Tag: சு.கோபாலன்

  • கந்த சஷ்டிப் புனித நாள்!

    -சு. கோபாலன்

    Tiruchendur_murugan

     

     

     

     

     

     

     

     

     

    சூரபத்மன் எனும் கொடிய அசுரனை வதம் செய்து உலகைக் காக்க
    ஆறுமுகன் ஆறுநாட்கள் அவனுடன் சமர் செய்து ஆறாம் நாள்(சஷ்டி)
    தருவாகி நின்ற அசுரனை தன் கூரிய வேலால் இரண்டாய்ப் பிளந்து
    ஒருபாதி சேவலாய் மறுபாதி மயிலாய் அசுரனை மாற்றி அமைத்துக்
    கருணை மிகு கந்தன் சேவலைக் கொடியாய் மயிலை வாகனமாய் ஏற்று,

    அருளைப் பொழிந்து உலகைக் காத்தானே திருச்செந்தூர் திருத்தலத்திலே!
    இந்திரன் மகிழ்ந்து மகள் தெய்வானையை ஏழாம்நாளன்று முருகனுக்கு
    மந்திரம் வேதங்கள் முழங்க திருப்பரங்கிரியில் மணம் செய்வித்தானே!

    கந்தனுக்கு உகந்த கந்த சஷ்டிப் புனித நாளில் அவன் ‘ஏழுபடை’
    வீடுகளில் தரிசனம் செய்வோமே!

    ஏழுபடை வீடு

    படிதோறும் திருப்புகழ் அடி பாடியபடியே மலையேறி
    வடிவேலன் அடி நாடி அடியவர் கூடிடுவர் திருத்தணி மலையிலே!

    காவடி தோளில் சுமந்து கந்தன் நாமம் நாவில் சுமந்து அவன்
    சேவடி பணிந்து சேவிக்க சேர்ந்திடுவர் பக்தர்கள் பழனி மலையிலே!

    முடி இறக்கி நேர்த்திக்கடன் முறையுடன் செய்து முடித்த பின்னர்
    முடிவிலா கடலில் முழுகி எழுந்து தொழுதிடுவர் திருச்செந்தூர் தலத்திலே!

    பால்குடம் ஏந்திப் பக்திப் பரவசம் பொங்க எடுத்துச் சென்று
    வேல் முருகனுக்கு அபிஷேகம் செய்து வணங்குவர் திருப்பரங்கிரியிலே!

    தந்தை ஈசனுக்கே ஆசானாகிப் பிரணவம் உபதேசித்த
    கந்தனை வணங்கி வளம் பெறுவரே சுவாமி மலையிலே!

    அடிமலையில் அழகரைத் தரிசித்து மலையேறி முடிமலையில்
    வடிவழகன் முருகனை வணங்கி மகிழ்வரே பழமுதிர்சோலையிலே!

    பொன்னான இதயம் படைத்த சின்னப்ப தேவரின் பெரு முயற்சியால்
    என்னப்பன் முருகனின் ஏழாவது படைவீடாக மிளிருதே மருத மலை!

    கந்தா கடம்பா கார்த்திகேயா கலியுக வரதா
    வடிவேலா வள்ளிமணாளா உந்தன் வரந்தா!        

     

    Share
  • இராம நாம தாரகம்

    -சு. கோபாலன்

     

    Sri  Rama Pattabhishekam

     

     

    பால காண்டம்

    1.அயோத்தி நாட்டில் ஆதவகுலத் திலகமாய் அவதரித்தாயே – இராமா!

    2.அன்னை கோசலை தந்தை தசரதன் அன்புக் கண்மணியே – இராமா!

    3.இலக்குவன் பரதன் சத்துருக்கனன் மூவர்க்கும் முதல்வனே – இராமா!

    4.குலகுருவாம் வசிஷ்டரிடம் கலைகள் யாவும் கற்றவனே   – இராமா!

    5.வேள்வி காத்திட விசுவாமித்திரர் உன்னை அழைத்தாரே  – இராமா!

    6.கேள்வி கேட்காது அவர்பின் இலக்குவனோடு சென்றாயே – இராமா!

    7.வில்லில் நாணேற்றி வல்லரக்கி தாடகையை வதைத்தாயே – இராமா!

    8.தொல்லை தர வந்த அரக்கர் யாவரையும் அழித்தாயே – இராமா!

    9.முறையாய் வேள்வி முடித்த நிறைவை முனிவர்க்கு அளித்தாயே – இராமா!

    10.விசுவாமித்திரர் உடன்வர இலக்குவனுடன் மிதிலை ஏகினாயே – இராமா!

    11.செல்லும் வழியில் கல்லாயிருந்த அகலிகையை உயிர்ப்பித்தாயே – இராமா!

    12.கையேந்திய வில்லால் தாடகையின் உயிரழித்துக் கைவண்ணம் காட்டினாயே – இராமா!

    13.காலால் கல்லைத் தீண்டி அகலிகைக்கு உயிரளித்து கால்வண்ணம் காட்டினாயே – இராமா!

    14.முக்கண்ணன் வில்லை ஒருகணத்தில் எடுத்து நிறுத்தி முறித்தாயே – இராமா!

    15.அக்கணமே மிதிலையின் அரசகுமாரி மைதிலியின் மணமகனானேயே – இராமா!

    16.நிலமகள் அருளிய திருமகளாம் சீதையின் கரதலம் பற்றி மணந்தாயே – இராமா!

    17.பரசுராமனிடமிருந்த திருமால் வில்லை வளைத்து அவன் செருக்கடக்கினாயே – இராமா!

    அயோத்தியா காண்டம்

    18.தந்தை தசரதன் தலைமகனாம் உனக்கு முடிசூட்ட விழைந்தாரே – இராமா!

    19.அரசி கைகேயி சதியால் ஈரேழு ஆண்டுகள் கானகமேகிட நேர்ந்ததே – இராமா!

    20.இல்லாளுடனும் இளையவனோடும் இன்முகத்துடன் வனவாசம் சென்றாயே – இராமா!

    21.கங்கை வடகரை அடைந்து வேடுவன் குகனுடன் தோழமை கொண்டாயே – இராமா!

    22.அன்புடன் அவனை அணைத்துப் பாசமிகு தம்பியாய் ஏற்றாயே – இராமா!

    23.தென்கரை சேர்ந்து எழில்மிகு சித்திரக்கூடம் சென்றடைந்தாயே – இராமா!

    24.நடந்தவை அறிந்த பரதன் உனை அயோத்தி திரும்ப அழைத்திட வந்தானே – இராமா!

    25.பரதனின் மரவுரியும் மாசுமிகு மேனியும் கண்டு மனம் உருகினாயே – இராமா!

    26.தந்தையின் மறைவைத் தம்பியிடமிருந்து அறிந்து உளம் உடைந்தாயே – இராமா!

    27.அயோத்தி திரும்பிட பரதனின் வேண்டுகோளை ஏற்க மறுத்தாயே – இராமா!

    28.பரதன் வேண்டிய உந்தன் பாதுகைகளை அவனுக்கு அருளினாயே – இராமா!

    29.பரதன் சென்ற பின் தென்திசை நோக்கிச் சீதை, இலக்குவனுடன் சென்றாயே – இராமா!

    ஆரண்ய காண்டம்

    30.அத்திரி முனிவரையும் அவர் பத்தினி அனுசூயையும் கண்டு வணங்கினாயே – இராமா!

    31.தண்டக வனத்தில் விராதன் எனும் வல்லரக்கனை வீழ்த்தி அவன் சாபம் நீக்கினாயே – இராமா!

    32.அரக்கரிடமிருந்து முனிவர்களைக் காத்திட அவருடனே பத்தாண்டு காலம் வாழ்ந்தாயே- இராமா!

    33.முனிவர்கள் சொற்படி அடுத்து மாமுனி அகத்தியரிடம் மற்ற இருவருடனும் சென்றாயே – இராமா!

    34.அகத்திய முனிவர் அன்புடனும் ஆசியுடன் அளித்த அற்புத ஆயுதங்களைப் பெற்றாயே – இராமா!

    35.அமைதியாய் அழகுடன் பாயும் கோதாவரிக் கரையிலமைந்த பஞ்சவடி சேர்ந்தாயே – இராமா!

    36.இலக்குவன் அமைத்த அழகிய குடிலில் துணையவள் சீதையுடன் இன்புற வாழ்ந்தாயே – இராமா!

    37.இராவணன் இளையவள் சூர்ப்பணகை உன்மேல் காமமுற்று உனைக் காண வந்தாளே – இராமா!

    38.தகாத அவள் செயல் கண்டு வெகுண்ட இலக்குவன் அவள் அங்கங்களைக் கொய்தானே – இராமா!

    39.உன்னுடன் சமர் புரிய வந்த அவள் சகோதரர் கரன், தூடணன் திரிசரனை வதைத்தாயே – இராமா!

    40.பின்னமுற்ற முகத்தோடு சூர்ப்பணகை இராவணனிடம் உம்மைப்பற்றி முறையிட்டாளே – இராமா!

    41.இராவணனிடம் சீதையின் அழகை வர்ணித்து அவன் மனத்தில் காமத்தை தூண்டினாளே – இராமா!

    42.காமம் தலைக்கேறிய இராவணன் சீதையைக் கவர்ந்திட சூழ்ச்சி செய்யத் துணிந்தானே – இராமா!

    43.மாமன் மாரீசனை மனதைக் கவரும் மாய மானாக உன்னிருப்பிடம் அனுப்பி வைத்தானே – இராமா!

    44.மானின் அழகில் மயங்கிய சீதையும் அது தனக்கு வேண்டுமென உன்னிடம் வேண்டினாளே – இராமா!

    45.இலக்குவன் தடுத்தும் கேளாது மானைத் தேடி அதன்பின் நெடுந்தூரம் சென்றாயே – இராமா!

    46.உன்னம்பால் தாக்குண்ட மாரீசன் ‘சீதா! இலக்குமணா’ என வஞ்சகமாய்க் கூவி விழுந்தானே – இராமா!

    47.சூதறியாத சீதை இலக்குவனைக் கடுஞ்சொற்களால் சாடி உனைத் தேடிவர அனுப்பினாளே – இராமா!

    48.இலக்குவனும் செய்வதறியாது அவ்விடம் நீங்கி உனைத்தேடி கானகத்துள் சென்றானே – இராமா!

    49.இலக்குவனும் நீயும் இல்லாது சீதை பர்ண(க)சாலையில் தனித்து இருக்க நேர்ந்ததே – இராமா!

    50.அச்சமயம் வஞ்சக இராவணன் கபட முனிவனாய் வந்து சீதையைக் கவர்ந்து சென்றானே – இராமா!

    51.சிறகடித்துப் பறந்து வந்து சீதையைக் காத்திட இராவணனிடம் சடாயு கடும் சமர் புரிந்தானே – இராமா!

    52.சிறகொடித்துச் சிதைத்து சடாயுவைக் கொடும் இராவணன் மண்ணின் மேல் வீழ்த்தினானே – இராமா!

    53.சாகும் நிலையிலும் உன்னிடம் நிகழ்ந்தவை யாவும் கூறியபின் சடாயு உயிர் நீத்தானே – இராமா!

    54.சடாயுவுக்கு ஈமக்கடன்கள் செய்து தந்தை தசரதன் பெறாத பேற்றை சடாயுவுக்குத் தந்தாயே – இராமா!

    55.கவந்தன் எனும் அரக்கனின் தோள்களைக் கொய்து அவன் சாப விமோசனம் அருளினாயே – இராமா!

    56.அவன் ருசியமுக மலைவாழ் வானரக்கோன் சுக்ரீவன் பற்றி உன்னிடம் கூறி மறைந்தானே – இராமா!

    57.சபரி எனும் பக்தை அபரிமிதப் பரிவுடன் சுவைத்துக் கொடுத்த கனிகளை உவந்து ஏற்றாயே – இராமா!

    கிஷ்கிந்தா காண்டம்

    58.கவந்தன் கூறிய வழி சென்று ருசியமுக மலையை இலக்குவனுடன் அடைந்தாயே – இராமா!

    59.அண்ணன் வாலிக்குப் பயந்து ஒளிந்து வாழும் சுக்ரீவனை அனுமன் மூலம் சந்தித்தாயே – இராமா!

    60.வான்வழி சென்ற சீதை நிலமீதெறிந்த அணிகலன்களைச் சுக்ரீவன் காட்டிடக் கண்டாயே – இராமா!

    61.சுக்ரீவனும் வாலியும் சமர் புரியுங்கால் மறைந்திருந்து அம்பெய்து வாலியை வதைத்தாயே – இராமா!

    62.உரிய முறையில் சுக்ரீவனுக்கு இலக்குவன் மூலம் வானரக்கோனாய் முடிசூட்டினாயே – இராமா!

    63.பெரிய வானர சேனையைச் சீதையைத் தேட ஈரிரு திசைகளிலும் சுக்ரீவன் அனுப்பினானே – இராமா!

    64.தென்திசை நோக்கி அனுமன், சாம்பவான், அங்கதன் மூவரும் சென்றனரே – இராமா!

    65.மகேந்திர மலையில் அனுமன் மூலம் தம்பி சடாயுவின் மரணத்தை சம்பாதி அறிந்தானே – இராமா!

    66.வானர வீரர் உன்நாமம் உச்சாடனம் செய்திட எரிந்த சம்பாதியின் சிறகுகள் துளிர்த்தனவே – இராமா!

    67.வான்வழியே சீதையை இராவணன் இலங்கைக்குத் தூக்கிச்சென்றதைச் சம்பாதி கூறினானே – இராமா!

    68.வீரமாருதியே இலங்கை சென்று சீதையைக் கண்டுவர ஏற்றவனென சாம்பவான் கூறினான்-இராமா!

    சுந்தர காண்டம்

    69.உன்னை மனதில் துதித்து விண்ணில் குதித்து அனுமன் இலங்கை சென்றடைந்தானே – இராமா!

    70.இலங்கை முழுதும் அலசித் தேடி அசோக வனத்தில் சீதையை அனுமன் கண்டானே – இராமா!

    71.வல்லரக்கியர் நடுவே மேகம் மறைத்த மதிபோல் பொலிவிழந்து சீதை இருந்தாளே – இராமா!

    72.சீதை தன்னை மாய்த்துக்கொள்ள முயல்கையில் அனுமன் அவள் முன் தோன்றினானே – இராமா!

    73.நீ அனுப்பிய கணையாழியை அனுமன் தந்திடச் சீதை மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கினாளே – இராமா!

    74.அனுமனின் செயலால் மிகமகிழ்ந்து சிரஞ்சீவியாய் வாழ்கவென அகமார வாழ்த்தினாளே – இராமா!

    75.தனது சூடாமணியை அடையாளமாய் உன்னிடம் அளித்திட அனுமனிடம் சீதை தந்தாளே – இராமா!

    76.பேருருவம் எடுத்துப் பேரெழில் மிக்க அசோகவனந்தனை அனுமன் முற்றிலும் அழித்தானே – இராமா!

    77.சினம் கொண்ட இராவணன் சிறைப் பிடிக்க அனுப்பிய அரக்கர் சேனையை வதைத்தானே – இராமா!

    78.தசமுகன் தனயன் மேகநாதன் பிரயோகித்த பிரம்ம அத்திரத்திற்குத் தானே கட்டுண்டானே – இராமா!

    79.தசமுகனிடம் கொண்டு செல்லப்பட்ட அனுமன் சீதையை விட்டுவிட அவனிடம் கூறினானே – இராமா!

    80.அனுமனைக் கொன்றிட இராவணன் இட்ட ஆணையை அவன் தம்பி விபீடணன் தடுத்தானே – இராமா!

    81.இராவணன் ஆணையால் வாலுக்கு வைத்த தீயால் அனுமன் இலங்கையை எரித்தானே- இராமா!

    82.’கண்டேன் சீதையை’ எனும் செய்தியை உன்னிடம் கடுகி வந்து அனுமன் விண்டானே – இராமா!

    83.‘கண்டிலேன் உனைப்போல்” என அளவிலா ஆனந்தம் கொண்டு அனுமனை அணைத்தாயே – இராமா!

    84.சீதை அனுப்பிய சூடாமணியை அனுமன் காட்டிடச் சீதையையே கண்டதுபோல் மகிழ்ந்தாயே – இராமா!

    85.மாபெரும் வானர சேனையுடன் பன்னிருநாள் நடந்து தென் திசைக்கடலை அடைந்தாயே – இராமா!

    யுத்த காண்டம்

    86.சரணம் அடைய வந்த விபீடணனுக்குக் கருணையுடன் அடைக்கலம் அளித்து ஏற்றாயே – இராமா!

    87.குகனோடு ஐவரானோம் சுக்ரீவனோடு அறுவரானோம் உன்னோடு எழுவரானோம் என்றாயே – இராமா!

    88.வானரப்படை சேதுவில் கட்டிய அணை வழியே யாவருடனும் இலங்கைக்கரை அடைந்தீரே – இராமா!

    89.போரைத் தவிர்க்கக் கருதி அங்கதனை இராவணனுடன் சமரசம் பேச அனுப்பினாயே – இராமா!

    90.இலங்கை வேந்தன் அதை ஏற்க மறுத்திட அவனுடன் சமர் புரிய ஆயத்தமானாயே – இராமா!

    91.நான்முகன் தந்த வேலை தசமுகன் இலக்குவன் மேல் வீசிட அவனும் மூர்ச்சையானானே – இராமா!

    92.அதன்பின் நீயே இராவணனுடன் நேரே பொருதி அவனை நிலை குலையச் செய்தாயே – இராமா!

    93.களத்தில் இராவணன் வில் தேர் கொடி குடை ஏதுமின்றி நிராயுதபாணியாய் நின்றானே – இராமா!

    94.உளத்தில் கருணை கொண்ட நீ ‘இன்று போய் நாளை வா போருக்கு’ என அருளினாயே – இராமா!

    95.அதன்பின் வந்து கடுஞ்சமர் புரிந்த கும்பகருணனின் சிரம் கொய்து கடலுள் வீழ்த்தினாயே – இராமா!

    96.அதிகாயன், கும்பகருணன், கும்பன், நிகும்பன் என இராவணனின் இரத்த உறவினர் மடிந்தனரே – இராமா!

    97.அதனால் கொதித்த தசமுகன் தலைமகன் மேகநாதன் களமிறங்கிக் கடும் போர் புரிந்தானே – இராமா!

    98.அவன் ஏவிய பிரம்ம அத்திரத்தால் இலக்குவன் வானரப்படையினர் கட்டுண்டு வீழ்ந்தனரே – இராமா!

    99.அனுமன் சஞ்சீவினி எனும் அரிய மூலிகை கொணர்ந்து யாவரையும் உயிர்ப்பித்தானே – இராமா!

    100.முடிவில் மேகநாதனை இலக்குவன் கரத்தையும் சிரத்தையும் கொய்து வீழ்த்தினானே – இராமா!

    101.பத்தாம் நாள் போரில் பத்துத்தலை இராவணனை நான்முகனின் அம்பெய்து அழித்தாயே – இராமா!

    102.விபீடணனுக்கு இலங்கை வேந்தனாய் இலக்குவன் மூலம் முறையாக முடிசூட்டினாயே – இராமா!

    103.சீதாதேவியை அக்னிப்பரீட்சைக்கு உள்ளாக்கி அவள் கற்பை உலகுக்கு உணர்த்தினாயே – இராமா!

    104.புட்பக விமானத்தில் யாவருடனும் பரத்துவாசமுனி ஆசிரமம் அடைந்து ஆசி பெற்றாயே – இராமா!

    105.நந்திக்கிராமம் விரைந்து பரதனையும் அன்னையரையும் யாவரையும் கண்டு மகிழ்ந்தாயே – இராமா!

    106.அனைவரும் அயோத்தி அடைந்து மறுநாள் உந்தன் பட்டாபிஷேகத்திற்கு ஆயத்தமாயினரே – இராமா!

    107.அனுமன் அரியணை தாங்க பரதன் குடை பிடிக்க இலக்குவ சத்துருக்கனர் சாமரம் வீசிட- இராமா!

    108.மந்திர மங்கல ஒலிகள் முழங்கிடக் குலகுரு வசிட்டர் உனக்கு முடிசூட்டினாரே – இராமா!

                                        மங்களம்

    இளையவர் மூவரும் சுற்றி உடனிருக்க
    இனியவள் சீதையோடு இராமன் வீற்றிருக்க
    அனுமன் அண்ணலின் திருவடியில் அமர்ந்திருக்க
    அனைவரும் வணங்கி வாழ்வில் வளம் பெறுவோமே.

     

                                           

     

    Share
  • எங்கு சென்று கொண்டிருக்கிறோம்?

    indian-man-wife

    சு. கோபாலன்

    பெரும் செல்வம் ,பதவி, அதிகாரம் இவையெலாம் தனக்கு மட்டுமன்றி

    வரும் வாரிசுகளுக்கும், தலைமுறைகளுக்கும் சேர்க்கத் துடித்திடும்

    கொலை வெறி கொலை வெறி மனதிலும் மூளையிலும் புகுந்து

    தலைவிரித்தாடி செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள்

    பெருகி வரும் பாலியல் கொடுமைகள், வக்கிரங்கள் – அவற்றில் சருகாய்

    கருகி விடும் உறவுகளின் உன்னதங்கள், புனிதங்கள், நம்பிக்கைகள்

    இறையாய் போற்றத் தக்க மூத்தோர், ஆசிரியர், மருத்துவர், நீதிபதிகள்- காமப்பசிக்கு

    இரை தேடும் விலங்குகளாய் மாறிவரும் செய்திகள் கேட்கவே கூசுகிறது.

    நீதி, நிர்வாகம், கல்வி, மருத்துவம் என்று அடுக்கிக்கொண்டே போகுமளவு

    மீதி ஒரு துறையும் விட்டு வைக்காமல் புற்று நோயாய்ப் பரவி வரும்

    லஞ்சம், ஊழல்கள் சமுதாயத்தில் புரையோடிப் போயிருப்பதைக் கண்டால்

    நெஞ்சம் பதறுகிறது , கொதிக்கிறது செய்வதறியாது தவிக்கிறது.

    செல்வங்களுள மிகச் சிறந்த கல்விச் செல்வம் வழங்கும் கல்வி நிறுவனங்கள்

    செல்வம் குவிக்கும் சாதனங்களாய் தங்கச் சுரங்கங்களாய் மாறி வருகின்றன.

    மனித உயிர் காக்கும் தொழில் என்பதால் சமூகத்திலுள்ள யாவராலும்

    புனிதமாய்ப் போற்றும் மருத்துவத் துறையிலும் பணவெறி பீடித்துள்ளது.

    படாடோப விருந்துகளில் பாழாய்ப் போகும் உணவு பற்றி கவலையிலா செல்வந்தர்கள்

    படாதபாடு பட்டாலும் ஒருவேளை சோறு பெற இயலாது தவிக்கும் ஏழை மக்கள்

    தாகம் தீர்க்கும் நீர், பசி போக்கும் உணவு, நோய் தீர்க்கும் மருந்து எதுவாயிருந்தாலும்

    வேகம் வேகமாகச்  செல்வம் சேர்க்கும் வெறியுடன் கலப்படம் செய்யும் வியாபாரிகள்

    அற்ப காரணங்களுக்காகச் சற்றும் சிந்தியாது கொலை செய்திடவும்

    முற்படும் கட்டுப்பாடில்லாத கோப உணர்ச்சிகளுக்கு ஆளாகும் இளவயதினர்

    ‘அன்னை இல்லம்’ என தன் சொந்த வீட்டிற்குப் பெருமையாக பெயர் சூட்டி

    அன்னை இல்லா இல்லமாக பெற்றவளை முதியோர் இல்லம் அனுப்பிடும் பிள்ளைகள்!

    படத்துக்கு நன்றி

    http://old-photos.blogspot.in/2013/05/old-indian-couple.html

    Share
  • ஆம் ஆத்மி பார்ட்டி

    ஆம் ஆத்மி பார்டி(பாமர மக்கள் கட்சி)

    சமீபத்தில் டில்லியில் நடந்த தேர்தலில் ஒரு பின்னணியும் இல்லாத
    ‘டேவிட்’ போன்ற பா ம கட்சி ’கோலியத்’ போன்ற காங்கிரஸ், பா ஜ க போன்ற கட்சிகளுடன்
    மோதி அமோக வாக்குகளைப் பெற்று இன்று அரசாங்கம் அமைக்க உள்ளது.

    அக்கட்சியின் சின்னம் துடைப்பம். அது குறித்து ஒரு கவர்ச்சிகரமான இந்தி வாசகம் கண்டேன்.
    இந்தியில் ’ஜாடு கா ஜாது’ என்பதே அது. தமிழில் ‘துடைப்பத்தின் மாயாஜாலம்’ என மொழி பெயர்க்கலாம்.
    அதைக் கண்டதும் பல சிந்தனைகள் என் மனத்தில் ஓடின. அவை பின்வருமாறு:
    .

    துடைப்பம் லஞ்சக் குப்பைகளைத் துடைக்குமா?

    துடைப்பம் ஏழைகளின் கண்ணீரைத் துடைக்குமா?

    துடைப்பம் அதிகார தோரணைகளை உடைக்குமா?

    துடைப்பம் இவையெலாம் செய்து சரித்திரம் படைக்குமா?

     

    மொட்டவிழ்த்து பா ம கட்சி மலரும் முன்னரே சூழ்ச்சிகளைக்

    கட்டவிழ்த்து அதனை கசக்கிவிடுவரோ எதிர்க்கட்சியினர்?

     

    காத்திருப்போம் என்னதான் நடக்கப்போகிறது என்பதைக் காண

    எதிர்பார்த்திருப்போம் பா ம கட்சி சோதனையில் வெற்றி பெறவே!

     

    சு.கோபாலன்

    Share
  • தில்லை நடராசன்

    சு. கோபாலன்

    chidambaram-nataraja-temple-tamilnadu

    எல்லை இல்லா ஆகாயமெனும் பஞ்சபூதத்திற்கு உரிய தலமாம் சிதம்பரம்

    தில்லை மரக்காட்டில் ஆதியில் இருந்ததால் தில்லையென்றும் அறியப்படும்.

    கண்டதில்லை இத்தலம்போல் என தில்லை கண்ட பக்தர்கள் திகைப்பர்

    கொண்டதில்லை இத்தகைய ஆனந்தம் என நடராசன் தரிசனத்தில் திளைப்பர்.

     

    விண்ணுலகில் தேவர் முனிவர் கண்டு மகிழ்ந்த தன் நடனத்தை

    மண்ணுலகில் மானிடரும் கண்டு மகிழ தில்லை வந்தாரே சிவபெருமான்

     

    அரவம் அணியாய் அமைந்த வலக் கரமொன்றால்

    உடுக்கடித்து ஊராரை எல்லாம் தன்னிடம் அழைத்து

    இடக்கையொன்றினால் எழுந்தாடும் இடக்காலினைக் காட்டி

    ”உய்திடுவீர்” இப்பதம் பக்தியுடன் பற்றிடில் என்றருளி

    ”இது சத்தியம்” என வாக்களிக்கும் வகையினில்

    மற்றொரு இடச் செங்கையில் வெந்தழல் ஏந்திடுவார்.

    வல்லசுரன் முயலகனை வலக்காலடியில் துகைத்து

    வலக்கரத்தால் அபய முத்திரை அளித்திடும்

    தில்லைத் தாண்டவன் தரிசனம் கண்டு

    எல்லை இல்லா இன்பம் பெறுவோமே!

     

    நந்தன் எனும் கீழ்குல பக்தன் ஆலயத்துள் அணுக முடியாதவன்

    சிந்தை எல்லாம் சிவ பக்தியைத் தேக்கி எக்கணமும் தொழுபவன்

    எந்தனைக் காண வாவென தில்லை நடராசன் நந்தனை அழைத்திட

    விந்தை விளைந்தது நந்தன் ஜோதியாய் இறைவனுடன் ஐக்கியமாயிட!

     

    சிதம்பர நாதன் பதங்களைப் பணிந்து

    இகபர வாழ்வுக்கு நல்வழி தேடுவோமே!

     

    படத்திற்கு நன்றி: http://www.hindudevotionalblog.com/2012/10/chidambaram-nataraja-temple-tamilnadu.html

    Share
  • ஒளி!…

     சு.கோபாலன்

     

    தேயும் இரவு முடிய அதிகாலை விடியத் தோன்றும் உதய சூரியன் ஒளி

    சாயும் மாலைப் பொழுதில் தேயும் சூரியனின் மங்கும் அஸ்தமன ஒளி

    விண்ணிலே மோதும் கார்மேகங்களின் சினமாய் மின்னிடும் மின்னல் ஒளி

    விண்ணிலே தங்கத் தட்டாய்த் தகதகக்கும் வெண்ணிலாவின்  தண் ஒளி

     

    வான் பரப்பிலே வைரங்களாய் பதிந்து கண் சிமிட்டும் தாரகைகளின் ஒளி

    வான் திரையிலே தோன்றும் எழில் ஓவியம் வானவில்லின் வண்ண ஒளி

    விட்டு விட்டு ஒளிர்விட்டுப் பறக்கும் மின்மினிப் பூச்சிகளின் ‘மினி’ஒளி

    வெயில் பட்டுப் பளபளக்கும் கோவில் கோபுர கலசங்களின் கம்பீர ஒளி

     

    பூசை அறையிலே நெய்த்திரி இட்டு ஏற்றிய குத்து விளக்கின் மங்கள ஒளி

    ஆசைமிக கார்த்திகை தினம் ஏற்றிய அகல் விளக்குகளின் அலங்கார ஒளி

    எண்ணிலா பக்தர்கள் கண்டு வணங்கும் அண்ணாமலை தீப அகண்ட ஒளி

    கண்ணிலே கண்டதும் பக்தர்கள் பரவசப்படும் சபரிமலை மகரவிளக்கு ஒளி

     

    தான் அழிந்தாலும் இறுதி வரை ஒளிதந்து இருள் போக்கும் மெழுகுவர்த்தி

    நாம் எல்லாம் அறிந்து உணர வேண்டிய பாடமாய்த் தரும் தியாக ஒளி

    போர்க்களத்தில் இருட்டிலும் விளக்கேந்தி சலியாது சேவை புரிந்த செவிலி

    பார்போற்றிய ‘விளக்கின் சீமாட்டி’ ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் சேவைஒளி

     

    ஒளிமிக்க வாழ்வு யாவர்க்கும் அருள்மிக்க இறைவன்  அருள்வாராக!

    Share
  • கந்த சஷ்டி!

     

    சு. கோபாலன்

    034

    சூரபத்மன் எனும் கொடிய அசுரனை வதம் செய்து உலகைக் காக்க

    ஆறுமுகன் ஆறுனாட்கள் அவனுடன் சமர்செய்து ஆறாம் நாள்(சஷ்டி)

    தருவாகி நின்ற அசுரனை தன் கூரிய வேலால் இரண்டாய்ப் பிளந்து

    ஒருபாதி சேவலாய் மறுபாதி மயிலாய் அசுரனை மாற்றி அமைத்து

    கருணை மிகு கந்தன் சேவலைக் கொடியாய் மயிலை வாகனமாய் ஏற்று

    அருளைப் பொழிந்து உலகைக் காத்தானே திருச்செந்தூர் திருத்தலத்திலே!
    இந்திரன் மகிழ்ந்து மகள் தெய்வானையை ஏழாம்நாளன்று முருகனுக்கு003

    மந்திரம் வேதங்கள் முழங்க திருப்பரங்கிரியில் மணம் செய்வித்தானே!
    கந்தனுக்கு உகந்த கந்த சஷ்டி புனித நாளில்…………

    கந்தனைக் குறித்து

    சிந்தனை செய்திடு

    ‘எந்தனைக் கா’வென

    வந்தனை புரிந்திடு

    உந்தனைக் காக்க

    வந்துனை அடைவான்!

     

    சு.கோபாலன்

    படங்களுக்கு நன்றி:

    http://www.kaumaram.com/gallery/003.html

    Share
  • நவராத்திரி கொண்டாட்டம்!…

     சு.கோபாலன்  

     

    நவராத்திரி கொண்டாட்டம்

     

    மூன்று தேவியராம் துர்கா லட்சுமி சரஸ்வதி தெய்வங்களை

    மூன்று நாட்கள் ஒவ்வொரு தேவிக்கும் முறை வைத்து

    ஒன்பது நாட்கள் மொத்தமாய் மெத்த சிரத்தையுடன் வழிபடுவது

    என்பது நவராத்திரி எனப்படும் மங்கலமான கொண்டாட்டமாம்.

     

    சக்திக்கு உரிய தெய்வமாம் துர்க்கையை முதல் மூன்று நாட்கள்

    பக்தியுடன் பணிந்து வழிபட்டு வல்லமை அருளிட வேண்டுவோம்

    பொருள் செல்வத்தின் தெய்வமாம் லட்சுமியை அடுத்த மூன்று நாட்கள்

    அவளருள் செல்வம் அளித்திட வேண்டி  பணிந்து வணங்குவோம்

     

    குறையாச் செல்வமாம் கல்விக்குரிய சரஸ்வதியை இறுதி மூன்று நாட்கள்

    நிறைவாய் அச்செல்வம் நமக்கருளிட இறைஞ்சி அவளடி தொழுவோம்.

     வண்ண வண்ண பொம்மைகளை ஒற்றை எண்ணில் அமைத்த படிகளில்

    கண்ணைக் கவரும் வண்ணம் கொலுவைத்து விளக்கேற்றி தேவி துதிபாடி

    மஞ்சள் குங்குமம் மற்ற மங்கலப் பொருட்களை வரும் மங்கையருக்களித்து

    நெஞ்சம் மகிழ்ச்சியால் நிறைய நவராத்திரி கொண்டாடுவரே இல்லத்தரசிகள்

     

    புத்தகங்கள் அறிவொளி தரும் தெய்வங்களென அவற்றுக்கும்(9ம் நாள்)பூசை செய்வது

    எத்தகைய உயர்ந்த பண்பாடு என்பதில் பெருமை கொள்வோம்.

    வாழ்வு தரும் கருவிகள், ஆயுதங்கள் இயந்திரங்களுக்கும்(9ம் நாள்)பூசை செய்வது

    தாழ்வு வாராது நம்மைக் காத்திட தேவியரை உளமாற வேண்டிடுவோம்!

     

    முற்றும் வாழ்க்கைக்கு ஆதாரமான செல்வங்களை பெற்றிட அலைமகளையும் (லட்சுமி)

    பெற்ற செல்வத்தைக் காத்திடும் வல்லமை தைரியம் பெற்றிட மலைமகளையும் (துர்கை)

    உற்ற முறையில் செல்வத்தை  பயன்படுத்த நன்மதி பெற கலைமகளையும் (சரஸ்வதி)

    ஏற்ற முறையில் நவராத்திரியில் போற்றி வணங்கி வழிபடுவோமே!

    கொடுமை மிக்க மஹிஷாசுரன் எனும் எருமை உருவம் கொண்ட

    அசுரனோடு ஒன்பது நாட்கள்

    கடுமையாய்ப் போரிட்ட சிம்ம வாகினி (துர்கை) பத்தாம் நாள்(விஜய தசமி)

    அசுரனை அழித்து வெற்றி பெற்றாள்

    வடநாட்டிலே

    இராமனின் கதைகளைப் பக்தியுடன் ஆனந்தமாய்ப் பாடி ஆடி நடித்து

    ‘இராம லீலா’ என்று ஒன்பது நாட்கள் கொண்டாடி மகிழ்வரே!

    பத்தாம் நாள்(தசரா) இராமன் இராவணனனைப் போரில் வென்றதைக் கொண்டாட

    பத்துத்தலை இராவணன்,கும்பகர்ணன் மேகனாதன் உருவங்களை எரிப்பரே

     

    பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் பலவிதமாய்க் கொண்டாடினாலும்

    நல்லவை முன் தீயவை இறுதியில் அழியும் என்பதே செய்தியாகும்.

    Share
  • புரட்டாசி சனிக்கிழமை-3

     

    சு.கோபாலன் 

     

    அருளின் உருவே கோவிந்தா!images

    ஆனந்த ரூபா கோவிந்தா!

    இன்னல் தீர்ப்பாய் கோவிந்தா!

    ஈர்ப்பாய் பக்தரை கோவிந்தா!

    உன்னருள் தருவாய் கோவிந்தா!

    ஊழ்வினை தீர்ப்பாய் கோவிந்தா!

    என்றும் துணையே கோவிந்தா!

    ஏழுமலை வாசா கோவிந்தா!

    ஐயனே! சரணம் கோவிந்தா!

    ஒருநாளும் மறவேன் கோவிந்தா!

    ஓதுவேன் உன் துதியே கோவிந்தா!

    அவ்வாறே என்னை வாழ்விப்பாய் கோவிந்தா!

    படத்திற்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://www.starsai.com/wp-content/uploads/sri-venkateswara.jpg&imgrefurl=http://www.starsai.com/sri-venkateswara-tirumala-tirupati-darshan/&h=637&w=595&sz=99&tbnid=rhysG6ZF3vd7tM:&tbnh=133&tbnw=124&zoom=1&usg=__jwCpFW0cJX-GCJ7bVq7rbb32LH0=&docid=g6dp3788iMrcjM&sa=X&ei=JsNQUtOEAsaLrQetrYD4AQ&ved=0CDQQ9QEwAg

    Share
  • ஹனுமான் சாலிசா – அனுமான் நாற்பது

    எஸ். கோபாலன்
    Hanuman Desktop Pictures - 6

     

    ஸ்ரீகுரு சரன ஸரோஜ ரஜ நிஜ மன முகுரு ஸுதாரி
    பர்ன(உ)ம் ரகுபர் பிமல் ஜஸு ஜோ தாயகு பல சாரி

    எனது மனது எனும் கண்ணாடியாம் அதை
    குருவினது திருவடி தூசியால் தூய்மை செய்து
    ’கனிகள் நான்கை’ அருளிடும் ரகுகுல திலகம்
    இனியன் இராமனின் இழுக்கிலா இசையை இயம்பிடுவேன்.

    புத்திஹீன தனு ஜானிகே ஸூமிரெளம் பவன குமார
    பல புத்தி வித்யா தேஹு மோஹிம் ஹரஹு கலேஷ் விகார்

    குறைவான அறிவுடையோன் நான் என்று நன்கறிந்து
    விரைவான வாயுவின் குமாரன் உன்னைத் தியானிக்கிறேன்.
    சக்தி,புத்தி,ஞானம் இவற்றை எனக்குத் தந்திடுவாய்!
    முக்தி அளித்திடுவாய் இடர்கள், இழுக்குகள் இவற்றினின்று.

     

    ஜய ஹனுமான ஞான குன ஸாகர
    ஜய கபீஸ திஹும் லோக உஜாகர (1)

    வெற்றி உனக்கே அனுமான்! நீ ஞானம் நற்குணம் இவற்றின் கடலாம்
    வெற்றி உனக்கே வானரத்தலைவா! நீ மூவுலகும் பரவிய கீர்த்திஉடையோன்

    ராம தூத அதுலித பல தாமா
    அஞ்சனி புத்ர பவனுஸுத நாமா (2)

    அண்ணல் இராமனின் தூதன் இணையிலா வலிமை மிக்கோன்
    அன்னை அஞ்சனை மைந்தன் வாயு புத்திரன் எனும் பெயருடையோன்

    மஹா வீர விக்ரம பஜரங்கி
    குமதி நிவார ஸுமதிகே சங்கி (3)

    மகா வீரன் நீ! பராக்கிரமும் பலமும் படைத்தவன் நீ!
    தகாத சிந்தைனைகளை அழிப்பவன் நீ! தூய சிந்தனையாளர் துணைவன் நீ!

     

     

    கஞ்சன பரன விராஜ ஸுவேஸா
    கானன குண்டல குஞ்சித கேஸா (4)

    பொன்னிற மேனியன் நீ! அழகிய உடைகளை அணிந்த்தவன் நீ!
    மின்னிடும் குண்டலங்கள் பூண்டவன்; சுருண்ட கேசம் கொண்டவன்

    ஹாத பஜ்ர ஒளர த்வஜா பிராஜை
    காந்தே மூம்ஜ ஜனேவு ஸாஜை (5)

    வஜ்ரமும் கொடியும் கரங்களில் கொண்டவன்
    முஞ்சை புல்லாலான பூணூல் பூண்டவன்

    ஷங்கர ஸுவன கேஸரி நந்தன
    தேஜ பிரதாப மஹா ஜகவந்தன (6)

    சங்கரன் அவதாரம் நீ, கேசரி குமாரன் நீ
    உந்தன் வீரத்திற்கும் புகழுக்கும் பாரே வணங்கும்

    வித்யாவான குணி அதி சாதுர
    ராம காஜ கரிபே கோ ஆதுர (7)

    கூரிய மதியும் நற்குணமும் நிறைந்த மேதை நீ!
    சீரிய இராம சேவைக்காக ஆவலாய் காத்திருப்பாய்

    ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா
    ராம லகன ஸீதா மன பசியா (8)

    இராம கதைக் கேட்பதில் பேரானந்தம் அடைவோனே!
    இராமன் இலக்குவன் சீதையை உள்ளத்தில் உடையோனே!

    சூக்‌ஷ்ம ரூப தரி ஸியஹிம் திகாவா
    விகட ரூப தரி லங்க ஜராவா (9)

    சிற்றுருவம் தரித்து சீதா பிராட்டிக்கு தோற்றமளித்தாய்
    பேருருவம் தரித்து இலங்கையை தீக்கு இரையாக்கினாய்.

    பீம ரூப தரி அஸுர ஸம்ஹாரே
    ராமசந்த்ரே கே காம ஸம்வாரே (10)

    பிரம்மாண்ட பேருருவம் தரித்து அரக்கர்களை அழித்தாய்
    ஆண்டவன் இராமனின் காரியங்களை நிறைவேற்றினாய்

     

    லாய ஸஜீவன லகன ஜியாயே
    ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே (11)

    இளவலின் உயிரை சஞ்ஜீவினி மூலிகை கொணர்ந்து காத்தாய்
    அளவிலா ஆனந்தத்துடன் இராமனும் உன்னை நெஞ்சாரத் தழுவினார்

    ரகுபதி கீன்ஹி பகுத படாயீ
    தும மம ப்ரிய பரத சம பாயீ (12)

    உந்தன் பெருமைகளை இராமன் மிகவும் புகழ்ந்தான்
    எந்தன் பரதன் போல நீயுமன்புத் தம்பி என்றான்

    ஸஹஸ பதன தும்ஹரோ யஷ காவைம்
    அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம் (13)

    உனது புகழை ஆயிரந்தலை ஆதிசேஷனும் பாடுவான் என்றுரைத்து
    தனது நெஞ்சார தழுவினான் அண்ணல் இராமனும் உன்னையே!

    ஸனகாதிக ப்ரஹ்மாதி முனிஸா
    நாரத ஸாரத ஸஹித அஹிஸா (14)
    யம குபேர திக்பால ஜஹாம் தே
    கவி கோவித கஹி ஸகே கஹாம் தே .. (15)

    ஸனகர் முதலிய முனிவர்கள் பிரம்மா போன்ற தெய்வங்கள்
    நாரதர் ஸரஸ்வதி ஆதிஸேஷன் காலன் குபேரன் திசைக்காவலர்கள்
    அறிஞர்கள் கலைஞர்கள் ஆகியோர் இவர்களில் எவருமே
    அறிந்திலரே உந்தன் பெருமையை முழுமையாய் வர்ணித்திட!

    தும உப்கார ஸுக்ரீவஹிம் கீன்ஹா
    ராம மிலாய ராஜ்பத தீன்ஹா ………………………..(16)

    குரக்கினத் தலைவன் சுக்ரீவன் இராமனைக் கண்டு
    தனக்குரிய அரச பதவி பெற்றிட உதவினாயே!

    தும்ஹரோ மந்த்ர விபீஷன மானா
    லங்கேஷ்வர பயே ஸப ஜஹ ஜானா (17)

    உந்தன் அறிவிரைகளை ஏற்று அதன்படி நடந்து விபீஷணன்
    வேந்தன் ஆனான் இலங்கைக்கு என்பது அனைத்துலகும் அறிந்ததே!

     

    ஜுக ஸஹஸ்ர யோஜன பர பானூ
    லீல்யோ தாஹி மதுர பல ஜானூ ….. (18)

    பல ஆயிரம் யோஜனை அப்பாலிருந்த பகலவனை இனிய
    பழம் என்று எண்ணி பறித்து விழுங்கிவிட்டாயே!

    ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம்
    ஜலதி லாந்தி கயே அசரஜ நாஹீம் (19)

    அண்ணல் இராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தாங்கிய நீ
    விண்ணில் விரைந்து தரங்கத்தை தாண்டியதில் வியப்பேதும் இல்லையே!

    துர்கம காஜ ஜகத கே தேதே
    ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே (20)

    இவ்வுலகில் எத்தனை கடினமான காரியங்கள் ஆனாலும்
    வெகுயிலகு ஆகிவிடும் உந்தன் அருளாலே

    ராம துஆரே தும ரக்வாரே
    ஹோத ந ஆங்யா பினு பைஸாரே ……….. (21)

    இராமனது வாயில் காவலன் நீ
    உனது அனுமதியின்றி யாரும் நுழைய முடியாதே!

    சப ஸுக லஹை தும்ஹாரி ஸரனா

    தும ரக்‌ஷக காஹு கோ டர்னா ………………… (22)

    எல்லா சுகங்களும் கிட்டும் உந்தன் சரணங்களிலே
    நல்ல பாதுகாவலனாய் நீ இருக்கையில் பயமேன்?

    ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை
    தீனோம லோக ஹாங்க தே காம்பை ……. (23)

    உன்னால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் உன்னாற்றலின்
    முன்னால் மூன்று உலகங்களும் நடுக்கம் கொள்ளுமே!

    பூத பிஷாச நிகட நஹீம் ஆவே
    மஹாவீர் ஜப நாம ஸுனாவே ……. (24)

    அருகில் அண்டிடாதே பூதங்களும் பேய்களும்
    பெரும் வீரன் உந்தன் நாமத்தைக் கேட்டாலே!

     

    நாஸை ரோக ஹரை ஸப பீரா
    ஜபத நிரந்தர ஹனுமத பீரா …. (25)

    எந்நோயும் தீருமே துன்பம் நீங்குமே
    என்னேரமும் அனுமது நாமத்தை ஜபித்தால்

    ஸங்கட தே ஹனுமான சுடாவை
    மன க்ரம வசன த்யான ஜோ லாவை .. (26)

    எவர் மனம் வாக்கு செயலால் தியானிக்கிறாரோ
    அவரை அனுமான் துன்பங்களிலிருந்து விடுவிப்பார்

    ஸப பர ராம தபஸ்வி ராஜா
    தின்கே காஜ சகல தும ஸாஜா ……….. (27)

    இணையிலா தபஸ்வியும் அரசனுமான இராமனின்
    பணியெலாம் பரிபூர்ணமாய் நிறைவேற்றினாய் நீ!

    ஒளர மனோரத ஜோ கோயி லாவை
    ஸோயி அமித ஜீவன பல பாவை …… (28)

    உனது அடியர்வர்கள் கொண்ட ஆசைகள் எல்லாம்
    உனது அருளால் வாழ்வெலாம் சித்தி பெறுமே!

    சாரோம் ஜுக பரதாப தும்ஹாரா
    ஹை பரசித்த ஜகத உஜியாரா …. (29)

    யுகங்கள் நான்கிலும் உந்தன் புகழ் போற்றப்படுகிறதே
    உலகங்கள் முழுதும் உந்தன் பெருமை ஒளிர்கிறதே

    சாது சந்த கே தும ரக்வாரே
    அசுர நிகந்தன் ராம துலாரே……………………. (30)

    சாதுக்கள் ஞானிகளைக் காப்பவனும்
    அசுரர்களை அழிப்பவனும் இராமனுக்கினிய நீயே!

    அஷ்ட ஸித்தி நெள நிதி கே தாதா
    அஸ வர தீன ஜானகி மாதா.. (31)

    சித்திகள் எட்டையும் நிதிகள் ஒன்பதையும் எவருக்கும் அளித்திடும்
    சக்திதனை உனக்கு வரமாய் அருளினாளே அன்னை ஜானகி

     

     

    ராம ரஸாயன தும்ஹரே பாஸா
    ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா … (32)

    இராம நாமம் எனும் அருமருந்து உன்னிடமுண்டு
    இராம தாஸனாய் எப்பொழுதும் புரிந்திடு தொண்டு

    தும்ஹரே பஜன ராம கோ பாவை
    ஜன்ம ஜன்ம கே துக பிஸ்ராவை .. (33)

    உன்னை பஜனை செய்யும் பக்தர்கள் இராமனை அடைவரே
    ஜன்ம ஜன்மமாய் தொடரும் துக்கங்கள் அகன்றிடுமே!

    அந்த கால ரகுபர புர ஜாயி
    ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ.. (34)

    அந்திம காலத்தில் இராமனின் இருப்பிடம் அடைவோர்
    அங்கு அவர்கள் அரியின் அடியவன் என்று அழைக்கப்படுவர்

    ஒளர தேவதா சித ந தரயி
    ஹனுமத ஸேயி ஸர்வ சுக கரயி.. (35)

    அனுமனே! உன்னை வழிபட்டாலே சர்வ சுகங்களும் கிட்டுமே
    பின்னே வேறு தெய்வம் எதையும் தியானிக்க தேவையில்லையே!

    ஸங்கட கடை மிடை சப பீரா
    ஜோ சுமிரை ஹனுமத பல்பீரா (36)

    எல்லாம் வல்ல அனுமனைத் தியானிக்கும் அடியவரின்
    எல்லா துன்பங்களும் துயரங்களும் தீர்ந்து விலகுமே.

    ஜய ஜய ஜய ஹனுமான கோஸாயி
    க்ருபா கரஹ குருதேவ கீ நாயி … (37)

    ஜயம் ஜயம் ஜயம் உமக்கு அனுமானே
    பரம் குருவே எப்போதும் அருள்புரீவிரே!

    ஜோ ஷத பார பாட கர கோயி
    சுட்ஹி பந்தி மஹாஸுக ஹோயி (38)

    எவர் ஒருவர் இத்துதியை நூறு முறை படிப்பாரோ
    அவர் பந்தங்களினின்று விடுபட்டு பரம சுகம் பெறுவரே!

     

    ஜோ யஹ படை ஹனுமான சாலிஸா
    ஹோய சித்தி ஸாகி கெளரிஸா (39)

    எவர் ஒருவர் அனுமான் நாற்பது துதியை படிப்பாரோ
    அவர் சித்தி பெறுவர் அதற்கு சிவனே சாட்சி.

    துலஸிதாஸ ஸதா ஹரி சேரா
    கீஜை நாத ஹ்ருதய மஹம் டேரா. (40)

    துளஸிதாஸ் எப்பொழுதும் அரியின் சேவகனாம்
    அவன் உள்ளத்தினில் நாதா! என்றும் உறைவாயே!

    பவன தனய ஸங்கட ஹரண மங்கள மூர்த்தி ரூப
    ராம லகன சீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப

    சங்கடம் நீக்கிடும் மங்கள சொரூபியே! வாயு மைந்தனே!
    எங்களது இதயத்தில் இராம இலக்குவ சீதா சமேதராய் உறைவாயே!

     

    படத்திற்கு நன்றி:

    http://festivalchaska.blogspot.in/2013/04/bajrangbali-hd-wallpaper-stylish.html

     

    Share
  • சீனிவாசா கோவிந்தா! திருமலை வாசா கோவிந்தா!

     

    சு.கோபாலன்

    govindaraja perumal

     

    ருளே உருவாய் திருப்பதியில் எழுந்தருளிய  ………..  கோவிந்தா!

    னந்தம் ஆரோக்கியம் யாவர்க்கும் தந்தருள்வாய்…….. கோவிந்தா

    ரக்கம் சுரக்கும் இதயங்களை கொடுத்தருள்வாய்…………..கோவிந்தா

    கைக் குணத்தையும் அவற்றோடு தந்தருள்வாய்…………… கோவிந்தா!

    த்தம குணங்களை மானிடர் பெற்றிட அருள்வாய்…….. கோவிந்தா!

    றுகளை எதிர்த்து வென்றிடும் உறுதியை தந்தருள்வாய் ..கோவிந்தா!

    ங்கும் என்றும் எப்பொழுதும் துணையாய் நின்றருள்வாய்……கோவிந்தா!

    ற்றமான எண்ணங்களையே என்றும் கொடுத்தருள்வாய்….  கோவிந்தா

    ந்து பாதகங்கள் என்றும் அண்டிடாமல் காத்தருள்வாய்……… கோவிந்தா!

    ரு நாளும் உனை மறவாத பேற்றைத் தந்தருள்வாய்………..  கோவிந்தா!

    ய்ந்து சாய்ந்திடும்போதும் உன் நினைவகலா பேரருள் புரிவாய் கோவிந்தா

    அவ்வாறு நடந்துவிட்டால் இப்பிறவிப் பெரும் பயன் பெற்றிடுவோமே!

     

     

    Share
  • வெங்கடேச அட்சரமாலை

    சு. கோபாலன்


    புனிதமான புரட்டாசி மாதத்தில்,  திருமலை வாசன் திருப்பதி வெங்கடேசனுக்கு

    மிக உகந்த முதல் சனிக்கிழமையன்று அவன் திருப்பாதத்தில் ஒரு சிறிய பாமாலை

    சமர்ப்பணம்.

     

    திகாலைப் பொழுது விடியுமுன்பே

    தவன் வானில் உதிக்குமுன்பே

    னிய சுப்ரபாத இசையால்

    ர்க்கப்பட்டு துயில் எழுந்து

    னைக் காண வரும் பக்தருக்கு

    க்கமாய் நடுநிசி வரை

    ன்றும் தரிசனம் தந்திடும்

    காந்தமாய் எழுந்தருளிய எம்பிரானே!

    யமின்றி நீ கருணைக் கடலே!

    ப்பிலாத தெய்வமே மலையப்பா!

    டி வருவோம் உன்னருள் நாடி

    ஒளடதமாய் கலி தீர்க்கும் உந்தாள் தேடி!

     

    படத்துக்கு நன்றி: http://www.starsai.com/sri-venkateswara-tirumala-tirupati-darshan/

     

    Share
  • விநாயகர் துதி

     

    சு.கோபாலன்

     

    vinayagar-jaffnavoice

     

     

     

     

     

     

     

     

     

    ஆறுமுகன் மூத்தவன் அவன் ஆனை முகத்தவன்

    ஊறுகள் யாவும் களைந்து உவகை அளிப்பவன்

    புல்லையும் பூவாய் உகந்து ஏற்றுச் சூடுவான்

    தொல்லை எல்லாம் தொலைத்து நல்லதே செய்வான்

    மோதகப் பிரியன் பாதகம் யாவும் போக்கி

    சாதகமாய் சந்தர்ப்பங்கள் சேர்ந்திட அருள் புரிவான்

    புள்ளிமயில் வாகனன் இளையவன் முருகனுக்கு

    வள்ளி கரம் பற்றிட வழிவகுத்து உதவியவன்

    வலது தந்தத்தால் வியாசர் கூற்றை எழுதி

    உலகு பாரதமெனும் காவியம் பெற்றிட அருளியவன்

    நம்பிக்கை கொண்டு நாள்தோறும் வழிபடும் அடியவர்க்கு

    தும்பிக்கை சாமி காலமெலாம் துணை நிற்பானே!

     

     

    Share
  • சுதந்திர தினம் ஆகஸ்ட் – 15 (2013)

    சு. கோபாலன்

    8046072639_6cd2a5ed99_z

    மாசுபடுத்தப்பட்ட அரசியலும், கறை படிந்த அரசியல்வாதிகளூம் மலிந்துவிட்ட

    இந்நாட்களில், சுதந்திர தினத்தன்று, நம் நாட்டின் தன்னலமற்ற தனிப்பெரும்

    தலைவர்களாகத் திகழ்ந்து தமிழ் நாட்டுக்கு பெருமை கூட்டிய ராஜாஜியையும்,

    காமராஜரையும் நினைவு கூர்ந்து, ஆறுதல் பெறுவோம்.

    இருவரும் முற்றிலும் மாறுபட்ட பின்னணியும், பாணியும் கொண்டவர்களாக இருந்தாலும்

    தன்னலமற்ற நாட்டுப்பற்றில் ஒருமித்தவராய் இருந்தனர்.

     

    ராஜாஜி

     

    கூரிய மதி கொண்ட இணையிலா மேதைimages

    சீரிய நெறிமுறை தனக்கென வகுத்து

    சூரிய ஒளிபோல் பளிச்சென வாழ்ந்த

    நேரிய வாழ்வு யாவர்க்கும் உதாரணமாம்.

    சட்டம் அரசியல் இலக்கியம் என

    தொட்ட துறையிலெலாம் துலங்கி நின்று

    எட்ட முடியா ஏற்றம் அடைந்து

    விட்ட இடம் இட்டு நிரப்ப இயலாதே!

     

     

    காமராஜர்

     

    ஏட்டுப் படிப்பு அதிகமிலான் கொண்ட220px-K._Kamaraj

    நாட்டுப் பற்றுக்கோ எல்லை இல்லை

    மேருவொக்க அரசியலில் உயர்ந்து நின்ற

    நேருவுக்கே ஆலோசகனான பெரும் தலைவன்

    நலிவுற்ற குடிமக்கள் துயர் நீங்கி

    பொலிவுற்ற வாழ்வு பெற உறுதி பூண்டு

    எள்ளளவும் தன்னலமின்றி கடைசி மூச்சு

    உள்ளளவும் உழைத்த உத்தமத் தலைவன்.

     

    படங்களுக்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/a/a4/K._Kamaraj.jpg/220px-K._Kamaraj.jpg&imgrefurl=http://en.wikipedia.org/wiki/K._Kamaraj&h=258&w=176&sz=1&tbnid=hi6BB6BlZLjC9M:&tbnh=186&tbnw=126&zoom=1&usg=__fRrKXga_82OM9FZw44Whm-65Zls=&docid=OwLIrcYlC1s_0M&itg=1&sa=X&ei=GHALUsXYMYW0iQfw_YG4CA&ved=0CJUBEPwdMAo#imgdii=hi6BB6BlZLjC9M%3A%3BexfH7ekkid3dAM%3Bhi6BB6BlZLjC9M%3A

    Share
  • வேண்டும்! வேண்டும்!

     

    -சு.கோபாலன்

     
    மனித வாழ்வின் அல்லல்களை, தொல்லைகளைக் கண்டு மனம் நொந்து
    இனிய இயற்கையின் ஒரு அங்கமாகவே மாறி வாழ்ந்தால் எப்படியிருக்குமென
    கற்பனைக் குதிரையைக் கட்டவிழ்த்து விட்டேன் எண்ணிப் பார்த்திட
    உற்பத்தி ஆனது ஒரு பெரிய வேண்டுகோள் பட்டியல் ஆண்டவனுக்கு அளித்திட!

     

    மேகம் ஆகி மலை உச்சியில் துஞ்ச வேண்டும்
    தாகம் தீர்க்கும் மழையாய் பூமியில் பெய்ய வேண்டும்
    பாய்ந்து செல்லும் ஆறாக விரைந்து ஓட வேண்டும்
    காய்ந்து கிடக்கும் நிலங்களுக்கு உயிர் ஊட்ட வேண்டும்

    மீனாகி பரந்த கடலில் நீந்தி மகிழ்ந்திட வேண்டும்
    மானாகி அடர்ந்த காட்டில் துள்ளி ஓடிட வேண்டும்
    வண்டு ஆகி மலர்கள் மேல் அமர்ந்து மகிழ வேண்டும்
    உண்டு தேனை மனதாற ரீங்காரம் செய்ய வேண்டும்

    மயிலாகி வண்ணத் தோகைகளை விரித்திட வேண்டும்
    ஒயிலாக நடனமாடி காண்போரை மகிழ்விக்க வேண்டும்
    குயில் ஆகி இனிய குரலிசையில் கூவிட வேண்டும்
    துயில் எழுப்பும் சுப்ரபாதமாய் அது ஒலித்திட வேண்டும்

    கெட்டியான விழுதுகள் தாங்கும் பெரிய ஆலமரமாக வேண்டும்
    வெட்டிச் சாய்ப்பார்களோ எனும் பயமின்றி நிழல் தர வேண்டும்
    சுகம் தரும் தென்றலாய் இதமாய் வீசிட வேண்டும்
    அகம் குளிர்ந்து அதை உணர்வோர் மகிழ்ந்திட வேண்டும்

    பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் மலராக வேண்டும்
    காய்த்துத் தொங்கும் தோப்பினில் கனியாக வேண்டும்
    தொடுத்த மாலையாக ஆண்டவனை அலங்கரிக்க வேண்டும்
    பறித்த பழமாக அவனுக்கு நிவேதனம் ஆகிட வேண்டும்

    மூங்கிலாய்த் தோன்றி கண்ணன் திருக்கரத்தில் வேய்ங்குழலாகி
    நீங்கிலா இனிமை பொங்கும் இசையாய் வெளிப்பட வேண்டும்
    அலையாக செந்தூர் கடலில் பிறந்து கந்தன் கழல் தழுவ வேண்டும்
    மலையாக ஓங்கி நின்று குமரனின் தாளினைத் தாங்கிட வேண்டும்

    பச்சைக் கம்பளம் போர்த்திய வயலில் ஒரு நெல் பயிராக வேண்டும்
    இச்சைப்படி காற்றுடன் இசைந்து தலை அசைக்க வேண்டும்
    விண்வெளியில் கண் சிமிட்டும் தாரகையாய் ஜொலிக்க வேண்டும்
    கண்குளிர வண்ண ஓவியமாய் காட்சி தரும் வானவில்லாக வேண்டும்

    இயற்கையோடு ஒன்றி வாழ்வதை கற்பனை செய்தாலே கரும்பாய் இனிக்கிறதே!

     

    Share