Tag: மறவன்புலவு க. சச்சிதானந்தன்

  • மறவன்புலவு சச்சிதானந்தன் அரசியல் கள அனுபவங்கள்

    மறவன்புலவு சச்சிதானந்தன் அரசியல் கள அனுபவங்கள்

    அண்ணாகண்ணன்
    மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுடன் நேற்று காசி திரையரங்கில், விடாமுயற்சி திரைப்படம் பார்த்தோம். அடையாறு ஆனந்த பவனில் மதிய உணவு உண்டோம். அவருடைய அரசியல் கள அனுபவங்கள், எங்களுக்குப் புத்துணர்வு ஊட்டின. உற்சாகம் கொள்ள வைத்தன.
    83 வயது நிறைந்த ஐயா, இன்றும் துடிப்புடன் தாமே மகிழுந்து ஓட்டி வருகிறார். மக்கள் நலன் சார்ந்த ஏராளமான பணிகளை இடையறாது ஆற்றி வருகிறார். இவரது முயற்சியின் விளைவாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அடுத்து, சரக்குக் கப்பல் போக்குவரத்தும் தொடங்கும் நிலையில் உள்ளது. இந்திய அரசுத் தரப்பிலும் இலங்கை அரசுத் தரப்பிலும் வணிகர்கள் தரப்பிலும் பலரைச் சந்தித்து, இதை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
    இலங்கையில் சிவசேனையின் தலைவராக, எழுச்சிமிகு பணிகளை நடத்தி வருகிறார். மதமாற்ற முயற்சிகள் எந்த வகையில் வந்தாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்.
    இலங்கைக்குப் பால் தினகரன் வந்து பேசும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஒரே ஒரு சட்டக் குறிப்பினை வைத்து அவரைத் திருப்பி அனுப்பச் செய்தார். சுற்றுலா விசாவில் வரும் பால் தினகரன், மதப் பிரசாரம் செய்ய அனுமதியில்லை என்ற குறிப்பினை முன்வைத்ததும் அரசே அவரைத் திருப்பி அனுப்பியது.
    யாழ்ப்பாணப் பகுதிகளில் மதப் பிரசாரம் செய்வோரை வெளியேற்ற, புதுமையான உத்தியைப் பின்பற்றினார். அவர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரிடம், நீங்கள் குடியிருக்க வீடு கொடுத்தீர்களா? மதமாற்றம் செய்ய வீடு கொடுத்தீர்களா? என்ற கேள்வியை அங்குள்ள மக்களைக் கேட்க வைத்தார். விளைவு, அந்த வீடு மட்டுமின்றி, வேறு எங்கும் அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை.
    யாழ்ப்பாண நகருக்குள் மாடுகளை வெட்டக் கூடாது, மாட்டிறைச்சிக் கடை இருக்கக் கூடாது என்ற முழக்கத்தை மக்களே முன்வைக்க வைத்தார். இதில் அங்குள்ள ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வைத்து, அந்தக் கடைகளை அப்புறப்படுத்தினார்.
    பீட்சா ஹட் என்ற நிறுவனத்தில் இதே போல் இறைச்சிப் பண்டங்கள் விற்கக் கூடாது என வலியுறுத்தி வெற்றி கண்டார். அதைத் தொடர்ந்து உலகின் ஒரே சைவக் கடையாக இது செயல்படுகிறது.
    யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராகக் கிறித்தவ மதமாற்றி ஒருவரை நியமிக்கும் செய்தி வந்ததும் அதைச் சிவசேனை எதிர்த்தது. அவர் மதமாற்றி என்பதற்கான ஆதாரங்களை அளித்ததும் அவர் பதவியேற்பதற்கு முன்பே அவரை அரசு இடமாற்றியது.
    யாழ்ப்பாண வலையக் கல்விப் பணிப்பாளர் பிறட்லீ, பொறுப்பேற்ற முதல் நாளில் கல்விப் பணிமனையில் இருந்த சைவக் கடவுள்களின் திருவுருவப் படங்களை அகற்றினார். சிவசேனை போராடியது. வடமாகாணக் கல்விச் செயலாளரின் கவனத்திற்கு இந்தச் செய்தியைக் கொண்டு சென்றது. சைவக் கடவுள்களில் படங்கள் உரிய இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டன.
    இதில் எங்கும் வன்முறை இல்லை. ஜனநாயக முறையில், அற வழியில் போராடி, சட்ட நுணுக்கங்களுடன் கோரிக்கைகளை முன்வைத்து, உத்திகள் மூலமாகவே மகத்தான வெற்றி கண்டுள்ளார். மக்களைச் சரியாக வழிநடத்தி, தங்கள் உரிமைகளைப் பெற வைத்துள்ளார். எவருக்கும் அஞ்சாமல் துணிச்சலுடன், நெஞ்சுரத்துடன் நந்திக் கொடியைப் பறக்கவிட்டுள்ளார். அனைத்துத் தரப்பினரின் மதிப்பை, மரியாதையைப் பெற்றுள்ளார். இவை, தொலைநோக்கு உள்ள, தனிப் பெரும் தலைவருக்கு உரிய அடையாளங்கள். தமிழ்ச் சமூகம், இவரை உரியவாறு பயன்படுத்தி உய்ய வேண்டும்.
    Share
  • சச்சி – 84  | மறவன்புலவு க. சச்சிதானந்தன் நீடூழி வாழ்க!

    சச்சி – 84 | மறவன்புலவு க. சச்சிதானந்தன் நீடூழி வாழ்க!

    அண்ணாகண்ணன்

    உலகத் தமிழர், தமிழறிஞர், பதிப்பகச் செம்மல், திருமுறைச் செல்வர், அன்பிற் சிறந்த சான்றோர் மறவன்புலவு க. சச்சிதானந்தன், கார்த்திகை மாதம், மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர். நட்சத்திரப்படி அவருக்கு, 15.12.2024 அன்று 84ஆவது பிறந்த நாள்.

    நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; ஐ.நா. உணவு – வேளாண் கழக முன்னாள் ஆலோசகர்; இலங்கையில் சிவசேனை அமைப்பை நிறுவியவர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம், தேவாரம்.ஆர்க் தளங்களின் நிறுவனர் – வழிகாட்டி – காப்பாளர்; தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர்… எனப் பற்பல பெருமைகளுக்கு உரியவர், நம் சச்சிதானந்தன்.

    ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு: The Photosynthesis Day என்பதாகும். இத்தகைய அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர், இவர்.

    ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்தவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவதற்கு அடிகோலியவர்.

    தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டப்பூர்வ – தனி நபர்ப் போராட்டங்களை நடத்தியவர். தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டும் வண்ணம் செயலாற்றி வருகிறார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டவர்.

    எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை… ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார். செய்யும் அனைத்தையும் செவ்வனே செய்யும் ஐயாவின் ஆற்றலைத் தமிழுலகம் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்,

    தமிழுக்காக அளப்பரிய தொண்டாற்றும் சச்சி ஐயா, நீடூழி வாழ்க!

    Share
  • ஊடகத்தாருக்கு – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை

    தென்மார்க்கு நாட்டில் தென் கயிலை ஆதீனம் (திருகோணமலை) இளைய பட்டம் மீது தாக்குதல்.

    காலம்: இன்று வைகாசி 8 புதன்கிழமை (22. 5. 2024) காலை 11.30 மணி
    இடம்: புது தில்லி சாணக்கியபுரி இராதாகிருஷ்ணன் சாலை தென்மார்க்கு தூதரகம்.
    பங்கேற்றோர்: இந்து மக்கள் கட்சித் தலைவர் அருச்சுனர் சம்பத்தர், இமக பொறுப்பாளர் வாலாசா கண்ணன், ஆன்மிகர் சோமசுக்கந்தர் குருக்கள், கல்வியாளர் சரவணன்.

    தென்மார்க்கில் சமூக ஈனர்களால் கொடும் தாக்குதலுக்கு உள்ளானவர் திருகோணமலை தென் கயிலை ஆதீனம் இளைய பட்டம் தவத்திரு திரு திருமுருகன் தம்பிரான் சுவாமிகள்.

    தென்மார்க்கில் அருள்மிகு வேல்முருகன் திருக்கோயில் பூசகராகப் பணியாற்றி வந்தார்.

    நான்கு பேர் முகமூடியுடன் வந்தனர். நள்ளிரவில் வந்தனர். சுத்தியல்களால் அவரைத் தாக்கினர். கொல்ல முயன்றனர்.

    செய்தி அறிந்த திருக்கோயிலார் குருதி கொட்டக் கொட்டப் பூசகரை மருத்துவமனையில் சேர்த்தனர். இளை கட்டிப் புண்கள் மாறி வருகின்ற நிலையில் உள்ளார்.

    கோயில் அருச்சகருக்காக நீதி கேட்டும் உரிய விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரியும் வருங்காலத்தில் இத்தகையன நடைபெறாமல் தடுக்க வேண்டியும் தமிழ்த்திரு அர்ச்சுனர் சம்பத்தர் இந்து மக்கள் கட்சி சார்பில் எழுத்து மூலமாக கோரிக்கையை புது தில்லியில் உள்ள தென்மார்க்குத் தூதரகத்தில் இன்று கையளித்தார். அவரோடு திரு கண்ணன், தவத்திரு சோமாசுக்கந்தக் குருக்கள் மற்றும் திரு. சரவணன் தூதரகத்துக்குச் சென்றனர்.படங்கள் பார்க்க.

    Share
  • அயோத்திக்கு இலவயமாக அழைத்துச் செல்லுங்கள் – இந்திய அரசுக்கு சிவ சேனை வேண்டுகோள்

    அயோத்திக்கு இலவயமாக அழைத்துச் செல்லுங்கள் – இந்திய அரசுக்கு சிவ சேனை வேண்டுகோள்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை

    கார்த்திகை 27 புதன்கிழமை (13 12 2023)

    அயோத்திக்கு இலவயமாக அழைத்துச் செல்லுங்கள். இந்திய அரசுக்கு சிவ சேனையின் வேண்டுகோள்.

    இந்தியாவில் இந்துக்களை இலவயமாக அயோத்திக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

    அயோத்தியில் இராமர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

    சென்னையில் இருந்து 22.1.2024 முதலாக அறுபது நாள்களுக்கு எவரும் அயோத்திக்கு வழிபட இலவயமாகச் சென்று மீளலாம்.

    இலங்கையின் 25 மாவட்டங்களில் வாழ்கின்ற இந்துக்களுக்கும் அதே இலவய சேவையை வழங்குங்கள்.

    காங்கேயன்துறையில் இருந்து கப்பல். நாகப்பட்டினத்தில் இருந்து தொடர்வண்டி.

    நேரே அயோத்தி. பாபர் மசூதியை இடித்துக் கட்டிய இராமர் திருக்கோயிலில் வழிபாடு.

    அங்கிருந்து தொடர்வண்டியில் கங்கை யமுனை சரசுவதி ஆறுகள் சங்கமிக்கும் பிரயாகை.

    அங்கிருந்து தொடர்வண்டியில் காசி.

    காசியிலிருந்து தொடர்வண்டியில் நாகப்பட்டினம்.

    கப்பலில் காங்கேயன்துறை.

    பயணத்திற்கு 6 நாள்கள் வழிபாட்டிற்கு 6 நாள்கள் எனப் 12 நாள்கள் பயணம்.

    இந்திய அரசு இந்திய இந்துக்களுக்கு வழங்குவது போல் இலங்கை இந்துக்களுக்கும் வழங்குமாறு சிவ சேனை கேட்டுக்கொள்ளும் இந்தியப் பிரதமருக்கான கடிதம் இணைப்பில்.

    කාර්තිගා 27 බදාදා (13 12 2023)

    මාධ්‍ය වෙනුවෙන්

    මරවන්පුලවු කේ.සචිතානන්දන්
    ශිව සේනා

    හින්දු අයව අයෝධ්‍යාවට නොමිලේ රැගෙන යන්න. ශිවසේනා ඉන්දීය රජයට කරන ආයාචනය.

    ඉන්දියාවේ හින්දු අය නිදහසේ අයෝධ්‍යාවට ගෙනියනවා.

    හින්දු ජාතික උත්සවයක් ලෙස අයෝධ්‍යාවේ රාම් කෝවිල කැප කිරීම සිදුවේ.

    2024.1.22 සිට ඕනෑම කෙනෙකුට චෙන්නායි සිට දින හැටක් අයෝධ්‍යාවට නිදහසේ සංචාරය කළ හැකිය.

    ශ්‍රී ලංකාවේ දිස්ත්‍රික්ක 25ක වෙසෙන හින්දු භක්තිකයින්ට එම සේවාවම නොමිලේ ලබා දෙන්න.

    කන්කේයන්තුරේ සිට නැව. නාගපට්ටිනම් සිට දුම්රිය.

    හරියටම අයෝධ්‍යාවේදී. බාබ්රි මස්ජිදය කඩා බිඳ දැමීමෙන් පසු ඉදිකරන ලද රාම් කෝවිලේ නමස්කාරය.

    එතැන් සිට ගංගා යමුනා සරස්වතී ගංගාව එක්වන ප්‍රයාගයි වෙත දුම්රියෙන් යන්න.

    එතනින් කෝච්චියෙන් කාසි යන්න.

    කාෂි සිට නාගපට්ටිනම් දුම්රියෙන්.

    නැවෙන් කන්කේයන්තුරේට.

    සංචාරය සඳහා දින 6 ක් නමස්කාරය සඳහා දින 6 ක් දින 12ක ගමනක්.

    ඉන්දීය රජය ඉන්දීය හින්දු ජනතාවට ලබාදෙන පරිදි ශ්‍රී ලාංකීය හින්දු භක්තිකයන්ටද නොමිලේ වන්දනා ගමන් ලබාදෙන ලෙස ශිව සේනායි විසින් ඉන්දීය අග්‍රාමාත්‍යවරයා වෙත යොමුකළ ලිපියක් අමුණා ඇත.

    Kartiga 27 Wednesday (13 12 2023)

    For the media

    Maravanpulau K. Sachithanandan
    Siva Senai

    Take Hindus on pilgrimage to Ayodhya for free. Shiv Sena’s appeal to the Government of India.

    In India, Hindus are taken freely to Ayodhya.

    In Ayodhya, consecration of the Ram temple is taking place as a Hindu national festival.

    From 22.1.2024 onwards anyone can freely visit Ayodhya for sixty days from Chennai.

    Provide the same free service to Hindus living in 25 districts of Sri Lanka.

    Ship from Kankeyanthurai. Train from Nagapattinam.

    Arrive in Ayodhya. Worship at Ram temple built after Babri Masjid was demolished.

    From there take a train to Prayagai where the Ganga Yamuna Saraswati rivers confluence.

    From there take the train to Kasi.

    Nagapattinam by train from Kashi.

    To Kankeyanthurai by ship.

    6 days for travel 6 days for worship
    A journey of 12 days.

    Attached is a letter from Siva senai to the Prime Minister of India asking to provide to the Sri Lankan Hindus free pilgrimage as the Government of India is providing to the Indian Hindus.

    Share
  • வெருளும் கிறித்தவப் போதகர் சங்கம்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
    சிவ  சேனை

    கடந்த தைப் பொங்கலின் பின்,
    மூன்று மாத காலத்தில்,
    சிவபூமியில் 31 ஊர்களில்
    மதமாற்றிகளின் 31 நிகழ்வுகளில்
    சைவ எழுச்சிப் பட்டியல் கீழே.

    இலங்கை கிறித்தவப் போதகர்மார் சங்கம்.
    ஊடகச் சந்திப்பு.
    சைவப் பெருமக்களின் திரளால் மிரளும் மதமாற்றிகள்.
    உருளும் அந்நிய ஊடுருவல்.
    வெருளும்  கிறித்தவப் போதகர் சங்கம்.
    மதமாற்றியார் இருளகற்றும் சிவபெருமான் திருவருள்.
    தளர்வறியா மனத்துடன்
    31 ஊர்களில் 31 நிகழ்வுகளைத் தடுத்த
    சைவப் பெருமக்கள் திருக்கூட்டம்.

    1. அச்சுவேலியில் சைவ மக்கள் திரண்டார்கள். மதமாற்றிகளான போதகர் உள்ளிட்ட ஒன்பதின்மர் காவல் துறைச் சிறையில்.

    2. கோப்பாய் இருபாலையில் சைவ மக்கள் திரண்டார்கள். மதமாற்றிகளான 80 வயதுப் போதகர் அருள் நங்கை உள்ளிட்ட மூவர் காவல்துறைச் சிறையில்.

    3. யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சைவ அமைப்புகள் திரண்டனர். நாக நாட்டின் தலைவி அருள்மிகு நாகபூசணி அம்மன் சிலையைக் காப்போம் என உறுதி பூண்டனர்.

    4. மட்டக்களப்பில் சைவ மக்கள் திரண்டனர். தமிழ் நிலமெங்கும் சுவரொட்டிகளால் அழைத்துத் திடலில் மதமாற்றிகள் நிகழ்த்த இருந்ததை நகரோரத் தேவாலயத்துக்குள் ஒடுக்கி முடக்கினர்.

    5. திருகோணமலையில் மண்டபத்தில் நிகழவிருந்த மதமாற்றிகள் நிகழ்ச்சி. கடற்கரைக்கு மாற்றினர். அங்கும் நிகழவிடாது சைவ மக்கள் திரண்டனர்.

    6. கொக்குவில் திடலில் மூன்று நாள் மதமாற்றிகள் நிகழ்வு. சைவ மக்கள் திரண்டனர், தடுத்தனர்.

    7. மாதம்பையில் மதமாற்றிகளின் மூன்று நாள் நிகழ்வுகள். நுழைவுக் கட்டணம் கொடுத்து வாருங்கள் என அழைத்த தமிழ் மொழி நிகழ்வுகள். மூன்று நாள்களும் நடைபெற விடாது மாதம்பைச் சைவ மக்கள் திரண்டு தடுத்தனர்.

    8. மானிப்பாயில் மூன்று நாள்கள், யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தில் ஒரு நாள். பெரும் செலவு செய்து மதமாற்றிகள் நிகழ்த்தவிருந்த நிகழ்ச்சிகள். மானிப்பாய்ச் சைவ மக்கள் திரண்டனர். தடுத்தனர்.

    9. ஒட்டுசுட்டானில் மதமாற்றிகளின் மூன்று நாள் நிகழ்வுகள். களியாட்டம் மது மாமிசம் எனத் திருவிழா. ஒட்டுசுட்டான் சைவ மக்கள் திரண்டனர் நிகழ்ச்சிகள் நடைபெறவே இல்லை.

    10. மன்னாரில் நாகதாழ்வு சாலையோரச் சந்திப்பு மூலையில் அந்தோனியார் சிலை. உடனேயே எதிர்ப்பக்க மூலையில் அருள்மிகு பிள்ளையார் வந்து அமர்ந்தார். சைவ மக்கள் திரண்டனர்.

    11. மன்னாரில் உயிலங்குளம் வட்டுப்பிதாதன்மடு நெடுஞ்சாலைச் சந்தி மூலையில் அந்தோனியார் சிலை. எதிர்ப்பக்க முனையில் அருள்மிகு பிள்ளையாருக்கு கருங்கல் கோயில் எழுந்தது. சைவ மக்கள் திரண்டனர்.

    12. கச்சதீவில் ஆக்கிரமிப்புப் புத்தர் சிலையை அகற்றுங்கள் என்ற குரலோடு இணைந்தது ஆக்கிரமிப்பு அந்தோனியார் கோயிலையும் அகற்றுங்கள் என்ற சைவ மக்களின் குரல்.

    13. மாவட்டபுரம் கீரிமலைச் சாலையில் அடாத்தாக மதமாற்றிகள் தேவாலயக் கட்டடம். நிறுத்தினர், திரண்ட சைவ மக்கள்.

    14. மாவிட்டபுரம் கீரிமலைச்சாலையில் முன்பள்ளிக்குள் அடாத்தாகப் புகுந்த மதமாற்றிகளை அகற்றினர் திரண்ட சைவ மக்கள்.

    15. கோண்டாவிலில் அருள்மிகு பிள்ளையார் கோயிலுக்கு எதிரே அனைத்துலகப் பின்னணி கொண்ட அசைவ உணவகம். சைவ மக்கள் திரண்டனர். உணவகத்தை மூடினர்.

    16. கோண்டாவில் அரசுப் பேருந்து வளாகத்துள் புதிதாக அந்தோனியார் சிலையா? கோண்டாவில் சைவ மக்கள் திரண்டனர். சிலை அங்கு வராது தடுத்தனர்.

    17. கொடிகாமத்தில் 18. புன்னாலைக்கட்டுனில் 19. ஏழாழையில் 20. பண்ணாகத்தில் அடாத்தாக மதமாற்றிகளின் நடவடிக்கைகள். சைவ மக்கள் திரண்டனர். குரல் கொடுத்தனர்.

    21. சுண்ணாகம் மயிலங்காடு திடலில் மூன்று நாள் மதமாற்றிகள் நிகழ்வு. முதல் நாள் நடைபெற்றது. அடுத்த இரு நாள்களும் நடைபெறவில்லை. சைவ மக்கள் திரண்டனர், தடுத்தனர்.

    22, 23 வவுனியாவில் இரு நிகழ்வுகள்,

    24. நெடுங்கேணியில் ஒரு நிகழ்வு,

    25. வெள்ளாங்குளத்தில் ஒரு நிகழ்வு,

    26, 27, 28, 29, 30, கிளிநொச்சியில் ஐந்து நிகழ்வுகள்,

    31. ஏழாலையில் ஒரு நிகழ்வு

    எனப் பிப்ருவரிக் கடைசியில் மதமாற்றிகளின் நிகழ்வுகள்.  எதையுமே நிகழ விடாது சைவ மக்கள் திரண்டு நிறுத்தினர்.

    Share
  • இந்தியாவைச் சீண்டுகிறது தமிழரசுக் கட்சி

    இந்தியாவைச் சீண்டுகிறது தமிழரசுக் கட்சி

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை
    புரட்டாதி 31, 2052 (17.10.2021)

    வடகடல் என்கின்ற பாக்குநீரிணை. தென்கடல் என்கின்ற மன்னார் வளைகுடா.

    இரண்டையும் சரிசமமாகக் கிழித்துக்கொண்டு நடுவே ஓடுவதே கற்பனையான இலங்கை இந்திய அனைத்துலக எல்லைக்கோடு. 1976உக்கு முன்னர் இத்தைகைய எல்லைக் கோடு இருந்ததே இல்லை.

    தமிழக மீனவர்கள் வடகடலில் எல்லைக் கோட்டைத் தாண்டி வருகிறார்கள். உலகில் இல்லாத வியப்பு நிகழ்வா?

    உலகெங்கும் பல்வேறு இடங்களில் இத்தகைய உள்ளகக் கடல்கள் உள்ளன. அவற்றை ஊடறுத்துச் செல்லும் அனைத்துலக எல்லைக் கோடுகளும் உள்ளன.

    இத்தகைய உள்ளகக் கடல் எல்லைகள் அனைத்துலக உடன்பாடுகளுள் அடங்கா. சிறப்பாகச் சி ஆண்டுகளுக்கு முந்தைய கராக்காசு (Caracas Law of the Sea Conference) அனைத்துலக கடல்வள உடன்பாட்டுள் வடகடல் அடங்காது. தென் கடலின் தெற்குப்பகுதி வரக்கூடும்.

    இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது வழமை.

    இந்திய கன்னியாகுமரிக்குத் தெற்கே உள்ள குமரிப் பரப்பில் (Wadge bank) இலங்கை மீனவர்கள் வளங்களை அள்ளுவதைப் பார்த்துக் கொண்டு தமிழகக் குமரி மாவட்ட மீனவர்கள் கண்டும் காணாது விடுகிறார்கள்.

    திருகோணமலையில் நங்கூரமிட்டு பல நாள்,மீன் பிடி வள்ள (multi day fishing vessels) மீனவர் கிழக்கே அந்தமான் தீவுகள் தொடக்கம் மேற்கே விசாகப்பட்டினம் வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். என்றாலும் இந்தியக் கடலோர காவல்படை கண்டு கொள்வதே இல்லை.

    தென் கடலில் தூத்துக்குடி வரை கற்பிட்டி மீனவர்கள் சென்றுவருவது வழமை. எப்போதோ ஒருமுறை இந்தியக் கடலோர காவல்படை அவர்களைத் தளையிட்டு மதுரையில் நீதிமன்றம் முன்பு நிறுத்தம்.

    தனுக்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே 22 கிலோ மீட்டர் தொலைவு. எந்திர வள்ளம் ஒன்றை முடுக்கிய அரை மணி நேரத்தில் தலைமன்னார் மீனவர் தனுஷ்கோடிக் கடலுள் சென்று விடுவார். தனுக்கோடி மீனவர் தலைமன்னார்க் கடலுள் சென்று விடுவார்.  மாதகல் – கோடிக்கரைக் கடல் தொலைவும் அத்தகையதே.

    15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மீனவர் எல்லை தாண்டி வந்ததாலேயே, உயிரைக் கையில் பிடித்தவாறு அவர்கள் வந்ததாலேயே, போராட்டமே தொடர்ந்தது. போராட்ட காலத்தில் வடக்கின் மீது திணித்த பொருளாதாரத் தடைகளை முறியடிக்க உதவியவர் தமிழக மீனவரே.

    நல்லாட்சிக் காலத்தில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களைக் கடுமையாக தண்டிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சுமந்திரன்  21 ஏப்பிரல் 2015இல் முன்மொழிந்திருந்தார். Indian trawlers have continued to enter Sri Lankan waters and exploit our resources. …………..Foreign fishermen fishing in our water has caused great distress to our fishermen especially those living in the north”, M.A. Sumanthiran stated regarding the issue…………….. The offender will be sentenced to a two-year prison term and will have to pay a fine of Rs. 50,000.” இரண்டாவது வாசிப்பு வரை அச்சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் வந்தது.

    அந்த சட்ட மூல வரிகளைப் படித்ததும் நான் அதிர்ந்தேன. தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் தொப்புள்கொடி உறவுகளைக்கு அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் சட்டமூலத்தைக் கொண்டு வருகிறாரே என நான் வருந்தினேன்.

    என் அருமைத் தம்பி சித்தார்த்தனிடம் சொன்னேன். சுமந்திரனைக் கட்டுப்படுத்த முடியாதே எனச் சித்தார்த்தன் என்னிடம் சொன்னார்.

    என் அருமைத் தம்பி மாவை சேனாதிராசாவிடம் சொன்னேன்  அவ்வாறான ஒரு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் வந்ததா என மாவை சேனாதிராசா என்னிடம் கேட்டார். நான் சட்ட மூலத்தின் வரிகளைக் காட்டினேன். தமிழரின் அரசியல் எதிர்காலத்துக்குத் தீங்காக அமையுமே என்றேன்.

    மாவை சேனாதிராசா நடவடிக்கை எடுத்தார் போலும்! நாடாளுமன்றத்தில் பின்னர் அச்சட்டமூலத்தைச் சுமந்திரன் முன்னெடுக்கவில்லை.

    அதே சட்டமூலத்தைப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்கினார்.

    எல்லை தாண்டும் இந்திய மீனவரைச் சுட்டுக் கொல்வோம் என்றார், தமிழரசின் ஆதரவுடன் நல்லாட்சியாளர் பிரதமர் இரணில்.

    அச்சட்டத்தையே அமைச்சர் இடக்ளசு தேவானந்தா கைவிட்டுள்ளார் எனச் சுமந்திரன் முறையிடுகிறார்.

    எந்த மீனவர் எம்மைக் காத்தார்களோ, எந்த நாடு எம்மவர் மூன்று இலட்சம் பேருக்குப் புகலிடம் கொடுத்துள்ளதோ, அந்த மீனவருக்கு அந்த நாட்டுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் தமிழரசுக் கட்சி!

    எந்த முகத்தோடு பாரதம் இலங்கைத் தமிழருக்கு உதவவேண்டும் எனத் தமிழரசுக் கட்சியினர் இந்தியாவைக் கேட்பார்கள்? இந்தியாவைச் சீண்டியவாறே, இந்தியாவிடம் அரசியல் ஆதரவு கேட்கிறதே தமிழரசுக் கட்சி.

    சுமந்திரனை அறிவோம். இந்தியாவுக்கு எதிரானவர் என்பதை அறிவோம். தில்லியில் என்னிடமும் மட்டக்களப்பு யோகேசுவரனிடமும் கூறியவர் தமிழரல்லாத பாரதீய சனதாக் கட்சி மேலிடத்தார்.

    சுமந்திரனை ஏன் இன்னமும் வைத்திருக்கிரீற்கள்? தமிழரசுக் கட்சி சார்பில் சென்னையில் தமிழக பாரதீய சனதாக் கட்சியைச் சந்தித்த சத்தியலிங்கத்திடமும் குகதாசனிடமும் கேட்டோர், தமிழக பாரதீய சனதாக் கட்சித் தலைவர்கள்.

    மாவை சேனாதிராசாவையும் சிறீதரனையும் சாணக்கியனையும் அந்தப் பட்டியலில் இந்திய அரசியல்வாதிகளும் ஆட்சியாளரும் இன்று முதலாகச் சேர்த்துக் கொள்வர். முதுகில் குத்துவதும் அதே நேரத்தில் ஆதரவு கேட்பதும் ஈழத் தமிழரின் இயல்பு என இந்திய அரசியலாரும் ஆட்சியாளரும் என்னிடம் பலமுறை கூறுவர்.

    Share
  • நீத்தார் கடனாக நினைவேந்தல்

    நீத்தார் கடனாக நினைவேந்தல்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    போர்க் களம். மார்பில் ஈட்டி. மகிழ்ந்தது நெஞ்சம். மகன் இறந்ததால் மகிழ்ச்சியா தாய்க்கு?

    முதுகில் ஈட்டி பாய்ந்து இறந்தால், ஏன் பெற்றேன் இந்த மகனை எனத் துயர் தாய்க்கு.

    மார்பில் ஈட்டி பாய்ந்து இறந்தால் என்ன தவம் செய்தேன் என மகிழச்சி தாய்க்கு.

    பெற்ற பொழுது இல்லாத உவப்பும் மகிழ்ச்சியும் மாவீரன் தன் மகன் என்பதாய் தாய்க்கு.

    வீடு திரும்புவாள் தாய், முதுகில் ஈட்டி எனில் என்? மார்பில் ஈட்டி எனில் என்? இறந்த பொழுது, உயிர் பிரிந்த பொழுது எது?

    காலையா, நண்பகலா? மாலையா? முன்னிரவா? நள்ளிரவா? விடியலா? வளர் பிறையா? எத்தனையாம் நாள்? தேய் பிறையா? எத்தனையாம் நாள்?

    கணித்தாள். அவள் செஞ்சில் நீங்காப் பொழுது. கணித்த நாளில் ஒவ்வொரு மாதமும் வழிபாடு. உயிருக்கு வழிபாடு. உயிர் உலவிக்கொண்டே தொடர்கிறதாம். வாழ்ந்த பொழுதுகளை மீட்கிறதாம்.

    குத்து விளக்கு ஒளி, குடம் நிறைத்த நீர் மூடிய மாவிலைத் தேங்காய், அரிசி மாக் குழையல்களே உயிரின் சாட்சியாக.

    பால் படையல், பழம் படையல், பொங்கல் படையல், வாழ்ந்த காலத்தில் விழைந்த உணவுகள் படையல்.

    மனம் ஒடுங்கிப் பாடுகிறாள். தாலாட்டுத் தொடக்கம் வழிபாட்டுப் பாடல்களாக, தெய்வமாக மகனை உருவகித்துப் பாடுகிறாள். மகன் நினைவுகளில் கரைகிறாள்.

    மாதந் தோறும் வழிபட ஓராண்டு. அடுத்து ஆண்டுக்கு ஒருமுறை படையலும் வழிபாடும். நீத்தார் கடன்.

    மறக்காள் பிறை நாளை. ஆண்டு நினைவுக்கு அழைப்பாள் உறவுகளை.

    போரும் காதலுமா? காதலும் போருமா? அகமும் புறமுமா? புறமும் அகமுமா?

    மனித வரலாறே போரும் காதலுமாம்.

    இராவணனன் தொடக்கம் சைவத் தமிழ் அரசர் கண்ட போர்க்களங்கள் எண்ணில் அடங்கா. இலங்கை தொடர்ச்சியாகவே போர்க்களத்தின் தளம்.

    நெடிய சைவத் தமிழர் வரலாற்றில் இலங்கைப் போர்க்களங்களில் இறந்தோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. இவர்களை நினைவு கூரும் சுற்றமும் உற்றமும் எண்ணுக் கணக்கில் அடங்கா.

    402 ஆண்டுகளுக்கு முன் சைவத் தமிழ் அரசன் சங்கிலியன் போரில் மாய்ந்தான். அவனோடு கணக்கில் அடங்காச் சைவத் தமிழ் உயிர்களை இழந்தோம்.

    இழந்த நாள் வைகாசி, தேய்பிறை எட்டாம் நாள்.

    இந்த நாளைக் கணக்கிட்டுத் தந்தவர் வாழும் வரலாற்றுப் பேராசிரியர் பத்மநாதன். கொழும்பில் 45 ஆண்டுகளுக்கு முன் நடந்த அரசியல் வழக்கில், ஈழச் சைவத் தமிழர் இறைமை, போர்த்துக்கேயக் கத்தோலிக்கரிடம் சென்றடைந்த நாள் திருவள்ளுவருக்குப் பின் 1970ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் தேய்பிறை எட்டாம் நாள் (05 யூன் 1619) எனக் கூறி வாதாடியவர் மூத்த வழக்கறிஞர் மு. திருச்செல்வம்.

    பேராசிரியர் பத்மநாதன் கணக்கிட்ட நாளே, வழக்கறிஞர் திருச்செல்வம் எடுத்துக் கூறிய நாள். 45 ஆண்டுகளுக்குமுன் வழக்கறிஞர் திருச்செல்வம் தன் வழக்குரை வாதங்களை நூலாக வெளியிட்டார். அவரது மகன் நீலன் திருச்செல்வத்தின் முன்னுரையுடன் கூடிய அந்த நூலை இன்றும் விலைக்கு வாங்கலாம்.

    12 ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்காலில் சைவத் தமிழர் போரில் தோற்ற நாள், கணக்கிலடங்கா சைவத் தமிழ் உயிர்களைப் போரில் பறிகொடுத்த நாள், வைகாசித் திங்கள் தேய்பிறை ஒன்பதாம் நாள்.

    சங்கிலியன் நினைவேந்தல் நாளுக்கு அடுத்த நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள்.

    27 ஆண்டுகளுக்கு முன்னர், உரும்பராய் சிவகுமாரன் நினைவேந்தல் வைகாசி  தேய்பிறை முதலாம் நாள்.

    பிறந்த நாளுக்கு  ஒருவர் பிறந்த நட்சத்திரம் வரும் நாளே பிறந்த நாள். மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் மாசி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளன்றுதான் உங்கள் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டும் அதுவே நமது மரபு.

    திதியைப் பார்த்தே நினைவேந்தல். இறந்தவர்கள் இறந்து போன நாளன்றே அவ் உயிர்கள் நம்மை நாடி வருகின்றன. எனவே அதை விடுத்து அவர்கள் இறந்து போன ஆங்கிலத் தேதியை கணக்கிட்டு திதி கொடுப்பது வீணானதே.

    Share
  • புதிய அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை – இலங்கைச் சைவர்கள் கோரிக்கை

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவசேனை

    பாம்பையும் வேம்பையும் வழிபட்டோம். கல்லையும் மண்ணயும் போற்றினோம். சூரியனையும் சந்திரனையும் கணக்கு எடுத்தோம்.  நீரையும் வானத்தையும் தொழுதோம். சிவனாகவே யாவும் தெரிந்தன.

    இலங்கை மண் எங்கள் மண். ஒவ்வொரு பரலையும் வழிபட்டோம். இயற்கை எங்கள் ஆசிரியர். பட்டறிவு எங்கள் வளர்ச்சி. தீயன களைந்தோம். நல்லன வளர்த்தோம். செதுக்கினோம் செதுக்கினோம். கூர்மையாக்கினோம். சமூகத்தைச் செதுக்கினோம் பண்பாட்டைச் செதுக்கினோம். சைவத் தமிழர்களாகத் திளைக்கிறோம்.

    இந்தச் செதுக்கலின் பேறே விபுலானந்த அடிகளார். இந்த வளர்ச்சியின் விளைவே விபுலானந்த அடிகளார். இச் சமூகக் கூர்மையாக்கலின் படையலே  விபுலானந்த அடிகளார்.

    இலங்கையின் மனித வரலாறு கற்காலம் முதலானது. இரும்புக் காலம் ஊடானது. பெருங்கற்காலம் தொடரானது. வரலாற்றின் ஊடாகச் செதுக்கினோம். செதுக்கிக் கூர்மையாக்னோம். சைவசமயப் பண்பாடாக்கினோம். இலங்கைத் தொல்லியலார் தோண்டத் தோண்டக் கிடைப்பன யாவும் மனித வாழ்வுக்குச் சைவமும் தமிழும் ஈந்த எச்சங்கள். விபுலானந்த அடிகளாரை உருவாக்கிய கூறுகள்.

    புத்தர் இலங்கைக்கு முதன் முதலில் வருகிறார். மாணிக்கக் கங்கைக் கரையிலே முருகனைப் போற்றிய தைப்பூச நாளில் கால் வைக்கிறார். முருக வழிபாட்டிற்காக இலங்கை முழுவதும் இருந்து அங்கே மக்கள் திரண்டு இருந்தார்கள். மகாவம்சம் கூறுகிறது. இலங்கையில் புத்தர் சந்தித்த பண்பாடு சைவத் தமிழ்ப் பண்பாடு.

    அசோகனின் தூதர் அநுராதபுர அரண்மனைக்கு வந்தனர். சைவத் தமிழன் மூத்த சிவனின் மகன் ஆட்சிக் காலத்தில் வந்தனர். நாக நாட்டில், அநுராதபுரத்தில், களனியில், உரோகணத்தில் சைவத் தமிழர் அரசுகள் ஆட்சிகள். மகாவம்சமும் இதையே கூறும்.

    இலங்கை மண்ணில் இலங்கை மக்கள் உருவாக்கிய வாழ்வு முறை, சமூக கட்டமைப்பு, பண்பாட்டுக் கோலங்கள், தத்துவ உசாவல்கள், வழிபாட்டுமுறைகள் இந்த மண்ணிற்கே உரித்தானவை,

    புத்த சமயத்தவர் இந்த மண்ணின் மரபுகளை ஏற்றுக்கொண்டனர். புத்த தத்துவம் காயாவில் இருந்து வந்தாலும் மண்ணின் சைவத் தத்துவத்தோடு இணைந்தனர். கடந்த 2500 ஆண்டுகளாகச் சைவ சமயத்தை ஏற்று வாழ்ந்து வருகின்றனர். புத்த விகாரைகளில், புத்தர்களின் இல்லங்களில், புத்தர்களின் உள்ளங்களில் போதனைக்குப் புத்த சமயம், சாதனைக்குச் சைவ சமயம்.

    சைவக் கோயில்கள் சாத்தானின் வாழ்விடங்கள். புத்த விகாரங்கள் சாத்தானின் வாழ்விடங்கள். உருவவழிபாடு உடைக்க வேண்டியது நீக்க வேண்டியது. சொல்பவர்கள் இந்த மண்ணில் விளைந்தவர்கள் அல்லர். பாலைவனத்தில் முகிழ்த்த, பாலைவன மக்களுக்காக அமைந்த, கொள்கைகளை கருத்தியலை இந்த மண்ணில் திணித்துப் புகுத்த விரும்புவர்கள். கொட்டாஞ்சேனை 1883, அநுராதபுரம் 1903, கம்பளை கண்டி 1915 எனத் தொடர்ந்தன. இசுபுல்லா சொல்கிறார் (2016) அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி ஒடட்டமாவடிக் காளி கோயிலை இடித்தேன். திருக்கேதீச்சர வளைவை (2019) இடித்ததாகக் குற்ற உசாவல் கத்தோலிக்கப் பாதிரியர் மாரக்கசு மீது.

    இருக்கின்ற சட்டங்களைப் பயனுனுத்துவர். சமூக கட்டமைப்பைப் பயனுறுத்துவர். சைவர்களை, தமிழர்களை அழித்தொழிக்கப் பயனுறுத்துவர். சைவ வழிபாட்டிடங்களை உடைக்க, இடிக்கத் தொடர்ந்து முனைபவர்.

    பாலைவனத்தின் அரியதான பசுஞ்சோலையின் கருத்தியலே ஆபிரகாமிய சமயங்கள். இலங்கை மண்ணோ பசுஞ்சோலைக்குள் பொட்டலாகப் பாலை நிலங்கள். எதிர் எதிர் புவியியல் நிலை. பாலைவன நாட்டுக் கருத்தியல் பசுஞ்சோலை நாட்டிற்கு வேண்டுமா?

    பசுஞ் சோலைக்குள் முகிழ்த்த சைவ சமயத்தைக் காக்கவேண்டும். இந்த மண்ணின் மரபுகளைப் பேணவேண்டும். இந்த மண்ணுக்கே உரித்தான பண்பாட்டை வளர்க்க வேண்டும். சைவசமயம் இந்த மண்ணில் வாழ வேண்டும்.

    எனவே கோருகிறோம்

    புதிய அரசியலமைப்பில் சைவத்துக்கு முன்னுரிமை கொடுக்க.
    புதிய அரசியலமைப்புள் மதமாற்றத் தடைகளை விதிகளைக்குக.
    புதிய அரசியலமைப்புள் மாடு வெட்டத் தடையை விதிகளாக்குக.

    எந்த நோக்கங்களுக்காக விபுலானந்த அடிகள் வாழ்ந்தாரோ அந்த நோக்கங்களை முன்னெடுக்கும் அவரின் 129ஆவது பிறந்தநாளில் இலங்கையின் 12 மாவட்டங்களில் 17 திருக்கோயில்களில்  இந்த 3 கோரிக்கைகளுக்காகத் தவமிருக்கிறோம். உண்ணாநோன்பு இருக்கிறோம். வழிபடுகிறோம். ஆதரிப்பீர்.

    Share
  • அஞ்சலி: இரா.கிருஷ்ணமூர்த்தி

    அஞ்சலி: இரா.கிருஷ்ணமூர்த்தி

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    தினமலர் முதன்மை ஆசிரியர் திரு இரா கிருட்டிணமூர்த்தி அவர்கள், என் மீது வற்றாத அன்பு பாராட்டுபவர். அளவற்ற பாசத்தைப் பொழிவார். இனிமையின் இருப்பிடம். மென்மையான பேச்சு எனினும் வலிமையான கருத்துகள்.

    தினமலர் முதன்மை ஆசிரியர் திரு. இரா. கிருட்டிணமூரத்தி அவர்களை 1986 முதல் முதலாகச் சந்தித்தேன். சென்னையில் ஒளி அச்சுக் கோப்பு முறையில் தமிழைப் பரவலாக எடுத்துச் செல்ல முதலீடு செய்கிறேன். நிதி நிறுவனத்தில் கடன் கேட்கிறேன். சந்தை இருக்கிறதா எனக் கேட்கிறார்கள். தினமலர் நாளிதழுக்கு ஒளி அச்சுக் கோப்பு செய்து தருவதாக அவரிடம் கடிதம் கேட்டேன். அவரை அதற்குமுனஅ அறியேன். ஆனாலும் கேட்ட உடனேயே தன் செயலாளரிடம் கடிதத்தைச் சொல்லி என்னிடம் கொடுத்தார்

    அக்காலத்தில் முனைவர் தமிழப்பன் தினமலரில் ஆலோசகராக இருந்தார். பேராசிரியர் அறவாணன் அவரின் நெருங்கிய நண்பர். பேராசிரியர் வி. சி. குழந்தைசாமி, பேராசிரியர் ஐராவதம் மகாதேவன் ஆகியோரும் அவரின் நெருங்கிய நண்பர்கள். இவர்களோடு நானும் பழகுவதால் திரு. கிருட்டிணமூர்த்தி அவர்களை அடிக்கடி சந்திப்பேன். அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கருத்தரங்குகளில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பான கூட்டங்களில் என்னை உற்சாகித்து ஊக்குவிக்கும் பெரியவர் திரு. கிருட்டிணமூர்த்தி.

    தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக அவரும் மும்பையில் இருந்த மென்பொருள் நிறுவனமும் இணைந்து முதன்முதலாக மின்னம்பலத்தில் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தனர். தொடர்ந்து தினமலர் நாளிதழில் மின் எழுத்துருக்களையே  பயன்படுத்தியவர்   திரு. கிருட்டிணமூர்த்தி. அக்காலத்தில் ஏனைய அச்சு ஊடகங்கள் ஒளி அச்சுக்கோப்பு முறைக்கு மாறவில்லை.

    புதிதாக எத் தொழிநுட்பம் அறிமுகமானாலும் முதலில் எடுத்தாளும் தமிழ் ஊடகர் திரு. இரா. கிருட்டிணமூர்த்தி அவர்களும் அவர் இல்லாதாரும். தினமலர் அவ்வகையில் முன்னணி நாளிதழே..

    அவருடைய நாணயவியல் கண்காட்சிகளுக்குச் செல்வேன். நாணயவியல் தொடர்பாக அவர் அண்மைக்காலம் வரை எழுதிய நூல்கள் யாவும் என்னிடம் உள. அவரது நாணயவியல் நூல்களைக் காந்தளகம் வழியாக சந்தைப்படுத்துவோம்.

    கொழும்புக்கு வந்தார். கொழும்பு அருங்காட்சியகத்தில் அதுவரை அடையாளம் அறிந்திராத 44 நாணயங்களை அடையாளம் கண்டு நூலாக வெளியிட்டார்.

    இலங்கையில் இருந்து சென்னை வந்திருந்த ஊடகர்  திரு வீரகத்தி தனபாலசிங்கம் அவர்களைத் திரு. கிருட்டிணமூர்த்தியடம் அழைத்துச் சென்றேன். இராஜீவ் காந்தியைக் கொன்றிராவிட்டால் ஈழத் தமிழர் தலைநிமிர்ந்திருப்பரே அவரிடம் கூறினார்.

    யாழ்ப்பாண வரலாற்றுப் பேராசிரியர் சி. க. சிற்றம்பலம் அவர்களை அழைத்துச் சென்றேன். வராலாற்றுச் செய்திகளைப் பரிமாறினர் இருவரும்.

    யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை சென்னைக்கு வந்திருந்தார். மேனாள் ஆளுநர் சி. சுப்பிரமணியம் தலைமையில் சென்னையில் வாழ்ந்த மேனாள் அந்நாள் துணைவேந்தர்கள்யும் தமிழ் அறிஞர்களையும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தேன். திரு. கிருட்டிணமூர்த்தி அவர்களும்  வந்திருந்தார். அவரது பாராட்டு உரையில் யாழ்ப்பாணத்தில் கூடுதல் விகிதாரத்திவ் பல்துறை அறிஞர்களும் இருக்கிறார்களே, காரணம் என்ன என வினவினார்.

    அவர் மற்றும் அன்று அவருடைய உடன்பிறப்புகள் அவருடைய பெறா மகன் திரு கோபால் அனைவருமே என் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பார்கள். என் வீட்டுக்கு வருவார்கள்.

    அண்மையில் திரு. கிருட்டிணமூர்த்தி அவர்களைச் சென்று பார்த்தேன். திருக்கோயில் திருப்பணி தொடர்கிறதா எனக் கேட்டார். திருப்பணிக்கு நிதியும் தந்தார்.

    88 வயது வரை வாழ்ந்த பெருமகனார். நிறைவான வாழ்வு வாழ்ந்த பெருமகனார். தமிழ் அறிஞர் உலகில் தமிழ் ஊடகத் துறையில் வரலாற்றுத் தடம் பதித்தவர். இன்று அவர் நம்மிடை இல்லை. துயருறும் பெறாமகன் திரு கோபால் அவர்களுக்கும் இல்லத்தாருக்கும் நெஞ்சார்ந்த இரங்கல். தினமலர் அலுவலகத்தாரே உங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

    Share
  • குருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லை

    குருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லை

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை

    முல்லைத்தீவு மாவட்டம் குமிழமுனைக்கு அண்மித்தான குருந்தக் குன்றில் அருள்மிகு ஆதி சிவ இலிங்கேச்சரர் திருக்கோயில் மூலவரான முச்சூலம் நீக்கப்பட்டதாக வந்த செய்திகள் தவறானவை.

    குன்றின் உச்சியில் உள்ள சைவ வழிபாட்டு இடம் எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறது. குருந்தக் குன்று திருக்கோயில் அறங்காவலர் என்னிடம் தெரிவித்தார்கள். மேலும் விவரம் பெற விரும்புவோர் திருக்கோயில் அறங்காவலர் திரு சசிகுமார் அவருடன் தொடர்புகொண்டு விபரங்களை அறியலாம். +94767644290

    குருந்தன்குளம் அணைக்கட்டுக்கு அருகே மலையடிவாரத்தில் உடைந்த கட்டிடம் இருந்தது. நான் நேரில் பார்த்திருக்கிறேன். அங்கு புதிதாக ஒரு கட்டடத்தைக் கட்ட முயன்றதால் நீதிமன்றத்தில் வழக்கு.

    உடைந்த அந்தக் கட்டடத்தின் அருகே தொல்லியல் மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தனர். மேசைமீது புத்தர் சிலை ஒன்றை வைத்தனர் வணங்கினர். அந்த இடத்தில் நிலத்தைத் தோண்டவில்லை, நோண்டிப் பார்த்தனர்.

    அமைச்சர் வந்திருந்தார். படைப் பிரிவினரும் வந்திருந்தார்கள். புத்தபிக்குகள் எவரும் அங்கு வரவில்லை.

    படைப்பிரிவின் காப்பரண் நெடுங்காலமாகவே அங்கு உண்டு. படைவீரர் ஒருவரோ இருவரோ இருப்பார்கள். கடமைக்கு வராத நாள்களே கூடுதலானவை.

    சைவக் கோயிலுக்குச் செல்வதற்குத் தடை ஏதுமில்லை. பொங்கலுக்குத் தடையில்லை. வழிபாட்டுக்கு தடையில்லை. என அமைச்சர் அறங்காவலரிடம் கூறியுள்ளார்.

    முழுமையான தகவல் அறியாமலே முச்சூலம் அகற்றியதாகத் தவறான செய்திகள் வெளியாகி சைவ உணர்வாளர்களின் மனம் புண்ணாகியதே.

    வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குமிழமுனை வழியாகச் சைவ உணர்வாளர்கள் வழிபடு பயணமாக குருந்தக் குன்று சென்று குருந்த மரநிழலில் அமர்ந்து இருக்கும் சிவபெருமானை வழிபட்டு அருள் ஆசி பெற்று வருவார்களாக.

    Abrahamic machinations towards Buddhist Hindu discord

    Maravanpulavu K. Sachithananthan
    Siva Senai

    As has been in the past, Catholic and Missionary Christians are once again in the forefront of fermenting a rift, a conflict, a riotous situation between the Buddhists and Hindus in Sri Lanka.

    This time they have chosen a god-forsaken hill top off Kuizhaminai in Mullaitivu District to provoke Hindus against the Buddhists.

    Kuruntham Hill is in the midst of a reserved forest area on the banks of the newly reconstructed Kuruntham kulam tank-bund. On the top of the hill are remnants of archeological interest of a Hindu temple, Siva temple.

    A trust at Kumuzhamunai is maintaining the worship centre at the hilltop. They arrange for regular poosai. Also the villagers climb up the shrub grown, snake infested tree shaded trek-track, to pray with pongal on most full moon days. The climb is a rigorous task on slippery red sand gravel as there is no paved track or laid steps.  

    Prior to the violent conflict (period of 30 years) the government did not even know of this site. Post conflict era, the army out-post continues and a Buddhist statue for the army personnel has been installed. As usual for a victorious conqueror, Buddhist bhikkhus backed by the archeological department are claiming the hill as a repository of Buddhist relics.

    Recently there was an attempt to construct a hall for the archeologists to stay and work from. The prayer for an injunction by the temple trustees had a favourable response at the courts and the building activity was halted.

    Last weekend, a group of archaeology students from the Peradeniya University visited the hill led by a Minister and supported by the Army. It was part of a field study for the students. 

    They climbed about 2-3 meters to reach an old dilapidated building to explore the area. The Minister and the Army escort were there. There were no Buddhist bhikkhus at all. They did not climb to reach 40-50 m. high hilltop, where the Siva temple is situated. 

    Catholic and Missionary Christian groups based at Mullaitivu sent out hate messages saying that the Minister and the Army had severely damaged the Siva temple to build a Buddhist vihara there.  

    They use their inward remittances, build a network of social and other media outlets to fan the flames of hatred between Buddhists and Hindus. Especially those at Mullaitivu, demographically a miniscule compared to the vast Hindu population in the district, are so organised to work fulltime on non-ecclesiastical manipulations, machinations to meticulously inflame the passions of Hindus against Buddhists. This morning all the media, print, digital and social media carried in bold headlines that Hindus should rise against Buddhist hegemony.   

    Earlier, it was these ecclesiastes who led a procession to protest against the cremation of a Buddhist priest near a Pillayaar temple at Neeravi, Nayaaru off Mullaitivu.  The ecclesiastes (1) who describe the abode of Pillayaar as the abode of Satan, (2) who had a colleague at Mannar as one of the accused in the case on the demolition of the ceremonial Hindu arch at the 10,000 year or so old historical Thiruketheechcharam Siva temple, organised a procession (participants mostly from their parishes) relating to the cremation, saying that the Buddhists have desecrated a Hindu temple.

    I appeal to the Global Hindus to intervene. A representation from the Global Hindus to all those concerned to desist from promoting religious hatred. Sri lankan Hindus are recovering slowly from the hardships endured through a prolonged violent conflict. They are not, repeat not, prepared to be pawns in the malicious hands of those inciting Buddhist – Hindu discord towards another unwanted conflict.

    Abrahimic colonialism has not ended. It is on a divide and rule policy. Global Hindus should come to the rescue of Sri Lankan Hindus. We want to have peace within ourselves and with our neighbours. Enough is enough of these conflict mongering Abrahamists.       

    Share
  • அனைத்துத் தமிழர் நலம் பேணும் ஆற்றலர் இவரே

    அனைத்துத் தமிழர் நலம் பேணும் ஆற்றலர் இவரே

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை

    தமிழ் தேசியத்தின் இலக்கைத் தெளிவாகத் தெரிந்தவர். அந்த இலக்கை அடையும் வழி முறைகளையும் நன்றாக அறிந்தவர். சாத்தியமான வழிமுறைகளை எடுத்துச்செல்லும் திறமையாளர். அனைத்து தரப்பினருடனும் நல்லுறவைப் பேணுபவர். அதற்காகத் தேசிய நிலைப்பாட்டிலிருந்து கிஞ்சித்தும் விலகாதவர்.

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்துக்குச் சொல்லவேண்டும். தமிழர் தரப்பு இணந்து இதைச் சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாக அறிந்தார். அனைத்து தரப்பினரையும் இணைத்தார்.

    தமிழ் மக்கள் வாழும் நிலப்பரப்பின் அனைத்துப் பகுதிகளில் உள்ளவர்களையும் அழைத்தார். சிறந்த வரைவை உருவாக்கினார். ஒன்றிணைந்த தமிழர் கோரிக்கையை உருவாக்கினார்.

    மன வேறுபாடுகள், மாச்சரியங்கள், விரிசல்கள் இவைக்கு அப்பால் ஈழத் தமிழர்களின் ஒன்றிணைந்த கோரிக்கை இதுவே என உலகநாடுகளுக்கு எடுத்துச் சொன்னவர்.

    திருவள்ளுவர் காட்டிய ஒழுக்க நெறிகளை வாழ்வின் தலையாய நெறிகளாக கொண்ட பகுத்தறிவாளர்.

    தமிழர் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர்.

    இன்றைய சூழ்நிலையில் அனைத்துத் தமிழ் அரசியல் அமைப்புகளுக்கும் சமூக அமைப்புகளுக்கும் தலைமை தாங்கக் கூடிய தகுதி உடையவர் அவரே.

    அவரே மன்னாரின் மணியான முத்தான மனிதர் சுப்பிரமணியம் சிவகரன். ஒருங்கிணைந்த அரசியல் அமைப்புக்குத் தலைவராகும் தகுதியர்.

    அரசியல் களத்தில் அவர் நின்றாலும் மக்கள் நலம் அவர் உள்ளத்தில் குடி கொண்டிருக்கின்றது.

    ஈழத்தமிழ் மக்கள் நலனை முன்னெடுப்பதில் ஆட்சித் திறமையை அவர் வளர்க்க வட மாகாண முதலமைச்சராகவும் அவரைத் தேர்ந்தெடுத்துப் பொறுப்புகளைக் கொடுத்தால் சிறப்பாகப் பணியாற்றக் கூடியவர்.

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்காக அவர் இந்த ஆண்டில் ஆற்றிய பணிகளை மனதில் கொண்டு நான் சொல்லவில்லை .

    கடந்த பல ஆண்டுகளாகவே அவரை அறிவேன், அவரது தேசியம் சார் முன்னெடுப்புகளையும், மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளையும், அரசியல் முன்னெடுப்புகளையும், அறிவார்ந்த செய்தித் தொகுப்பு முன்னெடுகளையும் அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

    மன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன்.

    Share
  • இன்று இராஜாஜியின் திருநாள்

    இன்று இராஜாஜியின் திருநாள்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    1961 மாசி நடுப்பகுதியில் தமிழரின் உரிமைக் கோரிக்கையை முன்வைத்து இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அரசு அலுவலகங்கள் முன்பு அறவழிப் போர் நிகழ்த்தினர் தமிழ் மக்கள்.

    அக்காலத்தில் சென்னையில் மாணவர்களாக இருந்த நாங்கள் தமிழ்நாட்டு அனைத்துத் தரப்பு அரசியல் தலைவர்களையும் சந்தித்தோம்.

    இராஜாஜியையும் சந்தித்தோம் அவர் தனது சுயராஜ்யா இதழில் இலங்கைத் தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டும் என எழுதினார். இராஜாஜி எழுதிய வரிகளைக் கீழே தந்துள்ளேன்.

    அறிஞர் அண்ணாதுரை சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தி ஆதரவு அளித்தார்.

    Remembering Rajaji on his day today

    A non violent campaign towards a rightfully Tamil political space in Sri Lanka by blocking public offices began around mid February 1961.

    As students in Chennai we drew the attention of all shades of Tamil Nadu political leadership.

    Rajaji supported us. He wrote an article in his Swarajya.

    Annadurai led a massive meeting at Marina.

    Below is the text of what Rajaji wrote:

    April 1961

    THE CEYLON STRUGGLE

    By

    C. RAJAGOPALACHARI

    The Ceylon Tamils (who are old Ceylonese and are as attached to their mother island as any other citizens of Ceylon) are asking for a federal form of government in which the Tamil speaking population of North and East Ceylon may have autonomy subject to the Federal Government of all Ceylon.  This will enable them to take pride in Ceylon nationality, without any bar-sinister of inferiority.

    The language issue is merely an outer symbol of the competition between the two nationalities.  It is a battle between communities, not at a battle of cultures or languages. Neither culture nor language is in danger.  Either can stand on its own strength and is not capable of being extinguished or even hurt in a substantial degree.  The question is whether the Tamil-speaking people are to be treated as equals or not. Equality will be ensured under a federal regime.  The unitary Government is necessarily leading up to place them on an inferior level.  This is the more unjust because the progress so far achieved and the present status of Ceylon as a whole depended not a little on the patriotic services of the eminent Tamilians of Ceylon.  The refusal to grant equal status on a federal basis to the Tamil population amounts to ingratitude.

    Let not the Tamil Northern and Eastern Ceylon population be confounded by superficial readers of news in India with the people of South Indian origin who have migrated to Ceylon when the plantations needed hard labour and who have settled down in and around the plantations as permanent but yet unrecognised citizens of Ceylon.  They are an entirely different group.  Their quarrel is a different one.

    Any sympathy from South India extended to the original Tamil speaking  people of Ceylon, who are fighting a tremendous battle for autonomy within a federal regime, can be easily mistaken for a Tamil conspiracy to bring Ceylon sovereignty and its integrity into jeopardy.  That is the reason why South Indian leaders have been patient and have not given too swift expression to their feelings of sympathy with those who fight a just battle in Ceylon on the language and federalist issues.  The present Ceylon Government party has been for sometime past pretending to see a great conspiracy between South Indian Tamils and Ceylon Tamils, which of course is mere myth born of an inferiority complex.

    The question of direct action and the advisability of continuing it is quite a different question and should be judged entirely by the leaders of the movement.  One who is at a distance and who is a votary of peace may be inclined to advise compromise if it could be had on honourable terms.  It is hard to believe that reason will not ultimately prevail.  We all hope in India, who have seen the lady-Premier of Ceylon, that she will bring her best emotions into play and succeed in controlling the extreme elements on the Sinhalese or Buddhist side (what ever name we may give it) and bring the protest movement to a suspension on honourable terms.

    Share
  • சிங்கள மொழியில் ஒன்பதாம் திருமுறை நூல்

    சிங்கள மொழியில் ஒன்பதாம் திருமுறை நூல்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    www. thevaaram. org மின்னம்பலம் தளத்தில் சிங்கள மொழிபெயர்ப்பு திருவாசகத்திற்கும் ஒன்பதாம் திருமுறைக்கும் பார்க்கலாம்

    திருக்கேதீச்சரத் திருப்பதிகம்
    திருக்கோணேச்சரத் திருப்பதிகம்
    இரண்டுக்கும்  அங்கு சிங்கள மொழிபெயர்ப்புகளைப் பார்க்கலாம்.

    1973ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் பன்மொழிப் புலவர் திரு கனகரத்தினம் அவர்கள் தன்னுடைய நண்பர் பாணந்துறையைச் சேர்ந்தவரும் மட்டக்களப்பில் தமிழ் கற்பித்தவருமான திரு தி தி நாணயக்காரரை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஐயனார்கோயிலடியில் அருள்மிகு விசுவேசப் பிள்ளையார் கோயிலுக்கு வழிபட அழைத்து வந்திருந்தார்.

    பாணந்துறையைச் சேர்ந்தவர். சிங்களவர். மட்டக்களப்பில் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர். மாணவர்களுக்கு தமிழ்ப் பாடம் கற்பிக்கிறார் என்றதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

    திரு கனகரத்தினம் அவர்களின் கட்டுரைகளை சிறுகதைகளை சிங்களத்திற்கு மொழிபெயர்த்தவர் திரு நாணயக்காரர்.

    தவத்திரு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா விடை முதலாம் பாகத்தைச் சிங்களத்திற்கு மொழிபெயர்த்துத் தருவீர்களா எனக் கேட்டேன்.

    உடனே ஒப்புக் கொண்டார். மட்டக்களப்பு திரும்பிய சில வாரங்களில் மொழிபெயர்ப்பை எனக்கு அனுப்பினார். நாவலப்பிட்டி ஆத்மசோதி அருளாளர் நா முத்தையா அவர்கள் அந்த மொழிபெயர்ப்பை நான் கேட்டதால் அச்சிட்டு வெளியிட்டார்.

    பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கிலிருக்கும் தமிழ் மொழி. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எழுத்து வழக்கில் இருக்கும் சிங்கள மொழி. ஒரு மொழியின் ஆக்கங்களை படைப்புகளை நூல்களை மற்றைய மொழிக்குக் கொண்டுசெல்லும் முயற்சி மிக அரிதாக இருந்ததால் இரு மொழியாளரும் அயல் அயல் ஆக இருந்தும் இரு சாராருக்குமிடையே நல்லிணக்கமும் அன்புப் பரிமாற்றமும் குறைவாக இருந்தது.

    பேசுவதும் திருவாயால் என அருளாளர் மாணிக்கவாசகர் திபி 910இல் அநுராதபுரத்தின் பாதித் தமிழ் பாதிச் சிங்கள மன்னன் முதலாம் சேனனுக்காகப் பாடினார். சேனனுடைய மகளின் ஊமை நிலை போக்கினார். (ஆதாரம் கோணகசுத்தென்ன ஆனந்த இமி சிங்களத்தில் எழுதிய நிக்காய சங்கிரகம்).

    திபி 1271இல் ஆட்சிக்கு வந்த இரண்டாம் பராக்கிரமபாகு தஞ்சாவூரிலிருந்தும் மதுரையிலிருந்தும் தமிழ்ப் புலவர்களை அழைத்து வந்து தன் அவையில் தமிழ் கேட்டு மகிழ்ந்தான்.

    புத்தமித்திரர் எழுதிய வீரசோழியம் இலக்கண நூலைச் சார்ந்து சிங்களத்தில் இலக்கண நூல் எழுத முயன்றான். சிங்கள மொழியின் தொடக்க இலக்கண நூலில் சந்தேகங்களைத் தீர்க்க வீரசோழியம் பார்க்க என எழுதி இருக்கும்.

    நான்காம் பராக்கிரமபாகுவின் (கிபி 1297) அரசவைப் புலவர் தென்னாவரம் போசராசர் தமிழில் சரசுவதி மாலையை எழுதி அவையில் அரங்கேற்றினார்.

    சிங்கள மொழியின் முதலாவது உரைநடை நூல் பூசாவழி, நான்காம் பராக்கிரமபாகு காலத்தில் அரங்கேறியது.

    ஆறாம் பராக்கிரமபாகு தனது அவையில் தமிழ்ப் புலமைக்கு முன்னுரிமை கொடுத்தார். தமிழ்ப் புலவர் நல்லுருத்திரனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தார். முள்கிரிகல் தேரர் எழுதிய கோகில சந்தேச எனும் சிங்கள நூல் இந்தச் செய்திகளைக் கூறும்.

    தமிழைக் கற்காத தமிழ் நூல்களைக் கற்காத பிறவிகள் பாவிகள் எனச் சுபாசிதய சிங்கள நூலில் எழுதிய சிங்களவர், தனது பெயரையும் தமிழுக்கு அழகியவண்ணன் என மாற்றினார்.

    திருக்குறளின் மூன்று சிங்கள மொழிபெயர்ப்புகள் வந்தாலும் அவை கடந்த நூறு ஆண்டுகளுக்குள் வெளிவந்தவையே.

    யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாசாவிருத்திச் சங்கத்தில் தமிழ் பயின்று பண்டிதர் ஆகி யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் தமிழ் கற்பித்தவர் வியாங்கொடை தவத்திரு தருமரத்தின தேரர்,

    தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி ஆகிய மூன்றையும் சிங்களத்திற்கு மொழிபெயர்த்தவர்.

    கடந்த 40 – 50 ஆண்டுகளாகத் தமிழ் நூல்களைச் சிங்களத்திற்குக் கொண்டு செல்லும் பணியில் சிங்களரும் முகமதியரும் ஈடுபட்டு வருகிறார்கள். கொடகே பதிப்பகம் தமிழ்நாட்டு மற்றும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நூற்றுக்கணக்கானவற்றை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகின்றனர்.

    பன்னிரு திருமுறைகளை 12 மொழிகளுக்கு எடுத்துச்செல்லும் பேறு அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசப் பெருமான், தருமபுர ஆதீனம் தவத்திரு 26ஆவது குருமகாசந்நிதானம் வழியாக எனக்குத் தந்தது.

    திருவாசகம் மொழிபெயர்ப்பு முடிவடைந்து 500 படிகளை இலங்கை அரசின் இந்து சமய திணைக்களம் வெளியிட்டுள்ளது.

    மொழிபெயர்த்துத் தந்தவர் கல்முனை சிங்கள மகா வித்தியாலய மேனாள் துணை முதல்வர் திரு வடிவேலு. அவருக்கு வழிகாட்டியவர் கல்முனை எழுத்தாளர் திரு முகில்வண்ணன்.

    ஒன்பதாம் திருமுறையையும் அவரே மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இப்பொழுது அச்சிட்டு மாதிரி நூலாக்கித் தருமபுரம் ஆதீனம் தவத்திரு 27ஆவது குருமகாசந்நிதானம் அவர்களின் ஆசியை நோக்கி அவ் அச்சுப்படி சென்று கொண்டிருக்கிறது.

    Share
  • Jaswant Singh Cherished Memories

    Jaswant Singh Cherished Memories

    Maranvanpulavu K Sachithananthan
    Siva Senai, Jaffna, Sri Lanka

    Sri Lankan Tamils express their heartfelt condolences to the bereaved family and the Bharatiya Janata Party on the death of the former Minister of Foreign Affairs Jaswant Singh.

    He was a friend of the Sri Lankan Tamils. He cared for their welfare. He along with Prime Minister Atal Bihari Vajpayee were keen to restore the dignity and respect of Tamils.

    In spite of the ban on the LTTE, Prime Minister Vajpayee wanted his personal envoy to meet Prabhakaran at Vanni. During May 2000, I was asked to get the consent from Prabhakaran to meet his personal envoy. Brajesh Mishra, National Security Advisor, Jana Krishnamoorthy Minister of Justice asked me to reach Prabhakaran to get concurrence for a meeting with the envoy of the Indian PM.

    I sought the help and support of Kavignar Kasi Anandan and Pazha Nedumaran. Prabhakaran gave his consent. I told this to Brajesh Mishra.

    On June 6th, Foreign Minister Jaswant Singh went to Colombo to meet President Chandrika. It was an unscheduled visit. President Chandrika declined support.

    I was asked to convey this to Prabhakaran.

    These are cherishable memories for Sri Lankan Tamils of Mr. Jaswant Singh. Your memory shall always be with us.


    புரட்டாதி 12, 2051 (திங்கள்) 28.09.2020

    யசுவந்தர் சிங்கர் (ஜஸ்வந்த் சிங்) காலமானார்.

    சம காலத்தவர், ஈழத் தமிழர் பால் அளப்பரிய ஈடுபாடு கொண்டவர். ஈழத் தமிழருக்காகப் பல நற்பணிகள் ஆற்றியவர். 2000 ஆனியில் (யூன்) அவரின் கொழும்புப் பயணம், ஈழத் தமிழருக்கான பயணம்.

    அவர் கொழும்புக்குப் பயணமாகுமுன் என்னைப் பிரபாகரனிடம் பேசுமாறு பணித்தவர் பிரதமர் வாச்பாய். நீதி அமைச்சர் சனா கிருட்டிணமூரத்தி. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரசேசு மிர்சா.

    2000 மே மாதம் 28ஆம் நாள் நீதி அமைச்சர் சனா கிருட்டிணமூரத்தி அழைத்துத் தில்லி சென்றேன். பிரதமரின் தூதர் இலங்கை வன்னி சென்று பிரபாகரைனச் சந்திக்கப் பிரபாகரனின் ஒப்புதல் பெறுமாறு என்னிடம் கேட்டார்.

    கவிஞர் காசி ஆனந்தன், மாவீரர் பழ. நெடுமாறன் உதவினர். யூன் 4ஆம் நாள் அளவில் பிரபாகரனின் ஒப்புதலைப் பெற்றுக் கொடுத்தேன்.

    அப்போதைய குடியரசுத் தலைவர் சந்திரிகாவின் ஒப்புதலைப் பெற யூன் 6 அளவில் இந்திய வெளிநாட்டமைச்சராக இருந்த யசுவந்தர் கொழும்பு சென்றார். திடீர்ப் பயணம் என ஊடகங்கள் தெரிவித்தன.

    சந்திரிகா ஒப்பவில்லை. யசுவந்தர் வெறுங்கையுடன் திரும்பினார்.

    செய்தியை என்னிடம் சொன்ன அமைச்சர் சனா கிருட்டிணமூரத்தி, பிரபாகரனிடமும் தெரிவிக்கச் சொன்னார்.

    ஒரே பணி. பிரபாகரனிடம் என் பணி. சந்திரிகாவிடம் யசுவந்தர் பணி.

    ஈழத் தமிழர் மீது அளவற்ற ஈடுபாடு கொண்ட யசுவந்தர் மறைந்தார். அவரை இழந்து வாடும் இல்லத்தாருக்கும் பாரதீய சனதாக் கட்சியினருக்கும் ஈழத் தமிழரின் நெஞ்சார்ந்த இரங்கல்.

    Share
  • இலங்கையில் பசு வதைத் தடைச் சட்டம்

    இலங்கையில் பசு வதைத் தடைச் சட்டம்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை

    பிரதமர் மகிந்த இராசபட்சரையும் அரசையும் பாராட்டுகிறேன்

    சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று  இலங்கைப் பிரதமர் மகிந்த இராசபட்சர், பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார்.

    இலங்கைச் சைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்

    கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எண்ணங்களை விதைத்து, போராட்டங்கள் நடத்தி, மாட்டிறைச்சிக் கடைகளுக்கு ஏலம் விடாமல் பல்வேறு பிரதேச சபைகளைத் தடுத்து. முயன்று வந்தது சிவசேனை அமைப்பு.

    இலங்கைச் சைவர்கள் சார்பில் பிரதமரைப் பசு வதைத் தடைச் சட்டம் கோரியிருந்தது.

    இச்சட்டத்தைக் கொண்டு வருவதாக அரசாங்க நாடாளுமன்றக் குழுவில் முன்மொழிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

    இலங்கை மண்ணில் 10 ஆயிரம் ஆண்டுக் கால வரலாற்றில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது.

    ஒல்லாந்தர் காலத்தில் மாட்டிறைச்சி உணவை எதிர்த்த செல்வந்தரான சைவப் பழம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாணத்தில் உள்ள தம் சொத்துகள் அனைத்தையும் விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு சிதம்பரத்துக்குச் சென்றார்.

    மலையகச் சைவத் தமிழ் மக்கள்
    மேற்கு மாகாண வடமேல் மாகாணச் சைவத் தமிழ் மக்கள்
    கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள்
    வடக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள் யாவரும் ஒரே குரலில் பிரதமர் மகிந்த இராசபட்சவின் பசு வதைத் தடை முயற்சியைப் பாராட்டுகிறார்கள், போற்றுகிறார்கள்.

    பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவது போலவே அரசு சார்பற்ற மதமாற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து மதமாற்றத்தைக் குறைக்கவும்
    மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவும் பிரதமர் மகிந்த இராசபட்சர் முயல்வார். இலங்கையில் வாழ்கின்ற 30 இலட்சம் சைவத்தமிழ் மக்கள் அனைவரும் அவரது முயற்சிக்கு ஆதரவு கொடுப்பார்கள்.

    Share