கவியோகி வேதம்

 என்றன் நெஞ்சில் அழுக்கி லாததால்
       யாரின் காலிலும் விழுவதில்லை!-தினம்
என்றன் கால்(காற்று)-ஏறி தியானம் உணர்வதால்
      என்னைச் சாத்தான் பிடிப்பதில்லை!

எதுதான் ஆநந்தம் என்றே உணர்ந்தால்
        யாரையும் நம்பிப் பிழைக்கணுமோ?-அட!
 புதியவெண் மேகமும் தினமும் கறுத்தால்
        பூமியில் வெப்பமும் தங்கிடுமோ?

பேசிப் பேசியே ஆச்ரமம் வளர்ப்பதா
        பெரீய சாதனைகள்?-மகான்கள்
நாசி அதிர்விலே உலகே அதிர்ந்த(து!)-அது
        நடராச முத்திரைகள்!

 பூமியில் அவரவர் வினைகளே பாவ
         புண்ணியம் நிர்ணயிக்கும்!-இன்றைச்
சாமிகளை நம்பினால் நமது கௌரவம்
         சந்தி சிரிக்கவைக்கும்!

 காவி உடைகண்டு ‘கடவுளே!” என்பதால்
        கர்வம் குறைவதில்லை!-அட அட!
 காவி உடையிலே கடவுள் யாருமே
          கம்பி எண்ணவில்லை!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *