Tag: செண்பக ஜெகதீசன்

  • குறளின் கதிர்களாய்… (12)

     

    செண்பக ஜெகதீசன்

     

    விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

                    -திருக்குறள்- 82 (விருந்தோம்பல்)

     

    புதுக் கவிதையில்…

     

    அமுதம் கிடைப்பது எளிதில்லை

    அதனை உண்பவர்க்கு அழிவில்லை,

    அது

    சாவா மருந்து-

    அமரர்தம் விருந்து..

     

    வந்த விருந்தினரை வெளியேயிருத்தி,

    வீட்டினுள்

    சொந்தமுடன் தான்மட்டும் உண்ண

    இந்த அமுதம் கிடைத்தாலும்

    வேண்டவே வேண்டாம்…!

     

    குறும்பாவில்…

     

    விருந்தினரை வெளியிருத்தித் தானுண்ணக்

    கிடைத்த சாவுவரா

    விண்ணோர் அமுதமும் வேண்டாமே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    அமரர் உலகின் உணவதுவாம்

    அமுதம் உண்டால் சாவிலையாம்,

    நமக்கும் அதுவே கிடைத்தாலும்

    நம்மிடம் வந்த விருந்தினர்கள்

    தமக்கும் சிறிதும் கொடுக்காமல்

    தனியே அவரைப் புறத்திருத்தி

    நமக்கு மட்டும் தனித்துண்ண

    நலமிகு அமுதும் வேண்டாமே…!

     

    லிமரைக்கூ…

     

    வைத்துஉண் உன்னுடனே விருந்து,

    வேண்டாம்நீ தனித்துண்ணக்

    கிடைத்தாலும் அமுதெனும்சாகா மருந்து…!

     

    கிராமியப் பாணியில்…

     

    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்

    விருந்துவந்தா ஒபசரிக்கணும்,

    வந்தவர ஒபசரிக்கணும்

    ஊட்டுக்குள்ள ஒபசரிக்கணும்,

    குடுக்கிறது கூளுண்ணாலும்

    கூடயிருந்து ஒபசரிக்கணும்..

     

    வெசயம்இதத் தெரிஞ்சிக்கணும்

    வௌரமாத்தான் நடந்துக்கணும்,

    வந்தவிருந்த வெளியவச்சி

    ஊட்டுக்குள்ள நீகுடிக்க

    தேவாமுருதம் கெடச்சாலும்

    தேவயில்ல தேவாமுருதம்,

    சாவுவரா தேவாமுருதம்

    தேவயில்ல தேவாமுருதம்..

     

    தெரிஞ்சிக்கோ,

    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்

    விருந்துவந்தா ஒபசரிக்கணும்…!

     

    Share
  • முப்பெரும் தேவியர்…

    செண்பக ஜெகதீசன்

    parvati-lakshmi-and-saraswati-PX89_l

     

    வென்றிட வீரம் தருபவளே

    வேத வெற்பின் மலைமகளே,

    என்றும் செல்வம் நிலைத்திருக்க

    எல்லாம் தந்திடும் அலைமகளே,

    குன்றிடாக் கல்வி கலைகளுடன்

    கொடுத்திடும் தாயே கலைமகளே,

    என்றுமே வாழ்த்துவம் உங்களையே

    ஏற்றம் வாழ்வில் பெற்றிடவே…!

     

     

     

    படத்திற்கு நன்றி: http://www.dollsofindia.com/library/devis/

    Share
  • குறளின் கதிர்களாய்… (11)

    செண்பக ஜெகதீசன்

    justice scale

    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்

    கோடாமை சான்றோர்க் கணி.

    -திருக்குறள்- 118 (நடுவு நிலைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    சாய்ந்தால் ஒரு பக்கம்,

    துலாக்கோலில்

    எடைவராது சரியாய்..

     

    சாயாமல் ஒரு பக்கமாய்,

    ஆராய்ந்து வழங்கிடும் நீதி

    அணியாகும் சான்றோருக்கே…!

     

    குறும்பாவில்…

     

    சாயாத துலாக்கோலாய்

    சாற்றிடும் நீதிதான்,

    சான்றோருக்கு அழகு…!

     

    மரபுக் கவிதையில்…

     

    சரியாய் எடையைப் போடுதற்கு

    சமநிலை கொண்ட துலாக்கோலில்

    ஒருபுறம் சாயா நிலைபார்த்தே

    ஒழுங்காய் வைக்கணும் இருதட்டும்,

    தெரிந்திடு இதுகதை நீதியிலும்,

    தவறியும் ஒருபுறம் சாராதே

    உரைத்திடும் நல்ல தீர்ப்பதுதான்

    உயர்த்திடும் பரிசாம் சான்றோர்க்கே…!

     

    லிமரிக்…

     

    சரியாய்ப்பார் சீர்தூக்கும் கோல்,

    போகாதுபார் ஒருபுறம் மேல்..

    பகிர்ந்தளிக்க பாதி,

    சரிசமமாய் நீதி

    புகழ்சேர்க்கும் சான்றோர் பால்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    எடபோடு எடபோடு

    தொடாமலே எடபோடு,

    சரிசமமா எடபோடு

    சாயாம எடபோடு,

    கத்தரிக்கா நெறுத்தலும்

    கவனமாத்தான் எடபோடு,

    சாயாம நெறுத்தாத்தான்

    சரியான எடக்கோலு- ரெம்ப

    சரியான எடக்கோலு..

     

    இதுபோல நீதிசொல்லு

    எல்லார்க்கும் நீதிசொல்லு,

    சரியான நீதிசொல்லு

    சாயாம நீதிசொல்லு,

    பேருவரும் ஒந்தனுக்கே

    பெருமவரும் சந்ததிக்கே,

    அதுக்கு,

    நீதிசொல்லு நீதிசொல்லு

    நெசத்திராசா நீதிசொல்லு,

    சரியான நீதிசொல்லு

    சாயாம நீதிசொல்லு…!

     

    படத்திற்கு நன்றி: http://blog.memberclicks.com/bid/251450/Striking-the-work-life-balance

     

    Share
  • அந்த உண்மை…

    செண்பக ஜெகதீசன்

    Oak_tree_by_attila0427மரத்தினிலே கிளையை வைத்து

    கிளையதிலே இலையை வைத்து

    இலையிலே பச்சை வைத்து

    இயற்கைக்கு அழகு வைத்து

    இதையே பழுக்க வைத்து

    இடம்பெயர்ந்து விழவே வைத்து

    சுடுமணலில் காயவைத்து

    சருகெனவே ஆகவைத்து

    தெருத்தெருவாய்ப் பறக்க வைத்து

    பனிமழையில் நனைய வைத்து

    உரமாக மக்கவைத்து,

    மரம்வளர ஊக்குவிக்கும்

    உண்மைதான்-

    இறைவன்…!

     

    படத்திற்கு நன்றி: http://www.gameinformer.com/blogs/members/b/rfxrage_blog/archive/2013/06/12/my-top-10-favorite-skill-tree-characters.aspx

    Share
  • குறளின் கதிர்களாய்… (10)

    செண்பக ஜெகதீசன்

    c3b73c47-3616-4c6f-9b41-5895989713a6_S_secvpf

    அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்

    சிறுகை யளாவிய கூழ்.

    -திருக்குறள்- 64 (புதல்வரைப் பெறுதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    அமுதமது

    அமர லோகத்திலாம்,

    அது தெரியாது நமக்கு..

     

    நமக்குத் தெரிந்த அமுதம்,

    அது

    நம் பிள்ளைகளின்

    பிஞ்சுக் கைகள் அளைந்து

    மிஞ்சிய கூழ்தான்..

     

    அதைவிட

    இதுதான் இனிது…!

     

    குறும்பாவில் (லிமரைக்கூ)…

     

    பிள்ளைச்செல்வமே பெரிதென வாழ்,

    வானவர் அமுதைவிட இனிதுநம்

    வாண்டுகளின் கையாலளைந்த கூழ்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    அமரர் உணவது அமுதமென்பார்

    அதனை யாரும் அறிந்ததில்லை,

    இமைகள் மூடா வானோரும்

    இதனால் என்றும் இளையோராம்,

    எமனும் இவரை நெருங்கானம்,

    இத்தனைச் சிறப்புடை அமிழ்தினிலும்

    நமது பிள்ளைகள் கைகொண்டு

    நன்றாய் அளைந்த கூழினிதே…!

     

    லிமரிக்…

     

    அமுதமே அமரர்தம் ஊண்,

    அதனாலவர் உறுதியோ தூண்..

    பிள்ளைகள் அளைந்தது,

    சுவையினில் விளைந்தது

    அமுதினும் இனியகூழ் காண்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    தேவாமுருதம் தேவாமுருதம்

    தெய்வங்க தின்னொந் தேவாமுருதம்

    தின்னாச் சாவுல்லா தேவாமுருதம்

    கையில கெடைக்கா தேவாமுருதம்

    கடவுளு நாட்டுத் தேவாமுருதம்..

     

    கெடைக்காதத உட்டுத்தள்ளு

    கெடைக்கிறகூள குடிச்சித்தின்னு

    அதுலயொம்

    புள்ளய தொட்டா தேவாமுருதம்

    அதுவ

    பெசஞ்சி அளஞ்சா தேவாமுருதம்..

    தேவாமுருதம் தேவாமுருதம்

    தேனா இனிக்கொந் தேவாமுருதம்…!

     

    படத்திற்கு நன்றி: http://www.maalaimalar.com/2013/01/16092438/ragi-bajra-kool.html

     

    Share
  • தலைகுனிவாய்…


    -செண்பக ஜெகதீசன்

     

    ஆண்டவன் படைப்பு

    அலட்சியப்படுத்ப்படுகிறது..

     

    தொப்புள்கொடி உறவும்

    தொலைந்து போகிறது..

     

    இரத்த பாசத்தை

    இயலாமை வென்றுவிடுகிறது..

     

    அவசர ஆசை

    அவமானச் சின்னமாகிவிடுகிறது..

     

    கண்ணியம் என்பது

    காற்றில் பறந்துவிட்டது..

     

    ஏமாந்ததற்கு ஓர்

    எடுத்துக்காட்டாகி விட்டது..

     

    தவறு செய்ததற்கு

    தண்டனை மாறிவிட்டது..

     

    தாய்மை என்பது

    தலைகுனிவாகிவிட்டது-

    குப்பைத் தொட்டியில்

    குழந்தை…!

     

     

    Share
  • பாடம்…

    செண்பக ஜெகதீசன்

    Rice field in early morning. Takasaki, Japan.

    இயற்கையும்

    இப்போது கற்றுக்கொண்டது,

    இந்த மனிதனைப் பார்த்து..

     

    இரவெல்லாம் காத்திருந்து

    கையேந்தி

    இலைகள் சேகரித்த பனித்துளிகளை,

    இந்தக்

    கதிரவன் வந்து

    கவர்ந்து சென்றுவிட்டானே…!

     

    படத்திற்கு நன்றி: http://blog.jasonweddington.com/2012/08/rice-field-sunrise/

    Share
  • பிள்ளைக்காக…

    செண்பக ஜெகதீசன்umbrella

    அரைகுறை நம்பிக்கையுடன்

    ஆர்ப்பாட்டமாய்

    மழைக்காகக்

    கூட்டுவழிபாடு செய்வோரைவிட,

    நம்பிக்கையுடன்

    குதூகலமாய்க்

    குடை எடுத்துவந்தக்

    குழந்தையை நேசிப்பவன்தான்

    இறைவன்..

     

    பெய்கிறது மழை

    அந்தப்

    பிள்ளைக்காக…!

    படத்துக்கு நன்றி

    http://www.thisnext.com/browse/pink/rain/ 

    Share
  • கணபதி அருள்…

     செண்பக ஜெகதீசன்  iganeshjimages

    கரமது ஐந்தாய் உடையவனை

    காணும் ஆனை முகத்தவனை,

    சிரமதில் மணிமுடி தரித்தவனை

    சீக்கிரம் வந்தே அருள்பவனை,

    புரமது எரித்தான் திருமகனை

    பூமகள் கணவன் மருமகனை,

    கரமது கூப்பி வணங்கிடுவாய்

    கணபதி அருளினைக் கண்டிடுவாய்…!

     

    கரமதாய்த் துதிக்கை உடையவனை

    கடவுளர் யாவரின் முதலவனை,

    வரம்பல தந்திடும் வல்லவனை

    வகைவகை வடிவம் கொண்டவனை,

    அரணென நம்மைக் காப்பவனை

    அருகம் புல்லை அணிந்தவனை,

    உருவினில் பெரிய விநாயகனை

    உளத்தினில் கொண்டால் உயர்வுதானே…!

    படத்துக்கு நன்றி

      http://www.bhmpics.com/view-lord_ganesha_awesome_art-1920×1080.html

    Share
  • தோற்றால்…


     செண்பக ஜெகதீசன்successimages

    இயலாமையால் தோற்றால்

    இது தோல்வியல்ல..

     

    இன்னும்

    இருக்குது வாய்ப்பு,

    முன்னேற-

    முயன்று வெற்றி பெற..

     

    இன்னொருவரை நம்பித் தோற்றால்

    இல்லை வாய்ப்பே..

     

    எதற்கும்

    இறைவனை நம்பு,

    குறையும் தடங்கல் வாழ்வில்…!

     

    படத்துக்கு நன்றி

    http://lifehacker.com/5926309/how-the-people-around-you-affect-personal-success


    Share
  • யோகக்காரன்…

    செண்பக ஜெகதீசன்happyindex

    நினைத்தபடி நடந்தால்,

    நீ யோகக்காரன்..

     

    நடக்காவிட்டால்,

    நீ பெரும் யோகக்காரன்..

     

    காரணம்,

    கடவுளின் விருப்பம் அது-

    நடக்கும் இனி நல்லபடி…!

     

    படத்துக்கு நன்றி

    http://www.growyourselves.com/10-characteristics-of-a-happy-person.html

    Share
  • குறளின் கதிர்களாய்…(9)


    செண்பக ஜெகதீசன்waterimages

    புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை

    வாய்மையாற் காணப் படும்.

    -திருக்குறள்- 298 (வாய்மை)

     

    புதுக் கவிதையில்…

     

    தண்ணீரில் கழுவினாலே

    மாசகன்று,

    மேனியது மேலே

    தூய்மையாகும்..

     

    உள்ளத் தூய்மை

    உருவாகும், பேசும்

    உண்மையால் தானே…!

     

    குறும்பாவில் (லிமரைக்கூ)…

     

    தண்ணீரால் உடல்பெறும் தூய்மை,

    உடலினுள்ளே பேணிடு

    உள்ளத் தூய்மைக்கு வாய்மை…!

     

     மரபுக் கவிதையில்…

     

    வியர்வை சொட்ட உழைப்பதிலும்,

    விழுந்து தரையில் புரள்வதுடன்

    செயற்கைக் காரணம் பலவற்றால்

    சேர்ந்திடும் உடலின் அழுக்கெல்லாம்

    இயற்கைச் செல்வம் தண்ணீரால்

    இல்லை யென்றே தூய்மையாகும்,

    உயர்ந்ததாம் உள்ளத் தூய்மையதும்

    உண்மை யதனால் வந்திடுமே…!

     

    லிமரிக்…

     

    உடலைச் சுத்தமாக்கிடும் நீர்..

    உள்ளே துடைப்பது யார்,

    உண்மையே பேசி

    உலகினை நேசி,

    உள்ளமே தூய்மைதான் பார்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    ஆத்தங்கர கொளத்தங்கர

    அலயவேண்டாம்,

    அடுப்படியில் எடுத்துவச்ச

    அண்டாத்தண்ணி அதுவேபோதொம்..

     

    எடுத்துவச்சிக் கழுவுனாலே

    எந்த அழுக்கொம் போவுமில்லா,

    ஒடம்பு

    எல்லாமே சுத்தமாவும் நல்லாத்தானே..

     

    ஒடம்பு சுத்தம் ஆயிடவே

    தண்ணி போதொம்- ஒன்

    மனசு சுத்தம் ஆவிடத்தான்

    உண்ம வேணும்,

    பொய்பொரட்டு கலக்காத

    உண்ம வேணும்..

    ஒணந்துக்கோ-

    உண்ம வேணும்…!

    http://gogreenscene.wordpress.com/2011/03/23/world-water-day/ 


    Share
  • கல்லாய்…

    செண்பக ஜெகதீசன்snakeindex      

     

    இதயத்தைக் கோவிலாக்கி

    அன்பை மதமாக்க வந்தான்

    இறைவன்..

     

    இந்த மனிதர்கள்,

    இதயத்தைக் கல்லாக்கி

    கல்லை இறைவனாக்கி

    கோவிலாக்கி,

    கல்லால் அடித்துக்கொள்கிறார்களே

    இறைவனுக்காக-

    தங்களுக்குள்…!

     

    படத்துக்கு நன்றி

    http://www.demotix.com/news/1580134/thousands-worship-serpent-gods-during-ayilyam-festival

    Share
  • குறளின் கதிர்களாய்…(8)

     

     

    desertindex

     

        குறளின் கதிர்களாய்… (8)

     

    அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

    வற்றன் மரந்தளிர்த் தற்று.

                    -திருக்குறள்- 78 (அன்புடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    பாலை நிலத்தில்

    பசும்மரம் துளிர்த்தாலும்,

    பொசுக்கும் வெயிலில்

    பட்டுப்போகும்..

     

    இதுதான் கதை,

    இதயத்தில் அன்பில்லாத

    இவ்வுலக வாழ்க்கையிலும்…!

     

    குறும்பாவில்…

     

    பாலையில் துளிர்க்கும் மரம்,

    இதயத்தில் அன்பில்லா வாழ்க்கை..

    இரண்டுக்கும் அழிவுதான்…!

     

          மரபுக் கவிதையில்…

     

    எங்கும் மணலாம் பாலையிலே

    எந்தச் செடியும் வளராது,

    தங்கிடும் காய்ந்த மரமதுவும்

    துளிர்த்து வரினும் பட்டுவிடும்,

    எங்கும் இதுபோல் தானாகும்

    எத்தனை உறவுகள் இருந்தாலும்

    கங்காய் வாழ்வை அழித்திடுமே

    கொஞ்சமும் அன்பிலா இதயமதே…!

     

    லிமரிக்…

     

    பாலையில் துளிர்த்திடும் மரம்

    பட்டிடும் கருகியே சிரம்,

    அகத்தன்பு சாகாது,

    வாழ்வதுவே ஆகாது

    வெயிலால் பட்ட மரம்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    பாலவனம் பாலவனம்,

    பலனேயில்லாப் பாலவனம்..

     

    மணலாத்தான் நெறஞ்சிருக்கும்,

    மருந்துக்கொந் தண்ணியில்ல..

    காலவச்சாச் சுட்டுப்புடும்,

    மரத்தவச்சாப் பட்டுப்போவும்..

     

    மனுசனுக்கு அன்புவேணும்

    மனசுக்குள்ள அன்புவேணும்..

    மனுசவாழுவு இதுதாம்பா-

    அன்புருந்தா சோலவனம்,

    அதில்லண்ணா பாலவனம்

    அதிலநிக்கும் பட்டமரம்..

     

    பாலவனம் பாலவனம்,

    பலனேயில்லாப் பாலவனம்…!

     

    படத்துக்கு நன்றி

     http://www.piersonplaza.com/about_the_area/index.html      

    Share
  • ‘ஓடும் செம்பொனும்’…

    செண்பக ஜெகதீசன்goldindex
    இரும்புக்கு இல்லாத மதிப்பை,

    தங்கத்துக்கும் வெள்ளிக்கும்

    தந்து, ஆசையில்

    தடுமாறுகிறான் மனிதன்-

    தடம்மாறியே..

     

    புடம்போட்ட தங்கங்களாய்

    கடவுளின் உண்மை அடியவர்கள்..

    அவர்கள்தான்,

    ‘ஓடும் செம்பொனும்

    ஒக்கவே நோக்குவார்’…!

     

    படத்திற்கு நன்றி

    http://www.123rf.com/photo_5811938_gold-bar-isolated-over-square-white-background.html

    Share