Tag: sathiyamani kavithai Tamil literature

  • சொர்க்க வாசல் ?!

    வாசலில் செம்மண் கோலமிட்டால் வருபவர்க்கு சொர்க்க வாசல்
    ஓசையில் மணியுடன் கதவுகள் திறந்தால் வந்த‌வர்க்கு சொர்க்க வாசல்
    வாவென் றழைக்க அன்பர்கள் இருந்தால் திறப்பவர்க்கு சொர்க்க வாசல்
    புன்னகை புரிந்து வந்தனங்கிடைத்தால் விருந்தினர்க்கு சொர்க்க வாசல்

    அன்புடன் வார்த்தை அருவிடப் பகிரும் வாயுமேயொரு சொர்க்க வாசல்
    பண்புடன் விருந்து பகிர்வுடன் அன்புச் சமைத்திடும் உள்ளம் சொர்க்க வாசல்
    அருசுவை யேற்று தொந்தியில் செரிமன் ஆகிடும் இல்லற சொர்க்க வாசல்
    அருமை உங்களின் சமையல் என்ற ஆசிகள் காதினில்! சொர்க்க வாசல்

    அழுதிடும் குழவியின் அரவங் கேட்டு சுரபிகள் திறப்பதும் சொர்க்க வாசல்
    தொழுதிடும் அடியார் குறைகளை கேட்டு வரங்கள் வருவது சொர்க்க வாசல்
    பழுதுடன் பிணிதனை நீக்கும் இலவச மருத்துவர் இல்லம் சொர்க்க வாசல்
    படிப்புடன் பண்புகள் கற்றுகொடுத்திடும் பள்ளிவாசலும் சொர்க்க வாசல்

    தாயகம் காப்போம் என்றே சேவைகள் தந்தவர் வாசல் சொர்க்க வாசல்
    ஆயுதம் யேந்தி கடும்பனி குளிரினில் ஆள்பவர் அடிகள் சொர்க்க வாசல்
    பாதகம் செய்வோர் திருந்திட சிறையின் வாசலும் அவர்க்கே சொர்க்க வாசல்
    சாதனைப் புரிவோர் மகத்துவந் தன்னைச் சாற்றும் காற்றும் சொர்க்க வாசல்

    ஏகாதசிதமில் ஆழ்வார் சுரங்களைப் பாடிமால் தரிசனம் சொர்க்க வாசல்
    தீராபசியினில் தீந்தமிழ்க்கவிதை ஆக்கும் கணினியில் சொர்க்க வாசல்
    தேன்மொழி யானதும் செம்மொழிசங்க மேடையுந்தானே சொர்க்க வாசல்
    மின்மொழி யாகிட வல்லமைத் தளத்தில் நுழைவதும் தானே சொர்க்க வாசல்

    Share
  • செம்பொன் சோதீசன் பதிகம்

    (இலாலாப்பேட்டை, குளித்தலை கரூர் இணைக்கும் சாலையில் உள்ளது. எனது இளம்பிராயம் அங்கு தான் அனுபவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைப் பணியில் கோயில் இடம்மாறி புதுபிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளம் கொட்டிகிடக்கும் இக்கிராமத்தில் அருள்வல நாயகனை கண்டு தரிசனம் செய்ய இப்பதிக காணிக்கை.)

    நாமம்

    அகண்ட காவிரியின் தென்கரைச்    சீலமாக்க‌

    உகந்த     நிலமென்று  உமையோடு குடியமர‌

    முகர்ந்த மலர்கதம்ப  மல்லிகை      மாலைசூடி

    சகண்டை நாதமோடு செம்பொன்   சோதீபோற்றி

     

    நிலம்

    கீழ்திக்கில்        கடம்பராக‌     தென்கீழ்     ரத்தினக்கிரி

    தென்திக்கில்    சொக்கனாய் தென்மேல் நாமகிரி

    மேற்திக்கில்      கொடுமுடி    வடமேற்கு ஞானகிரி

    வடதிக்கில் கொள்ளிசித்தன் ஈசானம்  மரகதகிரிவாழி

     

    தலம்

    வாழைதன் தோட்டமோடு தென்னைசூழ்  பச்சையாக‌

    தாழையின் வாசம்சேர்     தளிர்வெற்றி    லைப்பாக்கு

    பேழைவயி ற்றெடுத்த     பெரும்பிள்ளை வேலனோடு

    மாழையாய் செம்பொற்   சோதியான்  பாதம்போற்றி

     

    தீர்த்தம்

    தவமுடை முனிவரோடு     சித்தரும் குழுமிநிற்க‌

    சிவசிவ       நாதமோடு          நந்தியும்  ஓதிநிற்க‌

    புவனமும் பொன்னியோட‌   செம்பொன்  துறைசேர்

    ப‌வனமும் அணியுமாக    பல்வினைப் போகுமாமே

     

    விருட்சம்

    பொன்னியில் தலைமூழ்கி புதுகுட நீரெடுத்து

    பொன்னீசன்   குளிரவென   அபிடேகம் செய்வித்து

    பொன்மஞ்   சற்மலரோடு    வில்வத்தால் பூசித்து

    பொன்சடை யேற்றிபாடு குலம்வாழச் செய்யுமாமே

     

    அருள்

    நம்பிக்கை பக்திநேச‌ம்    தருமமொடு   வாய்மையுமே

    கும்பிடும்  அன்புநேயம்  குறைகாணா  பிறைசூடன்

    அம்பரத் தாடுவான்முன் அனைத்தோடு துதிசெய்யாய்

    பம்பர  மனதடங்கி பல்காலம் நலங்காண்பாய்

     

    மகிமை

    திருநீறு தரித்துவரின்     அறிவோடு நலமேறும்

    திருநீறு அணிந்துவரின்  கேடுதசை மாறிவிடும்

    திருநீறு பூசிவரின்    பெருநோயும் ஓடிவிடும்

    திருநீறு குளித்துவரின் தீராதவினைத் தீறும்

     

    வாழ்த்து

    வாழியச் செம்போற்சோதி வாழிய தருமவர்த்தனி

    வாழியத் தொண்டர்குழாம் வாழிய தருமநெறி

    வாழிய    வையகமும்   வாழிய இந்நிலமும்

    வாழிய   கங்கையென வற்றாமல் பொன்னியுமே!!

    Share
  • மகாகவி பாரதியும் மெகா தொடர் பாரதமும் (பண்டார பாட்டு – 2013)

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    இலவசங்கள் பெற்றும் மாற்றி ஓட்டுபோட்ட போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    வாக்குறுதி அத்துனையும் மறந்து விட்ட போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    வரிக்குமேல் வரிகள் போட்டு வசூலித்த போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    சேதுசிதைத்து ஈழம்பிரிந்து வாடுகின்ற‌ போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    பெரும்பாண்மை பெற்றும்பின்னர் சிதறுகின்ற‌ போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    இலஞ்சமென்று ஆயிரந்தான் தெரிந்துவிட்ட போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    காவிரியா கங்கையுமே காயவைத்த போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    சாதிகள் சொல்லி கட்சி கூட்டம் சேர்க்கும் போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    தங்கத்தாலி பறிகொடுத்து தவிக்குங்குரல் கேட்கினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    ஒற்றுமைக்கு வேட்டு வைத்து ஒழுக்கம்வீழும் போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    டாலர்ஏற ரூபாயிங்கு சரியவைக்கும் போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    மின்வெட்டு விலைகளிங்கு வானைத்தொட்ட போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    அடிக்கடி தேர்தல் என்று அசிங்கம் பட்ட போதிலும்
    மிச்சமில்லை வெட்கமில்லை சொல்வதற்கு இல்லையே?

     

     

    Share
  • கண்டேன் கண்டேன் காண்கின்றேன்

    கண்டேன் கண்டேன் காண்கின்றேன்
    கண்களுக்கினியானய் காதற்பெருக்கினால்()

    வண்டுகள் விழியத‌னாற் மனங்குடைந்தான்
    உண்டுகள் அதரங்கள் வழிந்திட அழைக்கிறான்
    கண்டுமுன் காணாமல் நடிக்கிறான்
    நண்டுதன் கொடுக்குபோல் வாரியே அணைக்கிறான் ஆகா ()

    அசைந்திடும் மயிற்பீலி வசமிடதொடுத்தான்
    இசைத்திடும் குழல்ராகம் மயக்கிட சிரித்தான்
    பசையினில் என்னுடன் கலந்து களிக்கிறான்
    விசையெனும் பக்தியில் என்னையும் இயக்கினான் ஆகா ()

    தேடிடும் போதெதிர் வந்தெழில்ரசிக்கிறான்
    ஏடிடும் முன்இவனே கவிதைப் படிக்கிறான்
    கூடிடும் தாளமும் தட்டிதலை அசைக்கிறான்
    பாடிடும் என்னோடு கண்ணனும் இருக்கிறான் ஆகா ()

    Share
  • அணிந்தே ஆடடி “தீபாவளி”

    வல்லமையாளர்களுக்கு எம் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    பட பட பட்டாசு இடபுறம்

    படபடப்புடன் பலர் வலபுறம்

    வெடி வெடி வெடியென இடபுறம்

    வெடியால் செவிடர்கள் வலபுறம்

    புகைந்திடும் சூழல் இடபுறம்

    இருமலில் இரைப்பவர் வலபுறம்

    கலகலச் சக்கரம் இடபுறம்

    கடனுக்கு கஞ்சி வலபுறம்

    இளைஞராய் குதிப்பவர் ஒருபுறம்

    இயலாமையில் சிலர் மறுபுறம்

    ந‌ரகாசுரர்க‌ள் எதிர் புற‌ம்

    நார‌ணண் ந‌ம்பி ந‌ம்புற‌ம்

    குய‌வ‌ரின் விள‌க்குக‌ள் எரிந்திடவே

    க‌ய‌வ‌ரின் இன‌ங்களும் குறைந்திடவே

    பிணிக‌ளும் பேய்க‌ளும் நீங்கிட‌வே

    அணிக‌ளும் வாழ்த்தும் சேர்ந்திட‌‌வே

    அன்புட‌ன் இனிப்பாய் ! புத்தாடை

    அணிந்தே ஆட‌டி “தீபாவ‌ளி”

     

    Share
  • குடியரசின் தீபாவளி

    தீபமெல்லாம் ஒன்றாய் சேர்ந்த தீபாவளி வருக
    தெய்வமெல்லாம் ஒன்றாய் சேர்ந்து அருளாசி தருக
    விலைவாசிகளும் விஷதூசிகளும்
    வரிவேசிகளும் அரசாணைகளும்
    நாட்டிற்கு சாதகமாக்கும் நம்பிக்கை ஒளிதருக    (   )

    எண்ணைவிலை ஏறினாலும்
    விளக்கேற்றி காண்போம்
    வெண்ணைவிலை ஏற்றினாலும்
    முறுக்கேற்றி திண்போம்
    தங்கவிலை தொங்கவைத்தாலும்
    பொன்னாரம் சேர்ப்போம்
    மங்களங்கள் வழங்கும் ஆட்சி
    காணவகைச் செய்வோம்.  (   )
    இரவுகளை பகலாய் மாற்றும்
    அரசனையும் காட்டு
    மரபுகளை மதிப்பாய் ஏற்கும்
    அரியணையை யேற்று
    உறவுகளை இனிப்பாய் மாற்றும்
    இல்லற முங் கூட்டு
    வரவுகளை நட்பாய் சேர்க்கும்
    தமி ழியிசையை ஆற்று (   )

    இதனை இசையுடன் கேட்க………http://www.youtube.com/watch?v=TvgPNm8u83o&feature=youtu.be

    Share
  • சுவாமி விவேகானந்தர் வழியேற்போம்

     

    சத்திய மணி

     

    தேசத்தை நேசித்தான் பாசத்தை சுவாசித்தான்Swamiji_Wallpaper03_1920X1080

    வாசத்தில் வாசம் கொண்டு சத்சங்கம்  போதித்தான் ()

     

    புவனியின் மைந்தனாக பிறந்திடினும் சிங்கம்தான்

    பவனிவரும் போதினிலோ உரமேற்றும் வங்கம்தான்

    இவனுரையைக் கேட்டாலே பலமேற்றும் அங்கம்தான்

    அவன்கருத்தை ஏற்றாலே இளங்கன்றும் பொங்கும்தான்()

     

    குருவான ராமகிருஷ்ண பதங்கண்டு கற்றிட்டான்

    கருவானக் காவியங்களை உரையிட்டு முற்றிட்டான்

    தருவாக மடங்களென்னும் பள்ளிகளை கட்டிட்டான்

    உருவாக இளையபாரதம் எழுகவென்று தட்டிட்டான்()

     

     

    பூமியிலே சொர்க்கம் எங்கள் நாடென்று சாதித்தான்

    காவியிலே இருந்தாலும் தான் கற்பூரம் ஆகிட்டான்

    ஆன்மீக  ஆற்றினில் வெள்ளப் பெருக்காக ஓடிட்டான்

    வான்போல‌  நினைவு திறனால்  புவியோரை மயக்கிட்டான்()

     

    வேகத்தின் வலிமை பேச்சில் விவேகன் ஆனந்தம்

    மேகத்தை முடியில் தரித்த நரேந்தர மாணிக்கம்

    யோகமுடன் தேகவலிமை நீதிநெறி தனைக்காப்போம்

    ஆகமுடன் தேசபக்தி போதித்த வழியேற்போம்()

     

    படத்திற்கு நன்றி: http://www.sv150.info/wp-content/uploads/2011/11/Swamiji_Wallpaper03_1920X1080.jpg

     

    Share
  • மறுக்காது கீதைப்படி

    சத்திய மணி

     

    எதுவும் அறியாதது போலொரு குழந்தை
    எனைப் பார்த்து சிரிக்கின்றது
    அதில் ரகசியம் இருக்கின்றது
    இதழோரம் இருக்கும் நவநீத வெளுப்பு
    சிரிப்பினில் தெரிகின்றது
    அதில் விஷ‌ம‌மும் புரிகின்றது()

    கருவண்டு கண்களில் கசிந்திடும் கருணைக்கு
    தேவர்கள் காத்திருந்தார் – அவன்
    கால்பட்ட மண்ணுக்கு காலங்கள் தோறும்
    புவிமகள் நோன்பிருந்தாள்
    உரலிட்ட பின்னாலும் பலங் கொண்டுதவழும்
    கண்காட்சி காண்பதற்கோ – பெரும்
    முனிவரும் ஞானியரும் ஒருசேரவந்து
    உண்ணாமல் நின்றிருந்தார்
    அலைபாயும் கேசம் அசையாது செய்தால்
    மழைமேகம் சுரக்காதடி – இவன்
    கலைபேசும் குழலூதி களிப்போதைமுன்னாலே
    கலிகாலம் செல்லாதடி()
    தினந்தோறும் விளையாடி எனைத்தோற்க செய்து
    அழவைத்து சுகமேற்றுவான் – என்
    மனந்தோறும் உள்ளூடி எனைத்தேற்றி மன்றாடி
    மறுபடியும் எனைச்சீண்டுவான்
    அவனன்றி நானில்லை நானின்றி அவனில்லை
    இதிலெங்கள் உடன்பாடுதான் – எந்தப்
    பிறவியிலும் தொடர்கின்ற உறவுக்கு அச்சாரம்
    புவியறியும் பிற்பாடுதான்
    மனச்சாந்தி பெருவதற்கும் வீண்பிறவி விடுவதற்கும்
    மாயனின் காலைப்பிடி – நீள்
    தவக்கோலம் நிறைவதற்கும் தரிசனம் பெறுவதற்கும்
    மறுக்காது கீதைப்படி()

    Share
  • கல்யாணமோ கல்யாணம்

    சத்திய மணி

     

    கல்யாணமோடு கச்சேரி வருமே கலகலப்பு
    கல்யாணமோடு கலாட்டா த‌ருமே சலசலப்பு
    இதில் கண்காட்சி அணிகளும் அணிவகுக்கும்
    இதைக் கண்டுக்காத‌ அணிகளும் பலயிருக்கும்()

    கெட்டிமேளம் கொட்டச் சொல்லி மாமனாரு பறக்க‌
    பெட்டிநகைப் போட்டுகிட்டு மாமியாரு மினுக்க‌
    முட்டி தாலி முடிச்சிட நாத்தனாரு நுழைய‌
    பட்டி கட்டி மாடுபோல மாப்பிள்ளை குழைய‌
    தட்டு களில் அசத்திடும் சீருகளைப் பாத்து
    எட்டு கட்டி போடுதம்மா ஊருகதை சேத்து()
    பந்திக்கு முந்திவரும் பசியோடு கூட்டம்
    தொந்தி க்குமேல்முழுங்கி ஏந்திரிக்க ஆட்டம்
    சந்திக்க வந்தவர்க்கோ வம்புகதை யூட்டம்
    சிந்திக்க வேளையின்றி பொட்டியுடன் ஓட்டம்
    மண்ணுலகில் இன்றும் இந்தக் கல்யாணம்வாழ‌
    கண்ணுபடப் போவுதென‌ சூடம் சுத்தி போடும்()

    Share
  • ராதை பிறந்தாள் !கோதை பிறந்தாள்!

    சத்திய மணி

     

    (ஸ்ரீஜெயந்தி வருமுன்னர் அவசரமாய் ராதைப் பிறந்தாளா?…ஆம் ராதை எங்கே
    கண்ணன் அங்கே…..)
    ராதை பிறந்தாள் குட்டி ராதை பிறந்தாள்images (1)
    புதுக் கீதங்கள் பிறந்ததம்மா
    கோதை பிறந்தாள் கிளிக் கோதை பிறந்தாள்
    இனிக் கண்ணனுக்கு சந்தோஷமா? ()

    கன்னித் தமிழோ இல்லை நெல்லைத் தமிழோ
    சென்னித் தமிழோ இல்லைச் சென்னைத் தமிழோ
    ஆசைத் தமிழோ இல்லை ஓசைத் தமிழோ
    பூசைத் தமிழோ இல்லைப் பாசத் தமிழோ
    கேட்கும் இனிமேல் அதைச் சேர்க்கும் கவிமேல்
    பூக்கும் மடிமேல் தம்பி பாடப் பழகு()
    ராக்கன் இசையோ இல்லை ஜாக்ஸன் இசையோ
    காக்கும் ரங்கனின் திருப் பாவை இசையோ
    நாக்கில் உதிர்க்கும் கண்ண தாசன் இசையோ
    நாட்டை எழுப்பும் மீசைக்காரன் இசையோ
    கேட்கும் மழலை இனி சேர்க்கும் குழலை
    தூக்கம் மடிமேல் தாலாட்டப் பழகு

     

     

    Share
  • பந்தக் காப்புரிமை (ரக்ஷாபந்தன்)

     

    சத்திய மணி

     

    மதுரைநாயகி மீனாட்சி காப்பிட்டுக் கொண்டே கண்ணனிடம் இயம்புகிறாள்

     

    ஒவ்வொரு அணுவிலும் இருப்பவனே

    ஒவ்வொரு நிகழ்விலும் தெரிபவனே

    காரணக் காரணம் ஆனவனே

    கருணை கடலில் துயில்பவனே

    மலையைக் குடையாய் பிடித்தவனே

    மதுவை  விழியில் விடுப்பவனே

    அன்பைச் சிரிப்பாய் அளிப்பவனே

    அழகிய! அழகா! என் அண்ணா!

    பாஞ்சாலிகளின் கதைதினமும்

    பாரதமண்ணில் நடக்குதடா

    பாரதிருப்பது முறையோ-உன்

    பாஞ்ச சைன்யம் முடங்கியதோ

    நீதிநியாயம் தர்மமெலாம்

    மீதியின்றி வறள்வதன்முன்

    அவதாரம் உடன் எடுப்பாயே

    அருளால்  இப்புவிக் காப்பாயே!

     

    காப்பிட்டத் தங்கைக்கு கண்ணன் கூற்று

     

    ஒவ்வொரு உயிரையும்  பெற்றவளே

    உண்டிடப்   பால்தரும்      உற்றவளே

    சூலமும்      வாள்படைத் தாங்கிடவே

    காலமும்    சுழற்சியும்     ஏற்பவளே

    என்னிடம் அன்பைப் பொழிபவளே

    எங்களின் சக்தியின்    இமையவளே

    தாய்மையின் வடிவே! உமையவளே!

    சேய்குலம் காப்பது   நீயல்லவோ?

    செல்வமும் வளமும் காத்திடுவாய்

    சிறப்புகள்   சேமங்கள் கூட்டிடுவாய்

    அழைத்ததும் சிங்கத்தில் விரைபவளே

    அருள்வதில் உன்னினும் உயர்வுளதோ?

     

    சரணம்

    அன்னையும் அண்ணனும் காப்பதனால்

    அகிலமும்     அன்பால்  சுழலுதடா

    துன்பமும் துயரமும் போகுமடா

    உண்மையும் உறவும் நிலைக்குமடா

    அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்

     

    Share
  • கீதை உரைக்க வந்தேனே

     

    சத்தியமணி

    கொடுப்பதும் நானே கொள்வதும் நானே
    இடையினில் உமதென்று சொல்வது வீணே
    மறைப்பதும் நானே தெரிவதும் நானே
    மறந்தாய் மனிதா! உன் மனதிலும் நானே()

    விண்ணாய் பரந்து இருப்பவன் நானே
    மண்ணாய் கலந்து உண்டவன் நானே
    எண்ணம் சுரந்து கொடுத்தவன் நானே
    எளிதாய் எதிலும் கிடைப்பவன் நானே ()

    அன்பாய் இருந்தால் இருப்பவன் நானே
    அசுரத் தனங்களை அழிப்பவன் நானே – எதையும்
    என்பால் விடுத்தால் காப்பவன் நானே
    உன்மேல் கீதை உரைக்க வந்தேனே ()

    Share