தனிமையிலே இருந்துபாருங்கள் – அவன்
    இனிமையெலாம் தந்துநின்றிடுவான்!

    காதலுடன் பாடிப்பாருங்கள் – அவன்
    கணப்பொழுதில் வந்துநின்றிடுவான்
    சோதியென நினைத்துப்பாடுங்கள் – அவன்
    சுகமனைத்தும் தந்துநின்றிடுவான்!

    நெறியுடனே நின்றுபாடுங்கள் – அவன்
    நீதிதர மறுப்பதுமில்லை
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்
    பூரணமாய்த் தந்துநின்றிடுவான்!

    Share
  • அப்பாவை அணைத்திடுவோம்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    தேரிலே சாமி வந்தால்
    தோளிலே தூக்கி வைத்துப்
    பாரடா என்று காட்டும்
    பாங்கினை மறக்க மாட்டேன்!                         father and son

    ஊரிலே உள்ளார் எல்லாம்
    உன்மகன் உதவானென்று
    நேரிலே வந்து சொன்னால்
    நிமிர்ந்தொரு பார்வை பார்ப்பார்!

    கவலைகள் படவும் மாட்டார்
    கண்டதை உண்ண மாட்டார்
    தெருவிலே சண்டை வந்தால்
    திரும்பியே பார்க்க மாட்டார்!

    அடிதடி வெறுத்து நிற்பார்
    ஆரையும் தூற்ற மாட்டார்
    உரிமையாய் உதவி நிற்பார்
    ஊரிலே எங்கள் அப்பா!

    பொய் அவர்க்குப் பிடிக்காது
    புளுகுவதை வெறுத்திடுவார்
    மெய்பேசி நின்று விட்டால்
    விரும்பியவர் அணைத்து நிற்பார்!

    உண்மையே பேசு என்பார்
    உழைப்பையே நம்பு என்பார்
    எண்ணமெலாம் இனிதாக
    இருக்கவே வேண்டும் என்பார்!

    அன்பாக இரு என்பார்
    அனைவர்க்கும் உதவென்பார்
    அசடனாய் வாழாதே
    அறிஞனாய் உயரென்பார்!

    பலகதைகள் ஊடாக
    பண்புகளை வளர்த்திட்டார்
    பாரில் நான் வாழ
    பாதையே அப்பாதான்!

    அப்பாவை அருகில்வைத்தால்
    அனைவருக்கும் அதிர்ஷ்டம்தான்
    அப்பாவை அலைய விட்டால்
    அனைவர்க்கும் அசிங்கம்தான்!

    அப்பாவை அணைத்திடுவோம்
    அவரருகில் நாமிருப்போம்
    எப்போதும் அப்பாவை
    ஏற்றியே போற்றிடுவோம்!!

    Share
  • கவிதைகள் கேட்கவேண்டும்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    தமிழிலே கவிதை தந்த
    தரமுடைக் கவிஞரே நீர்
    உரமுடைக் கவிதை தந்து
    உள்ளத்தில் இருந்து விட்டீர்!                        kavimani

    தெளிவொடு கவிதை சொன்னீர்
    சிந்தைக்கு மருந்தும் சொன்னீர்
    அழிவிலாக் கவிதை தந்தீர்
    ஆதலால் உயர்ந்தே விட்டீர்!

    புனிதராம் புத்தர் வாழ்க்கை
    புவிதனில் உள்ளார் காணச்
    செவிதனில் நுழையும் வண்ணம்
    சீர்மிகு கவிதை தந்தீர்!

    ஆசிய ஜோதி என்று
    அதற்கு நீர் பெயரைச்சூட்டி
    மேதகு உண்மை யாவும்
    விரித்துமே சொல்லி நின்றீர்!

    சாதியைச் சாடி நின்றீர்
    சமத்துவம் காட்டி நின்றீர்
    பூமியில் மனிதர் வாழப்
    பொறுப்புடன் இருங்கள் என்றீர்!

    நாட்டையும் பாடி நின்றீர்
    வீட்டையும் பாடி நின்றீர்
    ஊட்டமாய் நிற்கும் வண்ணம்
    உண்மையும் பாடி நின்றீர்!

    தமிழ்மணி ஆகி நின்ற
    கவிமணி தானே நீங்கள்!
    செவிகளில் தேனைப் பாய்ச்சும்
    கவிமணி நீங்கள் அன்றோ!

    மாசிலாக் கவிதை தந்த
    மாமணி நீங்கள் தானே
    மனதிலே நிற்கும் வண்ணம்
    வளம்நிறை கவிதை தந்தீர்!

    கவிதையில் எளிமை காட்டி
    கற்பவர் நினைவில் வைக்கப்
    புவிதனில் கவிதை சொன்னக்
    கவிமணி நாமம் வாழ்க!

    கவிமணி ஐயா உங்கள்
    கவிதைகள் கேட்க வேண்டும்
    புதுமைகள் செய்ய நீங்கள்
    புவிதனில் பிறக்க வேண்டும்!

    Share
  • வாழ்வெல்லாம் நினைத்திருப்போம்!

         -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

          நீறு கொண்ட நெற்றியுடன்
          நிமிர்ந்த நெடுந் தோற்றத்துடன்           vaariyar
         ஆறு படை முருகனையே
         அனுதினமும் தொழு தெழுவார்!

         சேறு கொண்ட மனமுடையோர்
         நீறணிந்து நின்று விடின்
         மாறு பட்ட குணமெல்லாம்
         மாண்டுவிடும் எனச் சொன்னார்!

         தாறுமாறாய்ச் சண்டை செய்த
         சராசரி மக்கள் எல்லாம்
         வாரியாரின் உரை கேட்டு
         வாழ்வை வளம் ஆக்கினரே!

         வேதத்தின் விழுப் பொருளை
         விளங்கும்படிச் சொல்லி அவர்
         போதனைகள் பல ஆற்றி
         பொறுப்புடனே செயல் பட்டார்!

          புராணக் கதைகள் எல்லாம்
          புளுகு எனச் சொன்னவர்க்குப்
          புத்துணர்வு அவை என்று
          புரியும்படி அவர் சொன்னார்!

         தமிழ் கொண்டு சமயத்தைத்
         தரணியெங்கும் பரவச் செய்தார்
         தனி ஒருவராய் இருந்து
         தலையாய தொண்டு செய்தார்!

         வாரி எனும் பெயருக்கு
         வாரிவாரித் தமிழ் கொடுத்தார்
         வற்றாமல் அவர் நாவில்
         வளர்ந்ததே தமிழ் நாளும்!

         நாத்திகர் மத்தியிலும் நல்ல தமிழ் பேசினார்
        ஆத்திகர் மத்தியிலும் அழகு தமிழ் பேசினார்
        அவர் தமிழைக் கேட்டவர்கள் அவர்வசமே யானார்கள்
        ஆண்டவனின் அருளாலே அவர் தமிழுமுயர்வாச்சே!

         புராணக் கருத்தை எல்லாம் புதுவிதமாய்ச் சொன்னாரே
         புதுமைக்குப் புதுமையாய் பழைமையைச் சொன்னாரே
         தெரு எங்கும் திருநாமம் செப்பிநின்ற வாரியார்
         சிவநாமம் பரவி நிற்கத் தேசமெங்கும் சென்றாரே!

         பேசுவார் எழுதமாட்டார் பிறவேலை செய்து நிற்பார்
         கூசும்படி நின்றவர்கள் குறைகளுடன் நிற்பார்கள்
         வாரியார் சுவாமிகளோ வம்பெதுக்கும் போகாமல்
         பேசினார் எழுதினார் பெரும்பணிகள் ஆற்றிநின்றார்!

         வாரியார் இடத்துக்கு வந்திடுவார் யாருமிலை
         வாரியார் செய்தபணி வையத்தில் ஈடுஇலை
         வாரியார் வாழ்வெமக்கு நல்லவழி சமைத்திருக்கு
         வாரியார் சுவாமிகளை வாழ்வெல்லாம் நினைத்திருப்போம்!

    Share
  • நித்தமுமே குழந்தையப்பா!

      -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

       பாஞ்சாலி துயர்தீர்த்தாய்
       பார்த்தனுக்கு உதவிநின்றாய்
       பாரதக் கதைதன்னை
       பக்குவமாய் முடித்துவைத்தாய்!      krishna

       பலவேலை நீசெய்தாய்
       பாதகமாய்த் தெரிந்தாலும்
       பலபேரைத் திருத்துதற்குப்
       பக்குவமாய் மருந்தாச்சு!

       மாமருந்தாம் கீதைதனை
       மாதவனே தந்தாயே
       மாநிலத்தார் கீதையினால்
       மயக்கநிலை தெளிந்தாரே!

       சோதிவடி வானவனே
       சுந்தரமாய் இருப்பவனே
       ஆதியே அரும்பொருளே
       அனைத்துமே நீயன்றோ!

       குழந்தையாய் வந்திடுவாய்
       குதூகலமும் தந்திடுவாய்
       குறையொன்றும் வாராமல்
       குணக்குன்றாய் நின்றிடுவாய்!

       கண்ணா எனவழைத்தால்
       கணப்பொழுதில் வந்திடுவாய்
       எண்ணமெலாம் இருப்பதனால்
       எங்குதான் போய்விடுவாய்?

       அவதாரம் பலவெடுத்தாய்
       அகிலமதைக் காத்துநின்றாய்
       அனைவரது துயர்துடைக்க
       அழைத்தவுடன் வந்துவிடு!

       பால்தந்து மோர்தந்து
       பதமாக வெண்ணைதந்து
       பாலகனாய் நாளுமுனைப்
       பார்க்கின்றோம் நாமுமிங்கே!

       நீகடவுள் நீசக்தி
       நினைப்பெமக்கு இல்லையப்பா
       நீயென்றும் எம்மனதில்
       நித்தமுமே குழந்தையப்பா!!

    Share
  • ஒரு செய்தி!

    -எம்.ஜெயராம சர்மா – மெல்பேண்

    கண்ணன் வீடு ஒரே தடபுடலாக இருந்ததது. எல்லோருக்கும் சந்தோஷம் என்றால் சொல்லவே முடியாதபடி இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் தரையிலே கால்படாதபடி பறந்துதான் திரிந்தனர் எனும் அளவுக்கு அவர்களின் அந்த ஆனந்தமும் அவசரமும் காணப்பட்டது.

    கண்ணனின் தங்கை கலாவுக்கு வயது ஏறிக்கொண்டே வந்தது. ஆனால்   எந்தக் கல்யாணங்களும் சரிவராமல் போய்க்கொண்டே வந்தது. வடிவான பிள்ளை ஆனால் கால்தான் சற்று ஊனமாக இருந்தது. பல்கலைக்கழகத்தில்   பட்டம் பெற்றிருந்தாள். அதுமட்டுமல்ல கொம்யூட்டரிலும் சரியான கெட்டிக்காரி. ஆங்கிலம் எழுதினால் அது அத்தனை சுவையாக இருக்கும். ஆங்கிலத்தில் கவிதைகள் கூட எழுதுவாள். பல பத்திரிகைகளில் அவளது ஆக்கங்கள் வெளி வந்து பல பரிசுகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. நல்லாப் பேசுவாள்.         நல்லாய்ப் பாடுவாள்.

    ஆங்கில ஆசிரியையாக அவளுக்கு நியமனம் கிடைத்ததும் அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால் அவளுக்கு மனதில் மகிழ்ச்சியில்லை. பள்ளிக்கூடத்தில்   தன்னை நொண்டி என்று மற்றவர்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள் என்று மனதுக்குள் எண்ணியதால் மகிழ்ச்சி அவளிடம் வரமறுத்தது. ஆனாலும் தனது திறமையில் தன்னம்பிக்கை கொண்டகாரணத்தால் வேலைக்குப்போக ஒத்துக்கொண்டாள்.

    அவளின் விடாத உழைப்பால் பாடசாலையில் அவளுக்கு நல்ல மதிப்பு   தானாகவே வந்துசேர்ந்தது. வயதுமுப்பது ஆனாலும் வடிவு மட்டும் குறையவி       ல்லை. நல்ல மாநிறம். எடுப்பான மூக்கு. அகன்ற பெரிய கண்கள். பார்த்தால் இன்னொருதரம் பார்க்கத்தூண்டும் வசீகரம். கால்மட்டும்தான்குறை. அதை காலளவு குறை என்றுதான் கொள்ளவேண்டும்.

    உப அதிபர் மனோகரனுக்கு ஐம்பது வயது. அந்த மனிசனும் படி படி எனப் படித்து பல பட்டங்களைத் தனது பெயரோடு சேர்த்தாரே ஒழிய காதல் கல்யாணம் என்றால் அந்தப்பக்கம் மனிசன் தலைவைத்துப் படுத்ததே அறியார்.

    கலாவைப் பார்த்ததும் இவளைத் தனது வாழ்க்கைத்துணை ஆக்கினால்     எப்படி இருக்கும் என்று எண்ணம் ஏற்பட்டது. எண்ணத்தைத் தள்ளிப்போடாமல் உடனடியாகச் செயல்படுத்தவும் ஆயத்தமானார். கலாவின் வீட்டாரிடம் நேரடியாகவே சென்று கேட்டுவிட்டார். அவர்களுக்குச் சொர்க்கமே வந்து காலடியில் விழுந்ததுபோல இருந்தது. கல்யாணம் நடக்காதா என்று ஏங்கி நின்றவர்களுக்கு இந்தச்செய்தி சர்க்கரைப் பந்தலில் தேன்மாரியாக இருந்தது.

    கலாவுக்கும் மனோகரனுக்கும் கல்யாண ஏற்பாடுகளால்தான் கண்ணன் வீடு கலகலப்பில் மிதந்து கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் சிவன் கோவில் மண்டபத்தில்தான் கல்யாணம். மாப்பிள்ளை வீடு கொக்குவில். பெண்வீடு மானிப்பாய். மணமகள் வந்து சேர்ந்துவிட்டாள் கல்யாண மண்டபத்துக்கு. மாப்பிள்ளை வீட்டாரை யாவரும் பார்த்தபடி நிற்கின்றனர். அவர்களோ வந்தபாடில்லை. கல்யாணமண்டபத்திலோ ஒரே படபடப்பு.

    அப்பொழுது வேகமாக மாப்பிள்ளையின் மச்சான் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துசேர்ந்தான் எல்லாரும் அவனைப்பார்த்து ”என்ன? என்ன?”  என்று கேட்டபடி கூடிவிட்டனர். மாப்பிள்ளை வந்த கார் இன்னொரு காரோடு மோதுண்டு மாப்பிள்ளை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில்… என்றதும் கல்யாண மண்டபம் கதிகலங்கிவிட்டது.

    ஆஸ்பத்திரிக்கு எல்லாரும் பறந்தார்கள். மாப்பிள்ளை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். டாக்டர் வந்து சொன்னார் மனோகரனுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் அவரின் குரூப் இரத்தம் இங்கில்லை. ஆராவது இருந்தால் கூட்டி வாருங்கோ என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி உனக்குத்தெரியுமா? ஆரும் இருக்கினமா? என்றபடியே இருந்தனர்.

    இப்படி எல்லோரும் திக்குமுக்காடிக்கொண்டு இருக்கின்றபொழுது ஒருவர் அல்ல மூவர் ஓடிவந்து எங்கள் குரூப் இரத்தம் டாக்டர் கேட்டதுதான் எடுங்கோ என்று பதட்டமாகச்சொல்லி நின்றார்கள். கடவுளைக்கண்டதுபோல அவர்களின் வருகை அங்கு இருந்தது.

    இரத்தம் மனோகரனுக்கு ஏற்றப்பட்டது. மனோகரன் நினைவு திரும்பிய     செய்தியைக் கேட்டதும் யாவரும் ”கடவுளே!” என்றனர். அப்பொழுது டாக்டர்   வெளியே வந்து ”கேசவன் என்பவர் யார்?” என்று கேட்டார். அவர்கள் சொன்னார்கள் கலாவின் கடைசித் தம்பியென்று. ”அவன்தான் உங்களின் கடவுள். அவன் மட்டும் இப்படிச்செய்யாது விட்டிருந்தால் நீஙகள் யாருமே சந்தோஷப்பட முடியாமல் போயிருக்கும்” என்றார்.

    ஒருவருக்கும் ஒண்ணுமே விளங்கவில்லை. ”அப்படிக் கேசவன் என்னதான் செய்திருப்பான்?” என்று யாவரும் யோசித்தபடி இருந்தனர். டாக்டர் சொன்னார் ”கேசவன் மட்டும் தனது போன்மூலம்– தெரிந்த எல்லாருக்கும்   எஸ்.எம். எஸ் மூலம் இரத்தம் தேவை!” என்ற செய்தியை உடனே அனுப்பாது மட்டும் இருந்திருந்தால் நிலைமை வேறுமாதிரிப் போயிருக்கும். கேசவனின் சமயோசிதமும் அதற்காக அவன் பயன்படுத்திய விஞ்ஞான அணுகுமுறையுமேதான் மனோகரனை இப்போது காப்பாற்றி இருக்கிறது என்று ஒரு பெரிய விளக்கமே அளித்தார். கேசவன் ஒரு மூலையில் நின்று கொண்டு மீண்டும் போன் மூலம் “அத்தான் பிழைத்துவிட்டார்” என்ற செய்தியை யாவருக்கும் எஸ். எம். எஸ் செய்துகொண்டு இருந்தான்.

    Share
  • மாமருந்துமானார்!

    -எம். ஜெயராமசர்மா- மெல்பேண்

    teresa

    முன்னம் அவருடைய நாமம் கேட்டேன்
    முழுதுமாய் அவர்பணியை மனதில் கொண்டேன்
    பின்னை அவருடை ஆரூர் கேட்டேன்
    பிரமித்தேன் பிரமித்தேன் பிரமித் தேனே!

    அல்பேணியா ஈன்றெடுத்த அன்னை அவராவார்
    அனைவர்க்கும் தொண்டுசெய அவதரித்த அன்னை!
    சொல்லியவர் பணியாற்ற வந்து விடவில்லை
    தூயமனம் கொண்டு அவர் தொண்டாற்றிநின்றார்!

    எள்ளளவும் இரக்கமின்றி எச்சில்  உமிழ்ந்தார்கள்
    இன்முறுவல் கொண்டுமவர் ஏந்தியதைப் பெற்றார்
    கள்ளமிலா உள்ளம் அவர் கொண்டிருந்ததாலே
    காறி உமிழ்ந்தவரே கைநிறையக் கொடுத்தார்!

    தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்ந்தார்
    தனக்குவமை இல்லாமல் தானுவமை ஆனார்
    மனக்குறையைப் போக்குதற்கு மாமருந்துமானார்
    தனித்துநின்று தொண்டுசெயும்  தற்துணிவுபெற்றார்!

    கைகொண்டு மெய்கொண்டு கருணைமழை பொழிந்தார்
    கலியுகத்தில் கண்ணனெனக் கைகொடுத்து நின்றார்
    ஊரிலுள்ள சேரியெலாம் உவப்புடனே சென்று
    யாருமிலை என்பார்க்கு நல்மருந்தும் ஆனார்!

    சாதிமதம் பாராமல் சமத்துவமாய் நின்றார்
    சாதனைகள் செய்தாலும் தலைகனக்கா நின்றார்
    போதிமரம் ஆகிநின்று போதனைகள் செய்தார்
    நாதியற்ற மக்களுடன் நட்புரிமை கொண்டார்!

    வெள்ளுடையில் நீலக்கோடு விரும்பியவர் ஏற்றார்
    அள்ள அள்ளக் குறையாமல் அருந்தொண்டு புரிந்தார்
    உள்ளஎலாம் உவகையொடு உழைத்துமவர் நின்றார்
    உலகிடையே அன்னையாய் என்றுமவர் உள்ளார்!       

    Share
  • தாள்பணிந்து நிற்போமே!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

          தனிமையை நாடிநாளும்
          தன்னிலை இழந்துநின்று
          பெரியனாய் உயர்ந்துநின்றார்             ramakrishna
          பெருமகன் ராமகிருஷ்ணர்!

          மனைவியைக் கண்டபோதும்
          மனதினை விட்டிடாமல்
          துணிவுடன் துறவையேற்றார்
          தூயவர் ராமகிருஷ்ணர்!

          அன்னை பராசக்தியாக
          அவர்கண்டார் தம்மனையை
          ஆதலினால் பரமஹம்சர்
          அதியுயரப் போய்விட்டார்!

          முன்னமவர் அன்னையினை
          முழுதுமாய் கண்டதனால்
          அன்னவரின் எண்ணமெலாம்
          அன்னையாய் இருந்ததுவே!

          ராமகிருஷ்ண பரமஹம்சர்
          நாளும்காளி கோவில்நின்று
          ஊணுமின்றி உறக்கமின்றி
          உண்மைகாண உணர்விழந்தார்!

          பாரதத்தாய் மடியில்வந்த
          ராமகிருஷ்ண பரமஹம்சர்
          பாரினுக்கு விடிவுதரும்
          பகலவனாய் ஒளிகொடுத்தார்

          படிப்பறியாப் பரமஹம்சர்
          படிப்படியாய்ப் படிப்பித்தார்
          படிப்பித்த பாடமெலாம்
          பாரினுக்கு வேராச்சு!

          வேராக அவர்நின்றார்
          நீராக அவர்நின்றார்
          ஊரூராய் அவர்வார்த்தை
          உருவேற்றி நின்றதுவே!

         சீடர்பலர் வந்தார்கள்
         சீலத்தைக் காட்டிநின்றார்
         ஞாலமெலாம் அவர்புகழை
         நாளுமவர் பரப்புகிறார்!

        ஆல விருட்சம்என
        அவர்தொண்டு விரிகிறது
        சீலமுடை ராமகிருஷ்ணர்
        தாள்பணிந்து நிற்போமே!

    Share
  • விடுதலை

    -எம். ஜெயராம சர்மாமெல்பேண்

    பகலவன் வந்துநின்றால்
    பாரி
    னுக்கு விடுதலை
    பசித்தவர்க்கு
    உணவுஅளித்தால்
    பசிக்கெலாம்
    விடுதலை

    உழைத்துமே நிற்பார்க்குஎலாம்                   KrishnaArjunaKarna
    ஓய்வுநல்
    விடுதலை
    ஒன்றுமே
    செய்யாவிட்டால்
    உமக்குமேன்
    விடுதலை

    கார்முகில் கண்ணன்பார்க்கக்
    கர்ணனுக்கு
    விடுதலை
    போர்முனை
    வந்தகீதை
    புவிக்கெலாம்
    விடுதலை

    தாயொடு பிள்ளைசேரின்
    தனிமைக்கே
    விடுதலை
    வாய்தனைக்
    காப்போமாயின்
    வம்புக்கே
    விடுதலை

    கண்டதைப் பார்க்காவிட்டால்
    கண்ணுக்கு
    விடுதலை
    காதினைக்
    காத்துவிட்டால்
    கயமைக்கே
    விடுதலை

    சிண்டுகள் முடிக்காவிட்டால்
    சிக்கலுக்கே
    விடுதலை
    சின்னத்தனம்
    காப்போமாயின்
    சிதைந்திடுமே
    விடுதலை

    ஸ்ரீராமன் வந்துநின்றான்
    சீதைக்கு
    விடுதலை
    கார்நிறத்தான்
    கால்பட்டுக்
    கல்லுக்கே
    விடுதலை

    பேரறிவு வளரவிட்டால்
    பேதமைக்கே
    விடுதலை
    பெம்மானின்
    கழல்பற்றி
    பெறுவோம்நல்
    விடுதலை

    Share