Category: பொது

  • Blue Bed Sheet

    Blue Bed Sheet

    Baskar Seshadri

    I was on my terrace again. Sounds as if I was climbing to my brain and making a deep enquiry. Not though.

    This evening was very fresh and the small plane at an altitude to me was like a small snail just moving and I could not keep my head or eye on it for long.

    There were other things. That wonderful blue sheet of canvas was amazing and having seen it several times it never made me tired and every time I look up it was there.

    And I only do not see it. When I see it I wonder how I have missed it for too long. But I will board a different plane altogether after seeing it.

    What then happens to the sky when I don’t see it? Nothing. It used to be like it was when I saw last.

    Me seeing and not seeing enjoying it or ignoring it does not make a difference to it. It is neither for a boquette nor for a brick bat. It doesn’t need me. No one either. It can be there for no one and not even for itself. A probing mind on science or astronomy can resolve by saying the existence in years but what about and how about it being there

    Do we need mathematics here or the art of beatitude and wonder of the nature?

    Am I the part of the sky or the earth?

    Why should I be fascinated towards that blue bed sheet?

    How is that I become nothing when I am with it?

    Is that being nothing is everything in life?

    I am back to work and that sky is in me and I can make it alive anytime I want.

    After all the very thought of the sky can evoke me if I think about it.

    I am the thought. sky is being thought . I am the sky. I wonder at it. At me too.

    Share
  • Salute the Heroes

    Salute the Heroes

    Baskar Seshadri

    It was around seven am this morning (November 26, 2020).

    Rain was moderate. The activity on road was almost nil except for few people who have to move out anyway for the daily bread.

    It was at this time I spotted these uniformed men of the conservancy contractor company who were cleaning. These people are hardworking, young, affable and friendly too. They were thankfully in their rain suit and doing their work tirelessly.

    We may know that even to clean a house its a big task but doing that on a big road like RK Mutt road is no way a small task. And they don’t do for the sake of doing it.

    They literally engage with their full heart and do it. I have seen them even cleaning the areas under the bus shelter near Mylapore tank bus stand and in next thirty minutes the road was clean and neat. They did this amid the rains with a little cup of tea and biscuit and since they know me well they extended their gesture with a big smile.

    I reciprocated. But they need this from all. When you happen to see them next time on the road just stop for a minute and say that they are doing a yeomen service and pat their shoulders if you can or wish a women worker with a Namaste. They need this and we need them.

    Our salutes Guys for all that you do to us in the climate of all seasons braving rain and shine .

    Share
  • Janaki Neelamani’s Leo library

    Janaki Neelamani’s Leo library

    Seshadri Baskar

    K.P. Neelamani was a famous tamil writer in those days and my friends including myself used to frequent him since he was operating a small library on Mandaveli street . We used to pick the books often and had a very friendly association for a long time.

    He was too friendly and was very much affectionate when all of us were in our mid twenties . After his demise his wife Janaki Neelamani started handling this library work and she has her set of customers who still remember her and make it to pick the books regularly.

    Its a small place of less than hundred square feet and Maami fondly being called by everyone used to make it at sharp nine in the morning everyday (of course there was a break for some months during the covid times) to meet the customers.

    Leo library is the name of the Lending unit and she charges a nominal sum of Rs Hundred as Membership fee unlike others who charges five hundred and above. She lends only Tamil books and if any body is interested can reach the library at 9444542733.

    In the noon after a break she opens the library and its open till seven depending upon the footfall. Maami is such a affectionate person and when I met her this morning she was too kind to speak recollecting our frequent visits in those days and surprisingly. she even said our membership number was hundred.

    Few newspapers years back had done story on this Leo Library and she was too happy show all those accolades she has won. At this elderly age (must be above seventy), she is too active and energetic and I wish our friends to support her and become a member. We have to learn a lot from her in life for all the grit and energy level.

    When I said, I want become a member and pay afresh she flatly refused and said that I am already a member. What more. she did a fresh membership card and remembered to mention the number as 100 . You know we all had paid just Ten Rupees thirty years back and she still regard all of us are esteemed Members even today. What a integrity and High Ethics it is to adore. My Respects Maami .

    The library is near Mandaveli Market opposite to CC Bank .

    Share
  • Q&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்?

    Q&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்?

    அண்ணாகண்ணன்

    நண்பர் வெண்மணி குமார் அவர்களின் கேள்விக்கு எனது பதில் இங்கே.

     

    Cover Image courtesy: https://www.maxpixels.net

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Q & A: சுதா மாதவன் கேள்விகளுக்கு அண்ணாகண்ணன் பதில்

    Q & A: சுதா மாதவன் கேள்விகளுக்கு அண்ணாகண்ணன் பதில்

    அண்ணாகண்ணன்

    எனது யூடியூப் அலைவரிசையில் ஒரு புதிய பகுதியாக, அன்பர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன். இந்த முதல் பதிவில், முகநூல் (பேஸ்புக்) நண்பரும் வல்லமை வாசகருமான சுதா மாதவன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளேன்.

     

    உங்களுக்கு ஏதும் கேள்விகள், ஐயங்கள், யோசனைகள், கருத்துகள், பின்னூட்டங்கள் இருந்தால், வீடியோவில் பதிவு செய்து எனக்கு அனுப்புங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டும் மனவளக்கலை நிபுணர் – எக்கார்ட் டாலே (Eckhart Tolle) 

    மகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டும் மனவளக்கலை நிபுணர் – எக்கார்ட் டாலே (Eckhart Tolle) 

    -மேகலா இராமமூர்த்தி

    1948ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தவரும் இப்போது கனடாவில் வசித்து வருபவருமான உல்ரிச் லியொனார்டு டாலே (Ulrich Leonard Tölle), இன்றைய உலகின் குறிப்பிடத்தக்க ஆன்மிக வழிகாட்டிகளில் ஒருவர். இவரை ஆன்மிக வழிகாட்டி என்பதைவிடவும் மனித மனத்தை வளப்படுத்தி வாழ்க்கையைச் செம்மைப்படுத்த உதவும் மனவளக்கலை நிபுணர் (Expert in the art of living) என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

    இவருடைய பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் சென் புத்தமதம் (Zen Buddhism), சூபித் தத்துவம் (Sufism), இந்துமதம் (Hinduism) மற்றும் கிறித்தவ மதம் (Christianity) போன்றவற்றின் சிறந்த சிந்தனைகள் இடம்பெற்றிருந்தாலும், இச்சிந்தனைகளை இவர் மதம் பரப்பில் நோக்கில் பயன்படுத்தாமல், வாழ்வுக்கு உதவும் நற்கருத்துக்கள் இவை என்ற அடிப்படையிலேயே பயன்படுத்துவது, எவ்வித மத அடையாளமும் அற்ற மனவளக் கலை நிபுணராக மேற்குலக மக்களிடம் இவரை அடையாளப்படுத்தியிருக்கின்றது.

    தம்முடைய ஆன்மிக ஆசான்களாக கௌதம புத்தமர் (Gautama Buddha), இரமண மகரிஷி (Ramana Maharshi), ஜித்து கிருஷ்ணமூர்த்தி (Jiddu Krishnamurti), மற்றும் ரூமி (Rumi) ஆகியோரை குறிப்பிடுகின்றார் எக்கார்ட் டாலே.

    டாலேயின் இளமைக்கால வாழ்வை ஆராய்ந்தால், நான் தென்றலைத் தீண்டியதில்லை; ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்என்ற பராசக்தி வசனந்தான் நம் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு அவருடைய இளமைக்காலம் துயர் நிறைந்ததாக இருந்திருக்கின்றது. ஜெர்மனியில் அவர் கழித்த குழந்தைப்பருவ நாள்களில் அவருடைய தாய்க்கும் தந்தைக்கும் இடையே நடந்த சண்டைகளையும் அதைத் தொடர்ந்து அவர்களிடையே ஏற்பட்ட மணமுறிவையும் காணக்கூடிய அவலநிலை அவருக்கு வாய்த்திருக்கின்றது.

    தம் பதின்மூன்றாம் வயதில் தந்தையோடு ஸ்பெயினுக்குச் சென்றார் டாலே. தந்தையார் அவரைக் கல்வி கற்க வற்புறுத்தாத நிலையில் தாமாகவே முயன்று இலக்கியம், வானியல், பிற மொழிகள் போன்றவற்றை வீட்டிலிருந்தபடியே கற்றிருக்கின்றார். தம் பதினைந்தாவது வயதில் ஜெர்மனியின் ஆன்மிகச் சிந்தனையாளரான பொ இன் ராவின் (Joseph Anton Schneiderfranken, aka Bô Yin Râ) புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய டாலே அவற்றில் ஆழ்ந்துபோனார்.

    பத்தொன்பது வயதில் இங்கிலாந்திலுள்ள இலண்டனுக்குச் சென்ற டாலே, அங்கிருந்த மொழிப்பாடங்கள் நடத்துகின்ற பள்ளியில் (London school for language studies) ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மானிய மொழிகளைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது இனம்புரியாத அச்சமும் மனஅழுத்தமும் அவரைக் கடுமையாகத் தாக்கவே  தம் எதிர்கால வாழ்வு குறித்த கவலையில் ஆழ்ந்திருக்கின்றார்.

    மனத்தைத் திசை திருப்ப, இலண்டன் பல்கலைக்கழத்தில் தத்துவம், உளவியல், இலக்கியம் உள்ளிட்ட பாடப்பிரிவில் சேர்ந்து பயின்று பட்டம் பெற்றார். முதுகலைப் படிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொடர அவருக்கு அரசின் உதவித்தொகை கிடைத்தும் அதனைத் தொடராது பாதியிலேயே கைவிட்டிருக்கின்றார்.

    தம்முடைய இருபத்தொன்பதாவது வயதில் மீண்டும் கடுமையான மனஅழுத்தத்திற்கு ஆளாகி அவர் துயருற்றுக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகக் கிடைத்த அக விழிப்பால் (spiritual awakening) தம் வாழ்வின் துன்ப நினைவுகளிலிருந்து மீண்டிருக்கின்றார். மறுநாள் முதலே தம் வாழ்வு கலக்கமற்ற அமைதிப் பூங்காவாகத் தோற்றமளித்தது என்றுகூறி நம்மை அதிசயிக்க வைக்கின்றார்!

    அதனைத் தொடர்ந்துவந்த காலங்களில் தியானத்திலும், அகத்தாய்வுப் பயிற்சிகளிலும் (meditation and intense contemplation) அவர் ஈடுபடத்தொடங்கவே அவரைப் பொறுப்பற்றவர் என்றும் பைத்தியக்காரர் என்று முத்திரை குத்திப் பகடி செய்திருக்கின்றது அவருடைய குடும்பம். அதைப் பொருட்படுத்தாத அவர் அங்கிருந்த புத்த மடத்திலும், இலண்டன் ஹித் எனப்படும் பரந்த புல்வெளிப் பிரதேசத்திலுமாகத் தம் வாழ்க்கையைக் கழித்திருக்கின்றார்.

    அந்தக் காலக்கட்டத்தில் உல்ரிச் (Ulrich) என்ற தம்முடைய முதற்பெயரை எக்கார்ட் (Eckhart) என்று அவர் மாற்றிக்கொண்டிருக்கின்றார். மெயிஸ்டர் எக்கார்ட் (Meister Eckhart) எனும் ஜெர்மானியத் தத்துவ அறிஞருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் இதனை அவர் செய்திருக்கின்றார் என்று அறிகிறோம். அதுமுதல் உல்ரிச் டாலே, எக்கார்ட் டாலே ஆனார்.

    அகத்தாய்வுப் பயிற்சிகளால் அவரடைந்த மனவளத்தை அறிந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணாக்கர் பலர், மனநல ஆலோசனைகள் வேண்டி அவரிடம் வரத்தொடங்கினர்.  டாலேயின் புகழ் அமெரிக்காவிலும் பரவவே அங்கும் மனவளக்கலை தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்த அடிக்கடிச் சென்றுவரலானார். சில ஆண்டுகளுக்குப் பிறகு தம்முடைய இருப்பிடத்தைக் கனடாவிலுள்ள வான்கூவர் (Vancouver)  நகருக்கு நிரந்தரமாக  மாற்றினார் டாலே. தம்முடைய வருங்கால மனைவியான கிம் எங்கை (Kim Eng) அவர் சந்தித்ததும் அங்கேதான்!

    மனிதர்கள் அந்தந்த நொடிக்கான வாழ்வை வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் எக்கார்ட் டாலே எழுதி, 1997இல் வெளிவந்த ’The Power of Now: A Guide to Spiritual Enlightenment’ என்ற நூலும், பொருளைத் துரத்திக்கொண்டு ஓடாமலேயே பொருள்பொதிந்த வாழ்க்கையையும் புத்துலகையும் படைக்கலாம் என்பதை விளக்கும் வகையில் அவர் எழுதி 2005இல் வெளியான ’A New Earth: Awakening to Your Life’s Purpose’ என்ற நூலும் மிகவும் புகழ்வாய்ந்தவை.

    ’The Power of Now’ புத்தகத்தைப் படித்த பிரபல தொலைக்காட்சித் தொடர் நடத்துநரும், தயாரிப்பாளருமான ஓப்ரா வின்பிரே (Oprah Winfrey), எக்கார்ட் டாலேயைத் தன்னுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி, அவருடைய ’The Power of Now’ நூலை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்று பரிந்துரைக்க, டாலே ஒரேநாளில் உலகறிந்த மனவளக்கலை நிபுணரானார். இந்நூல் அரேபிய மொழி உட்பட உலகின் 33 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    2009 வாக்கில் ’The Power of Now’ புத்தகம் அமெரிக்காவில் மட்டும்  3 மில்லியன் படிகளும்,  ’A New Earth’  புத்தகம் 5 மில்லியன் படிகளும் விற்று அதிகம் விற்பனையான புத்தகங்கள் (the best sellers) என்ற புகழை அடைந்திருக்கின்றன. 

    டாலேயின் புகழ்பெற்ற நூல்களான ‘The power of Now’விலிருந்தும்A New Earth’இலிருந்தும் சில செய்திகளை நாம் அறிந்துகொள்வது வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

    ‘The Power of Now’ புத்தகத்தின் தொடக்கத்தில் தம்முடைய  கடந்தகாலக் கசப்பான அனுபவங்களை ஒளிவுமறைவின்றி விவரிக்கும் டாலே, அன்பாகவும் அமைதியாகவும் வாழவே நாம் இயற்கையால் படைக்கப்பட்டிருக்கின்றோம். ஆனால் நாமோ வலிகளால் நம்மை நிரப்பிக்கொண்டு அவதிப்படுகின்றோம். வலி என்பது இன்னொரு வலியைத்தான் தருமே தவிர அதிலிருந்து மகிழ்ச்சி கிடைக்க வழியில்லை. அதனால் வலிதரும் கடந்த கால அனுபவங்களையே மனிதர்கள் அசைபோட்டுக்கொண்டிருப்பது எவ்வகையிலும் அவர்களுக்கு மகிழ்ச்சியையோ மன நிம்மதியையோ தரமுடியாது. அவற்றைத் தூக்கிச் சுமப்பதிலும் பயனில்லை என்கிறார்.

    அதுபோல் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்றெண்ணிக் கலங்குவதும் எவ்வித நன்மையையும் தரப்போவதில்லை.  எனவே கடந்துபோன கசந்த காலத்தையும், புதிரான எதிர்காலத்தையும் எண்ணிக் கலக்கமும் குழப்பமும் அடைவதைவிட்டு, மனிதர்களே… நிகழ்காலத்துக்கு வாருங்கள். கடந்துசெல்லும் நொடிகள் எவையும் திரும்ப வாரா என்பதை உணர்ந்து இந்த நொடிக்கான வாழ்வை வாழுங்கள் என்று குறிப்பிடும் டாலே, ”எனக்கு நானேதான் பிரச்சினையாகி வருகிறேன்” (I have become a problem to myself) என்று கத்தோலிக்க மதபோதகரான புனித அகஸ்டின் (Saint Augustine) சொன்ன வாசகத்தை கோடிட்டுக் காட்டுகிறார்.

    இச்செய்தி ”தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற புறநானூற்றுப் புலவன் கணியன் பூங்குன்றனின் மணிமொழியை நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

    “நாம்” என்பது நம்முடைய பெயரோ பதவியோ பொருளோ புகழோ நாம் சார்ந்திருக்கும் மதமோ அல்ல. இவையெல்லாம் நம்முடைய அகந்தையால் இவைதாம் நாம் என்று தவறாக நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்பவையே என்று தெரிவிக்கும் டாலே, இலக்குகளை உருவாக்கி அவற்றை அடைவது குறித்தே சிந்திப்பதையும் அவற்றை அடைந்தால்தான் வாழ்வில் வெற்றி என்று நினைப்பதையும் நிறுத்துங்கள். இவையே உங்களை மன அழுத்தத்தில் தள்ளுபவை. அதற்கு மாறாக இந்த நொடியில் உங்கள் வாழ்க்கை – நீங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை – எவ்வாறிருக்கின்றதோ அதனை ஏற்றுக்கொண்டு வாழப் பழகுங்கள்!  விழிப்புணர்வு உடையதாகவும், அதே சமயம் அவசியமில்லா எண்ணங்கள் அற்றதாகவும் உங்களின் இப்போதைய பொழுது அமையட்டும்!

    முதுமை என்பது நம்முடைய புறவுடலுக்குத்தானேயன்றி அகவுடலுக்கு இல்லை; அகத்தினை மேம்படுத்தும் மனவளப் பயிற்சிகளால் முதுமையைத் தள்ளிப்போடவும் நம் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தவும் முடியும் என்கிறார்.

    ஞானம் பெறுதல் என்பது நம் எண்ணங்களை மேம்படுத்துவதும், நாம் யார் என்பது குறித்த தெளிவான விழிப்புணர்வை அடைவதுமே ஆகும். அஃது ஏதோ பகுத்தறிவுக்குப் புறம்பான விந்தைச் செயலன்று என்கிறார்.

    டாலேயின் கருத்துக்கள் பலவும் நம் தமிழகத்துச் சித்தர்களின் ஆன்மிகக் கருத்துக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கக் காண்கின்றேன்.

    தமிழகத்தின் முதல் சித்தரான திருமூலர், உடலைப் பேணவும் நோய் நொடியின்றி வாழவும் யோகாசனப் பயிற்சிகள், தியானம் உள்ளிட்ட எட்டுவகையான வாழ்வியல் முறைகளை வலியுறுத்துகின்றார். இதனையே ’அட்டாங்க யோகம்’ என்கிறது திருமந்திரம்.

    எக்கார்ட் டாலே திருமந்திரத்தைக் கற்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருந்தால் நிச்சயம் திருமூலரையும் தம்முடைய ஆசான்களின் வரிசையில் சேர்த்திருப்பார் என்பது துணிபு.

    ’A New Earth’  என்ற  தம்முடைய மற்றொரு நூலிலும் மனித மனம் தன்னைப் பற்றியும் தன்னுடைய புறச்சூழல் பற்றியும் விழிப்போடு இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.

    மனிதனின் எண்ணங்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை, மனநோய்களையும் உடல்நோய்களையும் குணப்படுத்துவதில் எண்ணங்கள் இன்றியமையாப் பங்கு வகிக்கின்றன என்று உறுதிபடத் தெரிவிக்கும் டாலே, நம்முடைய மகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சியின்மைக்கும் நம்முடையே எண்ணங்கள்தாம் காரணமேயன்றிச் சூழ்நிலைகள் அல்ல என்கிறார் திடமாக. தன்னை ஒருவன் சுயபரிசோதனை (introspection) செய்து செம்மைப்படுத்திக் கொள்வதன் மூலமும், தனக்கென்று போலியாக எந்த பிம்பத்தையும் உருவாக்கிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பதன் மூலமும் நல்ல மாற்றங்களையும் மகிழ்ச்சியையும் தன்னுடைய சொந்த வாழ்விலும் சமுதாயத்திலும் ஏற்படுத்த முடியும் என்பது டாலேயின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

    இந்த நூலில் இறுதிப் பகுதியான ‘புதிய பூமி’ (A New Earth) என்பதில் முத்தாய்ப்பாக அவர் முன்வைக்கும் செய்தி இதுதான்: ”நாம் சாதாரண மனிதர்கள்தாம்; ஆனால் நம்முடைய செயல்களால் ஓர் அசாதாரணமான புத்துலகை நம்மால் படைக்கமுடியும்!”

    நகைச்சுவை உணர்வும் நிரம்பப் பெற்றவர் டாலே என்பதை அவருடைய மேடைப் பேச்சுகள் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

    இன்றைய எண்ணிம உலகத்துக் கண்டுபிடிப்பான கைப்பேசி குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் எக்கார்ட் டாலே, தொலைபேசிகள் பயனுள்ளவைதாம். ஆனால் இன்றைய கைக்கு அடக்கமான கைப்பேசிகளோ நம்மை ஏவும் முதலாளிகள் ஆகிவிட்டன; நாமோ அவை சொல்வதைக் கேட்கும் அடிமைகளாகிவிட்டோம். அவற்றால் வசியம் செய்யப்பட்டுவிட்ட நாம் அடுத்து என்ன நிகழும் என்ற காத்திருப்போடு அவற்றையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    நம்முடைய இச்செயல், கிரேக்கப் புராணங்களில் வரும் ஆணழகனான நார்சிசஸ், (Narcissus) நீர்நிலையில் தெரிந்த தன் அழகிய தோற்றத்தைக் கண்டு அதிலேயே இலயித்துப் போன செயலுக்கு ஒப்பானது.  அதுதான் உலகத்தின் முதல் செல்பி (selfie) என்றுகூடக் கூறலாம்.  கைப்பேசிகளின் உதவியால் சமூக வலைத்தளங்களில் புதிய புதிய மனிதர்களோடு நாம் தொடர்புகளை உருவாக்கிக் கொள்கிறோம். அம்மனிதர்கள் கூறுகின்ற கருத்துக்கள் நமக்கு உடன்பாடானவையாக இல்லாதபோது, அறிவற்ற வகையில், அவர்களிடம் சீற்றமும் சினமும் கொண்டு நம் மனஅழுத்தத்தைக் கூட்டிக் கொள்கிறோம்.

    ஓர் உணவகத்துக்குப் போனால்கூடக் கைப்பேசியையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறோமே தவிர எதிரில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தக்கூட அல்லவா மறந்துபோய்விட்டது நமக்கு? என்று கேட்கிறார். 

    அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலங்களைச் சார்ந்த ஒன்பது நடுநிலைப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 94 விழுக்காடு ஆசிரியர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து வெளியிட்டிருக்கின்றது பள்ளிகளின் உளவியலை ஆராயும் அறிவியல் இதழான ஜர்னல் ஆப் ஸ்கூல் சைக்காலஜி (Journal of School Psychology).

    இதற்கெல்லாம் தீர்வு, மனிதர்கள் தம் மனத்தில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேரிய எண்ணங்களால் மனத்தை நிரப்புவதே. அதனைப் பெறுவதற்கான தக்க வழி, மேற்குலக மனவளக்கலை நிபுணரான எக்கார்ட் டாலேயும், நம் தமிழ் மண்ணின் சித்தர்களும் பரிந்துரைத்திருக்கும் யோகமுறைகளும் ஆழ்நிலை தியானப் பயிற்சிகளுமே. சொல்லப்போனால் உண்மையான ஆன்மிக நெறி என்பதும் இதுவே!

    .அன்றாடம் பல்வேறு வகைகளில் மன உளைச்சலுக்கும் அழுத்தத்துக்கும் ஆளாகும் நாமும் மன ஒருமைப்பாட்டையும் அமைதியையும் அளிக்கவல்ல தியானப் பயிற்சிகளை மேற்கொண்டு நம் மனத்தை நல்லெண்ணங்களால் நிரப்புவோம்; அதனால் நம் அகத்துள் பூக்கும் மகிழ்ச்சியை அகிலமெங்கும் பரப்புவோம்!

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    https://en.wikipedia.org/wiki/Eckhart_Tolle
    https://www.philosophyforlife.org/blog/eckhart-tolle-the-forrest-gump-of-spirituality
    https://en.wikipedia.org/wiki/The_Power_of_Now
    https://www.sloww.co/eckhart-tolle-a-new-earth-101/

     

    Share
  • அமெரிக்காவின் பகுத்தறிவுப் பகலவன்!

    அமெரிக்காவின் பகுத்தறிவுப் பகலவன்!

    -மேகலா இராமமூர்த்தி

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியானது, சுதந்தரச் சிந்தனைகளின் பொற்காலம் (The Golden Age of Free thought) என்று அமெரிக்காவில் அழைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் தோன்றிய குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்களில் ஒருவர்தாம் இராபர்ட் கிரீன் இங்கர்சால் (Robert Green Ingersoll).

    நியூயார்க் மாநிலத்திலுள்ள டிரெஸ்டென் (Dresden) எனும் ஊரில்,  புரோடஸ்டாண்ட் (Protestant) மதபோதகராக விளங்கிய ஜான் இங்கர்சாலுக்கும் (John Ingersoll), மேரி அம்மையாருக்கும் (Mary Ingersoll)  1833ஆம் ஆண்டு ஆகஸ்டு 11ஆம் நாள் மகனாய்ப் பிறந்த இராபர்ட் இங்கர்சால், தேர்ந்த வழக்கறிஞராகவும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், அனைத்திற்கும் மேலாக மூடநம்பிக்கைகளுக்குத் தீ மூட்டும் பகுத்தறிவுப் பகலவனாகவும் விளங்கி அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கோடு திகழ்ந்தவர் ஆவார்.

    அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிரான நிறவெறி கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த காலமது. கறுப்பர்களை அடிமைகளாய் நடத்திக் கொடுமைப்படுத்தும் அவலத்துக்கு எதிரான போராட்டங்களில் இராபர்ட் இங்கர்சாலின் தந்தை ஜான் இங்கர்சால் கலந்துகொண்டார். இனபேதம் பாராத மனிதநேயச் சிந்தனைகளைக் கொண்டிருந்ததாலேயே மதபோதகர் பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இவற்றையெல்லாம் கவனித்துவந்த சிறுவன் இராபர்ட் இங்கர்சாலின் மனத்தில் கிறித்தவ மதத்தின்மீதும் அதன் கவைக்குதவாப் பழமைவாதக் கோட்பாடுகளின்மீதும் குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

    குடும்பச்சூழல் காரணமாக இராபர்ட் இங்கர்சாலின் முறையான பள்ளிக்கல்வி சில ஆண்டுகளோடு முற்றுப்பெற்றுவிட்டது. எனினும், தாமாகவே முயன்று பல நூல்களைக் கற்றுத்தேர்ந்து தம் அறிவைப் பெருக்கிக்கொண்டார் அவர். இயல்பிலேயே நாவன்மை மிக்கவராக விளங்கிய இங்கர்சால், தம் வாழ்வை நடாத்துதற்கு நிலையான தொழிலொன்று தேவை என்பதை உணர்ந்து, வழக்கறிஞர்கள் இருவரிடம் முறையாகப் பயிற்சிபெற்று 1854இல் வழக்கறிஞரானார். தம் வாதத் திறமையால் வழக்கறிஞர்கள் பலரின் பாராட்டைப் பெற்றார் இங்கர்சால்.

    இச்சிறப்புகளால் இல்லியனாய் (Illinois) மாநில அட்டர்னி ஜெனரல் பதவி இங்கர்சாலைத் தேடிவந்தது. குடியரசுக் கட்சியில் (Republican Party) இணைந்து, ஓர் உண்மையான தொண்டனாக அரசியல் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் இங்கர்சால்.

    மதம், கடவுள் நம்பிக்கை, பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கான வாக்குரிமை குறித்தெல்லாம் புரட்சிகரமான முற்போக்குக் கருத்துக்களை அவர் முன்வைத்த காரணத்தினால் பழமைவாதத்திலும், பெண்களை இரண்டாந்தரக் குடிமக்களாய் நடத்தும் பிற்போக்குத்தனத்திலும் ஊறிப்போயிருந்த அமெரிக்காவில் அவரால் அரசியலில் பெரும் பதவிகளைப் பெறமுடியாமற் போய்விட்டது.

    இங்கர்சாலின் இறைக்கொள்கையைப் பற்றிக் குறிப்பிடுவதானால், கடவுளின் இருப்பைப் பற்றி அலட்டிக்கொள்ளாத ஓர் எதார்த்தவாதியாக (Agnostic) தம்மை அவர் அடையாளப்படுத்திக்கொண்டார். ” The great agnostic” என்றே அமெரிக்க மக்கள் அவரை அழைத்தனர். பகுத்தறிவுக்குப் பொருந்தாத மத நம்பிக்கைகள் குறித்த பகடியும் எள்ளலும் அவருடைய பேச்சுக்களில் துள்ளி விழுந்தவண்ணம் இருந்தன.

    ஒருமுறை பெரிய மண்டபம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார் இங்கர்சால். அவர் பொழிவைக் கேட்க வந்திருந்தவர்களில் ஒருவர் திடீரென்று எழுந்து, “அன்பரே! உமக்கு ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டா?” என்று வினவினார். இங்கர்சாலும் சற்றும் தயங்காமல் “ஐயா! எனக்கு ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டு; குறிப்பாக, சோப்புப் போட்டுக் குளிக்கும் ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டு” என்று சொன்னதுதான் தாமதம் கைதட்டல் விண்ணைப் பிளந்ததாம்! ஞான ஸ்நானம் (baptism) என்பது கிறித்தவ தேவாலயங்களில் குழந்தைகளுக்குப் பாதிரிமார்கள் செய்யும் புனிதச் சடங்கு; அதைத் தான் அவ்வாறு கிண்டல் செய்திருக்கின்றார் இங்கர்சால். பிறப்பால் ஒரு கிறித்தவராக இருந்தபோதும் அம்மதத்தில் பின்பற்றப்படும் பொருளற்ற சடங்குகளில் அவருக்கு நம்பிக்கையில்லை என்பதையே அவருடைய இந்த வேடிக்கைப் பேச்சு நிரூபிக்கின்றது.

    மோசஸ் செய்த சில தவறுகள் (Some Mistakes of Moses (1879)) என்ற தம்முடைய நூலில், கடவுளை நம்புகிறவன் ஏன் நம்பாதவனை வெறுக்கிறான்? நாத்திகன் கடவுளுக்கு ஏதாவது ஊறுசெய்கின்றானா? இல்லையே! அவனும் மற்றவர்களைப் போல சுக துக்கங்கள் உள்ள மனிதன் தானே? அவனுக்கும் மற்ற மனிதர்களுக்கு இருப்பதுபோல் அனைத்து உரிமைகளும் உள்ளனதாமே?

    கிறித்தவ தேவாலயங்களிடம்தான் சொர்க்க, நரகத்தின் திறவுகோல் இருப்பதுபோல் அவர்கள் நடந்துகொள்வதும், மதநம்பிக்கைகளை மறுப்பவர்களைப் பாவிகளாகப் பாவிப்பதையும், மதத்திலிருந்தே அவர்களை ஒதுக்கிவைப்பதையும் தொடர்ந்தால் இந்த உலகமே வெறுப்பாலும் வேதனையாலுந்தான் நிறையும். மனிதனை வெறுப்பதும், கடவுளை நேசிப்பதும் மதங்களின் வேடிக்கையான கொள்கைகளாக இருக்கின்றன.

    பைபிளும் மற்ற புத்தகங்களைப் போலத்தான்; ஏன் அவற்றைவிடவும் பயனற்றது; ஆனால் மதபோதகர்கள் அதனைப் பொதுவில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றுகூறிப் பைபிளிலுள்ள பல கதைகளையும் அவற்றின் கருத்துக்களையும் கண்டிக்கிறார்.

    தேவாலயப் பணியாளர்கள் பைபிளில் ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டிருப்பதைக் கிளிப்பிள்ளைபோல் ஒப்பிக்கவே பணியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். புதிய சிந்தனைகள் எவற்றையும் வெளிப்படுத்த அவர்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் சொல்கின்றவற்றையெல்லாம் எவ்வித ஆதாரங்களும் கேட்காமல் நம்பி நடப்பவனே உண்மையான கிறித்தவன் எனப்படுவான். இவ்வாறு மக்களிடம் மூடநம்பிக்கைகள் பெருகினால் என்னவாகும்? சோதிடத்துறை வளரும்; அறிவொளி பெருகினால்? மத நம்பிக்கைகள் தளரும்!

    என்னைப் பொறுத்தவரை, அறிவியலுக்கும் மதத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை; சொல்லப்போனால், அவை ஒன்றுக்கொன்று பெரும் பகையானவை என்பேன். மெதாடிஸ்ட் கணிதம் (Methodist mathematics), கத்தோலிக்க வானியல் (Catholic astronomy), பிரெஸ்பிடேரியன் தாவரவியல் (Presbyterian botany), பேப்டிஸ்ட் உயிரியல் (Baptist Biology) என எவையேனும் இருக்கின்றனவா? பின்பு எதற்காக மதக்கல்வி போதிப்பதற்கென்றே தனியாகக் கிறித்தவ மதவாதக் கல்லூரிகளை (sectarian colleges) நாம் உருவாக்கவேண்டும்?

    மதங்களுக்கும் பள்ளிகளுக்கும் மணமுறிவு (divorce) நடக்குவரை சிறந்த கல்விநிறுவனங்களை உருவாக்குவது முயற்கொம்பே. மதங்களின் வல்லாண்மையும் ஆதிக்கமும் இருக்குவரையில் பள்ளிகளில் அறிவியல் புறக்கணிப்பட்ட ஒன்றாகவே இருக்கும். ஒருநாள் வரும்! அன்று பழைய புனிதங்கள் கட்டுடைக்கப்பட்டு இயற்கையின் உண்மை ஏற்றுக்கொள்ளப்படும். என்று மதபோதகர்களையும், அறிவியலுக்குப் புறம்பான மதநம்பிக்கைகளையும் மிகத் துணிச்சலாக விமரிசிக்கின்றார் இங்கர்சால்.

    ஷேக்ஸ்பியர், அமெரிக்காவின் மறுகட்டமைப்பு, மனிதநேயம், மதங்களின் நிலை, குடும்ப அமைப்பின் அவசியம், பெண்விடுதலை என்று அனைத்துத் தலைப்புக்களிலும் மணிக்கணக்கில் பேசக்கூடிய பேராற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார் இங்கர்சால். மதங்கள் குறித்த அவருடைய விமரிசனங்களை வைத்தே அமெரிக்கப் பத்திரிகைகள் அவரை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியபோதும், மக்கள் மத்தியில் அவர் சொல்வாக்கிற்கிருந்த செல்வாக்கை அவற்றால் குறைக்கமுடியவில்லை. மாறாக, அவருடைய கட்டணச் சொற்பொழிவுகளுக்கும் மக்கள் அமோக ஆதரவு கொடுத்துப் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர் என்பது வரலாறு.

    இந்நாளில் சிலர் தம்முடைய சொற்பொழிவுகளுக்குக் கட்டணம் வசூல் செய்வதை விமரிசிப்போர், இஃதொன்றும் விந்தையான வழக்கமன்று! இங்கர்சால் காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்துவரும் முந்தைய வழக்கமே என்று அறிதல்வேண்டும்

    தம் மேடைப்பொழிவுகளின் மூலம் மட்டுமே இங்கர்சாலுக்கு ஆண்டுதோறும் கிடைத்துவந்த வருவாய், அன்றைய அமெரிக்க அதிபரின் ஆண்டு வருவாயைக் காட்டிலும் இருமடங்கு அதிகமானது. வேறுவிதமாக இதனைக் கணக்கிட்டுச் சொல்வதென்றால், அமெரிக்காவின் மிகச்சிறந்த சொற்பொழிவாளர்கள் இருபத்தைந்து பேர் ஒரே சமயத்தில் எவ்வளவு சம்பாதிப்பார்களோ அவ்வளவு வருமானம் இங்கர்சால் ஒருவருக்கே கிடைத்துவந்தது. ஆனால் பணத்தால் பெருமை கொள்ளவில்லை இங்கர்சால்! வாய்த்திறமையினால் தாம் ஈட்டியதைக் கைத்திறமையால் வரையாது வழங்கிய கொடையாளராக அவர் திகழ்ந்தார்.

    மனிதன், மங்கை, குழந்தை, அவர்தம் சுதந்தரம் (The Liberty of Man, Woman and Child) என்ற தலைப்பில் இங்கர்சால் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதில் இம்மூவருடைய சுதந்தரம் குறித்தும் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் அக்காலத்துக்கு மட்டுமன்றி எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை.

    நங்கையர்தம் நற்சுதந்தரம் பற்றிக் குறிப்பிடும் இங்கர்சால், பெண்கள் ஒருகாலத்தில் அடிமைகளுக்கெல்லாம் அடிமைகளாக இருந்திருக்கின்றார்கள். என்னுடைய எண்ணப்படி, பெண்கள் கேவலமான அடிமைத்தனத்திலிருந்து திருமணம் செய்துகொண்டு வாழும் சுதந்தரத்தை அடையவே பல இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும். ஆதலால், மானிட சமுதாயத்திலேயே நான் மிகவும் புனிதச் சடங்காகக் கருதுவது திருணத்தைத்தான் என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அடுக்களையின்றி மானிட சமுதாயத்தின் முன்னேற்றமில்லை; குடும்பச் சுற்றமின்றி வாழ்வும் பயனில்லை. பல நல்ல குடும்பங்கள் சேர்ந்ததுதான் ஒரு நல்ல அரசாங்கம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு நல்ல அரசாங்கத்தின் கிளையாக இருப்பது குடும்பம். இந்தக் குடும்ப அமைப்பைச் சீரழிக்கச் செய்யப்படும் எந்த முயற்சியும் பேய்த்தன்மை வாய்ந்தது; களங்கமுடையது. எனக்குத் திருமண வழக்கத்தில் மிகுந்த நம்பிக்கையுண்டு. இந்த மணச்சடங்கை, திருமணம் என்னும் அமைப்பை வசைபாடுகின்ற நீள்முடி வளர்த்த ஆடவர்கள், குட்டைக் கூந்தலோடு வலம்வரும் பெண்கள் போன்றோரின் கருத்துக்களை நான் மிகக் கேவலமாகக் கருதுகின்றேன் என்கிறார் அழுத்தந்திருத்தமாக.

    ”திருமணமே பெண்ணை அடிமைப்படுத்துகின்றது; உடைத்தெறிய வேண்டிய தளை அது!” என்று தமிழகத்தின் பகுத்தறிவாளர்கள் முச்சந்திதோறும் முழக்கமிட்டிருக்க, மேனாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனையாளரும், தமிழகப் பகுத்தறிவு இயக்கங்களுக்கு அறிவுக்கொடை நல்கியவர்களில் முக்கியமான ஒருவராக அறியப்படுபவருமான இங்கர்சாலோ, அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அடிமைத்தனத்திலிருந்த மகளிர்க்கு விடுதலை நல்கியதே திருமணந்தான்! குடும்ப அமைப்பினும் உயர்ந்தது வேறில்லை என்று அதனை விதந்தோதுவதைக் காண்க!

    ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பிய நூலும்,

    பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
    ஐயர் யாத்தனர் கரணம் என்ப
    (தொல்” கற்பியல் – 4) என்றுரைப்பதன் வாயிலாகத் தமிழ்ச் சமூகத்தில் கட்டுப்பாடற்ற ஆண் பெண் உறவுகளால் குற்றங்களும் ஒழுக்கக்கேடுகளும் மலிந்துவிட, அவற்றைத் தடுக்கவேண்டியே திருமணம் எனும் நடைமுறை அறிவிற் சிறந்த ஆன்றோரால் ஏற்படுத்தப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதை எண்ணுக.

    அடுத்து, குழந்தைகள் சுதந்தரம் பற்றிக் குறிப்பிடும் இங்கர்சால்,

    பெரியவர்களுக்குள்ள உரிமைகள்போலவே குழந்தைகளுக்கும் உரிமைகள் உண்டு. ஆகவே குழந்தைகளை நாம் மனிதப் பிறவிகள் எனக் கருதி நடத்தவேண்டும்; மிருகத்தனமாக நடத்தக் கூடாது. தாங்களே சுயமாகச் சிந்திக்கின்ற உரிமையை அவர்களுக்கு நாம் நல்கவேண்டும். குடும்பத்திலே சனநாயகம் நிலவவேண்டும் என்பது என் நம்பிக்கை. இந்தச் சகத்தில் மகத்தானது ஒன்று இருக்குமானால் அஃது எல்லாரும் சமமாக நடத்தப்படுகின்ற ஒரு குடும்பமே என்கிறார்.

    இசையைவிடக் குழந்தைகளின் பேச்சு எனக்கு மிகுந்த இன்பத்தைத் தருகின்றது என்றார் இங்கர்சால். இக்கருத்து,

    குழலினுது யாழினிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்
    (குறள் – 66) என்ற ஐயன் வள்ளுவனின் பொய்யாமொழியை நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றது.

    பழமைவாதிகளைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் இங்கர்சால், எல்லா மனிதர்களும் ஒரே மாதிரிச் சிந்திக்கவேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். உலகத்தில் எந்திரத் தொழில்நுட்பத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்ட பின்பும்கூட, இரண்டு கடிகாரங்கள் ஒரே மாதிரி ஓடுவதில்லை; ஒரே நேரத்தைக் காட்டுவதில்லை. அப்படியிருக்க, அறிவிலும், ஆற்றலிலும், கல்வியிலும், பொருளாதாரத்திலும், சுற்றுச்சூழலிலும், ஆசையிலும் வேறுபட்டிருக்கும் மானுடர் அனைவரும் ஒரே மாதிரிச் சிந்திக்கவேண்டும் என்று எப்படி நீங்கள் வற்புறுத்தமுடியும்?

    எல்லையற்ற ஆற்றலுள்ள கடவுள் ஒருவர் இருந்து, அவர் நம்மைப் படைத்திருப்பாராகில், நாம் அனைவரும் ஒரே மாதிரியே சிந்திக்கவேண்டும் என்பது அவருடைய உள்ளக்கிடக்கையாயின், அவர் ஏன் ஒருவருக்குக் குறைவான அறிவையும் மற்றொருவருக்கு அதிகமான அறிவையும் கொடுத்திருக்க வேண்டும்? என்று வினவும் இங்கர்சால், மதத்தின் பெயரால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடந்த அட்டூழியங்களை நினைந்து மனம் வருந்துகின்றார். அவரவர் விருப்பப்படி வாழும் உரிமை மாந்த சமூகத்தில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். எதையும் யார்மீதும் திணிக்கும் உரிமை யாருக்குமில்லை என்கிறார்.

    நெஞ்சில் நேர்மையும், வாழ்வில் தூய்மையும் பிறர்க்கென இரங்கும் தாய்மைக் குணமும் கொண்டவராய் வாழ்ந்து, தம்முடைய புரட்சிகரமான கருத்துக்களாலும் மனிதநேயமிக்க அணுகுமுறைகளாலும் அமெரிக்க மக்களைத் தம் வயப்படுத்திய இராபர்ட் இங்கர்சால், 1899ஆம் ஆண்டு தம்முடைய 65ஆம் அகவையில் இதயச் செயலிழப்பு நோயால் (congestive heart failure) உயிரிழந்தார்.

    மூடநம்பிக்கையே அடிமைத்தனத்தின் குழந்தையாகும். சுயமாகச் சிந்தனை செய்தால் மட்டுமே நமக்கு உண்மை புலப்படும். எல்லாரும் சுயமாய் எண்ணவும் எண்ணியதை எவ்விதத் தடையுமின்றி வெளியில் சொல்லவும் உரிமை பெற்றுவிடுவார்களேயானால் ஒவ்வொருவருடைய மூளையிலிருந்தும் சிறந்த கருத்துக்கள் தாமே வெளிவரும். பிறகு இந்த உலகமே அறிவுக் களஞ்சியத்தால் நிரம்பியிருக்கும் என்றார் இங்கர்சால்.

    இறைவனிடம் தொழுகை செய்யும் உதடுகளைவிடத் துயருற்றோரின் அழுகை போக்க உதவும் கரங்கள் உன்னதமானவை என்பது இங்கர்சாலின் கருத்து. ஆதலால் நாமும் ஒல்லும் வகையெல்லாம் அல்லலுற்றோர்க்கு உதவுவோம்! சாதி மத பேதமின்றி அனைவரிடத்தும் அன்பு பாராட்டுவோம்! அமெரிக்காவின் பகுத்தறிவுப் பகலவனாம் இங்கர்சால் வகுத்தளித்த நல்லறிவுப் பாதையில் பயணிப்போம்! 

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. https://en.wikipedia.org/wiki/Robert_G._Ingersoll
    2. https://www.britannica.com/biography/Robert-G-Ingersoll
    3. https://www.gutenberg.org/files/38813/38813-h/38813-h.htm#Alink0009
    4. வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு – 12

     

    Share
  • நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ (Sun Seeds) – கவிதைத் தொகுதி வெளியீடு

    நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ (Sun Seeds) – கவிதைத் தொகுதி வெளியீடு

    நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ – கவிதைத் தொகுதி வெளியீடு

    தர்பார், சர்க்கார், என்னை அறிந்தால், ஐ, சர்வம் தாளமயம், தங்க மீன்கள் போன்ற தமிழ்ப்படங்களுக்கு சப்டைட்டில் செய்த நந்தினி கார்க்கி, Sun Seeds (சூரிய விதைகள்) என்ற பெயரில் ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

    கவிஞர் வைரமுத்துவும் அவரது மனைவி பொன்மணி வைரமுத்து மகன்கள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து என்ற கவிதைக் குடும்பத்தில் இப்போது அவரது மருமகள் மற்றும் மதன் கார்க்கியின் மனைவி நந்தினி கார்க்கி ஒரு ஆங்கிலக் கவிஞராய் உதயமாகியுள்ளார்.

    இருட்டில் இருந்து விடியலுக்கு என்ற இரு வழிப் பயணத்தை மேற்கொள்கிறது இந்த நூல். இயற்கையின் அழகை, மாற்றங்களை ஒரு வழியில் கண்டு களித்து மனதின் மேடு பள்ளங்களில் இன்னொரு வழியில் பயணம் செய்கின்றன நந்தினி கார்க்கியின் கவிதைகள்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணி புரிந்து, ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்த தன் அனுபவங்களின் சாறு இந்த நூல் என்று நூற்குறிப்பில் நந்தினி கார்க்கி எழுதியுள்ளார். இவர் கடந்த ஓராண்டாக தினமொரு சங்கப்பாடலை பற்றிய விளக்க உரையை இணையவழி பாட்காஸ்ட் செய்து வருகிறார்.

    இந்தக் கவிதைத் தொகுப்பை நோஷன் பிரஸ் வெளியிட்டுள்ளது. அமேசான், அமேசான் கிண்டில் போன்ற தளங்களில் வெளியிடப்படும் இந்த நூல் ஆங்கிலக் கவிதை விரும்பிகளுக்கு மட்டும் விருந்தளிக்காமல் மனம் தளர்பவர்களுக்கும் மருந்தளிக்கும் என்று நம்புகிறார் நந்தினி கார்க்கி.

    Share
  • எமக்கும் தொழில் எழுத்து

    எமக்கும் தொழில் எழுத்து

    பாஸ்கர் சேஷாத்ரி

    எழுதுவது சிந்திப்பின் பெரிய வெளிப்பாடு. உணர்வுகளை வெளிப்படுத்த எவ்வளவு வகையான ஜன்னல்கள் இருப்பினும் எழுத்தின் மூலம் வெளியாகும் விஷயத்திற்குத் தனித்துவம் உண்டு. பெரும் கோபத்தையும், அழகுணர்ச்சியையும் வேதனைகளையும் ஆச்சர்யங்களையும் அவஸ்தையையும் சொல்ல, எழுத்தைத் தாண்டிய வலிமை எதற்குமில்லை. இதர கலைஞர்கள் என் கருத்தில் இருந்து மாறுபடலாம். ஆனாலும் இந்த உணர்ச்சி, வலியை, ஆழ்மனச் சிந்தனையை வார்த்தைகளில் வடிக்கும் போது அது போக வேண்டிய இடத்திற்கு மிகச் சரியாய்ப் போய்ச் சேருகிறது.

    எழுத்து என்ன செய்யும்? 

    படிப்பவன் மனசைப் பிசைய வைக்கும். அவன் மனத்தின் ஆழத்திற்கு இட்டுச் செல்லும். மனத்தின் விகாரங்கள் எழுத்தால் பதறும். ஆச்சரியங்களையும் அவஸ்தைகளையும் படிப்பவர் மனத்தில் ஊடுருவச் செய்து, அவரோடு இணைய முடியும். இந்த இணைதல்தான் வெற்றிக் கனி.

    எனக்குத் தெரிந்து ஒரு விஷயத்தை எதிராளியிடம் பகிரும்போது வரும் நிறைவும் மனத்தெளிவும் எழுதிய கருத்தில் மேலும் நாட்டம் கொள்ள வைக்கும். எழுதுவதற்கு அனுபவங்களைத் தேடவே வேண்டாம். நிஜமான எழுத்தில் படைப்பாளியின் சத்தியம் பிரகாசிக்கிறது .

    எழுதுங்கள். தினசரி எழுதங்கள். இந்த மனம், மனிதர்கள், குழந்தைகள் என எல்லாவற்றிலும் வாழ்க்கை ஒளிந்துகொண்டு இருக்கிறது.

    எழுதும் சிந்திப்பை விட்டு, நிகழ்வுகளை இயல்பாய்ப் பார்க்க முடியுமா? முடியும். அப்படியே பாதிப்பு இருப்பினும் அது பாதகமில்லை.

    எழுத்து வாழ்வை தேட… தேடுவது எது எனப் புரியாமலே தேடுவது தான் வாழ்க்கையின் சிறப்பு. தேடினால் கிடைக்காமல் போகும் விஷயங்கள் பலவுண்டு. தேடுபவன் முடிவில் காணாமல் போக வேண்டும். காணாமல் போய் நிற்பது இங்கு இலக்கு. காணாமல் போன பின், எழுத்து வேறு எழுத்தாளன் வேறு இல்லை.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-41

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-41

    41. கல்லாமை

    குறள் 401:

    அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
    நூலின்றிக் கோட்டி கொளல்

    நெறய புத்தியக் கொடுக்க நூல்களப் படிக்காதவன்  படிச்சவங்க சபையில பேசுதது கட்டம் வரையாம தாயக்கட்டம் ஆடுததுக்கு சமானம்.

    குறள் 402:

    கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
    இல்லாதாள் பெண்காமுற் றற்று

    படிக்காதவன் ஒண்ணச் சொல்ல விரும்புதது முலை ரெண்டும் இல்லாதவ பெண் தன்மய விரும்புதது கணக்கா ஆவும் .

    குறள் 403:

    கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
    சொல்லா திருக்கப் பெறின்

    படிச்சவங்க முன்ன ஒண்ணும் பேசாம அமைதியா இருந்தாம்னா  படிக்காதவங்களும் ரொம்ப நல்லவங்களாத்தான் நெனைக்கப்படுவாக.

    குறள் 404:

    கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
    கொள்ளார் அறிவுடை யார்

    படிக்காதவனுக்கு பொறப்பிலயே புத்தி இருந்தாலும் படிச்சவுக அவன ஒசந்தவன் னு  ஒப்புக்கிடமாட்டாங்க.

    குறள் 405:

    கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
    சொல்லாடச் சோர்வு படும்

    படிக்காதவன் தன்னைய அறிவாளி னு காட்டிக்கிட படிச்சவங்க முன்ன நடிச்சாம்னா அவன் பேசும்போது அவனோட பொய்வேசம் கலஞ்சிபோயிரும்.

    குறள் 406:

    உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
    களரனையர் கல்லா தவர்

    படிக்காதவங்க உசிரோடஇருக்காங்க னு சொல்லிக்கிடலாம் அம்புட்டுதான். அவங்க வெளச்சலுக்கு ஒதவாத களர்நிலம் கணக்காதான்.

    குறள் 407:

    நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
    மண்மாண் புனைபாவை யற்று

    பாக்குததுக்கு அழகா மட்டுமே இருந்து படிச்சு தெளிவான புத்தியப்  பெறாதவங்க கண்ணக் கவருத மண் பொம்ம கணக்காதான் மதிக்கப்படுவாங்க.

    குறள் 408:

    நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
    கல்லார்கண் பட்ட திரு

    படிக்காத முட்டாள் கிட்ட இருக்க சொத்து நல்லவங்க கிட்ட இருக்க வறுமய விட கூடுதலா கொடும செய்யும்.

    குறள் 409:

    மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
    கற்றா ரனைத்திலர் பாடு

    படிக்காதவர் மேல் சாதில பொறந்திருந்தாலும் கீழ் சாதில பொறந்திருந்தாலும் படிச்சவர் அளவுக்கு பெரும இல்லாதவரு தான்.

    குறள் 410:

    விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
    கற்றாரோ டேனை யவர்

    மனுசங்களுக்கும் மிருகங்களுக்கும் என்ன வேத்துமையோ அதே தான் ஒசந்த நூல்கள படிச்சவங்களுக்கும் படிக்காதவங்களுக்கும் இருக்கு.

    (அடுத்தாப்லயும் வரும்…

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-37

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-37

    37. அவா அறுத்தல்

    குறள் 361:

    அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
    தவாஅப் பிறப்பீனும் வித்து

    எல்லா உசிருக்கும் எல்லாக் காலத்திலயும் ஓயாம வருத பிறவித் துன்பத்த உண்டாக்கும் விதை தான் ஆச.

    குறள் 362:

    வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
    வேண்டாமை வேண்ட வரும்

    ஒண்ண விரும்புததுக்கு நெனைக்கவன் பொறக்காம இருந்திருக்கலாமோன்னு ரோசன (யோசனை)  பண்ணுத அளவு தொயரம் ஆசய ஒழிக்கலேனா வரும்.

    குறள் 363:

    வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    ஆண்டும் அஃதொப்ப தில்

    எதிலயும் ஆச இல்லாம இருக்குததுபோல செல்வம் இந்த ஒலகத்துல இல்ல. மத்த எங்கயும் கூட இதுக்கு ஒப்பா ஒண்ணுமில்ல.

    குறள் 364:

    தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
    வாஅய்மை வேண்ட வரும்

    மனத் தூய்மை னு சொல்லுதது மனசுல ஆச இல்லாம இருக்கது. ஆச இல்லாம இருக்கது உண்மைப் பொருள விரும்புதப்போ உண்டாவும்.

    குறள் 365:

    அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
    அற்றாக அற்ற திலர்

    எல்லா ஆசயயும் விட்டவர தான் துறவி ங்குதோம்.  ஆசய முழுசும் விடாதவரு உண்மயான துறவி ஆவமாட்டார். .

    குறள் 366:

    அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
    வஞ்சிப்ப தோரும் அவா

    ஒருத்தன வஞ்சித்து கெடுக்குதது ஆச. அதனால ஆசைக்கு அடிமையாவக் கூடாது னு நெனச்சி பயந்து வாழணும்.

    குறள் 367:

    அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
    தான்வேண்டு மாற்றான் வரும்

    ஒருத்தன் கெட்டுப்போவாம வாழணும்னு நெனச்சாம்னா அவன் ஆசப்படுத கொணத்த மொத்தமா ஒழிச்சுப் போடணும்.

    குறள் 368:

    அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
    தவாஅது மேன்மேல் வரும்

    ஆச இல்லாதவுகளுக்கு துன்பம் வாராது. ஆச உண்டாயிடுச்சின்னா அதுக்கு பொறத்தாலேயே துன்பம் ஓயாம வளய வரும்.

    குறள் 369:

    இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
    துன்பத்துள் துன்பங் கெடின்

    பெருசா துன்பத்த தருத ஆச இல்லாமப் போனா சந்தோசம் சேந்தாப்ல வந்துக்கிட்டேயிருக்கும்.

    குறள் 370:

    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
    பேரா இயற்கை தரும்

    காலத்துக்கும் முடிவில்லாம இருக்க ஆசய ஒருத்தன் விட்டுபோட்டாம்னா அது அவனுக்கு நெலச்சி நிக்குத மகிழ்ச்சியான வாழ்க்கயக் கொடுக்கும்.

    (அடுத்தாப்லயும் வரும்…

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36

    36. மெய்யுணர்தல்

    குறள் 351:

    பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு

    பொய்யான ஒண்ண நெசம் னு நெனச்சு நம்பி வாழுதவன் வாழ்க்க சிறப்பா இருக்காது.

    குறள் 352:

    இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு

    மனசு கொளம்பாம எது உண்ம எது பொய் னு புரிஞ்சிக்கிடுத தன்மைய அடஞ்சவனுக்கு துன்பம் வெலகி மகிழ்ச்சி வந்து சேந்துகிடும்.

    குறள் 353:

    ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
    வான நணிய துடைத்து

    மனசுல ஐயமில்லாம உண்மப் பொருளத் தெரிஞ்சுக்கிட்ட மனுசங்களுக்கு அவுக வாழுத பூமிய விட வான ஒலகம் அருகாமையில இருக்கும்.

    குறள் 354:

    ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
    மெய்யுணர் வில்லா தவர்க்கு

    உண்மையக் கண்டுபிடிக்கத் தெரியாதவுக அவுகளோட மனச அடக்கக் கத்துக்கிட்டிருந்தாலும் அதனால பிரயோசனம் இல்ல.

    குறள் 355:

    எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு

    எந்தப் பொருளுன்னாலும் பாக்குததுக்கு எப்டி இருந்துச்சின்னாலும் அதப் பத்தின  நெசத்த தெரிஞ்சிக்கிடதுதான் மெய்யுணர்வு

    குறள் 356:

    கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
    மற்றீண்டு வாரா நெறி

    கத்துக்கிட வேண்டியதெல்லாம் கத்துக்கிட்டு உண்மப் பொருள அறிஞ்சிக்கிட்டவங்க மறுபடி பொறக்காம இருக்குத வழிய அடையுவாக.

    குறள் 357:

    ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

    ஒருத்தன் உண்மய ஆஞ்சு அறிஞ்சு உறுதியா உணந்தாம்னா அவனுக்கு திரும்பயும் பொறப்பு இருக்கு னு நெனைக்க வேண்டாம்.   .

    குறள் 358:

    பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
    செம்பொருள் காண்ப தறிவு

    பொறப்பு ங்குத அறியாமைய நீக்குததுக்கு அடுத்த பொறப்பு இல்லாம செய்யுத முக்தி ங்குத நெலைய அடைய ஒதவும் ஒசந்த பொருள கண்டுகிடதுதே மெய்யுணர்வு.

    குறள் 359:

    சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
    சார்தரா சார்தரு நோய்

    எல்லாப் பொருளுக்கும் எடமா இருக்குத மெய்ப்பொருள உணந்து ஒட்டுதல் இல்லாம வாழ்ந்தோம்னா நமக்கு வருத துன்பங்களும் ஒட்டாம வெலகிப்போவும். .

    குறள் 360:

    காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
    நாமங் கெடக்கெடு நோய்

    விருப்பு, வெறுப்பு, அறியாம இந்த மூணுக்கும் எடம் கொடுக்காதவங்கள நெருங்குத துன்பம் அழிஞ்சு போவும்.

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்- 35

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-35

    35. துறவு

    குறள் 341:

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் அலன்

    ஒருத்தன் எது எதுலேந்தெல்லாம் ஆசப் படாம வெலகுதானோ அந்தந்த பொருள் னால ஏற்படுத துன்பம் அவன அண்டாது.

    குறள் 342:

    வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
    ஈண்டியற் பால பல

    துன்பம் அண்டாம வாழணும்னா எல்லாம் நம்ம கிட்ட இருக்குதப்பவே அது மேல இருக்க ஆசய உட்டுறணும். உட்டபொறவு நமக்கு இந்த ஒலகத்துல நெறய மகிழ்ச்சி கெடைக்கும்.

    குறள் 343:

    அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
    வேண்டிய வெல்லாம் ஒருங்கு

    நம்மளோட அஞ்சு புலனை (பாக்குதது, கேக்குதது, சுவைக்குதது, வாசம் பிடிக்குதது, தொடுத உணச்சி) அடக்கி அதுக ஆசப்படுத எல்லாத்தையும் சேந்தாப்ல விட்டுப்போடணும்,

    குறள் 344:

    இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
    மயலாகும் மற்றும் பெயர்த்து

    துறவிங்களுக்கு எதுலயும் ஆச இருக்கக் கூடாது. ஏதாச்சும் மேல இருந்திச்சின்னா அது திரும்ப புத்திய கெடுத்துப் போடும்.

    குறள் 345:

    மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
    உற்றார்க் குடம்பும் மிகை

    இனிமே பொறக்கவே கூடாது னு நெனைக்க துறவிங்களுக்கு அவுக ஒடம்பே ஒரு சுமை தான். அதுக்கு மேலயும் வேற ஒட்டுஒறவு எதுக்கு?

    குறள் 346:

    யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
    குயர்ந்த உலகம் புகும்

    ஒடம்ப ‘நான்’ னும் சம்பந்தமில்லாத ‘பொருள’ எனது னும் நெனக்க அகராதிய ஒழிச்சவன் தேவர்கள விட ஒசந்த நெலய அடையுவான்.

    குறள் 347:

    பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
    பற்றி விடாஅ தவர்க்கு

    நான்,  என்னோடது ங்குத ஆசையில ஒட்டுதல் வச்சிக்கிட்டு விடாதவங்கள  துன்பமும் விடாம வந்து ஒட்டிக்கிடும்.

    குறள் 348:

    தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
    வலைப்பட்டார் மற்றை யவர்

    அரைகொறயா இல்லாம ஆசய முழுக்க உட்டவங்க தான் ஒசந்த நெலய அடையுவாங்க. அப்டி செய்யாதவங்க அறியாம ங்குத வலைக்குள்ளார சிக்கிக்கிடுவாங்க.

    குறள் 349:

    பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
    நிலையாமை காணப் படும்

    சந்தோசத்துலயும் துக்கத்துலயும் மனசு ஒட்டாம ஒண்ணுபோல வச்சிருந்தாத்தான் பிறவித்துன்பம் ஒழியும்.  இல்லன்னா இந்த ரெண்டும் மாறி மாறி வந்து ஒரு நெலையில இல்லாம சீரளிக்கும்.

    குறள் 350:

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு

    எதிலயும் ஒட்டு ஒறவு இல்லாம இருக்க கடவுள் மேல ஆச வைக்கணும். அவர் மேல ஆச வைக்குதது நம்மளோட எல்லா ஆசையயும் விட்டு ஒழிக்கத்தான்.

    (அடுத்தாப்லயும் வரும்…..

    Share
  • கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி

    சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி

    புதுவை அருகு  திருவாண்டார் கோயில் எனும் ஊரில் அமைந்த பஞ்சநதீசுவரர் கோயிலின் தனித்துக் கிடக்கும் கற்பலகையில் உள்ள 18ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட  கல்வெட்டு.

    1. விளம்பிஸ்ரீ_ _ _
    2. மாதம் 10 தேதி நயினார்
    3. வசவப்ப மழவராயர்
    4. திருவய்யாறுடை
    5. ய நயினார் கோயில்
    6. வந்தேறு குடியளு
    7. க்கு கட்டளை விட்டபடி
    8. திருவாண்டார் கோயி
    9. லில் குடியிலிபா
    10. ழாக இருக்கவல்
    11. அண்ணமாரை
    12. யன் குடியேற்
    13. றிக் கொள்ள சொல்
    14. விருத்தகை இரு
    15. க்கையில் தம் கு
    16. டியளுக்கு கட்டளை
    17. இட்டபடி கையிகோளர்
    18. வியாபாரியள் உண்
    19. டான பலபட்டடை
    20. காசவற்கத்துக்கும்
    21. குடியளுக்கும் இவரு
    22. ஷம் ஒன்றுக்கு
    23. மானியம். அதுக்கு
    24. மேல் மாதம் ஒன்றுக்
    25. கு அரைக் கட்டணமு
    26. ம் ஆயத்துக்கு மா
    27. தம் மூன்று காசு

    விருத்தகை – வேண்டுகோள்; பலபட்டடை – வணிகர் மற்றும் கைத் தொழில் செய்வோர் வரி; காசவற்கம் – வரியை நாணயமாக செலுத்தும் கைத்தொழிலோர், வணிகர்; ஆயம் – நிர்வாகம் வரி.

    விளக்கம்: விளம்பி ஆண்டு 16 ஆம் நூற்றாண்டில் 1539 & 1599 ஆகிய ஆண்டுகளில் நிகழ்கின்றது. வசவப்ப மழவராயர் கட்டளைப்படி பஞ்சநதீசுவரர் கோயில் அமைந்த திருவாண்டார் கோயில் ஊரில் வந்து குடியேறும் குடிகளுக்கு இட்ட கட்டளை. திருவாண்டார் கோவிலில் குடியில்லாத வறிதாக இருக்கின்ற நிலங்களில் அண்ணமாரையன் குடியேற்றிக் கொள்ளச் சொல்லி வேண்டுகோள் தெரிவித்திருந்தபடி தம் குடிகளிடம் கட்டளையிட்டபடி கைக்கோள வணிகர்கள் உள்ளிட்ட பல தொழில் செய்வோர், வரிகட்டும் வணிகர் உள்ளிட்ட குடியேறும் குடிகள் இவ்வாண்டு மட்டும் மானியம் பெறலாம். அதன்பின் மாதம் ஒன்றுக்கு அரைக் கட்டணமும் நிர்வாகத்திற்கு மாதம் மூன்று காசும் செலுத்த வேண்டும்.

    இந்நாளைய நகர வரி போல் உள்ளது, அந்நாளைய ஆயம். பண்டு மக்கள் அதிக வரிச்சுமைக்கு ஆளாகி இருந்தனர். அதிலும் குறிப்பாக நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்ட முடியாத அளவிற்கு அதிக வரிச்சுமை.

    பார்வை நூல்: வரலாற்றில் திருவாண்டார் கோயில், வில்லியனூர் புலவர் ந. வேங்கடேசன்

    புதுவை காரைக்கால் அருகு மேல்பொன்பேத்தி ஊரில் தனியார் வீட்டின் வாயிற்படியில் உள்ள கற்பலகையில் பொறித்த  16 ஆம்  நூற்றாண்டு 20 வரிக் கல்வெட்டு. இந்தக் கோட்டுச்சேரி, காரைக்காலிலிருந்து பொறையாறு செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

    1. ஆங்கீர ஆண்டு வைய்யாசி 10ந் தேதி
    2. ஸ்ரீமதுராயச _ _ _ _ _ ருவர் அய்யன் கா
    3. ரியத்துகே _ _ _ _ _ தவதரையர்
    4. கோட்டுச்சேரி பட்டணவர் செங்
    5. கணச்செட்டி எறையச் செட்டி ஆ
    6. லத்துடைய நம்பி அறம்[வ]ளத்த
    7. நம்பி உள்ப்பட்டாற்கு குடுத்த ச
    8. றுவ மானியப் பட்டையம்
    9. இந்த ஊர்ப் பட்டணச்சேரி வரு
    10. ஷம் ஒன்றுக்கு அய்யன் கட்டளை
    11. பொன் அறுபது இந்தக் கட்டளை
    12. இட்ட[தி]ல் தரும் பொன் அறுபதுக்கு
    13. ள்ளே இந்த ஊரில் பரவை மீனு
    14. [ம்] பட்டணச்சேரி _ _ _ _ _ த்துடநே சே
    15. [ர்]ந்தபடியாலே [நா]ளது முதல் சந்தி
    16. ராதித்தவரையும் கோட்டுச்சேரி பரவை
    17. மீன் உள்பட பட்டணவரே அனு
    18. பவித்துக் கொள்ளவும் யிந்த மாநி
    19. யத்தை இயாதொருவ_ _ _ _ _
    20. அழித்தவன்

    பட்டணவர்–மீனவச் செட்டியார்  அய்யன் கட்டளை – அய்யனுடைய  நில எல்லை பரவை மீன் – கடல் மீன்

    விளக்கம்: 18ஆம் நூற்றண்டில் ஆங்கிர ஆண்டு கி.பி. 1742-1743 இல் நிகழ்கின்றது. கோட்டுச்சேரி பட்டணவரான செங்கணச் செட்டி, எறையச்செட்டி, ஆலத்துடைய நம்பி, அறம்வளர்த்த நம்பி உள்ளிட்ட நால்வருக்கு கொடுத்த சர்வமானிய பட்டயம் யாதெனில் அய்யன் கட்டளை வரை உள்ள பட்டணச்சேரியில் ஆண்டு ஒன்றுக்கு 60 பொன் ஓபோ கட்டவேண்டும். இப்படி தரும் பொன் அறுபதுக்கு கடல்மீனை பிடிக்கும் உரிமையை இந்த நால்வரே அனுபவிப்பாராக என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டணவர் 12ஆம் நூற்றாண்டில் துணி, ஆடை நெய்து விற்றுவந்தனர் என்று தெரிகின்றது. 18 ஆம் நூற்றாண்டில் மீன் விற்க வந்துவிட்டனர்.

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்                       S. Kuppusamy & G. Vijayavenugopal.

    திருப்புவனை வரதராஜ பெருமாள் கோயில் மேற்கு வராந்தா திருச்சுற்று மதில் 10 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ பூமாது புணரப் புவிமாது விளங்க நாமாது வி[ளங்க] ஜயமாது மகிழத் தந்திரு பாதமலர் மன்நவர் சூட மந்நிய வுரிமையில் மணிமுடிசூடிச் செங்கோல் செந்று திசை தொறு நடப்ப வேங்கலி  நீங்க மெய்யறந் தழைப்பக் கலிங்க மிரியக் கடம
    2. லை நடத்தி வலங்கோளாழி வரையாழி [ந]டப்ப இருசுடரளவும் ஒருகுடை சுழற்றச் செம்பொன் வீரஸிம்ஹாஸனத்து முக்கோக் கிழாநடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபந்மரான த்ரி(பு)ஹுவ[ன]ச் சக்கரவத்தி
    3. கள் ஸ்ரீ விக்கிரம சோழ [தேவர்]க்கு யாண்டு ஒன்பதாவது ராஜராஜ வளநாட்டு வீராவதார வளநாட்டு ப்ரஹ்மதேயம் [த்ரி]புவன மாதேவிச் சதுப்பேதி மங்கலத்து [ந]டுவிற் கோயில் ஸ்ரீவீரநாராயண விண்ணகராழ்வார்க்கு இர _ _ _ _ _
    4. ணவர் ப்ரஹ்மவைஸ்வநு[க்]கு ஜனித்த [ப்ரித்ரஷ்ட] ஆயோஹவாரானப் பற்றுள்ணர்கு உபநயாநாதி கருமங்களுக்கும் தேவர்களுக்கு  [த்வ]ஜ படமும் சாத்தியருளத் திருப்பரிசட்டங்களும் ராஜாக்களுக்குச் சாத்தியருளத் திருப்பரிச்ச[ட்டங்களும்]
    5. நெய்யக் கடவ முறைமையாலும் பல ஆஹமங்களும் ங ஸ்மிதிகளாலும் ((ஞ்) சொல்லுதலாலும் செய்யக்கடவராவ[ர்]களே யாதலால் இக்கோயிலுக்கு இவர்களுக்கு நிமந்தமாகவிட்ட நிலம் ஜனனாத நல்லூர்க் கட்டளையில் இவ்வாழ்வார்
    6. யிறையிலி நிலத்தில் திரிபுவனமாதேவி வதிக்கு மேற்குப் பிராந்தக வா[ய்]க்காலுக்கு வடக்கு இரண்டாங் கண்ணாற்று முதற் சதிரத்துக் கிழக்கடைய நிலம் ஆறுமாவில்  வடக்கடைய நில[ம்] இருமாவரையும் சேட்படி விளாகத்தில் வடதலை
    7. யிலே பத்து மனையுங்  கைக்கொண்டு  வைகாசித் திருநாளைக்கு நாலு  திருப்பரிச்சட்டமும்  திருவுத்திரியம் இரண்டு  திருமுடிச்சேலை  இரண்டும்  விஷுவயன ஸங்கிரமங்கள் நாலுக்கு திருப்பரிசட்டம்  நாலும் து[வ]ஜ படமும்  திருவாசலுக்கு  திருநமநி
    8. கையும் திருவிதான ஒந்றும் ஆக இவ்வூர்க்கள் பணிமாரக் கடவோமாக இந்நிலம் இம்மனைகளும் கைக் கொண்டு சிலாலேகை  பண்ணிக்   குடத்தோம்  இயோரிரான பட்டணவரோம். இப்படி  செய்யாவிடில்  இவ்வாழ்வார் கோயிலில் ஸ்ரீவயிஷ்ண
    9. வர் தடுத்தும் வளைத்தும்  தண்டியும்  சிறையாக்கியும் கொள்ளக்கடவ[ர்]களாக  ஸம்மதித்தோம்  செங்காட்டுப் புத்தூரான உத்தம சோழப் பட்டணத்தோமும் உம்பர்பாடியான உய்யக்கொண்ட  சோழபட்
    10. டணத்தோமும்  வேளார்  காணியான  இராஜேந்திர சோழபுரத்தோமும்  கருப்பூரான  விக்கிரம  சோழபுர்த்தோ[மு]ம்.  ஸ்ரீ வைஷ்ணவர்  இரக்ஷை.

    உபநயநாதி கர்மம் – பூணூல் சடங்கு; தேவர்களுக்கு – பிராமணர்களுக்கு; த்வஜ படமும் – பிராணமத் துணியும்; திருப்பரிசட்டம் – செப்புத் திருமேனிகளுக்கு சாற்றும் ஆடை; கட்டளை – எல்லைக்கு உட்பட்ட, jurisdiction;  வதிக்கு –  கால்வாய்க்கு; கண்ணாறு – சிறு பாசன வாய்க்கால்; திருவுத்திரியம் – தோள் துண்டு; விஷுவயன சம்கிரமங்கள் – புத்தாண்டு, அயன கால சடங்குகள்; பணிமார – செய்து தர; இயோரியரான –

    விளக்கம்: விக்கிரம சோழனின்  9 ஆம் ஆண்டு (கி.பி. 1127) ஆட்சிக் கல்வெட்டு. முதல் இரண்டு வரிகளில் மெய்கீர்த்தியுடன் தொடங்குகின்றது. பிரதிலோமரில் அடங்கும் பிரம்ம வைசியரான இதாவது, பிராமணத் தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்த ஆயோகவரான பட்டணவர் பற்றியது.  பூணூல் சடங்குகளில் பிராமணருக்கு பிராமண ஆடை, மேனியில் சாற்றத் துணி. அதே போல் வேந்தர், மன்னவர், அரசர், கிழார் உள்ளிட்ட ஆளும் குடிக்கு மேனியில் சாற்றும் துணியும் நெய்ய வேண்டிய முறையில் நெய்ய ஆகமங்களும் ஸ்மிருதிகளும் சொல்லுகின்ற முறையில் நெய்பவராதலால்  இக்கோயில் தெய்வத் திருமேனிகளுக்கு ஆடை சாற்ற இவர்களுக்கு நிவந்தமாக (பணிக்கூலி) விட்ட நிலம் ஐனனாத நல்லூர் வரம்பில் உள்ள இவ்விறைவர்க்குச் சொந்தமான இறையிலி நிலம் (நான்கு எல்லை குறிக்கப்படுகின்றது) இருமாவரையும் அதோடு சேட்படி விளாகத்தில் வடதலையில் பத்து வீடுகளும் இவர்கள் ஏற்று வைசாகித்  திருநாளுக்கு  நான்கு  சாற்றும் ஆடை, தோள்துண்டு, இரண்டு  திருமுடிச்சேலை,  கொடிக்குத் துணி,  திருவாசலுக்கு திருநமநிகை திருவிதானம் ஒன்று என இந்த உருப்படிகளைச் செய்து தந்து இந்நிலம் இவ்வீடுகளை கைக்கொண்டு இப்படியே ஆவதாகக் கல்வெட்டிக் கொடுத்தோம் பட்டணவரான நாம். இப்படி செய்யாவிட்டால் ஸ்ரீ வைஷ்ணவர் எங்கள் தொழிலைத் தடுக்கவும், எம் உடலை வளைக்கவும், எம்மைத் தண்டிக்கவும், சிறைப்படுத்தவும் ஒப்புக்கொண்டோம். செங்காட்டுப் புத்தூர் உத்தம சோழ பட்டணத்தோம், உம்பர்பாடி உய்யக்கொண்ட சோழ பட்டணத்தோம்,  வேளார் காணி ராஜேந்திர சோழபுரத்தோம், கருப்பூரான விக்கிரம சோழபுரத்தோம் என நான்கு ஊர் பட்டணத்தவர் இந்த ஒப்பந்தத்தை    மேற்கொண்டனர். இது கோயில் சார்பாளர் பட்டணத்தவர் என இரு தரப்புக் கல்வெட்டு ஆகும்.

    எப்படி அனுலோமர் என்பது உண்மையில் இல்லாததோ, அப்படித்தான் பிரதிலோமர் என்பதும் இல்லாதது. அதனால்தான் இங்கு சாஸ்திரம் வலிந்து சுட்டிக் காட்டப்படுகின்றது. பட்டணவர் எவரும் சாஸ்திரம் சொல்லுவது போல பிராமணத் தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்தவர் அல்லர்.  மாறாக தந்தை தாய் இருவருமே வணிகர் குலத்தவர்தாம்.  இந்தப் பட்டணவர் சாதி, பிராமண தந்தை வைசியத் தாய்க்கு பிறந்தவரை மூதாதையராகக் கொண்டது என்பதும் ஏரணப்படி ஏற்புடையது அல்ல. இந்த வரையறை பட்டணவருக்குத் தெரிந்திருக்க வாயப்பில்லை. அப்படி தெரிந்திருந்தால் அதை அவர் ஏற்றிருக்க மாட்டார் என்பது திண்ணம். என்றாலும் இப்படி ஒன்றிரண்டு கல்வெட்டுகள் இருப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நால் வருணமும் மனு தர்மமும் சோழர் ஆட்சியில் கோலோச்சியதாகப் பிதற்றுகின்றனர், தொல்லியல் வரலாற்று ஆசிரியர்கள் சிலர்.

    மேற்கண்ட இரண்டாம் கல்வெட்டில் பட்டணவர் மீனவச் செட்டியாராக அறியப்படுகின்றனர். இக்கல்வெட்டிலோ, ஆடை நெய்பவராக அறியப்படுகின்றனர். இவற்றில் இடம்பெறும் இருவரும் ஒரே சாதியார் என்றால் 12ஆம் நூற்றாண்டில் ஒருதொழிலும் 18ஆம் நூற்றாண்டில் வேறு ஒரு தொழிலும் செய்யக் காரணம் என்ன? என்று ஆராய்ந்தால் அயலவரான விஜயநகரர் ஆட்சியின் போதும் நாயக்கர் ஆட்சியின் போதும் ஆந்திரத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சௌராஷ்டிரர் மற்றும் முத்திரிய நாயுடுகள் ஆகியோர்  கோயில் ஆடைகள் நெய்யவும் ஆட்சியாளருக்கு ஆடை நெய்யவும் உரிமை பெற்றதால் தமிழ்ப் பட்டணவர் வாழ்வாதாரம் இழந்து மீன் விற்கும் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. அயலவர் படையெடுப்பும் ஆட்சியும் இந்த அளவிற்கு சமூக பொருளியல் பாதிப்பை தமிழருக்கு  ஏற்படுத்தியதை இக்கல்வெட்டின் மூலம் உணர முடிகின்றது.

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்                         S. Kuppusamy & G. Vijayavenugopal,  Institut Francais De Pondichéry :  2006

    https://en.wikipedia.org/wiki/Varadharajaperumal_temple,_Thirubuvanai

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 33

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 33

    33.கொல்லாமை

    குறள் 321:

    அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
    பிறவினை எல்லாந் தரும்

    அறம் ங்கது என்னன்னா எந்த உசிரயும் கொல்லாம இருக்கது. கொல்லுதது எல்லா பாவத்தையும் குடுக்கும்.

    குறள் 322:

    பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்
    தொகுத்தவற்று ளெல்லாந் தலை

    இருக்கத பங்குபோட்டு சேந்து சாப்புட்டு பல உசிர காப்பாத்தணும் ங்கது நூல்கள எழுதினவங்க தொகுத்த எல்லா அறத்திலயும் ஒசத்தியா நிக்குத அறம்.

    குறள் 323:

    ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
    பின்சாரப் பொய்யாமை நன்று

    அறங்கள வரிசப்படி வச்சோம்னா மொதல்ல உசிர கொல்லாம இருக்குத கொல்லாமையும் அதுக்கு பொறத்தால பொய் பேசாத பொய்யாமையும் இருக்கும்.

    குறள் 324:

    நல்லா றெனப்படுவது யாதெனின் யாதொன்றுங்
    கொல்லாமை சூழும் நெறி

    நல்ல வழி எதுன்னு கேட்டா எந்த உசிரயும் கொல்லாம இருக்குத அறம் காக்குத வழி தான்.

    குறள் 325:

    நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
    கொல்லாமை சூழ்வான் தலை

    ஒலகத்து வாழ்க்கைய வெறுத்த துறவிய விட ஒரு உசிரயும் கொல்லக் கூடாதுனு நெனைக்கவன் தான் ஒசந்தவன்.

    குறள் 326:

    கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
    செல்லா துயிருண்ணுங் கூற்று

    கொலை செய்யாமை ங்குத அறத்தைக் கடைபிடிக்கவனோட பெருமையப் பாத்து சாவு கூட கிட்டத்துல அண்டத் தயங்கும்.

    குறள் 327:

    தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
    தின்னுயிர் நீக்கும் வினை

    தான் சாவப் போறோம் ங்குத நெலமைல அத தடுக்குததுக்காவ கூட மத்தவன் உசிர எடுக்குத செயல செய்யக் கூடாது.

    குறள் 328:

    நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
    கொன்றாகும் ஆக்கங் கடை

    கொல செய்யுததுனால பெரிசா நன்ம கெடைக்கதா இருந்தாலும் படிச்ச பெரிய மனுசங்க அந்த நன்மைய தாழ்த்தியா தான் நெனைப்பாங்க.

    குறள் 329:

    கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
    புன்மை தெரிவா ரகத்து

    கொல செய்யுதத தொழிலா நடத்துதவங்க தன் தப்ப உணந்துகிடலனாலும் அத அறிஞ்ச பெரிய மனுசங்க மனசுக்குள்ளார அவங்க தாழ்த்தியா தான் நெனைக்கப்படுவாங்க.

    குறள் 330:

    உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
    செல்லாத்தீ வாழ்க்கை யவர்

    காசு பணமில்லாம நோவு நொடியோட கெடந்து சீரளியுதவன் முன்ன பல உசிரக் கொன்ன பாவத்த செஞ்சிருப்பான்னு அறிவாளிங்க சொல்லுதாங்க.

    (அடுத்தாப்லயும் வரும்…

    Share