Tag: ஓவியக்கவி கலில் கிப்ரான்

  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 54

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

     

    “நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !” கலில் கிப்ரான். (Mister Gabber)

    எதிர்காலத்தை நோக்கி எண்ணற்ற மானிடர் இயற்கை அன்னை இதயத்தை வேண்டி வழிபாடு செய்து கொண்டிருக்கிறார். அவரது முகங்கள் காலை ஒளிச்சுடரில் குளிக்கக் காத்திருந்து சத்தியத்தின் விடிவுக்காகக் கிழக்கை நோக்கித் திரும்பியுள்ளன. நேற்று ஆலயத்தின் வாசலில் நின்று வருவோர் சிலரைப் பார்த்துக் காதலின் மர்மத்தையும், அதன் மகத்துவத்தையும் பற்றிக் கேட்டேன். அப்போது சோகமும் விடுதலை உணர்வும் கொண்ட முகத்தோடு என்னைக் கடந்து சென்றார். கலில் கிப்ரான். (Mister Gabber)

    ___________________
    இசை தனித்துவ மொழி
    ___________________

    இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது
    அது உயிரூட்டும் உணர்வு !
    இசைக்கும் பஞ்சு மனம் உள்ளது
    அதுவே அதன் நெஞ்சு !
    படைக்கும் போது
    கடவுள்
    இசை யெனும்
    தனித்துவ மொழியை
    மனிதனுக்கு அளித்துளான் !
    அனைத் துக்கும் வேறு பட்ட
    இனிய மொழி அது !
    ஆதி மனிதன்
    அதன் உன்னதம் பாடினான்
    அடர்ந்த கான கத்தில் !
    இசை மகள் அரசனின்
    இதயம் கவர்ந்து
    ஆசனத்தி லிருந்து
    இறங்கி வரச் செய்தாள் !
    ___________________

    ஊழ் விதிப் புயலின்
    அசுரத் தாக்கலில்
    பாழ் பட்டுப் போன
    மெல்லிய பூக்களே
    நமது ஆத்மா வெல்லாம் !
    அதிகாலைத் தென்றலில் கூட
    ஆடி நடுங்கிடும்
    ஆத்மாக்கள் !
    வானி லிருந்து வீழும்
    பனித் துளிகளால்
    கூனிப் போகும் நமது ஆத்மா !
    ___________________

    பறவையின் இசை ஒலிகள்
    மனிதரின்
    உறக்கம் கலைத்திடும் மங்கிய
    உதயப் பொழுதில் !
    முடிவிலாக் கடவுளின்
    உன்னத
    மகத்துவம் பாடும் போது
    மனிதரை
    ஒன்று படுத்த
    அழைப்பிதழ் அனுப்பிடும்
    புள்ளினத் தின்
    இசை ஓசை !
    ___________________

    ~ நிறைவுற்றது ~
    ___________________

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 53

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “நான் நண்பன் ஒருவனிடம் பேச உட்காரும் போது திருவாளர் பிதற்றுவாய் அழைக்கப் படாமலே மூன்றாவது நபராய் எம்மோடு ஒட்டிக் கொள்வார். நான் ஒதுக்கினாலும் எப்படியாவது நெருங்கிக் கொண்டு தன் பிதற்றலை எதிரொலித்து எனக்குச் சின மூட்டுவார். அது என் வயிற்றைக் கலக்கிக் கெட்டுப் போன புலாலாகத் தொல்லை கொடுக்கும்.”
    கலில் கிப்ரான். (Mister Gabber)

    ___________________
    இசை ஆத்மாவின் நாதம்
    ___________________

    என்னிதயம் கவர்ந்த
    வனிதை அருகே அமர்ந்து அவள்
    வாய்மொழி கேட்டேன்.
    அலையத் தொடங்கும் என் ஆத்மா
    யாதும் கனவாய்த் தோன்றும்
    வரம்பற்ற
    பிரபஞ்ச வெளியில் !
    உடலொரு
    முடங்கிய சிறை போல் தெரியும் !
    என்னரும் காதலி
    வழிபடும் மந்திர மொழிகள்
    நுழைந்திடும்
    என் இதயத்தின் ஊடே !
    ___________________

    இதுதான் இசை நாதம்
    என்னரும் நண்பரே !
    கேட்டேன் அதைக் காதலியின்
    பெரு மூச்சில் !
    வாய் மொழியில் அது
    வந்தது !
    சொல்லியும் சொல்லாத இதழ்களின்
    மெல்லோசையில்
    எழுந்தது !
    என் செவி வாயிலில்
    தடம் வைத்த
    இசை நாதத்தில் கண்டேன்
    என் காதலி இதயம் !
    ___________________

    இசை என்பது
    இனிய ஆத்மாக் களின் நாதம் !
    அதன் மெல்லிசை
    விளையாடும் தென்றல் !
    காதல் நாண்களை
    மீட்பது இசை நாதம் !
    மென்மை யாய் இசை விரல்கள்
    நமது உணர்வுக் கதவைத்
    தட்டும் போது
    விழித்தெழும் முன்னால்
    கழிந்து போன
    நீண்ட காலப் புதை
    நினைவுகள் !
    ___________________

    சோக முறிவு இசை நாதம்
    துக்க நினைவுகளை
    முன்னிறுத்தும் !
    இசையின் மௌன ராகங்கள்
    இனிய நினைவையும்
    எதிர் நிறுத்தும் !
    நாண்களின் சோக நாதம்
    நம்மை அழ வைக்கும்
    நமக்கினியோர் மரண இழப்பில் !
    அல்லது
    கடவுள் அளித்த அமைதியில்
    களிப்புண் டாக்கும்
    நமக்கு !
    ___________________

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 52

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “கடைவீதிப் பக்கம் நான் செல்லும் போது திருவாளர் பிதற்றுவாய் ஒவ்வொரு கடை வாசலிலும் நின்று போவோர் வருவோரைப் பற்றி வக்கணை அடிப்பார். பிதற்றுவாயன் அவரைப் பின்பற்றிச் செல்வதையும் நான் அவரது மௌன முகத்திலே கண்டிருக்கிறேன். பொது மக்களுக்கு ஆட்டிப் படைக்கும் அவன் இருக்கை தெரிவதில்லை.”
    கலில் கிப்ரான். (Mister Gabber)
    ___________________
    காரணம்
    (Reasoning)
    ___________________

    உன்னை நீயே
    கண்காணித்துக் கொள்வாய்
    ஓர் எதிரியாய்
    உன்னைப் பாவித்து !
    பிறரை நீ ஆள முடியாது !
    உன் உணர்ச்சிகளை
    முதலில்
    நீ கட்டுப் படுத்த
    முடியாது போனால் !
    உனது மனச் சாட்சிக்கு நீ
    அடிபணிவாய் !
    ___________________

    உன்னத முனிவர் ஒருவரின்
    பொன்மொழி இது :
    “எந்தத் தீங்குக்கும்
    இருக்குது மருந் தொன்று !
    நாடும் மருந் தில்லை
    மூடத் தனத் துக்கு !
    பிடிவாத
    மூடரை இகழ்ந்து
    அவர்க்கு அறிவுரை புகட்டல்
    நீர் மேல் எழுத்துக்கு
    நேராகும் !
    குருடனை,
    முடக்கு வாதத்தை
    குட்ட ரோகி யைக்,
    குணப் படுத்தினார்
    ஏசு நாதர் ! ஆயினும்
    மூடனைக் குணமாக்க அவரால்
    முடிய வில்லை !”
    ___________________

    பிரச்சனை என்ன வென்று
    அறிந்திட, விளைவை
    நாற் புறமும் கூர்ந்து நோக்கு !
    எங்குள்ளது தவறென்று
    புரிந்து கொள்வாய் !
    வீட்டு வாசல்
    விரிந்துள்ள போது
    திறக்கும் கதவு
    சிறுத்தி ருக்க லாமா ?
    வாய்ப்பு வாசல் கதவை
    வந்து தட்டினால்
    பாய்ந்து பிடித்துக் கொள் !
    தேடி வரும் போது நீ
    ஓடி வரவேற்பாய் !
    ___________________

    தீங்கை நுழைப்பது மனிதன் !
    இறைவன் இல்லை !
    அறிவையும்
    அடிப்படைக் காரணத் தையும்
    அளிப்பது நமக்கு
    அதிபன்
    தவறையும் அழிவையும்
    தடுப்ப தற்கு !
    கடவுளின் ஆசிகள் உண்டு
    காரணம் என்னும்
    மானிடக் கொடைக்கு !
    ___________________

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 51

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    “நான் படுக்கை அறைச் சாளரத்தின் அருகிலிருந்து கண்ணிமைக் கதவுகளைத் திறந்து என் துருக்கி காபியை அருந்தும் போது, திருவாளர் பிதற்றுவாய் என் முன்னே துள்ளி வந்து தோன்றி அழுவார், முணுமுணுத்துப் புகார் செய்வார். பீடத்திலிருந்து இறங்கி வந்து எனது காபியைக் குடிப்பார். எனது சிகரெட்டைப் புகைப்பார்.” கலில் கிப்ரான். (Mister Gabber)

    “நான் பணி செய்யப் போகும் போது திருவாளர் பிதற்றுவாய் என் பின்னால் வருவார் ! என் மூளை உணர்வைக் கிளரிவிட்டுச் செவியில் முணுமுணுப்பார் ! நானதைத் தவிர்க்க முயலும் போது, அவர் கெக்கரித்து மீண்டும் அர்த்தமற்ற வார்த்தைகளை நீரோட்ட வெள்ளம் போல் ஓட விடுவார்.” கலில் கிப்ரான். (Mister Gabber)

    ___________________
    காரணம்
    (Reasoning)
    ___________________

    கல்வி அடிப்படை யற்ற காரணம்
    உழப் படாத வயல் !
    சத்துணவு இல்லாத மனித
    உடம்பு !
    கடையில் விற்கப் படாத
    கடைச் சரக்கு !
    அளவு பெருகி
    மலிந்து போனால் மனிதருக்குச்
    சலித்து போவது !
    மிகுத்துப் போயின் காரணம்
    மதிப்பு இழக்கும் !
    கடையில் விற்கப் பட்டால் அதன்
    நன்மதிப்பை அறிபவர்
    உன்னத ஞானிகள் மட்டும்.
    காரணத்தை மூடன் ஏற்று
    ஆதரிப்ப தில்லை !
    பைத்தியம் என்பான்
    பித்தன் !
    மூடன் ஒருவனை நேற்று
    “எத்தனை மூடர் உள்ளார்
    நம்மிடையே ?”
    என்று கேட்டேன்.
    “கண்டுபிடிக்க நேரம் ஆகும் !
    முடியா தென்னால் ! என்பான்
    கடின மான செயலா ?
    ஞானியை மட்டும்
    மானிடர்
    எண்ணினால் போதுமே !
    ___________________

    முதலில் தெரிந்து கொள்
    உன் சுய மதிப்பை
    அதன்பின் நீ
    அழிந்து போக மாட்டாய் !
    மூல ஆதாரம் அறிவதே
    உனக்கு வழிகாட்டும் ஒளி ! அதுவே.
    உண்மைக்
    களங்கரை விளக்கு !
    வாழ்க்கைத் தோற்றத்துக்கு
    மூல ஆதாரம் உணர்வாய் !
    அறிவை உனக்கு அளித்துளான்
    இறைவன் !
    அந்த ஒளியில் நீ
    அவனை வழிபடு வதால்
    உனக்குத் தெரிந்திடும்
    உன் வலுவும் பலவீனமும் !
    உன் விழியில் உள்ள தூசி
    தொலைவில்
    உனக்கே தெரியாது போனால்
    பக்கத்து நபர் கண் தூசியைப்
    பார்க்க மாட்டாய் !
    ஒவ்வோர் நாளும் நீ
    உன் மனச் சாட்சியை
    உற்று நோக்கு !
    குற்றங் களைத் திருத்திடு !
    கடமையில் தவறினால்
    காரண அறிவும்
    கைவிட்டுப் போகும் !
    காரண மூலமும்
    பொய்யாகிப் போகும் !
    ___________________

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 50

    –சி. ஜெயபாரதன்.

     

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “சொத்தைப் பல்லைப் “பிடுங்கு” என்று சொன்னால் பல் டாக்டர் உன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவார். காரணம் நோயை மறைக்கும் பல் டாக்டர் கலைத்திறனை இதுவரை நீ கற்றுக் கொள்ள வில்லை. அழுத்திக் கேட்டால் இப்படிச் சொல்லிக் கொண்டு உன்னை விட்டு ஒதுங்கிச் செல்வார் : “இந்த உலகில் தூய கருத்தியல்வாதிகள் (Idealists) எனப்படும் பல மனிதர் பலவீனக் கனவுகள் உடையவர்.” கலில் கிப்ரான். (Decayed Teeth)

    “பிதற்றுபவரைப் பார்த்து அவரது பிதற்றலைக் கேட்டு நான் சலிப்படைந்து விட்டேன். அவரை வெறுக்கிறது எனது ஆத்மா. காலை எழுந்து தினச் செய்தித் தாளையோ கடிதங்களையோ படிக்கப் போனால், அவை முழுவதிலும் வெறும் வம்பளப்புகளைத்தான் காண்கிறேன். தொங்கிக் கொண்டிருக்கும் பொருளற்ற வாசகம் அவற்றில் வஞ்சகம் கலந்து எழுதப் பட்டுள்ளன.” கலில் கிப்ரான். (Mister Gabber)

    ___________________

    காரணம்
    (Reasoning)
    ___________________

    காரணம் உன்னிடம் பேசினால்
    காது கொடுப்பாய் !
    பாதுகாப் புறுதி அது !
    அதன் உதவியை நாடு !
    அறிவுக்கு
    ஆயுதம் அளிக்கும் உனக்கு !
    ஆண்டவன்
    உனக் களித்த வற்றுள்
    காரணத் தைப் போல்
    வலுவான கை
    வேறு ஒன்றில்லை !
    காரணம்
    உன்னிடம் பேசும் போது
    உதாரணம் நீ அதற்கு
    இச்சைக்கு எதிராக !
    காரணம்
    உனக்கு எச்சரிக்கை மந்திரி
    நம்பத் தகும் வழிகாட்டி !
    ஞான அறிவூட்டி !
    இருளில் ஒளிகாட்டி !
    சினம் என்பது ஒளி ஊடே
    இருள் போன்றது !
    அறிவுக்குக் கதவைத்
    திறந்து வை !
    காரணம் தெரிந்திடச்
    சாளரம் திறந்திடு !
    அவசரப் புத்தியைத் தவிர்ப்பாய் !
    அவ்வுரைதான் உனக்குச்
    செவ்வழி காட்டும் !
    ___________________

    கவனமாய்க் கேள் !
    காரணம்
    உதவி யின்றிப் போகும்
    உன் கையில்
    அறிவின்றிப் போனால் !
    உடன் பிறப்புச் சகோதரி
    அறிவு இல்லாமை
    காரணத் துக்கு
    வீடில் லாத வறுமை !
    அறிவுக்குக்
    காரணம் இல்லாமை
    கதவில் லாத வீடாகும் !
    காரணம் இல்லாமல் போயின்
    காதல், நீதி, நேர்மைக்கு
    ஆதார மின்றி முறியும் !
    ___________________

    நீதி, நெறி இல்லாத
    கல்வி கற்ற மனிதன்
    நிராயுத பாணியாய்ப்
    போருக்குச் செல்லும்
    வீரனுக்கு ஒப்பா வான் !
    போர்ச் சினம்
    வாழ்க்கையில் வீணாகும்
    அவன் இனத்துக்கு !
    தூய்மை யான
    நீர்க் குடத்தில் கலந்த
    கத்தாழை வித்துப் போலாகும் !
    காரணங் களோடு
    கல்வி கற்பது
    உடலும் ஆத்மாவும்
    உறவாடல் போலாகும் !
    உடல் இல்லா விட்டால்
    ஆத்மா வுக்கு
    ஒன்று மில்லை !
    வெறும் காற்றாய்ப் போகும் !
    ஆத்மா இல்லா விடில்
    உணர்வற்ற கூடாகும்
    உடம்பு !
    ___________________

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 49

    –சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

     

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

     

    நீ அழுத்திக் கேட்கும் போது சிரியன் தேசம் ரொட்டியைச் சொத்தைப் பற்களால் கடித்து ஒவ்வொரு கவளைத்தையும் நச்சு உமிழ் நீரில் கலந்து நாட்டின் வயிற்றில் நோயைப் பரப்பிப் பதில் உனக்குக் கூறுகிறது, “ஆம் ! அவர்கள் தரும் நல்ல மயக்க மருந்துகளையும், சொத்தைப் பல் குழி நிரப்பிகளையும் நாங்கள் தேடிக் கொண்டி ருக்கிறோம்” என்று.
    கலில் கிப்ரான். (Decayed Teeth)
    ___________________

    எனக்கில்லை முற்றுப் புள்ளி !
    ___________________

    நான் அறிவேன் இந்த
    நளின மணப்பெண்
    பூமியை !
    இயற்கை எழிலைப் பெருக்க
    இந்த மனிதன்
    செயற்கை யில் சூட்டும்
    எந்த ஓர் ஆபரணமும்
    இனித் தேவை இல்லை
    இந்த பூமிக்கு !
    ___________________

    குன்றுகளில் மின்னும்
    விலைமதிப் பற்ற கற்களும்
    கடற்கரை களில்
    காணப்படும் பொன் மணலும்,
    பரந்த நிலத்தில் தெரியும்
    பச்சைப் புல்வெளிகளும்
    போதும் என்று கூறுவது
    பூமிக்குத் திருப்தி !
    ___________________

    என்றாலும் பூமியின்
    சீற்றத்தை
    எள்ளி நகையாடி
    பேரழிவுக்கும்,
    பெருஞ் சினத்துக்கும்
    இடையே
    தெரியுது எனக்கு :
    எதிர்த்துக் கொண்டு
    மனிதன் தனது
    தெய்வீகச் சக்தியில்
    நிற்பது !
    ___________________

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 48

    சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    மேடைப் பேச்சில் முழக்கிப் பேரரங்கை நிறுவிச் சமூகத்தை ஒன்று கூட்ட அறிவு ஜீவிகளாய்ப் பாவனை செய்யும் சிரியன் தேசத்துச் சீர்திருத்தவாதிகளுடன் சிறிது பேசிப் பாருங்கள் ! அவரிடம் பேசும் போது மாவரைக்கும் யந்திரத்தை விடக் கோரமாகவும் கோடைக் கால இரவில் கத்தும் தவளைகளை விட மேலானக் கீத அரவத்தைக் கேட்பீர் !
    கலில் கிப்ரான். (Decayed Teeth)
    ___________________

    பூமியின் சீற்றம் !
    ___________________

    நான் கண்டேன் இந்தப்
    பராக்கிரம மனிதர்
    கட்டி எழுப்புவதை !
    தகர்க்க முடி யாத
    கற் கோட்டைகள் !
    நான் கண்டேன்
    செம்மைக் கலை ஞர்கள்
    தம் சுவர்கள் மீது
    ஏராள மான ஓவியத்தைத்
    தோரண மாய்
    வரைந் திருப்பதை !
    ___________________

    நான் கண்டேன் இந்தப்
    பூமியை !
    அகண்டத் தனது
    தள வாயைத் திறந்து
    அப்படியே விழுங்கும் சுளுவாய்
    அத்தனைக்
    கைத்திறன் வித்தகரை !
    சிந்தனைச் சிற்பிகள்
    விந்தையாய்ச்
    செதுக்கி வைத்ததை !
    ___________________

    நான் அறிவேன் இந்த
    நளின மணப்பெண்
    பூமியை !
    எழிலைப் பெருக்கு வதற்கு
    இந்த மனிதன்
    செயற்கை யில் சூட்டும்
    எந்த ஓர் ஆபரணமும்
    இனித் தேவை இல்லை
    இந்த பூமிக்கு !
    ___________________

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 47

    சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “அப்படியே அச்சம், அறியாமை, கோழைத்தனம் உள்ள ஏழைக் குடிசைகள் வழியாக அவற்றைப் புறக்கணிக்காமல் பார்க்கப் போய் வருவீர் ! விரைவாய் இயங்கும் விரல்களும் நுட்பக் கருவிகளும் கொண்டு தேசத்தின் சொத்தைப் பற்கள் தோண்டிய குழியை நிரப்பித் தேய்வுகளை மறைத்து வரும் பல் மருத்துவர் வசிக்கும் இல்லத்திற்கும் சென்று வருவீர் !”
    கலில் கிப்ரான். (Decayed Teeth)
    ___________________

    பூமியின் சீற்றம் !
    ___________________

    புயலடிப்பு ! இடி இடிப்பு !
    தீப்பிடிப்பு ! இவைதான்
    புவி காட்டும் சீற்றங்கள் !
    மனித இதயத்தில்
    மண்டும் வெறுப்பு பொறாமை
    தீவினை –
    இவற்றுக்கு ஒப்பாகும் !
    மக்கள் கூக்குரலும்
    இழப்பு அழுகுரலும் அவற்றால்
    இன்னலும், விபத்தும்,
    இதர எச்சரிக் கைகளும்
    எனது மனத்தில்
    நினைவு கொணரும்
    காட்சிகள் !
    காலத்தின் நாடக அரங்கில்
    காணும் கூத்துகள் !
    ___________________

    நான் காண்கிறேன் இந்த
    மானிடனை !
    பூமித் தளமெங்கும் அவன்
    எழுப்பிடும்
    வரலாற்றுத் தூண்கள்,
    கோபுரம், மாளிகை, நகரம்,
    கோயில்கள் !
    நான் காண்கிறேன் இந்த
    பூமியை !
    அது கடுஞ் சினமுற்று
    அந்தக் கட்டடத்தை எல்லாம்
    பெயர்த் தெடுத்துத்
    தனது நெஞ்சுக் குள்ளே
    புதைத்துக் கொள்ளும்
    சீற்றமுடன் !
    ___________________

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 46

    சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “நீதி மன்றங்களுக்குச் சென்று நேர்மையற்றுக் கைக்கூலி வாங்கிப் பொய்ச் சாட்சி கூறும் மனிதரைப் பார் ! பூனை எலியுடன் விளையாடுவது போல் எப்படி எளிய மனிதரின் உள்ளத்தையும், சிந்தனைகளையும் தம் வசம் வளைக்கிறார் என்பதைப் பார் ! பொய்யும் புரட்டும், சூதும், வஞ்சகமும் உள்ள செல்வந்தர் இல்லத்துக்குச் சென்று பார்”
    கலில் கிப்ரான். (Decayed Teeth)
    ___________________

    நித்திய ஞானி
    ___________________

    பூமிக்கு எதிரி பல்லடுக்குத்
    தளத்தின் கீழ்
    ஒளிந்திருக்கும் மனிதனே !
    ஈதர் ஆவிக் கிடையே உள்ளவன் !
    அழுதிடும் அன்னையர் அலறலில்
    பசித்திடும் மதலையர் குரல்தனில்
    பங்கெடுப்பது பூமி !
    தனிமச் சிதைப்பும்
    மனித அற்பமும் எண்ணும் !
    நேற்றைய தினம்
    இங்கெல்லாம் குழந்தைகள்
    நிம்மதி யாய்த் தூங்கியதை
    நினைத்துக் கொள்ளும் !
    இல்லமற்று இன்று நகரங்களில்
    அல்ல லோடு மாந்தர்
    அழுது கொண்டு நிற்பதை
    அப்பால் வெறித்து நோக்குவதை
    அவ நம்பிக்கை யோடு
    கவலை யோடு,
    போர் வாழ்வில்
    புரண்டு வாழ்வதைக் கண்டு
    பூமி மனம் உடையும் !
    ___________________

    நின்று கொண்டி ருக்கும் ஆத்மா
    நிலையற்ற சிந்தனையில்
    கொன்றழிக்கும் கவலை யோடு
    உலக சக்தி களை
    ஆட்டிப் படைக்கும்
    தெய்வ நியதியின் நீதியைச்
    சந்தேகித்து
    பூமி முணு முணுக்கும் :
    “இந்தப் படைப்புக்களை எல்லாம்
    உந்தச் செய்யு மந்த
    நித்திய ஞானி
    சீறிச் சினந்து
    சீரழிவை விளை விக்கும் !
    அத்துடன் எதிர் பாரா
    பேரெழிலும் உருவாக்கும் !
    ___________________

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 45

    சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    “ஊத்தைப் பற்கள் நிரம்பிய ஒரு நாடு வயிற்று நோயால் நாச மடையும் ! பல நாடுகள் அப்படிச் செரிக்க முடியாத வயிற்று வலியோடு துன்புற்று வருகின்றன. சிரியாவில் சொத்தைப் பற்களைப் பார்க்க விரும்புவோர் கல்விக் கூடங்களில் படிக்கும் மாணவ மாணவிகளைப் பிற்காலப் பொறுப்புக்கு இன்று எப்படித் தயார் செய்கிறார் என்று காணச் செல்லுங்கள்.”
    கலில் கிப்ரான். (Decayed Teeth)
    ___________________

    வலுவற்ற மனிதன் !
    ___________________

    வசந்தம் வந்தது !
    வாய் திறந்து சிற்றோடைகளும்
    ஆறுகளும் முணுமுணுக்க
    ஆரம்பித்தன !
    பூக்களின் புன்சிரிப்புகள்
    பொங்கின !
    மனித ஆத்மா திருப்தி யுற்று
    மகிழ்ச்சி அடைந்தன !
    திடீரெனச் சினமுற்று
    இயற்கை
    குப்பையைக் கொட்டியது
    ஒப்பனை நகரில் !
    மனிதன் மறந்தான் இயற்கையின்
    சிரிப்பை, செழிப்பை,
    பரிவை எல்லாம் !
    பயங்கரக்
    குருட்டுப் புயல் விசை ஒன்று
    ஒரு மணி நேரத்தில்
    உருக் குலைத்தது
    பல பிறவிகள் மெய்வருந்தி
    உழைத்துக் கட்டியதை !
    மாசுகளால் கோர மரணம்
    மானிடரைப் பீடிக்கும் !
    விலங்கி னத்தையும்
    சிதைத்துச்
    சின்னா பின்ன மாக்கும் !
    ___________________

    நெருப்புப் பற்றி மக்களையும்
    சாதனங் களையும்
    எரித்துக் கரியாக்கும் !
    ஒரு பயங்கர நீளிரவு
    எழில் வாழ்வின்
    ஒளிமயத்தை எரித்துக்
    குப்பைக் கோலச் சாம்பலாக்கும் !
    அச்சமூட்டும்
    மூர்க்கச் சக்திகள்
    அழித்தது மனிதரை !
    அவரது குடி இல்லங்களை !
    அவரது
    அரும்பணிச் சாதனைகளை !
    அத்தகைய
    அழிவுப் பிரளயத்தில்
    பூமியின் மடியில் நின்றான்
    தூரத்தில் வலுவிலா
    அற்ப மனிதன் வழிபாடுடன்
    வெற்று நோக்குடன்
    வேதனை யுடன்
    கடவுளின் பேராற்ற லுக்கு
    அடங்கிக் கொண்டு !
    ___________________

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 44

    சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “சமூகச் சொத்தைப் பற்களுக்குப் பொன் கவசமிடும் பல்மருத்துவர் பலர் இருக்கிறார். சிரியன் நாட்டு வாசலில் ஊசிப் போய் நாற்ற மடித்துச் சீழ் வடியும் ஊத்தைப் பற்கள் பல நடமாடுகின்றன ! மருத்துவர் அவற்றை அகற்றாது பொன்னிட்டு நிரப்புவார். நோய் இன்னும் அங்கே நிலைத்துள்ளது.”
    – கலில் கிப்ரான் (Decayed Teeth)
    ___________________

    திருமணம்
    ___________________

    திருமணம் என்பது
    தங்கத்தில் வடித்த சங்கிலித்
    தோரணம் !
    ஆரம்பம் அதற்குக்
    காதலர் கண்ணோக்கு !
    நேரும் விளைவு
    நித்தியப் பிணைப்பு !
    மாசற்ற வானி லிருந்து
    காய்கள் பழுத்திடப் பெய்திடும்
    தூய மழைப் பொழிவு !
    தெய்வீக இயற்கை நிலங்கள்
    ஆசிகள் பெறும் !
    ___________________

    ஏனெனில் கண்மணியின்
    மான் விழிகள்
    ஏவிடும்
    கடைக்கண் பாய்ச்சல்
    வாலிபன்
    இதயத்தில் இடப்படும் விதை !
    இள நங்கையர் இடும்
    உதடுகளின்
    முதல் முத்தங்கள்
    வாழ்க்கை மரக் கிளையில்
    பூக்கும் மலர்கள் !
    திருமணத்தில்
    இரு மனங்கள் கூடி
    உடன்படும் ஐக்கிய ஒப்பந்தம்
    முதல் விதையில் விளைந்த
    முதற்கனி !
    ___________________

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 43

    சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    ஆதலால் நான் அடுத்தோர் பல் மருத்துவரை நாடி, “இந்தச் சாபப் பல்லைப் பிடுங்கி எடுங்கள். எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்காதீர். அடியை வாங்கிக் கொள்ளும் ஒருவன் அதை எண்ணிக் கொள்ளும் மற்றவனைப் போலில்லை !” என்று கூறினேன். நானிட்ட கட்டளைப்படி மருத்தவர் பல்லை பிடுங்கி எடுத்துச் “சொத்தைப் பல்லைப் பிடுங்கியது நல்லது.” என்றவர் கூறினார்,” மனித சமூகத்தில் எலும்பு வரைச் சீர்கெட்டுப் போன பல்வேறு சொத்தைப் பற்கள் உள்ளன ! அவற்றை அகற்றச் சமூகம் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளாமல், தங்கத்தை இட்டு நிரப்புவதில் திருத்தி அடைந்து வருகிறது.
    – கலில் கிப்ரான் (Decayed Teeth)

    ___________________

    திருமணம்
    ___________________

    இங்கே தான்
    காதல்
    வாழ்வின் அரிச்சுவடியை
    எழுதத் துவங்கிறது !
    இரவில் தோன்றிப்
    பகலில்
    பாடி வரும்
    இசைக் கீத மாகவும்
    புகழ்ப் பாமாலை யாகவும் !
    நிகழ்வது இங்குதான் !
    ___________________

    இதிலிருந்து தான்
    காதல் தேவி
    வாழ்வின் அரிச்சுவடியை
    எழுதத் துவங்கிறாள் !
    இரவில் தோன்றிப்
    பகலில் பாடி வரும்
    இசைக் கீத மாகவும்
    புகழ்ப் பாமாலை யாகவும் !
    நிகழ்வது இதிலிருந்து தான் !
    இங்கிருந்து தான்
    காதல் வேட்கை
    முகத் திரையை நீக்கி விடும் !
    இதயச் சந்துகளில்
    விளக் கேற்றி
    ஆத்மா வுக்கு நிகரற்ற
    களிப்பை அளிக்கும் !
    கடவுளைத் தழுவ வைக்கும்
    அந்த இணைப்பு !
    ___________________

    தெய்வீகப் பிறவிகள் இரண்டின்
    ஐக்கிய உடன்பாடுதான்
    திருமணம் !
    மூன்றாவது பிறவி ஒன்று
    வையத்தில்
    தோன்றும் என்பதற்குச்
    சான்றிதழ் !
    ஆத்மாக்கள் இரண்டின்
    கூட்டுறவு !
    தனிமை போக்கிடும் திருமணம்
    ஓர் உறுதிப் பிணைப்பு !
    ஈர் ஆன்மாக்கள்,
    ஏகாந்தப் பிறவிகள் கூடும்
    உன்னத இயக்கம் !
    தங்கத்தில் வடித்த வளையம்
    சங்கிலில் !
    ஆரம்பம் அதற்கு
    காதலர் கண்ணோக்கு !
    நேரும் விளைவு
    நித்தியப் பிணைப்பு !
    ___________________

     

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 42

    சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    ஆடிய பல்லுக்கு அருகே தோண்டிய குழியில் மருத்துவர் தூய தங்கத்தால் நிரப்பிப் பெருமிதமோடு கூறினார் : “ஆடிய பல் இப்போது உமது மற்ற பற்களை விட உறுதியாக இருக்கும்.” அதை நான் நம்பிக் கொண்டு பணத்தைக் கொடுத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் அந்த வார முடிவதற்குள் சபிக்கப்பட்ட அந்தப் பல் எனக்கு மறுபடியும் வலி கொடுக்கத் தொடங்கி என் ஆத்மாவின் இனிய கீதங்களை வேதனை அலறலாக மாற்றியது !
    – கிப்ரான் (Decayed Teeth)
    ___________________

    முதல் முத்தம்
    ___________________

    உதடுகள் நான்கு ஒன்று கூடி
    உறுதி செய்யும் போது
    வைத்திடும்
    முத்தத்தின் மொழி
    இதயத் துக்கு ஓர்
    ஆசனம் அளிப்பது !
    நேச மன்னனை அமர்த்துவது !
    கிரீடம் சூட்டுவது !
    தென்றல் இதழ்களைத்
    ரோஜா மலர் தடவுதல் போல்
    மென்மை விரல்கள்
    மிருதுவாய்த் தொடுதல் அது !
    அப்போது
    நீண்ட பெரு மூச்சு
    விடுவிப்பும்
    இனிய முணங்கலும்
    எழுந்திடும் !
    ___________________

    அதுவே ஆரம்பத் தருணம்
    உள்ளத்தின் மாயத் துடிப்புகள்
    கள்ளக் காதலரை
    கழித்தல் கூட்டல், கணக்கிலிருந்து
    கனவு உலகுக்குத்
    தூக்கிச் செல்லும் ! முத்தம்
    இரு நறுமண மலர்களின்
    ஐக்கியப் பாடு !
    மூன்றாம் ஆத்மா ஒன்றைத்
    தோன்ற வைப்பதே
    நறுமணக்
    கூட்டுறவின் நியதி !
    ___________________

    இளங் காதலரின்
    முதல் கண்ணோக்கு
    தேவதை விதைக்கும் வித்து
    மானிட
    இதய பூமியில் !
    வாழ்க்கை மரக் கிளையின்
    முனையில் பூக்கும்
    முதல் மலரே
    காதலர்
    முதல் முத்தம் !
    ___________________

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 41

    சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    “ஒருநாள் பொறுமை இழந்து நான் பல் மருத்துவரிடம் தொல்லை தரும் பல்லைப் பிடுங்கச் சொன்னேன். இரவில் என் நித்திரையைக் கெடுத்து என்னை அலர வைத்து வேதனை கொடுத்தது. குணப்படுத்தாது பல்லைப் பிடுங்குவது முட்டாள்தனம்,” என்று பல் மருத்துவர் பிடுங்க மறுத்தார். பிறகு பல்லருகே துளையிட்டுத் தோண்டி உள்ளே சுத்தம் செய்தார்.”
    – கலில் கிப்ரான் (Decayed Teeth)
    ___________________

    முதல் முத்தம்
    ___________________

    அருமைக் காதலியின்
    முதல் கண்ணோக்கு
    நீர் வெள்ளத்தின் மேல்
    மிதந்து
    வானக மண்டலத் தையும்
    வையகத் தையும்
    புலர்ந்திட வைக்கும்
    ஆன்மாவைப் போன்றது !
    அப்போது
    அகிலத் தலைவன்
    ஆசிகள் கூறுவான் :
    “அப்படியே நடக்கட்டும்”
    என்று.
    ___________________

    முதல் முத்த மானது
    தேவதை நிரப்பிய
    கிண்ணத்தில்
    உதடுகள் தொட்டுச் சுவைக்கும்
    முதல் வாழ்வுத் தேனமுது !
    அதுவே
    முத்திரைக் கோலம் !
    ஐயத்துக்கும்
    இதயத்தை வருத்தி
    ஆன்மா மயக்கு தற்கும்
    இடைக் கோடு !
    இதய உட்சுனையை
    பூரிப்பால்
    பொங்க வைத்திடும்
    ஓர் உறுதிப்பாடு !
    ___________________

    அதுவே வாழ்க்கைக் கீதம்
    உதித்தெழும் துவக்கம் !
    பூரண மனிதன்
    ஆரம்ப நாடகத்தின்
    முதல் காட்சி !
    அதுவே
    கடந்த காலத்து வியப்பையும்
    எதிர் காலத்து
    ஒளி மயத்தையும்
    இணைக்கும்
    ஓர் ஐக்கிய பந்தம் !
    ஊமை உணர்வையும்
    ஒலிக்கும் பாட்டையும்
    ஒன்றாக்கும்
    ஓர் தொடர்ப்பாடு !
    ___________________

     

    Share