-மீ.விசுவநாதன்

 

baby-krishna

 

பாடுறேன் பாடுறேன் பல்லாண்டு – என்
பல்லாங் குழிமனச் சொல்லாண்டு
கூடுறேன் ஓடுறேன் நிற்காமல் – பெருங்
கூட்ட இரைச்சலைக் கேளாமல்!

வஞ்சமோ துன்பமோ செய்யாமல் – மண்
வாச உறவினைப் பேணுகிறேன்
கொஞ்சமா கொட்டுறான் இன்பங்கள் – அக்
கொலுவின் அழகிலே சொக்குகிறேன்!

கண்ணனாய்ப் பிள்ளையாய் ஊரெங்கும் – தினம்
களிகள் நடப்பதைக் காண்கின்றேன்
வெண்ணெயாய் வெண்மையாய் உள்ளுக்குள் – என்
வெப்பம் தணிப்பதை என்னென்பேன்!

பச்சையாய்ப் புல்வெளி பார்த்தாலே – ஒரு
பசுவாய்ச் சுவைக்கிற தோற்றம்தான்
உச்சமாய்த் தோன்றுது கோவிந்தா – என்
மூச்சில் உன்குழல் கானம்தா!

(வாய்பாடு: விளம், விளம், காய், மா, விளம், காய்)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *