Tag: மலர் சபா

  • நான் அறிந்த சிலம்பு – 224

    -மலர் சபா 

    மதுரைக் காண்டம் – அழற்படு காதை

    பவளம் போன்ற சிவந்த நிற மேனியுடையவன்;
    ஆழமான கடல்சூழ் உலகை
    ஆள்கின்ற மன்னனைப் போல
    முரசு, வெண்கொற்றக்குடை, வெண் சாமரம்,
    நெடுங்கொடி, புகழ்வாய்ந்த அங்குசம்,
    வடிவேல், வடிகயிறு
    இவற்றைக் கையில் ஏந்தியவன்;           king-2

    எண்ணில் அடங்காத
    பகை அரசர்களைப்
    போரில் புறமுதுகிட்டு ஓடச் செய்தவன்;
    இந்நிலவுலகம் முழுவதையும்
    தன் குடையின்கீழ்க் கொண்டுவந்து
    செங்கோல் செலுத்தி,
    தீவினைகளை அகற்றி,
    வெற்றிகள் கொண்டு,
    தன்பெயரை நிலைநிறுத்தும் வண்ணம்
    புகழினை வளர்த்துக்
    குறிஞ்சி, முதலிய நானிலம் காத்துப்
    பெரும்புகழும் சிறப்பும் வாய்ந்த
    ‘நெடியோன்’ என்னும் பெயர்கொண்ட
    பாண்டியனை ஒத்த
    அரச பூதங்களுக்குத் தலைவனான
    வெல்வதற்கு அரிய
    சிறந்த ஆற்றலையுடைய அரச பூதமும்…

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 223

    -மலர் சபா 

    மதுரைக் காண்டம்அழற்படு காதை

    அரச பூதம் 

    வெற்றி பொருந்திய
    வெங்கதிர் போன்ற மேனியுடையவன்;
    ஒளி குன்றாத மணிகளைக்
    கழுத்தில் அணிந்தவன்;                              silambu
    உச்சந்தலையில் முடி முதல்
    கால்களில் கழல்வரை
    அரசர்க்குரிய அணிகள் அணிந்தவன்;

    செண்பகம், கருவிளை,செங்கூதளம்
    ஆகிய பூக்களோடு
    குளிர்ச்சியான நீர்ப்பூக்களையும்
    சேர்த்துத் தொடுத்த மாலை அணிந்தவன்;
    பலவகைப் பூக்களால் ஆன
    அசைந்தாடும் மாலைகளை அணிந்தவன்;

    சூரியன் தன் கைகளால்
    அள்ளித் தெளித்தது போன்ற
    குங்கும நிறம் கொண்ட
    மார்பை உடையவன்;
    ஒளிபொருந்திய செந்நிறப்
    பட்டாடையை அணிந்தவன்;

    சாலி என்னும் செந்நெல் சோற்றைப்
    பொற்கலத்தில் இட்டு
    அதன் நல்ல சுவையறிந்து
    அதை விரும்பி உண்பவன்;
    பவளம் போன்ற
    செந்நிற மேனியை உடையவன்!

    *****

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 222

    -மலர் சபா

    மதுரைக் காண்டம்அழற்படு காதை

    பிராமண பூதம்

    பசுமையான முத்துவடம் பூண்ட நிலவுபோல்
    மிக்க ஒளி பொருந்திய உடல் உடையவன்;
    ஒளிரும் முத்துகளால் செய்த அணிகள் அணிந்தவன்;
    வெண்தாமரை, அறுகம்புல், நந்தியாவட்டைப்பூ
    இவற்றைத்தன் தலையில் அணிந்தவன்;

    நுட்பமான நுரை போன்ற             brahmin
    மெல்லிய ஈர ஆடையைத்
    தன் மேனியில் அணிந்தவன்;
    மலராத வட்டிகை, விளம்பொரி,
    வன்னிகை, சந்தனம், கொட்டம் ஆகிய
    வாசனைப் பொருட்களைச்
    சேர்த்து அரைத்துப்பூசிய மார்பை உடையவன்;

    தேன், பால், சர்க்கரை ஆகியவற்றைச்
    சேர்த்துச் சமைத்த அன்னத்தை உண்பவன்;
    தீர்த்தக்கரைகளிலும், தேவர் கோவில்களிலும்,
    வேத பாடசாலைகளிலும் மனம் லயித்து நிற்பவன்;
    பின்பகல் பொழுதில் இறைவனைச் சந்தித்தால்
    உச்சிவெயிலையும் பொருட்படுத்தாமல்
    மண்ணில் காலூன்றி நிற்பவன்;

    விரிந்த குடை, கமண்டலம்,
    வேள்விக்குச்சி, தர்ப்பைப்புல்
    இவற்றைக் கையில் கொண்டுள்ளவன்;
    நாவில் வேத நூலையும்
    மார்பில் பூணூலையும் பூண்டவன்;

    மூன்றுவகை வேள்வித்தீயையும் போற்றித்
    தனக்குரிய நெறியிலிருந்து தவறாத
    மறைமுதல்வன் பிரம்மன்
    வேள்விக்கென வகுத்த உறுப்புக்களோடு அமைந்த
    பிராமணப் பூதங்களுக்குத் தலைமையான
    பிராமணப் பூதக் கடவுளும்…

    ***

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 221

    -மலர்சபா

    மதுரைக் காண்டம்அழற்படு காதை

    மன்னவன் மாண்டதை அறியாமல் மற்றோர் அசைவற்றிருத்தல்

    கண்ணகியின் ஏவலின்படி
    தீக்கடவுளின் எரிமுகம் திறந்தது;
    காவல் தெய்வங்கள் தம் பணி விடுத்துக்palace in fire
    கோட்டை வாயிலை விட்டு நீங்கினர்.
    அரசர்க்கெல்லாம் அரசன்
    பகைவரைப் போரில் வெல்லும் பாண்டிய மன்னன்
    தன் தவற்றால் வளைந்த செங்கோலைத்
    தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான்.

    பெரிய நிலமகளுக்குத்
    தன் செங்கோல் நலம் காட்ட,
    கற்பில் சிறந்த தன் மனைவியோடு மன்னன்
    அரியணையிலேயே இறந்தான்.

    அரசனும் அரசியும் மாண்டதை அறியாமல்
    ஆசான், தலைமைச் சோதிடன்,
    அறக்களத்தின் தலைவன், ஓலை எழுதுபவர்,
    அரண்மனைப் பணியாளர்,
    வளையல் அணிந்த பணி மகளிர் அனைவரும்
    அதிர்ச்சியுற்றுப் பேச்சு வராமல்
    ஓவியமாய் வரையப்பட்ட
    அரசியல் மாந்தரைப் போல்
    செய்வதறியாது நின்றனர்.

    மன்னவன் கோவிலில் தீயைக் கண்டு காவலர் முதலியோர் நீங்குதல்

    அங்குசம் ஏந்தும் யானைப்பாகரும்
    விரைந்து தேரை ஓட்டிச் செல்லும் தேர்ப்பாகரும்
    வீரவாள் ஏந்தும் மறவரும்
    அரசரின் அரண்மனையில் தீயைக் கண்டு,
    தீக்கான உண்மைக் காரணத்தை அறியாமல்
    வேறு காரணம் என நினைத்து,
    அதனை அறிவிக்க வாயிலில் கூட்டமாய் நின்றனர்.

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 219

    மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை

    மலர் சபா

    அரசோடு மதுரையையும் அழிப்பேன் என்று கூறிக் கண்ணகி மதுரையை விட்டு நீங்குதல்

    “அப்படிப்பட்ட ஊரில் பிறந்த நானும்

    ஒரு கற்புடைய பெண் என்றால்

    மதுரை நகரை மட்டுமன்றி

    மன்னனையும் அழிக்காமல் விடமாட்டேன்;

    இதை நீ நிச்சயம் காண்பாய்” எனக் கூறிக்

    கோவிலை விட்டு நீங்கினாள்.

     

    கண்ணகி தன் இடமுலையைத் திருகி எடுத்து மதுரையின் மேல் எறிதல்

    “நான்மாடக் கூடலான மதுரை நகரின்

    ஆண்களும் பெண்களும்

    தேவர்களும் தவத்தோரும்

    நான் சொல்வதைக் கேளுங்கள்.

     

    நான் விரும்பிய

    என் காதலனைக் கொலை செய்த

    மன்னன் நகரத்தின் மீது

    கோபம் கொண்டேன்;

    என் மீது எந்தக் குற்றமும்

    இல்லாதவள் நான்”

    எனக்கூறித்

     

    தன் இடது முலையை

    வலது கையால் திருகி

    மதுரை நகரத்தினை

    மூன்று முறை வலம் வந்து,

    மயங்கியவளாய்

    அணிகளை உடையவளாய்த்

    தன் அழகிய முலையின் மீது சூளுரைத்து,

    வண்டுகள் தேன் பருக வரும்

    மதுரைத்தெருவில் நின்று,

    கோபத்துடன் விட்டெறிந்தாள்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 218

    –மலர் சபா

    மதுரைக் காண்டம் 11: வஞ்சின மாலை

    வேறு ஒருவன் தன்னைத் தவறாகப் பார்ப்பது கண்டு,
    “நிறைமதி போன்ற முகத்தைக்
    குரங்கு முகம் ஆக்குக” என்று கூற,
    அவ்வாறே அந்த முகத்தில் இருந்து,   paththini
    வெளியூர் போன கணவன் வீடு திரும்பியதும்
    குரங்குமுகம் நீக்கி இயல்பான முகம்கொண்ட
    சிவப்பு மணிகள் பொருந்திய மேகலை அணிந்த
    அல்குலை உடைய
    அவளும் ஒரு பத்தினிப் பெண்.

    மகளிர் அறிவு என்பது அறியாமை உடையது என
    மேலோர் கூறிய வார்த்தையின் அர்த்தம் உணராது
    பின்வருவது பற்றி ஆராயாது,
    தன் சிறுவயதுத் தோழியுடன் வண்டலாடும்போது,
    “ஒள்ளிய தொடியுடையாய்!
    நான் ஒரு மகளும் நீ ஒரு மகனும் பெற்றால்
    உன் மகனே என் மகளுக்குக் கணவன் ஆவான்” என்றேன்.

    இன்று மணப்பருவம் என் மகள் எய்திய வேளையில்
    என் தோழி ஆண் மகவைப் பெற்றிருக்கிறாள்.
    என் உறுதிமொழியை நினைவுபடுத்தி
    அவள் பெண் கேட்கிறாள்.
    அச்செய்தியை நான் கேட்டதால் 
    மிகவும் துயரம் அடைகிறேன் எனத்
    தன் தந்தையிடம் தாய் கூறியதை மகள் கேட்டாள்.

    தாயின் மொழியை நிறைவேற்றுவதற்காகத்
    தானாகவே முன்வந்து புத்தாடை உடுத்திக்
    கூந்தல் சீவி மணப்பெண்ணாய் உருவெடுத்து,
    தன் தாய் கூறிய அந்த ஆண்மகவைக் கணவனாய்க் கொண்டு
    அவன் கைபிடித்துத் தன் தலையில் சுமந்து வந்தாள்.
    திருமகள் போன்ற சிறப்பான
    அவளும் ஒரு பத்தினிப் பெண்.

    தேன்நிறை கூந்தலையுடைய
    பத்தினிப் பெண்கள்
    இத்தகைய சிறப்புப் பொருந்தியவர்கள்
    பலரும் பிறந்த புகார் நகரில் தான் நானும் பிறந்தேன்.

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 217

    மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை

    மலர்சபா

     

    thalaivi

     

    புகழ்மிக்க அரசன் கரிகாலன் மகள் ஆதிநந்தி.

    வஞ்சி நகரத்தின் தலைவன் 

    அவள் கணவன் ஆட்டனத்தியைக்

    காவிரி நீர் அடித்துச் சென்றது.

    ஆதிமந்தி ஆறு ஓடும் வழியாகத் 

    தானும் ஓடிச்சென்று,

    “கல்லைப்போன்ற தோள்உடையவனே!

    நீ எங்கே இருக்கிறாய்?”

    எனக் கூவிப் பலமுறை அரற்ற,

    கடல் உடனே ஆட்டனத்தியை

    அவள் முன் நிறுத்தியது.

    காதலனைத் தழுவிக்கொண்டு

    பொற்கொடி போல வந்த 

    அவளும் ஒரு பத்தினிப் பெண்.

     

    மணல் நிறைந்த கடற்கரைச் சோலையில் தங்கி,

    பொருள் ஈட்டி வரக் 

    கலம் ஏறிக் கடலில் சென்ற கணவன் வரும்வரை

    அவன் மனைவி கல்லாய் உருமாறிக்

    கரைவரும் கலங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    கணவன் திரும்பி வந்ததும்

    கல் உருவம் நீங்கிப் பழைய உருவம் பெற்ற

    அவளும்  ஒரு பத்தினிப் பெண்.

     

    தன் குழந்தைக்கு நிகரான

    மாற்றாளின் குழந்தை கிணற்றில் விழுந்தது.

    அபோது அம்மாற்றாள் வீட்டில் இல்லை.

    அப்பழி தன்மீது வருமே என அஞ்சித்

    தன் குழந்தையையும் கிணற்றில் தள்ளினாள் ஒருத்தி.

    பின், தன் கற்பின் திறத்தால்

    இறந்த இரு குழந்தைகளையும் 

    உயிருடன் கிணற்றில் இருந்து எடுத்தாள்.

    வேல் போன்ற கண்களையுடைய

    அவளும் ஒரு பத்தினிப் பெண்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 211

     

    மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை

    கண்ணகி வாயிலோனுக்கு அறிவித்தல்

    b13704f5-308c-457a-a5a4-d22239da322f

    இங்ஙனம் பாண்டிமாதேவி
    தன் தீயகனா பற்றி உரைத்தாள்.
    திருமகள் உறையும்
    மார்பை உடைய மன்னன்
    அரசி கூறியதைக் கேட்டபடி இருந்தான்.

    அச்சமயம் அரசன் வாசலை
    அடைந்தாள் கண்ணகி;
    அங்கே நின்றிருந்த காவலனை நோக்கி,
    “வாயிற் காவலனே! வாயிற் காவலனே!
    அறிவு முற்றும் இல்லாதவனாக,
    கொஞ்சம் கூட
    அறநினைவு இல்லாதவனாகவும்
    அரச நீதி தவறியவனுமாகிய
    பாண்டிய மன்னனின் வாயிற் காவலனே!

    பரல்களை உடைய
    ஜோடிச் சிலம்புகளுள்
    ஒன்றை மட்டும் கையில் ஏந்தியவள்,
    தன் கணவனை இழந்தவள்,
    வாயிலில் வந்து நிற்கிறாள்…
    என்று உம் மன்னனுக்கு
    நீ அறிவிப்பாயாக!
    இங்ஙனம் கூறினாள்.

    படத்துக்கு நன்றி:
    கூகுள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 210

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் 10: வழக்குரை காதை

    ஒளிவீசும் அழகிய அணிகலன்கள் அணிந்தவர்கள்
    கண்ணாடியும் கலன்களும் ஏந்தியவர்கள்
    புதிய நூலாடை, பட்டாடை ஏந்தியவர்கள்
    கொழுவிய வெள்ளிலைச் செப்புகளை ஏந்தியவர்கள்
    வண்ணப்பொடிகள் சுண்ணம்
    கத்தூரிக் குழம்பினை ஏந்தியவர்கள் queen
    மாலைகள் கவரிகள்
    அகிற்புகைகள் தாங்கியவர்கள்
    கூனர் குறளர் ஊமர்
    இங்ஙனம் கூடிய
    குற்றவேல் புரியும் மகளிர் புடைசூழ
    நரை கலந்த கூந்தலுடைய முதுமகளிர்
    இவர்கள் அனைவரும்
    உலகம் காக்கும் பாண்டிய மன்னன் தேவி
    நீடூழி வாழ்க எனப்
    புகழ்மொழிகளால்  வாழ்த்தி நிற்க…

    சேவை புரியும் மகளிரும்
    காவல் புரியும் மகளிரும்
    அடிதோறும் வாழ்த்தி நிற்க…

    பாண்டியன் பெருந்தேவி சென்றனள்
    தம் தீக்கனாத் திறனை
    அரசனிடம் எடுத்துரைக்க…

    ***

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 209

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் 10: வழக்குரை காதை

    பாண்டிமாதேவியின் தீக்கனா

    கண்ணகி பாண்டியன் அரண்மனைக்குச் சென்ற
    அந்தக் காலைநேரத்தில்
    பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி
    தான் கண்ட தீய கனவினைப் பற்றி
    தோழியிடம் உரைக்கிறாள்.                              queen  _malarsaba

    நம் மன்னனின் குடையும்
    செங்கோலும் கீழே விழுந்திட
    வாயிலில் உள்ள மணி அசைந்து ஒலித்திட
    அந்த ஓசையைக் கனவினில் நான் கேட்டேன்.
    நான்கு திசையும் அதிர்ந்திடக் கண்டேன்.
    கதிர் ஒளியை இருள்விழுங்கக் கண்டேன்.
    இவை யாவும் என் கனவில் கண்டேன்.

    கோப்பெருந்தேவி தான் கண்ட கனவை அரசவையில் இருந்த மன்னனுக்கு உரைத்தல்

    அரசனின் செங்கோலும் வெண்கொற்றக் குடையும்
    நிலத்தில் மடங்கி விழும்.
    வெற்றிவாயிலில் கட்டிய மணி
    என்னுள்ளம் நடுங்கும் வண்ணம் ஒலித்திடும்.
    இரவுக்காலம் வானவில்லைத் தோற்றுவிக்கும்.
    பகலில் விண்மீன்கள் எரிந்து விழும்.
    எட்டுத் திசையும் அதிர்ந்து நிற்கும்.
    இதனால் வரக்கூடிய துன்பம் ஒன்று உண்டு.
    நான் இதனைப் பற்றி
    அரசனிடம் கூற வேண்டும்.

    ***

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 207

    –மலர் சபா

    மதுரைக் காண்டம் – 09: ஊர்சூழ் வரி

    கண்ணகி கோவலனைத் தழுவுதலும், அவன் உயிர்பெற்று எழுந்து பேசுதலும்

    இவ்வாறெல்லாம் அழுது புலம்பினாள் கண்ணகி.
    இலக்குமி வசித்துவரும் கோவலனின்
    பொன்மார்பு தன் மார்போடு பொருந்துமாறு

    image description

    அவள் அவனைத் தழுவிக் கொண்டாள்.

    அப்போது கோவலன் உயிர்பெற்று எழுந்தான்.
    “முழுநிலவு போன்ற உன் முகம் ஒளி குன்றிவிட்டதே”
    என்றே அவன் கூறி,
    அவளுடைய கண்ணீரைத்
    தன் கைகளால் துடைத்தான்.

    தன் பாதத்தைக் கண்ணகி பற்ற, கோவலன் வானுலகு செல்லுதல்

    கண்ணகி ஏக்கம் கொண்டு அழுது, நிலத்தில் வீழ்ந்து,
    வணங்கத் தகுந்த தன் கணவனின் திருவடிகளைத்
    தன் கையால் பற்றிக் கொன்டாள்.
    அந்த நேரம், வெட்டுப்பட்ட கோவலன்
    உடல் காயங்கள் எல்லாம் நீங்கப்பெற்று,
    உயிரோடு சொர்க்கம் புகுந்திட எழுந்தான்.

    “ஓவியத்தில் வரைந்திட்டது போன்ற
    அழகிய மைதீட்டிய கண்களை உடையவளே!
    நீ இங்கேயே இருப்பாயாக” என்று கூறித்
    தேவர்களுள் ஒருவனாகி வானுலகம் சென்றான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 205

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 09: ஊர்சூழ் வரி

    மக்கள் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் கண்ணகிக்குக் காட்டுதல்

    மக்களில் சிலர்,
    கண்ணகிக்குக் கோவலன் இறந்து கிடந்த
    இடத்தைக் காட்ட முன்வந்தனர்.

    அவனைக் கண்ட செம்பொன்னால்
    செய்யப்பட்ட கொடி போன்ற கண்ணகியைக்
    காண்பதற்கும் பொறுக்காமல்
    கதிரவன் தன் சிவந்த கதிர்களைச்   kannagi
    சுருக்கிக் கொண்டு
    மேற்கில் விரைந்து மறைந்தான்.

    அக்காட்சியைக் கண்ட
    மாலைப்பொழுதில் பூத்து உதிர்ந்த
    பூங்கொடி போன்ற கண்ணகி
    தன் கணவன் அருகில்சென்று
    அழுது புலம்பினாள்.
    அவளுடன் சேர்ந்து மக்களும் அழுததால்
    மதுரை முழுதும் அவல ஒலி நிறைந்தது.

    கண்ணகி சோகமுற்று அரற்றி அழுதல்

    அன்றைய காலையில் ஆயர்குடியில்
    தன் கணவனைத் தழுவி
    அவன் கரிய முடியில் சூடியிருந்த
    பூமாலையைத் தன் நீண்ட கூந்தலில்
    சூடிக் கொண்டாள்.

    ஆனால் அந்நாளின் மாலைப்பொழுதில்
    அவன் உடலில் இருந்து வழிகின்ற குருதி
    தன் உடலை நனைக்க
    அக்கோவலன் தன்னைக் காண முடியாமல் கிடக்கும்
    பெருந்துயர் அடைந்தாள்.

    என்னுடைய பெரிய துன்பத்தைக் கண்டும்
    இவள் எங்ஙனம் துன்புறுவாள் என்று
    நீங்கள் எண்ணாமல் போனீரே…
    மணம் மிக்க சந்தனம் முதலிய
    வாசனைப் பொருட்கள்
    பூசப்பட வேண்டிய உம் மேனி
    புழுதியில் விழுந்து கிடப்பது தகுமோ…?

    முன்னம் மாபெரும் துன்பம்
    இங்ஙனம் செய்ததன் காரணம்
    என்ன தீவினை என்றறியாத எனக்கு,
    உம் தீவினை காரணமாக
    இங்ஙனம் நிகழ்ந்துவிட்டது என்று
    ஊரார் ஒருவரேனும் சொல்லாரோ…?

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html 

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 204

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 09: ஊர்சூழ் வரி

    மதுரை மக்கள் கண்ணகியின் நிலைக்கு இரங்கிக் கூறுதல்

    நீங்காத துன்பத்தை இப்பெண்ணுக்கு உண்டாக்கியதால்
    நம் அரசனின் வளையாத செங்கோல் வளைந்துவிட்டது;
    இதற்குக் காரணம் என்னவோ!
    மன்னவர்க்கெல்லாம் மன்னன்
    திங்களை ஒத்த குடையும்
    வாளினையும் உடைய வேந்தன்
    தென்னவன் பாண்டியன் கொற்றம் சிதைந்தது;
    இது எதனால் நிகழ்ந்ததோ!
    உயிர்களைக் குளிர்விப்பவன்
    வீரம் வாய்ந்த வேலினை உடையவனின்  kannagi 2
    குளிர்ந்த வெண்கொற்றக்குடை
    வெம்மை பரப்புகிறதே;
    இது எதனால் நிகழ்ந்ததோ!

    செம்மையான பொன்னால் ஆகிய சிலம்பைத்
    தன் கையில் ஏந்தி
    நமக்குத் தீமை விளைவிக்கும் பொருட்டு வந்துள்ளது;
    இது எதனால் நிகழ்ந்ததோ!
    அழகிய செவ்வரி ஓடிய மைதீட்டப்பட்ட
    கண்களையுடைய இந்தப்பெண்
    ஏங்கி அழுவதையும் அரற்றுவதையும் பார்த்தால்
    தெய்வம் வந்து தன் மீது ஏறியது போலக் காணப்படுகிறாள்;
    இதனால் என்ன விளையப்போகிறதோ!

    இங்ஙனம் தமக்குத் தோன்றியதையெல்லாம் கூறி
    மதுரை நகர் மக்கள் வருந்தினர்;
    அரசனின் மீது உண்டான பழியை,
    குடிமக்கள் துணிந்து குற்றம் கூறும்
    நிலைமை கொண்டதாயிற்று
    அந்த நாளில் அந்த மதுரை மாநகர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 203

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 09: ஊர்சூழ் வரி

    கதிரவனது சொல்லைக் கேட்ட கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பை ஏந்தி நகரினுள் புக்கு, நகர மாந்தரை நோக்கி முறையிட்டு அழுதல்

    கதிரவன் இங்ஙனம் மறுமொழி தந்தான்.
    அதைக் கேட்டதும்,
    சங்குகள் அறுக்கப்பட்டுச் செய்த
    வளையல்களைக் கையில் அணிந்த கண்ணகி,
    அங்கே கணமும் நில்லாமல்,
    தன்னிடமிருந்த ஒற்றைச் சிலம்பைக்   kannagi 1
    கையில் ஏந்தி
    நகருக்குள் சென்றாள்.

    “முறைதவறி நடக்கும் அரசனின்
    ஊரில் வசிக்கின்ற
    பத்தினிப் பெண்டிரே!
    ஒரு செய்தி கேட்பீர்களாக!
    என்னிடம் இருக்கும் இச்சிலம்பு
    என் கணவன் இங்கு கொண்டுவந்த
    சிலம்பினைப் போன்ற வேறு ஒன்று;
    அதைக் காண்பீராக!

    யாரும் படாத துன்பம் பெற்றேன்;
    இந்த மாலை வேளையில் இங்ஙனம்
    எவரும் அறிந்திராத
    துயரம் நான் அடைய வேண்டியதுதானா?
    இதுதான் என் வினைப்பயன் போலும்;

    என் கணவன் கள்வன் அல்லன்;
    எனது காற்சிலம்பை
    விலை கொடுத்து வாங்க இயலாமல்
    என் கணவன் கள்வன் எனப்
    பழி சுமத்திவிட்டார்கள்.

    இது மிகவும் அநியாயமான ஒன்று;
    கற்புடைப்பெண்கள் உங்கள்
    கண்கள் முன்னே
    நான் என் கணவனைக் காண்பேன்;
    அங்ஙனம் நான் என் கணவனைக் கண்டால்
    அவன் வாயிலிருந்து வரும்
    நல்மொழிகள் கேட்பேன்;
    இது என் சபதமாகும்;

    அவ்வாறு அவன் கூறும்
    நல்மொழிகளை நான் கேட்காமல் போனால்,
    கொலையாவதற்குச் சமமான
    தீவினைகள் செய்தவள் இவள் என்று
    என்னை இகழ்ந்து பேசுவீராக!

    அப்படிப் பேச
    இது உங்களுக்கு
    ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.” என்றாள்.

    இவ்வாறு பேரிடர் உற்று அழும்
    கண்ணகியைக் கண்டு வருந்திய
    வளமான மதுரை மக்கள்
    உண்மை என்ன என்று அறியாமல் குழம்பினர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 202

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 08: துன்ப மாலை

    ஆய்ச்சியர் முன்னிலையில் கதிரவனை விளித்துஎன் கணவன் கள்வனோஎன வினவுதல்

    காண்பீர்களாக!
    தானே வாய்த்த
    தீயின் காரணமாய் நிகழ்ந்த
    குரவைக் கூத்தினைக் கண்ட
    இடையர்குல இளமகளிரே!
    நீங்கள் அனைவரும் கேட்பீர்களாக!
    இடையர்குல இளமகளிரே!                      sun
    நீங்கள் கேளுங்கள்!

    காயும் கதிர்களையுடைய
    சிவந்த சூரியனே!
    பாய்ந்து வரும் அலைகள் உடைய
    கடலை வேலியாகக் கொண்ட
    இவ்வுலகில்
    நிகழ்கின்ற அனைத்தும்
    நீ கண்டு அறிவாயே!
    ‘கள்வனோ என் கணவன்?” என
    வானத்தை நோக்கிக் கேட்டாள்.

    அசரீரி வாக்கு

    அப்போது விண்ணில் இருந்து
    ஓர் அசரீரிக் குரல் எழுந்தது.
    ‘கரிய கயல் போன்ற
    கண்கள் கொண்ட மாதே!
    உன் கணவன் கள்வன் அல்லன்;
    அவனைக் கள்வன் எனப்
    பழிசாற்றிய இந்த
    மதுரை எனும் ஊரை
    ஒளிபொருந்திய தீ உண்ணும்.’

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share