–காவிரிமைந்தன்.

அழகன்

 

 

 

om saravanaதிருமுருகன் அழகினில் மயங்காதவர் யார்? அழகுக்கு மறுபெயரே முருகன்தானே!  அன்னவர்தம் சரண்புகுந்தார் எனும்போது அவன்மீது ஆசைவைத்து நாயகி பாடுகின்றாள் ஒரு பாடல்!  ‘பஞ்சவர்ணக்கிளி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாட்டு!  கவிஞர் வாலி அவர்கள் வரைந்திருக்கும் ஓவியமாய், சுகமான சொற்களிலே சொக்க வைக்கிறார்!  பி.சுசீலா குரலிலே தேன்மழை பொழிகிறார்!  மெல்லிசை மன்னர்கள்  இசையமைத்திட இனிதாய் ஒரு பாடல் அரங்கேறுகிறது!  நம் மனதில் இன்றும் அக் காட்சி நினைவோடு நிற்கிறது!

 
http://youtu.be/7qpeuaM39RM
காணொளி: -http://youtu.be/7qpeuaM39RM

 

திரைப் படம்: பஞ்சவர்ணக் கிளி
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி – டி.கே.ஆர்

சத்தியம் சிவம் சுந்தரம் ஆ….
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ…

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ…
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ..
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
பெண்மையை வாழ வைத்தான் ஆ…
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ…
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

 

வார்த்தைகள் வரம்கேட்டு வந்து விழுந்தனவோ?  கவிஞர் வாலி  கரம்பட்டு கண்கள் மயங்கினவோ?  சுகமான பாடல்கள் பல.. பி.சுசீலா பாடியிருந்தாலும் அவற்றுள் முன்னணியில் ‘அழகன் முருகனிடம் ஆசைவைத்தேன்’ பாடல்!  கேட்பது சுகம்!  கேட்டு ரசிப்பது சுகம்!!  என்று சுகத்தின் பன்முகங்கள் இதோ ஒரு பாடலிலே.. அழகியலின் பதிவு எனில் அழையுங்கள் கவிஞர் வாலி அவர்களை!  இறைவனையும் கலந்தபடி இனிதாய் எழுதித்தந்திடுவார்.. அழகனைப் பற்றி அவள் பாடும் பாடலிது!  இது முருகனை அழைக்கும் முத்திரைப் பாடல்!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *