Tag: க. பிரகாஷ்

  • வாழ்க்கை என்னும் பாதையில்

     

    . பிரகாஷ்

    உவிப்பேராசிரியர்

    தமிழ்த்துறை

    நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)

    திருமலையம்பாளையம் – 105

     

    கடந்தோம் கடந்தோம் காலத்தைக் கடந்தோம்!                            

    கலந்தோம் கலந்தோம் கற்பனை என்ற களத்தில் ந்தோம்!

    இணைந்தோம் இணைந்தோம் காதல் என்ற இணைப்பில் இணைந்தோம்!

    வரைந்தோம் வரைந்தோம் நம் உள்ளத்திலிருந்த காவியத்தை வரைந்தோம்!

    அளந்தோம் அளந்தோம் அன்பினை அளந்தோம்!

    தளர்ந்தோம் தளர்ந்தோம் உடலால் தளர்ந்தோம்!

    வளர்ந்தோம் வளர்ந்தோம் மனதால் வளர்ந்தோம்!

    கூடினோம் கூடினோம் கூடலில் புணர்ந்தோம்!

    புணர்ந்தோம் புணர்ந்தோம் !தாய்தந்தையாகத் தொடர்ந்தோம்!

    இனிதாய் வாழ்ந்தோம்!

    வாழ்ந்தக் காலங்களில் விட்டுகொடுத்தே இருவர் ஒன்றானோம்!

    உள்ளமோ ஒன்றே! நம் உடல் மட்டும் இரண்டே!

    உயிரும் நமக்குள் ஒன்றனல் நன்றே!

    விதியின் வழிச் சென்றே இலக்கினை அடைந்தோம்!

    Share
  • திருக்குறள் கூறும் வேளாண்மைச் செய்திகள்

    -க.பிரகாஷ் எம்.ஏ, எம். பிஃல், (பிஎச்.டி) 

    வேளாண்மை பற்றிய சில கருத்துகள்

         வேளாண்மை என்னும் சொல்லின் பகுதியாகிய வேளாண் என்னும் பெயர்ச் சொல்லை  நுணுகி ஆராயின் அதன் வேர்ச்சொல் யாது என்பது நன்கு விளங்கும். வேளாண் என்னும் சொல்லை “வேள் – ஆள்” பிரிப்பர் இலக்கண நூலார். வேளாண் என்னும் சொல்லில் வேள் என்பது பகுதி ஆள் என்பது விகுதி வேள் என்னும் பகுதி வேர்ச்சொல்லாகும். அச்சொல்லுக்கு மண் என்பது பொருள்; ஆள்தல் என்னும் தொழில் பெயரில் விகுதி குறைந்து ஆள் என முதல்நிலைத் தொழில் பெயராய் நின்று வேள் – ஆள் – வேளாண் என ஒரு சொல் தன்மை பெற்றிருத்தல் வேண்டும். இச்சொல் மண்ணை ஆளுதல் என்ற பொருளைத் தருகிறது.

         வேளாண் என்ற சொல் பிறப்புக்கு ஆராய்ச்சியில் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. சொற்கள் ஓரசையிலிருந்து தான் பல அசைகளாக வளர்ந்து இருக்கவேண்டும் என்பது மற்றொரு சாரார் கருத்து. இவ்விருவேறு கருத்துக்களில் முன்னதே பெரும்பான்மையான அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். ஒரு சொல்லின் வேர்ச்சொல்லைக் காணவேண்டின், முழுமையான சொல்லில் இருந்துதான் பகுதி, விகுதிகளைப் பிரித்தாய்ந்து காணவேண்டும். அவ்வகையில் வேளாண்மை என்னும் சொல்லும் பகுதி விகுதிகளாகப் பிரித்து அறியப்பட்டது. அன்றியும், தமிழ்ச் சொற்கள் எல்லாம் ஓரசை உடையனவே, என்றும் மொழியியல் அறிஞர் கால்டுவெல் அவர்களின் கருத்தும் இவ்வாராய்ச்சிக்குத் துணைபுரிவதாக அமைகின்றது.

         வேளாண்மை என்னும் சொல்லின் வேர்ச்சொல் வேள் என்பதாகும் அச்சொல் வேள் – வேளாண் – வேளாண்மை என வளர்ந்துள்ளது என்பதே இன்றையக் கருத்தாகும்.

    இலக்கியம் – இலக்கணங்களில் வேளாண்மை

         வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
      இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி. (தொல் – பொருள் – மரபு – 81)

    என்ற நூற்பாவில், தொல்காப்பிய முதல் உரையாசிரியராகிய இளம்பூரணர் வேளாண் என்ற சொல்லுக்கு வேளாண் மாந்தர் என்று உரை கூறுகின்றார். வேளாண் மாந்தர் பலவகைப்பட்ட தொழிலரேனும் உழும் தொழிலே பெரும்பான்மை ஆகலான் அதனையே சிறப்பித்துக் கூறுதல் மரபு எனக் குறித்துள்ளார். வேளாண் என்ற சொல்லுக்கு உழவர் என்றோ வேளாளர் என்றோ பொருள் குறிப்பிடாமல் இருவரும் வேளாண் மாந்தர் என்றே குறிப்பிடுகின்றனர். வேளாண்மை செய்யும் மனமுடையோர் பிறர்க்காகவும் தமக்காகவும் உழுது விளைப்பர் என்பதே அந்நூற்பாவின் பொருளாகும்.

         எருது தொழில் செய்யாது ஓடவிடும்கடன்
         வேளளர்க்கு இன்று.        (பரி – 20 – 63)

    தமது எருதைக் கொண்டு தாமே தொழில் செய்யாது பிறர்பால் விடுத்துத் தொழிலைச் செய்வது வேளாளர் கடமை அன்று என்று பொருளை அப்பாடலின் வரிகள் உணர்த்துகின்றன. இங்கே வேளாளர் என்போர் எருதைக் கொண்டு தொழில் செய்வோர் என்ற பொருள் தெளிவாக்கப்படுகின்றது. இது போன்ற மேற்கோள் அனைத்தும் தொல்காப்பியக் காலம் தொடங்கிச் சங்க காலம் ஈறாக வேளாண்மை என்னும் சொல் உதவி என்ற பொருளையும் உழவுத் தொழில் என்ற பொருளையும் உணர்த்தக் காண்கிறோம்.

    திருக்குறள் கூறும் வேளாண்மை

         இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தேம்பி
         வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள் – 81)

    இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் மனைவியோடும் வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம் விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள் செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.

         தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
         வேளாண்மை செய்தன் பொருட்டு.    (குறள் – 212)

    பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டன் பொருட்டும் வைத்து இழத்தற் பொருட்டும் அன்று என்பதாயிற்று.

         தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
         வேளாண்மை என்னும் செருக்கு. (குறள் – 613)

    பொருள் கைகூடுதலால் உபகரித்ததற்கு உரியார் முயற்சி உடையோர் என்பார்; அவ்வக் குணங்கள் மேல் வைத்தும் அது பிறர்மாட்டு இல்லை என்பர் தங்கிற்றே என்னும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.

    உழவு

         சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்
         உழந்தும் உழவே தலை.   (குறள் – 1031)

    ஏர் என்பது ஆகுபெயர். பிறதொழில்களால் பொருளெய்திய வழியும் உணவின் பொருட்டு உழவர்கண் செல்ல வேண்டுதலின் சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று வருத்தமில வேனும் பிறதொழில்கள் கடை என்பது போதர உழந்தும் உழவே தலை என்றும் கூறினார்.

         உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
         தெழுவாரை எல்லாம் பொறுத்து.     (குறள் – 1032)

    காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு என்றாற் போல உழுவார் என்றது உழுவிப் பார்மேலுஞ் செல்லும். உலகத்தார் என்றது ஈண்டு இவரையொழிந்தாரை. கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின் ஆணி என்றார்.

         பொறுத்தலான் என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவகம் அஃது ஆற்றார் தொழுவாரே எல்லாம் பொருத்து என்று பாடம் ஓதி அது மாட்டாதார் மரப்பார் செய்யும் பரிபவமெல்லாம் பொருத்து அவரைத் தொழுவாரே யாவர் என்று உரைப்பாரும் உளர்.

         உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
         தொழுதுண்டு பின்செல் பவர். (குறள் – 1033)

    மற்று என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட் பிறப்பிறராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பு பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.

         இராவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
         கைசெய் தூண் மாலை யவர்.   (குறள் – 1035)

    செய்து என்பதற்கு உழுதலை என வருவிக்கக் கைசெய்தூண் மாலையவர் என்பது ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.

         உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
         விட்டேமென் பார்க்கும் நிலை.        (குறள் – 1036)

    உம்மை இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மை தாம் உண்டலும் இல்லறம் செய்தும் யாவர்க்கும் இல்லையாயின அவர் அறுப்பு மாத்திரமாய கை வாளாவிருப்பின் உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தேம் என்பார்க்கு என உரைப்பாரும் உளர். இவை பாட்டானும் அதனைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.

         ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
         நீரினும் நன்றதன் காப்பு.   (குறள் – 1038) 

    காத்தல்  பட்டி  முதலியவற்றால் அழிவெய்தாமல் காத்தல் உழுதல் எருப்பெய்தல் களைகட்டல் நீர்கால் யாத்தல் காத்தல் என்று இம் முறையவாது இல் வேண்டும்.

    ***

    பார்வை:

         திருக்குறள் வேளாண்மை – இல. செ. கந்தசாமி
    திருக்குறள் பரிமேலழகர் உரை – எஸ். கௌமாரீஸ்வரி

    Share
  • கணினி – திறன்பேசிக் கருவிகளில் தமிழ் எழுத்துருக்கள்

    -க.பிரகாஷ் எம்.ஏ, எம்.பிஃல், (பிஎச்.டி)

         அன்றாட வாழ்க்கையில் மக்கள் அனைவரும் கணினியோடும், கையடக்கக் கருவியோடும் கொஞ்சி விளையாடி வருகின்றனர். நாளுக்குநாள் அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு நிறுவனங்களில் கணினி சார்ந்த பயன்பாடுகள் மேம்பட்டு வருகின்றன.

         கணிப்பொறியின் பயன்பாடுகளோடு சேர்ந்து தற்போது  அலைபேசிப் பயன்பாடும் வளர்ந்து நிற்கின்றது. பெருமளவில் கணிப்பொறி பயன்பாட்டில் இருந்து கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்தும் முறைக்கு மாறிவிட்டனர். பலகைக் கணினி, மடிக்கணினி, வில்லைக் கணினி என்று கணினியின் வகைகளைக் குறிப்பிடுகின்றனர்.

         இன்றைய காலகட்டத்திலும் வருங்காலங்களிலும் தன் கையடக்கத்திலே எல்லாப் பணிகளையும் முடித்துக் கொள்ளும் அளவிற்குக் கருவிகளைக் கண்டுப்பிடித்துக் கொண்டே இருக்கின்றனர். தொலைபேசி, திறன்பேசி, நுண்ணறிபேசி, மாத்திரை என்று பலபெயர்களைச் சூட்டிக்கொண்டு வருகின்றனர்.

         pic5இவ்வகைக் கருவிகளில் நமக்குத்தேவையான அனைத்து மென்பொருள்களும் இயங்கும் அளவிற்கு உருவாக்கியிருக்கின்றனர். இக்கருவிகளில் ஒவ்வொரு மென்பொருளிலும் தமிழ்மொழியை உள்ளீடு செய்யும் அளவிற்கு ஒருங்குறி என்ற எழுத்துருவை உருவாக்கியிருக்கின்றனர். ஒரு மென்பொருளை ஆங்கில மொழியைக் கொண்டு எளிதாகச் செயல்படுத்த முடியும். ஆனால் தமிழ் மொழியை எளிமையாகச் செயல்படுத்த முடியாது.

         pic1ஒரு கணினியில் இயல்பாகவே ஆங்கில மொழியை உள்ளீடு செய்திருப்பர். ஆங்கில மொழியை உள்ளீடு செய்து இருந்தாலும் தமிழ்மொழியை நிறுவிக் கணினி அமைப்பில்  மொழியைத் தேர்வுசெய்து தமிழ்மொழியை இயக்கு செயலில் பயன்படுத்த முடியும். ஆனால் ஆங்கில விசைப்பலகையில் தமிழ் மொழியை அல்லது எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டுமானால் தமிழ் எழுத்துருக்களை நிறுவ வேண்டும். அப்படி நிறுவினாலும்  ஆங்கிலமொழிபோல் இருக்காது. அதில் இருந்து மாறுபட்டிருக்கும். ஆங்கில எழுத்துருவானது ஒரு பொத்தானுக்கு ஒரு எழுத்துரு மட்டுமே இருக்கும். ஆனால் தமிழ் எழுத்துருவானது ஒரு பொத்தானுக்கு இரண்டு எழுத்துருக்களைக் கொண்டு இருக்கும். ஆங்கிலத்தில் பல எழுத்துருக்களை மாற்றினால் வடிவங்கள் மட்டுமே மாறுபடும். தமிழ் எழுத்துருவில் ஒவ்வொரு எழுத்துருவும் ஒவ்வொரு வகையாக இருக்கும். இயல்பாகப் பயன்படுத்தும் எழுத்துருக்களை இணையத்தில் பயன்படுத்த முடியாத காரணத்தினால் ஒருங்குறி எழுத்துருவை உருவாக்கி இருக்கின்றனர்.

    இ – கலப்பை, தமிழ்விசை, என்.ஹெச்.எம். ரைட்டர், இணையத் தமிழ் தட்டச்சுப் பொறிகள், தமிழ் எழுத்துரு மாற்றிகள், இணைய எழுத்துரு மாற்றிகள் செல்லினம், எழுத்தாணி, முரசொலி எனப்பல தமிழ் மென்பொருள்களை உருவாக்கி இருக்கின்றனர்.

         இவ்வகை மென்பொருட்களை நிறுவிக் கணினியில் அல்லது கையடக்கக் கருவிகளில் உள்ளீடு செய்தபிறகு பயன்படுத்த முடியும். கணினியில் தமிழ் எழுத்துருக்களைத் தட்டச்சு செய்திட நாம் விரும்பிய எழுத்துருவை தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் தட்டச்சுத் தெரியாதவர்களும் தட்டச்சு செய்திட முடியும். தமிழில் அவ்வாறு முடியாது.

         ஆங்கிலத்தில் இருக்கும் விசைப்பலகையில் தமிழ் எழுத்துருக்களைப் பொருத்தியிருப்பதும், ஆங்கிலத்தைவிட தமிழ் எழுத்துருக்கான மென்பொருள்கள் அதிகமாக உருவாக்கியிருப்பதும் தமிழுக்குச் சிறப்புக்குரியது என்று நான் கருதுகிறேன்.

    தமிழ் ஒருங்குறி எழுத்துரு

         தமிழ் பல எழுத்துருக்களைக் கொண்டடிருக்கும் நிலையில் ஒருங்குறி என்ற எழுத்துருவைப் பொதுவானதாக உருவாக்கியுள்ளனர். இணையதளங்களில் பயன்படுத்த தமிழ் எழுத்துருவான பாமினி, எழுத்துரு வடிவமைப்புக் கொண்டு வடிவமைத்து இருக்கின்றனர். ஒருங்குறி எழுத்துருவில் ‘லதா’ என்ற பெயரில் தெரிவுசெய்யுபடி இருக்கும். இந்த எழுத்துருவைக் கொண்டு இணையதளங்களில் எல்லாவகையான பணிகளையும் செய்திடலாம். இவ்வகையான எழுத்துருக்களைக் கொண்டு இணையதளங்களை உருவாக்கலாம், சொற்செயலியைச் செயல்படுத்த, தமிழ்ச்சொற்களை அகரவரிசைப்படுத்த, தமிழில் தேடுபொறியைப் பயன்படுத்த, சொற்பிழை நீக்க, சந்திப்பிழைத் திருத்த, நிரலாக்க மொழியாகப் பயன்படுத்த எனப் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தலாம்.

    தமிழ் ஒருங்குறி மென்பொருள்

        தமிழ்ஒருங்குறி எழுதிகள் விசைப்பலகைகள் என்னும் மென்பொருட்கள் கணினிகளில் ஒருங்குறித் தமிழ் உள்ளீட்டிற்காக உருவாக்கப் பெற்றுள்ள மென்பொருள் ஆகும். இவ்வகை மென்பொருட்களை மிக எளிதாகக் கணினியில் நிறுவலாம். கணிப்பொறிகளிலும் மடிகணினிகளிலும், ஒருங்குறித் தமிழில் தட்டச்சு செய்யப் பின்வரும் மென்பொருள்களுள் ஒன்றினைத் தரவிறக்கம் செய்து அவற்றைக் கணினியில் நிறுவித் தமிழ் உள்ளீடு செய்யலாம்.

    என்.ஹெச்.எம். ரைடர்

        pic2இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து அவற்றைக் கணினியில் நிறுவிய பிறகு ந
    மக்குத் தேவையான எழுத்துருவை கொண்டு தட்டச்சு செய்திடலாம். ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்கள், தமிழ் 99, தமிழ் ஆங்கில ஒலிபெயர்ப்பு, தமிழ் பழைய தட்டச்சுப் பொறி, பாமினி, தமிழ் இன்ஸ்கிரிப்ட், தமிழ் 99 டேஸ், தமிழ் ஒலிபெயர்ப்பு டேஸ் ஆகிய முறைகளிலும் மற்றும் வேறு மொழிகளிலும் தட்டச்சு செய்திடலாம்.

    தமிழ் விசை

        pic3
    கணினியில் எழுதஉதவும் ஒரு பயர்பாக்ஸ் நீட்சியாகும். இதனைத் “தமிழா”ஏன்ற அமைப்பைச் சேர்ந்த
    முகுந்தராஜன் முதலில் முயன்று வெளியிட்டார். இதில் voice on wings  மேம்படுத்தித் தந்தார். இவ்வகையில் தமிழ்நெட் 99, பாமினி, புதிய பழைய தமிழ்த் தட்டச்சு விசைப்பலகையில் பயன்படுத்தலாம். இதற்கு ஏதேனும் ஒருங்குறி எழுத்துருவைக் கணினியில் நிறுவி இருக்க வேண்டும்.

    இ – கலப்பை

         இவ்வகை மென்பொருளைத் pic4தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவி தமிழ் உள்ளீட்டைச் செய்யலாம். இம்மென்பொருளில் தமிழ் 99, தமிழ் ஆங்கில ஒலிபெயர்ப்பு, தட்டச்சுப் பொறி, பாமினி, இன்ஸ்கிரிப்ட் ஆகிய முறைகளில் தமிழ் ஒருங்குறியை உள்ளீடு செயலாம்.

    இணையத்தில் எழுத்துரு மாற்றிகள்

    இயல்பாகவே  நாம் தட்டச்சுசெய்த ஒரு கோப்பினை ஒருங்குறிக்கு மாற்றவேண்டுமானால் என்.ஹெச்.எம். கன்வெர்ட்டர் என்கின்ற எழுத்துரு மாற்றியைக் கொண்டு பாமினி என்ற எழுத்துருக்கு மாற்றியமைக்கலாம். இதுபோன்று நமக்கு வேண்டிய எழுத்துருக்கு மாற்றியமைப்பதற்கு, எழுத்துரு மாற்றி என்கிறோம்.

         இணையதளத்தில் நேரடியாக ஒரு கோப்பினை நகல் எடுத்து இணையப் பக்கத்தில் ஒட்டி நமக்கு வேண்டிய எழுத்துருக்கு மாற்றிவிடலாம். மாற்றியபிறகு மீண்டும் நகல் எடுத்துப் புதிய ஒரு கோப்பினை உருவாக்கிச் சேமித்து வைக்கலாம். இதுபோன்ற பல எழுத்துரு மாற்றிகள் இணையத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.  எழுத்துரு மாற்றிகளில் சில வகைகள் உண்டு. நேரடியாக மாற்றும் முறை, மென்பொருள் வழியாக மாற்றும் முறை, இணையதளத்தின் மூலம் மாற்றும் முறை ஆகிய முறைகளில் மாற்றுவது உண்டு.

    திறன்பேசிக் கருவிகளில் எழுத்துருக்கள்

        பல வகையான அலைபேசிகளைக் கையடக்கக் கருவிகள் என்று குறிப்பிடுவது உண்டு. அவ்வகை அலைபேசிகளின் வகைகள் சில, தொலைபேசி, திறன்பேசி, நுண்ணறிபேசி, மாத்திரை ஆகியன. தொழில்நுட்ப வளர்ச்சியினால் பல்வேறு நிறுவனங்கள் பலவகையான கையடக்கக் கருவிகளைத் தயாரித்து வருகின்றனர். அவ்வகையில் நமக்குத் தேவையான அளவிற்கும் தேவைகளுக்கேற்பப் பயன்படுத்தும் அளவிற்கும் நினைத்ததை நினைக்கும் அளவிற்குப் பூர்த்திசெய்துவிடுகின்றன இவை. கையடக்கக் கருவிகளில் குறுஞ்செய்திகளும், மின்னஞ்சல், இணைய உலாவி, குறிப்புகள் இதுபோன்று பல தகவல்களையும் பதிவு செய்வதற்கும் தமிழ் ஒருங்குறி என்ற எழுத்துருவை உருவாக்கியிருக்கின்றனர். இவ்வகை எழுத்துருக்கள் அனைத்துமே மென்பொருளாக வடிவமைத்துள்ளனர். இவ்வகை மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து நாம் பயன்படுத்தும் கையடக்கக் கருவிகளில் அமைப்பில் சென்று மொழிமாற்றியை மாற்றம்செய்து நாம் பதிவிறக்கம் செய்து நிறுவிய எழுத்துருவைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்திடலாம்.  பதிவு செய்தபிறகு  தட்டச்சு செய்திடலாம்.

         இனி வளர்ந்துவரும் காலங்களில் நாம் பயன்படுத்தும் அத்துணைக் கருவிகளிலும் தமிழ்மொழியை உள்ளீடு செய்யும் அளவிற்கு வல்லுநர்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றனர். அது போல் தமிழ் மென்பொருட்களும் வளர்ச்சியடையச் செய்கின்றனர். தமிழுக்கென்று பல மென்பொருள்கள் உருவாக்கிப் பெருமை சேர்ப்பது நம்மொழிக்கு நாம் செய்யும் சிறப்பாகும்.

     

    Share
  • சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

    -க.பிரகாஷ் 

    விருந்தோம்பல்

         விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகியோருக்கு இடையிலான உறவுமுறை. பொதுவாக விருந்தோம்பல் உயிர்களுக்கு ஆதரவளிக்கும் குணத்தைக் குறிப்பதுண்டு.  ஆங்கிலத்தில் விருந்தோம்பல் என்ற சொல்லுக்கு ‘ஹாஸ்பிட்டாலிட்டி’ என்று குறிப்பிடுகின்றனர். இது இலத்தீன் மொழிச் சொல்லான ஹாஸ்பெஸ் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இச்சொல்லோ ‘அதிகாரம் கொள்ளல்’ எனப் பொருள்படுவதான ‘ஹாஸ்டடிஸ்’ என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ‘ஹோஸ்ட்’ என்பதன் பொருள் சொற்சார்ந்து அப்படியே உரைப்பதாயின் அந்நியர்களின் பெருமகன் எனப் பொருளாகும்.

         ஹோமரின் காலங்களில் கிரேக்க மதக் கடவுளரின் தலைவராக இருந்த ஜீயஸ் என்னும் கடவுளின் பொறுப்பில் விருந்தோம்பல் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஜீயஸ் கடவுளை ஜெனோஸ் ஜீயஸ் (ஜெனோஸ் என்பதன் பொருள் அந்நியன்) என்றும் கூறுவதுண்டு. விருந்தோம்பலே தலையாய பணி எனும் மெய்ம்மையை வலியுறுத்துவதாக இது அமைந்தது. கிரேக்கத்தில் ஒரு வீட்டுக்கு வெளியே சென்று கொண்டிருக்கும் அந்நியர் ஒருவரை அவ்வீட்டில் வசிப்பவர்கள் இல்லத்தினுள் வருமாறு அழைப்பு விடுப்பர். வீட்டின் தலைவரான புரவலர் அந்த அந்நியரின் பாதங்களைக் கழுவி உணவு மற்றும் திராட்சை ரசத்தை அளித்து அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே அவரது பெயரைக் கூடக் கேட்டறிந்து கொள்ளும் வழக்கம் உண்டு.

    பண்டைய கால விருந்தோம்பல்

         பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களுக்கு விருந்தேம்பல் என்பது ஒரு தெய்வீக நிலையாக இருந்தது. தனது விருந்தாளிகளின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டனவா என்று உறுதிசெய்து கொள்வது ஒரு புரவலனின் கட்டுப்பாடாக இருந்தது. பண்டைய கிரேக்கச் சொல்லான எக்ஸெனியா என்பதன் பொருள் விருந்தாளி – நட்புச் சடங்கு உறவைச் சுட்டுவதாகும்.

         பண்டைய உலகில் விருந்தோம்பல் எவ்வாறு மிகப்பெரும் இடம் பெற்றிருந்தது என்பதை பாசில் மற்றும் ஃபிலோமின் கதை விவரிக்கிறது. இக்கதையில் பழங்காலத்திய கடவுளரான ஜீயஸ் மற்றும் ஹெர்ரமஸ் ஆகியோர் ஃபிர்ஜியா நகரில் எளிய உழவர் போல வேடம் புனைந்து வருகின்றனர். இரவுக்கான உணவும் உறைவிடமும் தேடி அவர்கள் அலைகையில் பெரும்பாலும் மூடிய கதவுகளையே சந்திக்கின்றனர். இறுதியாக பாசிஸ் மற்றும் ஃபிலோமினின் இல்லத்தை அடைகின்றனர். தாங்கள் ஏழ்மையில் வாடியபோதும் இத்தம்பதி இருக்கும் மிகக் குறைவான உணவை விருந்தினருக்கு அளிக்கின்றனர். தங்களது விருந்தினர் உண்மையில் கடவுள் என அறிகையில் தங்களது வீட்டைக் காக்கும் ஒரே வாத்தையும் வெட்டிப் படைப்பதற்கு முன்வருகின்றனர். இதற்கு வெகுமதியாக கடவுளர் அவர்களுக்கு வரம் ஒன்றை கொடுக்கின்றனர்.

    செல்ட்டிக் நாகரிகங்களில் விருந்தோம்பல்

         விருந்தோம்பல் என்னும் பண்பு, குறிப்பாக, பாதுகாப்பு அளிப்பது ஆகும்.  செல்ட்டிக் நாகரிகத்தைச் சார்ந்த சமூகங்களில் மிகுந்த அளவில் மதிப்புற்றிருந்தது. அடைக்கலம் கேட்டு வரும் ஒருவருக்குப் புரவலரானவர், உண்டியும் உறைவிடமும் மட்டும் அன்றித் தமது கவனிப்பில் இருக்கையில் அவருக்குத் தீங்கு ஏதும் நேராத வண்ணம் பாதுகாக்கவும் வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு யதார்த்தமான வாழ்க்கையில் உதாரணம் ஒன்றை வரலாறு அளிக்கிறது.

    கி.பி 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்தது ஸ்காட்டிஷ் மெக்கிராகோர் எனும் குலம். இலாமோண்ட் என்னும் குலத் தலைவர் கிளைன்ஸ்டிரேவில் வாழும் மெக்கிராகோர் தலைவரின் இல்லத்தை அடைந்து தாம் எதிரிகளிடம் இருந்து தப்பித்து வருவதாகக் கூறி அடைக்கலம் கோருகிறார். தமது சகோதரத் தலைவரை கேள்விகள் ஏதும் கேட்காமலேயே மெக்கிரோகர் வரவேற்கிறார். பின்னர், இரவுப் பொழுதில் இலாமோண்ட் தலைவரைத் தேடி வரும் மெக்கிரகோர் குல மக்கள் மெக்கிரகோரிடம் உண்மையில் அவரது மகனையே இலாமோண்ட் தலைவர் கொன்றுவிட்டதாக குறிப்பிடுகின்றனர். விருந்தோம்பலின் புனிதக் கடமையின் பாற்பட்டு மெக்கிரோகர் தலைவர் இலாமோண்ட்டைத் தனது குல மக்களிடம் ஒப்படைக்க மறுப்பது மட்டும் அல்லாது மறுநாள் காலை அவரை அவரது பூர்வீக இடத்திற்குத் தாமே வழித்துணையாக உடன்சென்று அனுப்பிவைக்கின்றார்.

    இந்தியாவில் விருந்தோம்பல்

         உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. தொன்மையான கலாசாரங்களைப் போலவே விருந்தோம்பல் உள்ளிட்ட பல அருமையான பண்புகளை இந்தியக் கலாசாரமும் கொண்டுள்ளது. மூடன் ஒருவன் அழையாத விருந்தாளியுடன் தனது சிறு உண்டியை மறுபேச்சின்றிப் பகிர்ந்து கொள்கையில் தன்னிடம் வந்த விருந்தாளி மாறுவேடம் பூண்ட இறைவன் என்பதைக் கண்டு கொள்கிறான். அவனது தாராள மனத்திற்காகக் கடவுள் அவனுக்கு மிகுந்த செல்வமளிக்கிறார்.

         பசியுடன் இருக்கும் அனைவரும் உண்பதற்காகப் பெண் ஒருத்தி தன்னிடம் இருக்கும் கிச்சடி அனைத்தையும் சமைத்து அளிக்கிறாள். ஒரு நாள் அவளிடம் இருக்கும் உணவுப் பண்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடவே இறுதியாகப் பசியுடன் வரும் ஒருவனுக்குத் தன் உணவையே அவள் அளிக்கையில் இறைவனிடம் இருந்து என்றும் குன்றாது நிறைந்தே இருக்கும் கிச்சிடி கொண்ட பாத்திரம் ஒன்றைப் பெறுகிறாள். குழந்தைகளாகத் தாம் இருந்த காலம்தொட்டே இத்தகைய கதைகளைக் கேட்டு வளரும் பெரும்பாலான இந்தியர்கள், விருந்தாளியே ஆண்டவன் என்பதை உணர்ந்து, சமூக நிகழ்வுகளிலும் விருந்தாளிகளின்பால் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளும் இந்த அணுகு முறையை உருவாக்கினர்.

    எனவே தமிழில் படைக்கப்பட்ட தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், நீதி நூல்கள், சிலப்பதிகாரம் போன்றவற்றிலும் விருந்தோம்பல் பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

    “…………………………………………………………………………………………….
         உண்டாயின் பதம் கொடுத்து
         இல்லாயின் உடன் உண்ணும்
         இல்லோர் ஒக்கல் தலைவன்
        அண்ணல் எம்கோமான், வைந் நுதி வேலே”                (புறம் – 95)

         செல்வமுடையராய் இருக்கும்போது உணவு கொடுத்தும், இல்லாதபோது இருப்பதைப் பகிர்ந்து உடன் உண்ணும் வறியோர் சுற்றத்திற்குத் தலைவனும், தலைமை சான்றவனுமாகிய வேந்தன், அவனுடைய கூரிய துனியையுடைய வேல் முதலான அவைதாம் பகைவரைக் குத்துதலால் பிடியும் நுனியும் சிதைந்து குறுகிய பணிக் களரியில் கிடப்பனவாயின.

         “ஒரு தலைப் பதலை தூங்க ஒரு தலைத்
           தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
           கவிழ்ந்த மண்டை மலர்க்கு நர்யார் எனச்
          சுரன் முதல் இருந்த சில்வளை விறலி”                                     – (புறம் – 103)

         தோள் அமையினது ஒருபுறத்தே பதலை என்னும் கருவி தொங்குகின்றது. மற்றொரு புறத்தே துளையுடைய சிறிய முழா தொங்குகின்றது. இவற்றைச் சுமந்தவாறே எமக்கு உணவு இடுவார் யாருமிலராயினர். எமக்கு உணவு இட்டு கவிழ்ந்து கிடைக்கும் உண்கலத்தை மலர்த்த வல்லார் யாரெனச் சொல்லிச் சுரத்திடையே வந்திருந்து வருந்தும் விறலியே… நீ அவனிடத்துச் செல்வையாயின், பல வேற்படையையுடைய அதியாமான் ஒருபொழுதும் ஓயாமல் உண்ணவும் தின்னவும் படுதலால் ஈரம் காயாத உண்கலத்தில் மெழுகான் இயன்ற மெல்லிய அடைபோலக் கொழுத்த நிணம் மிக அளித்தல் வல்லன்.

         “………………………………………………………………………………………………
         பிறர் அஞ்சுவது அஞ்சி
         புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழிஎனின்
         உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
         அன்ன மாட்சி அனையர் ஆகி”  ( புறம் – 182)

         தேவர்க்குரிய அமிழ்தம் தெய்வத்தாலோ தவத்தாலோ தமக்க வந்து கூடுவதாயினும் அதனை இனிதென்று கொண்டு தனித்து உண்டலும் இலர். யாரோடும் வெறுப்பிலர் பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி, அது தீர்த்தற் பொருட்டுச் சோம்பியிருத்தலும் இலர். புகழ் கிடைக்குமாயின் தம் உயிரையும் கொடுப்பர், பழியெனின் அதனால் உலகம் முழுதும் பெறினும் கொள்ளார்; மனக்கவலை இல்லார். அத்தகைய மாட்சிமைப்பட்ட தன்மையராய், தமக்கென முயலாது பிறர்க்கென முயலும் சான்றோரால் இவ்வுலகம் இருக்கின்றது.

         தனித்துத் தாம் மட்டும் உண்ணுவதை விரும்பார்; இதனை இனிது எனத் தமியர் உண்டலும் இலர் என்றார். யாவரிடத்தும் அன்புடையர் என்பதை உணர்த்த முனிவிலர் என்றும் அஞ்சத்தகும் துன்பத்திற்கு அஞ்சி, அதனால் செயல்படாது சோம்பியிரார் என்பதை ‘துஞ்சலும் இலர்’ என்று குறித்தார்.

         “உண்க என உணரா உயவிற்று ஆயினும்     ………………………………………………………………………………………………………………………..
         வரகும் தினையும் உற்றவை எல்லாம்
    இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென
        …………………………………… கூட்டு” ( புறம் – 333)

         தம்மிடம் உள்ள வரகும் தினையும் இரவலர்க்கு வழங்கப்பட்டுவிட்டன. குறி எதிர்ப்பாகத் தந்த பொருள்களும் கிடைக்கப் பெறவில்லை. வீரனின் மனைவி, விதைப்பதற்காக வைத்திருந்த தினையைக் குத்தி உணவு சமைத்து வழங்கினாள். அவ்வுணவே போர் மேற்செல்லும் வீரனின் உணவுமாயின. ஒரு வீரனின் மனைவியின் விருந்தோம்பும் இயல்பு இப்பாடலால் விளக்கப்பட்டுள்ளது. பகைவரொடு போர் செய்வதற்கு அரசர்கள் வழங்கும் பொருளை அவன் பாணர் முதலியோர்க்கும் பரிசாக வழங்குவான்.

         “எழுதி யன்ன திண்நிலைக் கதவம்
         கழுதுவழங்கு அரைநாள் காவல் மடிந்தென     ……………………………………………………………………………………………………..
         இம்மை உலகத்து இல் எனப் பல்நாள்
         பொம்பல் ஓதி நீவிய காதலொடு”  (அகம் – 311)

              மழை பெய்யாது பொய்த்தமையால் திசையெல்லாம் வெப்பம் மிகுந்தது. பாலைவழி வருவோரைப் பேணிக் காக்கும் பண்பினைப் பெற்ற வெற்றி ஆயர்கள் இளைய எருதுகளின் எழுத்தில் கட்டிய மூங்கில்குழாயுள் அடைத்து வைத்த சுவைமிக்க புளிச் சோற்றினை தேக்கின் இலையில் இட்டு அப்புதியோரின் பசி நீங்கக் கொடுத்தார்.

         அத்தகைய புல்லி என்பானது நல்ல நாட்டின் அப்பாலுள்ள கடத்தற்கரிய பாலை வழியைக் கடந்து நம் தலைவர் சென்றிருந்தாலும் காலந் தாழ்த்தாது நின்னை நினைந்து விரைந்து வருவார்.

         “ அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்              முல்லை சான்ற கற்பின்
          மெல்இயற் குறுமகள் உறைவின் ஊரே”

                                           ( நற்றி – 142)

         இரவு நேரத்தே விருந்து வரினும் உவப்பவள் என் தலைவி. அவள் என்சொற் கேட்டு இல்லிருந்து நல்லறம் செய்யும் கற்பினையும், மென்மையான இயல்பையும் இளமையையும் உடையவள் ஆவாள். அத்தகைய காதலி தங்கியிருப்பதும் பொய்யாத வருவாயுடையதுமான ஊர் காட்டகத்தே அமைந்தது.

    ***** 

    குறிப்புகள்: 

    சங்க இலக்கியம்
    புறநானூறு – 1, 2
    அகநானூறு – 1, 2
    குறுந்தொகை – 1, 2
    நற்றிணை – 1 – நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்
    41 – பி -சிட்கோ, இண்டஸ்டிரியல் எஸ்டேட்
    அம்பத்தூர், சென்னை – 098

    *****

    க.பிரகாஷ்
    தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    முனைவர் பட்ட ஆய்வாளர் ( பகுதி நேரம்)
    தமிழ்த்துறை
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

    Share
  • நினைவாற்றலும், நினைவகமும்

    -க.பிரகாஷ்

    ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வசப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்ததால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளைச் சேமித்துக் கொள்ளலாம். என விஞ்ஞான வளர்ச்சி குறிப்பிடுகின்றது. ஆனால் அத்தனையும் நினைவில் நிறுத்துவது கடினம் என்கின்றனர்.

    நினைவு

        
    நமது நினைவாற்றலுக்கு முதன்மையான காரணமாக இருப்பது மூளையாகும். மூளையில் பெருமூளை, சிறுமூளை, முகுளம் போன்ற பகுதிகள் இருந்தாலும், பெருமூளையின் பெரும்பங்கே நினைவாற்றலின் சேமிப்பு வங்கியாக விளங்குகிறது.

         brain-pictureநினைவாற்றல் என்பது ஒருவர் தன் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் வாயிலாகப் பார்த்து, படித்து, கேட்டு, நுகர்ந்து, உணர்ந்து, சுவைத்து, அறிந்து அனுபவங்கள் பலவற்றையும் மனத்தில் பதியவைத்து வேண்டியபோது அதை நினைவில் கொண்டுவரும் ஆற்றல் ஆகும். அனுபவங்கள் மூளையில் இலேசான பதிவை உண்டாக்குவதும், ஆழமான பதிவை உண்டாக்குவதும் அவரவர்கள் மேற்கொள்ளும் முயற்சி, காட்டும் ஆர்வம், மனநிலை, சுற்றுச்சூழல் போன்றவற்றைப் பொறுத்து இருக்கிறது. நினைவாற்றலுக்கு அடிப்படைகள் கற்றல், நினைவிலகுதல், மீட்டழைத்தல் மற்றும் மீட்டறிதல் என்ற நான்கு நிலைகளாகும்.

    மீட்டழைத்தல் (Recall )

         கற்றறிந்த ஒன்றை நினைவில் நிறுத்திவைக்க, மூளையில் பதிந்துள்ளதை அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதுதான் மீட்டழைத்தலாகும். பல மணிநேரம் படித்ததைச் சில நிமிடங்களில் மீட்டழைத்து மனக்கண்முன் காணமுடியும்.

    மீட்டறிதல் (Recognition)

         மூளையில் பதிந்திருப்பதை மீட்டழைத்து நன்கு யூகித்து நேற்றுப் பார்த்தது இதுதான், முந்தியநாள் வந்தவர் இவர்தான் என்று இப்படித் தீர்மானமாக உணர்வதைத்தான் மீட்டறிதல் என்கிறோம்.

    நினைவாற்றலின் வகை
    குறுகிய கால நினைவாற்றல்
    நீண்டகால நினைவாற்றல்

    குறுகிய கால நினைவாற்றல்

         நம் மூளையில் அத்துணைத் தகவல்களையும் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்தத் தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்தும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இவ்வகை நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல் என்கின்றனர்.

    நீண்ட கால நினைவாற்றல்

         நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையானவை, நம்முடைய மனத்தை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சில நேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.

         மூளை பல செய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன் புதிய தகவல்களையும் சேர்த்துப் பாதுகாக்கிறது. பல ஆண்டுகள் அந்தத் தகவல்கள் வெளிக் கொணரப்படாமல் போனால் கோடிக்கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன.

         குழந்தை பிறந்து மூன்று வயது வரையில் தான் பார்ப்பதும், கேட்பதும் அனைத்தையும் புகைப்படங்களாக தனித்தனியே மூளையில் பதிவு செய்துகொள்கிறது. அவற்றின் முழுப் பொருளும் குழந்தைகளுக்குப் புரிவதில்லை மூன்று வயதிற்கு மேல்தான் நீண்டகால நினைவுகள் படிப்படியாக உருவாகின்றன.

         ஒரு மனிதனின் மூளையில் பதிவு செய்யப்படும் இவ்வகை நினைவுகளை நினைவாற்றல் என்று குறிப்பிடுகின்றேன்.

    நினைவகம்

     மனித மூளையைப் போலவே பல தகவல்களைச் சேமிப்பதற்குக் கணினியில் நினைவகம் என்ற ஒன்று தேவையாகிறது. நினைவகம் பல தகவல்களைச் சேமித்து வைக்கப் பயன்படுவது ஆகும்.

         சார்பிலாத் தெரிவு நினைவகம் கணினி நினைவகcomp-memory வகையாகும். அது ஒருங்கிணைச் சுற்று ஒன்றின் வடிவத்தில் அமைவதுடன், சேமிக்கப்படும் தரவுகள் எந்த ஒழுங்கிலும் பெறதக்க வகைகளில் அமையும். சார்பிலாத் தெரிவு என்பது தரவுகள் சேமிக்கப்பட்ட ஒழுங்கு தவிர்த்த வேறு சார்பிலா ஒழுங்குகளிலும் தரவுகளைத் தெரியப்படுத்தலாம்.

         சார்பிலாத் தெரிவு நினைவகம் காந்த நாடா, காந்த வட்டு மற்றும் ஒளியியல் வட்டு போன்ற நினைவக முறைகளில் இருந்து வேறுபடுகிறது. இதர முறைகளில் வாசிப்பு கருவிகளின் மூலமே தரவுகள் வாசிக்கப்படும்.  இதனால் இவற்றில் வாசிப்பு நோக்கத்தைவிட தரவுள்ள இடத்தை அடைவு நேரமே அதிகமாகும்.

         RAM  என்னும் சொற்பதம் பெரும்பாலும் தற்காலிக நினைவகத்துடனேயே தொடர்புபடுத்தப்படுகிறது. இவற்றில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் சேமிக்கப்பட்ட தரவுகள் இழக்கப்படுவிடும். வேறு வகையான நினைவகங்களும் RAM ஆகும். நிரந்திர நினைவகம் ROM போன்றனவும் சார்பிலாத் தெரிவு நினைவகம் என்று வகைப்படுத்தப்படும். சார்பிலாத் தெரிவு என்பது வாசிப்பு முறை மட்டுமே.

    சார்பிலாத் தெரிவு வகை நினைவகம்

    சார்பிலாத் தெரிவு வகை நினைவகம் 1951 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட (Magnetic Core Memory ) காந்த உள்ளக நினைவகம் ஆகும். இதற்குப்பின் 1960ஆம் ஆண்டு மற்றும், 1970ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைச் சுற்று நினைவகம் உருவாக்கப்பட்ட அனைத்து கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    நினைவகம் இரண்டு வகை

    நிலையான நேரடி அணுகல் நினைவகம்

    மாறும் நேரடி அணுகல் நினைவகம்

    நிலையான அணுகல்

         நிலையான நேரடி அணுகல் நினைவகத்தில் ஒருபிட் தகவல் ஆனது ஆறு டிரான்சிஸ்டர்களைப் பயன்படுத்தி சேமிக்கப்படுகிறது. இந்த வகை நினைவகங்களைத் தயாரிக்க அதிக பொருட்செலவு ஆகும். ஆனால் இவை குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி அதிவேகமாக செயல்படுகின்றன.

    மாறும் அணுகல்

         மாறும் நேரடி அணுகல் நினைவகத்தில் ஒருபிட் தகவல் ஆனது டிரான்சிஸ்டர் மற்றும் மின்தேக்கிகளைத் தயாரிக்கக் குறைந்த பொருட் செலவு ஆகும். தற்போதைய நவீனக் கணினிகளில் அதிகமாக இவை பயன்படுத்தப்படுகின்றன.

         இவ்விரு நினைவகங்களிலும் ஆற்றல் இல்லாதபோது தகவல்களைச் சேமித்துவைக்க முடியாது. ஆற்றல் இல்லாதபோது மீட்டமைக்கப்படும் மாறாத  ( ROM ) தகவல்களை நிரந்தரமாகப் பதிவு செய்கிறது.

    கணினியின் நினைவகம்
    தற்காலிக  நினைவகம்
    DRAM
    SDRAM

    Upcoming

    Z-RAM
    TTRAM

    Historical

    Williams’s tube
    Delay sine Memory

    நிரந்தர நினைவகம்

    ROM
    PROM
    EAROM
    EPROM
    EEPROM

    Flash Memory

    Upcoming

    FE RAM
    MRAM
    CBRAM
    PRAM
    RRAM

    Racetrack Memory

    NRAM

    Historical

    Drum Memory
    Magnetic Core Memory
    Plated wire Memory
    Bubble Memory
    Twist or Memory

    கணினி நினைவகம்

    Computer Memory:

    Primary Memory
    Secondary Memory

    பிரதான நினைவகம்           துணை நினைவகம்

    Bipolar                                             Magnetic                                       Bubble                                            Magnetic tapes
    Mos                                                 Floppy Disk
     RAM                                              Optical
    ROM                                                DVD
    PROM – EPROM – EAPROM      CD

    நினைவகத்தின் கணக்கீடுகள்

    8Bit                       –              1Byte

    1024Byte             –              1KB – Kilo Byte

    1024KB                –              1MB – Mega Byte

    1024MB               –              1GB – Giga Byte

    1024GB                –              1TB Tera Byte

    1024TB                –              1PB Peta Byte

    1024PB                –              1EB Exa Byte

    1024EB                –              1ZB Zetta Byte

    Floppy                  –              1.44 MB

    CD                         –                700 MB

    DVD                      –                4.0 , 8.5 GB

    ஒரு மனிதன் தன் மூளையில் பல்லாயிரம் கணக்கான பதிவுகளை சேமித்து வைத்துக் கொண்டு தனக்குத் தேவையான நேரங்களில் நினைவுப்படுத்தி அதனை பயன்படுத்திக்கொள்கிறான். ஒரு சில காலங்களில் பதிவான தகவல்களை இழக்க நேரிடலாம். அதிர்ச்சி ஏற்பட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ இந்த வகைச் சிக்கல் ஏற்படலாம்.

         மனித மூளையிலுள்ள நினைவகம் போலவே நினைவகங்கள் கணினி, செல்பேசி, கையடக்கக் கருவி எனப் பல மின்னணுக் கருவிகளில் தரவுகளைச் சேமிக்கப் பயன்படுகின்றன. இந்தச் செயற்கை நினைவகத்திற்கு வரையறை கொண்டு சேமிக்கவேண்டிய சூழல் இருக்கின்றது. ஆனால் மனிதனின் நினைவாற்றல் அவ்வாறு இல்லை. அவனுக்குத் தேவையான நேரங்களில் எத்தகைய தகவல்களையும் சேமிக்கும் ஆற்றல் பெற்றவன். ஆனால் நினைவகத்திற்கு 1GB. 2GB, 4GB, 8GB, 16GB. 32GB, 64GB என அளவுகள் உள்ளதால் இவ்வகை அளவுக்கு ஏற்ற தகவல்களைப் பதிவு செய்யமுடியும்.

         மனித மூளை ஒரு சில விபரீதங்களால் நினைவாற்றலை இழப்பது போல் மின்னணுக் கருவிகளிலுள்ள நினைவகங்களும் நினைவை இழக்கின்றன. ஆம், வைரஸ் என்கின்ற ஒன்று தகவல்களை மறைக்கவும் அழிக்கவும் செய்துவிடுகிறது.

    குறிப்புகள்:

    இணையம்
    க.பிரகாஷ் – இணையத்தில் தமிழ் மின்னூல்கள் –     ஆய்வு

    *****

    க.பிரகாஷ்
    தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

    Share
  • வள்ளுவத்தில் சமுதாயம்

    -க.பிரகாஷ்  

         tiruvalluvarவள்ளுவர்காலச் சமுதாயத்தின் தன்மையை அவர்தம் நூலிலிருந்தே உய்த்துணரலாம். உழவுத் தொழிலைத் தலைமையாகக் கொண்ட மருதநிலச் சமுதாயத்தில் நாகரிகம் நிலைகொண்டு கோனாட்சி வேர்விட்டிருந்த சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருந்த சமுதாயத்தில் தமிழர்கள் வாழ்ந்த நிலையினைக் குறளில் காண்கிறோம். வள்ளுவர் காலத்தில் பொருட் செல்வத்தால் பெருமை எய்திய சிலர் இருந்தனர். அன்றாடம் குடல் கழுவுவதற்கு வழிதெரியாத, ஆலாய்ப் பறந்த ஏழைகளாகப் பலர் இருந்தனர். “கரவாது உவந்து ஈயும்” என்ற குறளில் குறிப்பிடுவதுபோலச் செல்வர் சிலரைக் கண்டிருக்கிறார். “ஈட்டம் இவறி இசை வேண்டா” என்ற குறளில் பூமிக்குப் பாரமாய் வந்த பிறவிகளையும் அறிந்துள்ளார். தொழில் பிரிவினை தலைமுறை தலைமுறையாகத் தொடர்வதாலும் குலங்களை நாகரிகச் சமுதாயத்தின் அங்கங்களாக அமைந்த ஏற்பாட்டின் மூலம் சாதி முறை இன்றிய சமுதாயத்தில் வள்ளுவர் வாழ்ந்தார். முல்லை நிலத்திலேயே ஆயருக்கு அடங்கிய பாணன் துடியன், பறையன், கடம்பன் என்றும் குடிகள் வாழ்ந்தனர் என்பது மாங்குடிகிழார் பாடல் ( புறம் 335) விளங்கும்.  மருதநிலச் சமுதாயத்தில் இந்தக் குடிவகைகள் பல்கிப் பெருகியது இயல்பே.

         கொடுங்கோல் மன்னர்களும் அறம்பேணாச் செல்வர்களும் போலித் துறவிகளும் இன்னோரன்ன பிறரும் சமுதாயத்தின் சத்ருக்கள் என்பதை உணர்த்தும். அந்தத் தீயோருக்கு இடமில்லாததும் மாநிலம் எங்கும் மக்கட் பண்பு மலர்ந்து மணம் வீசுவதுமான புதுமைச் சமுதாயத்தை தோற்றுவிக்கும் பேரார்வத்தால் உந்தப்பட்டே வள்ளுவர் தம் நூலைப் படைத்தார்.

         அற உணர்வில் எழும் உலகப் பொதுமைக்கு ஊறுநேராத வண்ணம் அவர் இமைகொட்டா விழிப்போடு தற்காத்துக் கொள்ளும் தகைமை போற்றுதற்கு உரியது. தமிழை வாழ்வித்த மூவரில் ஒருவரான வள்ளுவர் தமிழையோ தமிழ் நாட்டையோ ஓரிடத்திலேனும் குறித்தாரில்லை. “அருள் தமிழ் ஆற்றல்”, “தென்தமிழ் ஆற்றல்”, என்று சிலப்பதிகாரத்தில் – இளங்கோவடிகள் கவிக்கூற்றிலேயே ஆற்றுவார்.  வள்ளுவர் படைவீரத்தைப் பற்றிப் பேசும் போதோ நாட்டு வளத்தைப் பற்றிப் பேசும்போதோ தமிழை உவமையாகக் குறிப்பிட்டிருக்கலாம். காதலைப் பற்றிப் பேசும்போது மலரின் மென்மையை உவமையாகக் கொள்வதைப்போல் தமிழின் இனிமையைச் சுட்டியிருக்கலாம். ஆனால் சாதி, சமயம், நாடு, மொழி முதலிய எல்லைகள் அனைத்தையும் கடந்த மனிதகுல நல நாட்டம் மணிகளின் ஊடே செல்லும் பொன்னூல்போல் திருக்குறள் பாக்கள் அனைத்தையும் ஊடுருவி நிற்கிறது என்று பாரதி கூறுவார்.

        “வரும் குணத்தாலும் செயலாலும் கீழ்மை இல்லா
         தார் கீழ்மக்கள் ஆகார்”

         யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை – பாரதி தமிழ்.

         “கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும்
         இரவாமை கோடி யுறும்”

         உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

         “ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
         தோற்றம் நிலக்குப் பொறை”

         சேர்த்து வைப்பதையே விரும்பும் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்.

         கராவது        –    (இருப்பதை) ஒளிக்காது
         கண்      –    (சமுதாயத்தின்) கண் போன்றவர்
         ஈட்டம்         –    பொருளைத் திரட்டுவதை
         இவறி    –    பேராசைகொண்டு
         இசை          –    புகழ்

    “மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்
    கீழ்இருந்தும் 
    கீழ்அல்லார் கீழ் அல்லவர்” 

         மேல் நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.

         கலைஞர்களும் அறிஞர்களும் சமுதாயத்தில் பிறந்து வளர்கிறார்கள். அவர்கள் சமுதாய வாழ்வின் நினைவுகளையோ அனுபவங்களையோ புறக்கணித்துவிட்டு வெறுமையில் கற்பனை செய்யவோ, சிந்திக்கவோ முடியாது. ஒருவருடைய சிந்தனை, உணர்ச்சி, கற்பனை எல்லாம் அவர் சமூகவாழ்வில் பெறும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. சமுதாயமோ ஒரே நிலையில் இருப்பதில்லை. அது மாறுகிறது; வளர்கிறது. காலந்தோறும் மாறுதலும் சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கில் கருத்துக்கள் மாறுதல் அடைவதும் பண்பாடு செம்மையுறுவதும் வரலாற்று ஆசிரியர் ஒப்பும் உண்மைகளாகும். நாம் இதை ஓர் உதாரணத்தால் உணர்ந்து கொள்ளலாம். சுதந்திரம் அல்லது உரிமை என்று கருத்து காலப்போக்கில் செழுமையடைந்து வருவதை நாம் நன்கறிவோம். சட்டமன்றக் குடியாட்சி முறையே உரிமைக்கு உத்தரவாதம் என்ற கருத்து நூற்றாண்டுகட்கு முன்னர் நிலைப்பெற்று விளங்கியது.

    நெடிது நோக்கும் நோன்மை படைத்த கார்ல்மார்க்ஸ் போன்ற அறிஞர் சிலரே அக்கருத்தின் தவற்றை அக்காலத்தில் உணர்த்திருந்தனர். ஆனால் சோஷலிஸச் சமுதாயத்தில் தான் சட்டமன்றக் குடியாட்சி முறையும் உரிமைக்கு உறுதி தேடுமென்ற சிந்தனை இக்கால மக்களில் பெரும்பாலோரை ஆட்டிப்படைத்து வருகிறது. எனவே திருக்குறளை வாழ்வியல் மட்டும் அல்லாமல் அரசியல் போன்ற பல்நோக்க முறையில் வகுத்துள்ளார் வள்ளுவர்.

     ***

    பார்வை : 

    திருக்குறள் ஒரு சமுதாயப் பார்வை –
    டாக்டர் .எஸ் இராமகிருஷ்ணன்
    திருக்குறள்     – டாக்டர் மு. வரதராசனார்

     *** 

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

     

    Share
  • அற இலக்கியங்களில் கல்விச் சிந்தனை

    .பிரகாஷ், தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர், தமிழ்த்துறை

    பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 46

     

    அறம்

    அறு’ என்ற வினைச் சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். அச்சொல்லுக்கு அறுத்துச்சொல், வழியை உண்டாக்கு, எருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்றும் குறிப்பிடுகின்றனர். பின்னர் மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். பிறவிதோறும் மனிதனைப் பற்றி கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம் என்று ஆன்மீகம் விளக்குவதுண்டு.

    நீதி இலக்கியம்

    நீதி இலக்கியம் அல்லது சங்க மருவிய கால இலக்கியம் என்பது சங்க காலத்திற்கு பின்னர் தமிழில் தோன்றிய இலக்கியங்களைக் குறிக்கும். கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதி நூல்கள் பல்கிப் பெருகின. சங்க காலத்திற்குப் பின்னர் தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி ஏற்பட்டு தமிழில் புது இலக்கியங்கள் தோன்றாமை நிலவியாதாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தால் களப்பிரர் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் சங்க காலத்தில் போற்றப்பட்ட காதலும் வீரமும் பின் தள்ளப்பட்டு அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.

         நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

          பால்கடுங் கோவை பழமொழி மாமூலம்

          ………………………………………………………………………………………………………………………..

          கைந்நிலைய வாய் கீழ்க் கணக்கு

    நீதி இலக்கியங்களில் குறிப்பிடும் இன்னாநாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம், ஆசாரகோவை, நான்மணிக்கடிகை, முதுமொழிக் காஞ்சி, பழமொழி, நாலடியார், திருக்குறள் ஆகிய பதினொரு நூல்களிலும் கல்வி பற்றிய செய்திகள் மிகுதியாக காணப்படுகின்றன.

    கல்வி பொருள்

    மனிதன் தம்முடைய வாழ்க்கை முறையையும், பண்பாட்டையும் மரபுகளையும், அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லுகிறது. உலகில் வாழக்கூடிய மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ அடிப்படைக் காரணியாக விளங்குவது கல்வி. கல்வி என்னும் சொல்லுக்கு பொருள் கல்லுதல் என்பதனை தோண்டுதல் கல் என்னும் அடிச்சொல்லிருந்து கலப்பை என்ற பெயரும், கல்வி என்ற பெயரும் வந்தன. நிலத்தைக் கிளறுவதற்குக் கலப்பை பயன்படுவது போல கல்வி கல்லுதல் என்பது மனத்தைக் கிளறித் திருத்திப் பயன்படுத்துவதாகும் என்கிறார்.

    கற்கும் கல்விக்கு பல பொருள் : அறிவு, கற்றல், நூல், வித்தை, பயிற்சி, உறுதி, ஊதியம், ஏதி, காரணம், கலை, கேள்வி, கால்பு, தேற்சி, விஞ்சை என்று கௌரா தமிழ் அகராதி விளக்கம் அளிக்கிறது.

    நாலடியார் கூறும் கல்விச் சிந்தனை

         குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

          ………………………………………………………………………………………………………………………………

          ……………………………………………………………….. டு நிலைமையால்

          கல்வி அழகே அழகு.”

    நல்ல மணம் வீசும் கூந்தலுடைய அழகும், மேனி ஜொலி ஜொலிக்க உடுத்திய ஆடை அழகும், அள்ளிப்பூ அழகு செய்த ஒப்பனையுடைய மஞ்சள் நிறத்தழகும் ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன ஆகாது.

    உள்ளத்தால் நல்லவர்களாய் வாழும் வாழ்க்கை வழி நெறி தவறாத வழிச் செலுத்தும் கல்வியே ஒருவருக்குச் சிறந்த அழகு சேர்க்கும் அணிகலனாகும்.

         கல்வி கரையில கற்பவர் நாள்சில

          மெல்ல நினைக்கின் பிணிபலதெள்ளிதன்

          …………………………………………………………………………………………………………………………..

          பாலுண் குருசின் தெரிந்து” – (நால 1)

    கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகு அளவு, கல்விக்குக் கரையும் இல்லை, கற்றுத் தெரிந்து கொள்வதற்கு ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள் கிடைத்தாலும் நிறைவேறாது. அவ்வளவு நிறைந்து இந்த மிகக் குறைந்த வாழ்நாளில் இடையிடையே மெல்ல மெல்ல வந்து தாக்கும் நோய்கள் ஒருபுறம், மீதம் இருக்கும் நாட்களில் வாழ்க்கையைப் பயனுடையதாகத் தேர்ந்து தெளிந்த நல்ல நூல்களைக் கற்றிட வேண்டும்.

    பாலும், நீரும் கலந்திருக்கும் பாத்திரத்தில் பாலை மட்டும் பருகும் அன்னப் பறவை போல கற்றுத் தேர்ந்து கொள்ள வேண்டும்.

         “………………………….. யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

          நல்லறிவு நாளுந் தலைப்படுவர் …………………………………………….

          ……………………………………………………………………….. சேர்தலாற் புத்தோடு

    படிப்புக்கு வசதியில்லாததால் படிப்பில்லாதவர்கள் என்றாலும் படித்தறிந்த பெரியோர்களுடன் சேர்ந்து பழகினால் அவர்களுக்கு அந்தப் பெரியோர் சேர்க்கையால் கொஞ்சம் கொஞ்சம் நல்ல அறிவு கிடைக்கப் பெறுவார்கள்.

    கடிகையில் கல்வி

         கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்

          ………………………………………………………………………………………………………

          ……………. உயர்ந்த எலகம் புகும்”.

    ஒருவன் கற்க வேண்டிய நூல்களைக் கசடறக் கற்றால் அவன் அறியாமை குறையும், அறியாமை குறைந்தால் புல்லறிவு நீங்கி இவ்வுலக இயற்கையை அறிவான் அவ்வாறு அறிந்தால் மெய்ந்நெறியாகிய ஞானநெறியில் செல்வான் அவ்வாறு செல்லின் இவ்வுலகில் பெற வேண்டிய புகழை நிலைநிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான்.

         “ ……………………………………………………………………………. ஒருவற்குக்

          கற்றலின் வாய்த்த பிற இல்லை என்றுள்ளும்

          ………………………………………………………………………………………………………………….

          …………………………………………………………………………… இல்”.      – 32

    செல்வத்தைப் போல ஒருவறுக்கு வலிமையுடையது வேறில்லை. கல்வியைப் போலத் துணையாவது பிறிதில்லை, வறுமையைப் போலத் துன்பம் தரக்கூடியது வேறு எதுவுமில்லை கொடுப்பதைப் போலத் திட்பமானது வேறு இல்லை.

         “………………………………………………………… காதலர் கண்ணோடார்

          …………………………………………………………………………………………………………………………………

          உற்ற துரையாதார் உள்கரந்து பாம்புரையும்

          ……………………………………… புல்லறிவினார்”. – 58

    கற்றவரோடு விரும்பி வாழ்பவர் கற்றவரேயாவர். கண்ணோட்டம் இல்லாதவர் இடம் செய்பவரை ஒப்பர். எவற்றையும் மறைக்காமல் உண்மையை உள்ளபடியே கூறாதவர் பகைவரே ஆவார். சிற்றறிவினையுடையவர் யாம்பும் புற்றுக்கு ஒப்பாவர்.

         கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்

          ………………………………………………………………………………………………………………..

          நள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும்

          ………………………………………………………….. பகை”.

    கொடுந்துன்பங்கள் வருதலால் எப்பொழுதும் பிறர் பொருளைக் கவராதிருக்க வேண்டும். தகுதியுடைய நல்ல ஒழுக்கச் செயல்களை நீக்காதிருக்க வேண்டும். சிற்றினத்தரோடு சேராதிருத்தல் வேண்டும் எவரிடத்தும் பகைமை கொள்ளாதிருத்தல் வேண்டும்.

    திரிகடுகம் கூறும் கல்வி

    விளக்கில் எரியும் திரி எப்படி வெளிச்சத்தைத் தருகிறதோ அதேபோல் மனித வாழ்க்கைக்குக் கல்வி வெளிச்சம் தரும் வகையில் கல்வி பற்றி சில சிந்தனைகள் சிதறுக்கின்றது.

         கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்

          ……………………………………………………………………………………………………………………………………

          நன்மை பயத்தல் இல”. – 10

    கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் வாழ்வதும், வழக்கைத் தீர்த்து வைக்கின்ற அறிஞர்கள் இல்லாத சபையில் இருப்பதும் பருத்து உண்ணும் பண்பில்லாதவர் பக்கத்தில் இருந்து வாழ்வதும் ஆகியனைத்தும் மாறாகத் தீமைகளையே உண்டாக்கும்.

         நுண்மொழி நோக்கில் பொருள் கொளலும் நூற்கேலா

          …………………………………………………………………………………………………………………………………………………………

          கற்றறிந்தார் புண்ட கடன்”. – 32

    நூல்களை ஆராய்ந்து நுட்பமான பொருள்களைக் கொள்ளுதலும் நூல்களுக்கு ஒவ்வாத சொற்களை பலர் விரும்பினாலும் சொல்லாதிருத்தலும் நல்ல சொற்களைக் கீழ்க்குலம் ஆகாதவரிடத்துச் சொல்லுதலும் ஆகிய இம்மூன்றும் கற்றறிந்தார் மேற்கொள்ள வேண்டிய செயல்களாகும்.

    சொற்போக்குக்கு ஏற்ப பொருள் கொள்ளல் பயனற்ற சொற்கள் கூறாதிருத்தல் நல்ல நூற்கருத்துக்களை விரும்புவர்க்கு கற்பித்தல் ஆகிய மூன்றும் கற்றறிந்தார் கடமைகள் ஆகும் என்பது கருத்தாகும்.

    சிறுபஞ்சமூலம் கூறும் கல்வி

         தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால்

          ……………………………………………………………………………………………

          துன்ப மிலேம் பண்டுயாமே வனப்புடையேம்    – 20

    அறிவுடைய நூல்களைக் கற்றவர்கள் தேவர்களுக்கு ஒப்பாவர்கள் அத்தகைய நூல்களைக் கற்காதவர்கள் பூத பிசாசுகளுக்கு ஒப்பு. முதுமை வருவதற்கு முன்னே பொருள் தேடிவைத்துக் கொள்ளாதவர்கள் அறிவிலார் ஆவார்கள். முன்பு பொருளுடைமையால் துன்பமில்லாமல் வாழ்ந்தோம். அப்பொழுது யாமே அழகுடையவராக இருந்தோம் என்று கூறிக்கொள்கின்றவர் இருகால் எருதுகளுக்கு நிகராவர்கள்.

         “……………………………………………………………… எல்லாம் யாதொன்றும்

          …………………………………………………………………………………………………………………………………..

          குணனடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்” – 31

    ல்லாவற்றையும் அறிந்தவனும் யாதொன்றும் அறியாதவனும் நற்குணமே இல்லாதவனும், குற்றமே இல்லாதவனும், எல்லா நூல் தொகுதிகளையும் முழுமையாகக் கற்றவர் இவ்வுலகில் இல்லை.

         சத்தமெய்ற் ஞானம் தருக்கம் சமயமே

          …………………………………………………………………………………… அத்தகத்து” – 86

    வழக்காகிய இலக்கண நூல், அறிவுநூல், அளவை நூல், சமய நூல், அறிவின் மிக்கோர் இயற்றிய வீடு பேறைப் பற்றிய நூல் என்ற இவ்வைந்தையும் அறிபவன் மக்களுள் மேலானவனாவான்.

    ஆசாரம் கூறும் கல்வி

         தக்கிணை வேள்வி தவம் கல்வி இந்நான்கும்

          முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க …………………………

          ……………………………………………………………………………………………………………… கெடும்”.

    ஆசிரியர்க்குக் காணிக்கையைத் தருதல், யாகம் செய்தல், தவம் இயற்றல், கல்வி கற்றல் என்ற நான்கினையும் மனம், மொழி, மெய் என்ற மூன்றும் மாறுபடாது விளங்குமாறு பாதுகாத்துச் செய்க. மாறுபட்டு விளங்கின எக்காலத்திலும் எவ்வுலகத்திலும் தனக்குப் பயன்படாமல் போகும்.

    ஏலாதி கூறும் கல்வி

         ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்

          பேணொடு எண்ணும் எழுத்திவை …………

          ………………………………………………………………………………………………

          வேட்டெழுத வாழ்வார் விரிந்து.

    இப்பிறப்பில் அறிஞர்கள் தனது வரலாற்றை விரும்பி எழுத, வாழ்வு பெருகி வாழ்கின்றவர்கள் விருப்பத்தோடும், நற்குண நற்செயல்களோடும், எண்ணும் எழுத்துமாகிய கல்வியை ஆசிரியர்களிடத்தில் பாடம் கேட்டும், ஏட்டில் எழுதியும் படித்தும் வாழ்கின்ற தலைசிறந்த மாணாக்கர்களுக்கு முன்பிறப்பில் உணவொடு எடையும் எழுத்தாணியும், புத்தகச் சுவடியும் கொடுத்து உதவினார்களே ஆவர். ஊக்கத்தோடு கற்கும் மாணவர்களுக்கு ஊண், உடை முதலியவற்றைக் கொடுத்துதவுகின்றவர்கள் பேறு பெற்று விளங்குவார்கள்.

    முதுமொழிக்காஞ்சியில் கல்வி

         கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று”.

                                               – சிறந்த பத்து

    அரிய உண்மைகளைக் கற்றலை விட கற்றறிந்த பெரியோரைப் போற்றியொழுகுதல் மேலானது. கற்றார் வழி நிற்பவர்க்குக் கற்றலின் பயன் எளிதில் கைகூடுமாகலின் வழிபடுதல் சிறந்ததாயிற்று என்க.

    கற்றது உடைமை

         கற்றது உடைமை காட்சியின் அறிய”.

                                         – அறிவுப் பத்து

         கற்ற கல்வியுடைமையை அறிவினால் அளந்தறிவர்.

    கற்றது கல்வி

         நேராமல் கற்றது கல்வி யன்று”.

                                         – அல்ல பத்து

    கற்பிக்கும் ஆசிரியனுக்கு ஒன்றையும் கொடாமல் கற்பது கல்வியாகாது. ஆகலின் ஆசிரியனுக்கு உற்றுழி உதவவேண்டும் என்க.

    திருக்குறளில் கல்வி

         கற்க கசடறக் கற்பவை கற்றபின் – 391

    கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

         ஒருமைக்கண் தான்ற்ற கல்வி ஒருவள்”  – 398

    ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

    பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் குறிப்பிடும் பதினொரு அற நூல்களும் ஒரு மனிதனுக்கு நோய்தீர்க்கும் மருந்தாகவும், தூங்கி கொண்டிருப்பவனை எழுப்பும் வகையிலும், சோர்ந்திருப்பவனை சுறு சுறுப்படையவும், விழுந்தவனை எழுந்து நிற்க வைக்கும் அளவிற்கும், விருந்தினருக்கு விருந்தோம்பலாகவும் இவ்வகை இலக்கியங்களைச் சுவைத்தால்      ( பயின்றால்) தெவிட்டாத கருத்துகளாகும்.

    நாலடியார், நான்மணிக்கடிகை, திருக்குறள், பழமொழி நானூறு, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஏலாதி, இனியவை நாற்பது, முதுமொழி காஞ்சி என இவ்வகை அற இலக்கியங்களில் மனிதனுக்கு ஒழுக்கத்தை மட்டும் கற்றுகொடுக்காமல் கல்வி என்ற பெயரில் மனித மனதை வழுப்படுத்துகிறது. கல்வி என்பது  “கல்வி கரையில கற்பவர் நாள் சில” என்ற நாலடியாரில் குறிப்பிடுவது போல கல்விக்கு கரையும் மில்லை கற்று தெரிந்து கொள்ளுவதற்கு ஆயிரம் ஜென்மங்கள் கிடைத்தாலும் நிறைவேறாது என்பர்.

    பார்வை

    1. பதினெண் கீழ்க்கணக்கு பகுதி – 1 – வித்துவான் துரை. இராசாராம்
    2. பதினெண் கீழ்க்கணக்கு பகுதி – 3 – வித்துவான் துரை. இராசாராம்
    3. நாலடியார் நற்சிந்தனைகள் – கே.எம். நாச்சிமுத்து
    4. கௌரா தமிழ் அகராதி 
    5. தமிழ் இலக்கிய வரலாறு – பேராசிரியர் மது.ச.விமலானந்தம்
    Share
  • எறும்பின் சாபம்

                  க.பிரகாஷ், எம்.ஏ, எம்.பிஃல்,

                         தமிழ்த்துறை

                         தொழில் நுட்ப்பக் கள ஆய்வுப் பணியாளர்

                         பாரதியார் பல்கலைக்கழகம்

                         கோயம்புத்தூர் – 46

    ஆசிரியர் :     எறும்பும், ஈயும் நெறுங்கிய சினேகிதர். அது  கிராமத்தில் விவசாயத் தொழில் செய்து வந்தது. ஈ வீட்டுவேலையும், எறும்பு விவசாயத்தையும் பார்த்து வந்ததுர்.

    ஆசிரியர் :    எறும்பு ஏறு ஓட்டுவதற்காக சென்றுவிட்டது.  ஈ வீட்டில் சமையல் வேலை முடித்துவிட்டு, சுவையாக எதையாவது சமைப்போம் என்று பாயாசத்தை செய்து கொண்டு இருந்தது.

    ஈ :            என்னடா! ஏறு ஓட்டபோனவ இன்னும் காணம். சரி! வரட்டும். பாயாசத்தை அடுப்புல வெச்சேன் என்னாச்சினு தெரியல பாப்போம். வெந்து இருக்கமா?

    ஆசிரியர் :    ஏறு ஓட்டிவிட்டு வீட்டிற்கு வந்தது எறும்பு.

    எறும்பு :      எங்கடா அவன காணம், எங்க போயிருப்பான், வீட்டுக்குப் பின்னாடியும் இல்ல, அடுப்புல வேற என்னமோ வச்சிட்டு போயிருக்கான், எங்க போனாலும் சொல்லாம போகமாட்டானே. சரி! வரட்டும் உக்காரலாம்.

    ஆசிரியர் :    அந்த வழியில் வந்த கொசு

    கொசு :       எறும்பண்ணா அடுப்புல எதோ தீயுர வாசன அடிக்குதுப் பாருங்க.

    ஆசிரியர் :    எறும்பு அடுப்பைப் பார்க்க செல்கிறது.

    எறும்பு :       மாப்பிள என்ன விட்டுட்டு போயிட்டயேடா எனக்கு வேற யாருடா இருக்காங்க உன்னவிட்டா,

    ஆசிரியர் :    சினேகிதன், இறந்தது நினைத்து அழுது கொண்டு இருக்கிறது. அந்த வழியாக வந்த காகம் எறும்பை பார்த்து பேசுகிறது.

    காகம் :       எறும்பண்ணா, எறும்பண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, அழுதுட்டு இருக்க.

    எறும்பு :      என் சினேகிதன் இறந்து நான் அழுக, காக்கா உன் ஒரு கண்ணு குருடாக.

    ஆசிரியர் :    காக்கா கண்ணு குருடாகிவிட்டது. எப்பையும் போல அது வசிக்கும்  பெரிய ஆலமரத்துல போய் உட்காந்துரிச்சி.

    ஆலமரம் :    காக்கா அண்ணா, காக்கா அண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்க என்னாச்சி, ஒரு கண்ணு குருடாயி வந்துருக்க.

    காகம் :       ஈ செத்து எறும்பழ, என் கண்ணு குருடாக, உன் மரம் அடியோட சாய.

    ஆசிரியர் :    ஆலமரமும் சாய்ந்து விட்டது. அங்கு வசிக்கும் யானை இரவு எல்லாம் சுற்றி திரிந்து விட்டு ஓய்வுக்காக இந்த மரத்தடியில் தூங்குவது உண்டு. யானை ஆலமரத்தைப் பார்த்துப் பேசுகிறது.

    யானை :      ஆலமரமண்ணா, ஆலமரமண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்க என்னாச்சி, உனக்கு இப்படி அடியோட சாஞ்சிகிடக்குற.

    ஆலமரம் :    ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, நான்  அடியோட சாய, உன் தந்தம் உடைய.

    ஆசிரியர் :    யானையுடைய தந்தமும் உடைந்துவிட்டது. தினமும் தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்கு போகும் அந்த யானையைப் பார்த்துப் பேசியது ஆறு.

    ஆறு :         ஆனையண்ணா, ஆனையண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, யாருகூட சண்ட போட்ட தந்த உடஞ்சி வந்துருக்க.

    யானை :      ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம் அடியோட சாய, என் தந்தம் உடைய, உன் ஆற்று நீர் எல்லாம் வற்றிபோக.

    ஆசிரியர் :    ஆற்று நீர் எல்லாம் வற்றி போய்விட்டது.  எப்போதும் இங்க தண்ணீரை எடுப்பதற்காக பொண்னி வருவாள். அவள் ஆறைப் பார்த்து பேசுகிறாள்.

    பொன்னி :    ஆறண்ணா, ஆறண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, எல்லாம் தண்ணீயும் நீயே குடிச்சுட்ட. அடி பாவி.

    ஆறு :          ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம்  அடியோட சாய, யானை தந்தம் உடைய என் ஆற்று நீர் வற்றி போக உன் இடை மணையாக.

    ஆசிரியர் :    பொன்னியின் இடை மணையாகிவிட்டது. பொன்னியைப் பார்த்து ராணி பேசுகிறாள். அடி என்னாடி பொன்னி, இவ்வளவு நாளா நல்லாதானே இருந்த இன்னக்கி ஏன் இப்படி உட்கார்ந்துகிட்ட இருக்க. பொன்னியை பார்த்து பேசுகிறாள் ராணி.

    பொன்னி :    ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம்  அடியோட சாய, யானை தந்தம் உடைய, ஆற்று நீர் வற்றி போக என் இடை மணையாக, உன் வாய் ஊமையாக.

    ஆசிரியர் :    ராணி ஊமையாகிவிட்டாள்.

    இப்படி அக்காலக்கட்டத்டதில் இருந்து இன்று வரையிலும் ஓரறிவு உயிரில் இருந்து ஐந்தறிவு உயிர் வரைக்கும்மே சாபமிட்டால் பழிக்கும் என்பதே ஐதீகம். இனி வரும் காலங்களில் கணினி உலகமாக மாறினாலும், இக்கணினியை பயன்படுத்தும் போது தேவையில்லாத ஒன்றை பயன்படுத்தினால் வைரஸ் என்ற ஒன்று சாபமிட்டு அச்செயலை இழக்கச்செய்கிறது.

    இப்படிக்கு சாபம்

     

    Share
  • போயரின மக்களின் நாட்டுப்புற விளையாட்டுக் கலைகள்

    க.பிரகாஷ், எம்.ஏ எம்.பிஃல், தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கழைக்கழகம், கோயம்புத்தூர் – 46


    தருமபுரி மாவட்டத்திற்கு  உட்பட்ட அரூர் வட்டத்தைச் சேர்ந்த சந்தப்பட்டி ஊராட்சி மற்றும் சந்தப்பட்டி கிராமம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தெலுங்குமொழி பேசும் போயர் இன மக்களின் விளையாட்டுக் கலைகளும், பிற இன மக்களின் விளையாட்டுக் கலைகளும், வேறுப்பட்டுக் காணப்படுகிறது. சந்தப்பட்டி கிராமப் பகுதிகளில் வசிக்கும் போயர் இன மக்கள் ஒரு சிலர் வெளியூருக்குச் சென்று கூலித் தொழில், கட்டிடம் கட்டுதல், கல் கட்டுதல், விவசாயம் போன்ற தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்கள் விழாகாலங்களில் மட்டுமே சொந்த ஊருக்கு வருவதுண்டு. இங்கு படிக்கும் சில குழந்தைகள், இளைஞர்கள் மட்டுமே உள்ளுரில் இருக்கின்றனர்.  மற்றவர்கள் எல்லாம் வெளியூரில் இருப்பதால், தைப் பொங்கல், புரட்டாசி தேர் திருவிழா,  ஊர் திருவிழா, தீபாவளி, ஆடிப் பண்டிகை, போன்ற விழாகாலங்களில் ஊருக்கு  வருகின்றார்கள். அவ்வாறு விழாகாலங்களில் வரும் குழந்தைகள் ஒரு சில  விளையாட்டுகளைத்  தொடர்ந்து விளையாடுவதுண்டு. ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு  ஏற்றவாறு விளையாட்டுக்களை விளையாடுவார்கள். மழை காலம், வெயில்காலம், போன்ற காலங்களில் விளையாட்டை ஆடுவதுண்டு. அவ்விளையாட்டுகள், குரங்காட்டம், மரம் மரம், அஞ்சாங்கள், அச்சுக்கல், கோலி, செம்பா, இது போன்ற விளையாட்டுக்கள் ஆடி வருகின்றனர். இவ்வகை விளையாட்டில் ஒரு சில விளையாட்டு வகைகளை காண்போம்.

     குரங்கு ஆட்டம்Kuranga

    குரங்காட்டம் என்பது ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்திற்கு தாவுவது  குரங்காட்டம் என்கின்றனர். இவ்வாட்டத்தை தொடங்குவதற்கு முன்பு எத்தனை நபர்கள் ஆட இருக்கின்றார்களோ அத்தனைப் பேரும் “ஒப்புக்கைச் சப்பா” (சாபூத்ரி) போட்டு அவுட்டாகும் ஒரு நபரை தேர்ந்தெடுப்பது உண்டு. இதில் மூன்று பேர் அல்லது ஐந்து பேர் ஒப்புக்கைச் சப்பா போடும்போது இருவர் உடைய கரங்கள் கருப்பாகவும், ஒருவருடைய கைகள் வெள்ளையாக இருந்தால், வெள்ளையாக இருக்கும் ஒரு நபர் தகுதியானவர் என்று குறிப்பிடுகின்றனர். பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் விளையாட இருக்கும் மரங்களில் ஏறிவிடுவார்கள். தோற்றவராக இருக்கும் ஒரு நபர் குறிப்பிட்ட தூரத்தில் நிற்கவைத்து அவர்கள் விளையாடும் மரங்களின் அருகில் ஒரு வட்டம் வரைந்து, அந்த வட்டத்தில் இருந்து இரண்டடி நீளம் கொண்ட குச்சியினை வீசுவார். பிறகு வீசிய குச்சியினை பிடித்துவிட்டால், வீசும் இந்த நபர் அவுட்டாகிவிடுவார். அவுட்டான அந்த நபர் வீசிய குச்சியினை எடுத்து கொண்டு வந்து அந்த வட்டத்தில் வைத்துவிட்டு மரத்தில் இருக்கும் நபர்களை தொட வேண்டும். அப்படி தொட வரும்போது மரத்தில் இருக்கும் நபர்கள் அருகில் இருக்கும் மரங்களுக்கு தாவுவதுண்டு. ஒரு சிலர் கீழே இறங்கி அந்தக் குச்சியினை தொடுகின்றனர். தொட்டவுடன் மீண்டும் அந்தக் குச்சியினை வீசிவிட்டு மரம் ஏறிவீடுவார். இப்படி இவ்விளையாட்டு தொடர்ந்து கொண்டே வரும்.

     Maramமரம் மரம் ஆட்டம்

    மரம் மரம் விளையாட்டு என்பது ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்தைப் பிடிப்பது மரம் மரம் விளையாட்டு என்கின்றனர். இவ்விளையாட்டை இருபாலர் எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம். விளையாட இருக்கும் நபர்கள் அனைவரும் “ஒப்புக்கைச் சப்பா” (சாபுத்ரி) போட்டு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். தேர்ந்தெடுக்காத நபர் அவுட்டாக அறிவிக்கப்படுகின்றார். பிறகு அவர்களுக்குப் பிடித்த ஒரு மரத்தில் முதலில் விளையாட தொடங்குவார்கள். மரத்தை பிடித்துள்ள நபர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வினாவை எழுப்புவது உண்டு.

                “மரம் மரம் எந்த மரம்”

                 மரம் மரம் அசோக மரம்” – என்று குறிப்பிடுவதுண்டு.

    அங்கு விளையாட இருக்கும் இடத்தில் எத்தனை மரங்கள் இருக்கின்றனவோ அத்தனை மரங்களின் பெயர்களை சுட்டிக்காட்டுவது உண்டு. அப்படி சுட்டிக்காட்டும் மரங்களை ஓடிச் சென்று பிடிக்கவேண்டும். அப்படி பிடிக்க ஓடும் போது தொட்டுவிட்டால் அவுட்டாகி விடுகின்றனர். இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே வரும்.

    Koliகோலி ஆட்டம்

    கோலி விளையாட்டுக்களில் சில வகைகள் உண்டு. அவை!

    பேந்தா

    அஞ்சல் அறுவல்

    கொத்தாட்டம்

    என்பது போன்ற வகைகளும் உண்டு.

     

    பேந்தா

    இவ்விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். முதலில் விளையாட இருக்கும் நபர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து, செவ்வக வடிவில் ஒரு பேந்தாவை வரைந்து அதை இரண்டாகப் பிரித்து, அங்கிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீளமாக கோடு வரைந்த பிறகு, அனைவரும் அக்கோட்டில் நின்று பேந்தாவை நோக்கி கோலியை உருட்டவேண்டும். பிறகு அந்த கோலிகள் யாருடைய கோலி பேந்தாவுக்குப் பக்கத்தில் இருக்கிறதோ, அந்த அணியினர் விளையாட தொடங்குகின்றனர். எதிரணியினர் பேந்தாவில் கோலிகளை வைக்க வேண்டும். பின்னர் பேந்தாவில் உள்ள கோலிகளை நோக்கி கோலிகளை உருட்டிவிடுவார்கள். உருட்டிய கோலிகள் பேந்தாவில் உள்ள ஏதாவதொரு  கோலியை அடித்துவிட்டால் அது முதல் ஆள் அடி என்றும், இரண்டாவதாக உருட்டும் நபருடைய கோலி அடித்துவிட்டால் இரண்டாவது ஆள் அடி என்றும் குறிப்பிடுவது உண்டு. முதல் ஆள் அடிக்கும் கோலியின் நபர் மட்டுமே முதலில் அடிக்க வேண்டும். இரண்டாவதாக ஆள் அடித்த கோலியின் நபர் இரண்டாவதாகவே அடிக்க வேண்டும். இப்படி அடிப்பதற்கு பதிலாக மாற்றி அடித்துவிட்டால்  அந்த அணி அவுட்டாகிவிடும். இப்படி அடித்த கோலிகளையும், மற்ற கோலிகளையும் அந்த நபர்களுக்குப் பிரித்துவிடுவது உண்டு. பிரித்து விட்ட கோலியின் நபர்களே அந்த கோலியினை அடிக்க வேண்டும். இப்படி அடித்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீளமாக கோடு வரைந்துள்ளனர். அக்கோட்டில் கோலிகளை நிற்காமல் அடிக்க வேண்டும். அப்படி அடித்துவிட்டால் அவுட்டாகிவிடுகின்றனர். நிற்காமல் அக்கோட்டை தாண்டி அடித்து அவுட்டாகும் வரை ஆடி கொண்டே இருப்பார். இப்படி ஆடும் பொழுது அந்த அணியில் யாருமே அடிக்கவில்லை என்றால் அவுட்டாகிவிடுவார். பிறகு எதிராக ஆடிய அணியினர் அக்கோலிகளை தனது மணிக்கட்டியாலும், முழங்கையாலும் பேந்தாவை நோக்கி தள்ள (தோக்க) வேண்டும்.  இப்படி தள்ளும் போது வெற்றி பெற்ற அணியினர் பேந்தாவில் இருந்து அக்கோலிகளை மீண்டும் அடிப்பார். அடிக்கும்போது தடுத்துவிட்டால், தடுத்தா எட்டடி எண்ணிப்பார்த்தா பதினாறு அடி என்று சொல்லி அடிப்பது உண்டு. இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே வரும்.

    Anjalஅஞ்சல் அறுவல்

    அஞ்சல் அறுவல் என்பது கோலி ஆட்டத்தில் ஒரு வகை விளையாட்டு. இவ்விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம். இவ்விளையாட்டிற்கு முதலில் ஒரு கோலி அளவிற்குக் குழியைப் பறித்து அக்குழியில் இருந்து குறிப்பிட்ட அளவிற்கு கோடு வரைந்து அந்தக் குழியை நோக்கி உருட்ட வேண்டும். அப்படி உருட்டும் கோலி குழியில் விழுந்துட்டால் தொண்ணூறு (தொம்பன்) என்றும் மற்றவர் கோலிகள் குழியில் விழுகாமல் இருந்தால் குழியை நோக்கி உருட்டவேண்டும். அப்படி உருட்டினால் ஐம்பது (அஞ்சல்) என்று குறிப்பிடுகின்றனர். இவ்விளையாட்டில் குறிப்பிடப்படும் சொற்கள்

     

                           தெலுங்கு       –           தமிழ்

                            அஞ்சல்           –           50

                            அறுவல்           –           60

                            எழுவல்            –           70

                            எட்டன்            –           80

                            தொம்பன்        –           90

                            தெசிங்             –           100

    இப்படி ஒவ்வொருவரும் கோலியை உருட்டிய பிறகு குழிக்கு அருகில் இருக்கும் நபரே முதலில் அடிக்க வேண்டும். ஒருவருடைய கோலியை இன்னொருவர் அடித்தால் பத்து என்ற கணக்கில் அடிக்க வேண்டும். குழியில் உருட்டி விட்டு அடித்தால் அஞ்சல் அறுவல் என்று அடிக்க வேண்டும். இப்படி தெசிங்கை வெற்றி பெற்றவர் பழம் ஆகிவிடுவார். இப்படி எல்லோரும் ஆடிய பிறகு தோல்வியடைந்த நபர் அக்குழியில் இருந்து முன்று அடி தன் கால்களால் அளந்து கோலியை வைக்க வேண்டும். வெற்றி பெற்றவர் அனைவரும் கோலியை உருட்டி அக்கோலியினை அடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். யாருமே அடிக்காவிட்டால் தோல்வியடைந்த நபர் கோலியை எடுத்துக் கொண்டு குழியை நோக்கி ஓடி வர வேண்டும்.

     கொத்தாட்டம்

    இதுவும் கோலி விளையாட்டின் ஒரு வகை விளையாட்டுதான். இவ்விளையாட்டை எத்தனை பேர்வேண்டுமானாலும் விளையாடலாம். இவ்விளையாட்டை யாராவது ஒருவர் விளையாட தொடங்கலாம். முதலில் மூன்று கோலிகளும், சுவர் வோரத்தில் ஒரு கோடு வரைந்து அதனுள் கோலி அளவிற்கு மூன்று குழிகள் பறிக்க வேண்டும். ஆட இருக்கும் நபர், அல்லது அனைவரும் சேர்ந்து ஓர் குறிப்பிட்ட தொலைவை தேர்ந்தெடுத்தப் பிறகு விளையாட ஆரம்பிப்பார்கள். ஆட இருப்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு கோலிகள் மட்டும் உருட்டி விடுவார். பின்னர் கீழே, மேலே (எதரா, மேழு – தெலுங்கு) என்று குறிப்பிட்டப் பிறகு மற்றொரு கோலியால் எதிராக ஆட இருப்பவர் குறிப்பிட்ட கோலியை அடிக்கவேண்டும். அவர் குறிப்பிட்ட கோலியை தவிர மற்ற கோலியை அடித்துவிட்டால் (பச்சா) அவுட்டாகிவிடுவார். அதே போல் அக்குழியில் விழுந்து விட்டால் ஒரு புள்ளி என்றும் அதை அடித்துவிட்டால் இரண்டு புள்ளி என்றும் குறிப்பிடுவதுண்டு.

    இவ்விளையாட்டில் குறிப்பிடப்படும் சொற்கள்

                தெலுங்கு       –           தமிழ்

                எதற்                –           கீழே

                மேழு               –           மேலே

                இஷ்டம்           –           விருப்பம்

                பச்சா               –           இரண்டு கோலியும் அடித்தல்

    Kottiகோட்டிப் புல்

    கோட்டிப் புல் ஆட்டம் என்பது நமக்குத் தேவையான அளவிற்கு (அல்லது) ஒன்றரை அடி அளவிற்கு நீண்ட குச்சியினையும், (கோட்டியினை) அறையடி அளவிற்கு சிறு குச்சியினையும் (புல்லினையும்) செய்த பின்னரே ஆடத் தொடங்குவர். இவ்வகை கோட்டிப்புல்லை எந்த வகை மரங்களிலும் செய்துகொள்ளலாம். எத்தனை பேர்வேண்டுமானாலும் ஆடலாம். எத்தனை நபர் இருக்கின்றனர் என்று பார்த்தப் பிறகு சமமாக இரண்டு அணிகளாகப் பிரிக்கின்றனர். இந்த அணியில் முதலில் ஆடத் தொடங்க இருப்பவர் புல் அளவிற்கு குழியைப் பறித்துவிட்டு, அந்தக் குழியின் முன்னாடி வைத்து  தள்ளவேண்டும் (தோக்க). அப்படி தள்ளும் போது எதிரணியினர் பிடித்துவிட்டால் புல்லை தள்ளியவர் தோற்றுவிடுவர். அப்படி பிடிக்கவில்லை என்றால் அந்தப் புல்லினை கொண்டு அக்கோட்டியின் மீது வீச வேண்டும் . அப்படி வீசும் போது அப்புல் கோட்டி மீது விழுந்துவிட்டால் அவுட். விழுகவில்லை என்றால் அப்புல்லை மூன்று முறை அடிக்க வேண்டும். முதல் முறை அடிக்கவில்லை என்றால் அவுட். முதல் முறை அடித்துவிட்டு இரண்டாவது முறை அடிக்கவில்லை என்றால் எதிரணியினர் தலை மீது அப்புல்லினை வைத்து சுத்தி கீழே போட வேண்டும். அதற்குப் பிறகு அடிக்கவேண்டும். அப்படி முதல் முறையாக அடிக்கும் போது அந்தப் புல்லை எத்தனை தடவை அடிக்கின்றாரோ, அதுவே முதலில் ஏத்துக்கப்படும். (கோட்டியால் புல்லை இரண்டு, மூன்று, நான்கு முறை தொட்டு அடித்தல்) இப்படி மூன்று முறை அடித்ததில் எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ, அங்கிருந்து  தோராயமாக இருபது, ஐம்பது என்று எண்ணிக்கையில் குறிப்பிடுவது உண்டு..

    கோட்டிப் புல்லை மூன்று முறை அடிக்கும் போது அளக்கும் முறை

                மூன்று முறை அடிக்க வேண்டும்

                முதலில் அடித்தால்                  –           கோட்டி

                இரண்டு முறை அடித்தால்      –           புல்

                மூன்று முறை அடித்தால்         –           தீக்குச்சி

                நான்கு முறை அடித்தால்        –           கண் முடி

                ஐந்து முறை அடித்தால்           –           நெல்

                ஆறு முறை அடித்தால்            –           ராகி

                ஏழு முறை அடித்தால்             –           மண்

    இப்படி ஒவ்வொரு முறை அடிக்கும் போது, ஒரே முறை தொடர்ச்சியாக அடித்தால் இந்த வகையில் அளக்க வேண்டும். இப்படி இரண்டு அணிகளில்  யார் புள்ளி அதிகமாக எடுக்கின்றனரோ அவர் வெற்றி என்று குறிப்பிடுகின்றனர். வெற்றி பெற்ற அணியினர் விளையாடிய இடத்தில் இருந்து எத்தைனை பேர் ஆடினரோ அத்தனை பேரும் மூன்று முறை கோட்டியால் புல்லை அடித்து விடுவார். தோல்வியுற்றவர் அடிக்கும் போது அப்புல்லை பிடித்துவிட்டால் அல்லது பிடிக்காமல் இருந்தால்  இறுதியாக எந்த இடத்தில் புல் இருக்கிறதோ, அங்கிருந்து அப்புல்லை கையில் எடுத்துக் கொண்டு மூச்சி விடாமல் பாட்டு பாடிக் கொண்டே விளையாடிய இடத்திற்கு வந்து சேரவேண்டும். அப்படி மூச்சி விட்டால் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் அப்புல்லை ஒரு அடி அடித்துவிடுவார். அங்கு இருந்து வேரொருவர் எடுத்துக் கொண்டு வருவார், வந்த பிறகு தோல்வியடைந்தவர் மீண்டும் ஆட தொடங்குவார்கள்.

    இவ்விளையாட்டில் குறிப்பிடப்படும் சொற்கள்

                தெலுங்கு                   –           தமிழ்

                தோக்கு                       –           தள்ளு

                சினுக்கு                       –           தொடர்ச்சி

                குடுகு                          –           ஓடு

                கொளுசு                      –           அளவு

    Sanangolசாணாங்கோல்

    சாணாங்கோல் என்பது நம் உயரத்திற்கு ஒரு குச்சியினை  (கோல்) எடுத்து கல் மீது வைத்து ஆடுவது சாணாங்கோல் என்கின்றனர். இவ்விளையாட்டை எத்தனைப்பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.  விளையாட்டை முதலில் “ஒப்பக்கைச் சப்பா” போட்டு ஆவுட்டான நபரை தேர்ந்தெடுத்தப் பிறகு விளையாட தொடங்குவார்கள். இதில் கடைசியாக யார் விளையாட வருகின்றார்களோ அவர் அவுட்டாக அறிவிக்கப்படுகின்றனர். பின்னர் விளையாட தொடங்குகின்றனர். விளையாட இருக்கும் அனைவரும் எந்த குச்சியினை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.  பிறகு இரண்டு கைகளால் அக்குச்சியினைத் தூக்கிவைக்க வேண்டும். தூக்கிவைத்தப் பிறகு யாராவது ஒரு நபர் அக்குச்சியினைத் தனது குச்சியால் தூக்கி எரிந்து விட்டு பின்னர் அவருடைய குச்சியினை  கல் மீது வைக்க வேண்டும். அப்படி வைக்கவில்லை என்றால் அவுட்டாகிவிடுவார்.  இப்படி அக்குச்சியினை நகர்த்தி கொண்டு இருப்பார். நகர்த்தும் போது கல் மீது வைத்துக் கொண்டு இருக்க வேண்டும். இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கின்றனர்.

     Aabiyamஆபியம் மணியாபியம்

    ஆபியம் மணியாபியம் என்பது ஆண்கள் மட்டுமே விளையாடக்கூடிய விளையாட்டாகும். இவ்விளையாட்டை முதலில் “ஒப்பக்கைச் சப்பா” போட்ட பிறகு அவுட்டான ஒருவரை குணியவைத்து ஒவ்வொருவரும் அவரை தொடாமல் தாண்டவேண்டும். தாண்டும் போது ஒரு பாட்டைப் பாடிக் கொண்டே தாண்டுவதுண்டு. அப்பாட்டு!

                “ஆபியம்

                 மணி ஆபியம்

                 ரெட்டைக் கொக்கு

                 லட்சத்திர மண்ணள்ளி

                 ஒத்தக் காலா, இரட்டைக்காலா

                 லடி லடி குண்டியில் அடி”

    ஆபியம், மணி ஆபியம், இரட்டைக் கொக்கு, இவை மூன்றும் பாடும்போது ஒரே மாதிரியாகவே இருக்கும். லட்சத்திர மண்ணள்ளி என்று சொல்லி தாண்டும்போது மண்ணை அள்ள வேண்டம். அள்ளாவிட்டால் தாண்டியவர் அவுட்டாகிவிடுவார். ஒத்தக் கால் அடி, இரட்டைக் கால் அடி என்று சொல்லி தாண்டும் போது, ஒரு கால் உதைக்கச் சொன்னால் ஒரு காலிலும், இரட்டைக் கால் உதைக்கச் சொன்னால் இரட்டைக் காலிலும் உதைக்க வேண்டும். லடி லடி குண்டியிலடி என்று சொல்லி தாண்டும் போது குணிந்து இருக்கும் அவரது குண்டியில் உதைத்துவிட்டு தாண்ட வேண்டும். அவர் குறிப்பிட்டதை செய்யவில்லை என்றால் அவுட்டாகி விடுகின்றர். இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கின்றனர்.

     Nondiநொண்டி

    நொண்டி விளையாட்டு என்பது ஆண், பெண் இருபாலரும் ஒருகாலை மடக்கிக் கொண்டே ஆடும் ஆட்டத்திற்கு நொண்டி என்கின்றனர். இவ்விளையாட்டை இரண்டு பேர், அல்லது  நான்கு பேர் (இரண்டு அணியாக) பிரித்து ஆடுவதுண்டு. இரண்டு அணியில் ஒரு அணி விளையாடத் தொடங்கும் போது, முதலில் ஒரு கோடு (பட்டை) வரைந்து அதை நான்காகப் பிரித்து விடுகின்றனர். பின்னர் ஆட இருக்கும் ஒருவர் விளையாட வைத்திருக்கும் கல்லை (சில்லியை) எல்லை கோடு தாண்ட வீச வேண்டும். வீசிய பிறகு ஒவ்வொரு பாகத்திலும் கோட்டை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு அந்தக் கல்லை மிதிக்கவேண்டும். அப்படி மிதிக்கவில்லை என்றால் அவுட்டாகிவிடுவார். இக்கல்லை வீசும் போது   ஒவ்வொரு தடவையும் ஒன்று குறிப்பிடுவதுண்டு. அவை!

                    தெலுங்கு                   –           தமிழ்

                    விசரா                         –           வீசுதல்

                    ஒன்னா                       –           ஒன்று

                    ரெண்டா                    –           இரண்டு

                    மூனா                          –           மூன்று

                    நாலா                          –           நான்கு

                    வெள்ளையா             –           உள்ளங்கை

                    கருப்பா                      –           கையின் மேல்புறம்

                    காலா                          –           கால்

                    தலையா                     –           தலை

     

    முதலில் கல்லைக் (சில்லி) கொண்டு பட்டையின் எல்லைக்கு வீசி விட்டு அதை மிதிப்பது வீசுதல் (விசரா) என்கின்றனர்.

    ஒன்னா என்பது வீசுதல் முடிந்த பிறகு முதல் பட்டையில் கல்லைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு ஒன்று (ஒன்னா) என்கின்றனர்.

    ரெண்டா என்பது ஒன்னா முடிந்த பிறகு இரண்டாவது பட்டையில் கல்லைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு இரண்டாம் என்கின்றனர்.

    மூனா என்பது ரெண்டா முடிந்த பிறகு மூன்றாவது பட்டையில் கல்லைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு மூன்றாம் என்கின்றனர்.

    நாலா என்பது மூனா முடிந்த பிறகு நான்காவது பட்டையில் கருவியைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு நான்காம் என்கின்றனர்.

    வெள்ளையா என்பது நான்கு பட்டைகளில் கல்லைப் (சில்லி) போட்டு மிதித்தப் பிறகு வலது உள்ளங்கையில் கல்லை (சில்லி) வைத்து கையை நீட்டிக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்த பிறகு, அங்கு இருந்து அந்தக் கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும்.

    கருப்பா என்பது வெள்ளையா போல் வலது கையின் மேல்புறத்தில் அந்த கல்லை (சில்லி) வைத்துக் கையை நீட்டிக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்த பிறகு, அங்கு இருந்து அந்தக் கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும்.

    காலா என்பது பெருவிரல் இடையில் அந்தக் கல்லை (சில்லி) வைத்துக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்த பிறகு, அங்கு இருந்து அந்தக் கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும்.

    தலையா என்பது இவை அனைத்தும் முடிந்தப் பிறகு தலையில் வைத்துக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்த பிறகு, அங்கு இருந்து அந்த கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு முறையும் செய்தால் நான்கு பட்டையில் ஒரு பட்டை பழம் பெறமுடியும். பழம் பெற்ற பிறகு எதிரணியினர் அப்பழத்தை மிதிக்காமல் தாண்டுதல் வேண்டும். இது போல் ஒவ்வொரு முறையும் விளையாடிக் கொண்டு வந்த பிறகு எல்லாப் பட்டையும் பழம் பெறுவது இவ்விளையாட்டின் நோக்கமாகும்.

    இப்படி ஒவ்வொரு விளையாட்டும் வித்தியாசமாகவும், வேறுபாடின்றியும், புதுமையாகவும் விளையாடிக் கொண்டு இருந்த இம்மக்கள் தற்போது ஒருசில விளையாட்டுகள் மட்டுமே விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். போயர் இன மக்களின் நாட்டுப்புற விளையாட்டு வகைகள் அதிக அளவிற்கு இருந்தது. இவ்வகை விளையாட்டுகள் விளையாடியதால் உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க பயனுள்ளதாக இருந்தது. இனி வரும் காலக்கட்டத்திற்கு இவ்வகை விளையாட்டுகள் இருக்கும் என்பதற்கு சாத்திய கூறு இல்லை. இவர்கள் விளையாடிய விளையாட்டுகளில் இன்றைய காலகட்டத்தில் விதிகள் மாற்றப்பட்டு வருகிறது. இக்கால கட்டத்தில் விளையாட்டுகளை விளையாடுவதற்கு இயற்கைச் சூழல் இருந்தது. இன்றைய நாகரிக வளர்ச்சியின் காரணமாக இவ்வகை விளையாட்டுக் கலைகள் மறைந்து கொண்டு இருக்கின்றது. இனி வரும் எதிர்கால சந்ததியினருக்கு இவ்விளையாட்டுக் கலைகளை எடுத்து விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    தகவலாளர்

    த.கொடியரசன்           – 15

    த.சந்தோஷ்                 – 12

    க.சின்னதுரை             – 21

    க.குமரேசன்                – 23

    வே.லோகநாதன்         – 22

    க.சதிஷ்                       – 24

    Share
  • வேடனும் ஒரு குயிலும்

    க.பிரகாஷ்

                ஓர் அடர்ந்த காடு, அக்காட்டினுள் ஒரு பெரிய வீடு, அவ்வீட்டினுள் ஒரு வேடன். அவ்வேடனுக்கு மக்களோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் காட்டிற்குள் வாழ வந்துவிட்டான். அப்படி வந்த அவனுக்கு அக்காட்டில் வேட்டையாட ரொம்ப நாளா ஆசை.

    என்ன ?

    தனியாக இருக்க வேண்டும்.

    ஏன்?

    காட்டில் இருக்கும் விலங்குகளைக் கண்டு ரசிக்கவேண்டும், அதனோடு, பேச வேண்டும் அதனை வேட்டையாடவேண்டும்.

     சரி!

    இருந்தாலும் அவனுக்கு கொஞ்சம் பயம், அதனால் அவன் வீட்டைச் சுற்றி வேலியமைச்சு. விலங்குகள் இடம் இருந்து பாதுகாப்பாக இருந்தான்.

    முதல் நாள் – வேட்டையாடுவதற்காக காட்டிற்குள் சென்றான் அன்று முழுவதும் சுற்றி திரிந்து எந்த விலங்குகளையும் பார்க்காமல் ஏமாந்தான் வேடன்.

    இரண்டாவது நாள் – ஆயூதங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு காட்டிற்குள் புகுந்தான். புகுந்தவுடனே அவன் கண்ணுக்கு பாம்பு தென்பட்டது. பாம்பைப் பார்த்து வேடன் கூறினான் போகும் போது முதலில் உன்ன தான் பாக்கணுமா, டே முட்டாள் என்ன பாக்குரது இருக்கட்டும், இப்படி ஒவ்வொரு நாள் காட்டுக்குப் போராயே யார பாக்க, தெரியலையே, முதல்ல அத முடிவு செய்யடா,

    மூன்றாவது நாள் – தன்னிடம் இருந்த ஆயூதங்களை குறைத்து விட்டு மீண்டும் காட்டிற்குச் சென்றான்.  வெகு தூரம் நடந்து விட்டான், எதையும் பார்க்க முடியலயே என்று வருத்தம் ஒருபக்கம், தண்ணீர் தவிப்பு ஒருபக்கம் என்ன பன்றதுன தெரியாமல் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துவிட்டான். உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில மயங்கிவிட்டான். அந்த மரத்தில் இருந்து ஒரு குரங்கு கிழே இரங்கி அவனை எழுப்பிப் பார்த்தது எந்திரிக்கவேயில்ல, பாவம் என்ன பண்ரதுனே தெரியல, அவன் அருகில் ஒரு காகிதப் பை  இருந்தது, அதை எடுத்து அருகாமையில் ஒரு ஆறு ஓடி கொண்டு இருக்கின்றது. அந்த ஆற்று தண்ணீரை காகித பையில் எடுத்துக் கொண்டு வந்து அவன் மேல் தெளித்தது. அவன் மெல்ல மயக்கம் தெளிந்த பிறகு அந்த தண்ணீரைக் குடித்தான். வேடனைக் கண்டு குரங்கு கூறியது, ஏன் இவ்வளவு கஷ்டப்படுற.

    நான்காவது நாள் – ஆயூதங்களே இல்லாமல் தண்ணீர் குடவையுடன் மீண்டும் காட்டிற்குச் சென்றான். இன்றாவது வேறு திசை மாறி போவும் என்று நினைத்து திசை தெரியாமல் ஓர் இடத்தில் உட்கார்ந்து விட்டான். இனி என்னால் நடக்க முடியாது கால் வலி அதிகமாயிடுச்சி, பசியொருப்பக்கம் என்ன செய்வது என்று தெரியல பொழுதாயிட்டே இருக்கு, சரி! நடப்போம், கொஞ்ச தூரம் நடந்தவுடன் ஆற்றை பார்த்துவிடுவான். பசியை போக்குவதற்க்கு மீன் பிடித்து சுட்டு சாப்பிட்டு பசியை போக்கினான். பொழுதாயிடுச்சி, மழ வேர வரமாதிரி இருக்கு சரி! போவோம் மழ வந்தா பாக்கலாம், இரவுமாகிவிட்டது. ஒரு பாரை குகையைக் கண்டதும் அங்கே ஒதுங்கிடுவான். மழைவந்ததும் அந்த இடத்தில் வாழும் நரி ஒன்று வந்ததது. வேடனை கண்டதும் பரிதாபப்பட்டது. சரி! இருக்கட்டும் விடு என்று நினைத்துவிட்டு வேடனை பாதுகாக்க வெளியே காத்து கொண்டு இருந்தது. வேடன் ஆச்சரியப்பட்டான். நரி கூறியது திசை தெரியாமல் வந்தால் திசை தெரியாமல் போயிடுவ மகனே!

    ஐந்தாவது நாள் – நடு காட்டில் இருந்து மீண்டும் அவனது வேட்டையை தொடர்கிறான். அதிசயமாக ஒரு மானைப்  பார்த்தான், அம்மானை எப்படியாவது கொன்று விடவேண்டும் என்று துடித்தான். பின்னாடி ஒரு மான் இருப்பதைப் பார்த்துவிட்டு அம்மான் மீது வைத்த குறியை தப்பிவிடுகிறான். டே வேடா! அது இரண்டும் உறவாடுகிறது அதைப் போய் கொல்ல நினைக்கிறயேடா.

    சரி! சரி!

    ஆறாவது நாள் – அக்காட்டில் இருந்து வேறு காட்டிற்குச் சென்று விட்டான். அக்காட்டில் வழி தெரியாமல் முள் புதரில் மாட்டிக் கொண்டான். அவன் சத்தமிட்டதைக் கண்டு யானை ஓடி வந்தது, பரிதாபத்துடன் வேடனுக்கு யானை உதவியாக இருந்தது. வழி சேர்த்த யானைக் கூறியது முடியாத வேலைய ஏன்டா முயற்சிக்கிற.

    ஏழாவது நாள் – வேடன் அவன் வீட்டை நோக்கி பயணம் செய்தான். இந்த ஆறு நாட்கள் விலங்குகளை வேட்டையாடி நான் ஏமாந்து விட்டேன். இன்று ஒருநாளாவது பறவைகளை வேட்டையாடுவோம். என்று மனதில் நினைத்துவிட்டு வேட்டையைத் தொடர்கிறான்.

    ஓர் உயர்ந்த தென்னை மரத்தைக் கண்டு கிளிகள் ஓடியது, அவனும் ஓடினான் கிளிகள் அம்மரத்தின் பொந்தில் நுழைந்தது சிறிது நேரம் கழித்து சத்தமிட்டது. வேடன் மரத்தின் அடியில் உட்கார்ந்து விட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டு இருந்தான்.

    கிளி வேடனைப் பார்த்துக் கூறியது, டே முட்டாள் நீ ஓடி வந்து பிடிப்பதற்கு உன்னை போல் நான் வேடன் அல்ல. வேடிக்கையாளர் டா என்ன வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும் என்று.

    மீண்டும் வேடன் ஏமாந்தான். தொடர்ந்து வழியில் கூட்டம் கூட்டமாக புறாக்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான். இன்று தான் நான் நினைத்த அளவிற்கு வேட்டையாடப்போகிறேன் என்று மகிழ்ச்சியாக புறாக்கள் உட்கார்ந்த இடத்தில் ஒரு வலையை வீசிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தான். ரொம்ப நேரமா ஒரு புறாவ கூட காணம், பொழுதுவேற ஆயிடுச்சு என்ன பன்னரது தெரியல, இதுங்கெல்லாம் எங்கடா போயிருக்கும், சரி! சரி! வருட்டும் இன்னும் கொஞ்ச நேரம் இருப்போம். பொழுதுவேற சாஞ்சிறுச்சி ஒரு புறா மட்டும் வருது, அந்த புறாவை பாத்துட்டு எங்க போவுது, அதைப் பாக்கலாம். அந்தப் புறா போயும் ரொம்ப நேரமாச்சி கூடுல அடங்கியிருக்குமா என்று நினைத்து விட்டு சென்று அந்த இடத்தைப் பார்க்கிறான். பெரிய கிணறா இருக்கு எல்லா புறாவும் இங்கதா அடங்கியிருக்கா சரி! சரி! பொழுது சாஞ்சிடுச்சி இங்கே இருக்கலாம். காலையில எழுந்து எல்லா புறாவையும் பிடிச்சிட்டு போயிடலாம்.

    காலையில எழுந்து பார்த்தான் ஒரு புறாகூட இல்ல. வேடனைப் பார்த்து ஒரு புறாக் கூறியது டே!  ஒரு விலங்கவே உன்னால பிடிக்கமுடியல எங்கள எப்படி பிடிக்கமுடியும் உன்னால,

    எட்டாவது நாள் – ஒரு வாரம் சுற்றி திரிந்து எதுவும் பிடிக்கவில்லை இன்று எதையாவது பிடிச்சிட்டு போலாம். தொடர்கிறான், மீண்டும் அந்தப் பாம்பைச் சந்திக்கின்றான். அதை பார்த்து மறுபடியும் உன்னையே பார்குரன், இன்னைக்கு பொழப்பு அவ்வளவுதான்.

    சரி! சரி! நீ எங்க போரனு பாக்குரன்.

    பெரிய மரத்தில் குயில் கூவுது, காகம் கரைந்து கொண்டு இருந்தது. வேடன் பார்கிறான் குயிலும் கூவுகிறது, காகமும் கரைகிறது என்னவா இருக்கும் சரி இருக்கட்டும். இந்தப் பாம்பைப் பார்ப்போம், அட அதுக்குள்ள எங்கடா போச்சி, மீண்டும் காகமும், குயிலும் சத்தமிட்டது. அம்மரத்தை மீண்டும் பார்க்கிறான். பார்த்ததும் ஆச்சிரியப்படுகின்றான். இரண்டுக்கும் இடையில் இருக்கின்றாயே யாருக்கு இறையாகப்போரயோ ?

    வேடன் குயிலைப் பார்க்கின்றான், குயிலும் வேடனைப் பார்க்கின்றது. காகம் குயிலை பார்க்க, குயில் பாம்பைப் பார்க்கின்றது , குயில் காகத்தை பார்க்க, காகம் வேடனைப் பார்க்கின்றது. இப்படி பார்க்க எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டது பாம்பு.

    வேடனைப் பார்த்து குயில் கூறியது. நீ கெட்டு என்ன பார்க்க, நான் கெட்டு காகத்தைப் பார்க்க, அதுவும் கெட்டு உன்ன பார்க்க – இப்படி எல்லாத்தையும் கெடுத்து நீயும் கெட்டு போரயே! இது உனக்கே ஞாயமா?

    பாம்பு  – வேடனைப் பார்த்து சொன்னது. முதலில் நீ நினைத்து வந்த காரியம்  உறுதியாக இருக்கவேண்டும். உன் மீது நம்பிக்கை வை அப்பதான் வாழ்க்கையில உருப்படியாவருவ. என்ன நம்பிக்கை – ம் – இதுவே தெரியல நீ எல்லாம் எங்க உறுப்பட போர “தன்னம்பிக்கை”

    Share
  • மனிதாபிமானம்

    -க. பிரகாஷ் 

    ஓர் ஊரில் நான்கு நண்பர்கள். ராமு, சோமு, பாலா, சுப்ரமணி ஆகியோர்.  இவர்கள் ஒரே பள்ளியில் பயின்று வந்தனா். பள்ளிக்குச் செல்லும்போது ஒரே நேரத்தில் செல்வதும் வகுப்பறையில் நான்கு பேரும் ஒரே பலகையில் அமா்வதும் பழக்கமாக இருந்தது. எல்லாப் பாடவேளையிலும் ஒவ்வொரு பாட ஆசிரியர் வகுப்பு எடுப்பது உண்டு. அன்று ஒருநாள் கணிதப் பாடவேளையில் ஆசிரியரைப் பார்த்து பாலா ஒரு வினாவை எழுப்பினான்.

    ”சார் நீங்கள் நடத்துவது எனக்கா? இல்ல எல்லாருக்குமா?”

    ஆசிரியா்: ”ஏன்டா!?”

    ”இல்ல…நீங்க என்னை மட்டும் பார்த்து வகுப்பு எடுக்குறீங்க!”

    ஆசிரியா்: ”நீ ரொம்ப அழகா இருக்க! அதனாலதான் உன்னையே பாத்தன்டா!”

    ”சரி…சரி…ஏதோ நீங்களாவது நான் அழகா இருக்கனு சொன்னீங்களே!  நன்றி சார்.”

    இவ்வாறெல்லாம் பாடவேளையில் சிறுசிறு குறும்பு செய்து படித்துப் பருவத்தேர்வுகளை முடித்துவிட்டு அரையாண்டுத் தேர்வு எழுதினார்கள். இவர்களுடைய தேர்வு எண்ணும் ஒன்றுக்குப்பின் ஒன்றாகவே அமைந்திருந்தது.

    தேர்வறையில் ஆசிரியர் ராமுவை பார்த்து –

    ”தமிழ் முதல்தாள் எப்படி இருந்தது?” என்றார்.

    ”அது எளிமையாக இருந்தது சார்!”

    ”ஆனா, இரண்டாவது தாளில் ஒரு சந்தேகம்…”

    ”என்னடா சந்தேகம்?”

    ”5-வது கேள்விக்குப் பதில் தெரியவில்லை சார்!
    7-வது பதிலுக்கான கேள்வியே இல்லை சார்!”

    ”தேடிப்பாருடா இருக்கும்.”

    தேர்வு  முடிந்ததும் கணிதப் பாடவேளையில் தேர்வுத்தாள்கள் திருத்தி மாணவா்களுக்குக் கொடுக்கப்பட்டது. பாலாவிற்கு மட்டும் கொடுக்கப்படவில்லை.

    ”சார் என்னோட பேப்பர் மட்டும் வரவில்லை!”

    ”எல்லோரும் நன்றாகத் தேர்வை எழுதியுள்ளார்கள். ஏன்டா நீ மட்டும் நல்லா எழுதல?”

    ”சார் அந்த கொஸ்டீன் பேப்பரை படிங்க, dy/dx+y*x = ? என்பதனைத் தீா்க்க!”

    ”உங்க பிரச்சனையே தீா்க்க முடியவில்லை சார், பின்னே! எப்படி கணக்க தீா்க்க முடியும்?”

    ஆசிரியா் கோபத்தால் திட்டிவிட்டார். பாலா இரண்டு நாட்களாகவே பள்ளிக்கு வரவில்லை. அவனது நண்பர்கள் மூவரும் சென்று ஆறுதல் சொன்னார்கள்.

    ”ஒரு மகிழ்ச்சியான செய்தியும் கூட, பாலா!”

    ”என்னடா?”

    ”பள்ளியில் இருந்து சுற்றுலா ஏற்படுத்தியிருக்காங்கடா… என்ன போலாமாடா?”

    ”போகலாம்!” என்றான் பாலா.

    பள்ளி மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து பேருந்து வசதியை ஏற்படுத்திச் சுற்றுலாவுக்குச் சென்றார்கள். சென்ற இடத்தில் விபத்து ஏற்பட்டதைக் கண்டனர். அந்த விபத்தைப் பார்த்தவுடன் இறங்கிச் சென்ற நண்பா்கள் நால்வரும் அடிபட்டவா்களைத் தாங்கள் வந்த பேருந்திலேயே  ஏற்றி மருத்துவமனையில்  சேர்த்தனா்.

    ”பாலா… ஒன்றும் பயமில்லை!” என்று மருத்துவா் சொன்னார்.

    மகிழ்ச்சியடைந்த நான்கு பேரும்  சுற்றுலாவிற்குப் பயணம்செய்துவிட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்கள்.

    ***

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்.பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

    Share
  • சங்க இலக்கியத்தில் களவும் – கற்பும் உறவாடியது

    –க.பிரகாஷ்

    download

    சங்க இலக்கியம் என்பது தமிழில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியம் ஆகும். 473 புலவர்களால் 2381 பாடல்கள் பாடப்பட்டுள்ளது. இப்புலவர்கள் பலதரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் ஆவர். சங்க இலக்கியங்கள் அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைகளையும் மற்றும் பண்டைத் தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளையும் அறியவைக்கின்றன.

    சங்க இலக்கிய கூறுகள் மற்றும் பண்புகள்

    அகம், புறம், ஐவகை நிலபுலன்கள், வாழ்க்கை முறைகள் போன்றவைகளை எடுத்துவிளக்கும் சங்க இலக்கியப் பாட்டுகளில் பழைய மரபுகள் பல காணப்படுகின்றன. காதல் பற்றிய கற்பனையை அகம் என்றும் வீரம், கொடை, புகழ் முதலிய வாழ்க்கைத் துறைகளைப் புறம் என்றும் பகுத்த பாகுபாடு அந்த மரபுகளுள் முதன்மையானது ஆகும்.

    அகப்பாட்டுகளில் கற்பனைத் தலைவன் தலைவியின் காதல் பாடப்படும். புறப்பாட்டுகளில் நாட்டை ஆளும் தலைவனுடைய சிறந்த வீரச்செயல்களும், கொடைப்பண்பும் குடிமக்களுள் சிறந்தவர்களின் அருஞ்செயல்களும் பிறவும் பாடப்படும். ஆகவே, பெரும்பாலும், அகப்பாட்டுக்கள் கற்பனையாகவும், புறப்பாட்டுகள் உள்ளது கூறலாகவும் அமைந்துள்ளன எனலாம்.

    சிற்றூர்கள் பலவாகவும் நகரங்கள் ஒரு சிலவாகவும் அவற்றிடையே போக்குவரத்தும் கலப்பும் குறைவாகவும் இருந்த காலம் அது. சிற்றூர் மக்கள் மலையிலும் காட்டிலும் வயற்புறத்திலும் கடற்கரையிலும் அமைந்த ஊர்களில் வாழ்ந்து அந்தந்த நிலத்தில் கிடைத்த உணவுப்பொருள்களுக்காக வேட்டை, உழவு, மீன்பிடித்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். அன்பு, அறிவு, அழகு, வயது முதலியன பொருத்தமாக வாய்ந்த ஆணும் பெண்ணும் காதல் கொண்டு திருமணம் செய்து இல்லற வாழ்க்கை நடத்தினர். அத்தகைய காதலும் இல்லறமுமே சிற்றூர்களில் இயல்பான வாழ்க்கையாக இருந்தன. அந்த ஊர்களில் தோன்றி வழங்கிய வாய்மொழிக் கதைகளும் பாடல்களும் நாடகங்களும் அந்தக் காதல் வாழ்க்கையையே மையப் பொருளாக கொண்டிருந்தன. சிற்றூர் மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வும் தொழில்களும் நாட்டுப் பாடல்களில் பாடப்பட்டன. மலை, காடு, வயல், கடல் ஆகியவற்றின் இயற்கை அழகும் சிறப்பும் அவற்றில் பாடப்பட்டன. இயற்கைப் பொருள்களும் தொழில் முதலிய வகைகளும் வாழ்வுக்காக அமைந்தவை.

    ஆகையால், காதல்வாழ்வே அந்தப் பாடல்களின் உரிப்பொருள் என்று போற்றப்பட்டது. அந்த வாழ்வை எடுத்துக்காட்டும் பொருள்களாக உள்ள மரம், விலங்கு, பறவை, தொழில் முதலிவை கருப்பொருள்கள் எனப்பட்டன. அந்த வாழ்வுக்குப் பின்னணியாக விளங்கிய நிலமும் காலமும் முதற்பொருள்கள் எனப்பட்டன. இயற்கைப் பொருள்களும், தொழில்களும் பழக்கவழக்கங்களும் வேறுவேறாக இருந்தமையால் நாட்டுப் பாடல்களும் வெவ்வேறு வகையாக அமைந்தன. சங்க இலக்கிய காலத்தில் அந்த நாட்டுப் பாடல்களே புலவர்களின் கைப்பட்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்திணைப் பாடலாக அமைந்தன. அவற்றின் மரபுகளை ஒட்டிப் புலவர்களால் இயற்றப்பட்ட ஐந்திணைப் பாட்டுகளும் முழுவதும் கிடைக்க வழியில்லை.

    ஒரு காதல் நிகழ்ச்சியைக் கற்பனைசெய்து பாடும்போது இவ்வாறு அதற்கு உரிய நிலம், பொழுது, பறவை, விலங்கு, மரம், பூ முதலிய இயற்கைப்பொருள்களையும் அமைத்துப்பாடும் மரபு நெடுங்காலமாக இருந்துவந்தது.

    ஊர்ஊராக மக்கள் எழுதாமலே பாடிவந்த நாட்டுப் பாடல்களிலேயே அந்த மரபு இருந்து வந்தமையால் புலவர்கள் அந்த மரபுகளை அவ்வாறே கையாண்டு இலக்கியம் படைத்தனர். அதனால் .கணவனும் மனைவியும் ஊடல் கொண்டு பிணக்குவதைப் பாட விரும்பினால் புலவர் அதற்கு ஏற்ற வயல் சார்ந்த மரபு நிலத்தையும் அந்த நிலத்து இயற்கைப் பொருள்களையும் அமைத்துப் பாடவேண்டி இருந்தது. மலையையோ காட்டையோ பாடுவதற்கு அந்த மரபு இடம்தரவில்லை.

    நாட்டு மக்களின் எழுதா இலக்கியமாகிய நாட்டுப்பாடல்களிலேயே அவ்வளவு ஆழமாக அந்த மரபு வேரூன்றி இருந்தபடியால் எழுதும் இலக்கியத்தைப் படைத்த புலவர்களும் அந்த மரபை மீறாமல் போற்ற நேர்ந்தது. அதனால், அக்காலத்து அகப்பாட்டு, இயற்கை வர்ணனை மிகுந்துவிளங்கக் காண்கிறோம். இயற்கையைப் பாடுவதாகவே அமைந்த பாட்டுகள் போலச் சில தோன்றும். மனிதரின் காதலைப் பாடுதலே அந்தப் பாட்டுகளின் முதன்மையான நோக்கம்.

    ஐந்திணையில் காதல் குறிப்பு

    குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை, பாலைத்திணை ஆகியவை அன்பின் ஐந்திணை ஆகும்.

    ஒரு தலைவனும், தலைவியும் முதன்முதலாக ஒருவரை ஒருவர் கண்டு இயல்பாகவே அன்பு கொண்டு மனம்கலந்து உறவு கொள்வது குறிஞ்சித்திணையாகும்.

    அன்பால் நெருங்கிப் பிணைந்த தலைவனும், தலைவியும் பிரிந்து ஒரு குறிப்பிட்ட காலம்வரை அப்பிரிவைத் தாங்கிக்கொண்டிருந்தல் முல்லைத் திணையாகும். பிரிவு பல காரணங்களால் உண்டாகும்.

    இல்லற வாழ்வில் தலைவன் பல காரணங்களால் வெளியிடங்களில் அடிக்கடித் தங்கிவந்தால் தலைவி கோபமுற்று ஊடல் கொள்வது மருதத்திணையாகும்.

    ஏதோ ஒரு காரணத்தால் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் குறித்த காலத்திற்குள் வரமுடியாது கால தாமதம் ஆவதால் தலைவிக்கு ஏற்படும் வருத்த்தைப்பற்றிக் கூறுவது நெய்தல்திணையாகும்.

    மணந்துக்கொள்ளும் பொருட்டுத் தலைவன் முயன்று பொருள் தேடவோ, மேலும் கல்விகற்கவோ அரச கட்டளையால் தூது செல்லவோ பிரியும் பிரிவு பாலைத்திணையாகும்.

    களவு

    களவு என்பது ஒத்த பருவம், உருவம் முதலிவையுள்ள ஒருவனும், ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டுக் கூடும் கூட்டம். தமக்கேற்ற வாழ்க்கைத் துணைவரைத் தாமாகவே தேர்ந்தெடுத்துக் கொள்வது இதில் பேசப்படும்.

    கற்பு

    கற்பு என்பது களவொழுக்கம் ஒழுகிக் காதலன்பு முதிர்ந்து மணந்து கொண்ட காதலர் ஒரு மனப்பட்டு இல்லறம் நடத்துதல் ஆகும். 

    இல்லறம்

    தலைவனும் தலைவியும் கொடுக்கும் முறைமையையுடைய பெற்றோர் உடன்பட்டுக் கொடுப்ப மணஞ்செய்துகொண்டு நடத்தும் இல்லற வாழ்க்கையே கற்பு வாழ்க்கை. இல்லறமே கற்பு ஆகும். இக்கற்பு வாழ்க்கை, களவொழுக்கம் முற்றி விளைந்த விளைவு. களவொழுக்கத்தின் கனி கற்பு; அஃதாவது அன்பின் வெற்றி ஆகும்.

    தலைவனும் தலைவியும் எதிர்பட்டுக் கொண்ட காதலன்பு கெடாமல் இருவரும் மணந்து கொண்டு இல்லறம் நடத்துதலும், தலைவன் பிரிந்தால் தலைவி அன்பு வழுவாமல் ஆற்றியிருந்து வெற்றி பெறுதலும் உடைமையின் இது கற்பு எனப்படும். “மறை வெளிப்படுதல் கற்பு” கணவன் மனைவி இருவரையும் ஒன்றுபடப் பிணித்து நிற்கும் மனங்கலந்த அன்பின் பயனே கற்பு வாழ்க்கை.

    இன்பம்

    இன்பம் என்பது அகப்பொருளின் கூறு. ஆண், பெண் என்னும் இருபாலின்கண் நிகழ்வது, மக்களேயன்றி மற்ற விலங்கு, பறவை முதலிய உயிர்களுக்கும் ஆண், பெண் என்னும் கூறுபாட்டால் பொருந்தி நிகழ்வது; எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் என்பது தொல்காப்பியக் குறிப்பு.

    ஆண் பெண் புணர்ச்சிக்குக் காரணமாகிய காதல் ஒருவனும் ஒருத்தியும் தாமாகவே எதிர்ப்பட்டுக் கூடுதல் இயற்கையாதலால், அதைத் தடைசெய்வதும், இழித்துக் கூறுவதும், அகப்பொருளின் உண்மையை இயற்கையாற்றலை – இன்றியமையாப் பயன்பாட்டை அறியாக் குறையேயாகும். வாழ்க்கை நலத்திற்குக் காரணமான அகவொழுக்கமென்னும் பேரின்பத்தினைத் தகாத வழியில் செலுத்தியும் தவறான பொருள்கொண்டும் சிற்றின்பம் என இழிவுபடுத்தி விட்டனர்; மக்கள் விலக்கத்தக்க பொருள்களில் ஒன்றாகச் செய்து விட்டனர். இது சமயச் சார்பில் நேர்ந்த தவறு.

    உலகுயிர்த் தோற்றமே ஆண் பெண் இருகூறாய் அமைந்திருக்க, அவற்றின் கூட்டுறவே உலகுயிர்த் தோற்றத்திற்குக் காரணமாய் அமைந்திருக்க அஃது எவ்வாறு சிற்றின்பமாகும்? உயிர்கள் அடையும் இன்பங்களில் பேரின்பம் அதுவே. “ கண்ணால் கண்டும், காதல் கேட்டும், வாயால் உண்டும், மூக்கால் மோந்தும், உடம்பால் தீண்டியும்” இன்புறும் ஐவகையான இன்பமும் பெண்ணிடத்தேயுள்ளன”; இவளோடு கூடி வாழும் இன்பத்தை விட உலகில் மிகுதியான இன்பம் வேறு எதுவுமில்லை என்பது வள்ளுவர் கருத்து.

    காதலின் பெருமை

    இருவேறு உருவினரான ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்கி “ இருதலைப் புள்ளின் ஓருயிராம்” என்னும் நிலையை உண்டாக்கி, ஒருவர்க்கு உண்டான நலக்கேடு இருவர்க்கு ஒத்த பங்காகக் கொண்டொழுகும்படிச் செய்வது காதல்.

    காதலன் ஒருவன் தன் காதலியிடம் எனது தாயும் நினது தாயும் ஒருவருக்கொருவர் எம் முறையினராவர்? என் தந்தையும் நின் தந்தையும் ஒருவருக்கொருவர் என்ன முறையையுடைய சுற்றத்தினர்? ஒரு முறையும் இல்லையே! அவ்வாறிருக்கவும், நானும் நீயும் எவ்வாறு ஒருவரையொருவர் அறிந்தோம்? முன்பின் அறியாதவர் நாம் அவ்வாறிருந்தும் நம் அன்புடைய நெஞ்சங்கள் பயிர் செய்வதற்குத் தகுதியாக உழுது பண்படுத்தப்பட்ட செம்பாட்டு நிலத்தில் பெய்த மழைநீர் போலக் கலந்துவிட்டனவே! என்னே காதலின் பெருமை! இன்னார் என்று அறியாத இருவர் நான் நீ என்னும் வேறுபாடின்றி ஒருமைப்பட்டதை என்னவென்பது? எனும் குறுந்தொகை காதலின் பெருமையை நன்கு விளக்குவதாகும்.

    “யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
     எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
     யானும் நீயும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே: – (குறுந் – 40) 

    காளைப் பருவத்தையும் கன்னிப் பருவத்தையும் அடையுமுன் ஆண் பெண் இருவரும் ஒருவரையொருவர் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. திடீரென ஒருநாள் எதிர்ப்பட்டு அன்புகொள்ளச் செய்யும் பெருமையுடையது காதல்.

    காதல் மனம்

    ஒருவனும் ஒருத்தியும் காதற் கலப்புற்று வரும்போது சிலர் தம் தோழர்களிடம் தமது கருத்தை வெளியிடுவர். சிலர் தம் காதலியிடம் நெருங்கிப் பழகும் பெண்களிடம் தெரிவிப்பர். இம்முறை இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது.

    சில பெண்கள் தம் தோழியரின் குறிப்பு வேறுப்பாட்டைக் காதற் குறிப்பைக் குறிப்பால் உணர்ந்து அவளது பெற்றோரிடம் கூறுவர். சில பெண்கள் தம் தோழியரிடம் தாங்கொண்ட காதலைக் குறிப்பால் உணர்த்துவர். சிலர் தம் பாட்டியரிடம் கூறுவர். அப்பாட்டியர் பெற்றோரிடம் கூறுவர். பெற்றோர் மனமுவந்து  அக்காதலர்க்கே மணமுடிப்பர்.

    காதலர்களின் காதற் கலப்பு பெரும்பாலும் பிறர்க்குத் தெரியாமல் நடைபெறும். அவர்களது காதலைப் பெற்றோரே அறிந்து மணம் முடிப்பதுமுண்டு. காதலர்களின் தோழரும் தோழியரும் அவர்தம் பெற்றோர்க்கு மணம் முடிப்பதும் உண்டு.

    சங்க இலக்கியத்தில் கற்பு பற்றிய சொற்கள்

    மாசில் கற்பு, முல்லை சான்ற கற்பு, கடவுட் கற்பு, நகரடங்கிய கற்பு, நிலைஇய கற்பு, அடங்கிய கற்பு, உவர் நீங்கு கற்பு, மறுவில் கற்பு, அருந்ததி அனைய கற்பு போன்ற பல தொடரமைப்புக்கள் கற்பின் மேம்பாட்டை உணர்த்துகின்றன.

    களவிலும் – கற்பிலும் – புணர்ச்சி

    “கண்தர வந்த காம ஒள்எரி
    என்புஉற நலியினும் அவரொடு பேணிச்
    சென்று, நாம்முயங்கற்கு அருங் காட்சியமே…(குறுந் -305)

    கண்தர வந்த காமம் என்றது அவனைக் கண்ட போதே அவன்பால் விருப்புடையார் ஆயினதைக் குறித்தாம்; அதனை ஒள்எரி என்றது, சுடரிட்டுப் பலரும் காண நிகழ்வது; அங்ஙனமன்றி எவரும் காணாவிடத்து நிகழும் குப்பைக் கோழிப்போர் என்றனள். களைவார் இலர் என்றது, தோழி நீதான் அதனைப் போக்காயோ, எனக் குறிப்பால் தோழியை வேண்டியதாம்.

    உள்ளப் புணர்ச்சி

    ஆண் பெண் உறவுக்குக் காதல் காரணம் என்றோம். காதலுக்குப் பால் காரணம் என்றோம். அறிதோறும் அறியாமை கண்டதல்லது என்ன விளக்கம் கண்டோம்? ஒத்த தலைவனும் தலைவியும் காதற் குறிப்பொடு காண்பர் எனின், அவ்விருவரும் ஒத்தவர்களாக இருப்பதற்குக் காரணம் பிறிதுண்டோ? ஒப்பு என்பது எது? அஃது ஒரு பிறவி யொப்பா பல்பிறவி யொப்பா?

    “இம்மை மாறி மறுமையாயினும்
    நீயா கியரென் கணவனை
    யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே – (குறுந் – 49) 

    இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் என் கணவனை யான் ஆகியார் நின் நெஞ்சு நேர்பவளே என்பதைக் கவனிக்க வேண்டும். நின்னால் மாண்புற்ற போதும் இம்மைக்கண்ணும் அவர் நின் மனைவியர் ஆகார். நீயும் அவர்க்குரிய கணவன் ஆக மாட்டாய். மறுமையின்கண் தொடர்ந்து பெறும் நட்புக் கற்புடையாட்டியாகிய எனக்கன்றி அவர்க்கு வாயாது என்று கூறித் தலைவனிடத்தே தான் கொண்ட உழுவலன்பை உணர்த்துகின்றன.

    கற்பு – திருமணமாக முடியுங்கால் களவுநெறி, நன்னெறி எனப் போற்றப்படும். இன்றேல் கள்ளத்தனம் என இகழப்படும். கற்பென்னும் மணவாழ்க்கைக்கு முன்னரெல்லாம் களவென்னும் மறைவுநெறி ஒருதலையாக நடக்க வேண்டுமோ எனின் இல்லை. களவின் முடிபு கற்பு என அகத்திணை வலியறுத்தும்;. கற்பு வழக்காவது தலைவியைக் கொடுத்தற்குரியோர் கொடுப்பக் கரணமுறையால் தலைவன் ஏற்றுக் கொள்வதாகும்.

    “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
     கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
     கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே”
     (தொல் – 1087 )

    தொல்காப்பியர் தமிழ்ச் சமுதாயத்தின் மணமுறையைச் சுருக்கமாக உரைப்பர். திருமணம் என்னும் கட;டுப்பாடு யாண்டும் இன்றியமையாதது; மாறாதது. மணச்சடங்குகள், தேயந்தோறும், இனந்தோறும் வேறுபடுவன; காலந்தோறும் கூடுவன, குறைவன மயங்குவன. ஆதலின் வாழ்வியலறிஞர் தொல்காப்பியர் கற்பென்னும் தலையாய அறத்தை வலியுறுத்திக் கரணமொடு புணர என்று சடங்கினைப் பொதுப்படக் கூறினார்.

    “பொன்னவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
     மென்முலை முற்றம் கடவா தோரென
     நற்றென் கங்குலும் பகலும் இயைந்தியைந்து
     உள்ளம் பொத்திய உரஞ்சுடு கூரெரி   – ( அகம் – 279) 

    நண்பினர் பிடியையும் உறவினர் துயரத்தையும் பகைவர்களின் எக்களிப்பையும் உள்ளுரில் இருந்தே பார்த்துக் கொண்டிருப்பர். அவர் யாரெனின் பொன்னிறச் சுணங்கும் திரட்சியும் வீக்கமும் மென்மையும் பொருந்திய முலைத்தடத்தை விட்டு அகலமாட்டா ஆடவர்கள்.

    “இல்லோர்க் கில்லென் றியைவது காத்தல்
    வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
    பொருளே காதலர் காதல்…” (அகம் -53)

    காதலர் காதல் மாறிவிட்டது எனவும் அதற்குக் காரணம் ஈகைப்பற்று எனவும் தலைமகளே கூறுதல் காண்க. நாடுகாவற் பிரிவு, பகைவயிற் பிரிவு, தூதிற் பிரிவு, ஓதற் பிரிவு, பரத்தையிற் பிரிவு எனப் பிரிவு வகைகள் பல. இவற்றினும் பொருள்வயிற் பிரிவே எல்லார்க்கும் உரியது. களவிற்கும் கற்பிற்கும் பொதுவானதாகும்.

    பார்வை நூல்கள்: 

    தமிழ்க் காதல்    –   வ.சுப. மாணிக்கனார்
    குறுந்தொகை    –   புலியூர்க்கேசிகன்
    அகநானுறு         –   புலியூர்க்கேசிகன்
    தமிழ் இலக்கிய அறிவுக் களஞ்சியம்   – செந்துறையான்
    தமிழ் இலக்கிய வரலாறு      – மது. ச. விமலானந்தம்
    தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்   – க. பிரகாஷ்

    ***

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்.பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் களஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

    Share
  • நீதி இலக்கியங்கள் கூறும் அறக்கொள்கைகள்

    -க.பிரகாஷ்  

    நீதிஇலக்கியம் என்பது சங்க மருவிய கால இலக்கியம் அதாவது சங்க காலத்திற்குப் பின்னா்த் தமிழில் தோன்றிய இலக்கியங்களைக் குறிக்கும். கி.பி. 3- ஆம் நூற்றாண்டு முதல் 6- ஆம் நூற்றாண்டுவரை அறம் வலியுறுத்தும் நீதி நூல்கள் இருந்தன. சங்க காலத்திற்குப் பின்னா் தமிழகத்தில் களப்பிரா்கள் ஆட்சி ஏற்பட்டு, தமிழில் புது இலக்கியங்கள் தோன்றாவண்ணம் தடையான சூழல் நிலவியதாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தால் களப்பிரா் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்டகாலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில், சங்க காலத்தில் போற்றப்பட்ட காதலும் வீரமும், பின்தள்ளப்பட்டு அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.

         பிற்காலத்தினா் தொகை நூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும் கீழ்வரிசை நூல்கள் என்றும் பிரித்தனா். குறைந்த அடிகளையுடைய பாடல்களுக்குக் கீழ்வரிசை அல்லது கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகள் அமைந்த பாடல்களுக்கு மேல்வரிசை அல்லது மேற்கணக்கு நூல்கள் என்றும் பெயரிடப்பட்டது.

    மேற்கணக்கு நூல்கள் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும்; அவற்றின் எண்ணிக்கை பதினெட்டு. கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணிக்கையும் பதினெட்டே. மேற்கணக்கு நூல்கள் எல்லாம் பெரும்பாலும் மூன்றடி முதல் ஆயிரம் அடி வரையிலும் எழுதப்படும். அவை ஆசிரியப்பாவால் ஆனவை. கலிப்பா, பரிபாட்டு, வஞ்சிப்பா ஆகிய பாக்களைக் கொண்ட பாடல்கள் மேற்கணக்கில் உள்ளன. கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் இரண்டடி முதல் எட்டடி வரையிலும் உள்ள வெண்பாக்களால் ஆனவையே ஆகும்.

       “நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்
         பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,
         இன்னிலைய காஞ்சியோடு, ஏலாதி என்பவே
         கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.”

    இந்நூல்களில் பண்டைத் தமிழர்களின் சிறந்த ஒழுக்கங்களைக் காணலாம். சமுதாய அமைப்பு, அரசியல்முறை, பழக்க வழக்கங்கள், நாகரிகம், பண்பாட்டையும் அறநூல்கள் எடுத்துரைக்கின்றன. இது மட்டுமல்லாமல் மனிதன் வாழ்வைக் குணப்படுத்தும் அளவிற்குத் தன் கருத்துக்களை மருந்து போல் எடுத்து விளக்குவது அற நூலாகும்.

    அற இலக்கியங்களாகிய திருக்குறள், திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய நூல்கள் மருந்து போன்ற அருங்கருத்துகளைக் கொண்டிருக்கின்றன.

    சமண, பௌத்த சமயங்களின் வரவால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இந்தப் பதினெட்டு நூல்களில் பதினோரு நூல்கள் அற நூல்களாக அமைந்தன. இந்நூல்களின் ஒவ்வொரு பாடலும், பாடலின் ஒவ்வோர் அடியும் அறக்கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அக்கருத்துகள் பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, கள்ளாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் கூறல், ஈகை, அன்புடைமை முதலியன.

    திருக்குறளில் மருந்து

    பழவினையானும், காரணங்களானும் மக்கட்கு வாதம் முதலிய பிணிகள் வரும். மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளின் மருந்து என்ற அதிகாரத்தில் திருவள்ளுவா் மருத்துவம் பற்றிய பத்து குறட்பாக்களை கூறியுள்ளார்.

    “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின்”  (குறள் – 942)

    தான் முன்புஉண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து, அடுத்த வேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்று தேவையில்லை என்பது இங்கே வள்ளுவம் கூறும் கருத்தாகும்.    

    “பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு. பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைப்படும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.

    “ஒருவேளை உண்பான் யோகி
    இருவேளை உண்பான் போகி
    முப்போதும் உண்பான் ரோகி
    எப்போதும் உண்பான் துரோகி” – 

    ஒருவன் அளவுக்கு மீறினால், தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான் என்பதே கருத்து.

    “அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
    பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு”  (குறள் – 943) 

    அற்றால் அளவறிந்து உண்க. முன்னுண்டது அற்றால் பின்னுண்பதனை அறுமளவு அறிந்து அவ்வளவிற்றாக உண்க. உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது – இறப்பவும் பலவாய பிற யாக்கைகளிற் பிழைத்துப் பெறர்க்கு அரிய இம்மானுட யாக்கையைப் பெற்றான் அதனை நெடுங்காலம் கொண்டு செலுத்தும் நெறி அதுவாகலான். (இம்மை மறுமை வீடுபேறுகள் எய்தற்பாலது ஈதொன்றுமேயாகலின் உடம்பு பெற்றான் என்றும் அது நெடிது நின்றுழி அவை பெருகச்செய்து கொள்ளலாம் ஆகலின், நெடிது உய்க்குமாறு என்றும் கூறினார்.)

    “இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய்” (குறள் – 946) 

    குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.

    திரிகடுகத்தில் அறம்

    திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்னும் மூன்று கீழ்க்கணக்கு நூல்களும் பெயர் அமைந்துள்ள வகையிலும் நீதிப் பொருள்களைப் பாக்களில் வகுத்துத் தந்த வகையிலும் பெரிதும் ஒப்புமை உடையனவாகும். இம் மூன்றும் நோய் நீக்கி உடல்நலம் பேணும் மருந்துகளின் பெயர்களாம். இந்நூல்கள், பாடல்கள் தோறும், மூன்று, ஐந்து ஆறு என்ற அரிய கருத்துக்களை அருமையான முறையில் அமைத்துக் கொடுத்துள்ளன.

         “உலகில் கடுகும் உடலின் நோய் மாற்றும்
          அல(கு)இல் அகநோய் அகற்றும் – நிலைகொள்
          திரிகடுகம் என்னும் திகழ்தமிழ்ச் சங்கம்
          மருவுநல் லாதன் மருந்து”     

    சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருள்களைக் கொண்டதே திரிகடுகம் ஆகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திவாகரம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய திரிகடுகம் என்னும் அரிய மருந்து ஒருவர் உடல் நோயைப் போக்கும். அது போல் இந்நூலில் வரும் ஒவ்வொரு பாட்டிலும் சொல்லப்படும் மூன்று அறநெறிகளும் மனிதர்களுடைய அறியாமையாகிய நோயைப் போக்கும்.

    “பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து
    தாழ்விடைத்து நோ்கருதும் திட்டையும் – ஊழினால்
    ஒட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவா்
    நட்கப் படாஅ தவா்”   (பாடல் – 15) 

    பொய்யான சொற்களைப் பேசி அதனால் உயிர்வாழ்கின்ற அழிவற்றவனும், முறைமைமாறி ஒருவன் தாழ்ந்த இடத்துத் தன்னை உயா்ந்தவனாகக் கருதும் மூங்கில் போன்ற புரைபட்ட மனத்தையுடையவனும், பிறரிடம் சோ்ந்து வினை ஆற்றும் போது தனக்குரிய பயனையே எதிர்பார்த்து செயல் செய்கின்றவனும் ஆகிய இம் மூவரும் யாராலும் நட்புக் கொள்ளத் தகுதியற்றவா்கள் ஆவார்கள்.

    “ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்கு
    இருதலையும் இன்னாப் பிரிவும் – உருவினை
    உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்
    கள்வரின் அஞ்சப் படும்”  (பாடல் – 18) 

    உறுதியாக வந்தடையும் கிழப்பருவமும், நண்பரிடையே ஏற்படும் பெருந்துன்பத்தைச் செய்கின்ற பிரிவும், உடம்பைக் கரையச் செய்து வருத்துகின்ற தீராத நோயும் ஆகிய இம்மூன்றும் கள்வரைவிட அஞ்சக் கூடியவை.

    சிறுபஞ்சமூலம் கூறும் அறம் 

    ஐந்து சிறு வேர்களுடைய பெயர்களை கொண்டு சிறுவழுதுணைவேர், நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், கண்டங்கத்திரி வேர் ஆகிய ஐந்து வேர்களை கொண்டதுதான் சிறுபஞ்சமூலம் ஆகும்.

    வேர்களால் தயாரிக்கப்படும் இச் சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலத்தைப் போற்றுவதுபோல அதில் வரும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லப்படும் ஐந்தைந்து கருத்துக்களும் மனித வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படுவனவாக உள்ளன. அவர்களின் அறியாமையாகிய நோயைப் போக்கக் கூடிய வகையில் சிறு பஞ்சமூலம் குறிப்பிடும் பாடல்கள் அமைந்துள்ளன.

    இப்பாடல்கள் வெண்பாவில் யாக்கப்பட்டுள்ளன.

    “ஒத்த ஒழுக்கம் கொலைபொய் புலால் களவொ(டு)
          ஒத்த இவையல வோர் நாலிட்(டு) – ஒத்த
          சிறுபஞ்ச மூலம் சிறந்து” – (பாடல் – 02)

    கொலை, பொய், புலால், களவோடொத்த இவையன்றி இவற்றுக்கு மறுதலையாகிய கொல்லாமை, புலால் மறுத்தல், உண்மை பேசுதல், கள்ளாமை, என்று சொல்லப்பட்ட நாலோடு ஒழுக்கத்தையும் சேர்த்து இவ்வைந்தும் அகப்பட மிகுதியான பஞ்சத்தைத் தீர்க்கும் மழைபோல அறியாமையாகிய நோயைப் போக்குகின்ற சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூலை சிறப்பாக கூறுகிறார்.

    “கல்லாதான் தான்காணும் நுட்பமும் காதிரண்டும்
    இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும் – இல்லாதான்
    ஒல்லாப் பொருளில்லார்க்கு ஈததளியான் என்றலும்
    நல்லவா்கள் கேட்பின் நகை” – (பாடல் – 5) 

    • கல்வியறிவில்லாதவன் தானே ஆராய்ந்து காண்கின்ற நுட்பமான பொருளும்
    • இரண்டு காதுகள் இல்லாதவள் தான் மிக்க அழகுடையவள் என்ற இறுமாப்பு கொள்ளுதலும்
    • பொருளில்லாதவன் இல்லாதார்க்கு ஈத்தறியான் என்றாலும், தான் வறியவரிடத்து மிக்க அருளுடையவன் என்றலும்
    • அறிவுடையவா்களாகிய சான்றோர்கள் கேட்பின் நகைப்பர்.

    “கொண்டான் வழியொழுகல் பெண்மகன் தந்தைக்குத்
    தண்டான் வழியொழுகல் தன்கிளை அஃது அண்டாதே
    வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு
    கோல்வழி வாழ்தல் குணம்”  (பாடல் – 15) 

    • தன்னை மணந்து கொண்டவன் சொற்படியே ஒரு பெண் ஒழுகல்
    • மகன், தந்தையின் சொல்லைத் தட்டாதவனாய் அவன் சொல்படி நடத்தல்
    • போரின்கண் வீரா்கள் பகைவரோடு சேராமல் தன்மன்னனோடு வாழ்தல்,
    • குடிமக்கள் அரசனது கோல்வழியே வாழ்வதும் அவரவர்க்குரிய குணங்களாம்.

    ஏலாதி கூறும் அறம்

    ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறு பொருள்கள் குறிப்பிட்ட அளவோடு சோ்க்கப்பட்ட ஒரு வகைச் சூரணமே ஏலாதியாகும். இச்சூரணம் உடலுக்கு வலிவையும், பொலிவையும், தெம்பையும் தரவல்லது. இதுபோல் இப்பாடல் குறிப்பிடும் ஆறு அறக்கருத்துகள் மக்களுடைய அறியாமை நீக்கி அறிவுடையோராக மாற்றுவதாகும்.

    கொலை, களவு, பொய், காமம், கள் என்னும் ஆகியவற்றை நீக்குதல் எனும் சமண சமயத்தின் அறநெறிகளை இந்நூல் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. இல்லறம், துறவறம், விருந்தோம்பல், ஒழுக்கமுடைமை போன்ற உயா்ந்த கருத்துக்களையும் சிறந்த முறையில் எடுத்துக்காட்டுகின்றது.

    “கருஞ்சிரங்கு வெண்தொழுநோய் கல்வளி காயும்
    பெருஞ்சிரங்கு பேர்வயிற்றுத் தீயார்க்கு – அஞ்சிரமம்
    ஆற்றயூன் ஒத்(து) அவை தீா்த்தார் அரசராய்ப்
    போற்றியூண் உண்பார் புரந்து” – (57)

    • கொடிய சிரங்கு நோயும்
    • வெள்ளைத் தொழுநோயும்
    • கல்லடைப்பு நோயும்
    • வாத நோயும்
    • வருந்துகின்ற பெருஞ்சிரங்கு நோய்,
      பெரிய வயிற்றுத் தீநோய் – ஆகிய நோய்களுடையவர் பெரும் துன்பத்தை, அடைகின்றனர். அவர்களுக்கு உணவைக்கொடுத்து அந் நோய்களை நீக்கியவா்கள் மன்னராய் அனைவராலும் போற்றப்பட்டு உலகாண்டு வாழ்வர்.

    “பொய்தீர் புலவா் பொருள்புரிந் தாராய்ந்த
    மைதீா் உயர்கதியின் மாண்புரைப்பின் – மைதீர்
    சுடரின்று சொல்லின்று மாறின்று சோர்வின்(று)
    இடரின்(று) இனிதுயிலும் இன்று”  (66) 

    • பொய்ம்மை நீங்கிய சான்றோர்கள் விரும்பி ஆராய்ந்த மெய்ப் பொருளாகிய குற்றமற்ற வீடுபேற்றின் மாட்சியைச் சொல்லுமிடத்து.
    • அங்கு இருளை நீக்கும் ஞாயிறு இல்லை
    • உரையில்லை
    • நிலை மாறுதல் இல்லை
    • தளர்ச்சி இல்லை
    • துன்பமில்லை
    • இனிய துயிலுமில்லை

    வீடுபேற்றில் பகலிரவு முதலானவை இல்லை என்பதாம் இப்பாடல் கருத்து.

    ஒரு மனிதனுக்கு ஏற்படும் நோயைக் குணப்படுத்துவதற்கு எந்த அளவிற்கு மருந்து முக்கியமோ அதுபோல் ஒரு மனிதன் வாழ்வதற்குச் சில கொள்கைகளைக் கைப்பிடிக்க வேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி, சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்திரி வோ், ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ இவ்வகையான மருத்துவப் பொருட்களை அளவின்றி அருந்தினால் உடல் சரியான நிலையில் இருக்கும்.

    பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, கள்ளாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் கூறல், ஈகை, அன்புடைமை, இல்லறம், துறவறம், விருந்தோம்பல், ஒழுக்கமுடைமை இது போன்ற சிறந்த கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நோயிலிருந்து குணமடைவதுபோல், உள்ள(மன)நோய் நீங்கி இயல்பான நிலையில் வாழ்க்கையைக் கடைப்பிடித்து நல்லவண்ணம் வாழலாம்.

    ***

    பார்வை:

    திருக்குறள் – பரிலேழகர் உரை.
    பதினெண் கீழ்க்கணக்கு பகுதி – 3 – துரை. இராசாராம்

    ***

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்.பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46
     

    Share
  • நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவம்

    -க.பிரகாஷ்  

    ஒவ்வொரு மனிதச் சமுதாயமும்  தனக்கென ஒரு மருத்துவ அமைப்பு முறையைக் கொண்டுள்ளது. அதனைச் சமூக நிறுவனம் என்றே கூறலாம். நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாததாகும். நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் என்பர். இவற்றை “கை வைத்தியம், நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், மூலிகை மருத்துவம், வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், இயற்கை வைத்தியம் என்றெல்லாம்”கூறுவார். (ETHNO MEDICINE, FOLK MEDICINE, POPULAR MEDICINE, POPULAR HEALTH CULTURE, ETC.,) மிகப் பழமையான மருத்துவ முறை என்று ஆயூர்வேத மருத்துவ முறையைக் குறிப்பிடுவார். நாட்டுப்புற மருத்துவம் வேத காலத்திலேயே நடைமுறையில் இருந்தது.

    நாட்டுப்புற மருத்துவமுறை பற்றி இந்திய நாட்டில் விரிந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. பழங்குடிகளை ஆராய்ந்து மேலைநாட்டு மானிடவியலறிஞர்கள் நாட்டுப்புற மருத்துவம் பற்றிச் சில குறிப்புகளை எழுதியுள்ளனார். இம்மருத்துவ முறை கிராமப்புற மக்களின் பண்பாட்டோடும், பழக்கவழக்கத்தோடும் சமூக அமைப்போடும் பின்னிப்பிணைந்துள்ளது. அவர்களது நம்பிக்கைக் கேற்ப நவீன மருத்துவ முறைகளையும் மேற்கொள்கின்றனா். பழங்குடி மக்களிடையேயும் நாட்டுப்புற மருத்துவம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

    அவை…

    வீட்டு வைத்தியம்

    சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள் போன்றவை வீட்டுப் trikadukamபுழக்கத்திற்கான பொருள்கள். இவை நோய்களைத் தீா்க்கும் மருத்துவ குணம் பெற்றவையாகவும் திகழ்கின்றன. வீட்டுச் சமையலுக்கான பயன்பாட்டுப் பொருள்களே மருந்துகளாகி நோய்களைப் போக்க உதவியதால் இது வீட்டு வைத்தியம் எனப் பெயர்பெற்றது. தங்களது அனுபவத்தின் அடிப்படையில் செய்திருக்கும் மருத்துவம் வீட்டு வைத்தியமாகும்.

    பரம்பரை வைத்தியம்

    தந்தை மகனுக்குச் சொல்ல மகன் அவன் மகனுக்குச் சொல்ல ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொன்ன தொழில் முறையான மருத்துவ முறை பரம்பரை வைத்தியம் ஆகும்.

    இயற்கை வைத்தியம்

    ஒவ்வொரு மனிதனிடமும் நோய் வராமல் தடுக்கும் சக்தியும், நோய்வந்தால் அதனைத் தடுக்கும் சக்தியும் இயற்கையாகவே அமைந்துள்ளது. இது இயற்கை மருத்துவம் ஆகும்.

    மூலிகை வைத்தியம்

    மருத்துவ குணங்கள் அடங்கிய செடி, கொடி, வேர், தாவர வகைகளைக் கொண்டு நோய்களைப் போக்கும் மருத்துவமுறை மூலிகை வைத்தியம்  ஆகும்.

    கை வைத்தியம்

    நாட்டு வைத்திய முறைகளில் கைப்பக்குவம் என்பது முக்கிய இடம் பெறுகிறது. மருந்துப் பொருள்களை இடிப்பதும் அரைப்பதும், மருத்துவச் செயல்களாகக் கொண்டு இருந்தனா். இடித்து அரைத்து மருந்துகளின் சீரான தன்மையைக் கைவிரல்களால் தொட்டுத் தடவிப் பார்த்து, அதன் பக்குவம் அறியப்படுகிறது. மருந்தின் அளவை ஒரு கைப்பிடி அல்லது ஒரு சிட்டிகை என்று சொல்லும் போக்கு கிராமங்களில் உண்டு. மருந்தைப் பதம்பார்க்க கைப்பக்குவம் பயன்படுவதால் நாட்டு மருத்துவத்திற்குக் கை வைத்தியம் எனப் பெயா் வந்தது. தனக்கு வந்த நோயைத் தானே போக்கிக் கொள்வதற்குக் கை வைத்தியமே ஒரு முக்கியப் பங்காக அமைகிறது.

    பச்சிலை வைத்தியம்

    செடி வகையைச் சார்ந்த ஒரு வகை மூலிகை பச்சிலை எனப்படும். தாவரத்தின் இலைகள் நல்ல மணத்துடன் கசக்கினால் சாறு வரக்கூடியதாக இருக்கும். இதன் இலைகளும், விதைகளும், மருத்துவ குணமுடையவையாகச் சொல்லப்படுகிறது. தலைவலி, இருமல் போன்ற நோய்களுக்குப் பச்சிலை நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. நோய்களைத் தீா்ப்பதால் இதற்குப் பச்சிலை வைத்தியம் என்று பெயா்வந்தது.

    எ.கா.

    அம்மை : வேப்ப இலை மீது படுக்கச் செய்தல்.

    காது வலி : சுரைக்காய் இலைச் சாற்றைக் கசக்கிக் காதில் விடுதல்.

    முதுகு வலி : புளியந் தழையை  ஒட்டுதல்.

    இராஜ வைத்தியம்

    மன்னர்கள் காலத்தில் மன்னனுக்கு மருத்துவம் பார்க்கும் அரண்மனை மருத்துவா் இராஜ வைத்தியா் என்றழைக்கப்பட்டார். புகழ்பெற்ற மருத்துவா் அவிசென்னா அரபி மன்னரின் அரசவை  மருத்துவராக 16 வது வயதில் நியமிக்கப்பட்டார் என்னும் செய்தி மூலம் அக்காலத்தில் அரண்மனை மருத்துவா்களின் முக்கியத்துவம் தெளிவாகிறது. அரசரின் நோய் தீா்க்கும் மருத்துவா் எடுத்துக்கொள்ளும் பெரும் முயற்சியையும் மருத்துவத்திற்கு உண்டாகும் பெரும் பொருள் செலவையும் மனதிற் கொள்ளும் மருத்துவமுறை இராஜ வைத்தியமாகும். 

    இரகசிய மருத்துவம்

    நோயைக் குணமாக்கும் மருந்து மற்றும் அந்த மருத்துவ முறைகளை வெளியில் சொல்லாமல் தொழில்முறையில் செய்துவரும் மருத்துவ முறை இரகசிய மருத்துவ முறையாகும்

    பாட்டி வைத்தியம்

    உணவே மருந்து” என்பது அனுபவ மொழி.

    சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள், கீரை வகைகள் ஆகியவை மருத்துவ குணங்கள் மிக்கவையாகக் கருதப்படுகிறது. காலங்காலமாக வீட்டின் உணவுக் கூடங்கள் பெண்களின் பொறுப்பில் இருந்து வருவதால் இம்மருத்துவப் பயன்பாடுகளைப் பெரிதும் அவா்கள் அரிந்திருப்பார்கள்.

    உணவு வகைகள் பல குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளும். சிலரின் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாமல் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இவற்றை அருகிலிருந்து பார்த்துத் தம் பட்டறிவால் அதனைச் சரிசெய்ய முயல்வதில் தாயே முதலிடம் வகிக்கிறாள். இதுவே பழக்கவழக்கமானது. எனவே இதற்குப் பாட்டி வைத்தியம் எனப் பெயா் வந்திருக்கலாம்.

    ஒரு நோயை குணப்படுத்துவதற்கு அக்காலத்தில் மரப்பட்டைகள், உணவுப்பொருட்கள், பச்சிலைகள், வேர்கள், கசாயம், காய்கள், கனிகள், செடிகள், தாவரக் கொழுந்துகள், தாவரங்களின் (பால்), பழங்கள், கீரைகள், போன்றவை பயன்படுத்தப்பட்டன. சிறு குழந்தைகளில் இருந்து பெரியவா்கள் வரையும் இம்மருத்துவமுறையைப் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தி வருவதுண்டு.

    இது மட்டுமல்லாமல் கிராம மக்கள் நம்பிக்கை சார்ந்த மருத்துவத்தையும் பயன்படுத்துவது உண்டு. மருத்துவா் கூறும் மந்திரங்களை வெளியில் சொன்னால் நோய் குணமடையாது (பலிக்காது) என்று குறிப்பிடுவதும் உண்டு. அவர்கள் பயன்படுத்தும் மந்திரங்களை வேறு யாவரும் பயன்படுத்தமுடியாது. அவர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மட்டுமே இம்மந்திரம் சொல்லிக் கொடுக்கப்படும். இம்மருத்துவத்தைப் பரம்பரை மருத்துவம் என்று குறிப்பிடுகின்றனர்.

    இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கில மருத்துவம் அளவுகடந்து இருந்தாலும் சில மலைவாழ் மக்களும், கிராம மக்களும் இவ்வகையான நாட்டு மருத்துவத்தைக் கைவிடுவதில்லை.

    ***

    பார்வை நூல்கள்

    • நாட்டுப்புற இயல் ஆய்வு – சத்திவேல்.சு
    • நாட்டு மருத்தவம் – சந்திரன்.ந

    ***

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

     

    Share
  • குறுந்தொகையும், குறிஞ்சியும்

    -க. பிரகாஷ் 

    கடல்கோள்களால் அழிவுற்றனபோக எஞ்சியவற்றைப் பாண்டிய, சேர அவையங்களில் புலவா்களைக்கூட்டித் திட்டமிட்டுத் தொகுத்துத் தந்தவையே பழந்தமிழ் இலக்கியப் பாடல்களாகும். அவையே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களாகும். தமிழ் இலக்கியம் – பண்பாடு, நாகரிகத்தின் ஊற்றுக்கண்ணாகும்.

    குறுந்தொகையென்னும் நூல் பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பட்டது. இதில் நான்கடிச் சிற்றெல்லைமுதல் எட்டடிப் பேரெல்லைவரை அமைந்த நானூறு பாடல்கள் அடங்கியுள்ளன. அடியளவால் குறுகிய இப்பாடல்களில் முதல், கருப்பொருளைவிட உரிப்பொருளே சிறப்பிடம் பெற்றுள்ளது.

    scan0004

    குறுந்தொகையில் தலைவன், தலைவி:

    ஊழ்வயத்தாலே ஒன்றுபடும் தலைவன் தலைவியரது வாழ்விலே ஏற்படுகின்ற கட்டங்கள் பல.  அவை, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், பாங்கியற் கூட்டம், பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி, இரவுக்குறியிடையீடு, வரைவுகடாதல், வரைபொருட் பிரிதல், அறத்தொடு நிற்றல், பொருள்வயிற் பிரிதல், பிரிவிடைத் தலைவனும், தலைவியும் ஒருவரையொருவா் நினைத்து புலம்பலும், ஏங்கலும், பிரிந்தவர் ஒன்றுபடுதல், பரத்தையரை நாடித் தலைமகன் பிரிதல், அவன் பழையபடி தலைவியோடு வந்து கூடுதல் என்னும் இவை போன்ற பலவாகும். இவர்களிடைத் தோன்றும் உள்ள நெகிழ்ச்சிகளையெல்லாம் நயம்பட அமைத்துக்காட்டுகின்றன இக்குறுந்தொகைச் செய்யுட்கள்.

    தமிழில் தொன்மையுடையது சங்க இலக்கியமே என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. தொல்காப்பியர் அகத்திணை ஏழு என்பா். அவை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்பவனாகும். இவற்றிற்கு ஏற்பப் புறத்திணையையும் ஏழு வகையாகக் குறிப்பிடுகிறார். அவை, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாகும். இதில் தொல்காப்பியா் அகத்திற்கே முதன்மைதந்து புறத்தைச் சார்புபடுத்தி விளக்குகிறார்.

    அக்காலத்தில் திணைப்பாடல்கள் வட்டாரப் பாடல்களாகத் திணைதோறும் வழங்கிவந்தன. நிலமே அதன் அடிப்படைப் பாகுபாட்டிற்கு காரணமாகும்.

    “அவற்றுள்
    நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
    படுதிரை வையம் பாத்திய பண்பே” – (948)

    எனவும்,

    மாயோன்மேய காடுறை உலகமும்
    சேயோன்மேய மைவரை உலகமும்
    வேந்தன்மேய தீம்புனல் உலகமும்
    வருணன்மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்…….(தொல்: 951) 

    எனக் கூறப்படும் தொல்காப்பிய நூற்பாக்களால் நிலவழியாக வளா்ந்த திணைப் பாங்கினை உணரலாம். நிலம், பொழுது, கருப்பொருள்களை வைத்தே முதற்கண் ஒரு பாடல் இன்ன திணையென உணரப்படுகிறது. முதல் என்பது நிலமும், பொழுதுமாகும். பொழுது என்பது சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும். கருப்பொருள்கள் என்பது அவ்வகை நிலப்பாகுபாட்டையும், அதிலுள்ள தெய்வம், பறவை, விலங்கு, உணவு, யாழ் உள்ளிட்டவற்றையும் குறிக்கும்.

    ஐவகை நிலத்தினர்:

    குறிஞ்சி நிலத்தவரே அளவளாவி இன்புறுவரென்பதும், முல்லைநில மகளிரே தலைவரைப் பிரிந்து ஆற்றியிருப்ப ரென்பதும், மருதநில மகளிரே தலைவருடன் ஊடிப்பிணங்கி இருப்பரென்பதும், நெய்தல்நில மகளிரே இரங்குவரென்பதும், பாலைநில மகளிரே பிரிவை நினைந்து புலம்புவரென்பதுமான ஒரு வரையறை உலகவாழ்வில் இல்லாதிருப்பினும், புலவா்கள் யாத்தமைக்கச் செய்யுட்களிலே இவ்வரையறைகள் காணப்படுகின்றன. இவற்றை நாடக வழக்கெனவும், நாடகப் புலவன் தானமைக்க நினைக்கும் காட்சிக்கேற்பக் களத்தைப் புனைந்தமைத்துக் காட்டுமாறு போலவே, புலவர்களும் காட்டிச் செல்கின்றனா். சிறுபான்மை உலகியலையும், பெரும்பான்மை புனைந்துரைகளையும் கொண்டு விளக்குவனவாகவே இச்செய்யுட்கள் அமைந்துள்ளன.

    திணை:

    திணை என்பது ஒழுக்கம் என்று பொருள்படும். ஐந்திணை என்பது ஐவகையான ஒழுக்கங்கள். இவை ஐந்தும் இல்வாழ்மக்கள் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய ஒழுக்கமுறையே ஆகும்.

    குறுந்தொகையும் குறிஞ்சியும்: 

    “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமஞ் செப்பாது கண்டது மொழிமோ….” (குறுந்: 2)

    இயைற்கைப்புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகனை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதன் பொருட்டு மெய்தொட்டுப் பயிறல் முதலியன அவள்மாட்டு நிகழ்த்திக்கூடி தனது அன்புதோன்ற நலம் பாராட்டியது. இறையனார் என்பது இங்குச் சிவபெருமானைக் குறிக்கும். சிவபெருமான் ஒரு புலவராய்த் தோன்றி, தருமி என்னும் அந்தணன் பொருட்டுப் பாடியது இப்பாடல்.

    மணமுடைய தேனை ஆராய்ந்து உண்டுவாழும் அழகிய சிறகுகளையுடைய தும்பியே! முற்பிறப்பில் பயின்றது இப்பிறப்பின் உரியதாகிய நட்பினையுடைய மயில் போன்ற சாயலினையும், வரிசையாய்ச் செறிந்துள்ள பற்களையும் கொண்ட இந்த அரிவையின் கூந்தல் நறுமணம் போன்றதொரு ஒப்பற்றமணம் நீ அறிந்த மலர்களில் உள்ளனவோ? பல மலா்கள்தோறும் சென்று அவற்றின் மணத்தை அறிந்துள்ள நீ, எனக்கின்பமான ஒன்றைக்கூறாது நீ துய்த்து அருந்திய மணமுடைய மலா் ஒன்று இருக்குமாயின் கூறுவாயாக.

    “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரளவின்றே சாரல்……( குறுந்: 3) 

    தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்துகொள்வது வேண்டித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்தது இப்பாடல் ஆகும். கரிய கொம்பினையுடைய குறிஞ்சிப் பூக்களைக்கொண்டு மிகுதியான தேனைத்தொடுக்கும் மலைப் பக்கத்தையுடைய நாட்டைச் சேர்ந்தவனோடு உண்டாகிய அரிய நட்பானது, சொல்லப்புகின் நிலத்தைக் காட்டிலும் அகலத்தால் பெரியது; நினைத்துப் பார்த்தால் வானத்தைக் காட்டிலும் உயா்வில் உயர்ந்தது. உள்ளே புகுந்து எல்லைகாணப்புகின் கடலைக் காட்டிலும் ஆழத்தால் அரிய அளவினது.     பெருந்தேன் இழைக்கும் குறிஞ்சி நிலத் தலைவனின் நட்பு, தலைவன் பிரிந்திருத்தலால் பயனில்லாது கழிவது குறித்துத் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் அதனை மறுத்துத் தலைமகனின் நட்பின் சிறப்பை உயர்த்திக் கூறினாள். (நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மைகள்).

    “யாரும் இல்லைத் தானே களவன்
    தானவன் பொய்ப்பின் யான் எவன் செய்கோ…” (குறுந்: 25)

    வரைவு நீட்டித்தஇடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

    தலைமகன் வரைந்துகொள்ளாது களவினை நீட்டித்தவிடத்து ஆற்றாத தலைகள், ”தோழி! உணா்வார் எவருமிலர்; அவன் கூறிய சூளுரையை அவன் பொய்ப்பின் யான் என் செய்வேன்? அவன் மணந்தஅன்று ஆரலைப் பார்க்கும் குருகு இருந்தது எனக் கூறுதல்.”

    தலைமகளிடம் அவன் கலந்தநாளில் வேறு எவருமில்லை… தலைவன் தானே நிகழ்ச்சி நடந்த இடத்துச் சான்றாவான். அவன், தான்கூறிய அச்சூளுரையிலிருந்து பொய்ப்பின் நான் என்ன செய்வேன்? அவன் மணந்த அன்று தினையினது தாளைப் போன்ற சிறிய பசுமையான கால்களையுடைய கொக்கு, இடையறாது ஒழுகும் நீரின்கண் நீந்தும் ஆரல்மீனை உணவாகக் கொள்ளுவதற்குக் காத்திருக்கும்.

    சங்கஇலக்கிய நூல்களில் ஒன்றாகவும், பதினெண் மேல்கணக்கு நூல்களுள் ஒன்றாகவும் விளங்கும் குறுந்தொகை, சிறந்த நூலாகவும், குறுகிய நூலாகவும், தலைவன், தலைவி பற்றி செய்திகளை அழகாக எடுத்து இயம்பக்கூடியதாகவும் திகழ்கின்றது.

    பார்வை நூல்கள்:

    • குறுந்தொகை – புலவா் துரை. இராசாராம்
    • குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு – மனோன்மணி           சண்முகதாஸ்
    • புதியநோக்கில் தமிழ் இலக்கியவரலாறு – தமிழண்ணல்
    • தமிழ் இலக்கிய அறிவுக் களஞ்சியம் – இலக்கிய வித்தகர்                      செந்துரையான்
    • குறுந்தொகை மூலமும் உரையும் – புலியூர் கேசிகன்

    ***

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் களஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

    Share