Tag: கவிஞர்.காவிரிமைந்தன்

  • வெண்ணிலா வானில் வரும்வேளை…

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    மன்னிப்பு

    மலரிதழ் திறப்பு எப்போது தெரியுமா? மனிதர்கள் கண்டதுண்டா? இயற்கையின் நிகழ்வினில் எல்லாம்.. எப்போதும் ஒரு ரகசியப் பதிவாகவே இருக்கும்! அவையவை தத்தம் இயல்பினில் இயங்கிக் கொண்டிருக்க.. கவிஞர்களின் கற்பனை வலை விரிப்பில் மட்டும் கருத்து முத்துக்கள் – அந்த ரகசியங்களை பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கும்!

    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
    எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்

    ‘மன்னிப்பு’ திரைப்படத்திற்காக ஒரு மந்தகாசப் பாடல் ஒன்றை கவிஞர் வாலி அவர்கள் தீட்டியிருக்கிறார். அந்த மாலைப் பொழுதில் மங்கிய நல் நிலவொளியில் காதலர்கள் சந்திக்கின்றனர்! முத்தமிழும் மோகனமும் கூடிநிற்க.. காதல் பாமாலை சூடுகின்றனர்!

    நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்
    ஆறுகின்ற பொழுது வரை அனல் போல் கொதிப்பதெது?

    அழகிய தமிழ்மொழியில் எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதைக் காணுங்கள்!

    முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க
    கொட்டும் மழைத் துளி விழுந்து கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்?

    அமரர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையிலே டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் இழைந்தோடும் இனிய நாதமிது! இதுபோன்ற பாடல்களை ரசிப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! ஆனந்த ராகமிது ஆரம்பமாகிறது! அணைக்கின்ற வேளையிது.. அனுபவிப்பெல்லாம் அனுபல்லவியாகிறது! கவிதை மழை பொழிகிறது! இசையருவி வழிகிறது! இதயமது நனைகிறது! இன்னுமென்ன சொல்ல வேண்டும் இந்தப் பாடல்பற்றி!!

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும் நாட்டியச் செல்வி வெண்ணிற ஆடை நிர்மலாவும் திரையில்…

    http://youtu.be/d3WYzyc_8ME

    காணொளி: https://www.youtube.com/watch?v=d3WYzyc_8ME&spfreload=10

     

    பாடல்: வெண்ணிலா வானில் வரும் வேளையில்
    திரைப்படம்: மன்னிப்பு (1969)
    இயற்றியவர்: வாலி
    இசை: எஸ். எம். சுப்பையா நாயுடு
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

    _______________________________________________________________

    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
    எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
    எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

    ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ………………..
    நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்
    நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்
    ஆறுகின்ற பொழுது வரை அனல் போல் கொதிப்பதெது?

    ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
    ஆசை கொண்ட இதயமது
    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

    வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்
    வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்
    மின்னல் எனும் தூரிகையால் நான் வரைந்த கோலமெது?

    ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
    கன்னி என்தன் வடிவமது
    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

    காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத் தொடுத்து
    காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத் தொடுத்து
    பூமகளின் நெஞ்சினிலே போர் தொடுக்கும் நேரமெது?

    ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
    மஞ்சள் வெயில் மாலை அது
    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

    முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க
    முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க
    கொட்டும் மழைத் துளி விழுந்து கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்?

    ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
    முத்து ஒன்று பிறந்து வரும்
    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
    எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

    Share
  • பாலும் பழமும் கைகளில் ஏந்தி …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    Paalum_Pazhamum1

     

     

    1961ல் வெளிவந்த திரைப்படம் பாலும் பழமும். நடிகர் திலகமும் கன்னடத்துப்பைங்கிளி என்றழைக்கப்படும் சரோஜா தேவியும் போட்டி போட்டு நடித்திருக்கும் அற்புதக் காவியம்! விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிசையில் அனைத்துப்பாடல்களும் அமரத்துவம் பெற்றவை! கவிஞரிடம் வார்த்தைகள் இப்படி வரிசையாய் வந்து காத்திருக்கும் என்று பலரும் பலமுறை சொல்கிறார்களே… அதற்கான சத்திய சாட்சியான பாடல்கள்!

    இன்றைக்குக் கூட இணையதளத்தில் ஒரு தொலைக்காட்சி நேர்முகத்தைக் காணும் பேறு பெற்றேன்! ஆம்.. கவிஞர் பஞ்சு அருணாசலம் அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதிய தருணங்களைப் பற்றியெல்லாம் சுவைபட எடுத்துரைத்த காட்சியில் மெய்மறந்துபோனேன்!

    Paalum_Pazhamumகதையை முழுதாய் கேட்கும் பழக்கமில்லாமல்… எந்த இடத்தில் பாடல் இடம்பெற வேண்டுமோ அந்தக் காட்சியமைப்பை … அவ்விடத்துக் கதையை மட்டும் கேட்பாராம்! ம்… சரி… என்ன டியூன் போட்டிருக்கிங்க என்று இசையமைப்பாளர் பக்கம் திரும்புவாராம்! அடுத்த சில நொடிகளில் பாடல்… (ஏதோ முன்பே எழுதிவைத்ததை எடுத்துத் தருவதுபோல்) வந்து விழுமாம்! இதையும் தாண்டி இன்னும் பல படங்களில் கவிஞரே… ஒரு ஐந்து அல்லது ஆறு பாடல்கள் வேண்டும்… எந்த இடங்களில் என்பதை நீங்களே முடிவு செய்து எழுதித்தாருங்கள் என்கிற வகையினரும் உண்டாம்! கேட்க கேட்க ஆனந்தம் மேலிட்டது! ஒரு சூரியன்… ஒரு சந்திரன்… ஒரு கண்ணதாசன் என்றே எனக்குப் பட்டது!

    இதோ இந்தப் பாடல்.. படத்தின் பெயரைத் தாங்கி.. அன்பின் பூரணமாய் விளங்கிய மனைவி நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாய் இருக்கிறார்! அழகுநிலாவை மடியில் எடுத்து ஆனந்தத்தேன் ஊட்டும் கதாநாயகன் தன் பொறுமையால், பண்பட்ட நடிப்பால், அமைதியாய்… உள்ளம்உருகவைக்கும் உன்னத ஆற்றலால் உயிரூட்டமிக்க பாடல் தருகிறார்!

    பாடல்… அது கதையோடு இணைந்து நடந்து வருகிறது! வார்த்தைகள் ஒவ்வொன்றும் இயல்பானவையாக… சராசரி மனிதன் உச்சரிக்கும் எளிமையானவையாக அமைவதுதான் கண்ணதாசன் பாடலின் தனிச்சிறப்பு! இப்பாடலை இசையமைத்து எழுத வைத்தார்களா? அல்லது எழுதிவிட்டு இசையமைத்தார்களா என்று உறுதியாய் சொல்லமுடியாத அளவு பாடலும் இசையும் இணைந்து காட்சிதருகின்றன!

    கணவன் – மனைவி ஒருவரையொருவர் எப்படித் தாங்க வேண்டும் என்கிற இலக்கணம்காட்டும் திரைப்படம்! குறிப்பாக உடல்நலம் குன்றிடும்போது … காட்டவேண்டிய அக்கறை, பரிவு, பாசம், கருணை, இவைகளை எள்ளளவும் குறையின்றி இருவருமே நடிப்பில் பரிணமித்திருப்பது இப்படத்தின் முக்கிய அம்சமாகும்!

    உச்சமாய் கவிஞர் தொட்டுக்காட்டும் வரிகளைப் பாருங்கள்… ஈன்ற தாயை நான் கண்டதில்லை… எனது தெய்வம் வேறெங்குமில்லை… உயிரைக்கொடுத்தும் உனை நான் காப்பேன்… உதயநிலவே கண்துயில்வாயே…

    இல்லறவாழ்வில் இதயவீணை மனைவிதான் என்பதை நிரூபணம் செய்துவைக்கிற பாடலிது! இதயம் முழுவதும் அன்பில் ஆட்சிநடத்திடும் அன்புத் துணைவியை எண்ணி உருகிடும் கணவன் உச்சரிக்கும் அத்தனையும் அன்புமலர்களே!

    டிஎம்.செளந்திரராஜன் தனக்கே உரித்தான பாவணைகளுடன் பாடிய பாடலிது! அச்சரம் பிசகாத உச்சரிப்பிற்கு அவரைவிட இங்கே வேறு யார்? இயக்குனர் ஏ.பீம்சிங் அவர்களின் வெற்றிப்படைப்புகளில் பாலும் பழமும் பவித்ரமானது!

    பாலும் பழமும் கைகளில் ஏந்தி
    பவழ வாயில் புன்னகை சிந்தி
    கோல மயில் போல் நீ வருவயே
    கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

    பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே
    பேசிப் பழகும் மொழி மறந்தாயே
    அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
    அன்னக் கொடியே அமைதி கொள்வாயே

    உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
    உறங்க வைத்தே விழித்திருப்பாயே
    கண்ணை இமைபோல் காத்திருப்பாயே
    காதற் கொடியே கண் மலர்வாயே

    ஈன்ற தாயை நான் கண்டதில்லை
    எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
    உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்
    உதய நிலவே கண் மலர்வாயே

    (பாலும்)

    ____________________________________________________
    படம்: பாலும் பழமும் (1961)
    பாடல்: கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    குரல்: டி எம் சௌந்தரராஜன்

    காணொளி: https://www.youtube.com/watch?v=KBRKgeC_qZU

    http://youtu.be/KBRKgeC_qZU

    Share
  • பொழுதெல்லாம் பேசச் சொல்லும் …

    — கவிஞர் காவிரிமைந்தன். 


    thangath thambi

    அண்மையில் நான் இணையதளமொன்றில் கேட்கக் கிடைத்த புதையல் இந்தப் பாடல் என்பேன்! எத்தனை அருமையான இப்பாடல் இதுவரை கேட்டது கிடையாது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை! ‘தங்கத் தம்பி’ என்கிற திரைப்படத்தில் தமிழ்த்திரையில் என்றும் வலம்வந்துகொண்டிக்கிற டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா ஆகியோரின் வளமையான குரல்களில்.. கேளுங்கள் புதிய உலகம் நுழைந்ததுபோலிருக்கும்!

    பல்லவி தொடங்கி சரணங்கள் எல்லாம் செந்தமிழின் சுகமிருக்கிறது! இசையோ நம்மைக் கட்டி இழுக்கிறது! திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அமைத்த இசையில் இதயங்கள் கட்டுண்டு போவது சகஜம்தான் என்றாலும் இந்தப் பாடல் அதற்கும் மேலே என்றே சொல்லத் தோன்றுகிறது!

     

     

    ஆண்:
    பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
    கதையொன்று கண்ணில் உண்டு

    பெண்:
    இரவெல்லாம் பாடச்சொல்லும்
    பாட்டொன்று நெஞ்சில் உண்டு

    ஆண்:
    அம்புலிபோல் பெண்ணைக் கண்டேன்
    அம்புவிழிக் கண்ணைக் கண்டேன்
    அழகுரதம் ஆடக் கண்டேன்
    ஆடைகொண்டு மூடக் கண்டேன்

    பெண்:
    கோடையிலே நிழலைக் கண்டேன்
    கானலிலே நீரைக் கண்டேன்
    அன்னை போலே நெஞ்சம் கண்டேன்
    பிள்ளைபோல் தஞ்சம் என்றேன்.

    [பொழுதெல்லாம் பேசச் சொல்லும்]

    ஆண்:
    காற்றுக்கு கண் கிடையாது
    நடப்பதெல்லாம் பார்ப்பதற்கு..
    கட்டிலுக்கு வாயுமில்லை
    கவிதைகளை வரைவதற்கு..

    பெண்:
    விடிந்தபின்பு வண்ணம் காட்டும்
    மன்னன்தந்த சின்னம் காட்டும்
    செந்தமிழே பண்ணில் திகழும்
    காண்பவர்க்கு தன்னால் புரியும்!

    [பொழுதெல்லாம் பேசச் சொல்லும்]

    காணொளி: http://youtu.be/qjh5KdPub38

    படம்: தங்கத் தம்பி
    பாடல்: வாலி
    இசை: கே. வி. மகாதேவன்
    குரல்: டி எம் சௌந்தரராஜன், பி. சுசீலா

     

    அருமையான வரிகளில் ஆனந்தமழையடிப்பதைப்போல் இன்பம் கொள்ளை கொள்ளையாகக் கொட்டிக்கிடக்கிறது! இசைப்பாடலுக்குத்தானே இத்தனைப் பெருமை அமைகிறது! இயல்தமிழாய் இருக்கும்போது அது கவிதை என்று மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகிறது! பாடல் பாடப்படுகிற சூழல், பாடும் குரல்கள், பாடல் காட்சிகள் என்று பல காரணிகள் இருந்தாலும் பெளர்ணமி வெளிச்சம் பரவிக்கிடக்கிற பாடலாய் இப்பாடல் பவனிவருகிறது!

    ரவிச்சந்திரன் – பாரதி இணைசேர கண்ணுக்கு விருந்தளிக்கும் இதமான ஜோடியாய் இவர்கள் நடிப்பில் பண்ணும் இசையும் பவித்ரமாய் கலக்கின்றன! ஒன்றிணையும் இருவர் இப்படி அமைய வேண்டும் என்கிற எண்ணம்கூட நெஞ்சில் பதிகிறது! கண்களை மூடிக்கொண்டு கேட்டுப்பார்த்தால் கவிதை மஞ்சம் விரிக்கிறது! கன்னித்தமிழின் வெள்ளம் பாய்ந்துவந்து இதயத்தை இன்ப அலைகள் நனைக்கிறது!

    இன்பத்தை வளரச்செய்ய இணைசேரும் வார்த்தைப்பூக்கள் மொத்தமாக அணிவகுக்க.. அன்னைபோல நெஞ்சம் கண்டேன் ..உன்னிடத்தில் பிள்ளைபோல் தஞ்சம் என்றேன் என்கிற கனிந்த சொற்களால் இப்பாடல் தரத்தில் உயர்ந்துநிற்கிறது! இனிய தம்பதியர் வாழ்வில் இப்பாடல் நிதந்தோறும் கேட்க வேண்டிய கானமாக.. என்றென்றும் ஒலிக்கட்டுமே!!

    Share
  • காணா இன்பம் கனிந்ததேனோ…

    — கவிஞர் காவிரிமைந்தன். 

    kaana inbam

    எழுதப்பட்ட பாடலை எந்த ராகத்தில் பொருத்துவது என்று யோசித்து… அதை அடிப்படையாகக் கொண்டு வார்த்திடும் இசையமைப்பு பெரும்பாலான பழைய பாடல்களில் காணலாம். சபாஷ் மீனா திரைப்படத்திற்காக தொடுக்கப்பட்ட இப்பாடல்… காணா இன்பம் கனிந்ததேனோ… பாடியிருப்பவர்கள் திரு.மோதி மற்றும் பி.சுசீலா… பாடலை இயற்றியவர் கு.மா. பாலசுப்பிரமணியம். இசையமைத்திருக்கிறார் டி.ஜி.லிங்கப்பா.

    SABASH MEENAஎண்ணிலடங்காத இன்பத்தை அள்ளித்தரும் பாடலிது! பாடல் வரிகள் தம் பங்கிற்கு பாதை வகுத்துக் கொடுக்க… பயணம்போவது இசை ஆலாபனைகள்! அதுவே இப்பாடலின் உச்சம் என்றும் சொல்லலாம்! இருவர் குரலும் அதற்கேற்றவாறு தாள லய ஜதியுடன் இணைந்து மேல்ஸ்தாயி வரை படரும் அழகு… கேட்கத்திகட்டாத பாடலாய் இதனை மாற்றியிருக்கிறது!

    1958ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மாலினி மற்றும் பலர் நடித்திருக்க… இனிய கானம்… காணா இன்பம் கனிந்ததேனோ… திரைப்பாடலைக் கேட்க விருப்பமில்லாதோர்கூட இப்பாடலில் மயங்கியதும் கேட்டுக் கிறங்கியதும் உண்மைதானே!!

    காணா இன்பம் கனிந்ததேனோ …
    காணா இன்பம் கனிந்ததேனோ
    காதல் திருமண ஊர்வலந்தானோ
    ஆஆஅ ஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅ …

    காணா இன்பம் கனிந்ததேனோ
    காதல் திருமண ஊர்வலந்தானோ
    வானம் சிந்தும் மாமழை எல்லாம்
    ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ …
    ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
    வானம் சிந்தும் மாமழை எல்லாம்
    வானோர் தூவும் தேன்மலரோ?
    வானோர் தூவும் தேன்மலரோ?

    மேகம் யாவும் பேரொலியோடு
    மேகம் யாவும் பேரொலியோடு
    மேளம் போலே முழங்குவதாலே
    காணா இன்பம் கனிந்ததேனோ
    காதல் திருமண ஊர்வலந்தானோ …

    கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
    விண்ணில் வாண வேடிக்கையோ?
    மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
    மனதில் பொங்கும் ப்ரேமையினாலே
    காணா இன்பம் கனிந்ததேனோ
    ஆஅஆஆஆஆஆஆ
    காணா இன்பம் கனிந்ததேனோ …
    ஆஅஆ..ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
    காணா இன்பம் கனிந்ததேனோ …
    ஆஅஅ, ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
    ஆஆஆஆஆஆஅஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
    காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ …

    பாடல்: காணா இன்பம் கனிந்ததேனோ
    திரைப்படம்: சபாஷ் மீனா (1958)
    இயற்றியவர்: கு.ம. பாலசுப்பிரமணியம்
    இசை: டி.ஜி. லிங்கப்பா
    பாடியவர்: மோதி, பி.சுசீலா
    காணொளி: https://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y

    Share
  • இனியவளே என்று பாடி வந்தேன்…

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    சிவகாமியின் செல்வன்2

     

     

    கடற்கரை… காற்று… காதலி… இவ்வரிசையில் வேறென்ன வேண்டும்? கவிதை!

     

    சிவகாமியின் செல்வன்சொல்லில் ஆயிரம் பொருள்வைத்து சொக்க வைக்க முடியுமென்றால் துள்ளும் வார்த்தைச் சரமெடுத்து தொடுக்கும் கவிஞரின் கைவண்ணம் பாருங்கள்! சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதிய பல்லவி பாருங்கள்..

    இனியவளே என்று பாடி வந்தேன்
    இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்

    ஆம் இனியவளே.. என்கிற பல்லவியின் முதல் சொல்லை இனி அவளே.. என்று பதம் பிரித்து இனிமை சேர்க்கிற இன்பமிருக்கிறதே.. அது யாருக்கு வரும்? மெல்லிசைமன்னரின் இசையில் விளைந்த கீதம்! டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் பொழியும் நாதம்! அன்பு மன மாளிகையில் இருவர் நடத்தும் ஆனந்தவிழா இப்படித்தான் இருக்குமோ என்று ஏங்க வைக்கிற வரிகள் செவிகளில் வந்து விழுகின்றன!!

    பெண்மையின் நான்கு குணங்களும் ஒன்றெனக் கண்டிடும்போது காதலன் உள்ளத்தில் தோன்றும் இன்ப வெள்ளம் இப்படித்தான் இருக்குமோ? ஆயிரமாயிரம் காலம் இந்த இன்பம் நிலைத்திருக்க இளமை விரும்புவது இயற்கைதானே! மொட்டுவிரிந்திடும் இதழ்களைப்போல் இன்பம் கட்டுக்கடங்காமல் பாய்ந்திடும் வேளை காதலின் லீலை இப்படித்தானிருக்குமோ?

    மோகத்தில் சாய்கின்ற வேளை பெண்மை இன்பத்தில் தாளாமல் இதழ்கள் இங்கே என்ன அளவீட்டுக் கருவி செய்யும் வேலையைச் செய்கின்றனவாம்.. கவிஞரின் கற்பனையில் ஒரு காதல் கீதம் இன்பத்தேன் சொட்டுகிறது!!

    ஓ… ஓ… ஏ… ஆ…
    ஆஹா ஆ… ஹா…
    எஹேஹேஹே அஹஹாஹா ( இசை )
    ஓஹோ… ஓஹொஹோ ஹோ
    ஏஹே ஏஹே ஏஹே ஏஹே
    இனியவளே என்று பாடி வந்தேன்
    ம்… ம்… ஆஹா ஹா ஹா ஹா…

    இனியவளே என்று பாடி வந்தேன்
    இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
    இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
    இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

    ஆஹா ஹா ஹா ஹா…
    இனியவனே என்று பாடி வந்தேன்
    இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்
    ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன் ஆ…
    ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன்

    ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக …
    ஒன்றானவர் வாழ்வே இன்ப வெள்ளம் என்றாக
    துணை தேடி வரும் போது
    கண்ணில் என்ன நாணமோ
    குணம் நான்கில் உருவான
    பெண்மை இன்று போதுமோ
    திரு நாள் வரும் அதோ பார்
    தருவார் சுகம் இதோ பார்
    திரு நாள் வரும் அதோ பார்
    தருவார் சுகம் இதோ பார்
    பொன் மாலையில்
    பூ மாலையாய்
    நெஞ்சில் சூடவோ
    சூடவோ …
    சூடவோ …

    இனியவனே என்று பாடி வந்தேன்
    இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்

    தாலாட்டிடும் நெஞ்சம் தன்னை தங்கம் என்றாரோ..
    பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கொண்டாளோ
    நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம்
    கொடுத்தாலும் நலம் தானே எனை கொஞ்சும் ஓவியம்
    இதழால் உடல் அளந்தான்
    இவளோ தன்னை மறந்தாள்
    இதழால் உடல் அளந்தான்
    இவளோ தன்னை மறந்தாள்
    ஏன் என்பதை
    நான் சொல்வது
    எங்கும் மௌனமே
    மௌனமே …
    மௌனமே …

    இனியவளே என்று பாடி வந்தேன்
    இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
    இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

    ஆ… லாலலலா ஓஹொஹொஹோ
    ஒஹொஹோ ஓஹொஹோ…
    ஒஹொஹோ ஓஹொஹோ…

    _______________________________________________________

    படம்: சிவகாமியின் செல்வன்
    பாடல்: கவியரசு கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    குரல்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா
    காணொளி: https://www.youtube.com/watch?v=pmlPL7SMpVM

     

    https://www.youtube.com/watch?v=pmlPL7SMpVM

     

    Share
  • சொக்குதே மனம்… சுத்துதே ஜெகம்!

    — கவிஞர் காவிரிமைந்தன். 

     

    Baghdad Thirudan

     

    எம்.ஜி.ஆர். வைஜயந்திமாலா இணைந்து நடித்த பாக்தாத் திருடன் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடலின் பல்லவியில் நிச்சயம் ஒரு மயக்கம் உண்டு!

    ஜி.கோவிந்தராஜுலு நாயுடு இசையில் கட்டுண்ட நாகம்போல் நாமும் மாறலாம்! இனிமை அதிலுண்டு! இயற்றியவர் மருதகாசி பி.சுசீலாவின் குரலில் …சொக்குதே மனம்!!

    அந்தப்புர சங்கதிகளின் அடிநாதமாய் விளங்கும் பெண்மையை வைத்தே காய்கள் நகர்த்துவதும் ஒருவித ராஜதந்திரம் என்றது அந்தக்காலம்!

    எந்த காலத்திலும் ஆட்சியிலிருப்பவர்களும் அதிகாரத்திலுப்பவர்களும் எளிதில் அகப்பட்டுக்கொள்வது இந்த போதையில்தானே!

    திரைப்படங்களில் இந்தக் காட்சியில் பாடல் இடம்பெறுவது எழுதப்படாத விதியாகவே அன்றுமுதல் இன்றும் தொடர்கிறது!

    ஆட்டம் பாட்டம் … அதற்கிடையில் கதையின் நகர்வு… இசையின் துள்ளல் நம்மைக் கிறங்க வைக்க… எழுத்தில் வடித்துவிடும் கவிஞர்களின் கற்பனா சக்தியில்… திரைக்கதை… மூலக்கதை எல்லாம் முன்மொழியப்படும்…

    சொல்லப்போனால் திரைப்படத்தின் முடிவு வருவதற்கு முன் வருகின்ற பாடலாகவே இதுபோன்ற பாடல்கள் இடம்பெறும்!

    திருமதி.பி.சுசீலா அவர்களின் குரலில் இந்தப் பாடல் எனக்கென்னவோ… சொல்லத் தெரியாத இன்பத்தை தந்துவிடுகிற பாடல் என்றே சொல்லத் தோன்றுகிறது!

    அமர்க்களம்… அட்டகாசம்… என்பதெல்லாம் நிறைவுபெறாத வார்த்தைகள் என்றே நினைக்கிறேன்!

    பூத்து குலுங்குதே புது உணர்வு காணுதே… ஏ…
    காத்திருந்த என் பருவ காலமிதே… ஆ…
    எதிர் பார்த்திருந்த
    இன்ப நாள் வந்ததே தன்னாலே
    பார்வையிலே காதல் அலை
    பொங்குதே உன்னாலே…

    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்

    கொலைகார வேடன் வலை கண்டதாலே
    நிலை மாறி வந்த இள மானும் நானே
    என்னாசைத் தங்கமே அஞ்சாத சிங்கமே
    நீ தஞ்சமே
    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்

    கருவண்டின் முன்னே களிப்போடு ரோஜா
    கண்ணாலே பேசி செய்யுதே தமாஷா
    எண்ணாதே லேசா என் காதல் பாதுஷா
    ஏன் தாமதம்
    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்

    அழகின் கஜானா உந்தன் ஜனானா
    அதற்கேற்ற மைனா வந்ததே தானா
    மௌனம் ஏன் வீணா திரும்பாதே போனா
    ஆலம்பனா
    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்

    படம்: பாக்தாத் திருடன்
    பாடல்: மருதகாசி
    இசை: ஜி.கோவிந்தராஜுலு நாயுடு
    குரல்: பி.சுசீலா

             MarudhakasiG. Govindarajulu Naidususheela

    எம்.ஜி.ஆருடன் டி.ஆர்.ராமச்சந்திரன் இசைகோஷ்டியாக வேடமிட…நம்பியாரை நோக்கி நாட்டியமாடுகிற நங்கையாக திருமதி. வைஜயந்திமாலா வேகம்காட்டி ஆடும் ஆட்டம் சிறப்பானது!

    பலமுறை கேட்டிருந்தாலும் பாக்தாத் திருடன் பாடல்.. மறுமுறை கேட்கத்தூண்டும் அதிசயம் என்ன?

    காணொளி: https://www.youtube.com/watch?v=ud8-90yS0Ks

    ஜெயா தொலைக்காட்சியில் இப்பாடலின் பல்லவியை நினைவூட்டி அமைக்கப்பட்டிருக்கும் இசைநிகழ்ச்சியும் அதனை வழங்கிவரும் திருமதி.பிரியாசுப்பிரமணியன் அவர்களது குரலிலும் இந்த மையல் தொடர்வது குறிப்பிடத்தக்கது!

     

     

    Share
  • பணம் பந்தியிலே …

    கவிஞர் காவிரிமைந்தன். 

    panam panthiyilae

    உறவுகள் ஆயிரம் இருந்தபோதும் இன்பம் சூழ்கின்ற நேரத்தில்மட்டுமே பந்தம் கொள்வதும்… துன்பம் தொடர்கின்ற நிலையில் நம்மைவிட்டு விலகிச்செல்வதும் தொன்றுதொட்ட தொடர்கதைதான்! அன்பு பாசம் எல்லாம் வேடிக்கை வார்த்தைகளா … அவைகளுக்கு அர்த்தங்கள் கிடையாதா என்று நாம் தவிக்கிற நிலை அப்போது ஏற்படும்! இனம்புரியாத சூழலில் பணம்தானே இத்தனைக்கும் காரணம் என்றறியும்போது.. காதில் கேட்ட இந்தப் பாடல் அத்தனைக்கும் அர்த்தங்கள் சொன்னது!

    1961ல் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருக்கலாம்… ஆனால் மனிதர்களுக்கு இதுபோன்ற நிரந்தரப்பாடல்களை வழங்கிய கவிஞர்களும்…. இசையமைத்த மேதைகளும்… பாடிய கலைஞர்களும் மனதில் இடம்பெற்றவர்களாகவே உலா வருகிறார்கள்.

    கவிஞர் கா.மு.ஷெரீப் … தமிழ்த்திரையில் தனது பதிவுகளால் ராஜமுத்திரையிட்டிருந்தாலும் அதிக எண்ணிக்கையைத் தொட முடியாதுபோனது நமக்குத்தான் இழப்பேதவிர அவருக்கு அல்ல. எத்தனை எதார்த்த வார்த்தைகளை எடுத்தாண்டிருக்கும் திறத்தவர்…ஒவ்வொரு வார்த்தையிலும் ஓராயிரம் பொருளிருக்கும் வண்ணம் உள்ளம் தொடுகின்றார். அதற்கேற்ற இசையினை திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் தருகின்றார். இருவரின் படைப்புகளில் உள்ள ஜீவனை உணர்ந்து தன் குரலால் மெருகேற்றிவிடுகிறார் கலைமாமணி சீர்காழி கோவிந்தராஜன்.

    ஏழ்மையில் வாழும் ஒருவன் தன் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களில் பணம் பிரதானம் வகிக்கும் வரையில் இப்பாடல் பரிதவிப்பிற்குத் தலைமை தாங்கட்டும்!!

    http://www.youtube.com/watch?v=u8fMZ9APBJs

    காணொளி: http://www.youtube.com/watch?v=u8fMZ9APBJs

     

    திரைப்படம்: பணம் பந்தியிலே (1961)
    இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
    இசை: கே.வி. மஹாதேவன்
    பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

    Ka.Mu.Sheriff (1)ke.vi.em.சீர்காழி கோவிந்தராஜன்Panam Panthiyile

    பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – இதைப்
    பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
    பிழைக்கும் மனிதனில்லே
    பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – இதைப்
    பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
    பிழைக்கும் மனிதனில்லே

    ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே – அவனை
    உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
    என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை
    என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை – உலகம்
    எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே
    [பணம் பந்தியிலே குணம் குப்பையிலே]

    ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான் – பணம்
    அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான்
    ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை
    ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை – இதை
    எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை
    [பணம் பந்தியிலே குணம் குப்பையிலே]

    உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு – அவர்கள்
    உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
    மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு
    மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு – நாளும்
    முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு
    [பணம் பந்தியிலே குணம் குப்பையிலே]

     

     

    Share
  • பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    dharmam enge

     

    தர்மம் எங்கே? திரைப்படத்திற்காக டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா பாடிய பாடல்! மெல்லிசை மன்னரின் இன்னிசையில் களவியல் கவிதையிது! இலக்கியம் காதல் கவிதை என்கிற வகையில் பொருத்தமாய் வந்துவிழும் வார்த்தைமலர்களைக் கொய்து இளமனங்களின் ஈடிலா சந்தோஷத்தை எழுத்தில்வடித்த பாடலிது!

    இலைமறைகாயாய் இருக்கிற வரையில் இன்பத்தின் எல்லைகள் விரியும்! சொல்லில் அதை சொல்ல வருகின்ற வேளை கவிஞரின் கற்பனைத்திறன் இசைக்கு வழங்கிய சொற்சித்திரமிது! பட்டுமெத்தையில் பஞ்சணையும் பாவையிடம் தன் தேவைகளைக் கொட்டி அளக்கும் கோலமும் அங்கே பெண்மை எல்லை தாண்டாமல் இன்பத்துப்பாலை அருந்தச் சொல்கிற அழகும் கண்ணதாசன் கவிதைக்கே வரும்!!

    சிவாஜிகணேசன் ஜெ.ஜெயலலிதா இணைந்து நடித்திருக்கும் இந்தக் காட்சியில் இயக்குனரின் கற்பனையும் ஒருசேர காட்சியமைப்பு கவர்ந்திழுக்கும்! பாவங்கள் காட்டும் குரல் டி.எம்.செளந்திரராஜனுக்கு கைவந்த கலையாகிடும்போது.. உடன் இணைந்து பாடுகிற பி.சுசீலா .. பல்லவியைத் தழுவிநிற்கும் சரணம்போல் தன் குரலால் ஈர்க்கிறார்!

    ஆயிரமாயிரம் பாடல்கள் இந்த வகையில் திரையிசையில் மிதந்துகிடந்தாலும் நம் உள்ளம் தொடும் பாடல்களில் ஒன்றாய் இதோ.. ஆசையின் அலைகள் ஓடிவரும் அழகில் நாம் கொள்ளைபோவது நிச்சயம்!!

    பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே..

    http://youtu.be/ki0S3FbeKcQ

    காணொளி: http://youtu.be/ki0S3FbeKcQ

     

    படம்: தர்மம் எங்கே?
    பாடல்: கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    குரல்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா

    msv-and-kannadasantms ps

    பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே.. உன்
    பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே!
    அள்ளியிறைக்க வந்த கள்ள நகையே.. உன்
    அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே!

    முத்துக்களை சிந்திச் சிந்தி புன்னகை என்றாய்!
    மூடிவைத்த தேன்குடத்தை அங்கங்கள் என்றாய்!
    பத்துத்தரம் தொட்டுத் தொட்டு பாவணை செய்தாய்!
    பங்குகொள்ளுமுன் என்னை சோதனை செய்தாய்!

    தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும்
    தென்றலுக்குப் பாதையின்றி என்னைத் தழுவு!
    உள்ளமட்டும் இன்பமெல்லாம் அள்ளிவழங்கு!
    உச்சிமுதல் பாதம்வரை உந்தன் விருந்து!!

    Share
  • அச்சம் என்பது மடமையடா…

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    அச்சம் என்பது மடமையடா1

     

    எழுச்சிமிக்க பாடல் ஒன்றுதான் திரைப்படத்தின் துவக்கம் என்று சொன்னால் கண்முன்னே வந்து நிற்பது மன்னாதி மன்னன். நடேஷ் ஆர்ட்ஸ் பிக்சர்ஸரின் தயாரிப்பில் கவியரசு கண்ணதாசன் கதை, வசனம், பாடல்கள் என பொறுப்பேற்ற படமாகும். மக்கள் திலகம் – குதிரைகள் பூட்டப்பட்ட வாகனத்தில் பயணம் செய்தபடி பாடுகிறார்! அந்தக் குளம்படிச் சத்தம் இசையமைப்பை இயற்கையானதாக்கிட டி.எம்.செளந்திரராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் காலத்தை வென்றுநிற்கும் பாடல்! மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.. தமிழ் உலகம் உள்ளவரை போற்றப்படுகிறார்கள் என்பதற்கு சான்று! சேர சோழ பாண்டியர்தம் பெருமைகளைச் சொல்லி..

    உணர்வைத் தட்டியெழுப்பும் உவமைகளைக் கையாண்டு.. தன்மானம் காக்கும் தனயனின் பரம்பரை நமதென முழங்கி.. வீர மரபில் விளைந்தவர்கள் நாம் என முரசுகொட்டும் பாடல்! ஓங்கி ஒலிப்பது மட்டுமின்றி ஒவ்வொரு வரியிலும் வீரத்தின் வரலாறு! திராவிடத்தின் பெருமைதனை உலகுக்குச் சொல்ல இந்த ஒரு பாடல் போதுமே!!

    காலத்தை வென்றவர்கள் வரிசையிலே கண்ணதாசன், எம்.ஜி.ஆர். போன்றோர் நிற்பதைக் காண்கிறோம். அவர்கள் சராசரி வாழ்க்கையைக் கடந்து தங்கள் சாதனைகளால் புகழ்வானில் நிலைத்ததையும் அறிவோம்!

    வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி..
    மக்களின் மனதில் நிற்பவர் யார்..
    என்கிற இப்பாடல் வரிகளுக்கு இவர்களே இலக்கணமாய்த் திகழ்கிறார்கள்.

    ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு..
    தாயகம் காப்பது கடமையடா..
    இதில் ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு என்பது ஆறுவயதிலும் மரணம் வரலாம்! நூறு வயதிலும் மரணம்என்பதே குறிப்பென மரணத்தின் நிச்சயத் தன்மை வரையறுக்கப்பட்டிருக்கிறது!

    மகாபாரதத்தில் – பாண்டவர்கள் ஐவரோடு ஆறாவதாக நின்றாலும் கர்ணனுக்கு மரணம் நிச்சயம்! கெளரவர்கள் நூறுபேரோடு நின்று போரிடினும் மரணம் நிச்சயம் என்றும் இதற்கு பொருள் கண்டபோது வியந்துபோனேன்.

    பல்லவியாய் அமைந்த நான்கு வரிகளையும் குழந்தைகள் நெஞ்சில் பதித்து வையுங்கள்! நாளைய தலைமுறை வீரம், மானம் மிக்கதாய் விளங்கும் என்பதில் ஐயமில்லை..

    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா.. ஆ..ஆ..ஆ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா

    1999ஆம் ஆண்டு யாம் நடத்திய பாங்கான பட்டிமன்றத்தில் தருமபுரியிலிருந்து அழைத்து வரப்பட்ட 65வயது இளையவர் இப்பாடலைப் பாடியபோது.. கூடியிருந்த மக்கள் அனைவரின் இரத்த நாளங்கள் சூடாகின. நரம்புகள் முறுக்கேறின. அத்தனை அற்புதமாய் பாடிய அவரை.. பம்மல் நல்லதம்பி அவர்கள் மெச்சிப் புகழ்ந்து.. எங்களை எல்லாம் 1960களுக்கே அழைத்துச் சென்றுவிட்டீர் என்றது நினைவுக்கு வருகிறது..

    எல்லாவற்றையும் விட ஒரு ரகசியம்.. புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் ஒவ்வொரு முறை காரில் பயணம் செய்யும்போதும் தவறாமல் இப்பாடல் ஒலிக்குமாம்! .. கண்ணதாசன் என்னும் காவியத்தில் இதுவும் ஒரு பக்கம்!

    காணொளி: http://youtu.be/KnRLGNYrCh0

     

    படம்: மன்னாதி மன்னன் (1960)
    பாடல்: கண்ணதாசன்
    இசை: எம். எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
    குரல்: டி. எம். சௌந்தரராஜன்

    _______________________

    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா.. ஆ..ஆ..ஆ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா

    கனகவிஜையரின் முடிதலை நெறித்து
    கல்லினை வைத்தான் சேர மகன்..ஆ..ஆ
    கனகவிஜையரின் முடிதலை நெறித்து
    கல்லினை வைத்தான் சேர மகன்
    இமய வரம்பினில் மீன் கொடியேற்றி
    இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா

    கருவினில் வளரும் மழலையின் உடலில்
    தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை.. ஈ..ஈ..ஆ..
    கருவினில் வளரும் மழலையின் உடலில்
    தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
    களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
    காத்திட எழுவான் அவள் பிள்ளை
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா

    வாழ்பவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    வாழ்பவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா

    அச்சம் என்பது மடமையடாTHREETMSஅச்சம் என்பது மடமையடா2

    Share
  • இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு…

    –கவிஞர் காவிரிமைந்தன்.

     

    குடியரசு

     

     

    உள்ளத்துள் உள்ளது கவிதை என்றான் மகா கவி பாரதி.. உணர்ச்சிப் பிழம்பாய் அவன் படைத்த கவிதைகள்தாம் விடுதலை வேட்கைக்கு வித்திட்டன என்பதை நாம் அறிவோம். கவிஞன் என்பவனின் உள்ளம் எத்தகு களமாக அமைகிறதோ அவ்விதமே.. அவனிடமிருந்து கவிதைகள் பூப்பூக்கும் அல்லது கந்தகம் வெடிக்கும். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த பாரத விலாஸ் திரைப்படத்தில் தேச ஒற்றுமையைக் காட்டும் அருமையான பாடல். இதயம் தொடும் இசையமைப்பை மெல்லிசை மன்னர் வழங்கியிருக்க.. கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில் .. ஒரு பாட்டுப் பட்டாளம் பாடியிருக்க.. நடிகர்கள் நடிகைகளும் இணைந்து வழங்கிய இப்பாடலை 26.01.2015 – இந்தியக் குடியரசு தினத்தில் பரிமாறுவதில் உளம் மகிழ்கிறேன்.

    இனத்தால் தமிழரென்றும்.. இந்தியனென்றும் கவிஞர் வாலி தந்திருக்கும் கவித்துவ முத்திரைகள் காலத்தால் அழியாதவை.

    பல்வேறு வேறுபாடுகள் எமக்குள்ளே இருந்தாலும் இந்தியன் என வரும்போது .. நாடி நரம்புகள் ரத்த நாளங்கள் ஒன்றுபட பெருமை மிக்க எம் நாட்டை எண்ணி பெருமிதம் கொள்வதும்.. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும் எமது தனித்துவம் என்று உலகிற்கு பறைசாற்றிக்கொண்டிருக்கிற நாடு இந்தியா..

    ஹிந்து. முஸ்லீம்.. கிறிஸ்துவர் சீக்கியர் என்று பல்வேறு கதா பாத்திரங்கள் திரையில் தோன்ற.. மத நல்லிணக்கத்திற்கு.. என ஒற்றுமைக்கு.. இலக்கணம் வகுத்திடும் வண்ணம் எடுக்கப்பட்ட படமிது. குறிப்பாக, இந்தப் பாடல் ஒவ்வொரு இந்தியனையும் தலை நிமிரச் செய்யும். கற்பனை வளத்தில் மட்டும் பூத்த பாடல் கவிதை மனம் அல்ல. கவிஞரின் உள்மனதில் இருந்த உணர்வின் ஊற்று இது! கவிதை மணம் தவிர தமிழ் மணத்துடன் தேசிய மணமும் நிறைந்திருந்தது. நம் நெஞ்சில் நிலைத்திருந்தது.

    http://youtu.be/kG2Get7rZuU

    வந்தே மாதரம்! வந்தே மாதரம்!! வந்தே மாதரம்!!

    காணொளி: http://youtu.be/kG2Get7rZuU

     

    படம்: பாரத விலாஸ் (1973)
    இயற்றியவர்: வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, ஏ.எல். ராகவன்

    இந்திய நாடு என் வீடு
    இந்தியன் என்பது என் பேரு
    எல்லா மக்களும் என் உறவு
    எல்லோர் மொழியும் என் பேச்சு
    திசை தொழும் துருக்கர் என் தோழர்
    தேவன் இயேசுவும் என் கடவுள்

    எல்லா மதமும் என் மதமே
    எதுவும் எனக்கு சம்மதமே
    ரகுபதி ராகவ ராஜாராம்
    பதீத பாவன சீதாராம்
    ரகுபதி ராகவ ராஜாராம்
    பதீத பாவன சீதாராம்

    கங்கை பாயும் வங்கம் செந்நெல்
    கதிர்கள் சாயும் தமிழகம்
    தங்கம் விளையும் கன்னடம்
    நல் தென்னை வளரும் கேரளம்

    ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
    ராஜஸ்தான் பாஞ்சாலமும்
    சேர்ந்து அமைந்த தேசம் எங்கள்
    அன்னை பூமி பாரதம்

    இந்திய நாடு என் வீடு
    இந்தியன் என்பது என் பேரு
    ரகுபதி ராகவ ராஜாராம்
    பதீத பாவன சீதாராம்

    இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
    இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
    சுந்தரத் தெலுங்கினில் பாடுங்கோ
    குச்சுப்புடி நடனங்கள் ஆடுங்கோ
    சல் மோகனரங்கா பாடுங்கோ
    சல் மோகனரங்கா பாடுங்கோ
    ஸ்ரீசைலம் திருப்பதி ஷேத்திரம் உண்டு
    தரிசனம் பண்ண வாருங்கோ
    கப்பல் கட்டுற விசாகப் பட்டினம்
    கடற்கரை உண்டு பாருங்கோ
    சல் மோகனரங்கா பாடுங்கோ
    சல் மோகனரங்கா பாடுங்கோ

    ஏனு ஸ்வாமி இல்லி நோடு
    எங்க ஊரு மைசூரு
    காவிரி பிரிந்த கன்னட நாட்டை
    யாவரும் போற்றி சொல்வாரு
    ஏனு ஸ்வாமி இல்லி நோடு
    எங்க ஊரு மைசூரு
    ப்ருந்தாவனமும் சாமுண்டி கோவிலும்
    நோடு ஸ்வாமி நீ நோடு
    நீ நோடு மைசூரு
    எல்லா மொழியும் எல்லா இனமும்
    ஒண்ணு கலந்தது பெங்களூரு
    ஏனு ஸ்வாமி
    ஏனு ஸ்வாமி இல்லி நோடு மைசூரு

    படச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
    அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
    ஞானும் இவளும் ஜனனமெடுத்தது
    கேரளம் திருச்சூர் ஜில்லா

    தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
    இவ்விட பாக்கணும் நீங்க
    தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து
    வெள்ளையன் வந்தான் வாங்க

    படைச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
    அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
    அல்லாஹூ அல்லா அல்லாஹூ அல்லா

    சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
    பஞ்சாப்வாலா கீத்து சுனோ
    பஞ்சாப்வாலா கீத்து சுனோ
    தங்கக் கலசம் பொற்கோவில்
    எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
    ஆஹா தேக்கோ தேக்கோ
    உய்யாஹு தேக்கோ தேக்கோ
    உய்யாஹு தேக்கோ தேக்கோ
    உய்யாஹு தேக்கோ தேக்கோ

    ஜீலம் ஷட்லஜ் நதிகள் பாயும்
    கோலம் காண ஆவோ ஆவோ
    ஆவோ ஆவோ உம் ஆஹா அவோ ஆவோ

    பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி
    பகத்சிங் பிறந்த பொன்னாடு
    பகத்சிங் பிறந்த பொன்னாடு
    யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
    யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
    யாஹூங் யாஹூங்

    எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
    எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
    பாரதவிலாசில் ஒன்றாய் வாழ்ந்து
    பேசிப் பழகும் கிள்ளைகள்
    சத்தியம் எங்கள் தேசம்
    சமத்துவம் எங்கள் கீதம்
    வருவதைப் பகிர்ந்து உண்போம்
    வந்தே மாதரம் என்போம்

    வந்தே மாதரம் வந்தே மாதரம்
    வந்தே மாதரம் வந்தே மாதரம்
    வந்தே மாதரம் வந்தே மாதரம்
    வந்தே மாதரம் வந்தே மாதரம்
    வந்தே மாதரம் வந்தே மாதரம்

    Share
  • நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    நல்லவர்க்கெல்லாம்

    நல்லவர்க்கெல்லாம்…

    இலக்கியம், கவிதை, கலை, ஓவியம் எனப் பன்முகம் காட்டிப் பரிணமித்தாலும் இதயம் ஒன்றி ரசிக்கும்தன்மையில்தான் அடிப்படையில் மேம்பட்டது எனத்தோன்றுகிறது. கடமைக்கு நன்றி சொல்வதைவிட உளமாற நன்றிசொல்வது உகந்தது அல்லவா? உள்ளத்தின் வெளிப்பாடு வார்த்தையில் வரும்போது சொற்கள் ஆகின்றன! அதுவே உணர்ச்சியின் வெளிப்பாடாய் கவிஞனிடம் பிறக்கும்போது கவிதைகளாய் மலர்கின்றன!

    திரைப்பாடல்கள்கூட கவிதைகளாக மலரவைத்தவன் கண்ணதாசன் என்பதுதான் எத்தனை சத்தியம்!! இருபதாம் நூற்றாண்டில் – இவ்வுலகம் எத்தனையோ விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் தொழில்நுட்பத்துறை முன்னேற்றங்களால் வளர்ச்சியுற்று நவீன யுகத்தை நோக்கி வேகமான நகர்வு ஏற்பட்டிருந்தாலும் கூட..

    இதே காலக்கட்டத்தில்.. இதோ கேட்கும் இதுபோன்ற இனிமையான பாடல்களும் படைக்கப்பட்டிருந்தது இதயத்திற்கான விருந்தல்லவா? காயப்பட்டிருக்கும் ஆயிரமாயிரம் மனங்களுக்கு மருந்தல்லவோ?

    காலப்போக்கில் மனித வாழ்க்கை சுழற்சிமுறையில் வாட்டியெடுத்தபோதெல்லாம் வதங்கிப் போவது மனது மட்டுமே.. துவண்டுகிடக்கும் அந்த மனதைத் தொட்டு எழுப்பியபோது வார்த்தை வரவில்லையே!! விதியை எண்ணி விடையிறுப்போர் எண்ணிக்கைக் கூடுகிறதே! கண்ணதாசன் மட்டுமென்ன விதிவிலக்கா? கம்பனிடம் அவன் வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டும் விதமாக.. இதோ இப்பாடலில்.. ஒரு சில வரிகள் பளிச்சிடுகின்றன!

    ஊழ்வினை உறுத்தல் என்கிற பதிகம் மனனம் ஆனதனால் இங்கே வரிகள் இப்படி ஜனனம் எனலாமா?

    நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
    விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

    ‘தியாகம்’ திரைப்படத்திற்காக கண்ணதாசன் – இளையராஜா – டி.எம்.எஸ். – லட்சுமி.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட்டணியில்..

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
    நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
    அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
    மனிதனம்மா மயங்குகிறேன்
    தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
    தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

    கண்ணதாசனே.. படைப்பதனால் என் பெயர் இறைவன் என்று மார்தட்டிச் சொன்னவனே! மனித வாழ்க்கைக் கூறுகளில் எல்லாம் நிறைந்து தெய்வமாகவே எனக்குக் காட்சி தருபவனே! மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்!

    http://youtu.be/zHJdgYyvGWA

    காணொளி: http://www.youtube.com/watch?v=zHJdgYyvGWA

    படம்:தியாகம்
    பாடல்: கண்ணதாசன்
    இசை : இளையராஜா
    குரல்: டி. எம். சௌந்தர்ராஜன்

    1234

    நல்லவர்க்கெல்லாம்…
    நல்லவர்க்கெல்லாம்…
    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
    நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
    அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
    அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

    நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
    விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
    நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
    விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
    பறவைகளே பதில் சொல்லுங்கள்
    மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
    மனதிற்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
    மனிதனம்மா மயங்குகிறேன்
    தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
    தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

    நல்லவர்க்கெல்லாம்…
    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
    நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
    அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
    அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

    Share
  • கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் …

    –கவிஞர் காவிரிமைந்தன்

    கண்ணன் மனநிலை2

    மகாகவி பாரதியாரின் பாடல்களை அவற்றில் மனம்கொடுத்தோர் அவ்வப்போது திரைப்படங்களிலும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இசைமேதை ஜி.இராமனாதன் இசையமைப்பில் தெய்வத்தின் தெய்வம் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் எஸ். ஜானகி குரலில் இழைந்துவரும் அமுதகானமாக..

    எஸ்.எஸ்.இராஜேந்திரன் .. விஜயகுமாரி நடிப்பில் இயக்குனர்திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வண்ணக்கவிதைக்கு ஒரு வசந்தவிழா எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

    ஒப்பிலாப் பாடலுக்கு உகந்த இசை பின்னணியாய் அமைந்துவிட அதை உணர்ந்து பாடி உருவம் தந்திருக்கிறார் பாடகி!

    நற்றமிழ் நர்த்தனம் – நலம் சேர்க்கும் மெல்லிசை மோகனம் கேட்கும்போதே பரவசம் தருகிற பாடல்! மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிற இசைவெள்ளம் பாய்கிறது – இதயத்தைத் திறந்துவையுங்கள்!

     

    http://youtu.be/j8y_bhR19oI

    காணொளி: http://youtu.be/j8y_bhR19oI

    படம்: தெய்வத்தின் தெய்வம்
    பாடல்: பாரதியார்
    இசை : ஜி. ராமநாதன்
    குரல்: எஸ் ஜானகி

    பாரதிஜி ராமநாதன்ஜானகிதெய்வத்தின் தெய்வம்
    கண்ணன்…
    கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
    கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;
    எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம்..ஆஆ…
    எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம்
    பின்னர் ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!

    (கண்ணன்…)

    ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள்…
    ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள்
    எனை அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
    தூற்றி நகர் முரசு சாற்றுவேனென்று
    சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்..!

    (கண்ணன்…)

    நேர முழுதிலும் அப்பாவி தன்னையே…
    நேர முழுதிலும் அப்பாவி தன்னையே
    உள்ளம்நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்..!
    தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்….
    தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு
    தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்..!

    (கண்ணன்..)

    Share
  • பொங்கலோ பொங்கலென்று இன்பம் பொங்க கூடிடுவோம்!

    -கவிஞர் காவிரிமைந்தன்

    உலகம் தழைக்க உழைக்கும் மாந்தர்
    வாழ்வில் வரும் ஒருநாள்!
    உயிர்கள் பிழைக்க உணவைத் தரும்                 kaviri1
    உழவர் காணும் திருநாள்!
    உடன்தான் உழைக்கும் மாடுகள்
    கூடவே காணும் பெருநாள்!
    செங்கதிரோன் பங்களிப்பில்
    பச்சைவயல் காட்சிதர…
    நம்குலத்து நாயகர்கள்
    நாளும் உழவு செய்ய
    புதுப்பானை வண்ணம்தீட்டி
    செங்கரும்பு பொங்கலிட்டு
    செந்தமிழில் குலவலிடும்
    எம்குலத்து பெண்டிற்குரல்                                kaviri2
    வந்துகேட்கும் நாளுமிது!
    புத்தாடை தனையணிந்து
    பூக்கோலம் தெருவிலிட்டு
    வந்துதித்த கதிரவனுக்கு
    வாயார நன்றிசொல்லி..
    சுற்றங்களும் சொந்தங்களும்
    சூழ்ந்துநின்று கொண்டாடும்…
    தைத்திங்கள் முதல்நாளை
    தமிழர்தம் திருநாளை
    பொங்கலோ பொங்கலென்று
    இன்பம் பொங்க கூடிடுவோம்!
    இதயம் பொங்க மகிழ்ந்திடுவோம்!

    Share
  • ரகசிய முடிச்சு அவிழ்ப்பதற்கில்லை…நாம் வெறும் பொம்மையம்மா!

    -கவிஞர் காவிரிமைந்தன்

    எந்த இடத்தில் இந்த மூச்சு நிற்கப்போகிறதோ
    எந்த நொடியில் இந்த ஓட்டம் களைத்துவிழுகிறதோ
    அந்த இடமும் அந்த நொடியும் ஆண்டவன் கையிலம்மா
    ரகசிய முடிச்சு அவிழ்ப்பதற்கில்லை…நாம் வெறும் பொம்மையம்மா!

    எவரின் கணக்கு எத்தனை நாட்கள் விவரம் தெரியாமல்
    எத்தனை ஆசைகள் எத்தனை ஆணவம் எதற்கிங்கே அர்த்தமுண்டு?
    கொடுத்தவன் கேட்கிறான்…கொட்டியே கவிழ்க்கிறான்!
    கணக்கினில் பேதமில்லை! சமத்துவம் சாவதில்லை!!
    நினைத்து நீ பார்க்கவே நெஞ்சத்தைக் கொடுத்திட்டான்!
    வருத்தங்கள் மாறவே மறதியைச் சேர்த்திட்டான்!
    அடுத்த நொடியிலே நடப்பதுகூட அத்தனை ரகசியமாய்
    படைத்தவன் வகுத்ததால் சுழலும்சக்கரம் தடுப்பவர் யாருமில்லை!!

    Share
  • மண்ணுக்கு மரம் பாரமா?

    கவிஞர் காவிரிமைந்தன்.

    mannuku maram barama

    தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படத்திற்காக உருவான அனைத்துப் பாடல்களுமே அருமையெனலாம்! திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் பல்வேறு குரல்களின் வழியே கேட்டு உருகவைக்கிற கானங்கள்! கவிஞர்களும் இத்திரைப்படத்திற்காக அணிவகுத்து எழுதியிருக்க.. இதோ ஒரு பாடல்..கவிஞர் மருதகாசி எழுத்தில்..

    திரைக்கதையைப் பின்னிக்கொண்டு அதைநம்மிடம் சொல்ல வருகிறது! தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு பற்றி இப்படி ஒரு தங்கமான பாடல் கிடைத்ததே.. தை பிறந்தால் வழி பிறக்கும் படத்திற்கு கிடைத்த வெற்றி என்பேன்!

    சூழ்நிலையின் காரணமாய் பெற்ற பிள்ளையை பிரிந்து பயணம் கொள்ளும் தாய்.. அவள் மனதில் உள்ள காயங்கள்.. விழிகளில் நீர் ததும்பிக்கிடக்க நடிப்பில் நவரசம் காட்டும் நடிகை திருமதி.ராஜசுலோசனா.. அவர் காணும் காட்சியில் தாயொருத்தி தன் குழந்தையைத் தாலாட்டிப் பாடுகின்ற பாடலாய்..

    வரிவரியாய் வரிந்துகட்டி எழுகின்ற கேள்விகள் எல்லாவற்றிற்கும் இடையில் ஒரு சொந்தம்.. ஒரு பந்தம்.. பிரிக்க முடியாதவை இரண்டை சுட்டிக்காட்டி.. எழுத்துரதத்தை இயல்பாக ஓட்டுகிறார் கவிஞர்.

    இயற்கையான இந்த பந்தங்களை எவரால் மறுத்துச் சொல்ல முடியும்? அதுவும் தாய் தன் சேயை பாரம் எனக் கருத முடியுமா? அன்புசார்ந்த வினாக்கள் அடிமனதைத் தாக்க அன்னையின் இதயம் துடிக்கிறது! தாய்மை என்கிற பேற்றை தந்தது சேயல்லவா.. நீ அதன் தாயல்லவா.. பெற்றதுமட்டும் அங்கே போதுமா? பேணி வளர்த்திட வேண்டாமா? என்கிற தொடர் கேள்விகளுக்கு விடைசொல்ல முடியாமல் அன்னை மனம் படுகிற பாடு..

    எம்.எஸ்.இராஜேஸ்வரி அவர்களின் குரலில் தவழும் இந்த கானம் வெறும் தாலாட்டல்ல! தாய்மையை நோக்கிய கேள்விப்படை!! இனிமை நிறைந்த அந்தக் குரலில் இதயம் நோக்கிவரும் பாடலின் வரிகள் .. அர்த்தமிக்கவை.. ஆழமானவை.. இசையும் கவிதையும்.. துன்பத்தை எடுத்துச் சொல்லும்போதும்.. அதை இனிமை சேர்க்கும் இன்பராகமாய் அமைத்த இசையமைப்பாளர்.. இப் பாடல் கேட்கும்போதெல்லாம் நாம் பெறும் சுகம் கொஞ்சமல்ல!!

    http://youtu.be/c_3KefG0vxQ
    காணொளி: http://youtu.be/c_3KefG0vxQ

     

     

    படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
    பாடல்: கவிஞர் மருதகாசி
    இசை: கே.வி.மகாதேவன்
    குரல்: எம்.எஸ்.இராஜேஸ்வரி

    Marudhakasi_Book Reading Posem s rajeswzriK.-V.-Mahadevan-Songs thaipiranthal

    மண்ணுக்கு மரம் பாரமா
    மரத்துக்கு இலை பாரமா
    கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
    குழந்தை தாய்க்கு பாரமா

    வாடியே நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
    தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
    மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
    தாயென்ற பெருமைதனை மனம் குளிர தந்தவளே
    கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
    குழந்தை தாய்க்கு பாரமா
    [மண்ணுக்கு மரம் பாரமா]

    அழுதால் அரும்புதிரும் அன்னாந்தால் பொன்னுதிரும்
    சிரித்தால் முத்துதிரும் வாய் திறந்தால் தேனுதிரும்
    பிள்ளையை பெற்று விட்டால் போதுமா
    பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா
    அல்லலை கண்டு மனசு அஞ்சுமா
    குழந்தை அழுவதை கேட்டு மனசு விஞ்சுமா
    [மண்ணுக்கு மரம் பாரமா]

    Share