Tag: க.பாலசுப்பிரமணியன்

  • மார்கழி மணாளன் 22 திரு அன்பில் – வடிவழகிய நம்பி  

     க. பாலசுப்பிரமணியன்

    7e4175fa-f573-49ca-b2e5-0ba6d431f218

    நீர்பாதி நிலம்பாதி தன்னில் தவமாக  உடல் நிறுத்தி

    நிலையில்லா மனம்தன்னை இறை நினைவில் நிறுத்தி

    நினைவின் கருவாய் நீர்வண்ணன் உருவம் நிறுத்தி

    நினைவிழந்த தவத்தோனாய் நின்றான் சுதபனுமே !

     

    சுடுசொல்லில் சுவைகண்ட துர்வாசர் நிலையிழந்து

    உருமாற்றி உருக்குலைந்த தவளையாய் உருவாக்க

    உள்ளத்திலே தவமாகத் தாமோதரன்  மட்டுமிருக்க

    உளம்கனிந்த வடிவழகன் சுதபனுக்குக் காட்சி அன்பில் !

     

    தன்னழகில் நிலைகுலைந்த தவத்தோன் நான்முகனும்

    விண்ணுலகில் வேறில்லையென்ற மமதையில் நிற்க

    வடிவழகன் கண்டதுமே விழிநிறுத்தி வியந்தான் அன்பில்

    கண்ணமுது தேடியவன் விண்ணமுது கிடைத்திடவே !

     

    கண்ணழகு காலழகு கையழகு கண்ணா !

    காண்கின்ற திசையெல்லாம் உன்னழகு !

    கோலாட்ட நடையழகு கைகளிலே குழலழகு

    குசேலன் நட்பழகு நீ குறைவில்லா வடிவழகு !

     

    வாமன வடிவழகு!  வளர்ந்திட்ட விஸ்வரூபம் அழகு !

    வராஹ வடிவழகு! வீரனே! வில்லுந்தன் கையழகு !

    தாழம்பூ மணமழகு! உன்னருகே தாயாரின் துணையழகு !

    தாளாத அன்பழகு ! தூயவனே, உன் திருவுள்ளம் அழகு!

     

     

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் 21 – நைமிசாரண்யம் –  தேவராஜப் பெருமாள் 

    க. பாலசுப்பிரமணியன் 

    5c4a6a61-a8a5-4f32-a3c0-1ca8ef7fcaac

    நான்முகன் விடுத்த சக்கரம் நைமிசாரண்யம் வந்தது

    நானிலம் போற்றும் வண்ணம் விடியலைத்  தந்தது

    நான்மறை போற்றிட நல்லோருக்குப் புகல் தந்தது

    நாதங்கள் முழங்கியே நாரணன் புகழ் சொன்னது !

     

    மலர்வண்ணம் கனிவண்ணம்  எழில் பொங்கும்

    வான்மின்னும் கான்வண்ணம் மனம்கொள்ளும்

    இறைபோற்றும் வேள்வி பெருக்கும் ஒளிவண்ணம்

    இசையோடு இயல்சேர்க்கும் வேதியர் ஒலிவெள்ளம்  !

     

    வான்விட்டு மண் வந்து தவம்செய்த விண்ணவரும்

    ஊன்விட்டு உயிர்தொட்டு மனம் காக்கும் யோகியரும்

    இறைமட்டும் தேடி அமர்ந்த இனிய நைமிசாரிண்யம்

    இயற்கையை இசைத்து இறைவன் படைத்த காவியம் !

     

    மரணத்தை வெல்ல வரம்பெற்றான் விருத்தன்

    மதம்கொண்ட களிறுபோல் மயக்கம் கொண்டான்

    மனமுடைந்த இந்திரனும் மாலனின் சொல்கேட்டு

    மாதவத்தோன் ததீசியிடம் எலும்பைப் பெற்றான் !

     

    வஜ்ராயுத்தில் வளைந்தது விருத்தனின் ஆணவம்

    வானவர் யோகியர் மோனத்தில்  மலர்ந்தது கானகம் !

    மறைகளை போற்றிடும் மாதவர் காண மாலனும் வந்தான்

    மங்கலம் பொங்கிட மானுடம் தழைத்திட மார்கழி மணாளன் !

     

     

     

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் 20 திருப்புட்குழி –   ஸ்ரீ விஜயராகவப் பெருமாள்  

     க. பாலசுப்பிரமணியன்

    24c011b8-e879-4cc0-bc10-6a4490be130b

    அயோத்தியில் பிறந்தாலும் அகிலமெல்லாம் அவன் வீடு

    அன்னையர் தந்தையுடன்  அண்டமெல்லாம் அவன் உறவு

    அன்பாலே கட்டுண்டோர் அவனுடனே ஆயிரம் ஆயிரம்

    அதிசயமே அவன் வாழ்க்கை அகிலத்தில் நிகரில்லை !

     

    வில்லெடுத்து விதிவழி வந்தான் விதேகன் மண்ணுலகில்

    வில்லொடித்தே வீரன் மங்கை கொண்டான் மிதிலையில்

    சொல்கொடுத்த தந்தைக்காக தவக்கோலம் கானகத்தில்

    தோள் கொடுத்த தம்பியுடன் துவளாத மனத்துடையான் !

     

    மனத்திலே கயிலைநாதனைக்  கலையாலே நிறுத்தியவன்

    மனத்தாலே மயங்காத மங்கையை மாயத்தில் வீழ்த்தி

    மதிகெட்டு  வானத்தே வைதேகியைக் கவர்ந்து செல்ல

    மனமொடிந்து புள்ளரசன் சடாயு போரிட்டு  புவிவீழ்ந்தான் !

     

    தயரதனைப் போல் சடாயுவும்  தன் தந்தையென

    தர்பணங்கள் செய்து விடுவித்தான் வாழ்வினையே !

    தன்னுயிர்போல் மன்னுயிர் போற்றும் தாமோதரன்

    மன்னுயிர் அனைத்திற்கும் முன்னின்ற மூத்தவன் !

     

    சங்கோடு சக்கரமும் சடாயுவும் கைகொண்டு

    சமதர்மம் காக்கும் சன்னிதியே திருப்புட்குழி!

    கல்லான குதிரை கூட காலாட்டி களிப்புறும்

    வில்லோனின் திருத்தலமே விஜயராகவபுரி !

     

    பெற்றாலும் வளர்த்தாலும்  தாயினைப் போற்றும்

    கோகுலமும் கோசலமும் ஒன்றேதான் !

    பாசத்தில் பரதனும் அனுமனும் ஒன்றே தான்

    பரந்தாமன்  அருளாட்சியில் பார்வை ஒன்றேதான் !

    Share
  • கற்றல் -ஒரு ஆற்றல் (10)  

    க. பாலசுப்பிரமணியன்

     சூழ்நிலைகளும் குழந்தைகளின் கற்றலும்

    education1

    ஒரு குழந்தையிடம் குடும்பத்தினர் பேசும் பொழுதும் பழகும் பொழுதும் அவர்களுடைய குரலும்  உடல் மொழிகளும் நம்பிக்கையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். அதட்டிப் பேசும் பொழுதும் கடுமையாகப் பேசும் பொழுதும் அந்தக் குரலின் ஏற்றதாழ்வுகள் குழந்தையின் உள்மனத்தை பாதிப்பதாக உள்ளன. இந்த பாதிப்புகளை குழந்தைகள் தங்கள் கண்களின் மூலமாகவோ அல்லது தங்கள் உடல் அசைவுகள் மூலமாகவோ வெளிப்படுத்துகின்றன. சில நேரங்களில் கடுமையான சொற்களைக் குழந்தைகள் புரிந்து கொள்ளாவிட்டாலும் அந்தச் சொற்களின் உள்நோக்கத்தை புரிந்து கொள்கின்றன. இதனால் குழந்தைகள் மனதில் ஒரு இனம் புரியாத பயம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.

    இந்த பயத்தின் காரணமாக குழந்தைகள் ஒரு செயலைச் செய்ய விரும்பாமலோ அல்லது முயற்சிக்காமலோ இருக்கலாம். அல்லது சில சம்பந்தப்பட்ட செயல்கள் மீது விரும்பத்தகாத ஒரு வெறுப்பும் ஏற்படலாம்.

    ஒரு உரையாடல் நடக்கும் பொழுது குழந்தைகள் சம்பந்தப்பட்ட நபர்களின் உடல் மொழியை உன்னிப்பாக கவனிக்கின்றன. உடல் மொழிகள் வார்த்தைகளைவிட அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.

    உதாரணமாக கைகளை  நீட்டிப் பேசுதல், விரல்களால் அவர்களை குறித்துப் பேசுதல், அலட்சியமான முகத்தையும் பார்வையையும் கொண்டு பேசுதல், கோபத்தையும் வெறுப்பையும் காட்டுகின்ற பார்வைகொண்டு பேசுதல் போன்றவேற்றை  முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும்.  அனேக நேரங்களில் குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் உடல் மொழிகளை அப்படியே பிரதிபக்கின்றன. சில நேரங்களில் இந்த மாதிரியான கற்றல் ஆழமாக நினைவுகளில் பதிந்து பல ஆண்டுகள் வரை அவற்றின் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

    வளரும் பருவத்தில் கற்றல் நேர்முகமாக  (direct learning )   இல்லாமல் அதிகமான விழுக்காடு மறைமுகமாக (indirect  learning ) ஏற்படுகின்றது. குழந்தைகள் பெற்றோர்கள் மட்டுமின்றி தன் வயதுசார்ந்த மற்ற குழந்தைகள் மூலமாகவும் கற்றுக் கொள்கின்றன. தங்களைப் போன்ற  மற்ற குழந்தைகள் என்ன செய்கின்றன, எப்படிச் செய்கின்றன எதற்க்காகச் செய்கின்றன என்ற  கேள்விகள் குழந்தைகள் மனதில்  எழுகின்றன..  அவர்களின்  செயல்களைப்  பார்த்தவுடன் தானும் அதேபோல் செய்யவேண்டும் என்ற ஒரு உந்துதல் உள் மனத்தில் எழுகின்றது. மனநல மற்றும் மூளை வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மூளையில் உள்ள “கண்ணாடி நியூரான்கள் ” (Mirror neurons ) மூலம் ஏற்படும் பாதிப்புக்களை ஆராய்ந்து “சமூகக் கற்றல்” (social learning )எவ்வாறு நம்முடைய கற்றல் திறன்களை பாதிக்கின்றது என்று விளக்கியிருக்கின்றனர்.

    பொதுவாகக் குழந்தைகள் தங்கள் விளையாட்டுக்களை ஆரம்பிக்கும் பொழுது  முதலில் ‘அப்பா-அம்மா’ விளையாட்டைத் தொடங்குகின்றன. பின்பு “டீச்சர்’ மாணவர் சூழ்நிலையை முன்னிறுத்தி  விளையாடுகின்றன.இவ்வாறு வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் ஒரு கருத்தை முன்னிறுத்தி செயல் படுகின்றன. இவை அனைத்தும் சூழ்நிலைகளிலிருந்து கற்றுக் கொள்ளப்பட்டவை.

    சூழ்நிலைகளால் ஏற்படும் பாதிப்புகள் ஆக்கபூர்வமாகவும் இருக்கலாம் அல்லது கேடுகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். ஆகவே குழந்தைகளின் வளர்ச்சிப் பாதையை மன நலத்திற்கு ஏற்றதாக அமைத்துத் தருதல் குடும்பத்தில் உள்ள அனைவரின் பொறுப்பாகும்.

    Share
  • மார்கழி மணாளன்  -19 பத்ரிநாத் – ஸ்ரீ பத்ரி நாராயணர்    

     க. பாலசுப்பிரமணியன்

    83faee00-5aec-4ba4-a5b4-01671653a8ee

    பனிமலையைத் திருமலையாய் கொண்டே

    அருள்  மழையால் கலி தீர்க்கும் நவநீதா !

    ஊனுருக நினைத்தோரைத் தன்னருகில் வைத்தே

    வானுயர்ந்த வளம் தருகின்ற குணசீலா !

     

    பாதங்கள் ஆயிரம் நான் போற்றினாலும்

    பத்ரிவாசா ! புகல் பாதம் உனதன்றோ  ?

    பத்மாசனத்தில் அமர்ந்தோனே ! பரந்தாமா!

    பால்வண்ணப் பனிமலையில் கார்வண்ணா !

     

    பனிகாத்தாள் பொற்செல்வி பத்ரிமரமாய்

    புவிகாக்க நீ அமர்ந்தாய்   புனிதனாய் !

    புகழ்பாடும் நாரதனும் புகல் கேட்டான்

    புண்ணியனே ! போற்றியதே மண்ணினமே !

     

    ஆன்மாவிற்குப் பொருள் சொன்ன பரமாத்மா

    ஆனந்தா ! அலர்மேல் மன்னா ! அச்சுதா!

    மோனத்தில் தியானத்தில் அமர்ந்த முகுந்தா !

    வானத்தில் இருப்போரும் வணங்கும் வைகுந்தா !

     

    வேதத்தில் நாதத்தில் விளைந்தோனே விஸ்வரூபா !

    தேகத்தில் உயிராய் திகழ்வோனே தாமோதரா !

    பாசத்தில் அழைத்தோர் அன்பினிலே ஆதிமூலா!

    பாசத்தின் வேடங்கள் உடலென்ற பத்ரிநாராயணா !!

     

    காலங்கள் அனைத்திற்கும் பாலம் நீயன்றோ !

    கடமைகள் முடிந்திடவே காட்சியும் உனதன்றோ !

    கற்பனையில் கண்டாலும் கணத்தினிலே வந்திடுவாய் !

    கண்ணா! மணிவண்ணா! காலமெல்லாம் நீயே காப்பு !

    Share
  • மார்கழி மணாளன்  18   திருநின்றவூர் –  பக்தவத்சலப் பெருமாள்

    க. பாலசுப்பிரமணியன்

    47a6a26e-3644-41a2-9986-08739acdfc47

    வான்வீதி வலம் வந்த  வருணன் மகளும்

    விண்வெளி போலொரு மண்வெளி கண்டாள் !

    கண்விழியில் விண்வெளியைக் கொண்டவளே

    மண்வெளியில் கண்விழியால் கோயில் படைத்தாள் !

     

    திருநின்ற ஊரிலே வான் வந்த திருநின்றது

    திருமகளின் மனம் நிறைந்த எழில் வந்தது !

    திருமகளின் வழியே திருமாலின் மனம் வந்தது

    திருமாலின் மனத்தோடு திருவருளும் வந்தது !

     

    பார்த்தனுக்கே கீதை சொன்ன பக்தவத்சலன்

    பாவம் அழிக்க பத்து வண்ணம் கண்டவன்

    வில்லான் வராகன் வேதியன் யாதவன்

    நாரணன் நரசிம்மன் நாமங்கள் ஆயிரம் !

     

    நின்றவன் நிறையவன் நீலன் நிகரில்லான்

    நிலமகள் அலைமகள் துணை கண்டான் !

    வல்லான் நல்லான் வறுமையை அறுப்பான்

    விடுகதை வாழ்விற்கு விடைகள் தருவான் !

     

    அவலின் அன்பிற்குப் பொன்னைத் தந்தவன்

    அனுமன் அன்பிற்குத் தன்னைத் தந்தவன்

    அரக்கன் தம்பிக்கு அரியணை தந்தவன்

    அடியவர் பக்திக்கு எதையும் தருபவன் !

     

    குறைவின்றிப் பொருளெல்லாம் குவலயத்தில் வைத்தான்

    குறைதேடும் மனம் மட்டும் கூட்டினில் வைத்தான்

    கணநேரம் நினைப்போரிடமும் கருணை வைத்தான்

    காதலித்த நெஞ்சங்களில் தன்னை வைத்தான் !

    Share
  • மார்கழி மணாளன் – 17 திருஎவ்வுள்ளூர்- வைத்திய வீரராகவப் பெருமாள்

    ஓராண்டு தவமிருந்த மாமுனியின்

    உள்ளாண்டு நின்றிருந்த உத்தமனே !

    பல்லாண்டு உதிர்ந்திட்ட கிழவனாய்

    மனமாண்ட மாமுனியின் விருந்தே !

     

    பங்கின்றிச்  சாலியின் உணவைச் சுவைத்து

    பங்கில்லா அருளைத் தந்த பரிபூரணனே !

    எவ்வுள்ளில் உறங்கலாம் என்றே குடிலில்

    திருவுள்ளம் கொண்ட திரு எவ்வுள்ளூரானே !

     

    புஜங்க சயனத்தில் கிடந்த கோலத்தில்

    நிஜங்களை காக்கும் நெடுமாலே !

    புலனறியா நோயினையும் பொழுதினிலே

    நலமாக்கும் வைத்திய வீரரகாவனே !

     

    கிடந்தாலும் நின்னழகு விண்ணழகு

    காலருகில் வசுமதியின் கண்ணழகு !

    களங்கமில்லா சாலியின் மேல் கையழகு !

    காலமெல்லாம் நீ அருளும் அருளழகு !

     

    கல்லாகச் சிலையாகக் கண்டவரோ கண்டிலர்

    கண்ணிமையில் கசிகின்ற காதலை அறிந்திலர்

    சொல்லாகப் பொருளாக உன்னை அடைந்திலர்

    சுவையாக நீயிருக்க சுமையனைத்தும் நீக்கிலர் !

     

    விண்ணவனே! பொன்னவனே !  வீக்ஷாரண்யனே !

    வினைதீர்க்க வந்திடுவாய் வேதவல்லி மணாளனே!

    பாசுரத்தின் ஒலிதன்னில் வருவினைகள் நீங்கட்டும் !

    பாதத்தின் ஒளி தன்னில் பாரெல்லாம் செழிக்கட்டும் !

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் 15 தேரழுந்தூர்– ஆமருவியப்பன்

     க. பாலசுப்பிரமணியன்

    b8346d13-a0b3-4351-b71a-8cef523b821a

    தேர்நிழலில் காலழுத்தித் தீயணைத்தான்

    தேர்பெற்ற மன்னவனின் தானழித்தான் !

    தேவராஜன் கருடனைப் பக்கம் வைத்தான் !

    தேடிவரும் நெஞ்சங்களில் தன்னை வைத்தான் !

     

    காவிரிக்குக் கருணை தந்த கார்மேகன்

    கரிகாலன் மனம் கவர்ந்த கண்ணனவன்

    செங்கமலத் தாயோடு  மனம்கொண்டான்

    சிங்கமுகன் சினம் தீர்ந்த சிலை கொண்டான் !

     

    முன்னழகு  பார்த்தாலோ முத்துப் பந்தல்

    பின்னழகு பார்த்தலோ பூந்தோட்டத் தோரணமே !

    பூவிழிகளிலே பொங்குகின்ற கருணை வெள்ளம்

    பொற்பதம் பார்த்ததுமே போதையிலே சரணம்

     

    பாரிஜாத மலர் வாசம் திருமேனி வீசும் !

    பச்சைக்கற்பூரம் உடல் தோய்ந்து ஒளி வீசும் !

    கழுத்திருந்து  கன்னித்துளசி  காதல் பேசும் !

    பாரெல்லாம் கண்ணா! உன் பார்வை அருள் வீசும் !

     

    !கண்களிலே  அவனிருக்கக் கற்பனைகள் ஏங்கும்

    கற்பனையில் அவனிருக்கக் கருத்துக்கள் ஏங்கும்

    கருத்தினிலே அவனிருக்கக் காலங்கள் ஏங்கும்

    காலமெல்லாம் அவனிருக்கக்  கவலைகள் நீங்கும் !

     

    சடையப்ப வள்ளலின் கொடையினிலே

    சரித்திரம் படைத்த கவியானான் கம்பனுமே !

    கட்டுத் தறியும் அங்கே கனிந்தே  கவிபாடக்

    காகுந்தன் கதையின் விதை தேரழுந்துரே !!

     

    Share
  • மார்கழி மணாளன்  14   அஹோபிலம்  

     க. பாலசுப்பிரமணியன்

    2b6ee445-4a50-4d1e-856e-b2dddafe42df

    கருவினில்  நாரதன் தந்த  தாரக மந்திரம்

    கருத்தினில் கண்களில்  கண்ணனின் சித்திரம் !

    தேனூறும் சொல்லெல்லாம் திருமாலின் மந்திரம்

    ஊனூறும் வினையெல்லாம் ஒட்டிவிடும் திருப்பதம் !

     

    நானென்று நானென்று  நலமிழந்த தந்தை

    நாரணனை  வெல்லத்துடிக்கும்  அகந்தை !

    பாலகனைக் கொல்ல முயன்றான் தந்தை

    பரந்தாமன் இருக்கையில் ஏது கவலை ?!

     

    உள்ளறிந்த பாலகனின்  உணர்வறியாத் தந்தை

    ஒருநாமம் நாரணனே என்றுணரா அகந்தை

    மரணமில்லா இரணியனே தானென்ற மமதை

    மாதவனுக்கு இணையாமோ மன்னனின் சிந்தை ?

     

    தூணிலும் சயனம்  துரும்பிலும் சயனம் !

    தூணிணைப் பிளந்தது அழகிய சிங்கம் !

    ஆணவம் அழிக்க அரிதலை வந்தது

    வானமும் வேதமும் வணங்கியே  நின்றது !

     

    அஹோ ! பலம் அஹோபிலம் அகிலமே வியந்தது

    அன்னையாய் சேயினை அணைத்திட அரங்கமே வந்தது!

    ஆயிரம் ஆதவன் அணி அமைத்து ஒளிர்ந்தது !

    பாயிரம் பாடிட பக்தியின் வல்லமை வென்றது !!

     

    புண்ணிரண்டாய் கண்ணிரண்டும் மண்ணைதனைப் பார்த்திருக்க

    விண்ணிருந்து கண்ணனவன் நெஞ்சினினிலே வந்திறங்க

    காட்சியிலே கற்பனையில் அவன் மட்டும் நிறைந்திருக்க

    காலமெல்லாம் நன் நெஞ்சே! கண்ணனுக்குத் தலைவணங்கு !

     

    தீராத ஆசைகளைப் பகடைகள் தூண்டிவிடத்

    தானிழந்து தாரமிழந்து தலைகுனிந்த பஞ்சமரின்

    திரௌபதியும் தஞ்சமெனத் தலைகாத்த  தாமோதரா !

    தஞ்சமென வந்திட்டேன் வஞ்சமின்று வாழ்த்திடுவாய்  !

     

     

     

     

    Share
  • மார்கழி மணாளன்  13   திருவனந்தபுரம் – பத்மநாபன்  

     க. பாலசுப்பிரமணியன்

    097265bd-2433-4646-9771-f75a46b7dd7a

    ஆனந்தன் அனந்தன் அச்சுதன்  அரங்கன்

    ஆதிசேஷன் மேலுறை அனந்த சயனன்

    பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்

    பாரினைக் காக்க வந்தான்  பத்மநாபன் !

     

    மாமுனி தேடிடவே மறைந்தான் மாயவன்

    மாயமாய் இலுப்பையில் இணைந்தான் தூயவன்

    மங்கலம் மலர்ந்திடும் மாபெரும் உருவம்

    மா தவன் தண்டத்தில் மும்முறை அடக்கம் !

     

    கருவண்ணம் தலை நாகம்  கருநீலம் உடல்  மின்னும்

    அலையாழி  பால்வண்ணம் அரங்கன்  எழில் குன்றம் !

    தலைவாசல் ஒருபக்கம்  பொன் திருப்பாதம் மறுபக்கம்

    திருமார்போ நேர்நோக்கும்  திருவருளோ நம் பக்கம் !

     

    நிலமகள் அலைமகள் பதம் போற்ற

    கலைமகள் தலைவனும் நாபியில் சிறக்க

    மோனத்தில் யோகத்தில் போகத்தை நிறுத்தி

    மோகனன் தியானத்தில் பூமியின் சுழற்சி !

     

    அலையாழி துயின்றாலும் சிலையாகச் சமைந்தாலும்

    நிலையாத வாழ்க்கையைக் கலையாகப் படைத்தான்

    மரியாத உயிருக்கு மரிக்கின்ற உடல் படைத்த மாயன்

    மனத்துள்ளே நிறுத்திட்டால் மார்கழியில்  மங்கலமே! ‘

     

    ஊழ்வினையால் ஒருடலில் நான் சிறையிருக்க

    ஆழ்கடலில் ஆனந்த சயனத்தில் நீயிருக்க

    தாளருகில் திருவாய் திருமகளும் அமர்ந்திருக்க

    தந்தருள்வாய் தாளிரண்டும் தாசனுக்கே துணையிருக்க  !

     

    வஞ்சமுடை நெஞ்சினில ஆணவமே  ஆர்பரிக்க

    கொஞ்சிவரும் காற்றோ  நாசியிலே நாள் வரைக்கும் !

    மிஞ்சியதாய் ஏதொன்றும் மரித்தவுடன் கிடைப்பதில்லை !

    மாதவனே ! உனையன்றி உறவேதும் உண்மையில்லை !

     

     

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல் (9)

    க. பாலசுப்பிரமணியன்

    குழந்தையின் மனநலத்தில் ஒலியின் தாக்கங்கள்

    education

     ஒலி அதிர்வுகள் எவ்வாறு ஒரு குழந்தையின் மன நிலையையும் மன நலத்தையும் பாதிக்கின்றன என்பதைப் பற்றி நாம் பார்த்தோம். சில நேரங்களில் சில அதிர்வுகள் ஒரு குழந்தையுன் மனத்தில் பயத்தையோ அல்லது வேறு விதமான பாதுகாப்பின்மையையோ ஏற்படுத்தக் கூடும். உதாரணமாக ஒரு உலோகத் தட்டு கீழே விழும் பொழுதோ அல்லது ஒரு கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கும் பொழுதோ அல்லது ஒரு சைரனின்  ஒலி குறிக்கிடும் பொழுதோ ஏற்படும் ஒலி அதிர்வுகள் குழந்தையின் கவனத்தை திடீரெனறு ஈர்ப்பது மட்டுமின்றி ஒருவிதமான அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தலாம்.

    இந்த மாதிரி சூழ்நிலைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி குழந்தைகளை இதை ஏற்றுக்கொள்ள தகுந்த நிலைக்கு தயார் செய்வதில் பெற்றோருக்கு மிகப் பெரிய பங்குண்டு.

    சில நேரங்களில் வீடுகளில் ஏற்படும் தகராறுகளின் போது குழந்தைகளை அருகிலோ அல்லது மடியிலோ வைத்துக் கொண்டு பெற்றோர்கள்  அலறவோ, கத்தவோ அல்லது வெறுப்பும் நெருப்பும் கக்கும் வார்த்தைகளைக்  கூறுதல் நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டிய செயல். இந்தச் சூழ்நிலைகள் குழந்தையின் மன உணர்வுகளையும்   மனத்தின் சமத்துவ நிலையையும் பாதிக்கின்றன.

    அடிக்கடி இப்படிப்பட்ட சூழ்நிலைகளைப் பார்த்து வளரும் குழந்தைகளின் பேச்சுத் திறன்களில் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அது மட்டுமின்றி பேசுவதில் தயக்கம், பொறுமையின்மை மற்றும் தான் பார்த்த பேச்சு வழிகளைப்போலவே பேசுகின்ற திறன்களையும் குழந்தைகள் பெறுவதாகக் கூறப்படுகின்றது.  பொதுவாக குழந்தைகளை முன்னிறுத்தி பெற்றோர்கள் வாக்குவாதங்களிலும் உணர்வு மிஞ்சிய சொல்லாடல்களையும் தவிர்த்தல் அவசியம்.

    இதே போன்ற சூழ்நிலைகளை உருவாக்கும் தொலைகாட்சிப் படங்கள், உரையாடல்கள் மற்றும் நிகழ்சிகள் குழந்தைகளின் மனதை மிகவும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மனோதத்துவ வல்லுனர்கள் சொல்லுகின்றனர். மேலும் தொலைக்கட்சிகளில் வரும் சண்டைகள், கோபக்கனல்களை வெளிப்படுத்தும் காட்சிகள், வன்மையைத் தூண்டும் காட்சிகளால் குழந்தைகளின் மனத்தில் ஏற்படும் தாக்கத்தைப் பற்றிய அளவற்ற ஆராய்ச்சிகள் இவைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி விவரித்துள்ளன. இதை உடன் ஏற்படும் தாக்கங்கள் என்றும் நீண்ட காலத்தில் ஏற்படும் தாக்கங்கள் என்றும் பிரித்து விளக்கியுள்ளனர்.

    பேச்சுத் திறன்களைப் பற்றியும் அவைகளால் மூலையிலும் மனந்திலும் ஏற்படும் தாக்கத்தைப் பற்றியும் ஆல்பர்ட் மெஹ்ராபியன் செய்த ஆராய்ச்சியில் வெறும் 7 விழுக்காடுகள் வார்த்தை தருகின்ற பொருள்களாலும், 38 விழுக்காடுகள் குரல், உணர்வுகள், குரலின் ஏற்ற தாழ்வுகள் ஆகியவற்றாலும், மீதி 55 விழுக்காடுகள் அந்த நேரத்தில் ஒருவர் காட்டும் உடல் மொழிகளாலும் அறியப்படுகின்றன என்று கூறுகின்றார். ஆகவே ஒரு குழந்தை ஒலிகளைக் கேட்கும் பொழுது அதைச் சொல்பவரின் குரல் ஏற்ற தாழ்வுகள் மற்றும் நோக்கங்களையும் அவருடைய உடல் மொழியையும் மிகுந்த ஆர்வத்தோடும் கவனத்தோடும் நோக்குகின்றது.

    உதாரணமாக 5 முதல் 7 ஆண்டு வயதுள்ள சிறார்கள் ஒரு திரைப்படத்தில் வருகின்ற சண்டைக்காட்சிகளைப் பார்க்கும் பொழுது தாங்கள் அமர்ந்துள்ள இடத்திலிருந்து எழுவதும் அருகிலுள்ள பொருள்களைக் கைகளால் குத்துவதும் அல்லது ஒரு காதல் காட்சியைப் பார்க்கும் பொழுது வெட்குவதும் அடிக்கடிப் பார்க்கபடும் ஒரு நிகழ்வு, ஆகவே ஒலியும் ஒளியும் நம்முடைய மனத்திரையில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

    எவ்வாறு இந்தத் திறன்களை ஆக்கபூர்வமாக மனநலத்தின் வளர்ச்சிக்கும் அறிதல் மற்றும் கற்றல் ஆகிய திறன்களை மேன்மைப் படுத்துவதற்கும் நல்ல ஒரு உபகரணமாக பயன்படுத்தலாம் என்பதை நாம் பின் வரும் தொடர்களில் பார்ப்போம்

    Share
  • மார்கழி மணாளன்  12 திருக்குடந்தை      சாரங்கபாணி  

    க. பாலசுப்பிரமணியன்

     

    காவிரிக் கரையோரப் பஞ்சரங்கம்

    பூவிரி பொற்றாமரை விண்ணோக்கும் !

    மாமுனி ஹேமரின் தவக்கோலம்

    மாலினி இலக்குமி மகளாய் வேண்டும் !

     

    தவப் பயனோ தரணியின்  வினைப் பயனோ !

    தாமரை ஆயிரம் நடுவே வந்தது கோமளமே!

    தாயாரே தவமுனிக்கு வந்தாள் மகளாய்

    தரணிக்குக் குடமுழுக்குக் குடந்தையிலே!

     

    வில்லேந்தி வந்தான் வைகுந்தன் சாரங்கன்

    சொல்லேந்தி நின்ற தவமுனியர் பேரன்பன் !

    பண்ணேந்திப்  பாசுரங்கள் ஆழ்வார்கள் பாடிடவே

    தலையேந்திக்  கிடந்தானும் எழுந்தான் அருளிடவே    !

     

    பிரபந்தத்தைச் சேர்த்தளித்த பரந்தாமன்

    பிரபஞ்சத்தைக் காக்கின்ற பேரருளாளன்

    பிரகலாதன் துயர்தீர்த்த நரசிம்மன்

    பிறவிப்பயன் கொடுக்கின்ற நாரணன் !

     

    தங்கமென மின்னிவிடும் செங்கதிரில் திருமேனி

    பங்கமில்லா பக்தியிலே பொங்கிவரும் அருள்கேணி !

    மூதடைந்தும் சூதறியா சபரியும் பக்தியுடன்

    சுவைத்தளித்த பழத்தினையும் சுவைத்த தேனீ !

     

    அன்புடை நெஞ்சங்களில் அவன் ஆட்சி

    ஆராவமுதன் அகிலத்தின் அருள்காட்சி !

    நினைத்தாலே சொர்க்கம் அவன் வாசல்

    நிலையாத வாழ்வுக்கு அவன் காவல் !

     

    வாராக உருவெடுத்து வேதங்கள் காத்தவனே

    வாரணம் அழைத்திடவே விண்ணிருந்து வந்தவனே!

    வைகுந்த அழகுடனே  வாசலில் அருள்பவனே

    வாடுகின்றேன் வேண்டுகின்றேன் வந்தருள்வாய் வேதவனே !

     

     

    Share
  • மார்கழி மணாளன்  11 ஸ்ரீ வில்லிபுத்தூர்   ஆண்டாள் – வடபத்ரசாயி   

    க. பாலசுப்பிரமணியன்

    47_big

    மலர்வனத்தில் மலர்ந்த மழலை

    மாலனைத்தேடி மண்வந்த மங்கை

    மாதர் மனம் கவர்ந்த கோதை

    மார்கழிப் பாவை மாதருக்கு கீதை !‘

     

    விஷ்ணுசித்தன் அறியாத மாயை

    விஷ்ணுவின் சித்தம் அறிந்த ராதை !

    விடியலிலே கண்ணனைக் காணும் போதை

    வேங்கடனை நாடிச் சென்றாள் இந்த சீதை !

     

    கோகுலனுக்குக்  கோர்த்து வைத்த மாலை

    கோதை அணிந்தே கேட்டாள் நித்தம் காலை

    “குறையோ? கண்ணா !! உனக்கிணை இது சரியோ?

    இறையே ! உயிரே ! இதயத்தில் இடம் உளதோ ?”

     

    சூடிக்கொடுத்த சுடர்க்கொடி கண்டு

    சொல்லிழந்து உணர்விழந்து சித்தனுமே

    செயலிழந்து நிலையிழந்து நின்றான்

    சோதனையோ? மாதவனேயென வியந்தான் !

     

    ஆண்டவளின் அன்பில் வளர்ந்த அரங்கனும்

    ஆதவனின் ஒளிபோல் அவளை அணைத்தான்

    ஆயிரம் பாசுரங்கள் அண்டங்களில் ஒலிக்க

    அரங்கனின் அருளாட்சி ஆண்டாளின் சந்நிதியில் !!

     

    கோவிந்தனிடம் கோதை கொண்ட காதல்

    குவலயமே வியந்திடும் உறவின் தேடல் !

    பாவையவள்  பாசமுடன் பாடிட்ட பாவை

    பாரினிலே பாவையர்க்குக்  காதல் பாதை !

    Share
  • மார்கழி மணாளன் 10 ஆயர்பாடி -ஸ்ரீ நவமோகன கிருஷ்ணன்

     க. பாலசுப்பிரமணியன்

    271f5fd3-6b56-4fa8-aedb-d3459ea3b314

    இளநீல மயில்பீலி இனிதே தலைசூடி

    இளம்பச்சை பட்டொன்று இடுப்பில் கட்டி

    இளவேனில் மாலையிலே இனிய குழலூதி

    இளமைக்குப் பொலிவூட்டி இடையன் நடந்தான் !

     

    இளஞ்சிவப்புப் பொட்டங்கே எழுகின்ற கதிரவனோ?

    இமையிரண்டும் ஓங்கி உயர்ந்த மாமலையோ?

    இதமான கீதங்கள் இதழசைவில் இறங்கிவர

    இவையனைத்தும் அவன் கருவிழிகள் தேடிவிடும்!

     

    ஊதாப்பூ சேலையுடுத்தி ரோஜாப்பூ ராதை

    கொத்தாகப் பூக்களைத் தலையில் சூட்டி

    மத்தாப்பூ சிரிப்புடனே கண்ணனைத் தேடி

    தப்பாமல் நடந்தாள் கால்தடங்கள் மேலேறி.!

     

    கோலிரண்டைக் கையேந்திப் பாவைகள் ஆட

    கோலமயில் ராதையுடன் கோகுலனும் ஆட

    கைவண்ணம் கால்வண்ணம் கண்வண்ணம்

    வான்மின்னும் தாரகைகள் நிழல் வண்ணம் !

     

    சல் சல்லென்று சலங்கைச் சத்தம் ஒலிக்க

    சில்லென்ற காற்றும் சற்றே மயங்கியே நிற்க

    கோகுலத்தில் கொண்டாட்டம் என்றென்றும்

    கண்டாயோ கண்டாயோ ராசலீலை என்னுயிரே !

     

    தோளினிலே துவளும் ஒரு துளசிமாலை

    தோதாக ஆடிவர பிருந்தாவனப் பாதை !

    குழலிலிருந்து பிறக்கின்ற அவன் நாதம்

    கோகுலமென்ன, கூடிநின்று மூவுலகும் ஆடும் !

     

    கோகுலமோ கோவர்தனமோ இது வைகுந்தமோ,?

    கோவினங்கள் யாதவனைத் தேடிவந்த தேவர்குலமோ ?

    கோவிந்தன் கால்பட்டால் கோகுலமும் வான்வளமோ?

    கோலாட்ட வாழ்க்கையிது ! கோகுலனோடு ஆடிவிடு !

    Share
  • மார்கழி மணாளன் 7  திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள்

    க. பாலசுப்பிரமணியன்

    திருநீர்மலையில் திருமால் நான்கு வகையாக தரிசனம் தருகின்றார்.-  அரங்கனாக (கிடத்தல்) நீர்வண்ணனாக (நிற்றல்) திருவிக்ரமனாக (நடத்தல்) யோகநரசிம்மராக (அமர்தல்) . இதை கருத்தில் கொண்டு எழுதப்பட்ட பாடல்

    271f5fd3-6b56-4fa8-aedb-d3459ea3b314

    நீருண்ட மேகங்கள் சற்றே வான் நிற்கும்

    நீர்வண்ணா! உன்னழகு பார்த்திருக்கும் !

    வான்மேகத்தில் வளைந்த வில்லைப்போல்

    பால்வண்ணா! பரம்பொருளே ! நின்னழகு.!

     

    நின்றான் நீர்வண்ணன் நிலம் மீதில்

    நிலையாகும் கண்கள் சிலை மீதில்

    மலையான துயரங்களும் நீக்கிடுவான்

    மலையாளும் மாலனே நீர்மலையில் !

     

    அலைபாய் பாற்கடலின்  நல்லமுதே

    கிடந்தாய் பாம்பணை  மேல் சாய்ந்து !

    மலைத்தார் விண்ணவரும் அறிந்தார்

    கிடந்தான் இடந்தான் என்றும் வைகுந்தமே !

     

    இருப்பான் இவன் எங்கே எனக் கேட்டான்

    இறுமாப்பில் தன்  நிலைதான் மறந்தான்

    இருப்பேன் இங்கும் அங்கும் எங்குமென

    இருந்தாய் அமர்ந்தாய் இறையாய் நரசிம்மா !

     

    மூவுலகும் அளந்த மூத்தவனே மாதவனே !

    மூன்றடியில் முடிமன்னன் காத்தவனே !

    கிடந்தாலும் நடந்தாலும்  நீயே அளப்பாய் !

    கடைக்கண்ணால்  காவியம் பல படைப்பாய் !

     

    நின்றாலும் அமர்ந்தாலும் நடந்தாலும்

    நீர்மலையில் நீ அழகாகக் கிடந்தாலும்

    நான் வாழ நிழலேன்றும்  நீ எனக்கு !

    நீலவண்ணா ! நின் நினைப்பே காப்பு !

     

    Share