ஓவியப் பிதாமகர் திரு.கோபுலு சார் நமது கேசவ்ஜிக்கு ‘’கிருஷ்ணப் பிரேமி’’ என்ற பட்டத்தை அளித்துள்ளார் என்பதை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்….(கேசவ் வெகு கூச்சத்துடன் என்னிடம் இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டது அடியேன் செய்த பாக்கியமே)….

171006 -Rajagopala -wm

’’யாரென் றுதெரியுதா! , யாதவன் தானிவன்மன்
னார்குடி கோபுலு(கோகுல) நாயகர்- சாரே!(மலையாள ‘’சாரே’’)
கிருஷ்ணனை டெய்லி தருகின்ற கேசவ்,
‘’கிருஷ்ணப் பிரேமி கரெக்ட்’’….!

’’கோபா லபுரத்தில் கோயில்கொண் டுள்ளராஜ
கோபாலா கோலோக கோவிந்தா: -லாபாதி,
நஷ்டங்கள் நம்மை நமஸ்கரித்(து) ஓடிடும்
அஷ்டமி கண்ணன் அரண்(காப்பு)’’….கிரேசி மோகன்….!

”குண்டு பஸவப்ப(பழைய சினிமா பாட்டு), கண்ண கரியப்பா(மேஜர் ஜெனரல்)
தெண்டமிட்டேன் உந்தன் திருவடியில் -மண்டென(மண்டு எனை)
ராஜகோ பாலரே ரட்ஷித்து அருள்புரிவீர்:
தேஜஸாய் அமர்ந்த தேவு’’….!

“விண்ணார்வம் வேண்டேன்,! வியனுலகும் வேண்டேனே,!
கண்ணாவுன் ஆர்வமதைக் கொண்டேனே, -மன்னார்
குடிராஜ கோபாலா கேசவ் அகத்தில்
குடிபோன கோகுலனே காப்பு”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.