Tag: ஜெயஸ்ரீ ஷங்கர்

  • தன்னைச் சுடும்!..

    ஜெயஸ்ரீ ஷங்கர்

     

    ஹேய்….இங்க பாரேன் கிரி….! மூணு மாசக் குழந்தையைக் கூட இந்த ‘மாண்டசரி ஸ்கூல்ல’ சேர்த்துக்கறாளாம். வெரி நைஸ்…இல்லபா …நல்லவேளையா இப்ப ..நம்ம கீட்ஸு க்கு நாளையோட அவன் பொறந்து நாலாவது மாசம் முடியப் போறது ..இன்னி வரைக்கும் இந்த ஹோர்டிங் அட்வெர்டைஸ்மென்ட் என் கண்ணுலயே படல பார்த்தியா..? டூ யு நோ திஸ் பிஃபோர் ரா….?

    நோ….பார்…….!

    தெரியாதுங்கறியா….? இல்ல ‘நோ பார்’னே சொல்றியா..

    இல்ல பார்கவி தெரியாதுன்னு சொல்றேன். நானும் உன்கூட சேர்ந்து இப்பத்தான் இதைப் படிக்கறேன்..

    யூ…சோம்பேறி …டெய்லி இந்த வழியாத் தானே வரே நீ…அதெப்படி உன் கண்ணுலேர்ந்து இவ்ளோ பெரிய ஹோர்டிங் தப்பிச்சது ?

    இதெல்லாம் உங்க கண்ணுக்குள்ள மட்டும் தான் சிக்கும் ….நான் பாட்டுக்கு ரேடியோ மிர்ச்சி கேட்டுக்கிட்டு எனக்கு முன்னாடி யார் வண்டி ஓட்டறா..? ஏதாவது அம்ச ஃபிகர் கண்ணுல மாட்டாதான்னு டைம் பாஸ் சைட் அடிச்சுண்டு இருப்பேன்..போயும் போயும் இதெல்லாம் யாருக்கு வேணும்? நான் தனியா வெளில வந்தாச்சுன்னா அவ்ளோ தான். சென்ட் பெர்செண்ட் பாச்சலர் ரா…!

    அதே .தான் நானும் திங் பண்ணேன்…உன்னைப் பத்தி….நீயே அதை அக்செப்ட் பண்ணீட்டே…ஹேய் மிஸ்டர் கிரி….நீ தான் மிஸஸ் பார்கவியாகி ரெண்டு வருஷமாயாச்சு….அதுக்கு அடையாளமா..?

    உன் கழுத்துல தாலி தொங்கலை….!

    ம்கும்….உன் காதுல கடுக்கண் மின்னறது மச்சான்….மண்டைக்கு சூடு போட்டுக்கோ சொல்லிட்டேன்….ஒழுங்கா ஆபீஸ் போனமா….வேலையை மட்டும் பார்த்தோமா…பார்கவிக்கும், கீட்சுக்கும் பிடிச்சதை வாங்கித் தந்தோமான்னு நல்ல பையனா லட்சணமா சமத்தா நடந்துக்கணம்…..சரியா….காரை ஒட்டிக் கொண்டிருந்த கிரியின் காதைத் திருகி அழகு காட்டினாள் பார்கவி.

    அங்க பாரேன்… பார்….அந்தப் பொண்ணு எப்படி பைக்குல அவனோட ஒட்டிக்கிட்டுப் போறாள்னு….நீயும் இருக்கியே….ஆயிரம் சொல்லு பைக் பைக்கு தான் கார் ….கார்…தான். இல்லியா பார்….!

    நீ திருந்தவே மாட்ரா ..! உன்னோட லொள்ளும்…ஜொள்ளும் ..

    என்னோட கவச குண்டலங்கள் மாதிரி…!

    வீட்டுக்கு வா…அம்மா காதுல போட்டு வைக்கிறேன்…..உன்னோட திருவிளையாடலை….! உங்கம்மா பண்ற அர்ச்சனைக்கு மட்டும் தான் நீ அடங்குவே..!

    வேண்டாண்டி…பார்….என் பாவமான மூஞ்சியைப் பாரேண்டி ..! அம்மாவுக்கு, ஆரம்பிச்சா நிறுத்தத் தெரியாதுன்னு உனக்கே தெரியுமே.

    .சரி.சரி…ஜோக்ஸ் அபார்ட்…..இப்ப விஷயத்துக்கு வா……நம்ம கீட்ஸுக்கு நல்ல ஸ்கூல் கிடைச்சாச்சு…நாளைக்கே போயி விசாரிக்கணம்….அட்ரெஸ மெசேஜ் பண்ணி சேவ்ல போட்டு வெச்சுக்கோ.

    கஷ்டம் கஷ்டம்..இவன் பொறந்து வெறும் நாலே மாசம் தானே ஆறது….அதுக்குள்ளே உனக்கு என்னாச்சு பார் .? இவ்ளோ அவசரப் படறே. அட…நான் தான் மறந்தே போய்ட்டேன்….நீ தான் ஒன்பது மாசம் முடிஞ்சதுமே ஹாஸ்பிடல்ல ரூம் போட்டு, இன்னிக்கு இந்த நட்சத்திரத்துல தான் என் குழந்தை பொறக்கணும்னு அடம் பிடிச்சு சிசேரியன் கேஸாச்சே.உன் கிட்ட என் பருப்பு வேகாது…..!.

    ஆஸ்பத்திரி வாசல்ல நாதஸ்வரம் ஏற்பாடு பண்ணி வெச்சு குழந்தை பொறந்த உடனே வாசிக்க சொல்லியிருந்தேனே அதை நீ பாராட்டவேயில்லை…கிரி ….!

    ஆமாமா…..அதான் குழந்தை பயத்தில், பிறந்ததும் இன்குபேட்டர்ல போய் படுத்துண்டான்…இதெல்லாம் என்னமோ…தெரியலை….நீ மட்டும் தான் அப்படியா இல்லை உன் குடும்பத்துல வேற யாராச்சும் இப்படி மரை கழண்ட கேஸுகள் இன்னும் இருக்கா…?

    உனக்குத் தெரியாதா….? இதெல்லாம் கூட வாஸ்து மாதிரி தான்…இப்பல்லாம் இதெல்லாம் ஃபேஷனாவே ஆயாச்சு.. இப்படில்லாம் பண்ணாதவா தான் குறைவு.

    நான் இதுல ஜீரோ….பட் நோ..பெயின் ……நோ கெய்ன்டி பார்….!

    ம்கும்…நோ பெயின் பட் கெய்ன்..கீட்ஸ்…!

    நான் உன்ன மாதிரி..என்னை மாதிரியெல்லாம் நம்ம குழந்தையை வளர்க்க மாட்டேனாக்கும். எனக்குன்னு ஒரு ப்ளான். என் கசின் சிஸ் திவ்யா தெரியுமா.?..ஞாபகம் இருக்கா?

    ம்ம்….அந்த பரட்டைத் தலை…..அச்சச்சோ….அந்த பாப் தலைவி…!

    அது…..! அவள்….குழந்தை வயித்தில இருக்கும்போதே அதுக்குன்னு எதோ ஒரு கிளாசுக்கு போயிருக்கா…அதனாலத் தான் அவ குழந்தை பிரேமுக்கு ஒரு வயசு தான் ஆறது…அதுக்குள்ளே புத்தகத்துல இருக்கும் அத்தனை படத்தையும் ஐடெண்டிஃபை
    பண்ணி டக்கு டக்கு ன்னு சொல்றானாம். இவளுக்கு ரொம்பப் பெருமையா இருக்காம்…போன வாரம் கூட ஃபோன் பண்ணிச் சொல்லி சந்தோஷப் பட்டாள் .

    ரொம்ப முக்கியம்….! இல்ல…..இல்ல….பிரேம் இப்பவே நம்ம கீட்ஸ் க்கு வில்லனாயிட்டானா..? ன்னு.

    என்ன நீ கிரி…..நம்ம கீட்ஸ் கூட அவனை மாதிரி வரவேண்டாமா…? அதுக்குத் தான் இந்த ஸ்கூல்.

    இந்த விஷயத்தில் நீ அவசரப் படாதே பார்…! அம்மாட்டயும் கேட்கணும்..அவாளுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே இருக்காது நீ வேணாப் பாரேன்……எவனோ காசு பிடுங்க போடற ஐடியாவில் நீங்க முதலீடு செய்யாதேங்கோன்னு சொல்வா.

    ஆமாமா…அப்டித் தான் சொல்வா…நான் சொல்ற எதுக்கு உங்கம்மா உடனே அப்படியா சரின்னு சொல்லிருக்கா..?அதெல்லாம் கேட்டுண்டு இருந்தா நம்ம குழந்தை கடைசி பெஞ்சுல கண்ணைக் கட்டிண்டு உட்காரணம், பரவாயில்லையா..? உங்களுக்கு வேணா பரவாயில்லைன்னு இருக்கலாம்….என்னால முடியாது.ஐ வில் மேக் ஹிம் தி பெஸ்ட் கிட் …! உலகம் எவ்வளவு வேகமா போறது தெரியுமா? அதுக்கேத்த வேகம் இருந்தாத் தான் வர காலத்துல பிழைக்க முடியும்.

    வீட்டுக்குள் போனதும் என்ன மாதிரியான வாக்குவாதம் நடக்கப் போறதோ….இப்பவே மனத்தில் 70mm அளவுக்குத் திரை விழுந்து அதில் பார்கவி ஃபுல் ஸ்க்ரீனில் முறைத்துக் கொண்டு தெரிந்தாள் . அதை ஜூம் அவுட் பண்ணுவதற்குள் வீடு வந்து விட்டது.

    காரைப் பார்க் செய்து விட்டு, ஹேய்….கமான் பார்…..பி ரிலாக்ஸ்ட்….இங்கேர்ந்தே மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்காதே….அம்மா கண்டு பிடிச்சுடுவா…! ஒ கே. கூல் பேப்..கொஞ்சம் சிரியேன் .

    எனக்குத் தெரியாதா..? உங்கம்மாக்கு உடம்பெல்லாம் கண்ணுன்னு..இதுக்கொண்ணும் குறைச்சலில்லை…..ஈஈஈஈ ……போதுமா…?

    அது சரி…ரொம்ப வாராதே..! ரொம்ப ஜாஸ்தி….கொஞ்சம் குறைச்சுக்கோ பரவாயில்லை ‘சின்ன இ’ யே…போதும்.

    நான் என்ன இங்க ஈயாப் பிடிக்கறேன்….’சின்ன ஈ’ போதும்…வெ வெ வெ வெ ..கிரியைப் பார்த்து அழகு காட்டினாள்…இங்க பாரு .அம்மாக்கிட்ட எனக்கு நீ சப்போர்ட் பண்ணிப் பேசணம் ..புரிஞ்சுதா? நான் என் குழந்தைக்கு எது செஞ்சாலும் அவன் நல்லதுக்குத் தான் செய்வேன்.

    அது சரி…..எல்லாருக்குமே அப்படித்தான் குழந்தை மேல பாசம் உண்டு பார்.

    யார் இல்லைன்னா…..அப்டி இருந்தால் எனக்கு யார்ட்டயும் இதுக்காக கெஞ்சவே வேண்டாமே..நாளைக்கே அந்த ஸ்கூல்ல சேர்த்துடலாம்….இல்லையா?

    வீட்டுக்குள் நுழையும் வரை பேசிக் கொண்டே செருப்பைக் கழற்றி விட்டு, உள்ளே நுழைந்ததும்,

    ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டே ‘சரவணன் மீனாட்சி ‘ சீரியலில் ஐக்கியமாகி பார்த்துக் கொண்டிருந்த சுபத்ரா , ஊஞ்சலை நிறுத்தி விட்டு, ஷாப்பிங் போய்ட்டு வந்தாச்சா…? கீட்ஸ் பசிச்சு அழுதானா….முதல்ல அவனுக்கு திருஷ்டி சுத்திப் போடணம். என்றபடி ஊஞ்சலிலிருந்து இறங்கினாள் .

    ம்மா…..உன் மருமகள் சொல்வா….கேளேன்…..நம்ம கீட்ஸ்சை நாளையிலேர்ந்து ஸ்கூல்ல சேர்க்கப் போறாளாம்..

    என்னடாது கூத்தாயிருக்கு…?.பொறந்து நாலு மாசம் கூட கழியலை…இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கெல்லாம் யார் ஸ்கூலை கட்டி வெச்சுண்டு உட்கார்ந்திருக்கா . நன்னாருக்கு போ..!

    அதெல்லாம் இருக்கு. குழந்தை வயித்துக்குள்ள இருக்கும்போதே சொல்லித் தர ஸ்கூல் எல்லாம் கூட வந்தாச்சாம். பார்கவி சொல்றா. நமக்கு தான் இதெல்லாம் ஒண்ணும் தெரியலை.

    அதுக்குள்ளே ஸ்கூலாவது….கீலாவது … நான் இதுக்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். ப்ளே ஸ்கூலுக்கு போக மூணு வயசானவட்டு பார்த்துக்கலாம்.

    ம்மா…நீ கொஞ்சம் சும்மா இரேன்….கிரி அம்மாவின் வாயை அடைத்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த பார்கவி,
    ஏன் நிறுத்திட்ட கிரி…நீயே அம்மாட்ட சொல்லியாச்சா..?

    இல்லையில்ல இப்பத் தான் சொல்லிண்டு இருக்கேன்.

    இதோ பார் பார்கவி…அவன் எல்லாம் சொன்னான்….ஆனா அதெல்லாம் நம்மாத்து குழந்தைக்கு இந்தக் கூத்தெல்லாம் ஒண்ணும் வேண்டாம். பொறந்து நாலு மாசம் ஆகும் குழந்தையை யாராவது ஸ்கூல்ல சேர்ப்பாளா ? இன்னும் முகம் பார்க்கவே முழுசா ஆரம்பிக்கலை.

    இப்பல்லாம் வயித்தில் இருக்கும் குழந்தைக்கே பாடம் சொல்லித் தர ஸ்கூல் இருக்கு தெரியுமா?

    அந்தக் கண்றாவியெல்லாம் நமக்கெதுக்கு? யாரோ பைத்தியம் பிடிச்சவா பண்ணினா நம்மளும் பண்ணணமா ? குழந்தைக்கு செர்லாக் கரைத்துக் கொண்டே சொல்லும் சுபத்ராவைப் பார்த்து,

    அதெல்லாம் ஒண்ணுமாகாதும்மா . கீட்ஸ் கண்டிப்பா இந்த ஸ்கூல்ல சேருவான். ஒரே வருஷத்தில் அத்தனையையும் கத்துப்பான்…நீங்களே பார்த்து அசந்து போயிடுவேள்.

    கிரிதரனை நாங்க அஞ்சு வயசுல தான் ஸ்கூல்லயே சேர்த்தோம்…அவனுக்கு என்ன படிப்பா வரலை…? அவன் அப்பா பள்ளிக் கூடம் போன வயசென்ன தெரியுமா..? பத்தோ பன்னெண்டோ…அவர் என்ன வக்கீலாகலையா?

    அது அந்தக் காலம்…நீங்க அந்தக் காலத்துலேயே இன்னும் இருந்தாக்கா நான் என்ன செய்றது? காலத்துக்கேத்தா மாதிரி மாறித் தானே ஆக வேண்டியிருக்கு. கோபத்துடன் அடம் பிடிக்கும் கீட்ஸின் வாயில் செர்லாக்கைத் திணித்தபடியே சொன்னாள் பார்கவி.

    அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் சொன்னால் கேளு. காலம் ஒண்ணும் அப்படியே தலை கீழா மாறிப் போகலை. கொஞ்சம் மாடர்னா இருக்கு..ஒத்துக்கறேன்.கட்டினவனை வாங்கோ…போங்கோ..ன்னு கூப்பிடறதிலிருந்து வா..போ..ன்னு பேசறது வரைக்கும்…மத்தபடி ஒண்ணும் பெரிய மாற்றம் இல்லை.

    நீங்க இந்த வீட்டுக்குள்ள இருந்துண்டு இவ்ளோ தான் மாற்றம்னு சொன்னா ஆச்சா?

    இல்லையே…டீவி சீரியல்ல இப்பத் தான் கேட்டேன்..சரவணனை மீனாட்சி…வாடா…போடான்னு ஏலம் போடறாளே, அதை வெச்சுத் தான் சொல்றேன். ஏன்….நம்மாத்தில் நடக்கலையா?

    இதைக் கேட்டதும், படக்கென்று குழந்தையை மடியிலிருந்து வாரியெடுத்து தோளில் சார்த்திக் கொண்டு கிண்ணங்களை தொப் தொப்பென்று கிட்சன் சிங்கில் போட்டு விட்டு விருட்டென்று படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொள்கிறாள் பார்கவி.

    ஒண்ணுமே இல்லாததுக்கு இவ்ளோ கோபமா? சிவ சிவா….! இந்தக் காலத்துப் பொண்களுக்கு பேருக்கு ஆம்படையான் பேரைப் பின்னாடி வாலாட்டமா எழுதறாப்பல.முன்னால கோபிஷ்டின்னு சேர்த்தாலும் தேவலை போலத் தோணறது.

    டேய்…கிரி….நீங்க ரெண்டு பேரும் சாப்டாச்சா? வெளில வாசல்ல போயிட்டு வந்தாலே கூடவே ஏதாவது பிரச்சனையையும் சேர்த்து வாங்கீண்டு வந்தால் நான் என்ன பண்ணுவேன் ? எல்லார் சௌகரியம்…நான் சொல்லியாச்சு…கேட்டால் கேளுங்கோ…கேக்காட்டா எப்படியோ ஆகட்டும்….அறுத்தவ சொல்லு அந்த அடுக்களை முட்டும் தான் எந்த அம்பலமும் ஏறாதுன்னு தெரியும்…..இருந்தும் நான் மாமியார் பவுசு காட்டறேன் பார்…என் புத்தியைச் சொல்லணம் …அவாள்லாம் படிச்சவா….பல இடம் போறவா….வரவா……ம்ம்ம்ம்….டேய்…கிரி……பார்கவியை சாப்பிடக் கூப்பிடு. மத்தபடி அவளோட எந்த விஷயத்துலயும் நான் என் ஜலதோஷ மூக்கை நுழைக்கலை. சொல்லிக் கொண்டே வாஷ்பேசினை நோக்கிச் சென்று மூக்கைச் சீந்தி அலம்புகிறாள்.

    ம்ம்மா….போகட்டும் .விடேன்…நீ வீணா இதுல தலையிடாதே. அவளுக்கு நம்ம கீட்ஸ் ரொம்ப சின்ன வயசிலயே நிறைய படிச்சுடணம்னு ஆசைப்படறா . நான் ஏற்கனவே சொல்லிப் பார்த்தாச்சு…உனக்குத் தான் அவ குணம் தெரியுமே.

    நல்ல குணம்..!தான் பிடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு ….!

    கொஞ்சம் விட்டுப் பிடிச்சா சரியாயிடும்மா..!

    என்ன…தும்ப விட்டு வாலைப் பிடிக்கச் சொல்றே? நான் விடறேன் நீ பிடிச்சுக்கோ. நீயாச்சு…உன் பொண்டாட்டியாச்சு. நானா சம்பாத்திக்கறேன்…நானா காசு கட்டப் போறேன்…?

    அப்போ சும்மா இரேன்…!

    எப்பவும் நான் சும்மா இருந்தா உங்களுக்கு சந்தோஷம் தானேப்பா.

    ம்மா, பார்த்தியா கோச்சுக்கறே.

    இப்பல்லாம் உங்க காட்ல மழை…..ஜமாயிங்கோ. நான் ஏன் கோவிச்சுக்கப் போறேன்..? அந்தக் காலம் போலையா இந்தக் காலம்…அதான் இந்தக் காலத்துக்கு புதுசா கம்ப்யூட்டர் கொம்பு முளைச்சிருக்கே…!

    இந்த ஒரு வார்த்தை பச்சைக் கொடியில் , பார்கவி ‘கீட்ஸ்’ஸுக்கு அடுத்த நாளே அட்மிஷன் போட்டு விட்டாள். நம்ம கீட்ஸ் கிட்ட ஒரு போட்டோவை காண்பிக்க, அவன் எவ்வளவு உன்னிப்பா அதையே பார்த்துண்டு இருந்தான் தெரியுமா..?

    ஏதோ பெரிய விஷயமாக அதைச் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள்.

    ஆமா…..எல்லாம் சரி தான்..இதுக்கு அவாளுக்கு எவ்வளவு தட்சணை எடுத்து வெச்சேள் ?

    நாலு மாசத்திலேர்ந்து ஒரு வயசு வரைக்கும் இருபதாயிரம் ஃபீஸ். அதுக்கப்பறம் கூட பத்தாயிரம் ஆகுமாம்.

    பேஷ்….பேஷ்…ரொம்ப நன்னாருக்கு….முகம் பார்க்க ஆரம்பிக்கிற குழந்தைக்கு என்னத்தை அப்படி சொல்லித் தந்துடுவா? அப்போ என் பேரன் ஐஸ்டின் மாதிரியோ இல்லாட்டா அப்துல் கலாம் மாதிரியோ வரப் போறானா?

    இந்த நக்கல் தானேம்மா வேண்டாங்கறது…நிச்சயமா என்னை மாதிரியோ உங்க பிள்ளை மாதிரியோ இருக்க மாட்டான்…முகத்தில் பெருமை பொங்கச் சொன்னவள் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் .இவனும் ஏதாவது புதுசாக் கண்டுபிடிச்சு இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பான். அதுக்கு இப்பல்லாம் நிறைய ஆப்பர்ச்யூனிட்டி இருக்கு. இவாளுக்குத் தான் இனிமேல் நிறைய ஓபனிங்ஸ். அம்மா…இன்னைக்கு நிஜம்மா நீங்க இவனுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கோ…அப்டியே எனக்கும்…! என்று சொன்ன பார்கவியைப் பார்த்து,

    அது சரி….! என்னமோடிம்மா …உன் ஆசைக் கனவு ஜெயிச்சால் நான் நல்ல மாமியார்…தான்..என்று கேலியாகச் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைகிறாள் சுபத்ரா.

    என்னம்மா நீங்க…இதுக்குப் போயி அலட்டிகறேள். ஐம் சாரிம்மா…..கெஞ்சலான குரலில் ஐஸ் வைத்து சொல்வதைக் கேட்டதும் சுபத்ராவும் உருகித் தான் போனாள்.

    காலச் சக்கரச் சுழற்சியில் பத்து வருடங்களை முழுங்கியிருந்தது. சுபத்ரா தெய்வமாகி சட்டத்துக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்….மென் மேலும் பதவி உயர்வில் கிரி நேரமே இல்லாமல் தவித்தான். பார்கவி கூடிப்போன பத்து கிலோவை தன் உடம்பிலிருந்து கரைக்க அரும்பாடு பட்டு டயட்டில் தவித்துக் கொண்டிருந்தாள். கீட்ஸ் மட்டும் பத்து வயது சிறுவனா அல்லது இருபது வயது வாலிபனா என்று அனைவரையும் சிந்திக்க வைத்தான்.

    கீட்ஸ்…படிச்சுட்டியா…ஹோம் வொர்க் பண்ணியாச்சா?

    ஓவர்….நத்திங் பெண்டிங். படிக்க ஒண்ணுமேயில்லை …ஐம் கோயிங் டு வாட்ச் மூவி நௌ .

    மா….இட்ஸ் ஸோ போரிங் …எனக்கு வெளில போகணும்….கார் சாவி தாயேன் ..ஒரு ரவுண்ட் போயிட்டு வரேன்..

    அய்யய்யோ வேண்டாம்டா ப்ளீஸ்….!

    ….ம்ம்ம்மா……ஐ கான்ட் டாலரேட் யூ .மாம்…நீங்க சும்மாயிருங்க ..எனக்கு இப்பவே காரை எடுத்துண்டு வெளில போகணும்…நான் போறேன்…பை….என்று துள்ளிக் குதித்து வெளியில் ஓடும் போது, பார்கவி ஆடித்தான் போவாள்.

    ஒண்ணா….ரெண்டா….பத்து வயதுப் பையனுக்கு என்ன தோணுமோ, அதெல்லாம் அவனுக்கு மூணு வயசிலயே தெரிஞ்சு போன மாதிரியும், இப்போ அவன் ஒரு காலேஜ் படிக்கிற பையனைப் போல நடந்து கொள்ளும்போது மனசு கலங்கித் தான் போனது பார்கவிக்கு.

    நாளாக நாளாக , இதுவே பெரிய தலைவலியாகிப் போனது அவளுக்கு.

    டாட்….எனக்கு ஐ போன், வேணும்….ப்ளூ ரே கேம் சிடீஸ் வாங்கிக்கறேன்…ஒரு டென் தௌசண்ட் செக் எழுதுங்கோ.

    இவன் பார்க்கும் தோரணையில், கிரியின் கை, தானாக செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடும்.

    டாட்…எனக்கும் ஒரு பேங்க் அக்கௌண்ட், கிரெடிட் கார்ட் எல்லாம் வேணும்..ப்ளீஸ் டூ இட். ஒரு பெரிய பிஸ்னெஸ் பண்ணப் போறேன்….கேமிங்….!

    போச்சுடா…! ரெண்டு கைகளையும் தலையில் வைத்துக் கொள்வார்.

    ஸ்கூல் டீச்சர் தினசரி போன் செய்து, உங்க சன் கீட்ஸ் மத்த பசங்களைக் கெடுக்கிறான்….பர்ஸ்ட் ரேங்க் மட்டும் வாங்கினாப் போதாது…மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாது..அவனுக்கு நாங்க டபிள் ப்ரமோட் பண்ணி வேற கிளாஸ்ல போடலாம்னு யோசிக்கறோம்..ஹி இஸ் ஓவர் ஸ்மார்ட்…வெரி வெரி இன்டெல்லிஜென்ட். அதான்…என்று தயங்க.

    பெருமை ஒரு பக்கம் இருந்தாலும்…..இது எங்கே கொண்டு விடுமோ என்று அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு பயந்து கொண்டே இருந்தாள் பார்கவி.

    ஒரு நாள் அவள் பயந்தது கூட நடந்தது.

    டபிள் பிரமோஷனில் இன்னும் துளிர் விட்டுப் போனது கீட்ஸ்ஸுக்கு. தன்னுடன் படிக்கும் பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுக்கப் போக, மைனர் பெண்ணின் கவனத்தைச் சிதறல் செய்கிறான் என்று அவர்கள் வீட்டிலிருந்து நாலு பேர்கள் இவர்கள் வீட்டை முற்றுகையிட்டு எச்சரித்து விட்டுப் போகையில், பார்கவிக்கும், கிரிக்கும்…கீட்ஸ்ஸுக்குமிடையே பூகம்பமே வெடித்தது.

    கடைசியில் இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பார்கவி நீ ? நீ நினைச்சது ஒண்ணு …நடக்கறது ஒண்ணாச்சே….ஆரம்பத்தில் அம்மா சொன்னதைக் கேட்டிருந்தால்…இப்படியெல்லாம் நடந்திருக்காதோ என்னவோ.?

    கற்றுக்கொள்ளும் வயதில் அத்தனையும் தெரிந்து விட்ட நிலையில் அடுத்தது என்ன என்ற தேடலின் உச்சியில் இருந்தாலும் அங்கு அவனுக்கென்று ஒன்றுமே இல்லாதது போலவும்…உலகப் பாடத்தில் கற்றுக் கொள்ளவென்று எதுவுமே தனக்கு இல்லை என்றும் உணர்வுகளோடு நடந்தான் கீட்ஸ்.

    எப்போதும் எல்லோரையும் பார்க்கும் போதும் தனக்கு மட்டும் எல்லாம் தெரிந்து விடுகிறது என்ற ஆளுமையும் அதிகார உணர்வும் மேலோங்கிய அவனை யார் கண்டாலும் ‘திமிர் பிடித்தவன்’ பெரிய கர்வம் பிடிச்சவன்….என்றெல்லாம் பட்டம் கொடுத்து கேலி பேசுவார்கள். இவன் வருவதையும் தவிர்ப்பார்கள்.

    பட்டமும், கேடயமும், பரிசுக் கோப்பைகளும் ஒரு புறம் நிரம்பி வழிந்தாலும்…அதைத் தரை மட்டமாக்கும் நிகழ்வுகளும் கூடவே நடக்கத் தொடங்கி அவனை நிலை குலைய வைத்தது.

    அது கோபமாக வெளியேறத் துவங்கிய போது பார்கவிக்கும் கிரிக்கும் பிள்ளைப் பாசத்தைக் கடந்து ‘இவனை வைத்துக் கொண்டு சமாளிப்பது கடினம் என்று தோன்றியது’.

    பார்…இப்பப் பார்….! எவ்ளோ சொன்னேன்…அப்பவே சொன்னேன்…இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு. உலகத்தோட ஒத்துப் போகத் தெரியாமல் உன்னோட பேராசைக்கு நம்ம பையனை பலியாடாக ஆக்கி வைச்சுட்டியே..

    டாக்டரே சொல்லிட்டார். அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இன்ஃ பாக்ட் சின்னக் குழந்தையா இருக்கும்போதே அவன் படு சுட்டி..ஹைபர் ஆக்டிவ் சைல்ட். தெரிஞ்சுக்கோ. வாட்ஸ் நெக்ஸ்ட்….! இது இப்ப அவனை மனசுக்குள் ரொம்பப் படுத்தறதுன்னு நினைக்கறேன்.

    அவனை ஒரு சைக்கியார்டிஸ்ட்ட அழைச்சிண்டு போனால் எல்லாம் சரியாய்டும். பார்கவி சமாதானப் படுத்தினாள் .

    இப்பத் தானே பதினைந்து வயசாறது. அதுக்குள்ளே எங்க வந்து நிக்க வெச்சுட்டான் பாரேன் ? பார்.கிரி புலம்பிக் கொண்டிருந்தான்..எல்லாம் உன்னால…வந்த வினை.

    அதே சமயம் அவனைப் பாராட்டு கிரி…..அவன் ஷேர் ட்ரேட் பண்றான்….ரியல் எஸ்டேட்ல என் பேர்ல இன்வெஸ்ட் பண்ணிருக்கான். லேப்டாப் ரிப்பேர் பண்றான்…கம்ப்யூட்டர் அசெம்பிள் பண்றான்…இதெல்லாம் அவனோட பிளஸ்…தெரியுமா?
    வி ஷுட் கவுண்ட் ஹிஸ் குட் திங்க்ஸ் டூ…! எவ்ளோ அட்வான்ஸ்டா திங் பண்றான்.

    அவனுக்கு எது வேணும் எது வேண்டாம்னு நம்மால சிந்திக்க முடியலை. நம்ம நினைக்கறது எல்லாமே அவனுக்கு அவுட் டேட்டட்டா இருக்கு. இப்பவாவது உனக்கு புரியறதா? என்னால நிம்மதியா இருக்க முடியலை பார்.

    இதெல்லாம் ரொம்ப காமன் தான்…கிரி. நாம தான் இன்னும் கொஞ்சம் அவனுக்கேத்தா மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.

    நாம பண்ணிக்கலாம்….வெளி உலகம் பண்ணிக்குமா? போடா சர்தான்னு சொல்லிட்டுப் போகும். எல்லாத்துலயும் நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புன்னு இருந்தா, ஹௌ எனி ஒன் வில் டாலரேட் திஸ்.? இப்பக் கூட ஒரு நல்ல ஃப்ரெண்ட் இல்லை அவனுக்கு.

    நீ சொல்றாப்பல லாப்டாப், கம்ப்யூட்டர், ன்னு எல்லாத்தையும் பிரிச்சு மேயறான்…சரி தான். அதே நேரம் அவனுக்குக் கோபம் வந்தால் அதே கம்ப்யூட்டரைத் தூக்கிப் போட்டு உடைக்கிறானே. கேட்டது கிடைக்கலைன்னு தெரிஞ்சா சுவத்துல ஓங்கி குத்தி தன் கையைத் தானே காயப் படுத்திக்கறானே….எல்லாம் அவனுக்கு சாதகமா நடக்கணும்னு யோசிக்கறானே இதெல்லாம் தப்பில்லையா ? அஃப் கோர்ஸ்….அது ஜெனெடிக்னு வெச்சிக்கலாம்.

    கோபத்தில் தன் கையிலிருந்த காப்பி டம்ப்ளரைத் தூக்கி எறிகிறாள் பார்கவி.

    இத…இத….இதத் தான் சொன்னேன்…என்று கிரி சொல்லவும்

    பார்கவி ‘ஓ’ வென தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்.

    சரி…சரி….ஸாரி …அழாதே…நீ மட்டும் என்ன செய்வே.?..நாளைக்கு டாக்டர்கிட்ட போகலாம். அப்பாயின்ட்மென்ட் வாங்கிடறேன் சரியா…அவளை சமாதானப் படுத்தி விட்டுப் படுத்துக் கண்களை மூடிக் கொள்கிறார் கிரிதரன். வழக்கம் போலவே தூக்கம் அவருக்கு ‘டா டா…பை பை ‘ சொல்லிக்கொண்டு ஓடியது. எத்தனை இரவுகள் தூக்கம் போயிருக்கும்..? தூக்கம் மட்டுமா…அப்படியே தலையைத் தடவிப் பார்க்கும் போது மொழு மொழுவென்று வழுக்கைத் தலையில் விரல்கள் வழுக்குகிறது.

    அடுத்த நாள் இரவு…!

    என்னங்க மேடம் இது…இதுக்குப் போயா உங்க பையனுக்கு கவுன்சிலிங் பண்ண அழைச்சிட்டு வந்தீங்க. தயவுசெய்து உங்க வீணான கவலையை விட்டுத் தள்ளுங்க. நான் அவன்கிட்ட தனியாப் பேசிப் பார்த்த பிறகு தான் இதைச் சொல்றேன்….உங்க சன் செம ஸ்மார்ட். மூளைதான் அவனோட மூலதனம். எங்க போனாலும் பின்னிப் பெடலெடுப்பான் . டோன்ட் வொர்ரி. என்ஜினீயரிங் சேர்த்து விடுங்க…கோல்ட் மெடல அள்ளிட்டு வந்திடுவான். அப்பப்பப்பப்பா….எதைக் கேட்டாலும் டக்கு டக்குன்னு நெத்தியடியா பதில் சொல்ற பிள்ளைய கைல வெச்சிட்டு நீங்க கலங்கினா…ஐம் சாரி….உங்களைத் தான் பார்க்கறவங்க தப்பு சொல்லுவாங்க…சம்திங் ராங்ன்னு…! இப்ப இருக்குற காலத்துக்கு இவ்ளோ ஸ்பீட் ரொம்ப ரொம்ப அவசியம். உங்களுக்கு இப்பப் புரியாது. போகப் போகப் பாருங்க..!

    டாக்டர் சொல்லியனுப்பியத்தை நினைத்துக் கொண்டே கண்களை வெறுமனே மூடியபடி படுத்திருந்தாள் பார்கவி.

    நிம்மதியா தூங்குவதா…..? இவ்வளவு இண்டெலிஜெண்ட் கீட்ஸ்ஸுக்கு ஏன் அடிக்கடி விரக்தி வருகிறது…? கோபம் வருகிறது?
    வீட்டிலும் இருக்கப் பிடிப்பதில்லை…..பள்ளியில் இருக்கவும் பிடிப்பதில்லை…..மனம் அமைதியில்லாமல் அலைபாய்கிறது.
    எங்க போனாலும் தனக்கு மிஞ்சியவர் யாருமே இல்லைங்கற ஒரே எண்ணத்தில் தானே நுழைகிறான். அவனுக்குள் இருக்கும் சுபீரியர் தாட்ஸ் தான் எல்லாத்துக்கும் காரணம். அவன்கிட்ட சொல்லிப் புரிய வைக்கலாம்னு நினைச்சால்..பேசவே விட மாட்டேங்கறான். என்னன்னு சொல்லறது..?

    நாட்களும் வாரங்களும் மாதங்களுமாக ஓடி வருடங்களைக் கடத்திச் சென்றன.

    மனசுக்குள் புகுந்து கொண்டு இறங்க மறுத்த வருத்தம் பார்கவியின் வயதை இருபது வருடங்கள் கூட்டியது.சுகரும், இரத்த அழுத்தமும் கூட துணைக்கு வந்து அவளுடன் கைத்தடி போலச் சேர்ந்து கொண்டது.

    பாதி நாட்கள் வீட்டுக்கே வராமல், படிப்பையும் முடிக்காமல் கீட்ஸ், இமயமலை வரைக்கும் சென்று வந்து…மாம்….ஐ லைக் ஒன்லி ஹில்ஸ்…அதும் ஹிமாச்சல் ..நான் அங்கயே கூட போய் இருந்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்…..கீட்ஸ் இதைச் சொன்னதும், அவள் தலையில் இமயமலையையே ஏற்றி வைத்தது போலிருந்தது பார்கவிக்கு.

    என்னடா சொல்றே….கீட்ஸ்..? உனக்கு இப்பத்தான் முப்பது வயசாகுது….ஒரு கல்யாணம் காட்சி செய்யாமல்…குடும்பம்னு ஒண்ணு இருந்தால் இந்த மாதிரி தாட்ஸ் எல்லாம் வராது…! வாழ வேண்டிய வயசில் நீ இப்படிச் சொல்றது கொஞ்சம் கூட சரியில்லை.

    மாம்….டாட்…நீங்க தான் நான் இன்னும் சின்ன வயசா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..பட் ….எனக்கு இந்த மெட்டீரியல் வேர்ல்ட்ல எதுவும் பெரிசா இருக்கறதாத் தெரியலை. ஐ ஹேட் எவெரிதிங். ப்ளீஸ் லீவ் மீ அலோன். ஐ கான்ட் ஸ்டே எனிமோர் ஹியர்.
    ஐ நீட் பீஸ்….அமைதி மட்டும் தான் நிரந்தரம்…அது தான் எனக்கு வேணும்.இந்த உலகம் ரொம்ப ஸ்லோ…அதனால தான் ஒரு அமைதியான இடத்தில் என்னை அமைதியாக்கிக்க பழகிக்கப் போறேன்..ஏன்னா எனக்கு இந்த மைண்ட் ஸ்பீட் பிடிக்கலை.

    இதைக் கேட்டு அதிர்ந்தே போனாள் பார்கவி. அவள் தலை தானாகக் குனிந்தது. கிரிதரன் விழிகளில் கண்ணீர் நிறைந்த பார்வை அவனது அம்மாவின் படத்தின் மேல் விழுந்தது.

    இந்த வார்த்தை தான் அவர்களை பெற்றவர்களாக அழைத்து மதித்து அவன் பேசிய கடைசி பேச்சு. அன்று தான் கீட்ஸை அவர்கள் கடைசியாகப் பார்ப்பது என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

    மகன் கிளம்பிப் போய் வீடு வெறிச்சென்று சூனியம் பிடித்தாற்போலிருந்தது. ஒரே நாளில் அனைத்தையும் இழந்த செல்வந்தரின் நிலை போல உணர்ந்த இருவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுத்துவது போல ஒரு அழைப்பு மணி அடித்தது.

    மீண்டும் மகன் வந்து விட்டானோ….? ஓடிச்சென்று கதவைத் திறந்த பார்கவியால் நம்ப முடியவில்லை.

    அங்கு, கையில் ஆறு மாதக் குழந்தையுடன் அழகானப் பெண்றொருத்தி “ஐ ம் தீட்சா…திஸ் இஸ் கீட்ஸ்’ஸ் சன்…” சொல்லிக் கொண்டே பார்கவியைத் கடந்து வீட்டுக்குள் நுழைகிறாள்.

    Share
  • தொலைத்ததும்…….கிடைத்ததும்..! – 7

    ​​ஜெயஸ்ரீ ஷங்கர்

    என்ன வில்லத்தனம்…என்று பாண்டியும், திமிறும் மலரை அழுத்திப் பிடித்தபடி…..அந்த அழுத்ததிலேயே சில சங்கேதங்களை உணர்த்தியவன் கண்களால் ஜாடை காட்டியது  இங்கிருந்து தப்பித்து  ஓடு…என கட்டளையிட்டது போலிருந்தது அவளுக்கு.

    அவனது கைகளை அழுத்திக் கடிப்பது போல பாசாங்கு செய்து விட்டு அவனை விலக்கித் தள்ளி அறையை விட்டு வெளியேறி தலை தெறிக்க ஓடியவள் படிகளில் பதுங்கி பதுங்கி இறங்கி லிப்ட் வழியாக கீழிறங்கி அங்கு லோடு இறக்கிவிட்டுத் தயாராக நின்றிருந்த வண்டியின் கதவு சார்த்தப் படுவதற்குள் தாவி ஏறிக் கொண்டாள் .

    அங்கு அடுக்கி வைக்கப் பட்டிருந்த அட்டைப்பெட்டிகளின் பின்னாலிருந்து வெளிப்பட்ட ஒரு முரட்டு உருவம்…இவளைப் பார்த்ததும், கையை ஓங்கவும், மலர்விழி அவனது காலடியில் விழுந்து நடுங்கினாள்.  காப்பாத்துங்க…..காப்பாத்துங்க அண்ணே….அவளின் குரல் உடைந்து போயிருந்தது.

    சரி….சரி….உள்ளார போயி அந்த சின்ன ஜன்னல் பக்கமா குந்திக்க…நான் தான் வண்டிய ஓட்டுவேன்…பயப்படாதே…..குதித்து இறங்கியவன் கதவைப் இழுத்துச் சார்த்தி பூட்டும் போடும் சத்தம் கேட்டது.

     

    மலரின் குரங்கு புத்தி, இவனையும் சந்தேகமாகவே ‘இவன் ஒழுங்கா வெளிய கொண்டு போய் விட்டு என்னைக் காப்பாத்துவானா….? இல்ல…..எதற்கும் நான் தயாரா இருக்கனும் …பாண்டி…ரொம்ப தாங்க்ஸ்ண்ணே..மானசீகமாக நன்றி கூறியவள் , வண்டியின் விரைவின் அதிர்வைக் கண்டு நாம எங்கே போயிட்டிருக்கோம்…..ஆமா…ரோட்டைப் இந்த இக்கினிக்காண்டு துவாரம் வழியாப் பார்த்தா நமக்கு எடமெல்லாம் தெரிஞ்சிடுமாக்கும்….ஏதோ அந்தத் திரிபுர சுந்தரி தாயி எனக்கு ஆதரவாயிருக்கு.நல்ல வேளையா  நாலு வேளைக்குத் தேவையான சோத்தைப் திங்கச் சொல்லிப் போட்டானுங்க. இல்லாங்காட்டி என் நெலமை….அம்பேல் தான்.

     

    வியர்த்து வியர்த்து உடம்பு முழுதும் தொப்பமாய் நனைந்து போயிருந்தாலும், மூக்கை மட்டும் அந்தத் துவார சன்னலில் பதித்து காற்றை உறிஞ்சிக் கொண்டு வந்தவள், திடீரென வண்டி நின்று விட்டிருந்ததை உணர்ந்தவள், என்ன நடக்கப் போவுதோ….நெஞ்சம் முழுதும் திக் திக் திக் திக்…என அடித்துக் கொள்ள அந்த முரட்டு டிரைவர் கதவைத் திறக்கக் காத்திருந்தாள்.

     

    இவள் நினைத்தது போலவே, கதவை டமார்…டிமீர் என்று பெருஞ் சத்தத்துடன் திறந்தவன்…..ஏ …புள்ள….வெளிய வா…..என்று அதட்டலாகக் குரல் கொடுக்கவும்….

     

    தயங்கியபடியே தலையை மட்டும் மெல்ல நீட்டியவளுக்கு…..வெளிச்சம்….சூரிய வெளிச்சம்…..கண்களுக்குள் பிரகாசமாக வீச, தென்றல் காற்று மெல்லத் ததும்பி வந்து இவள் தலையைக் கோதி விட்டது போல தெய்வங்கள் நேரே நிற்பது போலிருந்தது மலருக்கு.

     

    அண்ணே…..ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணா …..அந்த முரட்டு மனிதனின் காலில் விழுந்து குலுங்கினாள்.

     

    கண்ணீர் மல்க நின்றவளைப் பார்த்தவன், ‘தங்கச்சி…..நான் பாக்குறதுக்குத் தான் முரடு…..எம்புட்டுப் புள்ளங்கள நானும் காப்பாத்திருக்கேன்…..மூச்…..! வெளிய சொல்லிப்புடாத புள்ள….என்றவன், இந்தாக் கைச் செலவுக்கு….என்று இருநூறு ரூபாயைத் கையில் திணித்தவன்…..இது கோவளம் கூட் ரோடு…..சாக்கிரதையா போய்ச்சேரு….சினிமால நடிக்க, சீரியல்ல நடிக்கன்னு வந்து இவிங்க கைல மாட்டிக்கிட்டு சக்கையா சாக்கடையில் போய் விழறது….அம்புட்டும் தலைவிதி…சொல்லிக் கொண்டே அவன் முன்பக்கக் கதவைத் திறந்து குதித்து ஏறி, ஹாரன் அடித்தபடி…விருட்டென்று காணாப் போனான்.

     

    பாறைக்குள்ளும் ஈரம் இருக்குமாம்…தேரைக்காக…..நீர்..! அம்மா தாயே…நீ தான் இந்த முரட்டு டிரைவரா வந்து என்னைக் காப்பாத்தினே……திரிபுர சுந்தரி….இன்னும் கூடவே வா…உன் கோயில் கோபுரம் பார்த்தே வளர்ந்த கண்ணு…உன் தெப்பக் குளத்து மீனுக்கெல்லாம் பொரி போட்டு அதுங்க தின்னரதப் பார்த்து பார்த்து சலித்துப் போன மனசு….ஏதோ சின்ன ஆசையில அந்த ஊரையே பழிச்சுப்புட்டு இங்கிட்டு ஓடியாந்தேன். பணக்காரங்களுக்குத் தான் இந்தச் சென்னை. தனியா வந்து நல்லா மாட்டிக்கிட்டேன். ஊரப் பார்த்தா ஜம்முன்னு தான் இருக்கு…..புத்துக்குள்ளார கை விடப் போற கதையா…..நான் இந்தப் பத்து நாள்ல நாய் படாத பாடு பட்டுப்புட்டேன்.

     

    ஒரு கோயில் கோபுரமாச்சும் கண்ணுல பட்டுச்சா…..அதெல்லாம் எங்கிட்டிருக்குமோ ? எந்தப் பக்கம் திரும்பினாலும்…..குச்சி குச்சியா வீடுங்க.

     

    எண்ணச் சங்கிலிகள் பஸ்ஸைக் கண்டதும் டக்கென்று அறுந்தது.

     

    பஸ் நிறுத்துமிடத்தில் நின்றது  பஸ், இவளைப் பார்த்ததும் கண்டக்டருக்கு மனக்குழப்பம். இவள் பஸ் ஏற வந்தவளா…இல்லை…பைத்தியக்கார வேஷம் போட்ட பிச்சைக்காரியா? பஸ்ஸே சிறிது தயங்கி நின்றது.

     

    சீர்காழி……போகுமா.?

     

    துட்டுகீதா….மே…..நூத்தி அம்பது ரூவா…..டிக்கிட்டு…! அதிகாரமாக வந்தது குரல்.

     

    ம்ம்ம்…..இருக்குண்ணே …..ஒருவழியா ஏறிக் கொண்டாள்.

     

    பஸ்ஸுக்குள் அமர்ந்திருந்த அத்தனைக் கண்களும் அவளையே ஒரு நொடி பார்த்து விலகியது. சில பார்வைகள் அளவெடுத்து கதை எழுதிக் கொண்ருந்தது.

     

    பஸ் நகர்ந்து வேகம் பிடித்தது.

     

    ஜன்னல் வழியாக வீசிய அனல் காற்று கூட மலர்விழிக்கு சுகமான மயக்கத்தைத் தந்தது. இத்தனை நாட்களாக தனது மனத்துள்  அடைத்துக் கொண்டிருந்த ஷீலா,மேனேஜர்,பாண்டி,இறால் மீன்கள்..அதோட முள்ளு…நாற்றம்…..என்று ஒவ்வொன்றாகத் தூக்கி ஜன்னல் வழியாக தூர  விட்டெறிந்தாள் ….கூடவே சென்னையையும் ..!

     

    என் பெட்டி, என் உழைச்ச காசு அம்புட்டும் போச்சு….அம்மா எம்புட்டு சொல்லிச்சு..கேட்டனா….நான் கேட்டனா…ஒரு பெரிய தேவத கணக்காத் திமிரா சம்பாரிக்கப் போறேண்டு கிளம்பினேன். இப்ப என்னாச்சு…? உள்ளதும் போச்சு….சம்பாரிச்சதும் போச்சு..!

     

    எனக்கு நல்லா வேணும். பொறந்த ஊரையும், காப்பத்துற சாமிய, பெத்தவள அம்புட்டு பேத்தையும் குற சொல்லிப்போட்டு வந்துப்புட்டேன். அதான்…..! ஒவ்வொரு பேராசைக்குப் பின்னும் ஒரு பேராபத்தும் காத்திருக்கும் போல. ஆமா…நாம மட்டும் தப்பிச்சு வந்துட்டமே…..மத்த பொண்ணுங்க….அதுங்களும் மாட்டிகிட்டு முழி பிதுங்க நின்னுச்சுங்க பாவம்…!

     

    கண் டிரைவர் சீட்டுக்குப் பின்னால் இருந்த தகர ஷீட்டில் எழுதி இருந்த திருக்குறள் வாசகத்தைப் படித்தது…படித்தது….படித்தது….

     

    படித்தபின் அவளுக்குள் புரிந்தது…!

     

    “சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

    தாழ்ச்சியுள் தங்குதல் தீது…”

     

    இது என்னவாயிருக்கும்……? இதற்கும் இப்போது நான் தப்பித்து வந்ததற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ…? அவளின் களைத்த  மனம் காரணம் தேடியது.

     

    “ஒரு செயலைப்பற்றிய ஆராய்ச்சியின் முடிவு மனத்தில் துணிவு பெறுவதே ஆகும்.  அவ்வாறு துணிவு கொண்டபின் , அதனைச் செய்யாமல் காலம் கடத்துதல் தீமையாகும்..”

     

    நான் துணிவோடு வெளியேறிட்டேன்…அதற்கு…என்னோட துணிவு என்னை காப்பாத்திச்சு…..சரி தான்….ஆனால்…அங்க இருக்குற ..மத்தவங்க….?

     

    மனத்துள் எழுந்த வினாவுக்கு அடுத்த பகுதியில் எழுதி இருந்த திருக்குறள் பதிலானது.

     

    “ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

    போற்றலுள் எல்லாம் தலை ”

    மேற்கொண்ட செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது. அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம் மிகச் சிறந்தது ஆகும்..!

    அப்படீன்னா…என்னால அவங்களையும் காப்பாத்த முடியுமா? கண்களும் மனமும் பஸ்ஸுக்குள் அலைபாய்ந்தது.

     

    என்னைப் போலவே அங்கிருக்கும் அனைவரும் சுதந்திராமாக வேண்டுமே….நான் இப்போ என்ன செய்வது..?

     

    திருவள்ளுவரின் படத்திற்கு அருகில் சிகப்புக் கலரில் வெள்ளை எழுத்துக்களோடு இருந்த ஸ்டிக்கர் கண்களைப் பறித்தது.

     

    அதில் பதிவாகி இருந்த தொலைபேசி எண்ணைக் மனசுக்குள் குறித்துக் கொண்டவள், அடுத்த பஸ் நிறுத்ததிற்க்காக காத்திருந்தாள்.

     

    மாமல்லபுரம் தாண்டி ஒரு இடத்தில் பஸ் நின்றது…பதினைந்து நிமிடங்கள் வண்டி நிக்கும்…சாபிற்றவிங்க எறங்கலாம்…..கண்டக்டர் இறங்கி நடந்தார்.

     

    காத்திருந்த மலர்விழி வேகமாக இறங்கி கண்டக்டரைத் துரத்தியபடி .இந்தப் பத்து ரூபாய்க்கு சில்லறை கிடைக்குமா.?

     

    ..ம்ம்.ம்ம்ம்….இந்தா…..என்று கையில் திணித்த சில்லறையை  எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.

     

    அங்கிருந்த டெலிபோன் காயின் பாக்ஸ் டெலிபோன் அருகே நின்று…அவசரமா ஒரு ஃபோன் போடணும்.

     

    எண்ணைச் சுழற்றி ரிங் டோன் வந்ததும் காசைப் போட்டு ஹலோ என்ற ஒற்றை வார்த்தைக்கு காத்திருந்து விஷயத்தை தனது மெல்லிய குரலில் பதட்டப் படாமல் சொன்னவள், கெஞ்சிய குரலில்….என்னிய மாட்டி விட்றாதீங்க…பாவம் அந்தப் பொண்ணுங்க…!

     

    விஷயம் வெளியேறிவிட்ட நிம்மதியில் திரும்ப வந்து பஸ்ஸில் அமர்ந்தாள்.

     

    பஸ் கிளம்பியதும் நிம்மதியில் உறங்கிப் போனாள் மலர்விழி.

     

    சிதம்பரம் வந்ததும் …..கண்டக்டர் கொடுத்த நீண்ட விசில் சப்தம் காதைக் கிழிக்க, விழித்த மலர்விழி….அங்கிருந்த கடைப்பலகையில் ஊர் பெயரைக் கண்டு உயிர் வந்தவளாக இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் சீர்காழி போயிருவேன்…..அம்மா..அம்மா….ஆச்சரியப்படுவாங்க.

    அப்பா….அப்பா…என்னோட இந்தக் கோலத்தைப் பார்த்தால் ….நினைக்கவே வேதனையாய் இருந்தது அவளுக்கு.

     

    இரவு மெல்ல மாலை நேரத்தை விழுங்கிக் கொண்டிருந்தது.

     

    நான் ஃ போன் பண்ணி சொல்லிட்டேனே,,,,இப்போ அவங்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்திருப்பாங்க…? இல்லை அவங்களும் ஏமாத்திர்வாங்களா ? நடராச மூர்த்தே….நீ தான் இதுக்குப் பொறுப்பு. நான் என்னால செய்ய முடிஞ்சத செய்தாச்சு. நானும் உன்னையத் தான் நம்பறேன். எல்லாத்தையும் காப்பாத்து. கைகூப்பி வேண்டிக் கொண்டாள் .

     

    பஸ் காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த ஒற்றைப் பாதையில் குலுங்கிக் குலுங்கி ஓடியது. அவளது மனோவேகம் அதற்குள் அவள் வீட்டு வாசல் படியை ஆயிரம் முறை தொட்டு வந்தது.

     

    தன்னை இறுக்கியிருந்த அத்தனை சங்கிலியிலிருந்தும் விடுபட்டவளாக உணர்ந்தவள் சீர்காழி…சீர்காழி…சீர்காழி…என்று ஜெபித்துக் கொண்டிருந்தாள்.

     

    நீண்ட .விசிலுடன்……சீர்காழி….சீர்காழி….சீர்காழியெல்லாம் எறங்கு…..!

     

    ஒரு கூடை மல்லிகைப்பூ தலைமேல் பூச்சொறிந்தது போல சிலிர்த்துப் போனவள் நாலுகால் பாய்ச்சலில் இறங்கி விடு விடுவென்று நடந்தாள் . சுளுக்கு வலி பறந்தது….செருப்பில்லாமல் .கல்லும் முள்ளும் கூட பூவாகிப் போனது போலிருந்தது…மலர்விழிக்கு.

     

    தூரத்தில் தெரிந்த அவளது காரைவீடு….மாடமாளிகையாய் தெரிந்தது அவளுக்கு.

     

    அம்மா….பசுவைத் தேடும் கன்று போல துள்ளித் துள்ளி ஓடினாள் மலர்விழி.

     

    எதுவெல்லாம் அவள் அவளுக்குப் பெருமை என்று நினைத்து பொய்யான கௌரவம் பார்த்தாளோ….அதெல்லாம் அவளை விட்டு நகர்ந்து நின்று அவளை வேடிக்கை பார்த்தது.

     

    வீட்டு வாசல்படியை மிதித்தும் பொன்மாரி பொழிந்தது போல உடம்பெல்லாம் சிலிர்க்க…..அம்மா…..அம்மா…அப்பா….அப்பா…!

    நா….நா….நான்….மலரு…..வந்திருக்கேன்.

     

    இவள் குரலுக்கே கதவு அகன்று திறந்தது. உள்ளே, பூக்களை பரப்பி வைத்துக் கட்டிக் கொண்டிருந்த அம்மா, டீயை ஆற்றிக் கொண்டிருந்த அப்பா இருவரும் முமுரமாக சன் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் , இவளைக் கண்டதும் திகைத்து ஆச்சரியத்துடன் விருட்டென எழுந்த அம்மா…

     

    “யம்மாடி….மலரு ..என்னடி திடுதிப்புன்னு இப்படிச் சொல்லாமே கொள்ளாமே வந்து நிக்கிற…..எங்கடி போயிருந்த இம்புட்டு நாளு எப்பிடிம்மா இருக்கே…என்ன ஆனியோ…எங்கிட்டு இருக்கியோன்னு..துடியாத் துடிச்சிப் போனமேடி…என் செல்லமே…

    இறுக்கிக் கட்டிக் கொண்டு கண்ணீர் மல்க, மறந்துட்டியேடி பாவி…அப்பாவின் கண்களில் தாரையாய் பாசம் வழிய….என்னடா ராசா …

    ஒரு தகவலும் இல்லாமே தவித்தவரின் கைகளில் நடுக்கம்..!

     

    என்ன கோலத்தில் வந்து இப்படி நிக்கிற…என்னாச்சு? எதைத் தொலைச்சிட்டு வந்து இப்படி பயித்தியக் காரி மாதிரி வந்து நிக்கிற…நான் அப்பமே சொன்னேனே….பட்ணம் பாளாப் போகுதுன்னு போகுறியான்னு …? அம்மா தளர்ந்து உட்கார, அவள் மடியில் முகம் புதைத்து குலுங்கியவளை ஆதரவாக முதுகைத் தடவிக் கொண்டே….

     

    என்னாச்சுடி…..காத்துக் கருப்பு அடிச்சாப்புல…! என் அடி வவுறு ….கலந்குதுடி.சொல்லுடி….என்னாச்சு? எதைத் தொலைச்சே….? நீ கவலைப் படாதே…..என் தாலிக்கொடியை வித்தாவது உன்னிய நான் டீச்சர் படிப்புல சேக்குறேன்….நீ கவலைப் படாதே…நாங்க இருக்கோம்….இல்லீங்க…புள்ள எதையோ களவாணிப் பய ஊருல பணத்தை பொட்டிய களவு கொடுத்துட்டு வந்து நிக்குது..நம்ம புள்ளைய நாம படிக்க வெச்சிடலாம். சரீங்களா…..?

     

    ம்ம்ம்…அதுக்கென்னாடா நாம பார்த்துக்கிடலாம்….இந்த வாட்டி நல்ல வெளைச்சல். நீ அளுவாத பாப்பா..!

     

    டீவி யாருக்கோ செய்தி வாசித்துக் கொண்டிருந்தது.

     

    “மர்மக் கும்பல் சிக்கியது….எங்கிருந்தோ வந்த தகவலின் பேரில் முற்றுகை இட்டதில் பெண்களைக் கடத்தும் பயங்கர மர்மகும்பல் சிக்கியது. நூற்றுக் கணக்கான இளம் பெண்கள் பல்வேறு மாநிலத்திலிருந்து கடத்தப்பட்டு அடிமைகளாக ஆட்டிப் படைத்த  வடநாட்டு மர்ம கும்பல் பலவித நாச வேலைகளில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிந்து அவர்களை நமது தமிழக போலீஸ் கைப்பற்றி கைது செய்து புழலில் அடைத்தது. இளம் பெண்களைக் காப்பாற்றி உரிய இடத்தில் சேர்க்கும் முயற்சியில் தனியார் தொண்டு நிறுவனம் ஆவன செய்கிறது.

    இந்த செய்தி காட்டுதீ போல சென்னையில் மக்களுக்குப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

     

    கணீரென்ற குரல் செய்திகளை வாசித்துக் கொண்டிருக்க, ஆவலுடன்  தாயின் மடியை விட்டு எழுந்தவள் , தனக்கும் அந்தச் செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல… அம்மா….நான் குளிச்சுட்டு கோயிலுக்குப் போயிட்டு திரிபுரசுந்தரிக்கி தீபம் போட்டுட்டு சூடம் கொளுத்திட்டு வாரேன் ..என்றாள்.

     

    இப்பவாச்சும் சொல்லுடி….நீ எதைத் தொலைச்சே…? பணத்தையா….பெட்டியையா..? இல்ல….

     

    ஷ்…..நான் தொலைச்சது…..இங்கன இப்போ கிடைச்சது….ரெண்டுமே…….”நிம்மதி ‘ தான்.வேறொண்ணுமில்லை  இந்த நிம்மதிக்கி முன்னாடி பணம் தூசி தான்மா….என்று நிம்மதி பெருமூச்சு விட்டுச் மென்மையாய் சிரித்தாள் மலர்விழி. அவள் மனசுக்குள் மகிழ்ச்சி பொங்கிப் பெருகியது.

     

    மலர்விழியின் குடும்பமே இழந்த நிம்மதியை மீண்டும் பெற்றது.

    முற்றும்

    Share
  • தொலைத்ததும்…….கிடைத்ததும்..! (6)

    ஜெயஸ்ரீ ஷங்கர் , புதுச்சேரி

    சட்டென்று திரும்பிய மலர்விழி ‘நானும் இங்கியே இதுங்களோடவே இருந்துகிட்டு என்ன தான் ஆவுதுன்னு ஒரு கை பார்த்துப்புடறேன்..’ ஒரு ஓரமாக இருந்த சோபாவில் தொப்பென்று கீழே அமர்ந்து கொண்டாள் .

    அடுத்த சில நொடிகளில், அவளை இருவர் பிடித்து எழுப்பி உள்ளே அழைத்துச் சென்று குளிக்கச் சொல்லி அழகு படுத்தி கண்ணாடி முன்பு கொண்டு நிறுத்தியதும் ..

    நானா… இது? நான் என்ன இம்புட்டு அழகா..?..என்று கன்னத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டு சிரித்து மகிழ்ந்தவள் அருகிலிருந்த பெண்ணிடம் எப்ப சூட்டிங்கு ? என்று கேட்கும்போது மனசுக்குள் ’16 வயதினே’ மயில் வந்திறங்கினாள்.

    அடுத்தடுத்து நடந்தவை அவளுக்கே வியப்பாக இருந்தது. உயர்ந்த உணவு வகைகள் தந்து அவளை உண்ணச் சொன்னதும் மகிழ்ந்தாள் மலர்விழி.இந்த இடம் ரொம்ப சொர்கமாட்டம் இருக்குதே.இங்கனயே இருந்திடலாம் போல ..ஆனால் நான் ஊருக்கு எப்படிப் போவேன்? என்ற கலக்கமும் மனத்துக்குள் வராமல் இல்லை. இரண்டு மனம் அவளுக்குள் தவித்தது.

    அங்கிருந்த பெண்கள் ஒவ்வொருவரும் மிகவும் அமைதியாக இருந்தது பார்த்து இவளுக்கே சந்தேகம். அவர்களது கண்கள் எதையோ பேசத் துடிப்பது மலருக்குப் புரிந்தது.

    ஒருத்தியிடம் மெல்லக் கேட்கிறாள்…மலர்.

    நீ எங்கேர்ந்து இங்க வந்தே..?

    பெங்களூரு…

    நீ…? இன்னொருத்தியைப் பார்த்ததும்..

    தும்…..! ஐம் ஃப்ரம் டெல்லி…

    அரண்டுதான் போனாள் மலர்.

    எனக்கு செல்ஃபோன் பேசணும்….! உங்க யார்கிட்ட மொபைல் இருக்கு….?

    இல்லை…இங்க சிக்னல் கிடைக்காது. ஃபோனும் கிடையாது. யாரும் இங்க பேசிக்கக் கூடாது. மெல்லிய முனகலில் வந்தது வார்த்தையாய் அடுத்தவளிடமிருந்து.

    அப்ப….இங்க எல்லாரும் அடிமைங்க போல….மனசுக்குள் நினைத்தவள்,

    யாருக்கு சுதந்திரம் வேணும்? சாடையில் கேட்ட மலரைப் பார்த்து, அவர்கள்

    கேலிப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு திரும்பிக் கொண்டனர்.

    இது மலருக்குள் ஒரு சவாலை உண்டு பண்ணியது. அதுவே ஒரு சின்ன நெருப்புப் பொறியாக கிளர்ந்து, ஜ்வாலையாக கொழுந்து விட்டு கனன்றது.

    எப்பிடியாச்சும் நான் தப்பிச்சிப் போகணும்….இவங்களயும் காப்பாத்தியாகணும்.

    அப்ப, இந்தப் பாண்டியண்ணன்……ஷீலா…இவங்களையும் இங்கனக்குள்ள வராமல் தடுக்க என்ன செய்ய…? மனம் முழுதும் ஒரே எண்ணத்தில் தவித்தாள் மலர்.

    அடுத்தது என்ன…? என்ற அந்த ஒரே எண்ணமே அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது.

    அறயில் இருந்தவர்களை பிடித்து கன்னாப் பின்னாவென்று அடிக்க ஆரம்பித்தாள்…..ஒரே நாளில் தலைப்பின்னலை பிரித்துப் போட்டபடி, தனது துணிகளைக் கிழிக்கத் துவங்கியவள் சிறிது சிறிதாக அசல் பைத்தியம் போலானாள்.

    சற்று முன் அழகாகக் காண்பித்த கண்ணாடி அவளை இப்போது பைத்தியம் போல் காண்பித்தது. மனசுக்குள் திருப்தி பட்டுக் கொண்டவளாக மலர் அருகிலிருந்தவளைப் பளார் என்று அரைகிறாள்.

    அடுத்த சில நிமிடங்களில், அந்தக் கதவு திறக்கப் படுகிறது. திறந்தவன் பாண்டி.

    அவனைப் பார்த்ததும் தான் மலருக்கு உயிரே வந்தது. இருந்தாலும் அதை வெளியேக் காட்டிக் கொள்ளாமல்….பைத்தியம் போலவே சுவரைப் பிராண்டிக் கொண்டிருந்தவளை இழுத்துக் கொண்டு போனான் அவன்.

    அவர்களை, ஒரு பெரிய ஹாலுக்குள் நிறுத்தி வைத்த ஒருவர்…..

    இவளுக்கு நாங்க ட்ரீட்மென்ட் தருவோம்….இங்க கையெழுத்துப் போட்டுட்டு விட்டுட்டுப் போ…என்றார்.

    என்னா….சார்….நம்ம கையிலேயேவா? எப்பிடி இருந்த பொண்ணு சார்… அந்தப் பாளாப் போன மானேஜர் மட்டும் இப்ப என் கையில சிக்கினாண்டு வையி…..அவன் டா…..ரா….யிருவான். பாண்டியின் வெறி பிடித்த குரலுக்கு அவர் சிறிது தடுமாறியது தெரிந்தது..

    எங்கள இப்ப இப்படியே விட்டா…நான் இத்த கூட்டீட்டுப் போயி அதும் வீட்ல விட்டுருவேன். இல்லாங்காட்டி……விஷயம் வேற மாதிரி போகும்….பரவாயில்லையா?

    கட கட வென்று சிரித்துக் கொண்டே,,என்ன எலி மிரட்டுது..? என்று நமுட்டுச் சிரிப்புடன், கைபேசியைத் தூண்டினார் அவர்.

    என்ன வில்லத்தனம்…என்று பாண்டியும், திமிறும் மலரை அழுத்திப் பிடித்தபடி…..அந்த அழுத்ததிலேயே சில சங்கேதங்களை உணர்த்தினான்

    தொடரும்

    Share
  • தொலைத்ததும்…….கிடைத்ததும்..! – 5

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    ஏய்…மலரு…..இப்படியா…. அந்தல சிந்தலையா விளுந்து கெடப்பே…..சரி சரி எந்திரி, மேனேஜர் உன்னைய அழைச்சிட்டு வரச் சொன்னாரு….எந்திரிச்சி வா….அடி கிடி பட்டிடிச்சா…?

    இல்லண்ணே…..லேசா காலு மடங்கிடிச்சி….இரு எந்திரிக்கிறேன்.

    கூடப் பிறந்த பிறப்புகளைப் பற்றி எதுவுமே அறியாத பாண்டிக்கு அண்ணே….என்று அவள் அழைத்ததும், மனசுக்குள் எதுவோ என்னவோ செய்தது அவனுக்கு. இருந்தாலும் மலரை முறைத்துத் திட்டினான்.

    என்னா ….புதுசா அண்ணே….நொண்ணேன்னு உறவு கொண்டாடுற….ஒங்கூடப் பொறந்தவனா நானு….ஓய்யாரத்தப் பாரு…அதட்டினான்.

    ஓட்டிக்கிட்டுப் பொறந்தாத் தான் அண்ணனா….ஆபத்துல வந்து உதவினாக் கூட அண்ணேன் தான். பின்ன எதுக்கு இப்ப  ஓடியாந்தியாம்.?  பாத்துப்போட்டு கண்டும் காணாத மாதிரி போயிருக்க வேண்டியது தான…இவளும் அவனை  விடவில்லை. பேச்சில் மடக்கி விட்டதாக நினைத்தாள் .

    போயிருப்பேன்…ஆனா எனக்கு உன் மேல ஒரு இது..?

    எது….?

    அதான்…சொல்லத் தெரியல புள்ள.

    உனக்குச் சொல்லத் தெரியல…நான் சொல்லிப்புட்டேன்….அண்ணேன்னு…! அவள் தனது முத்து மாலையை கைவிரல்களுக்கு இடையில் வைத்து சுழற்றிக் கொண்டே சொன்னாள் . ஷீலா கூட என்கிட்டே அப்படித் தான் சொல்லிச்சு….பாண்டி உனக்கு அண்ணன் முறையினிட்டு.. மலர் அவன் முகத்தை ஆராய்ந்து மனசுக்குள் சிரித்துக் கொண்டாள் .

    சரி…ஒண்ணும் பேசாமே வா….அந்த ரூம்பு வந்திருச்சு.

    ரோஸ் வுட்டில் வழ வழப்பாக பாலிஷ் போட்ட கதவின்  வெண்கலக் கைபிடியில் கை வைத்ததும் அது திறந்து கொண்டது. உள்ளே, யாரோ ஒருவன் கம்பீரமாக சாய்ந்து கொண்டு சுழல் நாற்காலியில் உட்காந்தபடி முன்னும் பின்னும் ஆடியபடி தலையையும் ஆட்டிக் கொண்டிருந்தார்.

    மலருக்கு, அவன் ஏதோ ஒரு படத்தின் வில்லனாக நடிக்கிறவர் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டாள் .

    அருகில் மேனஜர் தனது மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடி இவர்களைப் பார்த்து, மெதுவா..மெதுவா..என்று கண்களால் சமிக்சை செய்து கொண்டிருந்தான்.

    அட மானேஜரே நடுங்குறாரு…..ஆச்சரியமானாள் மலர்.

    லேசாக நொண்டி நொண்டி உள்ளே வந்தவள்….புரியாத ஒரு மொழியில் அந்த வில்லன் பேசியது கண்டு திகைத்து சிலை போல நின்றாள் .

    ஏ சோக்கிரி கோ இதர் க்யா காம் ஹை …? கிதர் ஸெ ஆரே …? க்யா நாம் ? ஓ ஆத்மி கௌன் ஹை ..?

    (இந்தப் பெண்ணுக்கு இங்கு என்ன வேலை? எங்கேர்ந்து வருகிறாள்? பெயர் என்ன? அவன் யார்?)

    அது மலர்விழி….அமீர்பெட் ஆஞ்சநேயுலு சொல்லலியா..?என்று மேனேஜர் கேட்டதும்,

    இந்த வில்லனோட பெயர் என்னவாயிருக்கும்..? மலர் யோசிக்கலானாள்.

    சொல்லிச்சு…சொல்லிச்சு..பஹுத் அச்சா ஹை …பஹுத் சுந்தர் திக்ரா….! என்று கனைத்தது வில்லன்.

    (ரொம்ப நல்லா இருக்கு….ரொம்ப அழகா இருக்கா பார்க்க…!)

    மேனேஜருக்கு வாயெல்லாம் பல்லாக இளித்தார்.

    அபி தூ ஜா…! என்ற வில்லன், தனது கைபேசியை எடுத்து புத்தகத்தைத் திறப்பது போலத் திறந்து கைகளால் மெதுவாகத் தட்டிக் கொண்டே, லேகே ஜாவ் , தோனோங் கோ…!
    (இப்ப இந்த இரண்டு பேரையும் அழைத்துச் செல்..)

    பாண்டி நினைத்துக் கொள்கிறான்…..ஹிந்தி நாயா…? தலையில டர்பன் கட்டிருவான்…! இவங்கிட்ட நம்ம டீலிங்கு செல்லாது. இதுங்க முதலைங்க..! பெரிய திமிங்கிலங்க கிட்ட அயிர  மீனுக்கு என்ன வேலை…? களண்டுக்கடா பாண்டி…! உள்ளுக்குள்ளிருந்து அபாயமணி ஓங்கி அடித்தது. அப்ப பாவம் மலரு..அவன் இதயம் எதற்கோ அவளுக்காகத் துடித்தது.

    எலே பாண்டி…நாம வந்த எடம், அம்புட்டும் படம் புடிக்கும்….பேசுறதெல்லாம் கூட கேட்கும்.அம்புட்டையும் நமக்கு முன்னாடியே அவரு அதான் பாஸ்…பார்த்துருவாரு.  நீ இருவதாயிரம் வாங்கி இருக்கே….தைரியமா இரு…என்று கூடவே எச்சரித்தபடி…..

    ஏய் மலரு இங்க என்ன நடக்குதுண்டு மூச்சு விடக் கூடாது யாருக்கும். ஏதாச்சும் போன் மூலமாச் சொன்னே…அம்புட்டு தான். ஊரு போய் சேர மாட்டே..! இங்கனக் குள்ளாரயே தீர்த்துக் கட்டீருவாங்க. இப்பமே சொல்லிப்புட்டேன்.

    இவள் உறைந்து போனவள், மனத்துக்குள் “பேச்சியம்மா, முத்து மாரியம்மா, படை வீட்டு பகவதியம்மா, பாடைகட்டி மாரியம்மா….” அம்புட்டு பேரும் ஓடியாந்து என்னியக் காப்பாத்தி, இங்கிட்டு தவிக்கிற என்னிய மாதிரி புள்ளங்களையும் காப்பாத்திரும்மா தாயீ ….நான் வந்து மாவிளக்குப் போட்டுப் படைக்கிறேன் தாயீ ….உசுரோட நான் திரும்பிருவேனா…” தப்பு கிப்புப் பண்ணீட்டேனா ….இங்கிட்டெல்லாம் பணத்துக்கு ஆசைப் பட்டு வந்திருக்கப் படாதோ…அம்மா எம்புட்டு சொல்லிச்சு..பாவி மவ நான் பெரியவுக பேச்சைக் கேக்காமப் பொறப்பட்டு வந்தேனே…!  நல்லா மாட்டிக்கிட்டேன்…..! பயம்ன்னா இப்படித் தான் இருக்குமா..? வவுத்தை பிணைஞ்சு வலிக்குது…முதுகுத் தண்டுக்குள்ளார ஜிவ்வுன்னு ரத்தம் ஏறுது …..தொண்டை உள்ளுக்குள்ளார இழுக்குது…..தொண்டைத் தண்ணி வத்திப் போவுது….நெஞ்சுக்குள்ள கிடு கிடுங்குது….தொடை கூட நடுங்குது…இம்புட்டும் ஒண்ணாச் செஞ்சா பயமா..? அப்ப …..நான் இவனுங்களுக்கு பயப்படுறேனா…? நடுங்கினாள் மலர்விழி.

    உள்ளுக்குள் எழுந்த பயத்​தை விரட்டி அடிக்கும் வழி ​தெரியாமல், இங்கன எங்கிட்டு கா​மெரா​வெச்சுருப்பானுங்க… என்று ​நோட்டம் பார்த்துக் ​கொண்​டே பூ​னை ​போல நடந்தான் பாண்டி. நான் ஏதாச்சும் ​பேசப் ​போக அதும் பாட்டுக்கு ஓரமா இருந்துகிட்டு ​போட்டுக் ​கொடுத்துடுச்சின்னா, ​பெறவு இங்கிட்டிருந்து​வெளி​யேற முடியாதா​மே..! மனது எச்சரித்தது.

    மலர்விழி மனத்தோடு தைரியம் சொல்லிக் கொண்டாள் .நான் டீச்சராக ஆகப் போறவ…எதுக்கும் .பயப்பட மாட்டேன்…!

     

    அச்சமில்லை…அச்சமென்பதில்லையே,,,,

    உச்சி மீது ஃபேன் விழுந்து

    மண்டை உடைந்த போதிலும்

    அச்சமில்லை..அச்சமில்லை….

    அச்சமென்பதில்லையே..”

     

    சின்ன வயதில் பாரதியார் பாடலைத் தலைகீழாகப் கேலி செய்து பாடிச் சிரித்ததை நினைவு படுத்தியபடி, இப்போதும் பயத்தை மீறி சிரித்துக் கொண்டாள். இவள் தனக்குள் சிரித்துக் கொண்ட போது பயம் விலகி நின்றது.

    திடீரென ஒரு கதவு திறக்கப் பட்டு அழகான வாலிபன் இவர்களைப் பார்த்து “வெல்கம்’…என்றவன்….ப்ளீஸ். கமின்..என்றான்.

    தயங்கிய பாண்டி உள்ளே நுழைந்ததும் , அவனைப் பின் தொடர்ந்தாள் மலர்விழி. விழுந்ததனால் ,கால் நரம்பு சுளுக்கி வீங்கிக் கொண்டு நடக்க விடுவேனா பார்…! என்று அவளைப் பிடித்து இழுத்தது.பாண்டிண்ணே, காலு ரொம்ப வலிக்கிது, என்று முனகினாள். அவன் கொஞ்சம் கூட அதைக் கண்டுகொள்ளவில்லை. அவன் பயம் அவனுக்கு.

    இவர்கள் உள்ளே நுழைந்த அறை முழுவதுமாக குளிரூட்டப்பட்டு ஜில்லென்று இருந்த போதிலும் மலருக்கு முகமெல்லாம் முத்து முத்தாக வேர்தது. அவள் கண்கள் அதிசயத்தில் மிக மிக நேர்த்தியாக அடுக்கப் பட்டிருந்த பாட்டில்களை ஆவலோடு பார்க்கிறாள்.

    அத்தனையும் இறால் ஊறுகாய் பாட்டில்கள், விற்பனைக்குத் தயாரான நிலையில் அடுக்கி வைக்கபட்டிருந்ததைக் கண்டதும் மனத்துள் நம்பிக்கை கை நீட்டியது.இந்த இடத்தில் பயமில்லை என்ற நம்பிக்கை உணர்வு அவளுக்குள் விழித்துக் கொண்டது. இப்போது அவளை ஆட்கொண்ட பயம் விலகிச் சென்றது.அப்பாடா….இறால் படங்களைப் ஏதோ தன் உயிர் தோழியைப் பார்த்தது போல மகிழ்ந்தாள் அவள்.

    இவளைப் போன்ற பல பெண்கள் கைகளில் பிளாஸ்டிக் பைகளை நுழைத்துக் கொண்டு, தலையை பிளாஸ்டிக் தொப்பியை கவிழ்த்தி மூடியவாறு மும்முரமாக வேலைகள் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தவளுக்கு கைகள் பரபரத்தது. இங்கன இதே வேலை கெடைச்சா எம்புட்டு நல்லாருக்கும். இப்படி ஜிலு ஜிலு ரூமுக்குள்ளார இருந்தா நான் “சீர்காழி கோயில கோயிலச் சுத்திப் பார்க்க வர வெள்ளக்காரியாட்டமா ஆயிடுவேன்……பெறவு அம்மாவுக்கு அடையாளமே தெரியாது…மனசு ரெக்கை கட்டிப் பறந்தது.

    அப்ப …அந்த மேனேஜர் பாண்டிகிட்ட சொன்ன சமாச்சாரம்…?ஆழ் மனசு உசுப்பியது.

    அதற்குத் தகுந்தாற்போல அடுத்தடுத்த அறைகளில் அவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

    சுவர் முழுதும் முகம் பார்க்கும் கண்ணாடி ஒரு சுவர் போல இவளை உள்ளிருந்து வரவேற்றது.அடுத்த நிமிடம் அந்த அறையின் கதவு வெளிப்புறத்திலிருந்து சார்த்தப் பட்டது. அந்தப் பெரிய அறையில் பல பெண்கள் சோபாவில் சாய்ந்து கொண்டு, சேரில் அமர்ந்தபடி நகத்துக்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்கள். சில பெண்கள் முகத்தில் வெள்ளையாய் மாவைப் பூசிக் கொண்டு, கண்களுக்கு பதில் வெள்ளரிக்காய் வில்லைகள் உருட்டி முழித்துக் கொண்டிருந்தது.

    சிரிப்புதான் வந்தது அவளுக்கு. இது ..வீடா.? ஆபீசா? சினிமா சூட்டிங் எடுக்குற எடமா? சொர்கமா…நரகமா..? ஒண்ணுமே வெளங்கலையே…இந்தப் பாண்டி எங்கிட்டுப் போனான்…கதவை இழுக்கிறாள்..அது மெளனமாக இவளை அடக்கியது. திரும்பிப் பார்த்து ஒரு பெண்ணிடம் , நான் வெளிய போகணும்…..!

    …………..

    நான் வெளிய போகணும்…….! இரண்டாவது முறையும் சொல்கிறாள்.

    …………

    ப்ளீஸ்….நான் பேசறது உங்க காதுல யாருக்குமே கேக்கலையா….? நான்….வெளியே….போகணும்…! தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சத்தமாகவே சொல்கிறாள். அந்த அமைதியில் இவளது குரல் எதிரொலித்தது.

    அடுத்த சில நொடிகளில்…..”எங்களுக்கும் தான்….” ஒரு பெண்ணின் முனகல் இவளருகில் கேட்டது.

    மலர்விழியின் மூளைக்குள் மின்னல் வேகத்தில் ஏதோ செயல்பட்டது.

     

    (தொடரும்)

    Share
  • தொலைத்ததும்.. கிடைத்ததும்..! – 4

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    இந்தா…வளியை விடு என்று அவனைப் பார்த்து ஏளனமாகச் சொன்ன மலர்விழி, சார்….பாக்கிங் ஆபீசுக்கு அளைச்சிட்டுப் போறதாச் சொன்னீங்களே….அதான் ரூம்பைக் காலி பண்ணீட்டு வந்தேன். இப்பவே அங்கன போயிரலாமா..என்று தனது பையை டேபிளின் மீது தொப்பென்று வைத்தாள் .

    அதுங்கையிலே….சொல்லிட்டியா…? கர கரத்தது மேனஜரின் குரல்.

    ..ம்ம்ம்……! சரின்னிச்சு.

    அப்பச் சரி. கெளம்பு….என்றவர், எட்டிப் பார்த்து, ஏல பாண்டி….நில்லு..! நீயும் கூட வா. நானே அளச்சிட்டுப் போறேன்,

    அது எதுக்கு சார் அந்த எடத்துக்கு ? ஒண்ணுமே தெரியாதவள் போலக் கேட்டாள் மலர்.

    .ம்ம்ம்ம்ம்…..உங்களோட சேர்ந்து கும்மியடிக்க…! எரிச்சலுடன் சொன்னவர், நொய்யி…நொய்யின்னு எல்லாத்துக்கும் கேள்வி கேட்கப் படாது. வாயை மூடிட்டு வா….என்றவர் கதவைப் போட்டுவிட்டு பூட்டை இழுத்து இழுத்துப் பார்த்துவிட்டுத் திரும்பினார்.

    இதைப் பார்த்த மலர், சிரித்து விட்டாள் .

    ஏம்புள்ள ….என்னாத்துக்கு இந்தச் சிரிப்பு…?

    ஏன்…சார்…..பூட்டுல போயி நீங்க இந்தத் தொங்கு தொங்கிப் பார்க்கறீங்களே …..உங்க கனம் தாங்காமே…..அது அப்படியே களண்டு விழுந்துச்சின்னா….! அத்த நினைச்சித் தான் சிரிச்சேன்.

    பல்லக் களட்டீருவேன் …..சாக்கிரத..!

    அம்மாடியோ…பொய் கோபத்துடன் கூடவே நடந்தாள் .

    தூரத்தில் பாண்டி, புகை பிடித்தபடியே  புகைவளையம் விட்டபடியே இவளைப் பார்த்தபடியே எதையோ யோசித்துக் கொண்டு நின்றிருந்தான். ‘இந்தப் புள்ள நல்ல அளகி தான்….அந்த ஷீலாவைக் காட்டியும்….அத்தத் தள்ளி விட்டுட்டு இத்தக் கட்டிக்கிட்டாப் போச்சு…..டேய் பாண்டி நீ சூபெர்டா….என்று தனக்குத் தானே தட்டிக் கொள்கிறான்.

    அவனைப் பார்த்தவள் ,லச்சாதிபதி கனவு காணறியா? பின்னால லத்தில வாங்கும் போது புரியும்…! மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள் மலர்விழி.

    மூவரும், மூன்று விதமாக நினைத்தபடி டெம்போ வண்டி ஏறி பாக்கிங் ஆபீஸ் வந்து சேர்ந்தார்கள். வந்திறங்கிய இடத்தைப் பார்த்து சற்றே பயந்து போனாள் மலர்விழி.

    பெரிய பெரிய கிரானைட் கற்களை  சிமெண்டில் புதைத்து ஆறடி உயரத்தில் எழுந்து நின்றது நீளமான காம்பௌண்ட் சுவர். அதன் உயரத்தையும் மீறி கூர்மையான கண்ணாடித் துண்டுகள் புதைக்கப்பட்டு அதுவும் போதாதென்று இரும்பு முள் வேலி வேறு அவளை பயமுறுத்தியது.

    இரும்புக் கதவுகள் க்ர் க்ர் க்ர் க்ர் க்ர் க்ர் க்ர் க்றீச்……கனமான இரும்புக் கதவைத் திறந்த அறுவாள் மீசை இவளை ஒரு மாதிரி பார்த்து மிடறு விழுங்கியது. மேனேஜருக்கு விறைப்பாக நின்று சலாம் போட்டது.

    தரையில் நேராகப் பாதை முழுதும் கரடு முரடாக கூழாங்கற்கள் பதிக்கப்பட்டு கம்பீரமாக இருந்தது. அதன் இரண்டு பக்கமும்
    அடர்த்தியாக பஞ்சுப் பொதிகளாக பச்சைப் புல்வெளி….அழகாக மிரட்டியது .

    பால் வெள்ளை நிறத்தில் பல அடுக்கு மாடி வீடுகள், ஜன்னல்கள், பால்கனிகள், பூந்தொட்டிகள் என்று ரம்மியமாக இருந்த அந்தக்
    குடியிருப்பை அதிசயமாகப் பார்த்தபடியே மெல்ல நடந்து வந்தவள்..கருப்பு கிரானைட்டில் ‘ஆஞ்சநேயுலு ப்ளாசா” என்று  தங்க எழுத்துக்களாக மின்னிக் கொண்டிருந்தது. அதைப் படித்தவளுக்கு ‘அமீர்பெட் ஆஞ்சநேயுலு ‘ கண் முன்னே வந்து போனார்.

    எத்தனை அபலைப் பெண்களின் கண்ணீரும், வயிற்றெரிச்சலும், போட்ட  சாபங்களும் இப்படி இவன் மனது போல செங்கல்லும்,கூழாங்கல்லும்.கிரானைட் கல்லுமாக மாறி கட்டிடமாய் எழும்பி நிக்கிதோ…? படு பாவி…..உன்னைப் பார்த்தால் ஏதோ ஆஞ்சநேயர் கோயில் பூசாரி மாதிரி இருந்துக்கிட்டு, இப்படி அட்டூழியம் பண்றியே ….அந்த ஆஞ்சநேயருக்கே பொறுக்கலை….! அதான் என் மூலமா வந்திருக்காரு.  இத்தோட உன் ஆட்டம் க்ளோஸ்..! அமீர்பெட் ஆஞ்சநேயுலு…… உன் முகத்திரை கிழியப் போகுதுலு ….! எண்ணிக்கொண்டே நடந்தாள்….நடந்தாள் …!

    பல வண்ண நிறத்தில் கார்கள் வரிசையாக நின்று வரவேற்றது போலிருந்தது இவளுக்கு.

    அதையும் கடந்தார்கள்.

    பாண்டி தான் சொன்னான்….! பார்டி பல்லானதா…இருக்கும் போல்ருக்கு …! சும்மா சினிமா சூட்டிங்கு நடக்குற எடத்துக்கு போறாப்புலல்ல இருக்கு. இங்க லட்சம் எல்லாம் ஜுஜூபி…! கண்ணா…..கோடி எண்ண ஆசையா…? என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

    வாங்குவ….வாங்குவ…!அதுக்கும் மேலே கொடுப்பாங்க…..அத்தனையையும் எண்ணிட்டு கம்பியையும் எண்ணு …! இவளும் சொல்லிக் கொண்டாள் .

    அங்கங்கு தென்படுபவர்கள் ஒவ்வொருவரும் செக்யூரிட்டியாகவே இருந்தார்கள். ‘இது நெசமாலுமே ஊறுகாய் பாக்கிங் கம்பெனி தானா…இம்புட்டு பெரிசா இருக்கு…? சந்தேகமாக மேனஜரைப் பார்த்து கேட்டு வைத்தாள் .

    நீ…உன் வாயை வெச்சுக்கிட்டு சும்மாலுமே வரமாட்டியா..? இங்கன வா….ஒரு பட்டனைத் தட்டுகிறார்.

    புள்ளிப் புள்ளியாக சிகப்பு விளக்குகள் கீழ் குறியிட்டு மின்னியது. சிறிது நேரத்தில் லிஃப்ட் வந்து நின்றது.

    உள்ளார வா….மாடிக்கு இட்டுண்டு போகும்….சொல்லியப்படியே உள்ளே நுழைந்து கொள்ள…கதவு மூடப் போகிறது…அதைத் தடுத்த பாண்டி….ஏய்….ஏறு என்று அதட்டுகிறான்.

    இதென்னது..? மேலேர்ந்து ரூம்பு வருது….? பயந்து போனவள் நான் இதில வரலை….மாடிக்கி நான் மச்சு வளியா வரேன்….அடம் பிடிக்கிறாள்.

    சீ …..உள்ளார வா..என்று அவளது கைகளைப் பிடித்து இழுக்கப் போக, வேறு வழியில்லாமல் உள்ளே அவளே நுழைந்து கொள்கிறாள்.

    லிஃப்ட் மேலே ஏறும் போது , திகிலுடன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்கிறாள். அங்கிருந்த பெரிய கண்ணாடியில் ஆச்சரியமாக தன்னை பல கோணங்களில் பார்த்துக் கொள்கிறாள். கூடவே அந்த இரண்டு பேரும் தன்னை கவனிக்கிறார்களா..? என்றும் பார்த்துக் கொள்கிறாள்…மலர்.

    ஆறாவது மாடியில் சென்று இவர்களை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் கீழிறங்கும் லிஃப்டை  கண் கொட்டாமல் பார்த்தவள், திடீரெனத் திரும்ப அங்கு யாரையும் காணாமல் திடுக்கிட்டு….சுற்றும் முற்றும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு அந்த பெரிய கண்ணாடி போல பள பளக்கும் நீண்ட கரும் பச்சை மார்பிள்  தரையில் காலை வைத்ததும், சொய்ங் …என்று வழுக்கத் தடுமாறியவள் சுதாரித்துக் கொண்டு மெல்ல மெல்ல கைகளால் அப்படியும் இப்படியும் பாலன்ஸ் செய்து கொண்டே நடக்கிறாள்…
    தனிமை, ஆள் நடமாட்டமே இல்லாத பகுதி, மூடிய கதவுகளும் ஜன்னல்களும்,நிசப்தமான சூழல் இவையாவும் அவளைத் திகிலடையச் செய்தது.

    பா…..பா….பா….ண்டி …..பாண்டீஈஈஈஈ….என்று தட தட வென்று ஓடி சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரென்று வழுக்கி விழுந்ததும்……யம்மாஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…….என்று கண்களை இறுக்க மூடிக் கொள்கிறாள்.

    இவள் விழுந்து கிடப்பதைக் கண்டு கல கல வென்று சிரித்தபடியே அவளுக்கு உதவ பாண்டி ஓடி வருகிறான்.

    (தொடரும்)

    Share
  • தொலைத்ததும் .. கிடைத்ததும் …! – 3

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    ஷீலாவிடம் இந்த விஷயத்தைச் சொல்லலாமா… வேண்டாமா… என்ற குழப்பத்தில் மனது தவித்தாலும், கிராமத்து மண்ணுக்கே உரிய வெள்ளந்தியான மனோபாவத்தில் மலர் வேகமாக ஷீலா…ஷீலா என்று அவளை நோக்கி முகத்தில் பிரகாசத்துடன் ஓடுகிறாள்.

    என்னாச்சுடி…சம்பளம் வாங்கிட்டியா?…சந்தோசத்தப் பாரு..ம்ம்…சொல்லு…எவ்ளோ கொடுத்தான் அந்தத் திருட்டுப் பய.?

    தெரியுமாடி உனக்கு…? என்கிட்டே முன்னமே ஏன் சொல்லல. பாதிக்குப் பாதி தான் தந்துச்சு அந்தக் கொரங்கு. எனக்கு அப்பிடியே உடம்பெல்லாம் தீப்புடிச்சி எரிஞ்சிச்சு தெரியுமா? பண்றது திருட்டுத்தனம்…அதுல அதட்டல் வேற. நான் நல்லாக் கேட்டுபுட்டு தான் வந்தேன் என்ற மலர் பெருமையுடன் சொன்னவள் ஷீலாவிடம்…..ஆமா..அந்த மேனஜர் என்னிய பாக்கிங் ஆபீஸ்ல ஒரு சீரியல்ல நடிக்க அழைச்சாரு . ஒரு வாரத்துக்கு அஞ்சு ஆயிரமாம். நான் போகலாமுன்னு முடிவு செய்து வாரேன்னு சொல்லிப்புட்டேன். அதான் உன்கிட்டயும் சொல்லிப்புட்டு செய்யலாமே…என்று இழுக்கிறாள்.

    அது எங்கிட்டு டீ …..இவளே….எனக்கு சொல்லவேயில்ல. நானும் வருவேனில்ல. அந்தாளு ஏதோ கேம் ஆடுதுன்னு தோணுது. சாக்றதயா இருடி..

    ம்மம்ம்…என்று சொன்னவள் ,சிறிது நேரம் யோசித்து , என்ன உன் துட்ட அந்தப் பாண்டி பிடுங்கிடுச்சா..? என்று கேட்கிறாள்.

    அம்புட்டும் நான் தரல.ஒரு முன்னூறு கொடுத்தேன். அம்புட்டுதான். எல்லாம் என் நேரம்டி. அலுத்துக் கொள்கிறாள் ஷீலா.

    சரி வா…நாம போகலாம். நடக்க நடக்க ரோடு நீளமாவது போலிருந்தது மலருக்கு. பெரிய பெரிய கட்டிடங்கள் பயமுறுத்தியது. அங்கங்கே குழி தோண்டி வேலைகள் செய்து கொண்டிருக்க பக்கத்திலேயே கார்கள் பெருத்த ஹாரன் ஒலியோடு செல்லும் போது காதைப் பொத்திக் கொண்டு பயந்து நின்றாள் . தலைக்கு மேலே பெரிய பாலம் ஓட…அதற்கு பக்கத்தில் இரும்புக் கூண்டுகளோடு மனிதர்கள் நின்றிருப்பதை பார்த்து…இது என்ன சர்க்கஸ்ன்னு சொல்லுவாங்களே அதுவாடி…….!

    ….சீ.சீ…..அது ஒண்ணும் இல்லடி..இது மெட்ரோ ரயிலுக்கு வேலை நடக்குது. கீழ எடம் இல்லாங்காட்டிக்கு மேல கூட ரயிலு விடுவாங்களாம். பாண்டியன் தான் சொல்லுச்சு.

    அப்போது பயங்கற சத்தத்துடன் சத்தத்துடன் “ஸ்பைஸ்ஜெட்” பறந்து இறங்கிக் கொண்டிருந்தது….!

    அய்யே…..அய்யே….இதோ அங்கிட்டுப் பாரேன்…..விமானம்….விமானம்…..நான் இப்பத் தான் முத முத வாட்டிப் பாக்கறேன்…..எப்டி பறக்குதுடி..எங்கம்மாட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப் பட்டுகிடும்.. விமானம் எல்லாம் பார்த்திருக்காண்டு. ம்ம்ம்….என்று ஷீலாவை இடிக்கிறாள்.

    டி….இரு…இரு…கொஞ்சம் நிதானத்துக்கு வா….காலு கீழ தானே இருக்குது…என்று குனிந்து மலரின் காலைப் பார்க்கிறாள்.

    அடிப்போடி என்று வெட்கப் பட்டவள்….நாம இன்னைக்கே ரூம்ப காலி பண்ணீடலாமா..?

    அது அம்புட்டு சுலபமில்ல…முதல்ல நீ வேணா கெளம்பு. அப்பால நான் காலி பண்ணிக்கறேன்.

    மனசுக்குள் மகிழ்ந்தாள் மலர்விழி.இந்த கரப்பான்பூச்சி ரூம்புலேர்ந்து முதலில் தப்பிச்சால் போதும் என்றது அவளது மனம்.

    அதோ பாருடி..அந்தப் பையன் சோளப்பொறி விக்கிறான்…வாங்கலாமாடி…மலர் துள்ளுகிறாள் ..எனக்கு வவுறு திங்கக் கேக்குது.

    அது சோளப்பொறி இல்லடி…..பாப்புகானு ….! இங்கிட்டெல்லாம் அப்படித்தான் சொல்லுதுங்க.

    அதென்ன பாப்புகானோ…நூர்ஜகானோ….எனக்கு ஒரு பாக்கெட்டு வாங்கு. எம்புட்டு இருக்கும்.

    பத்து ரூவாடி….!

    அடிப்பாவி….எங்கூர்ல ரெண்டு ரூவா தாண்டி..இங்கிட்டு கொள்ளையடிக்கிரானுவ…இத்தினிகாண்டு சோளம்…பொரிச்சா பொங்கீட்டு வரப்போவுது..அதுக்கு இம்புட்டு துட்டு எதுக்கு..? சரி வாங்கித் தொலை.

    இதுக்கே இம்புட்டு இழுக்கறியே …..இம்புட்டுக்காண்டி வேகவெச்ச சோளத்தைக் கொடுத்து இருபத்தஞ்சு ரூபா கேட்ப்பான்…அத இன்னும் நீ பார்க்கலைன்னு வெளங்குது. ஒரு நாளு பாண்டியோட பாண்டிபஜார் போயிட்டு வந்தால் அம்புட்டும் வெளங்கும் .

    அதென்னாடி …பாண்டிக்கு தனியா பஜாரு கூட அதும் பேருல இருக்குதா? நீ பெரியாள்டி .

    மண்ணாங்கட்டி…….மொதல்ல அது ஏதாச்சும் வேலை வெட்டி பார்க்காதான்னு நான் கெடந்து தவிக்கிறேன்.

    ஆமா…உன் ஆளு பாண்டிக்கு வேலை வெட்டி ஏதும் இல்லையா? அதான் சும்மாச் சும்மா இங்கிட்டே சுத்தி சுத்தி வராப்பல. அவனப் பாத்தா நல்லவனாவே தெரியல. எதுக்கும் தள்ளியே வெய்யி. இவன்லாம் உன் கழுத்துல தாலி கட்டி…நீ குடும்பம் நடத்தி……வாயில் பாப்கார்னை போட்டுக் கொண்டே ‘சவக் சவக் ‘ என்று மென்று கொண்டே பேசிக் கொண்டு நடக்கிறாள் மலர்.

    அடி….பார்த்து வாடி எரும மாடு…! என்று ஷீலா மலரின் கைகளைப் பற்றி இழுக்கிறாள் .

    எருமை மாடு ஒன்று நடந்து இவர்களைக் கடந்து சென்றது.

    நீ என்னமோ என்னியத் தான் சொல்லுறேன்னு நெனைச்சு சுள்ளுன்னு எனக்கு எகிறிச்சு பாரு…!

    பழையபடி குப்பைகளைக் கடந்து அந்த இருட்டு ரூம்புக்குள் நுழைந்து , தப்பித்தால் போதும் என்று தனது பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியேறிய மலர்விழி, அப்ப நான் அந்த மேனஜரை பார்த்து பேசி அந்தாளு எங்கிட்டு அழைச்சிட்டுப் போகுதோ அங்கன போய் இருக்கேன். இன்னும் பத்தே நாளு தான்..எம்புட்டு கெடைச்சாலும் எடுத்துக்கிட்டு ஊரைப் பார்த்து போயிடுவேன். அடுத்த மாசம் இந்நேரம் காலேஜுடி .

    அந்தாளு முன்னமே சொல்லிருந்தா இந்த வாரமே அஞ்சாயிரம் அள்ளிருக்கலாம். அதென்னடி..எப்பப் பாரு நம்மளப் பார்த்து ஈ ன்னு இளிச்சுக்கிட்டே நிக்குது.

    போட்டும் விடு மலரு. நா வேணா கூடத் தொணைக்கு வரட்டாடி ஷீலா கேட்கிறாள்.

    வேணாண்டி…எனக்கே வளி தெரியிது. நீ பாவம்..போய் படு. நா வாரேன்.

    மூச்சிரைக்க நடந்து வந்து ஆபீஸ் வாசல் படியில் பெட்டியை வைத்து விட்டு அங்கேயே மூச்சு வாங்க உட்காருகிறாள்.

    அந்த அறைகுள்ளிருந்து ஜன்னல் வழியாக அவளது கண்கள் எட்டிப் பார்க்கிறது. இந்தாளு பாண்டிக்கு இங்கிட்டு என்ன வேலை….? அப்படி என்ன தான் பேசுறாரு மேனேஜர் சாரு இவன்கிட்ட..அதும் ஷீலா இல்லாத போது ..? எழுந்து நின்று காதைத் திட்டுகிறாள். மனசு சொல்கிறது அடியே…ஒட்டுக் கேட்க்குறது தப்புடி ….! மனசாட்சி சொல்லுகிறது….கவனமா கேளு…அதுங்க என்ன பேசுதுங்கண்டு…மண்ணாந்தையா நிக்காதேன்னு.

    மனசாட்சிக்கு செவி சாய்த்து சுவரில் சாய்கிறாள் மலர்விழி.

    0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

    ஏண்டா….பாண்டி..நீ எப்பப்பாரு வந்து வந்து நிக்கறியே..வேலை வெட்டி ஒண்ணுமில்லியா? உத்தியோகம் புருச லட்சனம்டா..தெரியுமில்ல. மேனஜரின் கட்டைக் குரல் இவளின் காதை அடைத்தது.

    எல்லாம் தெரியும்பு….வேலை இல்லாமலா சுத்துறோம்…..திருவான்மியூர்ல தீயடைப்பு இருக்குல்ல அங்கனக்குள்ள தான் இருக்குறேன்.
    நமக்கு வேலை மென்னியப் பிடிக்கிறது தீவாளி சீசனப்பத்தான். எனக்கு தெனம் வேலை வேணும்முண்டா தெனம் எங்கிட்டாச்சும் தீ புடிச்சி எரியணும் . அது ஆவுற காரியமா…? அதான் அங்கிட்டுருந்து இப்படி ஒரு நடை வந்துட்டுப் போவேன்.

    அப்ப அந்தப் புள்ள ஷீலா….சும்மானாச்சும் டாவடிக்கிறியா?

    அய்யைய …..நான் கட்டிக்கப் போற பொண்ணுங்கன்னா…அது. நான் கழட்டி விட்டுட்டு போக பளகல. புரிஞ்சுக்கிடுங்க.

    அடப் போப்பா…..இந்தக் காலத்துல பொண்ணுங்களே அப்படிப் பளகறதில்லை. காசப் பாத்ததும் கழண்டுகிடுங்க.

    என்ன நீ ஒரு இருபதாயிரம் மாசம் தேத்துவியா..?

    அம்புட்டு எங்கிட்டு…! நல்லாக் கேட்டீங்க போங்க..! நான் அஞ்சுக்கும் பத்துக்குமே முழி பிதுங்கி நிக்கிறவன்.

    அப்ப ஒண்ணு செய்யி….நான் ஒரு அருமையான தொழில் சொல்லித் தரேன்…கமிஷனே களை கட்டும்….ஒரே வருஷத்தில .நீ எங்கிட்டோ போயிடுவே. எங்கன உனக்கு வேலையே இல்ல..பூரா பூரா வடக்குல தான். செல் போன் ல தான் பிசினெஸ் நடக்கும். நம்ம அமீர்பெட் ஆஞ்சநேயுலு தான் முதலாளி. மாட்டிக்கிடாம, மாட்டிவெக்காம காரியம் பண்ணி முடிச்சா…பணம் மூட்டைல வந்து எறங்கும் . இல்லாங்காட்டி…

    இல்லாங்காட்டி…..?

    நீயே பொணமா மூட்டைக்குள்ளார கட்டிவெச்சி கூவத்துக்குள்ளார எறங்கும்.

    அப்படி என்ன புதுசா கெடைச்சிருக்கா ‘மகாலட்சுமி..”..? பயமுறுத்துற லட்சுமி.

    இப்ப ஷீலா உங்கிட்ட மாட்டிச்சு பாரு, அதை அப்படியே மெதுவா நம்ப வெச்சு கிண்டி கூட்டியாந்துடு. அங்கிட்டிருந்து அப்படியே ஆந்திரா தள்ளி உட்றலாம் . அங்க நம்ப ஆளு இருக்கான். எப்டியும் அம்பது தேறும்.

    ச்சே……இதெல்லாம் ஒரு பொளப்பா ….? இதுக்கெல்லாம் தான் பேரு இருக்கே. நான் இந்தப் பாவம் பண்ண மாட்டேன் ஆள விடுங்க.
    பாண்டியனின் குரலில் நெகிழ்ந்தாள் மலர்விழி.

    இதெல்லாம் உனக்கு செட் ஆவாதுடா…தள்ளி விட்டுட்டு காசை எண்ணிக்கிட்டு என்ஜாய் பண்ணிட்டு போயிட்டே இருப்பியா…பாவம்…புண்ணியம்னு பேசிக்கிட்டு…அலுத்துக் கொண்டான் மனேஜர்.

    இந்தா….என்று டேபிளின் மீது தொப்பென்று விழுந்தது பணக்கட்டு. வேலையே பண்ணாதே….வெச்சுக்கோ அட்வான்ஸ்.இருபதாயிரம்..
    கட்டைக் குரல் பேரம் பேசியது. அதே சமயம் இங்கிட்டிருந்து உசுரோட போவமாட்டே என்று பயமுறுத்தியது.

    ரத்தம் உறைந்து போய் நாவுலர நடுங்கியபடி நின்றிருந்தாள் மலர்.

    அடுத்தது என்ன…யூகிப்பதற்க்குள்..

    பாண்டியன் பணத்துக்குள் விழுந்தான்…!

    அப்ப …என் கணக்குல ரெண்டு அயிட்டம் எழுதிக்கிருங்க….முதல்ல ஷீலா. பெறவு மலரு.

    வெளியில் நின்றிருத்த மலருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இருந்தும் அசட்டு தைரியம் நிற்க வைத்தது.

    அப்டி வா வளிக்கி ..இதெல்லாம் இன்னும் ஒரு வாரத்துல முடிஞ்சிரணம். அந்த ஷீலாவை ஆந்திராவுக்கு அனுப்பிடு. இந்தப் புள்ள மலரை பாம்பேக்கு தள்ளி விட்டுடு, எப்படியும் ஒண்ணத் தாண்டிடும் உன் கமிஷன். பாரேன்…ஒரே வாரத்துல நீ லட்சாதிபதி. ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான்….ராத்திரி இங்கன வந்துருறா கம்பெனிக்கி…..டாஸ்மாக்கே அந்த பீரோக்குளாற தான் இருக்கு.மேலும் ஆசை காட்டினான். பாண்டியனின் மனது நாயானது…..ரொட்டித் துண்டுக்கு வாலாட்டி குழைந்து நாக்கைத் தொங்கப் போட்டது.

    பாண்டி பணத்தை எடுத்து அழுக்கு கர்சீப்பில் கட்டிக்கொண்டு விசிலடித்தபடியே……’தலைவா …..சொன்னபடி நான் ஒரு வாரத்தில் லட்ச்சாதிபதி..’ ஏமாத்திற மாட்டியே…!

    நீ காரியத்த கவனிடா….உன்னிய நாங்க கவனிக்கிறோம்….வில்லனைப் போல சிரிக்கிறது கட்டைக் குரல் மேனேஜர் .

    சரிங்கண்ணா…….அங்கிருந்து கிளம்புகிறான் பாண்டியன்.

    அவசர அவசரமாக பையை எடுத்துக் கொண்டு தான் அப்போது தான் வந்தவள் மாதிரி உள்ளே நுழைகிறாள் மலர்.

    அவளைப் பார்த்தவன்…..”கும்பிடப் போன …தெய்வம். …குறுக்கே வந்ததம்மா…அடக் குறுக்கே வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா……”
    என்று பாடியபடியே…புருவத்தை உயர்த்திப் பார்க்கிறான்.

    (தொடரும் )

    Share
  • தொலைத்ததும்.. கிடைத்ததும்..2

    ஜெயஸ்ரீ ஷங்கர் 

     

    என்னாச்சுடி மலரு……? ஷீலா, தானிருந்த இடத்திலிருந்தே குரல் கொடுத்தாள்.

    முள்ளு குத்திருச்சு, லேசா வலிச்சுச்சு.. அவ்வளவு தான்…வேற ஒண்ணுமில்ல…மலர் சொல்லும்போது ஷீலாவின் ஆளு….பாண்டியன் ஜன்னல் பக்கமாக வந்து நின்று இவளைப் பார்த்து சிரித்துவிட்டு, இவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவுடன் …. “ஷ்…ஷ்…மலர்விழி,  அந்தப் பிள்ளை .ஷீலாவை கூப்பிடு.” என்கிறான்.

    இவள் திரும்பி வேறு யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்தவள், ஏய்…ஷீலா உன் ஆளு..இங்கன வந்து நின்னு உன்னிய கூப்பிடுது..என்னான்னு கேளு.

    ஷீலா வாயெல்லாம் பல்லாக அவனைப் பார்த்து சிரித்தபடியே ஜன்னலருகில் போகிறாள்.சிறிது நேரம் பேசிவிட்டு, மலர் இருக்கும் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் நேராக தன் இடம் நோக்கி செல்கிறாள்.

    ஏமாற்றமடைந்த மலர்விழி, ம்ம்…..எதுனா நல்ல விஷயமாயிருக்கும். அதான் சிலுப்பிகிட்டு போறா. அவன், சொல்லாதேன்னு சொல்லியிருப்பான். இப்ப அவளுக்கு காதலன் தான் கண் கண்ட தெய்வம்….நான் யாரு? என்று மனத்துக்குள் நினைத்தவள். நானும் மெல்ல அந்த மேனேஜர் சொன்னாரே வேற இடம் ..பாக்கிங் செய்யிற இடத்துக்கு மாத்தி விட்டுர்றேன்ண்டு அங்கனக்குள்ள கேட்டுக்கிட்டு போயிறலாம். இங்கன இந்த சாவுக் கிராக்கி வந்து வந்து நின்னு தொல்லை பண்ணிக்கிட்டே கெடக்கும் போல.. வீணா எனக்கு எதுக்கு இவுங்க  வம்பு? சடக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டவளாக காரியத்தில் கவனமாயிருந்தாள் மலர்.

    நேரம் செல்லச் செல்ல வேலைகள் முடிந்ததற்கான அறிகுறிகள் ஆரம்பமாயின. ஒவ்வொருவராக கிளம்பி கணக்குப் பிள்ளை டேபிளின் முன்பு கூடி நின்றனர்.  மெல்ல மெல்ல குசு குசு வென்ற பேச்சுக்கள் நேரமாக நேரமாக மீன் மார்க்கெட் லெவலுக்கு சத்தம்  எகிறுவதைப் கேட்டதும், மேனஜர் அங்கு வந்து நின்று கொண்டார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு….அம்புட்டு பேரும் ஒண்ணாக் குமியாதீங்கன்னு சொன்னாக் கேட்க மாட்டீங்களா? காதை  வாடகைக்கு விட்டிருக்கீங்களா?…இல்லாட்டி களட்டி வெச்சிட்டீங்களா….? க்யூல வாங்க…..க்யூல வாங்க…என்றபடி கையை ஆட்டியபடியே அதட்டிக் கொண்டிருந்தான்.

    அவனது கண்கள் தப்பாமல் மலரை ‘மொய்த்த பார்வையில்’ அவளுக்குப் ‘பலானது’ புரிந்தது.

    சீ…..நாயே….உன்  மோப்பத்துக்கு வெக்கிறேண்டி ஆப்பு…! என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். முதல் வாரச் சம்பளம் வாங்கற சந்தொஷத்தையே கெடுக்கிறான்..தூத்தேரி..!

    இன்னிக்கு சம்பள நாளில்லியா ..அதான் அதுக்கு மூக்குல வேர்த்துப் போச்சு என் ஆளுக்கு..அதாண்டி மலரு..பாண்டியனுக்கு. பார்த்தியா….ஓடியாந்திருச்சி …இப்படித்தான் ஓடியாந்துரும்…வாங்குற துட்டில் கொஞ்சமாச்சும் வெட்டனும் அதுக்கும்..இல்லாங்காட்டி எகிறி எகிறி ஏசும்.

    உனக்கு இது தேவையாடி..? அவிங்கிட்ட மாட்டிக்கிட்டு தவிக்கிறே.

    தவிக்கலைடி …செலசமயம் அதும் மருவாதி தான். எனக்குண்டு ஒரு ஆள் இருக்குற நெனப்பு…அது ஒரு கிக்குதான்டி. அதெல்லாம் உனக்கு இப்பத் தெரியாது…உனக்கும்……ஷீலா குசு குசு வென்று மலரின் காதில் கிசு கிசுத்தாள்.

    செருப்படி…! என்று பல்லைக் கடித்துக் கொண்டே தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு ஷீலாவைப் பார்த்து முறைத்து விட்டு க்யூவில் சேர்ந்து நின்று கொண்டாள். என்கிட்டே இது மாதிரி ஒரு ஆள் மாட்டினா…அம்புட்டுத்தான்…..சும்மாப் போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்….! பொட்டச்சி சம்பாத்தியத்துல வக்கணையா என்ன வாழ்வு வேண்டிக்கெடக்கு கசமாலத்துக்கு. நான் மட்டும் டீச்சர் ஆனால், அம்புட்டுப் பசங்களுக்கும் எப்பிடி வாழனும்னு சொல்லித் தரோணம்..அம்புட்டுப் பிள்ளைகளையும் நல்லாப் பெரிய பெரிய படிப்பு படிங்கடாண்டு சொல்லிக் கொடுப்பேன்.  வளரும் போதே நல்லதைச் சொல்லிக் கொடுத்துப்புட்டா இந்த மாதிரி புல்லுருவிங்க வளராது. எதை எதையோ நினைத்தபடியே கியூவுக்கு அருகில் வந்தவள்…மனக் கணக்கு போட ஆரம்பித்தாள் .”ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் வீதம் ஒரு வாரத்துக்கு எவ்வளவு?” முந்நூற ஏழாலப் பெருக்கினா எம்புட்டு வரும்….விரல்களை ஒவ்வொன்றாக எண்ணி விட்டவள், இருபத்தி ஒண்ணு …அப்டின்னா இரண்டாயிரத்தி நூறு ரூபாய்….ஹம்மாடியோ..அம்புட்டு ரூபாயா இப்ப நான் சம்பாதிச்சது. கையில் வரப்போகும் பணத்தை எண்ணி வாய் பிளந்தவளாக உள்ளமெல்லாம் தள்ளாட கணக்குப் பிள்ளை டேபிளின் எதிரே நின்றாள் .

    என்ன பேரும்மா…..? நிமிர்ந்து கூடப் பார்க்காமல் கேட்கும் அவரிடம்.. பணிவாக மலர்விழி….புதுசா இந்த வாரம் தான் சேர்ந்தேன் ஐயா…தயக்கத்துடன் சொல்கிறாள்.

    ம்ம்…ம்ம்….இங்கன ஒரு கைநாட்டு வைய்யி..என்று லேட்ஜரைத் திருப்புகிறார்.

    ஐயா …நான் கையெழுத்துப் போடுவேனுங்க..என்றவள் “பேனா…” என்று இழுக்கிறாள்.

    நிமிர்ந்து பார்த்தவர், இந்தா…இங்க போடு என்று பேனாவை அவள் பக்கம் நகர்த்துகிறார்.

    நாலாயிரம் ரூபாய்க்கான வவுச்சர் அது. அதில் கையெழுத்தை போட்டவள்…அவர் தந்த பணத்தை எண்ணிப் பார்த்தபடியே..ஐயா எனக்கொரு டவுட்டு..என்கிறாள்.

    அதெல்லாம் முதலாளிட்ட கேளு..இப்ப எடத்தக் காலி பண்ணு…ம்ம்…நேரமாயிட்டுப் போகுது..அடுத்தது யாரும்மா வா வா..கொடுக்குற துட்ட வாங்கிட்டு காட்டுற இடத்துல கைநாட்டப் போட்டுட்டு போயிட்டே இருக்கணும்…டவுட்டாம்…டவுட்டு……!

    மலர்விழி ஒரு அடி கூட நகராமல் அங்கேயே நின்றிருந்தாள் .

    இந்தாம்மா….நகுரு…கொஞ்சம் குரலில் கறாருடன் சொன்னார் கணக்குப்பிள்ளை.

    எனக்கு நீங்க இரண்டாயிரம் மட்டும் தான் கூலி தந்தீங்கய்யா. கெயெழுத்து மட்டும் நாலாயிரத்துக்கு வாங்கிக் கிட்டீங்க…அது ஏன்..? அப்டீண்டா இன்னும் அந்த ரெண்டாயிரத்தையும் தந்துடுங்க அதானே நியாயம்.

    உனக்கு முன்னாலயே ஏதும் சொல்லலியா. இங்க இப்படித்தான். நீ வேணா உன் வீட்டாண்ட ஆயிரம் தான் இந்த வாரம் சம்பளம் கொடுத்தாங்கன்னு சொல்லிக்க. பிடிச்சா வேலையில இரு..இதுக்கு மேல ஒரு கேள்வி கேட்ட நாளைக்கு வேலை இருக்காது. ஆமா சொல்லிப்புட்டேன். இந்தாம்மா நீ வா..என்று மலருக்குப் பின்னால் நின்றிருதவளைப் பார்த்து அழைக்கிறார் அவர்.

    திருட்டுப் பசங்க…கொள்ளையடிக்கிறாங்க. கால் கடுக்க கை வலிக்க வேலை பார்க்கிறது நாங்க…நோகாம நொங்கெடுக்க இதுங்களா…? காதுல கெண்டைய மாட்டுதுங்க. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நானும் உங்க அத்தனை பேர் காதுலயும் ஜெயிலு மணியை மாட்டித் தொங்க விடலை…என் பேரு மலரு இல்லை. மனம் வீரத்துடன் சபதம் போட  மெளனமாக நகர்ந்தாள் அவள்.

    இதுங்கள எல்லாம் யாருடா பிடிச்சாந்தது…..பத்து குறத்திய வெச்சு செஞ்சு முடிக்க வேணடிய வேலைய இதுகளுக்கு என்னாத்துக்கு கொடுக்கணம்….இப்படி கேள்வி கேட்கவா..?  அந்த மேனஜர் எங்க? இந்தப் பிள்ளைய கணக்கு முடிஞ்சிருச்சின்னு சொல்லி வெளிய அனுப்பச் சொல்லு.நான் சொன்னேன்னு சொல்லு…இப்ப வரிக்கும் என்னியப் பார்த்து ஏதாச்சும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியிருக்குமா ? டவுட்டு கேக்குற மூஞ்சியப் பாரு..! கோபத்தில் கணக்குப் பிள்ளை கத்திக் கொண்டிருந்தார்.

    பணப் பட்டுவாடா முடிந்து அனைவரும் கலைந்த நிலையில், மனேஜர் அருகில் வந்து…”ஏம்மா மலரு…இத்த அந்த ஷீலா உன் கையில சொல்லலியா?  சரி விடு…இங்கன இப்படித் தான்..ஆனால் அந்த பாக்கிங் ஆபீசில் இப்படி கெடையாது..உன்னிய நாளைக்கு அங்கன போட்டுர்றேன். சரியா.நீ பொழக்கத் தெரியாத பிள்ளையா இருக்கியே. இதே உன்னோட கூட்டாளி என்ன சொன்னாத் தெரியுமா? அந்த அமீர் பெட் ஆஞ்சநேயலு ஊறுகாய் கம்பெனில விளம்பரப் படத்துல நடிக்க ஒத்துக்கிச்சி..ஒரு படத்துக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம். சும்மால்ல …அவரு உன்னியத் தான் இதுக்கு கூப்பிட்டாரு..ஷீலாட்ட நான் தான் உன்கிட்ட சொல்லச் சொன்னேன்…

    பட பட வென்று அடித்துக் கொள்ளும் இதயத்தோடு ஷீலா என்ன சொல்லியிருப்பா என்று கேட்கும் ஆவலுடன் அவரது முகத்தைப் பார்க்கிறாள் மலர்.

    அது என்ன சொல்லிச்சி தெரியுமா…? நான் தான் சீனியர்…இந்த விளம்பரத்துல நானே நடிக்கிறேன்…மலர் கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிருச்சி.

    ஷீலாவா அப்படிச் சொன்னாள்…? ஆச்சரியத்தில் விரிந்தது மலரின் விழிகள்.

    பின்ன..நான் என்ன பொய்யா சொல்றேன்…நீ வேணாக் கேட்டுப் பாரு..ஆனா…நல்ல வேளை , உனக்கு வேற ஒரு வேலை வந்திருக்கு..அதாவது, ஒரு டிவி சீரியல்ல நடிக்கிற சான்ஸ்…வேலையே இல்லை..சும்மா ஒரு வீட்டில் இருக்கோணம்..அங்கிட்டு ஒரு இருபது பொண்ணுங்க கூட இருப்பாங்க.அம்புட்டுப் பேருமே நடிக்க உன்னிய மாதிரி வந்தவங்க தான். சாப்பாடு, தங்குற எடம் எல்லாம் அங்கனயே கம்பெனி பார்த்துக்கும். தெனம் வந்து ஷூட்டிங் பண்ணிட்டுப் போவாங்க…ஒரு வாரம் ஐயாயிரம் சுளையா அள்ளித் தந்துடுவாங்க…டிவி இருக்கும், ஏஸி எல்லாம் இருக்கும். உனக்கு இஷ்டம்னா இப்பமே சொல்லிடு..இல்லாட்டிப் போனா இந்த சான்ஸும் போயிறும். ஆசை காட்டினான் அவன்.

    நான் எதுக்கும் ஷீலாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு உங்க கிட்ட பதில் சொல்லிர்றேன்..ஆனா அந்த வீட்டில் இருக்குற இருபது பொண்ணுங்களுக்கும் என்ன வேலை இருக்கும்? என்னத்த படம் பிடிப்பாங்க? மெல்ல எழுந்த சந்தேகத்தை அவளையும் அறியாமல் கேட்டு வைக்கிறாள்.

    அப்டிகேளு….இந்த டிவில வார “டாடி எனக்கொரு டவுட்டு..” ன்னு கொமட்டுல குத்துறாப்பல இருக்குது உன் கேள்வி. எதோ ஒரு டிவி சீரியல் வருதாம்….அதுல ஒரு ஊறுகாய் கம்பெனில வேலை பார்க்கிறா அந்த நடிகை. இப்படி கதை போகுது. அந்த ஊறுகாய் கம்பெனி தான் அந்த வீடு….அங்க ஊறுகாய் பாக்கிங் பண்ணுற பொண்ணுங்க நிறைய பேரு வேலைக்கு இருக்குறாப்பல அதுங்களோட அந்த நடிகையும் பாக்கிங் பண்ணுறாப்பல படம் பிடிப்பாங்க. இந்த ஷூட்டிங் வெறும் ஒரு வாரம் மட்டும் தான்.அதுக்குத் தான் அம்புட்டு துட்டும், சொகுசும்…என்ன இருந்தாலும் சீரியல் படம் இல்லையா..? இப்பச் சொல்லு நீ வாரியா…வரலியா? அவளைக் கேள்வி கேட்டு மடக்குகிறான் அந்த மேனேஜர். ஷீலா மட்டும் உன்னைய கேட்டுகிட்டா என்கிட்டே வாரேன்னு சொல்லிச்சு. பெறவு நீ மட்டும் ஏன் அந்தப் பிள்ளையைக் கேட்கோணம்.

    அப்டீங்களா…..அவள் மனத்துக்குள் அவள் ஷீலாவிடம் தங்கியிருக்கும் அறையில் இருந்து தப்பித்தால் போதும் என்று இருந்தது. மேலும் இந்த மீனில் முள்ளு எடுத்து அலம்பும் வேலையை விட வேறு வேலை கிடைத்தால் நல்லது தானே….என்றும்  யோசித்தவள்,  சரீங்கய்யா…நானும் வரேன்…என்கிறாள் மலர்விழி.

    (தொடரும்)

    Share
  • தொலைத்ததும் .. கிடைத்ததும் ..!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    யம்மா……நான் பாசாயிட்டேன் …..நான் பி.எஸ்.ஸி பாசாயிட்டேன்…..என்று சந்தோஷமாக குதித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையும் தன மகள் மலர்விழியைப் பார்த்ததும் இட்டிலிக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்த மங்களவல்லிக்கு, தான் என்றைக்கோ பார்த்த 16 வயதினிலே படத்தின் கதாநாயகி மயிலு தான் டக்கென்று நினைவுக்கு வந்தாள் .

    “அதுக்கென்ன இப்போ?”

    என்ற அதே குருவம்மாளின் பதில் வாய்வரை வந்தும் அடக்கிக் கொண்டு…

    “ம்ம்…ம்ம்…அது சரி….உள்ளார போயி உப்பு ஜாடிய எடுத்தா….” என்று இயந்திர கதியாக மாவுரலை சுற்றிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்து,

    “ஒனக்கு சந்தோஷப் படவே தெரியாதா?”

    சிடு சிடுத்து விட்டு தனது சுடிதாரின் துப்பட்டாவை ஓங்கி உதறி சரி செய்து மேலுக்குப் போர்த்திக் கொண்டபடியே அடுக்களைக்குள் நுழைகிறாள் மலர்விழி.

    அவளது வனப்பில் அவளுக்கே கர்வம் உண்டு.
    இறைவன் அவளது குடும்பத்தில் ஏழ்மையைக் கொடுத்த அதே அளவுக்கு அவளிடம் அழகையும் அள்ளிக் கொடுத்திருந்தான்.

    “எம்மாவ் …உப்பு ஜாடிய நீ எங்கிட்டு வெச்சிருக்கே…இங்கன ஒரே இருட்டாவுல்ல இருக்குது…..வெச்சவுங்களுக்குத் தானே இருக்குற எடம் தெரியும்…நீயே வந்து எடேன் ….அலிபாபா குகை மாதிரி ஒரு அடுக்களை….இதுல எதுக்குள்ளார என்ன இருக்குமுன்னு எனக்கு சோசியமாத் தெரியும்…”

    ரெண்டு நாளு முன்னாடி ரேசன் கடைக்கிப் போயி சீமத்தண்ணி ஊத்தறாண்டு சொல்லி அம்பது ரூவாவ புளி வெச்சிருந்த ஜாடிக்குள்ளார போட்டு வெச்சிருக்கேன் எடுடீண்டு சொன்னே….அதுக்குள்ளார கைய விட்டா…..அப்பா ஓடியாந்து எடுக்காதே…எடுக்காதேன்னு ஒடியாந்தாரு ….என்னான்னு ஒரு வார்த்தை கேட்டியா அதுக்குள்ளார அம்பது ரூபா குவாட்டர் பாட்டிலா மாறிக் கெடந்துச்சு…..இதெல்லாம் நீ கண்டுகிடவே கண்டுகிடாத…..ஆமா…..நீயா தண்ணியடிக்கிற? என்று எடக்கு மடக்காக பதில் சொல்கிறாள் மலர்.

    அடி கூறுகெட்ட சிறுக்கிடி நீ….ஒண்ணு கேட்டா ஒன்பது சொல்லுவ.. உன்கிட்ட எதுனாக் கேட்டுப்புட்டு எனக்கு உடனே கேட்டது கிடைச்சுருமா? கரண்டு இருந்தா நான் என்னாத்துக்கு இப்படி ஆட்டுக்கல்லாண்ட மல்லுக் கட்டி நிக்கப் போறேன். கிரைண்டர்ல போட்டு ஆட்டிக்கிட மாட்டேன். வந்துட்டா..குவாட்டரையும் ..இருட்டயும் பத்தி பேச…என்று எழுந்திருக்க முடியாமல் ரொம்பக் சங்கடத்தோட கையை தரையில் ஊன்றி மெல்ல எழுந்து….யம்மா… இன்னும் ரெண்டு இட்டிலி போடுன்னு கேட்டு வாங்கித் தின்னத் தெரியும்….இட்டிலிக்கி எதை எப்படி ஊறப் போடுறதுன்னு கூடத் தெரியாது..என்னிக்காச்சும் சமயக்கட்டுப் பக்கம் வந்து நின்னாத் தானே…அப்படி வீட்டுக் குள்ளார ஒரு ரூம்பு இருக்கறதயே நீ கண்டுக்கிட மாட்டே….முனகியபடியே உப்பை எடுக்க சமையல் கட்டுப்பக்கம் போனாள் மங்களவல்லி. கூலி வேலைக்கு போறவரு அலுப்பு சலுப்பு நீங்க ரூபாய எடுத்த எடத்துல வாங்கி வந்தத வெச்சிருக்கும். அவுகளுக்குத் தான் புத்தியில்ல…..கேக்குற உனக்குமா இல்ல…..பெத்தவளப் பாத்து வாய் கூசாம கேக்குறதப் பாரு. தண்ணியடிக்கிறியா…? தண்டால் எடுக்கிறியாண்டு…!

    யம்மா…நான் மேல் படிக்கப் போறேன்….டீச்சர் டிரைனிங் ஒரே வருஷம் தான்….அதுக்கு நான் காலேஜுல சேரணும் …ஒரு முப்பதாயிரம் ரூபாய் வேணும் என் ஃபிரண்டு சரோஜா சேர்ந்துட்டா..சேத்தியார்தோப்புல இருக்குது காலேஜு….இங்க சீர்காழில இருந்துக்கிட்டு வயலு வரப்ப பார்த்துக்கிட்டு அதுவும் நமக்கு சொந்தமில்லாததை, யாருக்கோ கூலிக்கி மாரடிச்சுக்கிட்டு ஒரு வசதியும் இல்லாமா இருக்குறத விட ….பேசாம நாம கூட வேற எங்கியாச்சும் நல்ல டவுனு பக்கமாப் பார்த்துப் போயிறலாமா ?

    நல்லாக் கேட்டியே ஒரு கேள்வி…பொறந்து, வளர்ந்து, வாக்கப்பட்டு, உழைக்கிற பூமிடி இது…இத்த உதறிப்புட்டு எங்கன எங்கள வரச் சொல்லுற ? நீ என்னமோ பெரிய தொரசாணி வீட்டம்மா கணக்கா பேசிபுட்டா ஆயிரிச்சா…..நான் அன்னிக்கி அடிச்சிகிட்டேன்…அடுத்த வூட்டுக்குப் போயி கரண்டி பிடிக்கிற கையி…இதுக்கு எதுக்கு பெரிய படிப்புன்னு….?உங்கப்பாரு கேட்கலை…நீ எங்க கேக்க வெச்சே…..காலேஜு படிப்பு படிக்கிறேன் ன்னு ஒத்தக் காலுல அடம் பிடிச்சி அறுவடைப் பணத்த அம்புட்டயும் அள்ளிக் கொண்டுட்டு போயி அந்த பாளாப் போன கடடுடத்து கிட்ட கொட்டிட்டு வந்து நின்ன..!

    எம்மா…அது படிக்க பீசு ….அன்னிக்கு அம்புட்டு கொடுத்ததாலத் தான இன்னிக்கி நானு ஒரு கிராஜு வேட் ன்னு பெருமையா சொல்லிக்கிட முடியுது. இனிமேட்டு நான் பி.எட் படிச்சிட்டா அம்புட்டுத்தேன்…..ஒரு டீச்சர் ஆகிப்புடுவேன். அதுக்குப் பெறவு நான் ஏன் உன்கிட்ட மேல படிக்கிறேன்னு கெஞ்சிக்கிட்டு நிக்கப் போறேன்.

    அன்னிக்கி என் தம்பிய கட்டியிருந்தீனா இன்னிக்கி கையில புள்ளயோட நீயும் துபாய் போயிருக்கலாமில்ல, கூறு கெட்டவளே..! நல்ல சான்சை நளுவ விட்டுப்போட்டு இப்பக் கெடந்து அலபாயுற. நீ என்னாத்தப் படிச்சா எவன் கேட்குறான்….கலியாணம் பண்ணி புள்ளையப் பெத்தமா போய் சேர்ந்தமான்னு நிக்காம…இவ படிச்சி ஊருக்குச் சொல்லிக் கொடுத்து பயபுள்ளைய சீமைக்கு அனுப்பப் போறியாக்கும்….? திருட்டுப் பயலுவ நடமாடற ஊருடி இது….எங்கிட்டுப் பார்த்தாலும் கொலையும் கொள்ளையுமா நடக்குது. கலியாணம் தாண்டி பாதுகாப்பு. வெளங்கிச்சா?

    எம்மா …எம்புட்டு சொல்றது. உம்ம மூளைக்கு முண்டாசு தான் கட்டோணம்.சொந்தத்துல கல்யாணம் கட்டினா புள்ள வந்து பொறக்காது பிரச்சனை தான் வந்து பொறக்கும் …எம்புட்டு சொன்னாலும் கேட்டுக்கிட மாட்டே.. கூறப் பத்தி நீ என்கிட்டப் பேசுறியா?

    மவ படிக்கிறாளே….நெறையப் படி…நான் தான் ஸ்கூல் போகலை நீனாச்சும் பெரிய டீச்சரா வரணும்டு சொல்ல முடியல உன்னால….துபாயில மாமா என்னா வேலை பாக்குது தெரியாதா? வருஷத்துக்கு ஒரு வாட்டி வந்து உன்கிட்ட ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்தா அவுரு பெரிய சீமைத் துரையா ? கொடுத்த் ரூபாய்க்கு இங்கனயே உக்காந்து ஆட்டுக்காலு சூப்பு வெய்யின்னு சொல்லி குடிச்சே கழிச்சுட்டு போயிருவாரு…நீயே தெனம் சொல்லிகிட்டே தானே இருப்பே. இப்ப நான் படிக்கோணும்..அதுக்கு வழி சொல்லு. உன்னோட வெளங்காத கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல என்னால ஆவாது.

    அடிப் போடி…வழக்குக்குப் பொறந்தவளே….என்னால இனிமேட்டு உன்னிய உக்கார வெச்சி படிக்க வெக்க முடியாது..நீ எங்கிட்டும் போக வேண்டாம்…பேசாம என்னோட சேர்ந்து மாயவரம் மார்கெட்டுல பூ வாங்கி கட்டி வைத்தீஸ்வரன் கோயில்ல விக்கிறதுக்கு உதவி பண்ண முடியுமாண்டு போளப்பப்பாரு போ.

    அதுக்கு நீ வேற ஆளப் பாரு…! சொடக்கென சொல்லிவிட்டு எழுந்து கொல்லப்புறம் சென்று விட்டாள் மலர்விழி.

    அடியாத்தி……இவளுக்கு வாரக் கோவத்தப் பாரேன்…இதையே அவ மாமியா கையில சொல்லியிருந்தா என்னத்துக்காவுது….ஊசி நூலு வெச்சி தெய்ச்சிருவாக. என்னியுமில்ல கிழி கிழின்னு கிழிச்சிருவாக. வாயில கோர்ட்டை வச்சிக்கிட்டு நிக்கிறா. என் சரக்க இப்படி வெச்சிக்கிட்டு நான் எவ கிட்ட என் மவளுக்கு மாப்பிள்ளை தேட. தெரிஞ்சவன் ஒரு பய கட்ட வரமாட்டான். தெரியாதவன் சிக்க நான் தெருத் தெருவாவுல்ல நடந்தாகணும். ஆட்டுக் கல்லோடு சேர்ந்து இவளது எண்ணமும் அரைந்து கொண்டிருந்தது.

    முதல்ல சென்னை பட்டணத்துக்குப் போகணும்ன்னு தான் சொல்லுவா அப்பால சினிமால எவனோ நடிக்க கூப்புட்டான்னு சொல்லி அப்படியே …ஓடிப்போயிருவே. இம்புட்டு வயசானவ நானே இன்னும் மெட்ராசுக்குப் போனதில்ல தெரியுமா?
    உனக்கு கேக்குது…அதுக்குத்தான் படிக்கவே வைக்கக் கூடாது ..

    அரசு சலுகையில் ரொம்ப சுலபமா படிச்சிப்புடலாமுன்னு இருந்தேன்….இந்தம்மா இப்படி முரண்டு பிடிக்கிறாங்க….அப்பா வரட்டும்…..கெஞ்சி அளுதுப்புட வேண்டியது தான். அப்பவாச்சும் கேப்பாக. அம்மா முரண்டு தெரிஞ்சது தான.

    கரண்ட்டு இல்லாத சீர்காழி மெல்ல மெல்ல இருண்டு இருண்டு ஊரே இருக்குமிடம் தெரியாமல் இருளில் அமிழ்ந்து போனது. சென்னையில பூரா வெளக்கும் எரிஞ்சு சும்மா ஜிகு ஜிகுண்டு இருக்குமாம்ல.
    ஷீலா நேத்துக் கூட போன்ல சொல்லிச்சு. எப்படியாச்சும் சென்னைக்கு போயி ஒரு நாலு காசு சம்பாதிச்சிட்டு வந்திறணம். ஒரு மாசத்துல முப்பதாயிரம் சம்பாதிச்சா……..போதும் போதும்…..எப்படியாச்சும் டீச்சர் ஆயிறலாம். கண்ணுக்குள் நினைவுகள் பள்ளிக்கூடம் எழுப்ப அப்படியே மயக்கத்தில் உறங்கிப் போனாள் மலர்விழி.

    0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

    இன்னாம்மா ஷீலா…நீ இன்னாமோ நாலஞ்சு பொண்ணுங்கள வேலைக்கி இட்டாரேன்னு சொன்னியே…இன்னாச்சு? அதுங்க எப்போ வருதுங்க ? இப்படி கம்முன்னு இருந்தா எப்பிடி? அதட்டினார் மானேஜர் ஆறுமுகம்.

    ஊருல சொல்லிருக்கேன் சார்…எப்பிடியும் வந்துருவா..ஒருத்தி கண்டிப்பா வரேன்னு சொல்லிருக்கா. சம்பளம் சொன்னீங்கன்னா..என்று தயக்கத்துடன் இழுத்தாள் ஷீலா.

    அது இன்னா வந்து என்னாட்டமா மேனசர் உத்தியோகமா பாக்கப் போவுது? மீனுல முள்ளு எடுக்குற வேல தான…எல்லாம் தருவோம்…இப்போ நீ எம்புட்டு துட்டு வாங்குற?

    ஒரு நாளிக்கி ஓ.டி எல்லாம் சேர்த்து முந்நூறு ரூபா வாங்கறேன் சார். இன்னும் கொஞ்சம் கூடப் போட்டுக் கொடுங்களேன் சார்..என்று சந்தடி சாக்கில் தன்னுடைய பெட்டிஷனை தயங்கி தயங்கி சொல்கிறாள் .

    ம்ம்ம்..அதும் வந்து ஓ.டி பாக்கச் சொல்லு முந்நூறு ரூபாய் கெடைக்கும்..சரியா….இன்னா படிச்ச புள்ளையா? நீ ஒரு பத்து உருப்படி பிடிச்சிக் கொடு. கமிஷன் எதாச்சும் போட்டு வாங்கிக்க.

    சரிங்க சார்.ஆமா பி.எஸ்.ஸி முடிச்சிருக்கு…டீச்சர் ஆக ஆசை…பி.எட் படிக்க பீஸு கட்டத் தான் இங்கன வேலைக்கு வாரேன்னு சொல்லிச்சி.

    அப்பால இன்னா ….கூட்டிட்டு வா…இன்னா படிச்சா இன்னா இங்கன எடுக்குறது முள்ளு தான..படிப்புக்கெல்லாம் கூட துட்டு கெடைக்காது சரியா?

    இன்னும் ரெண்டு நாளுல வந்திருவா சார். வேலை கண்டிப்பா தரணும் …அவ சீர்காழி லேர்ந்து வரணும்.ரொம்பவும் கஷ்டப் படுற குடும்பம். கூலிக்கு விவசாயம் பண்ணுற குடும்பம்.

    சரி தாயி….நீ அழைச்சுட்டு வா….பார்ப்பம்.

    ஷீலா நிம்மதியோடு எப்படியாச்சும் தன்னுடைய கல்லூரித் தோழி மலர்விழிக்கும் இங்க ஒரு வேலை வாங்கிக் கொடுத்து விடலாம் என்ற நிம்மதியில் ஏறாலைக் கழுவிக் கொண்டிருந்தாள்.

    மாலையில் கைபேசியில் மலர்விழியை அழைத்து விஷயம் சொல்லவும்….”டீ….மலரு…..வெரசாக் கெளம்பி பொழுதோட சென்னை வந்துருடி,,,,கிண்டில எறங்கிடு….நான் வந்து கூட்டிட்டு வந்துர்றேன்….நான் எதிர்பார்த்து காத்திட்டு இருப்பேன்..எங்க மேனேஜர் சார் கிட்ட சொல்லிட்டேன். வேலை போட்டுத் தாரேன்னு உத்தரவாதமா சொல்லிட்டாரு. நீ பத்திரமா கவலைப் படாமே வந்து சேரு. இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கைபேசியை மூடியவள் தனது ரூமுக்கு விரைகிறாள்.

    ஹாஸ்டல் ரூம் வாசலில் பாண்டியன் அவளுக்காகவே காத்துக் கொண்டு நிற்பதைக் கண்டவள் மனசுக்குள் இன்னிக்கும் வந்து நின்னுடானே……வந்த என்னத்தை முகத்தில் காட்டாமல்….வாங்க வாங்க…..எப்ப வந்தீங்க…என்று கேட்டுக் கொண்டே எங்கிட்டாச்சும் வெளிய போயி சாப்பிட்டு வரலாம் இல்லியா..? இங்க ஹாஸ்டல் ரூமுக்கு நீங்க இன்னிக்கு வர வேண்டாம்…வார்டன் அம்மா திட்டுறாங்க…என்கிறாள்.

    சரி…ஷீலா…இன்னைக்கு இப்ப போன் .போட்டேன்..எங்கேஜா இருந்துச்சு…..யாருகிட்ட இம்புட்டு நேரம் பேசிகிட்டு இருந்தே? வேலை முடிஞ்சதும் நான் ஒருத்தன் காத்துக்கிட்டு இருப்பேன்னு நெனப்பே வர்லியாக்கும் இந்த சுந்தரிக்கி…சொல்லிக் கொண்டே அவளது கன்னத்தைக் கிள்ளியபடியே….சரி இன்னிக்கு எம்புட்டு துட்டு கெடச்சிச்சி …ஒரு அமௌண்ட வெட்டு…நான் பாட்டுக்கு போயிட்டே இருக்கேன்….சரக்கடிக்கிற எடத்துக்கு நீ இன்னாத்துக்கு?
    நீ ரூம்புக்கு போயி தின்னுட்டு தூங்கு…நாளிக்கு “சிங்கம்” படத்துக்கு அளச்சிட்டு போறேன்….என்னான்கறே..சரி தானே புள்ள?

    அடச்சீ……உன்னையல்லாம் எனக்குக் காதலன்னு சொல்ல வெச்சிட்டியே…எங்க ஊருல என்னோட வீட்டுக்கு தெரிஞ்சா என்னிய கண்டந்துண்டமா வெட்டி கூரு போட்ருவாக. மருவாதியா இனிமேட்டு என்கிட்டே காசு கேக்குற வேலைய விட்று. நான் இன்னா உனக்குக் கொடுக்கவா ராவில்ல பகலிலன்னு கையி வலி புடுங்க மீனு முள்ளு எடுத்து பாக்கிங் பண்ணிட்டு வாரேன். கஷ்டப் பட்டு உழைக்கிற காசை உன் போதைக்கு செலவு செய்ய என்னால ஆவாது. அதுக்கு நீ வேற எவளையாவது பாரு. நம்ம கையில உன்னோட நாட்டாமை இனிமேட்டு நடக்காது. எனக்கு சிங்கமும் வேண்டாம் எந்த அசிங்கமும் வேண்டாம்…நீ ஆளவிடு சாமி…இரு கையையும் சேர்த்து கூப்பி உனக்கு கோடி புண்ணியம்…போயிரு…என்கிறாள் ஷீலா.

    அடியே….நீ இப்படிச் சொன்னா…..போயிருவோமா? அன்னிக்கு நீ தான் என் புருஷன்…..கட்டினா உன்னத் தான் கட்டுவேன்னு பேசின….அதுக்குள்ளாற நான் கசந்து போயிட்டேனா? வேற எவனாச்சும் லைனு போட்டானா? பொறம்போக்கு….இந்தாரு ஷீலா….
    மனுசனுக்கு ஒரே பேச்சு….நான் பாட்டுக்கு போயிட்டு இருந்தேன்…நீ தானடி சிரிச்சே…..நீ தான உங்க பேரு என்னன்னு கேட்டுகிட்டு வந்து நின்ன..மறந்து போச்சா? நீங்க இப்படி சும்மா இருந்தவன கிண்டி கெளப்பி விடுவீங்க….நாங்க உங்க போதைக்கு ஊறுகாயா இருக்கணுமாக்கும்? உங்களுக்குப் பிடிச்சா நாங்க காதலன்….பிடிகாட்டிப் போனா அப்பால களட்டி விட ம்ம்ம்…..பிளானு…சம்பாதிக்கிற ஏத்தம்….பல்லை நற நற வென்று கடித்தபடி மெல்லிய குரலில் .சொல்லிக்கொண்டே தனது பாண்ட் பைக்குள் கையை விட்டு “இந்தாரு…ஷீலா….இதுக்குத் தான் நானும் கையோட மஞ்சக் கயிறு வச்சிக்கிட்டு அலையிறேன்…ஹாஸ்டல் வாசல்னு கூட பார்க்க மாட்டேன்……வார்டனை கூப்பிட்டு முன்னால வெச்சி உன் களுத்துல இத்தக் கட்டி இறுக்கிருவேன்…..என்று ஆவேசத்தோடு நெருங்குகிறான் அவன்.

    இந்தா…நிறுத்து….நான் என்ன உங்கள கலியாணம் கட்ட மாட்டேன்னா சொன்னேன். குடிக்க காசு தர மாட்டேன்னு தான் சொன்னேன்.
    அதுக்கு இம்புட்டு சிலம்புறே…இந்தா….பிடி நூறு ரூவா….எங்கியோ டாஸ்மாக்குல போயி பிறாண்டு…….இப்ப நீ ஆள விடு….அவன் கையில் ரூபாயைத் திணித்து விட்டு…இப்படிப் போயி மாட்டிக்கிட்டேன்….பார்க்க ஜீன்சும் டீஷர்ட்டும் போட்டுக்கிட்டு தனுஷ் மாதிரியே இருந்தான்…..நான் போற வாற எடத்துக்கு கூடவே பின்னாடி வந்துக்கிட்டு இருந்தான்…..நல்லவராத் தெரிஞ்சான்…….நாலு மாசத்துல ரௌடித் தனத்த காமிக்கிறான்…புலம்பியபடியே தன அறைக்குள் நுழைந்து கதவைச் சார்த்திவிட்டு ….பாயில் படுத்தவள் தலையணையில் முகம் புதைத்து குலுங்கிக் கொண்டிருந்தாள். மனத்துக்குள் ” இவனிடமிருந்து தப்பிப்பது எப்படி ?” என்ற கேள்வி எதிரொலித்துக் கொண்டிருந்தது.

    மயிலே….மயிலே…இறகு போடுன்னு சொன்னா இவளுகளுக்கு ஏறாது…..எல்லாம் நம்ம ரூட்டுல பேசினா அப்டியே இளகிறுவா…இவளைத் தெரியாதா? என்று சொல்லிக் கொண்டே நானா என்னிய காதலின்னு சொன்னேன்….நீயா வந்து மாட்டிக்கிட்டே.
    சொல்லிக் கொண்டே தனது சைக்கிளில் ஏறி…..”இரவினில் ஆட்டம்…..ம்ம்ம்ம்ம்……. பகலினில் தூக்கம்….ம்ம்ம்ம்ம்…….இது தான் எங்கள் .உலகம்..எங்கள் உலகம்…..” என்று பாடிக் கொண்டே டாஸ்மாக் கடையை நோக்கி சைக்கிளை மிதிக்கிறான் பாண்டியன்.

    0 0 0 0 0 0 0 0 0 0 0 0

    அப்பாவின் காலைப் பிடித்ததில் அவர் மனம் இறங்கியதும் அவர் கன்னத்தில் முத்தத்தை பதித்து விட்டு அப்பா….ன்னா அப்பா தான்…..என்று குதித்து ஓடி விரைவில் ஒரு தகரப் பெட்டிக்குள் உடைகளை திணித்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள் மலர்விழி.
    புலம்பிக் கொண்டிருந்த அம்மாவிடம்…..எம்மா…..போயிட்டு கை நிறைய துட்டோட வந்து நிப்பேன் பாரு…அப்பச் சொல்லுவே….என் ராசாத்தி….நீ டீச்சரா வாரா மாதிரி கனவு கண்டேன்ன்னு…..கொஞ்சம் சிரிச்சாப்புல தான் என்னிய அனுப்பி வையேன்…என்று மங்களவள்ளியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு மலர்விழி …சிணுங்குகிறாள்.

    சொன்னாக் கேக்காத மவளை நான் எப்படி போயிட்டு வாடின்னு சொல்லுவேன். உனக்கு உங்கப்பாரு கொடுக்குற செல்லம். போயிட்டு வா…நீ நம்புற உலகம் உனக்கு பாடம் எடுக்கும். அப்பறமேட்டு தெரிஞ்சிட்டுப் போவுது.

    சீர்காழி பஸ் நிலையம்.

    “சிதம்பரம்…..கடலூர்…..பாண்டி……திண்டிவனம்…..சென்னை…..ஏறு…..ஏறு….ஏறு….”

    மலர்விழியின் காதுகளில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது போலிருந்தது அந்தக் குரல்.

    அப்பா நான் வரேன்….என்று கையசைத்து விட்டு…பஸ்ஸில் ஏறி ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்து கொள்கிறாள்.

    “சென்னை பட்டணம்…
    எல்லாம் கட்டணம்…
    கையை நீட்டினா……காசு மழை கொட்டணும்…
    குடிக்கிற தண்ணி …..காசு….
    கொசுவை விரட்ட …..காசு…”

    பஸ்ஸில் பாட்டு ஒலிக்க ஆரம்பித்து பஸ் மெல்ல ஹாரன் அடித்த படியே சீர்காழி பஸ் நிலயத்தைக் கடந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

    சீட்டு….சீட்டு…..என்றபடி கண்டக்டர் இவள் அருகில் வந்து நிற்கவும்.

    “ஒரு சென்னை” என்கிறாள் மலர்விழி ஏக உற்சாகத்தோடு.

    பஸ்ஸில் பாட்டு ஒலிக்க ஆரம்பித்து பஸ் மெல்ல ஹாரன் அடித்த படியே சீர்காழி பஸ் நிலயத்தைக் கடந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

    சீட்டு….சீட்டு…..என்றபடி கண்டக்டர் இவள் அருகில் வந்து நிற்கவும்.

    “ஒரு சென்னை” என்கிறாள் மலர்விழி ஏக உற்சாகத்தோடு

    எங்கிட்டு எறங்கோணம்….கோயம்பேடு தானா?

    …..என்னது……கோயம்பத்தூர் இல்லீங்க….கிண்டி……கிண்டி போகுமில்ல..? குழப்பத்துடன் கேட்கிறாள் மலர்விழி….கண்களை மலர்த்தி கொண்டு .

    அட….ஊரு பேரு தெரியாத புள்ளைங்க எல்லாம் வம்பை வெலக்கி வாங்கபஸ் ஏறி சென்னைக்கு டிக்கெட் கேக்குதுங்க….! முணு முணு த்துக் கொண்டே இருநூறு ரூபாய் எடு…. டிக்கெட்டை கிழித்து கையில் கொடுத்து விட்டு…. மலர்விழியை ஓரவிழியால் ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்கிறான்.

    இதை எதையும் கண்டு கொள்ளாமல் மலர்விழி பஸ்ஸில் பாடிக்கொண்டிருந்த பாடலைக் கேட்டபடி அதில் ஐக்கியமாகி ரசித்தபடியே கண்களை மூடிக் கொண்டவள் சிறிது நேரத்தில் அப்படியே ஜன்னல் கம்பியோடு தன் முகத்தை சாய்த்துக் கொண்டு வந்த காற்றில் அப்படியே உறங்கிப் போகிறாள்.

    0 0 0 0 0 0 0 0

    இந்தா.பாப்பா……கிண்டி…கிண்டி…..வந்திரிச்சி…….எந்திரி….எந்திரி……நீள விசில் அடித்து பஸ் ஸ்டாண்டில் உறுமிக் கொண்டு நின்றது.

    திடுக்கிட்டு விழித்த மலர்விழி அவசர அவசரமாக அவளது தூக்கிக் கொண்டு இங்கவும்……போலாம்…ரைட்….என்ற குரலுக்கு அடங்கி பஸ் கிளம்பியது.

    சென்னையில் இரவெல்லாம் மழை கொட்டித் தீர்த்ததன் அடையாளமாக ரோடெல்லாம் ஈரம்….சகதி. மெல்ல மெல்ல காலை வைத்து நடைமேடையில் ஏறி நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்வையை ஓடவிட்டாள், எங்காவது தோழி ஷீலாவின் முகம் தெரிகிறதா….?
    என்று.

    ரோட்டின் அடுத்த பகுதியிலிருந்து கையை ஆட்டியபடியே…..வந்த ஷீலா …”ஏய்….மலரு…..நான் இங்கிட்டு இருக்கேன்…. நீ அங்ஙனயே நில்லு நா வாரேன்…..என்றவள் நீண்ட நாட்கள் கழித்து மலரைக் கண்ட மகிழ்வில் வேகமாக ஓடி வருகிறாள்.

    அடியே…..நடு ரோட்டுல இப்படி ஓடி வராதடி…எவனாவது இடிச்சி தள்ளிட்டு போயிருவான்…பதற்றத்தில் மலர் அங்கிருந்தபடியே கத்துகிறாள்.

    அதற்குள் அருகில் வந்துவிட்ட ஷீலா….மலர்விழியை அப்படியே கட்டிக் ..கொண்டு.நல்ல வேள புள்ள…சொன்னபடிக்கி ..நீனாச்சும் வந்த…..நம்ம லதா, வாணி, கீதா, மாரியம்மா, அந்த கோண மூக்கி கோவிந்தம்மா அது கூட வரல தெரியுமா? என்று ஆதங்கத்தோடு படபடத்தாள்.

    சரி விடுடீ …என் வீட்டுலயும் உனக்குத் தான் தெரியுமே….என் அம்மா விடவே இல்லை….எப்படியோ எங்கப்பா காலைப் பிடிச்சி காக்கை பிடிச்சேன் ஒருவழியா ஒத்துக்க வெச்சேன், அவுக மனசு மாறக்குள்ள பெட்டியை கட்டிப்புட்டேன்…என்று தனது சாமர்த்தியத்தை சந்தோஷத்துடன் ஷீலாவிடம் சொல்லிக் கொண்டே நடந்தாள் மலர்.

    திடீரென்று திரும்பிப் பார்த்த ஷீலா…உடனே சரிடி..நாம சீக்கிரமா வேலைக்குப் போவணும் …கொஞ்சம் வெரசா நடக்கிறியா…இந்தா அந்தப் பொட்டிய என் கையில கொடு என்று சொல்லி வலுக்கட்டாயமாக மலரின் கைகளிலிருந்து பெட்டியை இழுத்தவளின் அவசரத்தைக் கண்ட மலர்….இந்தாடி…..இவனுங்களுக்கெல்லாம் நீ ஏன் இம்புட்டு பயப்படுறே…..நானும் கவனிச்சேன்…கிறுக்கன்….அப்பமேட்டு நம்ப ரெண்டு பேத்தையுமே நோட் பண்ணிக்கிட்டு நிக்கான். கொஞ்சம் பொறு நான் வேணா போயி ரெண்டு வார்த்தை கேட்டுபுட்டு வரவா? என்று கேட்ட மலரின் கைகளை இருக்கப் பற்றிய ஷீலா, வேற வம்பே வேண்டாம்…..நீ ஒண்ணு …அது என் ஆளு தான்…பேரு பாண்டியன். நான் எங்கிட்டு போனாலும் அதுக்கு மூக்குல வேர்க்கும் போல…வந்து அட்டெண்டன்ஸ் போட்டுடும். நீ வார விசயத்தை சொல்ல வேணாமுன்னு ரகசியமா வெச்சிருந்தேன்…எப்படியோ மோப்பம் புடிச்சி வந்து நின்னுடிச்சி…நீ கண்டுகிடாதே. என் பக்கத்திலயே நட….பல்லைக் கடித்தபடியே மெல்லிய குரலில் சொல்லி முடித்த ஷீலாவை அதிசயமாகப் பார்க்கிறாள் மலர்.

    இன்னாடி சொல்லுறே ஷீலா….உன் ஆளா…..நீ லவ்வு பண்றியா? பட்டணத்துக்கு வந்ததும் உடனே இதுவும் வந்துருமா? ஆனா எனக்கு இதுக்கெல்லாம் தகிரியம் இல்ல…அதுக்கு உண்டான மூஞ்சியும் இல்லை….என்று அலுத்துக் கொள்ள…

    யாரு சொன்னா? என் மூஞ்சிக்கே ஒருத்தன் கிடைக்கும் போது ….உன்ன மாதிரி அழகிக்கு….அடியே மலரு…நீ ரொம்ப அழகு தெரியுமா?
    ஷீலா மலரைப் பார்த்து சொல்லிவிட்டு ஒரு நிமிடம் அப்படியே நிற்கிறாள். பிறகு ஆமாம் நீ கொள்ளை அழகு…அதான் உன் அம்மா உன்னைப் பொத்தி பொத்தி வெயக்குது ….என்று முடிக்கிறாள்.

    மலர்விழிக்கு எங்கிருந்தோ ஒரு கர்வம் வந்து அவள் தலையில் ஒரு மலர்கிரீடம் வைத்து விட்டுப் போனது. மனத்தில் எழுந்த சந்தோஷ உணர்வுகளுக்கு வார்த்தைகளைத் தேடித் தவித்தவள்…….ஒன்றும் புரிபடாத நிலையில், “அழகெல்லாம் முருகனே…அருளெல்லாம் முருகனே….தெளிவெல்லாம் முருகனே…தெய்வமும் முருகனே…தெய்வமும் முருகனே…”என்று பாடியபடியே இன்னும் எத்தனை தூரம் போவணும் நீ குடி இருக்குற வீட்டுக்கு? என்று கேள்வியும் கேட்கிறாள்.

    ம்ம்ம்…வீடில்லை…ஹாஸ்டல் ரூம்பு…ஒரு மாசம் தங்கறதுக்கு மூவாயிரம் ரூபாய். கட்டிலு மெத்தை எதுவும் கிடையாது..வெறும் பாயும் தலையணையும் தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..இந்த சென்னையில இங்கன தான் இம்புட்டு சீப்பா ரூம்பு கிடைச்சுச்சு. வேறேங்கேனா போனா நாம சம்பாதிக்கிற அம்புட்டையும் அவுங்க கிட்ட தந்துட்டு மானத்தப் பாத்துட்டு சிரிச்சிகிட்டு நிக்கோணம். இதோ இந்த கட்டடம் தான் ஹாஸ்டல்….பாத்தியா பேர …”சாந்திக் குடில்”. உனக்காச்சும் இங்க எங்கிட்டாவது சாந்தி கெடைக்குதா பார்க்குறேன். என்று ஷீலா சொல்லிக் கொண்டே உள்ளே நுழைகிறாள்….மெல்ல வா அந்த கதவுல ஒரு ஆணி நீட்டிக்கிட்டு கெடக்கு…உன் கையை இல்லாத போனா உன் துப்பட்டாவை கிழிச்சி தொலைக்கும். பார்த்து வா..என்று கொண்டே வராண்டாவில் காலடி எடுத்து வைக்கவும்.

    டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……….கிழிஞ்சிடுச்சிடீ…!மலர் அழாத குறையாக அலறவும்.

    நான் தான் பார்த்து வான்னு சொல்லிட்டே இருக்கேன்ல….போனாப் போவட்டும்..வேற வாங்கிகிறலாம். டி .நகர் போவோம்ல அங்கன வாங்கிறலாம் .

    போடி இவளே..நான் இங்க வந்து துப்பட்டாவைக் கிழிச்சுப்புட்டு வேற வாங்கவா வந்தேன்….போனாப் போவட்டுமாம்…ஆளப் பாரு…உன்னுது கிழிஞ்சிருந்தா வலிச்சிருக்கும்…என்று சொல்லிக் கொண்டே ஷீலாவைத் தொடர்ந்து நடக்கிறாள் மலர்விழி.

    ஏண்டி….உனக்கு இந்தப் பொறாமை…..எல்லாம் எனக்கும் நாலஞ்சி வாட்டி கிழிஞ்சி போச்சு. அதான் உனக்குச் சொன்னேன். ம்ம்…இதான் ரூம்பு…என்று தன் கர்சீப்பில் முடிச்சுப் போட்டு வைத்திருந்த பித்தளைச் சாவியை எடுத்து திறக்கிறாள்.

    மூன்று நான்கு தடவை மாற்றி மாற்றி போட்டபின் பூட்டு க்ளிக் திறந்து அதே வேகத்தில் அந்த மரக்கதவும் படால் என்று திறந்து கொண்டு இவர்களுக்கு வழி விட்டது.

    உள்ளே நுழையும் போதே ஒரு முடை நாற்றம்…..வந்து மலர் முகத்தை சுழித்துக் கொண்டாள் .

    ஏண்டி……இவளே…..! இதுவா…..இங்கனையா….நானும் தங்கணும்….! நம்ப வீட்டு மாட்டு கொட்டாய் கூட இத்த விட சொகுசா இருக்குமே….கருமம்…கருமம் ..என்னமோ நாறுது…என்று சொன்னதும் ஷீலாவின் முகம் சுண்டிப் போனது.

    நான் வரும்போதே நெனச்சேன்…..இம்புட்டு அசிங்கமா குப்பையும் கூளமுமா சின்னச் சந்துல கூட்டிட்டு போறாளே…ரூம்பு எப்பிடி இருக்குமோன்னு ..நான் நெனச்சது ரைட்டாத் தான் இருக்கு.

    இதுக்கும் மேலே இந்த சென்னையில உனக்கும் எனக்கும் தங்குறதுக்கு எடம் கெடைக்காது…நாம என்ன அம்பானி பரம்பரையா….?
    இதுக்கே நான் எப்பிடி அவஸ்தை படுறேன் தெரியுமா? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…காலீல வேலைக்குப் போனா ராத்திரிக்கித் தான் இங்க வருவோம்…சில நாள் ஓ .டி பார்த்தால் வரவே மாட்டோம்….புரிஞ்சிச்சா.

    சரி..அப்ப நான் எங்கன எப்புடி .குளிக்கிறது?

    ஐயோ….சர்தான் போடி நீ சீமைத்துரை வீட்டு துரைசாணி..இனிமேட்டு எத்தப் பத்தியாச்சும் கேட்டே…கொண்டேபுடுவேன்…….! என்று கண்களை உருட்டிக் காண்பிக்கும் ஷீலாவைப் பார்த்து மலர் சிரிக்கிறாள்.

    அடுத்த ஒரு மணி நேரத்தில்…..இருவரும் எப்படியோ கஷ்டப்பட்டு தங்களை அலங்காரப் பதுமைகளாக அலங்கரித்துக் கொண்டு “நாங்க வேலைக்கு கிளம்பியாச்சு ” என்று பொதுவாக வார்டன் அம்மாவிடம் சொல்லிவிட்டு….சரட் ….சரட் ….என்று செருப்பு சத்தம் கேட்க ஒருவர் கையை ஒருவர் பற்றியபடியே கம்பெனியை நோக்கி நடக்கிறார்கள்.வெற்று ஹாண்ட்பாக் ஒன்று அவர்களின் தோளில் காற்றில் ஊஞ்சலாடிக் கொண்டே வந்தது.

    தான் ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்யப் போவதாக கற்பனை கண்டபடியே நடக்கிறாள் மலர்.

    கூவம், குப்பை,கூளம், சாராயக் கடை, சகதி , முட்டுச் சந்து…..மூத்திர சந்து எல்லாத்தையும் கடந்து நாற்றம் வரவேற்க ஒரு பழைய கட்டடத்துக்குள் அழைத்து செல்லும் பார்த்து ” இது மட்டும் என்ன ஓவியமா…? இதுக்கு அந்த ரூம்பு தேவலை…” என்று வாய் விட்டு சொன்னவள், ” அம்மா….நான் தப்பு பண்ணிட்டேன்……நீ எம்புட்டு சொன்னே….சென்னையில ஒரு நல்ல எடம் கூட இல்லம்மா..இந்த ஊருல எப்படி ரஜினி, கமல்,விஜய்,அஜித்,சூர்யா…..ஹாங்…..நயன்தாரா…..இவுங்க எல்லாம் இருக்காங்க…அத்துக்கிட்டு ஓட வேணாமா? என்று மனத்துக்குள் கேட்டுக் கொள்கிறாள்.

    கனத்த கனைப்பு சத்தம் கேட்ட இடத்தைத் திரும்பிப் பார்க்கும் போது அங்கு ஷீலா அவரிடம் “இவ தான் சார்….மலர்விழி” என்று கையைக் காட்டி கையோடு …நம்ப மானேஜர் சார் இவர் தான்…அவருக்கு குட் மார்னிங் சொல்லு..என்கிறாள்.

    மலருக்கு……தான் திடீரென்று தனது வீட்டின் முன்பு வாரா வாரம் வந்து காசுக்காக வித்தை காட்டும் குரங்காட்டியின் குரங்கு தான் நினைவுக்கு வந்தது. தான் இப்படி வந்த அன்றே குரங்காகிப் போனேனா…என்று சிறிது கவலையோடு குனிந்து ஒரு முறை தன்னையே பார்த்துக் கொண்டாள்.

    பிறகு தயங்கியபடியே “குட் மார்னிங்” என்று சொல்லுகையில் முதல் முதலாக ஒரு ஆங்கில வார்த்தையை வெளி மனிதரிடம் பேசும் சந்தர்ப்பம் கிட்டியதற்காக மகிழ்ந்தாள் மலர்.

    அவளை வைத்த கண் வாங்காமல் விழுங்கும் பார்வையில் கணக்குப் பண்ணிப் பார்த்த மனேஜர் “உன் பேரு என்னம்மா?” என்று குழையும் குரலில் கேட்டதும்.

    மலர்விழி…!

    ஆஹா…..அருமையான பேரு தான் போ….மலரு….என்று ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டே…எம்மா …ஷீலா…இவளையும் உன் கூடவே வேலைக்கு வெச்சுக்கோ….வேலை சொல்லிக் கொடு..முதல்ல ரிஜிஸ்டர்….என்று கறாராக சொல்லிவிட்டு….மலர்விழியின் கன்னத்தைத் தடவி விட்டுப் போகிறான்.

    விருட்டென்று முகத்தை பின்னுக்கு இழுத்தவள்…..என்னாடி இவன்……என்று வாய் வரை வந்த வார்த்தையை அப்படியே முழுங்கி விட்டு….எங்க…என்ன வேலை…சொல்லுடி…என்று ரெஜிஸ்டரில் கையெழுத்தைப் போடுகிறாள்.

    மனசு……வேலை கிடைச்சிருச்சி என்ற சந்தோஷத்தில் நிம்மதி அடைந்தாலும்…….”இந்த முதலையோட வாய்,கண்,கை…..எல்லாத்தையும் கட்டிப் போடணும்….” என்று முடிச்சுப் போட்டது.

    மீண்டும் அந்த மானேஜர் இவளை நோக்கி அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே வந்து கொண்டிருந்தான்.

    நீண்ட நாட்கள் பழகியவன் போல அருகில் வந்தவன் அவளைத் தொட்டபடியே, ….மலரு. உனக்கு இங்க வேலை பார்க்க பிடிக்கலைண்டா சொல்லு…உன்னிய அசோக் பில்லர் கிட்ட பாக்கிங் ஆபீசு ஒண்ணு இருக்குது நான் அங்கனகுள்ள தான் இருப்பேன்..ஷீலாவையும் உன்னயும் அங்கனையே மாத்தி உடறேன்…சரியா? என்று சொல்லிவிட்டு கண்ணடித்துச் சிரிக்கிறான்.

    உடலெங்கும் திராவகத் துளி பட்டது போலத் தவித்தவளாக மலர்விஷி, ஷீலா வந்தா நானும் அங்க வந்துருவேன்..என்று நெளிந்து தன்னை அவனிடமிருந்து விலக்கி விலகி நின்று கொண்டாள்.

    இவனும் இவன் மூஞ்சியும்…இளிப்பைப் பாரு…..உனக்கெல்லாம் ஆண்டவன் கண்ணைக் கொடுத்திருக்கான் பாரு….அந்த ஆண்டவனுக்கு அறிவே இல்லை..என்று மனத்துக்குள் நினைத்தபடியே கூடையிலிருந்த இறால் மீனை எடுத்துத் தேய்த்து கழுவி முள்ளை எடுக்கிறாள்.

    பாவம் ஷீலா…இதே வேலையை எத்தனை மாசம் பண்ணிட்டு இருக்கா.அவ கலியாணத்துக்கு நாலு காசு சேத்துக்கிட வந்தவ,
    இங்கன வந்து மாப்பிள்ளையும் புடிச்சிட்டா …கெட்டிக்காரி. பாண்டியன் அப்பிடியே சினிமாக் காரன் தனுசு மாதிரியே இருக்காரு.
    அவ போயி என்னிய அழகுன்னு சொல்லிக்கிட்டு கெடக்கிறா . வெள்ளந்தியான மனசு அவளுக்கு.கைகள் காரியத்தில் கண்ணாக இருந்தாலும் எண்ணங்கள் மனசோடு பேசிக் கொண்டு தான் இருந்தது.

    தலையைக் குனிந்தபடி வேலையில் கவனமாக இருந்தாலும் அவளது கண்கள் அந்த அறையை அவ்வபோது துருவித் துருவிப் பார்த்து கொண்டே இருந்தது. அப்போது ஷீலா தனது கைபேசியில் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.

    இவள் சைகையில் யாருன்னு கேட்டதற்கு ஷீலா லேசான வெட்கத்துடன் சைகையால் மீசை போல செய்து காட்டி…அப்பறமா சொல்றேன்…என்று கைகளால் நீ வேலையைப் பாரு..மானஜர் சார் வந்தால் திட்டுவாரு என்று சொன்னாள் .

    பயம் என்றால் என்ன என்றே அறிந்திராத மலர்விழி “மானேஜர் சார் திட்டுவாரு போல….அந்தாளு இளிச்சுக்கிட்டே தானே நிக்கும்….ஒருவேளை ஷீலாவைத் திட்டும் போல .என்று ஒரு இனம் புரியாத உணர்வில் மேற்கொண்டு வேலையில் மும்முரமானாள்.

    அடேய் கசமாலம்….எங்கடாத் தொலைஞ்ச…என்று அங்கு நின்ற வேலைக்காரப் பையனை அழைத்த மானேஜர் “போடா போயி அந்த “அமீர்பெட் ஆஞ்சநேயுலு “வை நான் கூப்பிட்டேன்னு சொல்லி கையோட கூட்டீட்டு வா..

    இதைக் கேட்டதும் அந்த வேலைக்காரப் பையனின் கண்கள் தானாக இவளின் மேல் வந்து விழுந்தது.

    குறுகுறு வென்ற பார்வையில் தாக்கப் பட்டவளாக நிமிர்ந்து பார்த்ததும், அந்தச் சிறுவன் இவளையே வெறித்துப் பார்ப்பது தெரிந்ததும் இவளது மூளைக்குள் அபாய மணி அடித்தது.

    எம்புட்டு தமிழ் சினிமா பார்த்திருப்பேன்…..அப்ப சினிமால சென்னையை பத்தி சொல்லுறதெல்லாம் நெசம் தான் போலிருக்குது….என்ன தான் நடக்குதுண்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி என்ன தான் பண்ணுவானுங்க…கடத்திட்டு போயி வாயில துணி அடச்சு நம்ம வீட்டுக்கு போனப் போட்டு பத்தாயிரம் பணம் கொடுத்தால் தான் மலரை உசுரோட விடுவோம்….
    இல்லன்னாக்காட்டி…..”சீ…சீ…என்ன மடத்தனம்….நான் என்ன வெறும் பத்தாயிரம் மட்டும் தானா…..? கற்பனையில கேக்குறத கொஞ்சம் கேக்கலாமே…..ஒரு பத்துக் கோடி……” ஆஹா …..நான் பத்துக் கோடியா ….மலரு…நீ சென்னைக்கு வந்தாலும் வந்தே….
    உன்னோட ரேட்டு கூடிட்டே போகுதே….நினைத்தவள் அவளையும் மீறி களுக் கென்று சிரித்துக் கொண்டாள் .

    என்னாச்சு மலரு…நீயே சிரிச்சுக்குற…..சந்தோசமா.?..என்று இந்த சர்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தவன் போல எழுந்து வரும் மேனஜரை வெறுப்புடன் பார்த்தவள் “உனக்கேண்டா…..” ஆ…ஊன்னா ……ஆஜராயிடுற…இங்க நானும் ஷீலாவும் தான் பொண்ணுங்களா ….கிராமத்துலேர்ந்து வந்தா அடங்கிறுவாளுங்கன்னு நெனப்பு….இதே அந்த ஆம்பூர் அகிலாக்காட்ட வேலையைக் காட்ட வேண்டியது தானே…..நாங்கன்னா அம்புட்டு …எளப்பம் ….என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள் .

    அதற்குள் அருகில் வந்து உரசிக் கொண்டு நின்ற மேனேஜரை நடு மண்டையில் நச்சென்று ஓங்கி குத்தவேண்டும் போலிருந்தது மலர்விழிக்கு. அவன் அருகில் வந்ததை கண்டுகொள்ளாதவளாக தன் பாட்டுக்கு சற்று விலகிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தாள். ..கூடவே..”ச்சே ….” என்று அலுத்துக் கொண்டாள் .

    என்னா…அலுத்துக்குறே….என்றவன் மீண்டும் நகர்ந்து வருவதற்குள், வாசலில் நிழலாடியது.

    வந்தது அமீர்பெட் ஆஞ்சநேயுலு தான்.இரட்டை நாடி சரீரம் ,கன்னங்கறுத்த கலரில் கனத்த செருப்பு, பஞ்சகச்சம் வெச்சு கட்டிய வெள்ளை வெளேர் வேட்டி , வெள்ளை நிறத்தில் கதர் ஜிப்பா ,வாய் நிறைய வெத்தலை…பன்னீர் புகையிலை…ஜர்தா பீடா வாசனை பத்தடிக்கு அடித்து விரட்ட,, முள்ளு முள்ளாக மீசையோ தாடியோ இல்லாத பளீர் முகத்தில் வெத்திலைக் கறையோட பற்கள் தெரியச் சிரிப்பும் கண்களை அடைத்தபடி தங்க ஃ ப்ரேம் போட்ட பவர் கண்ணாடி.அதற்கும் மேலே நெற்றி நிறைத்த நாமம், கர்ண கொடூரமான சாரீரம். அதற்கு ஜதி போடுவது போல சரட் …சரட் …என்ற செருப்புச் சத்தம் வேறு..

    “ஏன்டி …ஆறுமுகம்காரு பிலுசாரா ..எவரு …? ஈ அம்மாயி கொட்லக்கு கொத்தக வச்சிந்தா….. பாகுந்தே…பலட்டூரா…..”

    (என்ன. ஆறுமுகம் ..கூப்பிட்டீங்களா..? யாரு ? இந்தப் பொண்ணு கடைக்கு புதுசா வந்திருக்கா..? நல்லாருக்காளே …..கிராமமா…?)

    டேய்…பாபு…இட்ட ரா….! ஆ அம்மாயி பேரேன்டி …? என்று ரகசியமாக கேட்டான். (இங்க வா….அந்த பெண்ணின் பேரென்ன..?)

    அதற்குள் அந்த மானேஜர் குறுக்கே வந்து நின்று…மலர்விழி…! நல்ல தமிழ் பேரு….! என்று சொல்லி கண்ணடித்துச் சிரிக்கிறான்.

    இதை ஓரக் கண்ணால் கவனித்த மலர்விழி…”இந்த மாதிரி துமுரு பிடிச்ச ஆளுங்க “எல்லா எடத்துலயும் இருப்பாங்களாட்டியும்.
    பொட்டச்சிங்கன்னா இவனுங்க போதைக்கு ஊறுகாய் போல….! உன் நேரம் நல்லாயில்லை….வசமா நீ எங்கிட்ட மாட்னடா மவனே…..உன் போதையை ஏறக்க கண்ணுக்குள்ளார ஊறுகாய தீட்டிப்புடுவா இந்த மலரு..மனசுக்குள் கருவிக் கொண்டே மீனைத் தேய்த்து தேய்த்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள் மலர்.

    இது போன்ற ஆத்து மீனுக்க்காகவே பணவலை விரித்துப் பிடிப்பவன் அந்த அமீர்பெட் ஆஞ்சநேயலு என்ற விஷயம் அறியாத ஷீலாவும், …ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

    வந்தவரிடம் மேனேஜர் ஆறுமுகம் குசு குசு வென்று ஏதோ பேசவும்.

    அதெல்லாம் படியும்….முதல்ல கோழியை …அமுக்கு….பெறவு கொசுவை பிடிக்கலாம்…என்று பூடகமாக சொல்லிவிட்டு , போகிற போக்கில் மலர்விழியைப் பார்த்து கௌரவப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு வெளியேறினார் வந்தவர்.

    அடுத்த நொடி மானேஜர் ஆறுமுகம் ஷீலாவிடம் வந்து நின்று……”அந்தப் பாப்பா ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டக்காரி……தெரியுமா ?”

    .அப்படியா..? எப்படி

    நீயுந்தான் மாசக்கணக்கா வேலைக்கு வந்தே…..ராவும் பகலும் கால்கடுக்க கைவலிக்க இம்புட்டு வேலை செஞ்சாத் தான் காச எண்ணும்படியா இருந்துச்சு….ஆனா…அவளுக்கு வந்த உடனே வந்த அதிர்ஷ்டத்தைப் பார்த்தியா ? அதான் எல்லாத்துக்கும் மச்சம் வேணும்….சொல்லிக் கொண்டே ஷீலாவின் முகத்தைப் பார்த்த ஆறுமுகம் தான் வைத்த பொடி அவளை ஏதாவது பாதித்ததா என்று முகத்தில் தேடினார்.

    அப்படி என்ன பெரிய அதிர்ஷ்டம்…..? இந்த இறால் கடையில…என்று மெல்ல இழுத்தபடி ஆர்வமானாள் ஷீலா.

    இப்ப வந்தாரே…அவரு இந்த இறால் மீனுல ஊறுகாய் தயாரிக்கிற கம்பெனி வெச்சிருக்காரு..அந்த ஊறுகாய் பாட்டில் மேலட்டையில் விளம்பரம் போடணுமாம்….அதுக்கு நம்ப மலரைத் தான் கூபபுடுறார். அட்டைப்படம், விளம்பர மாடல்….சும்மா ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதும்….”ஆஹா …என்ன ருசி “….இதுக்கு எம்புட்டு பணம் தருவாரு தெரியுமா….?

    எம்புட்டு..ஒரு நாளைக்கு முந்நூறா ?

    நீ…முன்நூறுலயே கெட…அதுக்கு மேல யோசிக்காத…ஒரு படத்துக்கு அஞ்சாயிரம் ரூபாய் தருவாராம்..சொல்லிட்டு போனாரு. சீனியாரிட்டியில நீ தான் முந்திலேர்ந்து இங்கன இருக்குற. நீ சரின்னு சொன்னா நான் இதுல உன்னிய கோர்த்து விட்டுடறேன்..
    ஆனா இது ரகசியமா இருக்கோணம். என்ன சொல்றே ஷீலா. முதல்ல அட்டைப் படம்….பெறவு தொலைக்காட்சி விளம்பரம் அப்பிடியே மேல மேல போயி சினிமால கூட நடிக்கிற சான்ஸ் கெடைக்கும். அம்புட்டுக்கும் கொடுத்து வெச்சிருக்கணம். எனக்கு நீயும் நல்லாருக்கோணம்….மெல்ல மெல்ல ஷீலாவின் மனசுக்குள் ஆசை விஷத்தை கலந்து கொண்டிருந்தான் அவன்.

    குப்பென்று பொறாமையில் வியர்த்தாள் அவள். எப்படி…இவர் சொல்லுவது நிஜமானால், நான் மட்டும் என்ன அவளுக்கு இளைத்தவளா? இந்த வாய்ப்பை நான் தவற விடக் கூடாது..ஒரே படத்துக்கு அஞ்சாயிரம்…..அம்மாடியோ…எப்பிடியாச்சும் இதுக்குள்ள மலரை நுழைய விடக் கூடாது..பட படவென்று வந்தது ஷீலாவுக்கு. கையும் காலும் பரபரத்தது. எதைப் பற்றியும் யோசிகாமல் அறிவு பணத்தில் அமிழ்ந்தது. ஓரக் கண்ணால் வேலை செய்து கொண்டிருந்த மலர்விழியைப் பார்க்கிறாள்.
    அவளைப் பார்க்க பார்க்க இவளுக்குள் கனன்று கொழுந்து விட்டெரிந்தது நெருப்பு. அவளிடமிருந்த அன்பு அந்த பொறாமை நெருப்பில் கருகிச் சாம்பலானது.

    சார்……எனக்கே சொல்லுங்க….நான் இந்த விளம்பரத்தில் வரேன்….நான் இந்த விஷயத்தை மலர்கிட்ட சொல்லலை..நீங்க எனக்கே இந்த சான்ஸ் வாங்கிக் கொடுங்க ப்ளீஸ்….என்று கெஞ்சும் பார்வையில் ஆறுமுகத்தைப் பார்க்கிறாள்.

    “கோழியைப் பிடிச்சாச்சு” என்று மனசுக்குள் குதூகலமானான் ஆறுமுகம்.

    நீண்ட நாட்கள் பழகியவன் போல அருகில் வந்தவன் அவளைத் தொட்டபடியே, ….மலரு. உனக்கு இங்க வேலை பார்க்க பிடிக்கலைண்டா சொல்லு…உன்னிய அசோக் பில்லர் கிட்ட பாக்கிங் ஆபீசு ஒண்ணு இருக்குது நான் அங்கனகுள்ள தான் இருப்பேன்..ஷீலாவையும் உன்னயும் அங்கனையே மாத்தி உடறேன்…சரியா? என்று சொல்லிவிட்டு கண்ணடித்துச் சிரிக்கிறான்.

    உடலெங்கும் திராவகத் துளி பட்டது போலத் தவித்தவளாக மலர்விஷி, ஷீலா வந்தா நானும் அங்க வந்துருவேன்..என்று நெளிந்து தன்னை அவனிடமிருந்து விலக்கி விலகி நின்று கொண்டாள்.

    இவனும் இவன் மூஞ்சியும்…இளிப்பைப் பாரு…..உனக்கெல்லாம் ஆண்டவன் கண்ணைக் கொடுத்திருக்கான் பாரு….அந்த ஆண்டவனுக்கு அறிவே இல்லை..என்று மனத்துக்குள் நினைத்தபடியே கூடையிலிருந்த இறால் மீனை எடுத்துத் தேய்த்து கழுவி முள்ளை எடுக்கிறாள்.

    பாவம் ஷீலா…இதே வேலையை எத்தனை மாசம் பண்ணிட்டு இருக்கா.அவ கலியாணத்துக்கு நாலு காசு சேத்துக்கிட வந்தவ,
    இங்கன வந்து மாப்பிள்ளையும் புடிச்சிட்டா …கெட்டிக்காரி. பாண்டியன் அப்பிடியே சினிமாக் காரன் தனுசு மாதிரியே இருக்காரு.
    அவ போயி என்னிய அழகுன்னு சொல்லிக்கிட்டு கெடக்கிறா . வெள்ளந்தியான மனசு அவளுக்கு.கைகள் காரியத்தில் கண்ணாக இருந்தாலும் எண்ணங்கள் மனசோடு பேசிக் கொண்டு தான் இருந்தது.

    தலையைக் குனிந்தபடி வேலையில் கவனமாக இருந்தாலும் அவளது கண்கள் அந்த அறையை அவ்வபோது துருவித் துருவிப் பார்த்து கொண்டே இருந்தது. அப்போது ஷீலா தனது கைபேசியில் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.

    இவள் சைகையில் யாருன்னு கேட்டதற்கு ஷீலா லேசான வெட்கத்துடன் சைகையால் மீசை போல செய்து காட்டி…அப்பறமா சொல்றேன்…என்று கைகளால் நீ வேலையைப் பாரு..மானஜர் சார் வந்தால் திட்டுவாரு என்று சொன்னாள் .

    பயம் என்றால் என்ன என்றே அறிந்திராத மலர்விழி “மானேஜர் சார் திட்டுவாரு போல….அந்தாளு இளிச்சுக்கிட்டே தானே நிக்கும்….ஒருவேளை ஷீலாவைத் திட்டும் போல .என்று ஒரு இனம் புரியாத உணர்வில் மேற்கொண்டு வேலையில் மும்முரமானாள்.

    அடேய் கசமாலம்….எங்கடாத் தொலைஞ்ச…என்று அங்கு நின்ற வேலைக்காரப் பையனை அழைத்த மானேஜர் “போடா போயி அந்த “அமீர்பெட் ஆஞ்சநேயுலு “வை நான் கூப்பிட்டேன்னு சொல்லி கையோட கூட்டீட்டு வா..

    இதைக் கேட்டதும் அந்த வேலைக்காரப் பையனின் கண்கள் தானாக இவளின் மேல் வந்து விழுந்தது.

    குறுகுறு வென்ற பார்வையில் தாக்கப் பட்டவளாக நிமிர்ந்து பார்த்ததும், அந்தச் சிறுவன் இவளையே வெறித்துப் பார்ப்பது தெரிந்ததும் இவளது மூளைக்குள் அபாய மணி அடித்தது.

    எம்புட்டு தமிழ் சினிமா பார்த்திருப்பேன்…..அப்ப சினிமால சென்னையை பத்தி சொல்லுறதெல்லாம் நெசம் தான் போலிருக்குது….என்ன தான் நடக்குதுண்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி என்ன தான் பண்ணுவானுங்க…கடத்திட்டு போயி வாயில துணி அடச்சு நம்ம வீட்டுக்கு போனப் போட்டு பத்தாயிரம் பணம் கொடுத்தால் தான் மலரை உசுரோட விடுவோம்….
    இல்லன்னாக்காட்டி…..”சீ…சீ…என்ன மடத்தனம்….நான் என்ன வெறும் பத்தாயிரம் மட்டும் தானா…..? கற்பனையில கேக்குறத கொஞ்சம் கேக்கலாமே…..ஒரு பத்துக் கோடி……” ஆஹா …..நான் பத்துக் கோடியா ….மலரு…நீ சென்னைக்கு வந்தாலும் வந்தே….
    உன்னோட ரேட்டு கூடிட்டே போகுதே….நினைத்தவள் அவளையும் மீறி களுக் கென்று சிரித்துக் கொண்டாள் .

    என்னாச்சு மலரு…நீயே சிரிச்சுக்குற…..சந்தோசமா.?..என்று இந்த சர்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தவன் போல எழுந்து வரும் மேனஜரை வெறுப்புடன் பார்த்தவள் “உனக்கேண்டா…..” ஆ…ஊன்னா ……ஆஜராயிடுற…இங்க நானும் ஷீலாவும் தான் பொண்ணுங்களா ….கிராமத்துலேர்ந்து வந்தா அடங்கிறுவாளுங்கன்னு நெனப்பு….இதே அந்த ஆம்பூர் அகிலாக்காட்ட வேலையைக் காட்ட வேண்டியது தானே…..நாங்கன்னா அம்புட்டு …எளப்பம் ….என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள் .

    அதற்குள் அருகில் வந்து உரசிக் கொண்டு நின்ற மேனேஜரை நடு மண்டையில் நச்சென்று ஓங்கி குத்தவேண்டும் போலிருந்தது மலர்விழிக்கு. அவன் அருகில் வந்ததை கண்டுகொள்ளாதவளாக தன் பாட்டுக்கு சற்று விலகிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தாள். ..கூடவே..”ச்சே ….” என்று அலுத்துக் கொண்டாள் .

    என்னா…அலுத்துக்குறே….என்றவன் மீண்டும் நகர்ந்து வருவதற்குள், வாசலில் நிழலாடியது.

    வந்தது அமீர்பெட் ஆஞ்சநேயுலு தான்.இரட்டை நாடி சரீரம் ,கன்னங்கறுத்த கலரில் கனத்த செருப்பு, பஞ்சகச்சம் வெச்சு கட்டிய வெள்ளை வெளேர் வேட்டி , வெள்ளை நிறத்தில் கதர் ஜிப்பா ,வாய் நிறைய வெத்தலை…பன்னீர் புகையிலை…ஜர்தா பீடா வாசனை பத்தடிக்கு அடித்து விரட்ட,, முள்ளு முள்ளாக மீசையோ தாடியோ இல்லாத பளீர் முகத்தில் வெத்திலைக் கறையோட பற்கள் தெரியச் சிரிப்பும் கண்களை அடைத்தபடி தங்க ஃ ப்ரேம் போட்ட பவர் கண்ணாடி.அதற்கும் மேலே நெற்றி நிறைத்த நாமம், கர்ண கொடூரமான சாரீரம். அதற்கு ஜதி போடுவது போல சரட் …சரட் …என்ற செருப்புச் சத்தம் வேறு..

    “ஏன்டி …ஆறுமுகம்காரு பிலுசாரா ..எவரு …? ஈ அம்மாயி கொட்லக்கு கொத்தக வச்சிந்தா….. பாகுந்தே…பலட்டூரா…..”

    (என்ன. ஆறுமுகம் ..கூப்பிட்டீங்களா..? யாரு ? இந்தப் பொண்ணு கடைக்கு புதுசா வந்திருக்கா..? நல்லாருக்காளே …..கிராமமா…?)

    டேய்…பாபு…இட்ட ரா….! ஆ அம்மாயி பேரேன்டி …? என்று ரகசியமாக கேட்டான். (இங்க வா….அந்த பெண்ணின் பேரென்ன..?)

    அதற்குள் அந்த மானேஜர் குறுக்கே வந்து நின்று…மலர்விழி…! நல்ல தமிழ் பேரு….! என்று சொல்லி கண்ணடித்துச் சிரிக்கிறான்.

    இதை ஓரக் கண்ணால் கவனித்த மலர்விழி…”இந்த மாதிரி துமுரு பிடிச்ச ஆளுங்க “எல்லா எடத்துலயும் இருப்பாங்களாட்டியும்.
    பொட்டச்சிங்கன்னா இவனுங்க போதைக்கு ஊறுகாய் போல….! உன் நேரம் நல்லாயில்லை….வசமா நீ எங்கிட்ட மாட்னடா மவனே…..உன் போதையை ஏறக்க கண்ணுக்குள்ளார ஊறுகாய தீட்டிப்புடுவா இந்த மலரு..மனசுக்குள் கருவிக் கொண்டே மீனைத் தேய்த்து தேய்த்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள் மலர்.

    இது போன்ற ஆத்து மீனுக்க்காகவே பணவலை விரித்துப் பிடிப்பவன் அந்த அமீர்பெட் ஆஞ்சநேயலு என்ற விஷயம் அறியாத ஷீலாவும், …ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

    வந்தவரிடம் மேனேஜர் ஆறுமுகம் குசு குசு வென்று ஏதோ பேசவும்.

    அதெல்லாம் படியும்….முதல்ல கோழியை …அமுக்கு….பெறவு கொசுவை பிடிக்கலாம்…என்று பூடகமாக சொல்லிவிட்டு , போகிற போக்கில் மலர்விழியைப் பார்த்து கௌரவப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு வெளியேறினார் வந்தவர்.

    அடுத்த நொடி மானேஜர் ஆறுமுகம் ஷீலாவிடம் வந்து நின்று……”அந்தப் பாப்பா ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டக்காரி……தெரியுமா ?”

    .அப்படியா..? எப்படி

    நீயுந்தான் மாசக்கணக்கா வேலைக்கு வந்தே…..ராவும் பகலும் கால்கடுக்க கைவலிக்க இம்புட்டு வேலை செஞ்சாத் தான் காச எண்ணும்படியா இருந்துச்சு….ஆனா…அவளுக்கு வந்த உடனே வந்த அதிர்ஷ்டத்தைப் பார்த்தியா ? அதான் எல்லாத்துக்கும் மச்சம் வேணும்….சொல்லிக் கொண்டே ஷீலாவின் முகத்தைப் பார்த்த ஆறுமுகம் தான் வைத்த பொடி அவளை ஏதாவது பாதித்ததா என்று முகத்தில் தேடினார்.

    அப்படி என்ன பெரிய அதிர்ஷ்டம்…..? இந்த இறால் கடையில…என்று மெல்ல இழுத்தபடி ஆர்வமானாள் ஷீலா.

    இப்ப வந்தாரே…அவரு இந்த இறால் மீனுல ஊறுகாய் தயாரிக்கிற கம்பெனி வெச்சிருக்காரு..அந்த ஊறுகாய் பாட்டில் மேலட்டையில் விளம்பரம் போடணுமாம்….அதுக்கு நம்ப மலரைத் தான் கூபபுடுறார். அட்டைப்படம், விளம்பர மாடல்….சும்மா ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதும்….”ஆஹா …என்ன ருசி “….இதுக்கு எம்புட்டு பணம் தருவாரு தெரியுமா….?

    எம்புட்டு..ஒரு நாளைக்கு முந்நூறா ?

    நீ…முன்நூறுலயே கெட…அதுக்கு மேல யோசிக்காத…ஒரு படத்துக்கு அஞ்சாயிரம் ரூபாய் தருவாராம்..சொல்லிட்டு போனாரு. சீனியாரிட்டியில நீ தான் முந்திலேர்ந்து இங்கன இருக்குற. நீ சரின்னு சொன்னா நான் இதுல உன்னிய கோர்த்து விட்டுடறேன்..
    ஆனா இது ரகசியமா இருக்கோணம். என்ன சொல்றே ஷீலா. முதல்ல அட்டைப் படம்….பெறவு தொலைக்காட்சி விளம்பரம் அப்பிடியே மேல மேல போயி சினிமால கூட நடிக்கிற சான்ஸ் கெடைக்கும். அம்புட்டுக்கும் கொடுத்து வெச்சிருக்கணம். எனக்கு நீயும் நல்லாருக்கோணம்….மெல்ல மெல்ல ஷீலாவின் மனசுக்குள் ஆசை விஷத்தை கலந்து கொண்டிருந்தான் அவன்.

    குப்பென்று பொறாமையில் வியர்த்தாள் அவள். எப்படி…இவர் சொல்லுவது நிஜமானால், நான் மட்டும் என்ன அவளுக்கு இளைத்தவளா? இந்த வாய்ப்பை நான் தவற விடக் கூடாது..ஒரே படத்துக்கு அஞ்சாயிரம்…..அம்மாடியோ…எப்பிடியாச்சும் இதுக்குள்ள மலரை நுழைய விடக் கூடாது..பட படவென்று வந்தது ஷீலாவுக்கு. கையும் காலும் பரபரத்தது. எதைப் பற்றியும் யோசிகாமல் அறிவு பணத்தில் அமிழ்ந்தது. ஓரக் கண்ணால் வேலை செய்து கொண்டிருந்த மலர்விழியைப் பார்க்கிறாள்.
    அவளைப் பார்க்க பார்க்க இவளுக்குள் கனன்று கொழுந்து விட்டெரிந்தது நெருப்பு. அவளிடமிருந்த அன்பு அந்த பொறாமை நெருப்பில் கருகிச் சாம்பலானது.

    சார்……எனக்கே சொல்லுங்க….நான் இந்த விளம்பரத்தில் வரேன்….நான் இந்த விஷயத்தை மலர்கிட்ட சொல்லலை..நீங்க எனக்கே இந்த சான்ஸ் வாங்கிக் கொடுங்க ப்ளீஸ்….என்று கெஞ்சும் பார்வையில் ஆறுமுகத்தைப் பார்க்கிறாள்.

    “கோழியைப் பிடிச்சாச்சு” என்று மனசுக்குள் குதூகலமானான் ஆறுமுகம்.

    தனக்கு முன்னால் நடக்கும் இதையெதையும் அறியாத மலர் “பாவம் ஷீலா” எம்புட்டு கஷ்டப் பட்டு எனக்கு இந்த வேலையை வாங்கிக் கொடுத்திருக்கு.இந்த உதவிய என் உசுரு இருக்குமுட்டும் மறக்க மாட்டேன்.
    என்றெண்ணிக் கொண்டாள்.

    திடீரென்று அவள் விரலில் ஆழமாகக் குத்திய முள்ளை வெளியே பிடுங்கி எடுக்கவும்….”ரத்தம் குபுக் கென்று முத்தாக வெளியே தெரியவும்…”ஸ்ஸ்ஸ் ….ஆஆஆஆ…ஷீலா முள்ளு குத்திருச்சுடி…” என்று தன்னையறியாமல் கத்துகிறாள்.

    (தொடரும் )

    Share
  • வல்லமைப் பெண்மணி!

    ஜெயஸ்ரீ ஷங்கர்.
    பாரதி கண்ட புதுமைகளை 
    கனவுகளாய்  மறையாது
    நிழலாய் கண்ட மாதருக்குள்
    நிஜமாகக் நிமிர்ந்திடத் தானோ
    அழகாய் எழுந்தவள் நீ..!
    நமக்கேன் வம்பென பேசாமல்
    ‘சரவணன் மீனாட்சி’யில் மனம் மகிழ
    புரட்டு சீரியலுள் புதைந்து போகாமல்
    அகத்து பெண்மணிகளின் வல்லமையை
    கோபுரத்திலேற்றிக்   காட்டிய
    சாபமெனும் பெயரில் கல்லெனக்
    கிடந்திடாத வல்லமைத் தடம்
    பட்ட இன்னுமோர் அகலிகை நீ..!
    உறங்கிக் கிடக்கும் உயிர்களுக்குள்
    உரத்தைத் தூவி உயிர்ப்பை இருத்தி
    கடலுக்கடியில் பாறையாய் பதுங்காது
    வெட்ட வெளியிலே ஊர்வலமாக்கி
    உன்னதத்தின் மேன்மைகளை
    உழைப்பவளின் உன்னதத்தை
    பேனா முனையில் எழுத்தாண்டவள் நீ..!
    புத்தாண்டுப் பரிசுகளாய்
    விடியலின் வேர்களை  வெளிச்சத்துக்கு
    அழைத்து வந்து – பெண்மை வாழ்க..!
    எனக் கூத்திட்டு  – சக்திதனை
    நிர்கதியென நிறுத்தாது..!
    வானம்பாடியாக்கி  திக்கெட்டும்
    பறை சாற்றிய இலக்கிய தேவி நீ..!
    ஓயாத உழைப்பில்
    தன்னலமற்ற தியாக தீபமேற்றி
    சாதனைப் பெண்களின் அணிவரிசையில்
    தீபம் ஏந்தும் புதுமைப்பெண் நீ ..!
    வல்லமைக்கே ஒளி கொடுக்கும்
    இன்றைய உலக மகளிர் தினத்தில்
    உந்தனை சிந்தனை செய்வதில்
    செருக்கடைகிறது எந்தன் மனம்..!
    உயரட்டும் உந்தன் கொடி புரட்சிப்பெண்ணே!
    =======================================
    Share
  • மணிக்கொடி ஏற்றிய வெற்றிக்கொடி …!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

     “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்…
    ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்…”

    இந்த சாதாரண சினிமாப் பாடலின் அசாதாரணமான வரிகள், ஒவ்வொருவரின் சாதாரண இதயத்திலும் கூட  அசாதாரண அதிர்வலைகளை நிச்சயமாக எற்படுத்தி இருக்கும். சாதிக்க நினைக்கும் இதயங்களுக்கு இந்த வரிகள் தான் ஊக்கபானமாக இருந்திருக்கும்.

    இதைப் பற்றி சிந்தனை செய்யும் போதே, சிந்தனைகள்  செயலாகி செயல் புத்தகமாகி எழுதிய புத்தகம் அனைத்தையும் தாண்டிச் சென்று புகழ்க்கொடியை விரித்து “வெற்றிக் கொடி ” ஏந்தி வெளிவந்து , அதை எழுதியவருக்கு “மலர் மாலையை” அணிவித்து அழகு பார்த்தால்..!
    ஆம்…அதுவும் நடந்தது. உண்மையின் அடிப்படையில் செய்யும் இந்த விமர்சனம் நிலைக்கும் என்று   நம்புகிறேன் நம்புகிறேன்.

    இரவும், பகலுமாக கருமமே கண்ணாக ஊன், உண் மறந்து  துயில் துறந்து சமுதாயச் சிந்தனையோடு பல தலை முறைகளுக்கும் எடுத்துச் சொல்லும் நோக்கத்தோடு “மணியான சுதந்திர எண்ணங்களை” ‘மணிக்கொடி’ கதையாக  900 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வரலாற்றில் இடம் பெரும் வண்ணம் நாவலை எழுதி முடித்து நிம்மதி பெருமூச்சு விட்டதும்….அந்த ‘மணிக்கொடி’ மகளே தன்னை ஈன்ற தாய்க்கு மலர்மாலையை பெற்றுத் தந்து அணிந்தவரை அழகு பார்க்கும் பாக்கியம் எழுத்தாளருக்கு மட்டும் தான் கிட்டும்  ஒரு வரப்பிரசாதம்.

    அந்த இன்பத்தை தமது வாழ்வில் அனுபவித்தவர் பிரபல சமூக எழுத்தாளர், சீரிய சிந்தனையாளர்.’ஜோதிர்லதா கிரிஜா‘ அவர்கள் என்று இந்த உலக மகளிர் தினத்தில் சொல்லிப் பெருமைப் படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    அறுநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எழுத்தோடு வாழ்வை பின்னிக் கொண்ட “சாதனைப் பெண்மணி”  காலங்களைக் கடந்து பேசப்படும் பொக்கிஷமான ‘மணிக்கொடி‘ என்ற புத்தகத்தை தன் வாழ்நாளின் சாதனையாக எழுதிப் படைத்தவர். சிதம்பரம் அண்ணாமலைச் செட்டியார் பரிசும், விருதும் பெற்றது மணிக்கொடி.

    ஏதோ…பிறந்தோம்….இருந்தோம்…வாழ்ந்தோம் என்று மட்டும் இல்லாமல் ‘நாட்டுக்கு நீ என்ன செய்தாய்’..? என்ற கேள்விக்கு இடம் வைக்காமல் ‘நாட்டுக்காக இவர் இதைச் செய்தார்..’ என்று சொல்லும் பட்டியலில் இவரது ‘மணிக்கொடி’யே …’தாயின் மணிக்கொடி பாரீர்’  என்று ‘வெற்றிக் கொடியை ‘ உயரே பிடித்தபடி, தன்னையும் உயர்த்தி தன்னைப் படைத்தவரையும் உயர்த்தி நிறுத்தும் போது …

    மகளிர் தினத்தில் சாதனை படைத்த பெண்மணிகளை நினைவு கூர்ந்து வாழ்த்துச் சொல்லும் விதமாக என்றென்றும் அழியாப் புகழ் கொண்ட எழுத்தாளர் ‘ஜோதிர்லதா கிரிஜா ‘ அவர்களுக்கு வாழ்த்துக் கூறி நல்லாசிகள் வேண்டுவோம்.

    Share
  • காதல் பாடம்…!

     

    ஜெயஸ்ரீ ஷங்கர்

     
    கவின் முகில் மெல்லக் கடந்தது காடு…!
    இருள் சூழ் வேளை தனில் சூழ்ந்தது தென்றல்
    தொட்ட மரங்கள் சிலிர்த்தெழுந்தது
    பச்சை இலைகளுக்குள் கலகலப்பு…. சலசலப்பு…!.

    இச்சைக் கிளிகள் இரவோடு இரவாக
    அலகுரசிக் கொஞ்சும்போது….
    குண்டு விழிகள் கெஞ்சும்..அஞ்சும்..
    மிஞ்சியே சேர்ந்து விரிக்கும் சிறகு..

    காதல் கிளிகளாய் மலர்ந்த விடியலில்
    உல்லாச ஊர்கோலம் மோகங்களோடு
    மேகங்களும் சந்தோஷ வானில்
    காதல் கொண்டு கட்டிக் கலக்கும்..

    உயர் மலைகள் ஊடே புகுந்து
    ஆடை கலைந்து அழுதிடுங்கால்
    பூமி சிலிர்த்துச் சிரித்துப் பூக்கும்
    காய்த்துப் பழுத்து இனிக்கும்…!

    இங்கிருந்து அங்கு சென்று
    வண்ணக் கால்கள் ஊன்றி
    வான் வீதியில் ஊஞ்சல்
    கட்டி தூது சாற்றும் வானவில்…!

    மௌனமாய்த் தலை திருப்பும்
    ஆதவனின் நாயகி…காந்தி..
    காந்தமாய் இழுப்பிற்கெல்லாம்
    உறவு சொல்லிச் சிரிக்கும் முகம்..!.

    கார் வண்டு மொய்த்துத்
    தடாகத் தட்டில் பெயர் பொறித்து
    மலருக்கு மலர் தூது சொல்லித்
    தேனால் கவி எழுதும் தாமரைகள்..!

    உலகத்து நாயகிகள் காதலாய்
    நித்தமிடும் கையெழுத்து
    உள்ளத்தைத் தட்டி இன்பம்
    தரும் இயற்கை தேவதைகள் ..!

    குற்றால அருவி போல்
    வற்றாத அலைகள் போல்
    பாரெங்கும் சிதறிச் சிரிக்கும்
    காதல் சில்மிஷங்கள்.!

    ஏட்டிக்குப் போட்டியில்லை….
    கண்களில் பொறாமையில்லை….
    இதயத்தில் ஈட்டி எரிவதில்லை…
    முகத்தில் திராவக வீச்சுமில்லை..!

    மனங்களைக் கொல்லாமல்
    மதங்களைக் கொள்ளாமல்
    மௌனமாய் நித்தம் நடத்தும்
    புகட்டும் காதல் பாடம்…!

    கண்ணிறைந்து நெஞ்சம் நிறைத்து
    அழகு தரும் அற்புத காட்சி கண்டு
    காதலர் மனம் ஆழ்ந்து சுவாசிக்க
    இயற்கையாய் காதல் செய்வோம்..!

    உறவால் பிரிவின்றி
    உயிருள் பயமின்றி
    புள்ளிமான் மனதோடு
    திடமாய் காதல் செய்வோம்…!

    ஆயிரம் பிறைகள் கடந்தும்
    ஜென்மங்கள் பல தொடர்ந்தும்
    தோன்றிய காதலாய் நெஞ்சங்கள்
    அமைதியில் ஆடட்டுமே..!

     

    Share
  • காதல் பூமியாய் காந்த பூமி..!

     
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    சுழன்று செல்லும் தேராக
    வெட்டவெளியில் வெள்ளோட்டம்

    ஆதவனும் வெண்மதியும் ஆளுக்கோர் திக்கில்
    பவனியாய் ஊர்கோலத் தேர் திருவிழா..!

    நாயகர்கள் வாழ்த்தோத ‘செவ்வாயில்’ புன்சிரிப்பும்
    கோளங்களின் நட்பும் பகையும் மாயைக்
    காதலைப் போற்றுமே…!

    கடலும் மலையும்  மண்ணும் காற்றும்
    அடைந்து திமிரும் எரிமலைகளும்
    மாயக் காதலுள் கட்டுண்டு கிடக்க…

    காதல்வானம் அள்ளித் தெளித்த
    காதல் வனமே பூகோளம்..!
    பூக்கோல காதல் விதைகள் முக்காலமும்..!

    வேரூன்றி எழுந்து நின்று பல்கிப்
    பெருகி கருகி அமிழ்ந்து
    மீண்டும் துளிர்க்கும் தளிராம் என்றும்

    சாகா வரம் பெற்று வந்த
    போகக் குழந்தை “அது” – மனித
    நெஞ்சங்களுக்குள் போதை தரும்
    பொற்குடமாம்  பாற்குடம்..!

    வேண்டாத இதயத்தையும் வேகவைத்தும்
    வாழாத மனங்களை வாழ விடும்
    வீழாத புகழ்கொடியை உச்சத்தில் ஏற்றும்…!

    மாயாவிக்  காதலே…! நீ…!
    பொற்கொடியா…..வடம் நீளும்
    தேர் சக்கரத்தின் அச்சாணியா ?

    இருந்தும் இல்லாமலும்…கண்டும் காணாமலும்
    உனைக் காக்கவென்றே காதல் பூமியாய்  சுழலும்
    காலகாலமாய் காந்த பூமி..!

    ================================================

    Share
  • ஆத்மாவின் மொழி.!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    நிமிர்ந்த உன்னிடம் சரண் அடைந்து
    சொல்கிறேன் சக்தியும் சிவனும் நீ..!

    அழிக்காது உயிரைக் காப்போம் அன்பில்
    நீர் ஊற்றுவோம் வா..!

    பிறந்தது ஓரிடம் வளர்ந்தது வேறிடம்
    இறந்திடும் ஒன்று கூடி..!

    தலை நீயும் கால் நானுமாய்
    உலகை அளப்போம் சேர் !

    நித்தம் ஜெபிக்கும் எந்தன் மனம்
    நிந்தன் நாம மந்திரம்..!

    லட்சம் உருவைப் போற்றும் போதும்
    குறைந்த பட்சம் இது..!

    முன்னம் யாரோ…பின்னம் யாரோ…?
    இருப்பதில் மகிழ்ந்து விடு..!

    தயா…காருண்யம் சித்தம் கருணை
    பூரணம் பரி வாரணம்..!

    ஆனந்தம் ஆடும் மனது நோக்கினால்
    அழிவின்றி தொடரும் உடல்.

    அஞ்சும் உன்னோடு கரைந்து போகட்டும்
    நெஞ்சே நிமிர்ந்து நில்..!

    தீயாக என்னுள் நீயே தீயாக ஜோதி
    பொய்யென கரைத்தது காற்று..!

    வெட்டி மறையும் ஒளிக்கீற்று மின்னலாய்
    நமக்குள் அவனிட்ட  அன்பு..!

    பாராது பார்க்கும் பார்வை துரத்த
    வாராதது வந்தது பார்..!

    கதிரொளி ஈதென்று மனம் உரைத்திட
    அறிவொளி நீ யென்  கண் ..!

    வாழா திருந்த உடலே மனமே..
    சாகாது ஏகாந்தமாக இரு..!

    செல்லல், நிகழல், வகுதல் மூன்றினையும்
    கடக்கும் நமது மௌனம்..!

    சிறுபொறி பட்ட பஞ்சாக கனன்று
    சுடர் எழுவாய்த் தூயவளே…!

    உருமாறி  உடம்புமாறி மனதளவில் ஒற்று
    வருமாரி பருவமாறிப் பற்று..!

    நெற்றிக்கு நேரே நெற்றி முட்டி
    மூனக்கனல் முழுதும் ஏற்று..!

    ஸ ….நீ , ப…நீ..,ச….நீ..!
    என்னுள் ஸ்வர சங்கமம்…!

    கண்ணாடி முன்னில் நானின்று காணின்
    கண்டேன் உன்னாடும்  முகம்..!

    பஞ்சு மனம் பிஞ்சு மனம் பார்த்ததும்
    துஞ்சுவ தில்லை ஜெயம்..!

    தோன்றாத மலர்கள் தோன்றியதால் உன்னைச்
    சேராமலே வாடி விடும்..!

    விண்ணிறைத்த ஒளியே நின் கண்முன்
    திறந்ததோ என்னுள் விழி..!

    ஆதி ஜோதி நீ என்னுள் பாதி நீ
    சாரதியா யானேன் உனக்கு..

    உன்பால் அறியாத பந்தம் நெஞ்சத்தைத்
    தாகுவ தாகும் தவம்..!

    பற்றில்லை பற்றில்லை பற்றில்லை  என்றே
    பற்றினேன்  நின் பதத்தை..!

    அங்கி தரும் உடல் காப்பு போல்
    நெஞ்சம் காப்பதுன் நினைவு..!

    ஒன்றுள் ஒன்றாகி ஒடுங்கி விட்டால்
    வேறாகுமா ஒன்றும் பூஜ்ஜியமே..!

    அறிந்து கொண்டேன் நாட்டம் நட்டம்
    வருமா எழுந்து செல்..!

    மூலமும் முடிவும் ஒன்றான போது
    தேவை யொன்றும் இல..!

    வேறாகி நின்றாய் நேற்றில் என்னுள்
    வேராகிப் போனதுன் மனம்..!

    வாயுவாய்  வேகமாய் ஒளிக்குள் விழியாய்
    தேடுவாய் சேருவாய் செல்..!

    சிந்தை தெளிந்தும் விகாரம் அடங்கியும்
    தன்னைத் தெளிந்தோம் யாம்..!

    அடக்கத்தின் அரியணையில் அமர்ந்தாளும்  ஆறறிவே..
    எதுவும் தேவையில்லை உனக்கு.

    தன்னையே உணர்ந்து நான் காணும்
    மோஹனம்  நீயன்றி யாரிங்கு சொல்..!

    பெண்ணிவள் பெற்ற பயன் நோக்குங்கால்
    விண்ணாகி விரிந்தாய் வியப்பு..!

    சித்தம் கலங்கிட விரிந்தாய் என்னுள்
    மனக் குளத்தின் தாமரை நீ..!

    பாலுக்குள் மறைந்து காத்து நிற்கும்
    நெய் போல் ஆனதடி நம்முறவு..!

    எண்ணெய்  தீர்ந்தேன் உள்ளத்தின் எண்ணத்தில்
    தீயிட்டு எரித்தாய்த்  திரி..!

    பாரிதில் பரிதியைப் பார்த்ததால் இந்தப்
    பாரிஜாதம் பூத்தது பார்..!

    பெண்ணல்ல ஆணல்ல  திருநங்கையல்ல பேருமல்ல ..
    எனக்குள் யார் புகுந்தார் வியப்பே..!

    அனைத்துமாய் அனைத்திலும் அதிகமாய் அகத்தினை
    ஆழச்  சொரிந்தாய் ஆள் ..!

    உள்ளத்தின் ஓசைக்கு இசை சேர்த்த
    பாசக்கார பவித்ரமோ அன்பு..!

    நெஞ்சத்து நினைவுக்கு வாசமலர் போலானாய்
    மலராது வாடாது உதிராது நீ..!

    வீரிய விதையாய் விழுந்த நிலமாக
    மனத்துள் ஆணிவேராகக்  காலூன்றியாய்..!

    அகடம் விகடமாகி ஊடகச் காந்தமே
    பகடம் தகடாமுகோ சொல்..!

    சத்தியம் நித்தியம் சுகம்தரும் சுகந்தமாய்
    சாத்தியம் நீயும்  சத்தியம்..!

    இளைத்துவிட்ட ஜீவனுக்கு சாபல்ய வரமானாய்..
    மீண்டும் எதற்குப் பவம்..?

    இருசுடர் சிந்தித்தேன் இராப்பகல் ஒன்றாய்
    உட்புகுந்து ஜீவன் தந்தாய்..!

    கடலலை உள்ளத்தின் கலங்கரை விளக்கு நீ
    கலங்காத சிந்தையின்  பாவை விளக்கு..!

    வா…வா…என்றென்னை மனம் விரித்தழைத்த
    உந்தன் கருணையே பாயுமொளி..!

    மதிமுகம் மதியகம் மதியை மயக்கும்
    விதியிது வழியிது ஈசன் செயல் ..!

    தேடியே உள்ளே ஆதியின் அறிவாய்
    ஓடியே ஒளிந்து கொள்வாய்..!

    களைந்த பிறவிகள் பண்ணிய பயனாய்
    வந்திங்கு சேர்ந்து விட்டாய்..!

    கலையா தவத்தால் கலைந்தது  மோட்சம்
    உன்னைப் பெற்றது உணர்வு..!

    வீடெது வீடது விடாது வேண்டினேன்…
    வீடகம் உன்னுள்  கலந்து..!

    சப்த நாடிகள் சப்தம் அடங்க
    பூரகம் பொங்கிய உயிரே..!

    சுழுமுனையுள் தாமரை நூலாம் நாடியது
    என்னுயிரில்  உன் நினைவாம்..!

    ஆதித்தன் சிரிக்க இதழ் விரியும் மாமலராய்
    எனக்குள்  சிரிக்கும் முகம்..!

    நரம்போடு எலும்புமஜ்ஜை  தசையோடு பிசைந்து
    பொய்யில்லை நீ  நிஜம்..!

    வாயு ஓடும் வரையிலா நீளும் வாழ்வு
    அதையும் தாண்டி ஆயுமா சொல்..?

    நாடிகள் ஆயிரமாயிரம் ஒடுங்கால்  நம்மிடத்துள்
    நீ பத்துக்குள் சுழுமுனை எனக்கு.

    உச்சி முகர்ந்தென்னை பரிந்து கட்டு
    புதிதல்லவே நம்முள் உறவு..!

    பெற்றதும் உற்றதும் சுற்றதும் சூழ்ந்திங்கு
    கற்றுத் தந்தது காடு.

    படத்துக்கு நன்றி

    http://www.tumblr.com/tagged/7%20chakras

    Share
  • நாலடிக் கோபுரங்கள்…!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    ஒவ்வொரு நாளும் நான் வீட்டை பூட்டி விட்டு தெருவைக் கடந்து வேலைக்குப் போவதற்குள் இன்று யாரையெல்லாம் சந்திக்க வேண்டி வருமோ என்ற எண்ணம் என் இதயத்தைப் பிடுங்கித் தின்னும். தெரிந்தவர்களால் ஒரு பிரச்சனையும் இல்லை. என்னைப் புதிதாகப் பார்ப்பவர்கள் ஏதோ ஒரு நாலு கால் பிராணியைப் பார்ப்பது போலவும் ,என்னை ஒரு பாவி போலப் பாவமாகக் கொத்தும் பார்வையை என் மீது வீசும் போது மட்டும் தான் எனக்கு, நாற்பது வயதாகியும் நாலடிக்கு மேலே வளராமல் நின்று விட்ட விஷயம் ஞாபகத்துக்கு வந்து உலுக்கி எடுக்கும்.

    இத்தனை பெரிய உலகத்தில் நான் மட்டும் என்னமோ “ஆண்டவா… என்னைக் கட்டையாக் குட்டையா இப்படி படைத்து விடேன்” என்று ஆர்டர் கொடுத்துப் பிறந்தவன் மாதிரி வித்தியாசமாகப் பார்ப்பவர்கள்..எனக்குள்ளும் ஒரு மனிதன் இருப்பான் என்பதை மட்டும் யாருமே உணர மாட்டேங்கறாளே ….என்ற மன உளைச்சலும் அதனால் உண்டாகும் வலியும் துயரமும் நாளைக்கு ஒருதரமாவது என்னை வருத்துவது எனக்கு வாடிக்கை தான்.

    வீட்டைப் பூட்டும் நிலைக் கதவு கூட என்னை விட இரண்டுமடங்கு உயரம். என்று எனது குட்டைக் கையால் என் தலையில் ஒரு குட்டுக் குட்டிக் கொண்டே…படியிறங்கி தெருவைக் கடக்கிறேன். அங்கிருந்து வந்த ஒரு பசு மாடு…..என்னை ஒரு பார்வை பார்த்த பிரம்மை எனக்குள்..ஒரு நிமிடம் ஒதுங்கி நிற்கிறேன். அதோடு சேர்ந்து நானும் சென்றால்…எங்கே…யாராவது சின்னப் பசங்க…”அம்மா…பசு மாடு மனிதக் கன்னுக்குட்டியோட போகுதுன்னு” வதந்தியை கிளப்பி விட்டுடுவாங்க.

    ரோட்டின் ஓரமாகக் கிளம்பி, ஓரமாகவே நடந்து போகும்போது வழக்கம் போலவே மனசுக்குள் “விஷ்ணு சஹஸ்ரநாமம்” சொல்லிக் கொண்டே போகிறேன். கண்கள் மட்டும் அங்கங்கே உயர்ந்து நிற்கும் தென்னை மரத்தைப் பார்த்து “ச்சே…இப்படி ஒரு மனுஷப் ஜென்மம் எடுத்ததுக்குப் பதிலா ஒரு வீட்டில் தென்னம்பிள்ளையாய் கூட நின்றிருக்கலாம்..” என்ற எண்ணத்தோடு அலுவலகம் நுழைகிறேன்.

    என் உயரத்தை கணக்கு வைத்தே நான் உலகத்தை அளந்து வைத்தேன். உலகம் என்னை சின்னதாக மாற்றிப் பார்க்கிறது நானும் அதை கோலிக் குண்டாக ஆக்கி என் சட்டைப் பையில் போட்டு வைக்கிறேன். என் வீடும் எனக்குச் சோறு போடும் என் அலுவலகமும் தான் என் உலகம், என் கோயில். இரண்டுக்கும் அதிக இடைவெளி இல்லை…நடந்து போகும் தூரம் தான். ஓரமாக நடந்து திரும்பினால் அலுவலகம். என்னைப் பொருத்தவரையில் இவ்வளவு தான் உலகமே இவ்வளவு தான்..! அதனால் எனக்கு உலகில் ஓடும் ரயில், பஸ், கார், ஸ்கூட்டர் ..ஏன் ஒரு சைக்கிள் கூட என்னைப் பாதிக்காது. யோசித்துக் கொண்டே உருளுகிறேன்.

    இன்னும் பத்து நிமிஷத்துக்குள் ஆபீசுக்குப் போனால் தான் லிஃப்டில் இரண்டாவது மாடிக்குப் போகலாம்..இல்லையென்றால் பவர்கட் ஆகி லிஃப்டும் வேலை செய்யாது…மேலே போக மாடிப் படியில் தான் ஏறியாக வேண்டும். அதான் நடக்காமல் காலில் சக்கரம் கட்டி உருள வேண்டியாதாச்சு.

    டேய்…நம்ப ..நாலடியார் இன்னைக்கு ஆஃபீசுக்கு லீவு போலிருக்கே..? சீட்டுக்கு அடியில் காணோமே…. என்று டைபிஸ்ட் ஷீலா பியூனிடம் கிண்டலாகக் கேட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் அவள் பேசியதைக் காதில் வாங்கிக் கொண்டே நான் உள்ளே நுழையவும்…..அவள் முகம் பேயறைந்தது போல வெளுத்தது.

    அவளது நெடு நெடுவென்ற உயரம்..எப்போதாவது என் மேஜை அருகே கடிதத்தில் கையெழுத்து வாங்க நிற்கும் அவளை சில நொடிகள் என் முகம் அண்ணாந்து பார்க்கும். அவளுக்குள் பெருமை பொங்கும்…என் சிறு உருவம் பார்த்து. ஒருவேளை அந்தப் பெருமையில் எனக்கு இப்படி “நாலடியர்” என்று ஒரு பட்டப் பெயர் வைத்திருக்கலாம். நான் நாலடி கூட உயரமில்லை…வெறும் மூணரை அடி தான்…என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.

    எனக்கு அவள் அப்படி அழைத்ததில் கவலையில்லை என்பதைத் தெரியப் படுத்துவது போல..” சரியாகத் தான் எனக்கு நீ பெயர் வெச்சிருக்கே” என்று சொல்லிக் கொண்டே எனது டேபிள் அருகில் சென்று நிற்கிறேன். டேபிள் லேசாகத் தலையில் இடித்தது.

    தலையைத் லேசாகத் தடவிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து, சார்… மன்னிச்சுக்கோங்க. இனிமேல் இப்படிப் பேச மாட்டேன்..என்றவள் குற்ற உணர்வில் குறுகிப் போனாள் .

    எனது டேபிளில் நிறைந்த வேலைகள் என்னை ஆக்ரமித்துக் கொள்ள, வேலையில் கண்களும் கைகளும் கவனமாக இருந்தாலும் மனதுள் கவனச் சிதறல் இருக்கத் தான் செய்தது..

    கணினியில் “டேலி “யைத் திறந்து லெட்ஜர் போஸ்டிங் செய்து கொண்டிருந்தேன். மனசு உணர்வைப் போஸ்டிங் செய்து கொண்டிருந்தது.நான் கணிணியை எப்படி உபயோகப் படுத்தறேன்னு வேடிக்கை பார்க்கவே ஒரு ரசிகர் கூட்டம் எட்டிப் பார்க்கும். அவர்களுக்கு இந்த வேடிக்கை ஒரு வாடிக்கை தான்.எனக்கும் பழகிப் போச்சு.

    என் அம்மா எனக்கு எவ்வளவு ஆசையாசையாய் “ராஜ ராஜன் “ன்னு பெயர் வைத்து, பத்து வயசு வரைக்கும் கூட ராஜா…ராஜா ன்னு கூப்பிட்டது இன்னும் என் காதில் விழுந்துண்டு தான் இருக்கு. அந்த ராஜா மெல்ல மெல்ல குட்டிக் கூஜா போல ஆனதும் பெற்றவர்களுக்கே மகன் என்று சொல்ல மனமில்லாத நிலை வந்ததும் தான் எனக்குள் ஓர் ஏமாற்றம்.

    திடீரென ஒரு நாள் அம்மா , நான் தூங்கி விட்டதாக நினைச்சுண்டு அப்பாவிடம் அழுதபடி பேசிய வார்த்தைகளும் கூடவே அப்பப்போ காதைத் துளைத்துக் கொண்டு கேட்கும்..

    “என்னன்னா…நம்ம ராஜா….கையும் காலும் வளராமல்…இப்படிக் குட்டை குட்டையாய் இருக்கே..பத்து வயசுக்கான வளர்த்தியே தெரியலையே…அக்கம் பக்கத்தில் எல்லாம் கேக்கறா….என்ன மாமி உங்காத்து ராஜாவுக்கு அம்பது வயசானாலும் அஞ்சு வயசு தான்னு சொல்லிண்டு நீங்க பஸ்சுலயும், டிரெயினிலும் டிக்கெட் வாங்காமலே ஊருக்கெல்லாம் அழைச்சிட்டு போயிட்டு வரலாம்..போலிருக்கே ன்னு கேலி பண்றச்ச…மனசுக்குள்ள ஒரு பயம் வந்துடுத்து. நான் என்ன பாவம் பண்ணினேனோ..தெரியலையே…..பகவான் என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிறார்?

    நம்ம குடும்பத்திலயே யாருமே இப்படி இதுவரைக்கும் வளராமல் இல்லையே . இவன் மட்டும் எப்படி இந்த மாதிரி வந்து பொறந்தான்.இப்படி குள்ள மனிதனா இருக்கும் இவனை நான் எப்படி வளர்க்கப் போறேன்.யார் செஞ்ச பாவமோ பகவானே.. இப்போ அடுத்தது வேற உண்டாயிருக்கேன். அதுவும் இப்படியே வந்து பொறந்தால் நாம என்னத்துக்காவோம்…? நான் எந்த ரிஸ்க்கும் இனிமேல் எடுக்க மாட்டேன். எனக்கு இனி அம்மிக் குழவிக் குழந்தையே வேண்டாம்.

    இந்த ராஜா ஒருத்தனே போதும்..அவனை சாதாரண மனுஷனாப் பண்ண நாம என்ன செய்யணும்…? நாளைக்கு அவனை ஒரு நல்ல டாக்டரிடம் அழைச்சுண்டு போய் காட்டலாம். இதுக்கெல்லாம் மருந்து இருக்கா…?.என்று கேவிக் கேவி அழுதாள்.

    பேசாம ‘நை நை’ ன்னு அழாமத் தூங்க விடு….அப்பா எளிதாகச் சொல்லிவிட்டு திரும்பிப் படுத்தது கண்ணுக்குள் நிழலாடியது.

    அதன் பிறகு நடந்தது எதுவும் எனக்குள் நினைவில் இல்லை.

    மிகவும் ஆசையோடு என்னைத் தூக்கி கொண்ட மாமா, அத்தை . பெரியம்மா, சித்தி , பாட்டி என்று அனைத்து உறவுகளும் தூரம் விலகிப் போனது. அதையும் தாண்டி…” ஏண்டி…பங்கஜம், நம்ம வம்சத்தில் இப்படி ஒரு கொழந்தை கிடையாதுடி..இதெல்லாம் வளரக்கறது நாளுக்கு நாள் ரொம்ப கஷ்டம்.. பேசாமல் எங்காவது சர்க்கஸில் கொண்டு போய் விட்டுட்டு. அவாளே ஏதாவது படிக்கவும் வைப்பா. ‘ஜோக்கரா’ நிறைய சர்க்கஸ் கத்துக் கொடுத்து கூடவே வெச்சுப்பா . உங்களுக்கும் பணம் தருவா. புத்திசாலித் தனமா இதை நீங்கள் ரெண்டு பேரும் யோசித்து செய்தால் பிழைச்சுப்பேள். இல்லாட்டா ரொம்ப கஷ்டம்..

    நன்னா உசரமா இருக்கறவாளுக்கே சமயத்துல இந்தக் காலத்துல வேலை, கல்யாணம்னு எதுவுமே நடக்க மாட்டேங்கறது. இவன் இனிமேல் தான் பெரிய கிளாஸ் போகப் போக இவனால ஆத்துக்கு பிரச்சனையைத் தான் கொண்டு வருவான். நான் சொல்லறதை சொல்லிட்டேன்…மகளே இனி உன் சமத்து… என்று பாட்டி கொஞ்சம் கூட மனசில் ஈரமில்லாமல் அம்மாவுக்கு ஐடியா கொடுத்து விட்டுப் போனவள்..தான். அதன் பின் நானும் பாட்டியைப் பார்க்கேவே இல்லை.

    அதற்குள் அக்கம் பக்கத்திலும் சரி, படிக்கும் பள்ளியிலும் சரி,எனது ராஜ ராஜன் என்கிற பெயர் மறைந்தே போனது. அடேய்…குள்ளா ..! டேய் குட்டையா..! டேய்..வள்ளுவன் வாக்கு..! டேய் திருக்குறளு..! ஒழக்கு, அரைக்கால் படி, அம்மிக் கல்லு, ஆட்டுக் குட்டி, அகத்தியர் அவதாரம்.. ! டேய்…குள்ள வாத்து..! என்று அவரவர்கள் எனக்கு ஒரு புதுப் பெயர் வைத்து அழைத்து சந்தோஷப் படுவார்கள். அட அட அட….இப்படிக் கூப்பிட்டு என்னை அழைக்கும் போது தான் அவர்களுக்கு மனதில் எவ்வளவு மகிழ்ச்சி பொங்கும். எல்லாருக்கும் சிரிப்பை வர வழைக்கும் போதே, என் மனம் அழுமே என்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டாரா என்ன? அப்பேர்பட்ட பிறவி நானா…? அவாளா?

    இன்னும் சிலர் டேய் ஜோக்கர்…வராண்டா..என்று கேலி செய்து அவர்கள் நேற்று சர்க்கஸ் சென்ற விபரத்தை சொல்லும்போது…டேய்…அங்க உன்ன மாதிரி நாலு அஞ்சு பஃபூன்டா….நீ பெரிசானால் அங்க தாண்டா உனக்கு வேலை கிடைக்கும். என்று அனாவசியமாகப் பாட்டியை நினைவு படுத்துவார்கள்.

    அதற்குள் இன்னொருத்தன், அதுக்கு ஏண்டா பெரிசாகணும்…இப்பவே போனாலும் வேலை நிச்சயம்..நம்ம கிளாஸ் ‘கமலஹாசன்’ டா இவன்….என்று சிரிப்பான்.

    ஓங்கி ஒரு கல்லை எடுத்து அவா மண்டையில் வீசினால் தேவலாம் போலிருக்கும் எனக்கு. அன்பாய் பேசாட்டாலும் வேண்டாம்….பரிகாசம் செய்யாமலாவது இருக்கலாம். ஆனால் அது யாருக்குப் புரிகிறது.?

    ஒருவேளை அப்படித் தான் இருக்குமோ? என்னை அம்மா இப்ப வரைக்கும் அன்பாத் தான் பார்த்துக்கறா…ஆனாலும் சமயத்தில் தானும் அழுது என்னையும் அழ வைப்பாள். அதையும் மீறி ஆத்திரத்தில் முதுகில் ‘தபேலா’ வாசிப்பாள். நீ இப்படி வந்து பொறக்கலைன்னு யாரு அழுதா..? யாரு கொடுத்த சாபமோ….ன்னு ஒப்பாரி வைப்பாள். ஒழிஞ்சு போ…ன்னு கடைசியா தனது ஆற்றாமையை என் மீது திராவகமாய் வார்த்தையில் கொட்டி என் சின்ன உடம்பை எரிப்பாள்.

    பெத்தவளுக்கே சில நேரங்களில் எரிச்சலைத் தரும் நான் மற்ற யாரிடம் அனுசரணையை எப்படி எதிர்பார்ப்பது? எனக்குள் நானே சமாதானமாகிப் போவேன்.

    அடுத்து சில மாதங்களிலேயே அப்பா அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டு அம்மாவையும் என்னையும் விட்டு விட்டு வீட்டை விட்டே வெளியேறி விட்டார். அதுக்கு ஒரு விதத்தில் நானும் என் உயரமும் தான் காரணமாக இருக்கும். அதான் அப்பா என்னோடு முகம் தாழ்த்தியே பேச மாட்டாரே.

    “இவன் தான் சிகப்பா, மூஞ்சி மொகரை எல்லாம் நன்னாத் தானே பிறந்து தொலைச்சிருக்கான்…சர்க்கஸ் வேண்டாம்னா எங்காவது சினிமாக் கம்பெனில கொண்டு போய் விட்டுடறேன்…” நீ தான் என் மகன் ராஜான்னு சொல்லி வெச்சுண்டு இருக்கே. இந்த உலகத்துல இது மாதிரி பொறந்தா அவாள்ளாம் அங்க தான் போய் இருக்கா..தெரியுமா? என்னமோ நீ தான் ஓவியக் குழந்தையைப் பெத்துட்டா மாதிரி…ஆர்ப்பாட்டம் பண்ணாதே….அப்பாவின் இந்த வார்த்தைக்கு அம்மா அடிபணியாமல் போனது தான் அவர் எங்களை விட்டுட்டு போய்விட்டார்.

    அம்மாவும் அப்பாவும் இணைந்ததற்கு ஆதாரமா நான் வந்து பொறந்தேன்… அதே நான் இப்படி வந்து பொறந்ததால் அவா ரெண்டும் பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிரிஞ்சு போயிட்டாளே….என்னோட துரதிர்ஷ்டத்தை நினைச்சு நினச்சு என் மனசும் உடல்போலக் குறுகிப் போச்சு.

    பள்ளியில் ஒரு நாள் இதையே நினைச்சுண்டு நான் தனியா அழுதுண்டு உட்கார்ந்திருந்தேன். கூடப் படிக்கும் ரேணுகா தான் அருகில் வந்து ” ஏண்டா ராஜா அழறே? என்ன விஷயம்.?..பரிட்சையில் ஃபெயில் ஆயிட்டியா என்ன..?

    இல்லை…நான் அதுக்கு அழலை..

    பின்ன ஏன் அழறே ராஜா..!

    எனக்குச் சிரிக்கத் தெரியலையே… சிரிக்க முடியலையே என்ன செய்வேன் ரேணுகா. என்னைப் பார்த்தால் எல்லாரும் சிரிக்கறா என்னால் சிரிக்க வைக்க மட்டும் தான் முடிகிறது.

    வீட்டில் தான் என் மீது அன்பு செலுத்த யாருமே இல்லைன்னு நினைச்சா..இங்க கிளாஸ்ல கூட என்னைப் பார்த்தாலே எல்லாரும் கேலி செய்யறா. அப்பாவும் எங்களை விட்டுட்டுப் வீட்டை விட்டே வெளில எங்கியோ போயிட்டா . இப்போ நான் வாழறதே வீண்.

    இன்னைக்கு சையன்ஸ் பீரியடில் பசங்க “இவன் தான் ஹுயூமன் ஹைப்ரீட் ” அல்லது மனித போன்சாய்…ன்னு சொல்லிச் சிரிச்சப்போ… அப்படியே ஏதாவது கடல்ல விழுந்து செத்துப் போயிடலாம்னு தோன்றது ரேணுகா…அப்படியே நான் விழுந்து செத்தாலும் என்னைப் பிணமாப் பார்க்கறவா கூடத் தொட பயந்துண்டு தொட மாட்டாளேன்னு கவலையா இருக்கு.

    என்ன ராஜா நீ..?அசட்டு பிசட்டுன்னு பேசாதே.பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம்னு என்
    அம்மா சொல்வா..ஆனாலும் எந்த ஒரு உபயோகமும் இல்லாத யாருமே பிறப்புதும் இல்லையாம். சிறு துரும்பும் பல் குத்த உதவும்… .ன்னு கேள்வி பட்டிருக்கே தானே…? உயரமானவரோட பல் என்பதால் யாராவது கத்தி , கபடா , கடப்பாறையை பல் குத்த உபயோகிப்பாரா ? நீயே நினைச்சுப் பாரேன். அது மாதிரி தான் நீயும்…உன்னாலயும் ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பா நடக்கும்..உயிர் வாழ உயரம் மட்டுமேத் தகுதி இல்லைன்னு நீ புரிஞ்சுக்கோ.

    நீ பேசும்போது கேட்க நன்னாத் தான் இருக்கு….நீ மட்டும் என் மேலே இருக்கும் அன்பில் என் குறை தெரியாமல் பேசறே ரேணுகா.

    உனக்கு என்ன குறை..?.உயரம் மட்டும் தானே..? அதெல்லாம் ஒரு குறையே இல்லை. உன்னையாச்சும் எல்லாரும் குள்ளன்னு மட்டும் தான் சொல்றா. ஆனா இந்த உலகத்தில் எத்தனை பேர் எப்படி எல்லாம் இருக்கா தெரியுமா? எல்லாத்தையும் விடவும் கொடுமை என்னவாயிருக்கும்னு நினைக்கறே…நீ?

    போன வாரம் என் அம்மாவோடஎன் மாமாவாத்துக்குப் போயிட்டு ரயில்ல திரும்பி வந்துண்டு இருந்தோம் ….அப்போ எங்க கம்பார்ட்மெண்டுக்குள் நாலு பேர் பிச்சை கேட்டு வந்தாங்க. எங்கம்மா சொன்னாங்க..அவங்க திருநங்கையாம். அப்படி இருக்கறவங்களை வீட்டை விட்டு துரத்தி விடுவார்களாம். அவர்கள் இப்படித் தான் கூட்டம் கூட்டமாக கை தட்டி எல்லார்கிட்டயும் கை ஏந்தி ஜீவனம் நடத்துவார்களாம் எவ்வளவு கஷ்டம் இல்லையா? ஒரு பெண் தன்னை பெண் என்று சொல்ல முடியாத நிலை..ஒரு ஆண் தன்னை ஆண் என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலை. இதை விட நீ தேவலைடா ராஜா. நீயாவது உன் குறையை வாயைத் திறந்து சொல்லிடறே… .பேச முடியாதவா எல்லாம் என்ன பண்ணுவா? யோசிச்சியா?

    நம்ம இங்கிலிஷ் டீச்சர் கூட அன்னிக்கு சொன்னாளே..”காலில் செருப்பு இல்லை யேன்னு கவலைப் படுபவன்…ரெண்டு காலே இல்லாதவனைப் பார்க்கும் வரையில் தான் அப்படிக் கவலைப் பட முடியும்னு. நீயும் சொன்னதைக் கேட்டேல்ல.

    ம்ம்…கேட்டேன்…நம்ம இங்கிலீஷ் டீச்சர் ரொம்ப நல்லவர்…! என்னிடம் ரொம்ப அன்பா பேசுவார்.

    எனக்குள் எதுவோ புரிந்தது போல இருந்தது. ரேணுகா…நீ சொல்றது ஒரு விதத்தில் சரி தான். இருந்தாலும் எனக்குள் இருக்கும் பையனைப் பற்றி இவர்கள் ஏன் இங்கு யாருமே புரிந்து கொள்வதில்லை. எனக்கு நேர்ந்த இந்த ஒரு சின்ன மாற்றம் யாருக்கு வேண்டுமென்றாலும் நிகழ்ந்திருக்கும் இல்லையா? இது எனக்கு மட்டுமா விதிச்ச விதியா என்ன .?

    ராஜா..அவர்கள் உன் வெளி உருவத்தை மட்டும் தான் பார்த்து கேலியும் கிண்டலும் செய்ய முடியும். அதுவே நீ படித்து ஒரு நிலைக்கு உன்னை உயர்த்திக் கொண்டால் அவர்களுக்கு உன் இந்த உயரம் இணையாகி கண்ணுக்கு உன் குறையேத் தெரியாது. உன் உயரமே மறந்து மறைந்து போகுமடா…நீ வேணாப் பாரேன்..என்னிக்காச்சும் நீ நான் சொன்னதை நினைச்சுப் பார்க்கும் காலம் வரும்..!

    அதற்குள் பள்ளிக் கூட மணி அடிக்க இருவரும் கலைந்து போனோம். இன்றும் அது நினைவுக்குள் இருக்கு.

    ரேணுகா அன்று எனது பதினைந்து வயதில் என் சின்ன மனதில் அன்போடு விதைத்த சின்ன நம்பிக்கை விதை தான்…இன்று வரை எனக்குள் மரமாக வளர்ந்து என்னை ஒரு உயரத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இல்லாவிட்டால் நானும் இந்த சமூகத்தின் சாட்டைப் பார்வையிலிருந்து தப்பிக்க எனக்கே ஒரு முகமூடி போட்டுக் கொண்டு கூடாரத்துக்குள் சுத்திலும் எல்லாரும் கைகொட்டிச் சிரிக்க நான் ஓரமாக பல்டி அடித்துக் கொண்டு பந்து விளையாடிக் கொண்டு தொப்பியைத் தூக்கி எரிந்து கொண்டும் இருந்திருப்பேன். இப்போ நாலடி இருக்கும் எனக்குள் ஒரு நாலடியாரே குடியிருக்கார்.

    ஆனால் ஷீலா மாதிரியானவர் கண்களுக்கு அந்த நாலடியார் உயரம் உருவமாக மட்டும் தான் தெரிவார் போலிருக்கு.

    மனசுக்குள் பழைய நினைவுகள் அலைமோத , வேலைகள் முழுவதும் அசுர வேகத்தில் முடித்து விட்டு “அப்பாடா என்று நிமிரும்போது “

    தயக்கத்துடன் டைபிஸ்ட் ஷீலா வந்து அருகில் நிற்கிறாள்.

    சார். உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்.

    சொல்லும்மா..என்ன விஷயம்.?…இந்த நாலடியார்ட்ட..! சிரித்தபடியே கேட்கிறேன். அந்த டிபார்ட்மெண்டுக்கு நான் தான் ‘ஹெட்.’. அதுவே அனைவருக்கும் ஜோக்கு மாதிரி இருக்கும்.

    இந்த டிபார்ட்மென்ட் ஹெட் இவர் தான்…இருந்தாலும் இவர் தலை டேபிளுக்கு மேலே தெரியாது..என்று கேலி பேசுவார்கள்.

    ராஜன் சார்..தப்பா எடுத்துக்காதீங்க..சொலணும்னு நினைக்கறேன்…சொல்ல முடியலை. ரொம்பத் தயக்கமா இருக்கு.எனக்கு செய்யும் உதவியாக நீங்க…! நீங்க…! ஷீலா தடுமாறுகிறாள்.

    ம்…சொல்லும்மா..இவ்ளோ தயக்கம் ஏன் உங்களுக்கு..? என்னால் முடிஞ்சதைச் செய்வேன். முடிஞ்சால் செய்வேன்…என்ற என்னைப் பார்த்தவள் , ஏதோ குழப்பத்துடன்….

    இல்ல..இல்ல…இப்ப வேண்டாம்…..எனக்கு சொல்லத் தயக்கமா இருக்கு. நான் எழுதி கொண்டு வரேன்..ப்ளீஸ்…சாரி..சொன்னவள் அன்று பர்மிஷன் கேட்டு விட்டு சீக்கிரமே வீட்டுக்கு சென்று விட்டாள் .

    ஒரு வேளை என் முகத்தைப் பார்த்து பயந்திருப்பாளோ ?

    “அஸ் யு விஷ் ” ன்னு வாய் சொன்னாலும்..மனசு என்னாச்சு இவங்களுக்கு….? என்று என் கேள்வியும் ஷீலாவின் பின்னாலயே போனது. இப்போ தானே இவங்களுக்குக் ரொம்ப விமரிசையா கல்யாணம் ஆகி ஆறு மாதம் ஆகப் போகிறது.

    அன்று ஆபீசில் எல்லாரும் ஷீலாவின் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்து சாப்பாட்டுப் புராணம் பாடிக் கொண்டிருந்தார்கள் .

    ராஜன் சார்….எல்லாரும் வந்தார்கள் நீங்கள் மட்டும் தான் ஆப்சென்ட்…! வந்திருக்கலாம்…என்றான் ஆபீஸ் பியூன்..ஆண்டியப்பன்

    நான் எந்த விசேஷத்துக்கும் போறதில்லைப்பா . கூட்டத்தில் நான் என்னையே தொலைத்து விடுவேன்..என்று சிரித்தேன்.

    உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை சார்….! பியூன் நக்கலாகச் சிரித்தான்.

    ஆமாம்…எனக்கு இறைவன் போட்ட பாதுகாப்புக் கவசம் தான் என் உயரம்ன்னு நினைக்கறேன். அதனால் தான் நான் அதுக்குள்ளே மட்டும் இருக்க விரும்பறேன். எனக்கு அதில் வருத்தமோ , வேதனையோ துளியும் கிடையாது. என்ன ஒண்ணு …அப்பப்போ ஏதாவது குழந்தைகளுக்கும் சில சமயம் ஒரு பெரிய விளையாட்டு பொம்மை மாதிரி தெரிகிறேன்….அதிலும் பெருமை தான் எனக்கு. சில குழந்தைகள் பள்ளிக்கு ஆட்டோவில் போகும்போது…என்னைப் பார்த்து ஹேய்…’இதோடா…ரோபோ’ ன்னு கத்தி சொல்லும் போது …எங்கே…? எங்கே…?..என்று மற்ற குழைந்தைகள் ஆர்வத்தோடு பார்க்கும் போது .போனால் போகட்டும்ன்னு …நானும் அவர்களோடு விளையாட்டில் சேர்ந்து கொண்டு..ரோபோ மாதிரியே கையைக் காலை நீட்டிக் காண்பித்து உற்சாகமூட்டுவேன்.

    ஆனால்…!

    மல்லிகைப் பூவோட வீட்டுக்குள் நுழையும் என்னை பார்த்து பக்கத்து வீட்டுப் பெண் நமுட்டுச் சிரிப்புடன் சிரித்தபடி உள்ளே நுழைவதைப் பார்த்ததும் என் முதுகின் கண்களும் பனித்து விட்டது. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான்…நீ கவலைப் படாதே…ராஜா…மனம் முதுகைத் தட்டிக் கொடுத்தது.

    கை கால்களை அலம்பும் போது…தண்ணீர் தட்டுப் பாட்டுக்கு இது தேவலை என்று சொல்லிக் கொண்டேன். மற்றபடி எல்லாரும் செய்யும் வேலைகளைத் தான் நானும் செய்கிறேன்.

    சூடாக காப்பி போட்டுக் கொண்டு வந்து அப்படியே டிவி யைப் போட்டு விட்டு, சோபாவில் உட்கார்ந்தது தான் தாமதம்.

    “பழைய இரும்பு, ஈயம், பித்தாளைக்குப் பேரிச்சம்பளம்…” பழைய இரும்பு , ஈயம், பித்தாளைக்குப் பேரிச்சம்பளம்…” என்று ஒரு ஓட்டை சைக்கிளை உருட்டிக் கொண்டு கவுண்டமணியின் ஓட்டைக் காரைப் பார்த்து கத்திக் கொண்டிருந்த குள்ளமணியை கவுண்டமணி உதைத்து அனுப்பும் காட்சி….” ஆதித்யா சானலில் கத்திக் கொண்டிருந்தது… எனக்குள் எரிச்சலைத் தந்தது.

    ஏதோ…குள்ளமாகப் பிறந்து விட்டால் பிறருக்கு சிரிப்பதற்காகவே இறைவன் கொடுத்த பிறவி போல எங்கள் படைப்பை மாற்றிப் பார்க்கும் இந்த சமூகம். இதற்க்கெல்லாம் எப்போது விடிவு வருமோ? மற்ற உடல் ஊனங்களை உள்ளவர்கள் மீது கருணை காட்டும் இந்த சமூகம், குள்ளமாய் இருக்கும் என்மீது மட்டும் வெறுப்பைக் காட்டி வேதனை தருகிறது !

    நல்லவேளையா அன்று ரேணுகா என்ற அந்தப் பெண் தேவதை சமயத்தில் கொடுத்த ஒரு ஊக்கத்தால் நான் என்னையே மனதளவில் உயரமாக ஆக்கிக் கொள்ள படிக்க ஆரம்பித்தேன். குறிக்கோளே வெறியாக படிக்க ஆரம்பித்தேன். அதன் பலன் தானே எனக்கென ஒரு அரசாங்க நாற்காலியைக் கொடுத்து சம்பளமும் கொடுத்தது. பின்ன ஊரெல்லாம் கேலி பேசும் ஒரு குள்ளன் அத்தனை அவமானத்தையும் தாங்கி படித்து அரசு உத்தியோகம் கிடைப்பது என்பது சும்மாவா? இல்லாவிட்டால் இந்த உயரமான மனிதர்களின் உதாசீனத்தில் என் மனசு தினமும் பூமிக்குள் புதைக்கப் பட்டு மனசும் குள்ளமாகி இருக்கும்.

    பாவம் இந்தக் குள்ளமணி….அந்தக் காலத்திலிருந்து யாராவது ஒருத்தர் உதைப்பது போலவே காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். நினைத்தபடியே டிவி யை அணைத்து விட்டுக் கிளம்பினேன்.

    மல்லிகைப் பூவை முருகன் படத்துக்கு போட்டுக் கொண்டிருந்தேன்..அப்போது பார்த்து கதவு தட்டும் ஓசை கேட்டது.

    யாராயிருக்கும்? கதவைத் திறந்து அண்ணாந்து பார்க்கிறேன்.

    பால்காரப் பையன்…தியாகு . வாசலில் அவனை அண்ணாந்து பார்க்கிறேன்.

    என்னப்பா தியாகு வேணும்? சொல்லுப்பா..என்றேன்.

    அண்ணா….போன தடவை நீங்கள் தான் எனக்கு டெர்ம் ஃபீஸ் கட்டினேள் . நான் இந்த தடவையும் உங்களைக் கேட்கலாம்னு வந்திருக்கேன். அதான் அம்மா உங்களைப் பார்த்து கேட்கச் சொன்னாள். அவன் குரலில் தயக்கம்.

    கண்டிப்பாத் தரேன்…எவ்வளவு வேணும்..?

    ஆறாயிரம் ரூபாய்….பணிவோடு சொல்கிறான் தியாகு.

    எனக்கென்ன கல்யாணமா…பிள்ளை குட்டியா..? இல்லை உடன் பிறந்தவா தான் இருக்காளா? நான் தனிக்கட்டை பிரமச்சாரி…என் பணம் உன் படிப்புக்கு உதவினால் அதுவே நேக்குப் போறும் . வருஷா வருஷம் வந்து வாங்கிக்கோ.

    இந்தா செக் . பணத்தை பாங்கில் வாங்கி ஃபீஸ் கட்டிட்டு சொல்லு..அப்படியே இந்தா என்னோட ஷர்ட் நாலு தரேன்…உன் தம்பிக்கு கொண்டு போய்க் கொடு….எல்லாம் புதுசு தான் என்று சொல்லிக் கொண்டே எடுத்துத் தருகிறேன்.

    அண்ணா….இப்போ என் தம்பி கூட நன்னா உயரமா வளர்ந்துட்டான். அவனுக்குப் பத்தாது… அதனால ஷர்டெல்லாம் வேண்டாம்…என்று சொல்லிவிட்டு செக்கை மட்டும் வாங்கிக் கொள்கிறான் அவன்.

    முகத்தில் அரை விழாத குறையாக சட்டையைக் கசக்கித் தூர எறிந்தேன். என்னோட சட்டைகள் கூட யாருக்கும் உபயோகப் படாதா? போனால் போகட்டும் போடா….! மனசு தைரியம் சொன்னது.

    வழக்கம் போல பவர்கட்டுக்கு முன்பே லிஃப்டைப் பிடித்து என் சீட்டில் போய் அமர்ந்ததும் …ஷீலா கூடவே ஒரு ஏழு வயது பெண்ணோடு உள்ளே நுழைகிறாள் .

    குட் மார்னிங் சார்..இது என்னோட நாத்தனாரின் பெண். இன்னைக்கு ஸ்கூல் லீவு..நானும் வரேன்னு சொன்னாள் . அழைச்சுண்டு வந்தேன். என்றவள்..நேற்று கேட்க வேண்டும் என்று நினைத்ததை இதில் எழுதி இருக்கிறேன். என்று ஒரு பேப்பரை என் டேபிள் மீது வைத்து விட்டு நகர்ந்தாள் .

    அவள் நகர்ந்ததும்….நான்காக மடித்த அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்கிறேன். அதில்.

    ” சாதாரணமாக நாம் யாரை அதிக நேரம் நேருக்கு நேர் பார்க்கிறோமோ, பழகுகிறோமோ அவர்களைப் போலவே நம் மனோபாவம் மாறும் என்றும்…குறிப்பாக ஒரு தாயாகப் போகிறவள் தனது குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அதற்கு ஏற்றார்போல படங்களைப் பார்த்து வரச் சொல்வார்கள்..இப்போது எனக்கு இது மூன்றாவது மாதம் நடக்கிறது.நான் நாள் பூராவும் என் எதிரில் இருக்கும் உங்களைத் தான் பார்த்து வருகிறேன். அதனால் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தை உங்களைப் போன்ற உருவத்துடன் பிறந்து விடக் கூடாது என்று எண்ணுகிறேன்.தயவு செய்து என்னை கீழ் தளத்துக்கு மாற்றி விடுங்கள். தவறாக நினைக்க வேண்டாம். இது என் தனிப்பட்ட வேண்டுகோள்.

    இதைப் பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம்..” புரிந்து கொண்டு ஆவன செய்வீர்கள்…என்று நம்புகிறேன்.

    ஷீலா சந்திரன்.

    அவள் எழுதி இருந்ததைப் படித்து முடித்தேன்.

    சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்தை சொல்லியிருந்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. ஒருவேளை இவள் சொல்வது போல என் அம்மாவுக்கும் இப்படி ஏதாவது நிகழ்வுகள் நடந்திருக்கலாமோ..? என்று கூட எண்ணத் தோன்றியது. ஷீலா புத்திசாலிப் பெண்…மனசுக்குல அவளைப் பாராட்டிய படியே…அவளைக் கீழ் தளத்திற்கு மாற்ற உத்தரவு பண்ணி ஆர்டர் அடித்து கையில் கொடுத்தேன்.

    அவள் கண்களில் நன்றியும் கண்ணீர்த்துளியும் சேர்ந்து நின்று கண்ணை மறைத்தது. என் கண்களில் பெருமை பொங்கியது. “ரொம்ப சந்தோஷம் ஷீலா….நல்ல வேளை சொன்னீர்கள்….இல்லாவிட்டால் இதெல்லாம் என் சின்ன மண்டைக்குள் எப்படி உரைக்கும்…? என்று சொன்னதும் அவள் ரொம்ப நன்றி சார் என்று தழு தழுத்தாள் . பின்பு தன்னுடைய ஹாண்ட் பேக்கை தூக்கி மாட்டிக் கொண்டு..சில பைல்களையும் எடுத்துக் கொண்டு கூட வந்த நாத்தனார் மகளையும் அழைத்துக் கொண்டு “அப்போ வரேன் சார்…பார்க்கலாம்..” என்று சொல்லி கீழ் தளத்துக்குக் கிளம்பி விட்டாள்.

    இந்தா…கொழந்தே…உன் பேர் என்னம்மா..? இந்தா சாக்லேட்டு….எடுத்துக்கோ என்று கொடுத்ததும் .

    சிறிது தயங்கினாலும்…ஓடி வந்து வாங்கிக் கொண்டு சிரித்து விட்டு ஷீலாவின் கைகளைப் பற்றிக் கொண்டு மறுபடியும் என்னைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றாள் .

    அடுத்த அரை மணி நேரத்தில்….பவர் கட்டாகி ஆபீசே இருட்டில் சிக்கிக் கொண்டது.இன்னும் இரண்டு வாரத்தில் ஜெனரேட்டர் வைப்பதாக ஹெட் ஆஃபீஸில் இருந்து தகவல் வந்தது. அது வரை கொஞ்சம் பொறுமையாகத் தான் இருக்க வேண்டும். அதற்குள் கீழிருந்து அழுகை சத்தமும், எதிரொலியும் தொடர்ந்து கேட்டது. யார்? என்ன ? எது? என்று ஆயிரம் கேள்விகள்.எனக்கு முன்னால் ஓட….நானும் விறு விறுவென்று மாடிப் படியைக் கடந்து தாவி குதித்து இறங்கவும்….ஷீலா பயத்தில் உறைந்து போய் லிஃப்ட்டின் அருகே நின்றிருந்தாள் …அருகில் இருந்த அனைவரும் என்னவோ போல பர பரத்துக் கொண்டிருந்தார்கள்.

    நிலைமையை உடனே புரிந்து கொண்டேன் நான். யாரும் கூட்டம் போடாதீங்க…கொஞ்சம் விலகுங்க..என்று சொல்லிக் கொண்டே நான் நுழைந்தேன்…என் உயரத்துக்கு அந்த லிஃப்ட் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இது எப்படியாச்சு? என்றேன், உள்ளே யார் இருக்கானாக ஷீலா என்றும் கேட்டேன்.

    ஷீலா அழைத்து வந்த பெண் குழந்தை லிப்டில் ஏறி ஏதோ பட்டனைத் தட்டியதும் லிப்ட் தானாக மேலே ஏறத் தொடங்கியது அடுத்த சில நொடியில் ‘பவர் கட் ‘ஆகி….லிஃப்ட் முக்கால்வாசி மேலே சென்று அந்தரத்தில் நின்று விட்டது . லிஃ ப்ட் இருட்டில் மாட்டிக் கொண்ட குழந்தையோ பயத்தில் வீரிட்டு பின்னால் ஓரத்தில் ஒடுங்கிக் கொண்டது. அவள் போட்ட சத்தத்தில் கட்டடமே அதிர்ந்தது.

    லிஃப்ட்டின் அடிப்பகுதி மட்டும் மேலே அந்தரத்தில் சிறு இடைவெளியில் தெரிய…ஒரே ஆதரவு அது பழங்கால ஸ்ப்ரிங் அமைப்பை உடையது..இருந்த இடைவெளி சிறிது நம்பிக்கையைத் தந்தது.இருந்தும் குழந்தையை வெளியே கொண்டு வர வேண்டுமே.. யாராவது வந்து குழந்தையைக் காப்பாத்துங்கோ என்று ஷீலா கத்தினாள். வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் பெருகியது ! யாரும் உள்ளே தவழ்ந்து போக முடியவில்லை. உள்ளே குழந்தையின் அலறல்! வெளியே ஷீலாவின் அலறல்.

    சார்…திடீர்னு இப்படியாச்சு சார்…நான் இப்படியாகும்னு நினைக்கவே இல்லை சார்..ப்ளீஸ் யாராவது ஏதாச்சும் செய்யுங்களேன்…ஷீலா துடித்தாள். குழந்தை பயப்படுவாளே…அவளது தவிப்பு எனக்கும் தொடர்ந்தது.

    நான் ஒரு மரச் சேரைப் போட்டு ஏறி அதிலிருந்து மிகவும் எளிதாக லி ஃப்டைப் பிடித்து தொங்கி, மெள்ள, மெள்ள க்ரில்லை இழுத்துத் திறந்து இடைவெளி வழியே உள்ளே நுழைந்து கொண்டு அதனுள் ஏறினேன்.ஓரமாக அழுது கொண்டிருந்தவளை சமாதானப் படுத்தினேன்.

    முதலில் அந்தப் பெண் பயந்தாலும் என்னை அந்த பயத்துடனேயே இறுக்கிக் கட்டிக் கொண்டாள் . அந்த அணைப்பில்….என்னுள் எழுந்த அன்பில் பெருமிதம் கண்டேன்.கவலைப் படாதே என்ன…..நாம வெளில போயிடலாம்….என்னை கெட்டியாப் பிடிச்சுக்கோ…என்று சொல்லிக் கொண்டே இருந்த சின்ன இடைவெளி வழியாக குழந்தையை வெளியே கொண்டு வந்து நானும் மெல்ல வெளியேறி வரவும்…அங்கிருந்த அனைவரின் முகத்தில் சந்தோஷமும் வாய்க் கூச்சல்களும், கைதட்டல்களும் காதைப் பிளந்தன. ஷீலா கண்களில் கண்ணீர்த் துளிகள் மின்னின ! குழந்தை ஷீலாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “மாமி” என்று அழுது கொண்டே என்னைப் பார்த்ததும் சிரித்தாள்.

    என்னடி ரம்யா இப்படிப் பண்ணிட்டே….என்று அவளை வாரி அணைத்துக் கொண்டு அழுத ஷீலா…அடுத்து மூன்று மணி நேரம் மின்வெட்டு வேறு…நல்லவேளையா நீங்க வந்து தெய்வம் போல இவளைக் காப்பாற்றினீங்க….என்று ஆனந்தக் கண்ணீரோடு இரு கை கூப்பி சொன்ன ஷீலாவின் கண்களில் நன்றி தெரிந்தது.

    “எனது உயரம் இதற்கு பயன் பட்டதை நினைத்தால் எனக்குப் பெருமையா இருக்கு ஷீலா..” என்றேன்..

    அப்போது ஷீலாவின் மங்கிய விழிகளில் ‘நாலடியார்’ நாற்பதடிக் கோபுர உயரத்தில் எரியும் அணையா விளக்காய் தோன்றினார். உயரம் ஒருவரின் உருவத்தில் இல்லை என்று ரேணுகா சொன்னது இன்றும் காதுக்குள் ஒலித்தது.

    Share
  • ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2

    தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர்,
    சிதம்பரம்.

    எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள்

    1968

    குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா,

    சொந்த ஊர் : வத்தலக்குண்டு .

    பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது.

    எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள், சில வசன கவிதைகள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளராகவும் ஆனந்த விகடனில் 1987 இல் அறிமுகமாகப் பெற்றவர்.

    பெற்ற பரிசுகள்: தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு. அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன். ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் யுக்ரெயின் மொழியாக்கம் 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.

    ஆங்கிலத்தில் 1975 இல் ஃ பெமினாவின் வாயிலாக அறிமுகம். 25 சிறுகதைகள், ஒரு மினி நாவல். ஆங்கில மரபுக் கவிதை  இராமாயணம் (1789 பாடல்கள்) , திருக்குறள், (Voice of Valluvar) காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் (Gandhi Episodes),  நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் (Pearls from the Prophet),  சத்தியசாயி பாபாவின் வரலாறு (The Living God at Puttaparthi )  ஆகியவை டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் POET  இல் தொடர்களாக வந்துள்ளன.

    விம்ன்ஸ் எரா , தி ஹிந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் தனது இன்றைய எண்ணங்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

    சமீபத்தில் “செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி,  மன்னார்குடி” இந்த சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக  எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசும் , விருதும் , கேடயமும் அளித்து  கெளரவித்துப் பெருமை சேர்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

    2. அதிர்ச்சி …!

    குறுநாவல்  எழுதியவர்:  ஜோதிர்லதா கிரிஜா.
    வெளியான வருடம்:  1970.

    இரண்டாவது  மலராக நறுமணம் வீசும் இந்த “அதிர்ச்சி ” என்கிற இந்த குறிஞ்சி மலரைப்  பறிக்கிறேன்..

    கதை குறிஞ்சிப்பூவாக மலர்ந்து கிட்டத்தட்ட 42 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும்  இன்னும் சிறுகதை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை நிரந்தரமாகப் பிடித்துக் கொண்டு படித்தவர் மனதை இறுக்கிப் பற்றிக்  கொண்டிருக்கிறது.

    மலரின் கூம்பு  இதழ்களைப் போலவே இதில் பாத்திரப் படைப்புகளும் கச்சிதமாக கூம்பாக உள்வாங்கி உணர்வுகளைக் கொத்துக் கொத்தாக மென்மையாக மனதைக்  கவர்கிறது.

    பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலரையொத்த இந்த குறுநாவலைப் படிக்கும் ஒவ்வொரு உள்ளமும் “இது போன்ற ஒரு கதையை இது வரை படித்ததில்லை….இனியும் யாரும் இவ்வளவு அழகாக எழுதவும்  மாட்டார்” என்று எண்ணாமல் இருக்க முடியாது. படிக்கும் போதே கதை பேசும் ‘அதிர்ச்சி’ அனுபவம் உண்டாவதும் உறுதி.

    இத்தனை ‘அதிர்ச்சி’ தரும் கதையில் அப்படி என்ன தான் இருக்கிறது..? குறிஞ்சி மலரை மலை சார்ந்த இடங்களில் உயரமான இடங்களில் மட்டுமே காணக் கிடைப்பது போல கதையைப் படிக்கும் போதே மலை ஏற்றம் தரும் உணர்வுடன் கொண்டு செல்வது புதுமை.

    கதையின் சாரம்:

    தனது  மனைவியை இழந்தவர் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் தனக்கு இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டு மேலும் அரை டஜன் குழந்தைகளைப் பெற்று, இருக்கும் இயலாமை , ஏழ்மை இரண்டும் தீராமல் போக, வயது வந்த பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்விக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாது இருக்கும் ஒரு தகப்பன்.

    ஏழ்மை தனக்குத் தந்த வரமான வாழ்க்கையாக இரண்டாம் தாரமாக வாக்கப்பட்ட அவரின் மனைவி தான் வெறும் பிள்ளைப் பெறும் இயந்திரம் மட்டுமே எனபதைப் போல பத்து வருடத்தில் ஆறு குழந்தைகளைப் படைத்து படைப்பாளியாகப் பெருமை கொள்ளும் விதமாக ‘சித்தி’ யின்  பாத்திரப் படைப்பு.

    தாயை இழந்த மூத்த மகள் தன் தந்தை செய்த இந்த இரண்டாம் கல்யாணத்தை ஏற்க மனசில்லாமல்,மனதோடு புழுங்கி இப்படி செய்து விட்டாரே..என்று வேதனை பட்டு, ஆத்திரப் பட்டும், அதனாலேயே தனக்கு அன்னை முறையாக வந்த ‘சித்தி ‘ யைக் கூட மனசளவில் ஏற்காமல் தாயை நினைத்து வருந்துவது.

    குடும்பத்தின் கஷ்டத்தை மனதில் கொண்டு அக்கா, தங்கை இருவருமே மாலையில் பஜ்ஜியும், போண்டாவும் செய்து தெருத் தெருவாக நடந்து விற்பனை செய்ய, அந்த வியாபார நேரத்தில் நடக்கும் வியாபாரம் செய்கிறேன் என்று வீடுகளில் ஆண்கள் செய்யும்  பல வித அத்துமீறல்கள்.., அவர்களின்  வக்கிரங்கள் , ஒரு ஏழைப் பெண் தனது வாழ்வாதாரத்துக்கு உழைத்து சம்பாதிக்க முனைந்தாலும் அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு, அவர்களின் நைந்து போன உள்ளத்தைப் பார்க்காமல்…உடலைப் பார்த்து தனது வக்கிரங்களுக்கு வடிகால் தேட முயலும் போது…மேலும் உள்ளம் புண்ணாக…அங்கங்கு வியாபாரம் செய்வதையே நிறுத்தி விடுகிறார்கள்.இதற்கெல்லாம் விடிவே கிடையாதா? என்றும்  மனசு ஏங்க  வைக்கிறது.

    அக்காவுக்கு வயதாகியும் இன்னும் திருமணம் நடக்காமல் இருக்கிறதே என்று மனசுக்குள் கவலைப் பட்டு…அதைத் தனது அக்காவிடமே எடுத்துச் சொல்லி…நானா இருந்திருந்தால் ‘ஓடிப் போயிருப்பேண்டி அக்கா….ஓடிப் போயிருப்பேன்…’ என்று தனது ஆதங்கத்தை வெளிப் படுத்துகிறார் தங்கை ஜானகி. தங்களது பெருகிய குடும்பத்தின் ஏழ்மையை விரட்ட வீடு வீடாகச் சென்று பஜ்ஜியும் , போண்டாவும் வியாபாரம் செய்து பணம் கொண்டு வருவதனால் தான் தனது தந்தை நம் இருவரையும் திருமணம் செய்து வைக்காமல் வீட்டோடு வைத்துக் கொண்டிருக்கிறார். இதை நானே கேட்கிறேன்…என்று நேரம் பார்த்து தன்  தந்தையை கேட்கும்  அனல் பறக்கும் வார்த்தைகளைக்  கேட்டு அக்காவே தங்கையைத் திட்டுகிறாள்.

    தனது இயலாமையை உணர்ந்தாலும் இப்போது தன்னால் ஏதும் செய்ய இயலாது , மகளின் திருமணத்திற்கு வரதட்சிணை ஏதும் தந்து நடத்தி வைக்க  இயலாது என்று தெரிவித்ததும்…இப்பேர்பட்ட குடும்பத்தை விட்டு ஓடினாலும் பரவாயில்லை என்னும் தனது உணர்வுக்கு சரியான முடிவாக அவள்  மனதுக்குள் ஏற்றுக் கொள்கிறாள்.

    இந்நிலையில், அக்காவின் வாடிக்கையாக வியாபாரம் செய்யும்  பெட்டிக்கடைக்காரர் நடேசன் அவளைக் காதலிப்பதாகவும், தான் முதலியார் வகுப்பைச்  சேர்ந்தவர் என்பதால்  உள்ளூரில் மணந்து கொண்டு வாழ இயலாது என்பதால் எங்காவது வெளியூரில் சென்று வாழலாம்…அதற்கான  சம்மதம் கேட்டுக் கடிதம் எழுதித் தரவும். அதை வாங்கிப் படித்து மனம் ஏற்றாலும் , பரிபூரணமாக நடேசனைத் தானும் விரும்பினாலும், குடும்பத்தில் மூத்தவளாக இருந்து கொண்டு, தனக்கும் மனசுக்குப் பிடித்திருக்கிறது என்னும் ஒரே காரணத்தில் சுயநலமாக எண்ணி  தான் ‘நடேசனோடு ஓடிப் போனால்’ தன்  தங்கையின் திருமணம் தடைபட்டு விடுமே என்ற ஒரே நல்லெண்ணத்தில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு அவரைத் நிராகரித்து, தவிர்த்து விடுகிறாள்.

    இருந்தும் சில நாட்கள் கழித்து நடேசனைப் பார்க்க வேண்டும் என்று மேலோங்கிய எண்ணத்தினால் அந்தப் பெட்டிக் கடைக்குச் செல்லும் போது  தான், அவர் அந்தக் கடையை வேறோருவருக்கு விற்று விட்டு சென்ற விஷயம். மனம் ஓடிந்தவளாக  வீடு திரும்பும் அக்கா இனி அவனைப் பார்க்கும் வாய்ப்பு தனக்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்டு வருந்துகிறாள். அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான் என்று தன்னைத் தேற்றி கொண்டு வளைய வரும் வேளையில்  தான் அவளது தங்கை ஜானகி தான் இரண்டு வருஷமாக அந்த ஊரின் மெயின் ரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தும் கேசவன் நாயரின் தம்பி மாதவன் நாயரைத் தான் என்பவரை மனதார விரும்புவதாகவும், அவர்கள் வீட்டில் திருமணத்துக்கு  அவசரப் படுத்துவதாலும், அவர்கள் குடும்பத்தோடு கேரளாவுக்கு சென்று விடுவதால் தானும் அவர்களோடு சேர்ந்து சென்று விடலாம் என்னும் எண்ணத்தில் இருப்பதாகவும் சொல்கிறாள்.

    இரண்டு வருஷமாகச் சொல்லாமல் மூடி வைத்ததால், தங்கையின் எதிர்காலம் கருதி தனது காதலைக் கருக்கி விட்டேனே என்று மனதுக்குள் அழுதவளாக தனது அக்காவிடம் மட்டும் சொல்லி ஆசி வாங்கிச் செல்ல வரும் தங்கையின் தோளில் முகம் புதைத்து  மனத்தின் பாரம் இறங்க அடக்க முடியாமல் அழுகிறாள் அக்கா.

    அதில், கூடப் பிறந்த தங்கையைப்  பிரிகிறோமே  என்ற வருத்தத்தைத் தாண்டி தான் ஏமாந்து விட்டேனே என்ற  ஆற்றாமையும் சேர்ந்து கொண்டது அவளது  தங்கைக்குத் தெரியாது .

    பரிமளாவுக்கு  ஏற்பட்ட ‘அதிர்ச்சி’யை மிகவும் அழகாக எடுத்துக் கூறி தலைப்போடு கூடி கதை முடிகிறது.

    இனி , கொத்தாக குறிஞ்சி மலர் :

    இந்தக் கதையில் ஒரு சராசரி மனுஷியின் அத்தனை குணங்களும் பிரதி பலிக்கும் வண்ணம்
    இருக்கும் பாத்திரப் படைப்புகளைச் சித்தரித்திருப்பது யதார்த்தம். கதை முடிந்த பின்பும் கூட மனதைத் தாக்கி மௌனப் படுத்திவிடும் ‘அதிர்ச்சி’.

    இதோ.. மொட்டாக :

    விளக்கைச்  சுற்றி சுற்றிப் பறந்து கொண்டிருந்த விட்டில் பூச்சி கடைசியில் அதற்குள் விழுந்து விளக்கையும் அணைத்து தானும் அதிலேயே விழுந்து செத்துப் போய் கூடத்தை இருள் மயமாக்கியது. இந்த ஒரு நிகழ்ச்சி கூட தத்ரூபமாக எழுத்திலேயே ஒளியைக் காண்பித்தது .

    கதையின் ஆரம்பம்,  இருட்டை ஒளிமயமாக்க வேண்டி தீப்பெட்டி தேடும் நிலையில் கதையின் நாயகி வெளியே வருகிறாள். அந்த நேரத்தில் அந்த இருளில் தீப்பெட்டி தேடும் போதே…நமக்கு தன தங்கை, சித்தி, அப்பா..இறந்து போன தனது அம்மா என்று ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைக்கும் விதம் அருமை.

    விளக்கேற்றி அந்த இடத்தில் ஒளி வரும்போது, நம்மிடையே அந்தப் பாத்திரத்தின் பரிமளம் புரிபடுகிறது.

    மெல்ல இதழ் விரிகிறது :

    வெறுப்பு:

    தன்னைப் பெற்ற தந்தையாகவே இருந்தாலும், “அந்த விட்டில் பூச்சிக்கும் நாற்பது வயதுக்கு மேல் இரண்டாம் தடவையாகத் திருமணம் செய்து கொண்டு வேண்டாத குடும்பச் சுமையை இழுத்து விட்டுக் கொண்டிருக்கும் இந்த அசட்டு அப்பாவுக்குமிடையே எந்த வகையான வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு ”  அந்தப் பூச்சி உயிரையே விட்டுத் தொலைத்து விட்டது. இந்த மனிதப் பூச்சியோ நானும் உயிர் வாழ்ந்து கொண்டு இன்னும் சில உயிர்களை பிறப்பித்துக் கொண்டு நானும் வாழ்கிறேன் என்று அரை உயிராய் வாழ்ந்து கொண்டிருக்கிறது…”  என்று எண்ணுமிடத்தில் வெறுப்பை உமிழ்கிறது.

    அருவருப்பு:

    படுக்கையில் விழுந்த எனக்குத் தூக்கம் வரமாட்டேன் என்றது. சித்திக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த அவளுடைய ஐந்து குழந்தைகளையும் ஆறாவதாக அவள் வயிற்றுள் வளர்ந்து கொண்டிருந்த உயிரையும் நினைத்துப் பார்த்தபோது எனக்கு அருவருப்பாய் இருந்தது. ஆமாம்..என் தம்பி , தங்கைகள் என்கிற நினைப்பைக் காட்டிலும் சித்தியின் குழந்தைகள் என்கிற நினைப்பே மிகுதியாக நெஞ்சில் எழுகிறது.அப்படி நினைப்பது தப்பாக இருக்கலாம். ஆனால் அப்படித்தான் என்னால் நினைக்க முடிகிறது. இந்த வரிகள் மிதமிஞ்சிய ஒரு அருவருப்பை தன் உறவுகள் மீதே பொழிகிறது.

    நியாயம் :

    “ஆழ்ந்து சிந்திக்கும் போது சித்தியையோ அவள் பெற்றிருக்கிற குழந்தைகளையோ வெறுப்பது பாவம் என்றும் அம்மா செத்துப் போய் ஒரே வருடத்துக்குள் சித்தியை அழைத்துக் கொண்டு வந்தவரும் இத்தனை உயிர்களுக்கு படைப்பாளியுமான அப்பாவைத் தான் நியாயமாகப் பார்க்கப் போனால் வெறுக்க வேண்டும் என்று தோன்றுகிறது”. இந்த நியாயமும் பேசும் கதை.

    ஏக்கம்:

    “அம்மா….அம்மா தான். இன்றைய தேதியில் அம்மா உயிருடன் இருந்தால் இந்த வீடு இப்படி இருக்குமா என்பதைப் பற்றிய கற்பனையில் ஈடுபடாமல் இருக்க முடியவில்லை. அம்மா இருந்த வரையில் ஜானகியும் நானும் அவளது அன்பு மழையில் நனைந்து கொண்டு மகிழ்ச்சியும் சிரிப்புமாக வாழ்ந்து கொண்டிருந்தோம். வறுமை எங்களைச் சிறிதும் பாதிக்கவில்லை”. இந்த வரிகள் அம்மாவின் மேல் இருக்கும் ஏக்கத்தை  பிரதிபலிக்கிறது.

    பரிதாபம்:

    குழந்தை வேண்டும் என்று ஒருவன் ஆசைப்பட்டு அது பிறக்காமல் இருப்பது வேண்டுமானால் கடவுளின் செயலாக இருக்கலாம். வருஷா வருஷம் பெற்றுகொள்வது கூட ‘அவன்’ செயலா? அது ‘அவன்’ செயலோ,இல்லாவிட்டால் அவன் மேல் பழிசுமத்தும் அப்பாவின் செயலோ. அதன் விளைவு ‘அவள்’ அல்லவோ அனுபவிக்க வேண்டியிருக்கிறது..? என்னதான் இருந்தாலும் வருஷா வருஷம் வயிற்றைத் தூகிக் கொண்டு சித்தி பெற்றுப் பிழைப்பதை நினைத்துப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது. ஒரு பெண்ணின் நிலை கண்டு இன்னொரு பெண்  பரிதாபப் படும் வரிகள்.

    அவமானம்:

    “தங்க விக்கிரகம் மாதிரி மூக்கும் முழியுமாக ஒரு பெண்டாட்டி இருக்கையில் குறுகுறுவென்று என்னை என்ன அப்படிப் பார்க்க வேண்டிக் கிடக்கிறது? என் சாண் உடம்பும் ஒரு சாணாய் குறுகிப் போய்  விடும் எனக்கு. உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் வரைக்கும் அவன் உற்றுப் பார்க்கும்போது பூமி பிளந்து அப்படியே என்னை விழுங்கி விடாதா என்று இருக்கும். சில பெண்கள் வேண்டுமானால் ஒருவேளை நம்மை ஒருவன் உற்றுப் பார்க்கிறாப்போல் அழகாய் இருக்கிறோம் என்பதில் கர்வப்பட்டுக் கொள்ளக்கூடும். ஆனால் எனக்கென்னவோ அந்த மாதிரி சமயங்களில் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வேண்டும்போல் அவமானமாக இருக்கும்”. ஒரு இளம் பெண்ணின் இயல்பான எண்ணம் இது. ஏழ்மை ஏற்படுத்தும் உணர்வில் இதுவும் சேரும்.

    கவலை:

    “மொத்தத்தில் பெரும்பாலோருடைய பார்வையே நன்றாகயில்லை. எல்லாம் மொய்க்கிற பார்வைகள். துகிலுரிக்கிற பார்வைகள், கற்பழிக்கிற பார்வைகள், இப்படித்தான். தங்கை ஜானகிக்கு இம்மாதிரியான தொந்தரவுகள் ஏற்பட்டனவா என்பது தெரியவில்லை”
    “ஜானகிக்கு இந்த மாதிரி தொந்தரவெல்லாம் வராமே இருக்கணுமே பகவானே” என்று அடிக்கடி வேண்டிக் கொள்வேன்”. இதில் ஒரு தாயின் கவலை தெரியும்.

    அலுப்பும் சலிப்பும் :

    “ஐயே…போதுமே! என் சந்தோஷமும் நானும்”
    கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கவலைப் படுவதற்கென்றே கொஞ்ச நேரம் கூட ஒதுக்க முடியாத அளவுக்கு வேலைகள் உடம்பை வெட்டி முறிக்கிற நிலை கூட நாட்கள் கிடுகிடுவென்று ஓடுவதற்குக் காரணமில்லையா? – இதில் தெரியும்.

    ஆச்சரியம்:

    ஆச்சு. அடுத்த ஆண்டு பிறக்கும் போது என் இருபத்தாறாம் வயசும் பிறந்து விடும். “என்னது? எனக்கு இருபத்தஞ்சு வயசா முடியப் போறது? அடேயப்பா! இன்னும் அஞ்சு வருஷம் ஓடிடுத்துன்னா முப்பது வயசுன்னா ஆயிடும்?”

    கழிவிரக்கம்:

    “இந்த இருபத்தைந்து வருட வாழ்க்கையில் ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்று எவனும் என்னிடம் கேட்டது கிடையாது. ‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்’ என்று எவனும் சொன்னதுமில்லை”. இந்த வரிகள் உள்ளத்தின் உணர்வை அப்படியே வெளிப் படுத்துகிறது.

    நிஜம்:
    பெண்கள் வீட்டுக்குள் வைத்துப் போற்றப்பட வேண்டியர்கள் என்று நம் பெரியவர்கள் வைத்திருப்பது பெண்களினுடயவும் இந்தச் சமூகத்தினுடையவும் ஒட்டுமொத்தமான நலனைக் கருதிதான் என்பதை என் அனுபவங்கள் அடிக்கடி எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

    ஆத்திரம்:

    “டூப் அடிக்கிறதைப் பார்த்தியோல்லியோ – சம்ஸ்க்ருத மந்திரம் சொல்ற வாயாலே சமஸ்கிருதம் செத்துப் போனதே இந்த மாதிரி ஆசாமிகளாலே தாண்டி ..! என்று எரிச்சலோடு என்னிடம் முணு முணுப்பாள் ஜானகி.
    எங்கள் கல்யாணத்தைப் பற்றி அசதிமறதியாகக் கூட மூச்சும் விட்டறியாத அப்பா அப்படித்தான் தயங்காமல் “பார்த்துண்டு தான் இருக்கேன்…ஒண்ணும் சரியா அமைய மாட்டேங் கிறதே” என்று புளுகும் போது”.

    பச்சாதாபம்:

    விருப்பமற்ற ஒரு பெண்ணைத் தொடுவதைக் காட்டிலும் மோசமான குற்றம் ஏதும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஒரு பெண்ணை – அவள் சற்றும் இணங்காத போதும் – தொட்டுக் கற்பழிப்பது கொலை செய்வதைக் காட்டிலும் கொடியது. அம்மாதிரியான கொடுமைக்கு ஆளாகாமல் என் வானாளைக் கழித்துவிட வேண்டும்”. ஒரு மணமாகாத இளம் பெண்ணின் நியாயமான எண்ணம்.

    காதல்:

    அது தகாத உறவு. கூடாக் கனவு, யாருடைய ஏற் கையையும் பெற முடியாத தொந்தம் என்பது நன்றாக எனக்குத் தெரிந்திருந்த நிலையிலும் கூட இந்தப்  பாழும் மனசு ஏன் தான் இப்படி அவனையே சுற்றி சுற்றி வர வேண்டுமோ புரியவே இல்லை” அழகான வெளிப்பாடு.

    நாணம்:

    “மூஞ்சி சொல்றதோல்லியோ அப்ப அதையே கேட்டுக்கோடி” என்று சொல்லிவிட்டு நான் அவள் முகத்தைப் பார்க்காமலே கிடுகிடு என்று குழவியை ஆட்டினேன்.
    இருந்தாலும் சொல்லு சொல்லுன்னா என்னத்தைச் சொல்றது? ஏதாவது இருந்தாத்தானே சொல்றதுக்கு?
    “உன் குரலே காட்டிக் குடுக்கிரதுடி அக்கா”…என்று ஜானகி மெதுவாகச் சிரித்தாள் .
    “அப்படியே வெச்சுக்கோ போ..”
    தங்கையிடம் சொல்லத் தவிக்க நாணம் மூடும் காட்சி.

    திகைப்பு:

    (தந்தைக்கு மகள் செய்த உபதேசம்)
    வசிஷ்ட  மகரிஷி என்ன சொல்லியிருக்கார்ங்கறது தெரியாதா உங்களுக்கு? வயசுக்கு வந்த பெண்ணை மூணு வருஷத்துக்குள்ளே கல்யாணம் பண்ணி குடுக்கல்லேன்னா
    தனக்குப் பிடிச்ச எவநோடையும் போறதுக்கு ஒரு பொண்ணுக்கு முழு உரிமை உண்டுன்னும் அந்த மாதிரி செய்யற ஒரு பொண்ணோ இல்லேன்னா அவளை அழைச்சிண்டு போற ஆணோ குற்றவாளிகள் இல்லைன்னு அவரும் மனுவும் சொல்லியிருக்கிறதை நான் ஞாபகப் படுத்த வேண்டாம்னு பார்க்கறேன். தன பொண்ணு வயசுக்கு வந்த ஏழு மாசத்துக்குள்ளே ஒரு தகப்பன் அவளுக்குக் கல்யாணம் பண்ணி  வைக்கலைன்னா ஏழு கொழந்தைகளைக் கொன்ன பாவம் அவனுக்கு வந்து சேரும்னு மனு தர்ம சாஸ்திரத்திலே கூடத்தான் சொல்லியிருக்கு.இதெல்லாம் சமஸ்கிருதத்தைக் கரைச்சுக் குடிச்சிருக்கிற உங்களுக்குத் தெரியாதா என்ன?  சும்மா சமஸ்கிருதப் புஸ்தகங்களை வரிசையா அலமாரியிலே அடுக்கி வெச்சுட்டாப்லே  ஆச்சா? நாக்கில் பல்லைப் போட்டு அவள் கூசாமல் கேட்ட கேள்விகள். வயசு வந்த ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய குறைந்த பட்சக் கூச்சம் கூட இல்லாமல் ஜானகியா இப்படியெல்லாம் பேசுகிறாள் என்று எனக்குத் திகைப்பாய் இருந்தது.

    இயலாமை..:

    ”  இந்த ஆவணிக்குள்ளே  அக்கா கல்யாணம் நடந்தாகணும்..ஆமா..! குதிர் குதிரைப் பொண்ணுகளை வளர்த்து வெச்சிண்டு அவா சம்பாத்தியத்துலே வயிறு வளர்த்துண்டிருக்கேள்ன்னும் அதனாலே தான் எங்க கல்யாணத்தைப் பத்தின பிரக்ஞையே உங்களுக்கு இல்லைன்னும் ஊர்லே நாலு பேர் பேசற பேச்சு காதுலே விழரச்சே உங்களுக்கு அவமானமாய் இல்லே? நானாயிருந்திருந்தால் நாக்கைப் பிடுங்கிண்டு பிராணனை விட்டுடுவேன்..”
    ஜானகியின் ஒவ்வொரு சொல்லும் பச்சை மரத்தில் ஆணி அடித்தார் போல் பளிச் பளிச்சென்று வந்து விழுந்தது.

    விரக்தி:

    “பாவ புண்ணியம்” நாகரிக-அநாகரிகம் ” நீ சொல்ற ரசாபாசம்- இதுகளெல்லாம் பார்க்க வேண்டிய வீடுகள் வேறேடி . இந்த வீடு இல்லை”.

    அறிவுரை:

    இன்னிக்கு நம்ம அப்பா- அம்மாவுக்கு நாம என்ன மாதிரி மரியாதை காட்றோமோ அந்த மாதிரியான மரியாதையைத்தான் நாளைக்கு நம்ம குழந்தைகள் நமக்குக் காட்டும்..”

    குறும்பு:

    “கல்யாணமே ஆகக் காணோம். அதுக்குள்ளே குழந்தை-குட்டிக்குப் போயிட்டா இவ ..! வேடிக்கை தான்”.

    எகத்தாளம்:

    “ஓடிப் போயிருப்பேண்டி …ஓடிப் போயிருப்பேன் ” இருபத்தாறு வயசு வரைக்கும் தன் பொண்ணோட கல்யாணத்தைப் பத்தி யோசிக்காத தகப்பனுக்கு மரியாதை குடுக்கணுமாம் மரியாதை” – தங்கையின் எகத்தாளம்.

    துடிப்பு:

    “இந்த நடேசன் மொதலியார் ஜாதியிலே போய்ப் பொறந்து வெச்சிருக்கானே? பிராமண ஜாதியிலே பொறந்து தொலைச்சிருக்கப் படாதோ? என்று என் மனசு முட்டாள்தனமாக ஏங்கத் தொடங்கிற்று…என்ன பைத்தியக்காரத்தனம்?

    நேசம்:

    “பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலொழிய கலப்பு மணம் வெற்றியில் முடியாது என்பதையும் முக்கியமாக ஆணுக்கு அந்த மனப்பான்மை மிகுதியாக இருக்க வேண்டும் . பெற்றவர்களை விரோதித்துக் கொண்டு ஒருவனை நம்பி “அவனே கதி என்று ” ஓடி வருகிற ஒரு பெண்ணை அனுதாபத்தோடு பார்க்கும் பரந்த மனப்பான்மை ஆணுக்குள் இருக்க வேண்டும். ஏனென்றால் பெற்றவர்களுடைய அதிருப்தியும் விரோதமும் பெண்ணுக்கு பெரிய நஷ்டங்கள். புகுந்த இடத்திலும் அவள் மனப்பூர்வமாக வரவேற்கப்படுவதில்லை…என்கிற நிலையில் விட்டுக் கொடுக்கிற தன்மை பெண்ணைக் காட்டிலும் ஆணுக்குச் சற்று அதிகமாவே இருந்தால்தான் கலப்பு மனம் செய்து கொள்ளும் ஒரு பெண் நிம்மதியாக வாழ முடியும். இந்த நேசம் நடேசனின் கடிதத்தில் எதிரொலித்தது.

    மனசாட்சி:

    “நீ நிமிஷத்தில் ஓடிப் போயிடுவேடி. ஆனா அப்படி ஓடிப்போனவளுடைய தங்கையை யாரு கல்யாணம் பண்ணிப்பா நாளைக்கு? அதைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா? உனக்காகப் பரிஞ்சு அப்பாகிட்டக் கன்னாப் பின்னான்னு பேசின ஜானகியுடைய வருங்கால வாழ்க்கையை உன்னுடைய காரியம் எந்த அளவுக்குப் பாதிக்கும்கிரதைப் பத்தி துளிக்கூட யோசிச்சுப் பார்ககாமே…”ஓடிப்போனா என்ன” என்று நீ நினைப்பது சுயநலமில்லையா ?

    கண்ணியம்:

    “உங்கள் பயன்தராத அன்புக்கு மற்றுமொரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – பரிமளாவின் முழுக் கடிதமும் வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை.

    ஆசை:

    “திடீரென்று ஒரு நாள் என் மன உறுதி சிதைந்து போயிற்று.நடேசனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் கட்டுக்கு அடங்காமல் என்னுள் பொங்கிற்று. தொலைவில் நின்றாவது அவனது அன்பு முகத்தை ஒருதரமாகிலும் பார்த்து விடவேண்டும் போல் மனசு கிடந்து அடித்துக் கொண்டது. அந்த எனது ஆவலுக்குத் தடை போட முடியாமல் நான் வெகு நாட்களுக்குப் பிறகு அந்தப் பெட்டிக்கடைப் பக்கம் நடக்கலுற்றேன்” .

    ஏமாற்றம்:

    “அவுரு கடையை வித்துட்டுப் போயி அஞ்சாறு மாசத்துக்கு மேலே ஆகுதேம்மா”…..
    “இந்த ஊரை விட்டுப் போயிட்டாருங்கறது மட்டுந்தான் தெரியும். எங்கிட்டு இருக்காருங்குற வெவரம் தெரியலியேம்மா”
    இதைக் கேட்டதும் என் நெஞ்சுக்கூட்டினுள் ஒரு நரம்பு அருந்தாற்போல் இருந்தது.

    தைரியம்:

    “அன்னிக்குச் சொன்னேனோல்லியோ? அதைத் தான் காரியத்திலே காட்டப் போறேன்.அதாவது ஓடிப் போகப் போறேன்.”
    “..”

    பயம்:

    “பையன்  யாரு என்னன்னு தெரிஞ்சா அப்பா கட்டையை எடுத்துண்டு வருவா. நீ  கூட என்ன நினைப்பியோ தெரியல்லே”.

    தயக்கம்:

    “ரெண்டு வருஷமா எங்களுக்குள்ளே ‘இது’. உனக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்பறந்தான் பண்ணிக்கணும்னு இருந்தேன். ஆனா அவா வீட்டிலே அவசரப்படுத்தறா …அதான்..”.

    பெருந்தன்மை:

    “நீ கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு தீர்மாநிசிருக்கிரதைப் பற்றி ரொம்ப சந்தோஷம் ஜானகி.
    ஆனா ரெண்டு வருஷமா இந்த விஷயத்தை என்கிட்டேர்ந்து மூடி மறைசிருந்திருக்கியே நியாயமா? என்று கேட்டேன்.
    அதனாலே எனக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்குன்னு தெரியுமாடி உனக்கு ? என்று கேட்க முடியாமல் மனசுக்குள் பொருமினேன்.

    மகிழ்ச்சி:

    “அக்கா ! என்னை ஆசீர்வாதம் பண்ணுடீ” என்றவாறு அவள் திடீரென உணர்ச்சிவசப்பட்டு பாய்ந்து வந்து என்னைக் கட்டிக்கொண்ட போது, என்ன சொல்வது என்றே தோன்றாமல் அவள் முதுகைத் தடவிக் கொடுத்தேன்.
    “ஜானகி என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டுடீ! அதை நீ கேட்டு வாங்கிக்கணு ம்னுட்டு இல்லை “- இப்படிச் சொல்லி விட்டு நான் அவள் தோளில் என் முகத்தை அழுத்திக் கொண்டேன்.

    துக்கம்:

    நான் அழுதது அதற்காக மட்டும் இல்லை என்றும் வேறு இன்னொன்றுக்காகவும்கூட என்றும் அவளுக்கு எப்படித் தெரியும்?

    மலர்க் கொத்தை நீட்டும் போது :

    “இந்த ஒரு அதிர்ச்சி கதைக்குள்….ஒரு பெண்ணின் அத்தனை மன உணர்வுகளும் அளவாக அழகாகச்  சேர்ந்து கொத்து மலராக நறுமணம் வீசி படிப்பவர்களை தன்னோடு கூடவே  இழுத்துக் கொண்டு செல்லும் உயிர்ப்பு இருக்கிறது.

    கதை வந்து நாற்பது வருடங்களுக்கு மேலே ஆனாலும் என்ன…? இன்னும் பூமி சுற்றும் வரையில், ஏழ்மை இருக்கும் வரையில்…இது போன்ற பரிமளாக்களும் ஜானகியும் எங்கேயோ இதே உணர்வுகளோடு திண்டாடிக் கொண்டும்,  போராடிக் கொண்டும்  தான் இருக்கிறார்கள்.

    எத்தனையோ விதத்தில் சமுதாய முன்னேற்றங்களும், மாற்றங்களும்  வந்திருந்த  போதிலும்  பூமிக்கடியில் வேர்கள் ஒன்றாக இருப்பது போல வாழ்வியலின் அடிப்படை என்றும் மாறாதது என்பதை உணர்த்தும் விதமாக ஆசையும் …ஆசாபாசங்களும் தீராது என்றும் ஆணித்தரமாக நம்மை நம்ப வைக்கிறது.

    இத்தனை வருட இடைவெளிகளுக்குப் பிறகு  இந்தக் கதையை படித்தாலும் “குடும்பம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் ” ஒரே குழந்தையோடு நின்றுவிடும் முன்னேற்றம் மட்டும் கண்கூடு.

    மேலும் பெண்களுக்கு மிதமிஞ்சிய சுதந்திரம் வீட்டிலும் வெளியிலும், படித்ததனால் நல மதிப்பு…தங்களின் வாழ்க்கையைத் தாங்களே முடிவு எடுத்துக் கொள்ளும் திறனும், தைரியமும் வாழ்வின் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக தற்போது  நடை முறையில் வந்து விட்டது பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான் .

    தலைமுறை இடைவெளியில் ஆண்களில் கூட நல்ல எண்ணத்தில் முன்னேற்றமும் பரந்த மனமும், வரதட்சிணை விழிப்புணர்வும் மாற்றமாக வந்துள்ளது. எல்லாம் உயர்மட்டத்திலும் , மேல்மட்ட நடுத்தர வர்கத்திலும் வந்திருந்தாலும்….இன்னும் நடுத்தர, கீழ் மட்ட வர்கத்துக் குடும்பங்கள் அதே சூழலில் தான் உழன்று வருகின்றனர்.

    எந்த வகையான  மாற்றங்களிலும் கீழ், நடுத்தர, உயர்ரக மட்டங்கள் எப்போதும் மாறாமல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எல்லோரும் பொருளாதாரத்தில் சமமாகும் காலம் என்றுமே வரப் போவதில்லை. மாற்றங்கள் மனதளவே  என்றாலும் சமுதாயத்தில் பொருளாதார மாற்றம் தான் வாழ்வியல் மாற்றமும் ஆகும். வாழ்க்கையில் கஷ்டப் படும் குடும்பமும், சுக போகமாய் வாழும் குடும்பமும் – இரு வேறு முனைகளாக என்றென்றும் நிரந்தரமாக இருக்கும். அது மாறாதது.

    மற்றபடி கதையின் சாரம் அன்றும், இன்றும், என்றும் ஒரே உணர்வின் சூத்திரத்தை தான் சொல்கிறது. அதிர்ச்சிக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம்.

    கதையின் நாயகி  ‘பரிமளா’ இந்தக்  கதையைத் தாண்டி மனசுக்குள் வந்து உலாவுகிறாள். இதயத்துக்குள் காலத்துக்கும் உறைந்து போகிறாள். இது தான் ‘அதிர்ச்சி’யின் வெற்றி.  காலம் கடந்தும் இந்தக் கதை மனிதனின் வக்கிர முகமூடியைக் கிழித்து நிஜத்தை சொல்லிக் கொண்டிருக்கும்.

    தத்ரூபமாக நாயகியை முன்னிறுத்தி கதை சொல்லிய அழகு தனி.. அனைவரும் அவசியம் இந்த எழுத்துக்கள் பேசுவதைப் படித்தால் கேட்கலாம்.
    ================================================================================================================

    Share