Tag: வண்ணத் தூரிகைக் காவியங்கள்

  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 18

    தேமொழி

    வாழ்வில் எதுவும் கடந்து போகும்

    depression

     

    மனித மனமே கேளு
    மயக்கம் என்ன கூறு
    கலங்கும் நெஞ்சே ஆறு
    இது வாழ்வில் காணும் பேறு

    எதுவும் கடந்து போகும்
    எண்ணம் கிடந்து வாட்டும்
    எதையும் தாங்கும் இதயம்
    எளிதில் மறந்து போகும்

     

     

    கவிதை வரிகளுக்குரியவரான காவியக்கவி இனியா அவர்களுக்கு நன்றி
    (http://kaviyakavi.blogspot.com/2013/09/blog-post_20.html)

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 17

    தேமொழி

     

    tribal lady

     

    காத்திருப்பில் கலங்காதே …

    கொல்லிமலை காட்டுக்குள்ள
    மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை
    மூணு நாளா தவிச்சிருக்கு -என்
    முகம் காண துடிச்சிருக்கு.

    பச்சரிசி சோறோடு
    கருவாட்டு குழம்பாக்கி
    தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக
    ஒத்தையிலே காத்திருக்கு.

     

    அன்பு நண்பர் கவிஞர் தனுசு அவர்களின் கவிதைக்கு வரைந்த ஓவியம்.
    தனுசுவின் முழுக்கவிதையினையும் படிக்க இங்கு செல்லவும்
    வாய்ப்பளித்த கவிஞர் தனுசுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

     

     

     

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 16

    தேமொழி

    சகலகலா வாணி

     

    sagalakalaa vani

     

    சகலகலா வாணியே 
    ராகம்:  கேதாரம்
    தாளம் : ஆதி
    பாடல்: சுத்தானந்த பாரதி

    பல்லவி:
    சகல கலா வாணியே- சரணம் தாயே
    சங்கீத வீணா பாணியே
    (சகலகலா வாணியே)

    அனுபல்லவி:
    இகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி
    எங்களுக் கருள்வாய்- மங்களச் செல்வியே
    (சகலகலா வாணியே)

    சரணம்:
    அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும்
    ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே
    திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய்
    தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்
    (சகலகலா வாணியே)

    முதுபெரும் புலவரும் முனிவரும் போற்றிய
    முப்பெரும்  அறிவுடன் இப்பொது விளங்கிடும்
    புதுப்புதுக் கலைகளும் பொருள்களும் அறிந்திங்கே
    பூரணராக வாழும் புண்ணியம் அருளுவாய்
    (சகலகலா வாணியே)

     

    சரசவாணியே! சகலகலாவல்லியே!

    வீணையேந்திய சகலகலா வாணியே
    வேதங்களின் விழுப்பொருள் நாயகியே
    வெண்டாமரையிலுறையும் அன்னையே
    வேண்டுவதெல்லாம் அறிவோய் நீயே!

    நூல்வடிவாய் நின்ற நாயகியே
    பால்வடியும் கவிமாலையானவளே
    கல்மனமும் கனிந்துருகும் காதலாலே
    சொல்வனமாய் திகழும் உன்னருளாலே!
    – பவள சங்கரி

    கமலமே  உந்தன் வெண்ணிறமே
    அமரவே  என்  உள்ளமே
    உயருமே  உவகை கொள்ளுமே!

    வீணையே உன் வடிவு விந்தையே
    ஆணையாய்  உன் ஒலியிலே
    இருப்பவள் தன்னையே
    அருள்தரச்சொல்லுவையே!
    – ஷைலஜா

    வெள்ளைக் கலையுடுத்தி வீணையுடன் வீற்றிருப்பாய்
    வெல்லும் திறமளித்து வீழ்ச்சியில்லா வாழ்வளிப்பாய்
    வெம்மை நிறைந்தொளிரும் பொன்சுடரே சாரதையே
    வேண்டும் வரம் பெறவே கரம் குவித்தோம் பதமருள்வாய்

    வாணி நாமகளே பாரதியே பாமகளே
    வாக்கின் எழிலரசி  வணங்குகிறோம் கலைமகளே
    வேத நாதன் தொழும் ஞானத் திருமகளே
    வெற்றி முரசொலிக்க‌  விரைவாய் வந்தருள்வாய்
    – பார்வதி இராமச்சந்திரன்

    நான்முகன் நாயகியே வேதவல்லி உன்னை
    நாத மழையில் நித்தம் நனைத்திடுவேன்
    நாயகன் மனம்மகிழ் நாதஸ்வரூபிணி

    அருள்வாய் வரங்கள் தயங்காது நீயினி
    பார் முழுதும் உன்னை பூஜிக்கும் நாளிது
    விஜய தசமியிலே வேண்டிடும் சேயிது
    – ஜெயஸ்ரீ

     

    பாடல் வரிகளை வழங்கிய சுத்தானந்த பாரதிக்கும், எனது தோழியருக்கும் நன்றி.

    படத்தைப் பற்றியக் குறிப்பு:
    சரியாக கால் நூற்றாண்டிற்கு முன் வரைந்த கோட்டோவியம் இது.  மாசுபடிந்து, களையிழந்து இருந்த படத்தை ஒளிவருடி, எண்ணிம வடிவில் கணினியின் உள்ளிழுத்து, பிரகாசத்தை அதிகரித்து, குறைகளை வெளிறச் செய்து, பிரதி எடுத்து, வரிகளை மீண்டும் செப்பனிட்ட படம். பெரும்பாலும் மாதிரி பார்த்து வரையும் என் பழக்கத்தைத் தவிர்த்து, மாதிரியின்றி, மனதில் பதித்திருந்த பல படங்களில் கண்ட சரஸ்வதியின்  படத்தை மனக்கண் முன் கொண்டுவந்து வரைந்த ஓவியம் என்பதால் என் மனதிற்கு நிறைவு தந்த ஓவியங்களில் ஒன்று.

     

     

     

     

     

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 15

    தேமொழி

    கெளதம புத்தர்

    Gold Buddha

     

    மின்பலகையில் ‘ஸ்கெட்ச் புக் எக்ஸ்ப்ரெஸ்’ (SketchBook Express apps for Tablets) என்ற ஓவியம் வரையும் மென்பொருள் கொண்டு என் முதல் முயற்சியாக உருவாக்கிய எண்ணிம கெளதம புத்தர் ஓவியம்.

    SketchBook Express for Tablets – https://play.google.com/store/apps/details?id=com.adsk.sketchbookhdexpress&hl=en

     

     

     

     

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14

    தேமொழி

    மணமகள்

    bride

      
                                                                                                                                      வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13 >>

     

     

     

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13

    தேமொழி

    கதகளி நடனம்

    kathak

     

     

     

     
     

     
     
     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

      

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14                                                  வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12 >>

     

     

     

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12

    தேமொழி

    ஒடிஸி நடனம்

    odyssi

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

      

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13                                                  வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11 >>

     

     

     

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11

    தேமொழி

    மணிப்புரி நடனம்

    manipuri

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12                                                  வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10 >>

     

     

     

     

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10

    தேமொழி

     

    மாலைகொடு வீரைய்யா!

     

    வண்டி ஒட்டும் வீரைய்யா!
    சண்டிதனம் ஏனைய்யா?
    ஒண்டிக்கட்டை நானையா -என்னை
    கட்டிக் கொண்டு போய்யா!

    முருக்கு மீசை மாமனே!
    திறுக்கை மீன் நானாவேன்
    திருக்கிக் கொண்டு போவானேன்?
    செருக்கு வேண்டாம் கோமானே.

     

    கவிஞர் தனுசு அவர்களின் கவிதைக்கு வரைந்த ஓவியம்.
    முழுக்கவிதையினையும் படிக்க இங்கு செல்லவும்
    வாய்ப்பளித்த கவிஞர் தனுசுவிற்கு நன்றிகள் உரித்தாகுக.

     

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11                                                   வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9 >>

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9

    தேமொழி

    திமிர் கொண்ட அழகு

    உன் கண்ணில் தெரிவதென்ன
    நெருப்பா?
    என்னை சுட்டு வீழ்த்தச் செய்யும்
    குறும்பா?

    உன்
    உதட்டில் இருப்பதென்ன
    சிரிப்பா?
    என்னை அதட்டி அழைக்கும்
    அழைப்பா?

    உன் பேச்சில் சொல்வதென்ன
    இனிப்பா?
    என்னை உனதாக்கச் செய்யும்
    துடிப்பா?

    திமிர் கொண்ட தென்றல் காற்றே….
    உன்னைத் தேடி வந்தால்
    உன்
    புருவத்தில் ஏளனம் ஏற்றி
    என்
    பருவத்தில் தீ வைப்பதேனடி?

    பள்ளி அறை பாடம் நடத்த
    வெள்ளி நிலா தூண்டுதடி!
    ஊதக்காற்றும் ஒத்துழைத்து
    ஒதுங்கசொல்லி கூவுதடி!

    உன் சுட்டு விரல் அசைவு
    என்
    கட்டுப்பாட்டை நொறுக்கும்!
    உன் பட்டுப் பளிங்கு மேனி
    என்னை உள் மூச்சில் வதைக்கும்!

    பஞ்சமின்றி செழித்திருக்கும்
    அஞ்சுகமே!
    பட்டு நிலா வியப்புறும்
    பெட்டகமே!

    பொன்வண்டு அறியாது
    அதனுடைய அழகை…
    உன் கண் கொண்டு
    உற்றுப்பாரடி
    உன்னுடைய பேரழகை!

    வஞ்சனையின்றி வளர்ந்த
    உன் வதனம்!
    அதை
    இந்த மாமனிடம் தாரைவார்க்க
    ஏனடி மெத்தனம்!

    பொத்தி வைத்து ஆவதென்ன
    அந்த
    கன்னிமலை அதிசயம்!
    இனி
    ஒத்தி வைத்தால் தாங்காது என் உடம்பு
    இது சத்தியம்!

    காமன் கோயில் சாமிக்கு
    நான் யாசிப்பது கேட்கலியா
    தீர்த்து வைக்க தேவிக்கு
    மாமன் மையல் புரியலியா!

    -தனுசு-

     
    ஓவியம்: தேமொழி
    கவிதை: கவிஞர் தனுசு

     

     
    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10                                                      வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8>>

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8

    தேமொழி

     

    புல்லாங் குழல்கொண்டு வருவான்! – அமுது
           பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
    கள்ளால் மயங்குவது போலே – அதைக்
           கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.       

    தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
    தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.

    கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை
    -பாரதியார்

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7>>

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7

    தேமொழி

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    அடிவானத் தேயங்குப் பரிதிக் கோளம்
    அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
    இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
    எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
    முடிவான வட்டத்தைக் காளி யாங்கே
    மொய்குழலாய், சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்.
    வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
    வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். (150)

    – பாஞ்சாலி சபதம், பாரதியார்

     

    பாடல் சொல்வது:
    சூரியனாகிய கோளம், அடிவானத்தில் மிக விரைவாகச் சுழல்வதைப் பார்.  வானத்தில் இடிகளோடு கூடிய பத்துக் கோடி மின்னல்களை எடுத்து, அவற்றை உருக்கி, வார்த்து, ஒரு தகட்டை உருவாக்கிக் காளி அம்மை என்ன விரைவாகச் சுற்றுகிறாள் என்பதைக் காண்பாய்.  என்ன வலிமை, என்ன மாட்சி இங்கே வெளிப்படுகிறது, பார்!  ஒரு தகடு என்றா சொன்னேன்!  இரண்டு தகடுகள் அல்லவா இருக்கின்றன!  இரண்டு தகடுகள் ஒன்றன் மேலொன்றாகப் பொருந்தி, இங்கே வட்டமாகச் சுழல்கின்றன.

    பதவுரை – ஹரிகி (ஹரி கிருஷ்ணன்)
    அவர்களின் பாஞ்சாலி சபதம் – என்னுரை தொகுப்பிலிருந்து

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6>>

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6

    தேமொழி

     

     

    முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
    எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
    என்னில் இன்று நானே இல்லை
    காதல் போலே ஏதும் இல்லை
    எங்கே எந்தன் இதயம் அன்பே
    வந்து சேர்ந்ததா

    வரிகள்: வாசன்

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5>>

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5

     

    தேமொழி

     

     

     
    ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…
    தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராகக் குடியிருப்போம்…
    வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்…
    கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்…
    வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…

    வரிகள்: கண்ணதாசன்

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4>>

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4

     

    தேமொழி

     

     

    சூறைக்காற்று மோதினால்
    தோணி ஓட்டம் மேவுமோ
    வாழ்வில் துன்பம் வரவு…சுகம் செலவு…இருப்பது கனவு
    காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்…

    ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவொமே…வாழ்நாளிலே

    வரிகள்: கண்ணதாசன்

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3>>

    Share